| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 321 online users. » 0 Member(s) | 318 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| S Lanka gets radars from India |
|
Posted by: narathar - 12-28-2005, 02:13 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (109)
|
 |
India-Sri Lanka-Defence
India has provided Sri Lanka with two indigenously developed military radars on the eve of Sri Lankan President Mahinda Rajapakse's maiden visit.
India is the newly elected Sri Lankan president's choice for a first visit abroad.
The transfer of the radars, to enable low-level detection of fighter aircraft, marks the resumption of non-lethal military aid after five years.
The transfer adheres to the India-Sri Lanka draft defence cooperation agreement that does not encourage Colombo to opt for a military solution to the Tamil issue, a media report said here today.
At the same time, it beefs up Sri Lankan defence against any distant possibility of the Liberation Tigers of Tamil Eelam acquiring prowess in air operations. At present, the LTTE owns two micro-light aircraft and is believed to have developed two airstrips in areas under its control.
India did provide non-lethal military equipment, including fast patrol crafts, in 2000 following the stepped up activities of the LTTE. But it has generally refrained from providing high-technology supplies ever since it stopped supplying military hardware in the late 1980s.
India agreed to supply the radars after Pakistan began taking interest in filling the void in Sri Lankan military supplies.
Former external affairs minister Natwar Singh made the formal offer during his visit to Colombo earlier this year as India felt uncomfortable with the idea of having Pakistan-installed surveillance equipment near its shores.
Despite the defence agreement being in limbo two years after it was first drafted, the two countries deepened their military-level joint naval exercises earlier this month.
The two navies could again meet next month when India hosts a joint exercise for sea forces of neighboring countries.
The joint exercise was carried out in the Indian Ocean about 30 kilometers off the coast of Colombo, he added
http://www.irna.ir/en/news/view/menu-234/0...83503125432.htm
|
|
|
| தே.மு.தி.க தலைவருக்கு தர்மஅடி:விஜயகாந்த் தப்பி ஒட்டம் |
|
Posted by: வினித் - 12-28-2005, 12:33 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (22)
|
 |
<b>தே.மு.தி.க. மாவட்ட தலைவருக்கு தர்ம அடி -3 கார்கள் சேதம் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பினார் விஜயகாந்த்</b>
ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழக விருதுநகர் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை அடித்து உதைத்தனர். இக்கட்சியை சேர்ந்த கிராம தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. இதைப் பார்த்த விஜயகாந்த் சினிமா காட்சி போல் காரை வேகமாக பின் னோக்கி ஒட்டிச் சென்று தப்பினார்.
திருவில்லிபுத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பல இடங்களில் பேசினார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விஜயகாந்த் மேல தொட்டிய பட்டி கிராமம் வழியாக பல கிராமங்களுக்கு செல்ல வந்தார். மேல தொட்டிய பட்டி ஊருக்குள் வராமல் மெயின் ரோடு வழியாக் செல்ல முயன்ற விஜயகாந்த் வாகனத்தை அவரது கட்சியினர் டிராக்டரை வைத்து மறித்தனர். ஊருக்குள் வருமாறு விஜயகாந்தை அழைத் தனர். அவர் ஏற்கனவே மூடு அவுட்டாகி இருந்ததால் வர முடியாது என்று கூறிவிட்டார்.
நிர்வாகிகள் கிராம மக்களை கடுமையான வார்த் தைகளால் திட்டினர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை சரமாரியாக கம்பால் அடித்தனர். விஜயகாந்த் சினிமா போல் தனது காரை பின்னோக்கி மிக வேகமாக ஓட்டிச் சென்று தப்பி ஓடினார்.
கிராமத்து கட்சியினர் சரமாரியாக கற்கள் கம்பு கட்டைகளை வீசி அடித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜா கார் உள்பட விஜய காந்துடன் வந்த 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கட்சி கொடி பேனர் டிஜிட்டல் கட் அவுட்-களை உடைத்து கிழித்து தீ வைத்தனர். என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் விஜயகாந்த் கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இது அவரது கட்சியினரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.
dinakaran.com
|
|
|
| எச்சரிக்கை |
|
Posted by: yarlmohan - 12-28-2005, 11:32 AM - Forum: களம் பற்றி
- Replies (1)
|
 |
தொடர்ந்தும் பயனற்ற கருத்துக்களை முன்வைத்தால் களத்தில் இருந்து Luckyluke வெளியேற்றப்படுவார்.
மோகன்
|
|
|
| தமிழினத்தை தாக்குவதாக கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள் |
|
Posted by: தூயவன் - 12-28-2005, 10:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழினத்தை கூறுபோட்டு பலத்தை சிதைக்க, பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றியளிக்காது. தமிழினத்தை தாக்குவதாக நினைத்துக்கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள். தமிழினத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்@ தமிழினத்தை கொந்தளிக்கச்செய்து அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளீர்கள் என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிங்கள இனவாதிகளுக்கு அறிவுறுத்தும் - எச்சரிக்கும்; வகையில் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையினை நிகழ்த்தும்; போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முற்பகல் 9.30 மணியளவில் கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை முன்பிருந்து மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் புகழுடல் போராளிகளின் அணிவகுப்பு மற்றும் அணியிசை என்பவற்றுடன் ஊர்வலமாக கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், வடமுனை கட்டளைத் தளபதி கேணல் தீபன், மலையக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலைய மக்கள் முன்னனி தலைவர் சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னனித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் புகழுடலுக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.
வணக்க நிகழ்வு வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகப் பணிப்பாளர் எம்.எச். கருணாரெட்ணம் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.
வணக்கவுரைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேணல் ரமேஸ், மேலக மக்கள் முன்னனித் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வேலணை வேணியன், பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதரம்பரநாதன், மலையக தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரகேரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அங்கு அஞ்சலியுரையாற்றிய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்த் தேசியத்திற்காக, தமிழினத்தின் விடிவிற்காக தமிழினத்தின் கௌரவத்திற்காக ஒயாத புயலாக சுழன்றடித்த மாமனிதர் யோசப் ஜயா அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
சிங்கள இனவாதிகளும் சிங்கள இனவாதிகளின் அடிவருடிகளும் தமிழ்த் தேசியத்தை, அதன் வலிமையை சிதைப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் இன்று கங்கணம் கட்டி செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் எங்கள் பாசத்துக்குரிய தலைவர்களை, செயற்பாட்டாளர்களை, புத்திஜீவிகளை, மக்களை அழிக்கின்றனர். மிக கோழைத்தனமான முறையில் ஜோசப் ஐயா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உலகம் போற்றுகின்ற நன்நாளிலே தனது இனத்தின் அமைதிக்காகவும் கௌரவத்துக்காகவும் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது தேவாலயத்துக்குள் வைத்து மிக கோழைத்தனமாக சுட்டுப்படுகொலை செய்துள்ளார்கள்.
தற்போது கொந்தளித்த நிலையில் இருக்கின்ற எமது மக்களை மேலும் கொந்தளிக்க வைக்கின்ற நிகழ்வாகவே ஜோசப் ஐயா அவர்களின் படுகொலை அமைந்துள்ளது.
கொந்தளித்துக்கொண்டு இருக்கின்ற சமுத்திரம் போன்ற மக்களை மேலும் கொந்தளிக்க வைக்கும் நிலையினை உருவாக்க சிங்கள இனவாதிகள் தமது கைக்கூலிகள் மூலமாக படுகொலைகளைச் செய்து வருகின்றனர்.
சிங்கள இனவாதிகள் படுகொலைகளைச் செய்துவிட்டு இதனை மூடிமறைக்கும் வகையில் அனுதாப அறிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளார்கள்.
தமிழ்த் தேசியம் விழுதுவிட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு, சிதைப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகள் திரும்பி அவர்களையே சென்றடையும். ஒரு போதும் தமிழ்த் தேசியத்தை எவராலும் அழிக்கமுடியாது. இன்று ஒன்றுபட்டு தமிழினம் பெரும் பலத்தோடு நிற்கின்றது.
ஜோசப் ஐயாவின் இறுதி நிகழ்வு சிறிலங்கா தேசத்துக்கும் உலகத்திற்கும் தெளிவான ஒன்றை எடுத்துகாட்டுமென்று நினைக்கிறேன்.
இலங்கைத்தீவிலே தமிழீழ தேசத்தின் மக்கள் பிரதிநிதிகளும், சிறிலங்காவில் இருக்கின்ற தமிழ் மக்களுடைய அனைத்து தலைவர்களும் வருகை தந்து தமது சோகத்தை இந்நிகழ்விலேயே வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார்கள்.
இந்நிகழ்வே ஒன்றைப் புரியவைக்க வேண்டும். தமிழினத்தை கூறுபோட்டு பலத்தை சிதைக்க, பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றியளிக்காது.
தமிழினத்தை தாக்குவதாக நினைத்துக்கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள்.
தமிழினத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் தமிழினத்தை கொந்தளிக்கச்செய்து அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளீர்கள்.
இராணுவம் பெரும் அளவில் கொல்லப்படுவதாக இருந்தால் அது விடுதலைப் புலிகளால் மட்டுந்தான் முடியுமென குற்றம் சாட்டுகின்றீர்கள்.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு அதற்கு உயர்ந்த மதிப்பைக் கொடுத்து தம்மைக் கட்டுப்படுத்திவைக்கின்ற சூழலில், மக்களின் ஜனநாயக வழிப்போராட்டங்களை இராணுவ வன்முறைகொண்டு அடக்கும் சூழலில், மக்கள் கொந்தளித்து மக்களே திருப்பி தாக்குகின்ற சூழலை உருவாக்கி இருக்கின்றீர்கள். அதனுடைய விளைவுகளை தமிழர் தாயகத்தில் அனுபவிக்கின்றீர்கள்.
காலம் காலமாக வாழ்ந்த புூர்வீக மண்ணில் எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வாழவேண்டும் என்றே எமது மக்கள் கேட்கின்றார்கள்.
அண்மையில் கூட எமது சகோதரி ஒருவர் கடத்தப்பட்டு இரவிரவாக சிங்கள காடையர்களால் குதறப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களை கொந்தளிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.
பல்கலைக்கழகம் ஜனநாயக வழியில் முன்னெடுத்த போராட்டம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளரர்கள்.
இதனுடைய விளைவாகத்தான் தமிழர் தாயகம் எல்லாம் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகிவிட்டது
எனவே, சர்வதேச சமூகத்திடம் கேட்கிறோம்@ இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தை முடிவுக்கு கொண்டுவர முழு அழுத்தத்தைம் பிரயோகியுங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டும் செயலை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்.
தமிழ்மக்களை அமைதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஆக்கிரமிப்பு இராணுவம் மக்கள் மீது கட்டவிழ்த்து இருக்கின்ற வன்முறையை நிறுத்துவதே ஒரே வழி. இதற்கு சர்வதேச சமூகம் முழு அழுத்தத்தை அரசுக்கு கொடுக்கவேண்டும்.
ஜோசப் ஐயாவின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் யோசப் ஜயாவிற்கு மாமனிதர் கௌரவம் வழங்கியுள்ளார்.
ஜோசப் ஐயா தமிழத்தேசியத்தை சிதைக்கின்ற சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்காக செயற்பட்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி: ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு
|
|
|
| «ÅºÃ ¦ºö¾¢ |
|
Posted by: N.SENTHIL - 12-28-2005, 09:14 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>More deaths in eastern Sri Lanka </b>
Sri Lankan government forces are facing an upsurge in violence
At least two suspected Tamil Tigers have been shot dead by Sri Lankan troops in the east, a day after a Tamil parliamentarian was killed in the area.
Military officials say the rebels were killed when they allegedly attacked the soldiers and they fired back.
On Sunday, Tamil MP Joseph Pararajasingham, 71, was shot at close range at a church in Batticaloa.
Both the Tamil Tigers and the government have blamed each other over the killing.
"When we were clearing an area... two terrorists tried to attack our troops," military spokesman Brigadier Prasad Sarasinghe is quoted as saying by AP of the latest attack.
Two civilians were also killed in the north-eastern town of Trincomalee, reports say.
Increased violence in recent weeks has deeply concerned international mediators, who say the 2002 ceasefire is in grave danger.
Killing
Mr Pararajasingham represented the Tamil National Alliance (TNA) party in parliament.
The TNA is linked to the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE).
Police said at least eight other people, including Mr Pararajasingham's wife, were injured in the shooting at a crowded midnight service at St Mary's church in Batticaloa, 300km (190 miles) east of the capital, Colombo.
The motive for the killing was unclear.
The Tigers said "chauvinistic forces have taken away this patriot who has worked for the Tamil nation's liberation and promotion of human rights".
Meanwhile the government said the Tigers had planned the killing, as they "were desperately trying to divert the attention elsewhere and create mayhem and havoc while eschewing political discussions".
The Tamil Tigers have been fighting for a fully-independent ethnic homeland since 1983.
À¢.À¢.º¢ ¦ºö¾¢
|
|
|
| நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி |
|
Posted by: MUGATHTHAR - 12-28-2005, 07:29 AM - Forum: விளையாட்டு
- Replies (24)
|
 |
<b>நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி </b>
சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/December/27/s-1.jpg' border='0' alt='user posted image'>
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டுகளுக்கு முன் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். மறக்கமுடியாத அனுபவம் அது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதே மாதிரியான முயற்சி இப்போதும் தொடரும் என நம்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டேன். அணியிலிருந்து வெளியேறுவதை யாரும் விரும்பமாட்டார்கள். என்றாலும், அந்த இடைவெளி, எனது திறமையை மேம்படுத்திக் காட்ட உந்துதலாக அமைந்துள்ளது. அணிக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஜயசூரியா.
கடந்த ஆண்டு இலங்கையை கடல்கோள் தாக்கியபோது இலங்கை அணியினர் நியூஸிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பேரழிவை அறிந்ததும், போட்டியை கைவிட்டு உடனடியாக நாடு திரும்பினர்.
நியூஸிலாந்து தொடர் முடிந்ததும் அவுஸ்திரேலியா செல்கிறது இலங்கை அணி. அங்கு, ஜனவரி 13 முதல் முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது. தென் ஆபிரிக்கா அத்தொடரில் பங்கேற்கும் மற்றொரு நாடு.
thinakkural
|
|
|
| சுழலும் வாழ்க்கை சக்கரம் |
|
Posted by: RaMa - 12-28-2005, 05:06 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
ஒரே வயிற்றில் பிறந்தோம்
ஒரே உடுப்பை போட்டோம்
ஒரே கோப்பையில் சாப்பிட்டோம்
ஒரே படுக்கையில் படுத்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ஒன்றாய் படித்தோம்
எச்சில் கடி கடித்து
ஏப்பம் விட்டு சாப்பிட்டோம்
இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில்
வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி
வழி போக தொடங்கினோம்
காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது
தனி குடித்தனம் போனோம்
அத்துடன் எல்லை சண்டையும்
பக்கென்று வந்தது
உன் மகளின் கலியாண கோலத்தை
என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம்
அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள்
கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள்
இன்று நீ யாரோ நான் யாரோ
வீதியில் போகும் போது முகம் பாராத
நாங்கள் கோட்டில் பார்க்கின்றோம்
எல்லை சண்டைக்காக
பெற்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால்
பித்து பிடித்திருக்கும் நம் நிலை பார்த்து
ஒருவருக்கு ஒருவர் துணை என்று
பாசத்தை ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள்
எதிரிகளாய் நாம் நிற்கின்றோம் இன்று
கனவிலும் எதிர்பார்த்து இருப்பார்களோ இந்த நிலையை?
**** அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரு சகோதரார்களுக்கிடையில் நடந்த சம்பவம் ஒன்று மனதை உலுக்கியது. அதன் வெளிப்பாடு தான் இது. பிழைகள் இருந்தால் சுட்டிக்கட்டவும்*******
|
|
|
| இளைஞர் வன்முறை |
|
Posted by: kuloth - 12-28-2005, 04:53 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
கனடா ரொரன்டோவில் இளைஞர் வன்முரைக்கு எதிராக ஒரு நிகழ்வு மார்கழி31 நடைபெர உள்ளது. அதுபோல் எல்லா நாட்டிலும் ஏன் செய்யமுடியாது. அப்படி செய்வது எம் சமூக இளைஞர்களை நல்ல வழிக்குக்கொண்டு வரலாம்
|
|
|
| எத்தனை? எத்தனை? |
|
Posted by: வர்ணன் - 12-28-2005, 12:51 AM - Forum: போட்டிகள்
- Replies (15)
|
 |
ஒரு மரத்தில 2 கிளைகளாம்.
மேல ஒரு கிளை கீழே ஒரு கிளை.
மேல் கிளையில கொஞ்ச குருவிகளாம்.
கீழ் கிளையிலயும் கொஞ்ச குருவிகளாம்.
இப்போ கணக்குக்கு வருவோம்:
மேலே இருக்கிற குருவியொண்டு கேட்டிச்சாம் கீழே உள்ள
குருவிகளை பார்த்து "உங்களில எத்தனை பேர் இருக்கிங்க ?" எண்டு.
அதுக்கு கீழ் கிளையில் இருந்த குருவியொண்டு பதில் சொல்லிச்சாம்:
"எங்களில் இருந்து ஒருவர் உங்கள் கிளைக்கு வந்தால்..
"உங்களில் பாதிதான் நாங்கள்"
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..
"நீங்களும் நாங்களும் சமம்"
கேள்வி: மேல் கிளையில் எத்தனை குருவிகள்?
கீழ் கிளையில் எத்தனை குருவிகள்?
பிற்குறிப்பு: இந்த கேள்வி ஏற்கனவே இந்த பகுதியில் கேட்கப்பட்டிருந்தால் அப்பிடியே ஓடிபோயிடு எண்டு சொல்லிடுங்க.
|
|
|
| வரலாற்றின் நரகல்களுக்குள் புதைந்துபோன இன்னுமொருத்தி |
|
Posted by: narathar - 12-27-2005, 10:50 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://img270.imageshack.us/img270/5651/500288255tv.jpg' border='0' alt='user posted image'>
கொதித்துக் கொண்டிருக்கிறது என் தேசம்..
உலையிலிட்ட அரிசியாய்
அச்சத்திலே வெந்து கொண்டிருக்கும் சனங்கள்.
இன்னும்..
ரோம் எரிந்து கொண்டிருக்க,
பிடில் வாசிப்பில் மூழ்கியிருந்த நீரோ மன்னனாய்
சுய தேடல்களுக்குள் ஆழ்ந்தபடி நான்..
கணனியின் திரையில்
நேற்றுத்தான் பார்த்த
அவளது மரத்துப் போன உடல்...
அதே இறுகியும்,
புதைந்தும்
போன உணர்வுகளோடு.
தர்சினி...
வஞ்சிக்கப்பட்ட
என் ஆயிரமாயிரம் சகோதரிகளுள்
ஒருத்தி.
உருண்டையாய், குமிழியாய் இனம்புரியாத ஏதோவொன்று அடிவயிற்றிலிருந்து விண்ணென்று கிளம்பித் தொண்டையை அடைத்துக் கொள்கிறது.. மூச்சு முட்டுகிறது. என்னை விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்... முருகா... கந்தா...
'காக்க காக்க கனகவேல் காக்க,
நோக்க நோக்க நொடியில் நோக்க,
தாக்க தாக்க தடையறத் தாக்க,
பார்க்க பார்க்க பாவம் பொடிபட...'
எப்போதோ பாடமாகிப் போன வரிகள் இப்போதேன் நினைவுக்கு வருகின்றன? ....என்னை விட்டுவிடுங்கள்.... விடுங்கள்ள்ள்ள்ள்..
'அல்லற் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட...'
உயிர்ப்பிழந்த குரல் தேய்ந்து கொண்டே போகிறது... கடைசி நம்பிக்கையும் கைநழுவிப்போன தருணங்களில், இயலாமையின் உச்சகட்டத்தில் தத்துவங்களும், சித்தாந்தங்களும் செயலிழந்துபோக ஆன்மாவோ இருந்தும் இல்லாதிருக்கின்ற.. - அல்லது யாருக்குத் தெரியும் - ..இல்லாதிருந்தும் இருக்கின்ற இறைவனிடம் சரணடைந்து விடுகிறது.
உதடுகள் கிழிந்து தொங்க... மார்பு கடித்துக் குதறப்பட்டிருக்க... திமிறித் தோற்றுப்போய் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.., அவர்களது காம விளையாட்டுக்களை. பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்குள்ளால் வடிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா... தனது வீம்புகளோடும்.., (அவ)மானங்களோடும்.., (அவ)மரியாதைகளோடும்.
வேதனை.. வேதனை.. உயிர்பிடுங்கும் வேதனை. ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது.. ஒவ்வொரு உணர்வும் மரத்துப் போகிறது.
*எனது கண்களின்
வடிப்பில்..,
என்னுள்ளத்தின் தவிப்பில்..
உங்களுக்குத்தான் எவ்வளவு இன்பம்..?
எரிந்து கொண்டிருக்கிறது உடம்பு, அனலிலிட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம். உடலில் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் ஒன்றுதிரட்டி நெருங்க முயன்ற மூன்றாவது **அதிரடிச் சட்டைக்காரனின் முகத்தில் காறி உமிழ்கிறேன்... "சீ... நாயே!" பூட்ஸ் காலால் அடிவயிற்றில் விழுந்தது ஒரு உதை. சர்வமும் கலங்கிற்று.., கர்ப்பப்பை கரைந்து கால்களினூடு ஒழுகிற்று. பிறக்காத என் மதலையின் ஈனக்குரல் எங்கிருந்தோ அலைந்துவந்து உயிர் பிடுங்கிச் சென்றது.
*பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்..
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன..
நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பச்சை இரத்தம் நான் சிதைந்து போனதன் தடயமல்ல... அவர்களிலிருந்து வெளிப்பட்ட குரூரத்தின் அடையாளம். அவர்களது வக்கிர புத்தியால் வென்றெடுக்க முடிந்தது இவ்வளவும்தான். தோற்றுப் போனது என் உடல்தான்.., உயிரல்ல. மரணித்தது வெறும் பிண்டம்தான்.., நானல்ல.
ஒருகாலத்தில் 'நானாயிருந்த' என் உடலைக் கல்லோடு பிணைத்துக் கிணற்றிலெறிகிறார்கள். கோழைப் பயல்கள்.. பயந்தாங்கொள்ளிகள்.. நானோ இங்கிருக்க, வெறும் உடல் உங்களை என்ன செய்துவிடப் போகிறது?
'நான்' இன்னும் உயிர்த்திருக்கிறேன்...
சீதையாய்ப் பிறந்தபோது கற்பு என்ற உங்கள் கற்பிதத்தை நிரூபிப்பதற்காகத் தீக்குளிக்க வைத்தீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
திரௌபதி என்னை, அடகுப் பொருளாய் வைத்து சூதாடியபோதும், நட்டநடுச் சபைதனில் துகிலுரிந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.
அரிச்சந்திரன் மனைவியாய், அரியணையில் அமர்ந்திருந்தவளை வெறும் பண்டமாய் மதித்து அந்தணனுக்கு விற்றீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
குஷ்டரோகி உன்னைக் கூடையில் சுமந்துதிரிய நேர்ந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.
நம்பிவந்தவளை, துன்பங்களை மட்டுமல்ல ஒற்றை ஆடையையும் பகிர்ந்துகொண்டவளை நடுக்காட்டில் தன்னந்தனியே விட்டு ஓடினீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
மன்னம்பேரி, கோணேஸ்வரி, கிருஷாந்தி, சாரதாம்பாள் வரிசையில் நாளை நானும்..,
உங்கள் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களில்..,
என் ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகளின் நினைவுகளில்..
உயிர்த்திருப்பேன்.
என்றென்றைக்கும் உயிர்த்திருப்பேன்.
*ஓய்ந்தேன் என மகிழாதே,
உறக்கமல்ல தியானம்..
பின்வாங்கல் அல்ல பதுங்கல்..
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன,
உனக்கு நரையேற்றும் காலங்கள்...
*நினைவில் நின்றவை..
**அதிரடிச் சட்டை - (நன்றி:- திசேரா)
(அண்மையில்தான் அறிமுகமாகி, ஆழ்மனச் சிதைவுகளிலிருந்து எனை மீட்பித்த ஒரு உறவுக்கு..)
posted by நிவேதா at 5:26 AM
http://rekupthi.blogspot.com/2005/12/blog-post_27.html
|
|
|
|