![]() |
|
இராமெஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இராமெஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (/showthread.php?tid=1751) |
- narathar - 12-27-2005 ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள், மீனவர்களின் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் 30 படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த அவர்கள் இரவு அங்கேயே தங்கியுள்ளனர். இன்று காலை அவர்கள் கரை திரும்ப தயாராகிக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்து அவர்கைள சுற்றி வளைத்தனர். பின்னர் தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீனவர்கள் அணிந்திருந்த கைக் கடிகாரங்களைப் பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியுள்ளனர். தட்டுத்தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். வழிப்பறிக் கொள்ளையர்கள் போல மீனவர்களின் மீன்கள், கைக் கடிகாரங்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Thatstamil <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [b] ***** தணிக்கை - kurukaalapoovan - 12-27-2005 இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரான முதுகு சுரண்டல். மீனவர்கள் பிடித்த மீனை பறிக்கிறதை விளங்கலாம். ஆனால் மீனவர்கள் எல்லாம் என்ன TagHeuer, Citizen EchoDrive ஆ கட்டியிருந்தவை sailors இக்கு உதவும் எண்டு இலங்கை கடற்படை பறிக்கிறதுக்கு. - Thala - 12-27-2005 [quote=narathar] வழிப்பறிக் கொள்ளையர்கள் போல மீனவர்களின் மீன்கள், கைக் கடிகாரங்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Thatstamil <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [b] ***** தணிக்கை வறுமை இலங்கைக் கடற்படையையும் வாட்டுது போல கிடக்கு...... - Thala - 12-27-2005 kurukaalapoovan Wrote:இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரான முதுகு சுரண்டல். மீனவர்கள் பிடித்த மீனை பறிக்கிறதை விளங்கலாம். எதாவது அரச நிவாரணம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில குற்றப்பதிவு செய்திருப்பினம்... அது சரி இந்த வளக்குகள் நீதிமண்றுக்குப் போகுமா,,,???? - narathar - 12-27-2005 டில்லியில வரவேற்பு இலங்கை ஜனாதிபதிக்கு, கடலில இந்திய மீனவருக்கு அடி ,உதை, கொள்ளை, யார் கேட்பார்? அடிவாங்குவது தமிழரா? இந்தியரா? நகைப்புக் கிடமாய் இருக்குது.......இந்தியரின் தன்மானம். - வினித் - 12-27-2005 narathar Wrote:டில்லியில வரவேற்பு இலங்கை ஜனாதிபதிக்கு, என்ன அண்ணா இப்படி தெரியாம கேட்டா? ராஜீவ்காந்திக்கு சிங்களவன் போட்ட ஒரு அடி தெரியுமோ? அதுக்கு இலங்கை அரசு சொறி சொல்ல இந்தியா ஒகே சேர் no problems sir 'its oke எண்டு சொல்லிட்டு போனவை தானே இந்தியா ம(றை)றந்து இருக்கலாம் - kurukaalapoovan - 12-27-2005 அந்த கடற்படைச் சிப்பாய் மனநோயாளி எண்டு விட்ட அறிக்கையை நம்பின மனநோயாளிகளும் இருக்கு. அந்த கடற்படை வீரன்; பிறகு அரசியல்வாதியாகி தேர்தலிலை நிண்டவர். - வினித் - 12-27-2005 [quote=kurukaalapoovan]அந்த கடற்படைச் சிப்பாய் மனநோயாளி எண்டு விட்ட அறிக்கையை நம்பின மனநோயாளிகளும் இருக்கு. அந்த கடற்படை வீரன்; பிறகு அரசியல்வாதியாகி தேர்தலிலை நிண்டவர். இதுல யார் மனநோயாளி அவனா? இல்லை அவன் மனநோயாளி எண்டு சொன்னதை நம்பியவர்களா? :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: - வர்ணன் - 12-27-2005 மணிகூட்டையே பறிச்சு கொண்டு போறாங்கள் எண்டால் அவ்வளவு காசு தட்டுபாட்டிலயா இருக்கு இலங்கை கடற்படை? அய்யோ பாவம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- pepsi - 12-27-2005 வார்னன் நீங்கள் கொஞ்சம் பணஉதவி செய்யலாமே அய்யா . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 12-27-2005 ஏன் அய்யா என்னட்ட காசு கேக்க சொல்லி கடற்படையா உங்களை அனுப்பி வைச்சது? இது ஏதோ புலநாய்வு பிரிவின் சதி எண்டு நினைக்கிறன் :wink: - தூயவன் - 12-28-2005 வினித் Wrote:[quote=kurukaalapoovan]அந்த கடற்படைச் சிப்பாய் மனநோயாளி எண்டு விட்ட அறிக்கையை நம்பின மனநோயாளிகளும் இருக்கு. எனக்கு பார்க்க இரண்டாம் ஆள் போலத்தான் கிடக்குது. முதலாம் ஆக்கள் அடித்துப் போட்டு அனுதாப அறிக்கை விடுவதில் சாதனையாளர் தெரியுமா? மாமனிதர் யோசப் பராஜசிங்கத்துக்கு பாரிய கண்டணம் விடுகினமாம்!! :oops: :oops: - MUGATHTHAR - 12-28-2005 Quote:ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள்இ மீனவர்களின் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இந்த விசயத்தில் எங்கடை கடற்படையை பாராட்டத்தான் வேணும் இந்த இந்திய மீனவர்கள் எமது மன்னார் கடற்பரப்பிலை வந்து டைனமெற் மற்றும் இழுவை படகுமூலம் எல்லா மீன்களையும் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் இது சம்மந்தமாக மன்னார் பகுதி மீனவர்கள் எவ்வளவு முறைப்பாடுகளை கடற்படைக்கும் அரசாங்கத்துக்கும் குடுத்திருந்தும் அவர்கள் கண்டுக்கவேயில்லை சில நேரத்தில் இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் எங்கடை பகுதிக்கே வந்து எமமவர்களையே தாக்கி மீன்களை பிடித்துச்; செல்வதை கடற்படை சில சமயங்களிலை வேடிக்கை பாத்திருக்கிறது அந்த வகையில் இம்முறை கடற்படை செய்த வேலை ஒருவகையிலை நல்லதுதான் ............. - kuruvikal - 12-28-2005 என்னதான் சொன்னாலும் தமிழக மீனவர்களும் எங்களோட சேர்ந்து பலவகையால் இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்டிருக்கினம். எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் பிரச்சனை தொழில் போட்டியில நடக்கிற ஒன்று. அதைப் பேசிப் புரிஞ்சு தீர்த்துக்கலாம்...!! ஆனால் இந்த சிங்களவனும் ஹிந்திக்காரனும் ஈழத்தவனும் தமிழகத்தவனும் சேர்ந்திடக் கூடாது என்றதில கவனமா இருந்து செயற்படும் இவ்வேளையில் கூட தமிழக மீனவர்களைச் சிங்களவர்கள் துன்பப்படுத்துறது...அதுவும் தமிழீழக் கடற்பரப்பு எல்லையில் வைச்சு செய்யுறது..தமிழகத்தில ஹிந்திக்காரனுக்கு ஜெய் ஹிந் போடுறவைக்கு ஒரு விசயதை தெளிவாச் சொல்லும் என்றே நினைக்கிறம்..! அவை விளங்கியும் விளங்காதமாதிரித்தான் இருப்பினம்..பிழைப்பு நடக்கனுமே..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 12-28-2005 மேற்கோள்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள்இ மீனவர்களின் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இந்த விசயத்தில் எங்கடை கடற்படையை பாராட்டத்தான் வேணும் இந்த இந்திய மீனவர்கள் எமது மன்னார் கடற்பரப்பிலை வந்து டைனமெற் மற்றும் இழுவை படகுமூலம் எல்லா மீன்களையும் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் இது சம்மந்தமாக மன்னார் பகுதி மீனவர்கள் எவ்வளவு முறைப்பாடுகளை கடற்படைக்கும் அரசாங்கத்துக்கும் குடுத்திருந்தும் அவர்கள் கண்டுக்கவேயில்லை சில நேரத்தில் இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் எங்கடை பகுதிக்கே வந்து எமமவர்களையே தாக்கி மீன்களை பிடித்துச்; செல்வதை கடற்படை சில சமயங்களிலை வேடிக்கை பாத்திருக்கிறது அந்த வகையில் இம்முறை கடற்படை செய்த வேலை ஒருவகையிலை நல்லதுதான் ............. _________________ நாம் நோக்கும் பி(க)கர் நோக்காட்டா... இந்த இடத்திலை நீங்களும் ஒண்டை கவனிக்கவேண்டும். எங்கட கடற்படை எண்டிங்களே அது எதை? அடுத்தது அவை ஒண்டும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிச்சதால அவர்களை தாக்கேல்ல. மன்னார் கடலில விழுந்த அடிதான் எல்லாத்துக்கும் காரணம். எவனுக்கு பிடிச்சு வெளுக்கலாம் எண்டு அவங்கள் ஓடி திரியேக்க ராமேஸ்வர மீனவர்கள் வழமைபோல் எல்லை தாண்டி வந்து வாங்கி கட்டினது தான் சோகம்! 8) - Luckyluke - 12-28-2005 இந்த கொடுமை என்று ஓயுமோ? - Birundan - 12-28-2005 இந்திய தேசிய மயக்கம் தெளியும் போது தீரும், தேசியத்தை ஆதரிப்பது தவறல்ல, அதற்காக சத்தியத்தை சாக்காட்டுக்கு அனுப்பாட்டி சரி. |