![]() |
|
தே.மு.தி.க தலைவருக்கு தர்மஅடி:விஜயகாந்த் தப்பி ஒட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தே.மு.தி.க தலைவருக்கு தர்மஅடி:விஜயகாந்த் தப்பி ஒட்டம் (/showthread.php?tid=1738) Pages:
1
2
|
தே.மு.தி.க தலைவருக்கு தர்மஅடி:விஜயகாந்த் தப்பி ஒட்டம் - வினித் - 12-28-2005 <b>தே.மு.தி.க. மாவட்ட தலைவருக்கு தர்ம அடி -3 கார்கள் சேதம் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பினார் விஜயகாந்த்</b> ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழக விருதுநகர் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை அடித்து உதைத்தனர். இக்கட்சியை சேர்ந்த கிராம தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. இதைப் பார்த்த விஜயகாந்த் சினிமா காட்சி போல் காரை வேகமாக பின் னோக்கி ஒட்டிச் சென்று தப்பினார். திருவில்லிபுத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பல இடங்களில் பேசினார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விஜயகாந்த் மேல தொட்டிய பட்டி கிராமம் வழியாக பல கிராமங்களுக்கு செல்ல வந்தார். மேல தொட்டிய பட்டி ஊருக்குள் வராமல் மெயின் ரோடு வழியாக் செல்ல முயன்ற விஜயகாந்த் வாகனத்தை அவரது கட்சியினர் டிராக்டரை வைத்து மறித்தனர். ஊருக்குள் வருமாறு விஜயகாந்தை அழைத் தனர். அவர் ஏற்கனவே மூடு அவுட்டாகி இருந்ததால் வர முடியாது என்று கூறிவிட்டார். நிர்வாகிகள் கிராம மக்களை கடுமையான வார்த் தைகளால் திட்டினர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை சரமாரியாக கம்பால் அடித்தனர். விஜயகாந்த் சினிமா போல் தனது காரை பின்னோக்கி மிக வேகமாக ஓட்டிச் சென்று தப்பி ஓடினார். கிராமத்து கட்சியினர் சரமாரியாக கற்கள் கம்பு கட்டைகளை வீசி அடித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜா கார் உள்பட விஜய காந்துடன் வந்த 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கட்சி கொடி பேனர் டிஜிட்டல் கட் அவுட்-களை உடைத்து கிழித்து தீ வைத்தனர். என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் விஜயகாந்த் கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இது அவரது கட்சியினரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது. dinakaran.com - Luckyluke - 12-28-2005 சினிமாவில் புனையப்படும் கிளைமேக்ஸ் காட்சியாக அரசியலை நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்..... சினிமாவில் வேண்டுமானால் அவர் கதா நாயகனாக இருக்கலாம்... அரசியலில் அவர் ஒரு காமெடியன் தான்.... - Danklas - 12-28-2005 Luckyluke Wrote:சினிமாவில் புனையப்படும் கிளைமேக்ஸ் காட்சியாக அரசியலை நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்..... சினிமாவில் வேண்டுமானால் அவர் கதா நாயகனாக இருக்கலாம்... அரசியலில் அவர் ஒரு காமெடியன் தான்.... ஆமா அமா,, அப்படிகேளுங்க நாக்கு புடுங்கத்தனையா 4,1/2 வார்த்தை,,, இதுதான் எண்ட கருத்தும்,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Luckyluke - 12-28-2005 இன்னும் சில காலம் போனால் வடிவேலு கூட தனிக்கட்சி ஆரம்பிப்பார் போல.... ஏற்கனவே கார்த்திக் இங்கு ஒரு தேசிய ஜாதி கட்சியில் இணைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்...... - rajathiraja - 12-28-2005 சினிமாவில் புனையப்படும் கிளைமேக்ஸ் காட்சியாக அரசியலை நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்..... சினிமாவில் வேண்டுமானால் அவர் கதா நாயகனாக இருக்கலாம்... அரசியலில் அவர் ஒரு காமெடியன் தான்.... அப்படி போடு அருவாளை. - Luckyluke - 12-28-2005 rajathiraja Wrote:அப்படி போடு அருவாளை. நைனா... நீ நெப்போலியன் ரசிகனா நைனா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 12-28-2005 நடிகர்கள் சினிமா புகழை வைத்து அரசியலில் நுழைந்து அதிகாரத்து வருவதற்கு தவறுதான். அதே சமயம் இன்னொரு விடயத்தையும் கவனிக்கணும் இந்த செய்தியை வெளியிட்டது திமுக ஆதரவு தினகரன் பத்திரிகை. அவர்கள் திமுகவுக்கு போட்டியா வருபவர்களை தாக்க செய்தியை எப்படி வேண்டுமானாலும் திரித்து எழுத கூடியவர்கள். ஒரே செய்தியை தினகரனிலும் தினமணியிலும் படிக்கும் போது செய்திகள் ஒன்றுகொன்று எதிர்மாறாக இருப்பவதை கவனித்திருக்கின்றேன். தினமணி அதிமுக ஆதரவு பத்திரிகை என்று நினைக்கின்றேன். - Vasampu - 12-28-2005 ஆனால் இவ்விடயம் தற்ஸ்தமிழ் இணைப்பிலும் வந்துள்ளது. அதுபோல் விஜயகாந் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே பிரைச்சினைகள் தான். இவரின் நீண்டகால இரசிகர்கள் பலர் இப்போது விஜயகாந்தை விட்டு விலகிச் சென்றுள்ளனர். - AJeevan - 12-28-2005 <b>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஜயகாந்த் வேன் மீது கல்வீசி தாக்குதல் ஊருக்குள் வராததால் தொண்டர்கள் ஆத்திரம் </b> ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.28- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஜயகாந்த் ஊருக்குள் வராததால் தொண்டர்கள் அவர் வந்த வேன் மீது கல் வீசினார்கள். <b>சுற்று பயணம்</b> தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3-வது நாளாக சுற்று பயணம் செய்தார். ராஜ பாளையம் பகுதியில் சுற்று பயணத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 9.10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். அப்போது மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் ராமராஜ், மாவட்ட தலைவர் தாமோதரக்கண்ணன், மாவட்ட செயலாளர் வைரமுனி மற்றும் ஒன்றிய, மாவட்ட, நிர்வாகி கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனையத்து மாரியம்மன் கோவில் முன்பு விஜயகாந்த் பேசினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் ரோட்டில் உள்ள நூற் பாலை முன்பு வைத்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தக்கு வர வேற்பு கொடுத்தனர். அங்கு திறந்த வேனில் நின்றவாரே பேசினார். <span style='color:red'>பின்னர் அவர் மேலதொட்டிய பட்டி, பிள்ளையார்நத்தம் சென்று வத்திராயிருப்பு செல்வதாக இருந்தது. ஆனால் இரவு அதிக நேரம் ஆகி விட்டதால் மேல தொட்டியபட்டி, பிள்ளையார் நத்தம் செல்லாமல் வத்தி ராயிருப்பு செல்ல வேனை திருப் பினர். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் தலை வரே எங்க ஊருக்குள் வர வேண்டும், இல்லையென்றால் வேனை விடமாட்டோம் என ஆக்ரோஷமாக பேசி வேனை சுற்றி நின்று கொண்டனர். சிலர் வேனின் முன்பு படுத்து மறியல் செய்தனர். நேரம் ஆகி விட்டதால் வரமுடியவில்லை என்று விஜயகாந்த் கூறியும், அவர்கள் நகரவில்லை. இதனால் வேனை பின் நோக்கி நகர்த்தி வேனை வேகமாக எடுத்து சென்றனர். <b>கல்வீச்சு</b> இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் விஜயகாந்தின் கண் எதிரே கொடி கம்பங்கள், போஸ்டர்களை கிழித்து எரிந்தனர். மேலும் அங்கு கட்டப்பட்டு இருந்த 100க்கும் மேற்பட்ட டிïப் லைட்டுகளை அடித்து நொறுக்கினார்கள். விஜயகாந்தின் வேன் பின்னால் சரமாறியாக கற்களால் தாக்கினார்கள். இதற்கிடையில் விஜயகாந்தின் பின்னால் வந்த ஒன்றிய செயலாளர் ராஜா காரை பொது மக்கள் சுற்றி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். விஜய காந்த் வேன் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</span> தினத்தந்தி - SUNDHAL - 12-29-2005 தினமணி சற்று நடுநிலைமையான பத்திரிகை......... - வர்ணன் - 12-29-2005 இராட்சத பலம் கொண்ட இரு கட்சிகள் அ.தி.மு.க - தி.மு.க என்பவை. நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டவை என்பது மட்டும் அல்ல கணிசமான வாக்காளர்களை எப்போதும் தம் பக்கம் வைத்திருக்கும் நிலையான வாக்கு வங்கிகளையும் கொண்டவை. அப்படிபட்டவர்களே தேர்தல் என்ற ஒன்று வந்து இறுதி முடிவு அறிவிக்க படும் வரை வெற்றி தம் பக்கம் வேண்டி வேண்டாத தெய்வங்கள் இல்லை செய்யாத யாகங்களும் இல்லை. என்னதான் வெளிபேச்சுக்கு நாங்கள் திராவிட பாரம்பரியம் கொண்டவர்கள் பெரியார் வழி வந்தவர்கள் என்று சொன்னாலும் உண்மை நிலை பெரும்பாலும் இதுவென்றே நினைக்கின்றேன்! நிலமை இவ்வாறு இருக்க வெறும் ரசிகர் மன்ற உறுப்பினர்களை நம்பி "எனக்கு இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றது" அவர்கள் என்னை முதல்வர் ஆக்கி பார்க்க ஆசை படுகிறார்கள்" வறுமைக்கு கண்ணி வெடி வைப்பேன் லஞ்சத்தை தூக்கி உள்ளே போடுவேன்" என்றெல்லாம் வாண வேடிக்கை காட்டும் விஜயகாந்தின் நடவடிக்கைகள் எந்தளவு தூரம் சாத்தியபாடானவையாக அமையபோகின்றன என்பதை அவரிடமே கேள்வியாக விட்டுவிடுவது நல்லது போல் தெரிகிறது! ஐயா இத்தனை ஆயிரம் ரசிகர்மன்றம் இதனை இலட்சம் உறுப்பினர்கள் என்று முகட்டு வளையை பார்த்தபடி முகத்தை வைத்துகொண்டு கோட்டையை பிடிக்கும் கனவில் குறட்டை விடும் உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் நம்பி இருக்கும் ரசிகர்கள் எல்லாம் கட்சி நீங்கள் ஆரம்பிக்குமுன் பாகிஸ்தானிலா இருந்தார்கள்? ஏதோ ஒரு கட்சியில் இன்றுவரை இருக்கும் அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் உங்கள் பக்கம் ஓடி வருவார்கள் என்று நம்பியது எதை வைத்து? அப்பிடியே அவர்கள் எல்லாரும் உங்கள் பக்கம் ஓடிவந்தாலும் முதல்வர் ஆக இன்னும் சிலலட்சம் வாக்குகள் நீங்கள் சேர்த்தே ஆகவேண்டி இருக்கும் வெளியில் இருந்து என்று நினைக்கிறேன். எது எப்படியோ அரசியல் சினிமா என்ற இருவட்டத்துக்குள் அகப்பட்ட வாழ்வை தவிர்த்து ஒரு மனிதனாய் அலைகடல் தாண்டி வந்து ஏதிலிகளாய் அகதி முகாம்களில் கிடந்து அல்லலுற்ற எம் இனத்துக்கு பலருள் ஒருவாராய் ஓடோடி வந்து நீங்கள் செய்த உதவிகளை எப்போதும் நன்றியோடு நினைவுகொள்வோம்! 8) - Raguvaran - 12-29-2005 Quote: தினமணி சற்று நடுநிலைமையான பத்திரிகை நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தினபுூமி தான் அதிமுக ஆதரவு பத்திரிகை என்றும் நினைக்கிறேன். - தூயவன் - 12-29-2005 SUNDHAL Wrote:தினமணி சற்று நடுநிலைமையான பத்திரிகை......... ஆமாம். சுண்டல் பாதி சுட்டுப் போடுவது அங்கிருந்து தானே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - rajathiraja - 12-29-2005 தினமணி - நடுநிலையான பத்திரிக்கை தினமலர் - அளும் அருசாஙக்துகு ஆதராவாய் மாறும் ஒரு பத்திரிக்கை தின தந்தி - அதிகமான மக்கள் படிக்கும் பத்திரிக்கை உன்மையான செய்திகள் தினகரன் - தி மு க பத்திரிக்கை தின பூமி - அ தி மு க பத்திரிக்கை - rajathiraja - 12-29-2005 தமிழ் நாட்டில் விற்பனையில் தின தந்தி முதல் இடத்திலும் தினமலர் ரெண்டாம் இடத்திலும் உள்ளன. - rajathiraja - 12-29-2005 தமிழ் நாட்டில் தி.மு.க அ.தி.மு.க இந்த கட்சி விரும்பாத மக்கள் விஜயகாந்த்கு ஆதரவு அளிக்கலாம். வைகோ,ராமதாஸ் கட்சிகளின் ஓட்டு இவரால் சிதறகூடிய வாய்ப்பு உள்ளது. - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 12-29-2005 rajathiraja Wrote:தினமணி - நடுநிலையான பத்திரிக்கை <b>¾¢ÉÁÄ÷ - ¾Á¢Æ÷¸ÙìÌ ²¾¢Ã¡É Àò¾¢Ã¢ì¨¸</b> - rajathiraja - 12-29-2005 தம்பி உடையான் அவர்கலே !!! உங்கலுக்கு அந்த பத்திரிக்கை விருப்பம் இல்லையென்ரால் விட்டு விடுங்கள். தவறான ஒரு செய்தி தறவேண்டாம். - வர்ணன் - 12-29-2005 ¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:rajathiraja Wrote:தினமணி - நடுநிலையான பத்திரிக்கை 8) - Luckyluke - 12-29-2005 தினமலர் மனிதர்களுக்கு எதிரான பத்திரிகை..... |