| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 258 online users. » 0 Member(s) | 256 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தேடல்! |
|
Posted by: வர்ணன் - 01-12-2006, 02:17 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது!
பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது....
பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது!
பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே
அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது!
இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது!
எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான்
சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது!
தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம்
பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது!
தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் போதுதான்
தேசியத்தலைவனின் அருமை புரிகிறது- தேசம் என்ற ஒன்று வேண்டுமென்ற தேடலும் நடக்கிறது!
இல்லாமல் போய்விட்டது உன் சகோதரன் என்று ஆனதனால் எதிரியை அழிக்கவேண்டும் என்று- உன் மனம் வீரத்தின் திசை நோக்கி தேடல் கொள்கிறது!
தேடல்களூக்கு முதல் உண்டு முடிவில்லை-
இயக்கம் உண்டு இழப்பு இல்லை!
வார்த்தைகள் ஒரு போது இருக்கலாம் -ஆனால் வரைமுறை என்ற ஒன்று அங்கில்லை!
தன்நிலைபற்றி தானே தேடல் கொள்பவன் -கண்மூடி நாளை அவனை மண்மூடி போனாலும் காலத்தை வெல்வான்!
தன்னிலை மறந்தவன் - உலகம் சிரித்து இருக்க ஒடுங்கிப்போய் மூலையிலிருந்து- தனித்திருந்து அழுதழுதே -
தன்னைத்தானே கொல்வான்!
|
|
|
| மண்குதிரையை நம்பி அகழியில் கால் வைக்கும் அமெரிக்கா |
|
Posted by: ஊமை - 01-12-2006, 12:33 AM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
<b>புலிகள் மீண்டும் போருக்கு செல்வார்களேயானால் வலிமைமிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும் </b>
[size=18]அமெரிக்கா கடும் எச்சரிக்கை
விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்கு திரும்பினால் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை சந்திக்கவேண்டியிருக்குமெனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட்,
விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டுமென்றே வாஷிங்டன் விரும்புகிறது.
ஆனால், அவர்கள் சமாதானத்திலிருந்து விலகுவார்களேயானால், நாம் ஒன்றை அவர்களுக்கு தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம்.
இப்போதுள்ளதை விட மிகவும் வலிமையான மிகவும் வினைத்திறன் மிக்க, இலங்கைப் படையினருடனேயே யுத்தம் புரிய வேண்டியிருக்கும். அதாவது யுத்தத்திற்காக அவர்கள் செலுத்த வேண்டிய விலை அதிகமாயிருக்கும் எனவும் தெரிவித்தார்.
சட்ட பூர்வமான அரசொன்று தனது மக்களின் பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் என எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அமெரிக்கா உதவி புரியும் என தெரிவித்த அவர் தமது பயிற்சி மற்றும் உதவித் திட்டங்கள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதையும், சட்ட விரோத பணிப்பரிமாற்றத்தை தடை செய்வதையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேநேரம் தனது மக்களையும் நலன்களையும் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அமெரிக்கா உதவி வழங்கும்.
வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இந்தளவிற்கு மிகக் கடுமையாக அமெரிக்க தூதுவர் ஏன் பேசுகிறார் எனக் கூட நீங்கள் கேட்கலாம்.
அதற்கொரு காரணமுள்ளது. வர்த்தக சமூகம் தான் சமாதான முயற்சிகளின் பலாபலன்களை உணரப்போவதென்பதாலேயே அவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தார்.
தினக்குரல்
இதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது. நகைச்சுவை என்று தான் நாம் இதனை கருத முடியும். போயும் போயும் இலங்கை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இராணுவத்தை நம்பியா ஐயோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது என்ன நகைச்சுவை 2005 முடிவு என்பதா அல்லது 2006 ஆரம்பம் என்பதா. தாங்களே ஈராக்கில ஓட வழிதெரியாமல் இருக்கினம் அதுக்கிடையில சிங்கள ஆமிய அவங்களுக்கு துவக்கு தேவையில்ல ஆளுக்கொரு 100 ரூபா நோட்டு கொடுத்தாலே காணும் வைத்திருக்கிற துவக்கையும் தாறன் இன்னும் கொஞ்சம் கூட பணம் தருவாயா என்று கேட்கிறவங்களை நம்பி அமெரிக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன செய்ய ?????
|
|
|
| வெடி கொளுத்தி ஒரு ஊர்ப்பொங்கல் |
|
Posted by: kanapraba - 01-11-2006, 11:03 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (12)
|
 |
<img src='http://img347.imageshack.us/img347/4264/pongal11ns.jpg' border='0' alt='user posted image'>
பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம்.
“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,
பொஙகல் திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும் இது சித்திர வகுப்பு.
இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.
தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.
பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.
என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு வீடு திரும்பும் போது எங்கட வீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்டிக்க்கொண்டு வீடுதிரும்புவது அவரின்ர வழக்கம். கிட்டத்தட்ட முப்பது நிமிட நடைபயணம்.
விசுக்க்கு விசுக்கொண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.
கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.
ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.
ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்ச்சிருக்கும்.
ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,
வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா " எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போ" என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.
அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை
" கெதியா வாங்கோ பிள்ளையள்" என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது
"என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே" எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.
" இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்" என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.
" சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை" எண்டு சொல்லி பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.
என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டுருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு "பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்" என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.
பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.
அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)
யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.
வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.
ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.
திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.
கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.
அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.
தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல்
அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.
எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.
வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.
பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.
பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்.
அட்டைவாணத்தைக் கொளுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.
சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போர் கருகி ஓய்ந்துவிடும்.
நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாகவைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியாது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாகச் சென்று வெடிக்கும்.
றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து " ஐயோ அம்மா" என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.
திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” என்ற பெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.
ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல்ச் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.
இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.
ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொறுத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.
பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.
அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த அந்த முற்றத்தில் உலக்கையை நீட்டிவைத்து மாவை அதன் மேல் தூவிச் சதுரவடிவப்பெட்டியாகக் கோலம் அமைப்போம். அதன் நடுவில் தான் பொங்கல் வேலை ஆரம்பிக்கும்.
சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.
முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இந்தை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.
ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.
பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
காகஙளுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.
சரி சரி, நேரமாயிட்டுது, பொங்கலுக்கும் சாமான் வேண்ட வேணும்.
நான் நடக்கப் போறன்.
ஹிம், இந்த நாட்டில வெடிகொளுத்தாம, எலக்ரிக் குக்கரில தான் பொங்க வேணும்.
(இது நான் என்ர மனதுக்குள்ள சொல்லிகொள்வது)
|
|
|
| சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது |
|
Posted by: Thala - 01-11-2006, 10:12 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
டி.சிவராம் (தராக்கி)
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (08.08.04)
புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்)
புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத்துமாத்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் அரசியல் தீர்வில் உண்மையான நாட்டமெதுவும் கிடையாது. அதனாலேயே அவர்கள் தமது சார்பில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைப்பதில்லை. இலங்கையில் அமைதிப் பேச்சுகள் குழம்புவதற்கு இதுவே முக்கிய காரணமாகிறது! - என்பதே சிங்களப் பேரினவாதிகளும் ஸ்ரீலங்கா அரசும் தங்களுடைய அடாவடித்தனங்களை நியாயப்படுத்தவென சர்வதேச சமூகத்திடம் எடுத்தியம்பி வந்த விளக்கமாகும்.
இனப்பிரச்சினை தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் விடுதலைப் போராட்டத்தை சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட பயங்கரவாதமாகக் காட்டுவதற்கும் மேற்படி வாதம் அவர்களுக்கு மிகவும் பயன்பட்டுவந்தது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே விடுதலைப் புலிகள், தமிழர் கடந்த 50 வருடங்களாக கடந்து வந்த அரசியல் பாதையின் முக்கிய மைல்கற்களை அடித்தளமாகக் கொண்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை என சர்வதேச தமிழ் சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசிடம் கையளித்தனர். இதைக் கண்டதும் சிங்களத் தேசியவாதிகள் போட்ட பெரும் கூச்சலின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
சிங்களப் பேரினவாதிகளின் அபிமான நாயகனான கதிர்காமர் அமெரிக்கா மற்றும் இந்தியத் தலைநகரங்களுக்குச் சென்று 'இது இடைக்காலத் தீர்வல்ல தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான நகல்திட்டம்" - என்று கொக்கரித்தார்.
சந்திரிகாவும் கதிர்காமரும் ஜே.வி.பி.யும் சிங்களப் பேரினவாதப் புத்திஜீவிகளும் அத்தோடு நடுநிலையாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில சிங்கள அறிஞர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற சில தமிழர்களும் சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாக புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை நிராகரித்து விடும் என திட்டவட்டமாக நம்பினர்.
ஏனெனில், அடக்கு முறைக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களுக்கு தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு புலிகளின் திட்டம் முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும், அதனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டா என்பதும் மேற்படியாரின் நம்பிக்கையாக இருந்தது.
புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை சர்வதேச ஆதரவோடு புறக்கணித்து புலிகளை வழிக்குள் கொணரலாம் என எண்ணிய சந்திரிகாவும் அவரது மதியுரைஞர்களும் 'அதைப்பற்றிப் பேசலாம்; ஆனால், நாம் முன்வைக்கின்ற மாற்றுத் தீர்வுத்திட்டத்தைப் பற்றியும் பேசினால் என்ன?" - எனப் புலிகளைக் கேட்குமளவிற்கு இன்று நிலைதடுமாறியுள்ளனர்.
இங்கு ஏலவே குறிப்பிடப்பட்டதைப்போல, புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதி;காரசபைத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லை - என நாடிபிடித்து அறிந்திருந்தால் சந்திரிகாவும் சிங்களப் பேரினவாதிகளும் மேற்குறிப்பிட்ட ஏனையோரும் பேச்சுவார்த்தையைக் குழப்பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத வன்முறையாக காட்டும் வேலையில் முழு மூச்சாக இறங்கியிருப்பார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமெனப் பட்டியலிட்டுள்ள அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் கூட ஏன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை கண்டிக்காமலும் அதைக்கைவிட்டு ஸ்ரீலங்கா அரசுக்கு ஏற்புடைய வேறொரு அடிப்படையில் பேசுமாறு புலிகளை வற்புறுத்தாமலும் இருக்கின்றன என்பதை சிங்களப் பேரினவாதிகளும் புத்திஜீவிகளும் புரிந்துகொள்ளாமல் இன்று புலம்பி வருகின்றனர்.
அண்மையில், அமெரிக்க இராஜாங்க பிரதி உதவிச் செயலர் டொனால்ட் காம்ப் கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது தொடுக்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளில் இந்த ஆதங்கத்தைக் காணலாம்.
உலகின் இரு முக்கிய மூலப்பொருட்களை கையகப்படுத்தும் நோக்குடன் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு போன்றதொரு இடைக்காலத் தீர்வுத் திட்டத்துக்கு அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான பிரித்தானியாவும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளன என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எமது விடுதலைப் போராட்டம் பெருமெடுப்பில் ஆயுதக் கிளர்ச்சியாக பரவிய அதே ஆண்டு (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள். சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது.
மத்திய தரைக்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது என 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியா உணர்ந்து கொண்டதாலும் இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மேற்படிக் கடற்பாதைகள் கட்டாயம் தேவை என்பதாலும் சூடானில் பிரித்தானியப் பேரரசு கால்வைத்தது. அதற்குப் போட்டியாக அங்கு வல்லாதிக்கம் செலுத்த பிரான்ஸ{ம் முனைந்தது. நவீன உலகின் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக எண்ணெய் தோன்றிய பின்னரும் அது செங்கடலின் ஒரு கரையில் அமைந்துள்ள சவூதி அரேபியாவில் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும் சூடானின் கேந்திர முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக பிரித்தானியப் பேரரசு சூடான் மீது தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டது.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சூடான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள், பல ஆயுதக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டன. இதன் காரணமாக, சூடான் மக்களை பிரித்தாளும் நோக்கில் அந்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதற்கு பிரித்தானியப் பேரரசு முயற்சியெடுத்து அதில் வெற்றி கண்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சுயெஸ் கால்வாய் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போனதால் செங்கடல் மீதும் சூடான் மீதும் பிரித்தானியாவுக்கிருந்த அக்கறை அருகிப்போயிற்று. இது 1956ஆம் ஆண்டு சூடான் சுதந்திரமடைவதற்கு வழிவகுத்தது. எனினும், சூடான் அரசு மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு தென்சூடான் மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் காலத்துக்குக் காலம் பயன்படுத்தத் தவறவில்லை.
எண்ணெய்வளம் நிரம்பிய சவூதி அரேபியாவின் பாதுகாப்பை முன்னிட்டு அமெரிக்கா செங்கடல் பிராந்தியத்தில் பிரித்தானியா விட்டுச் சென்ற ஏகாதிபத்திய இடைவெளியை நிரப்பிற்று.
ஸ்ரீலங்கா அரசு மீது அழுத்தத்தைச் செலுத்தி அதைத் தன் வழிக்கு வரவைப்பதற்காக இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்த முயற்சித்த அதே பாணியில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான பிரித்தானியாவும் தென் சூடான் மக்களின் போராட்டத்தை பயன்படுத்தின.
இதனிடையே, தென் சூடானில் பெரும் எண்ணை வளமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் எதிராகத் தன்னை பாதுகாத்துக் கொள்ள எண்ணிய சூடான் அரசு இந்த எண்ணெய் வளத்தை அபிவிருத்தி செய்யும் தனி உரிமையை சீனாவுக்கு வழங்கியது.
தென் சூடானின் எண்ணெய் வளத்தை சீனா முழுமையாகக் கையகப்படுத்திக் கொண்டால், அது தனக்குச் சவால் விடக்கூடிய உலக வல்லரசாக வளர்ந்து வரும் வேகம் மேலும் துரிதப்படும் என்பதை உணர்ந்த அமெரிக்காவம் அதன் கூட்டு நாடுகளும் வேலையில் இயங்கின.
தென் சூடான் போராட்ட இயக்கத்துக்கு அமெரிக்கா கூடிய இரகசிய ஆதரவு வழங்கத் தொடங்கியது. சூடானின் இறைமையைச் சிதைத்து அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதை தம் வழிக்குக் கொண்டுவர அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் எடுத்த முயற்சிக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
நீங்கள் கையில் வைத்திருக்கும் இப்பத்திரிகைக் காகிதத்தின் மீது அச்சடிக்கப்படும் மை பரவி ஊறாமல் சீராக அடிக்கப்படும் வடிவத்திற்கு அமைய, நிற்பதற்கு ஒரு மூலப் பொருள் இன்றியமையாதது ஆகும். அதுதான் அரபிப்பசை (புரஅ யுசயடிiஉ) இந்த மூலப் பொருள் இல்லாவிட்டால் நீங்கள் அருந்தும் மென்பானங்களின் செயற்கை நிறங்கள் போத்தலின் அடியில் படிந்து விடும். அது மட்டுமன்றி அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், இனிப்பு வகைகள் எனப் பல்வேறு உற்பத்திகளுக்கு அரபிப்பசை முக்கியமான மூலப் பொருள் ஆகும்.
உலகின் மொத்த அரபிப்பசை உற்பத்தியின் 80 சதவீதத்திற்கு மேல் சூடானிலிருந்தே ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதியை முழுமையாக கட்டுப்படுத்துகின்ற நிறுவனத்தின் (புரஅ யுசயடிiஉ ஊழஅpயலெ) உரிமையாளராக இருந்து வந்தவர் ஒஸாமா பின்லேடன் ஆவார்.
1996ஆம் ஆண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு சூடான் அரசு தஞ்சமளிக்கிறது எனக் கூறி சூடான் மீது அமெரிக்கா வரையறுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தது. அதேவேளை, சூடானிலிருந்து அரபிப்பசையை இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது.
இற்கெதிராக உடனடியாகவே அமெரிக்காவின் பெரும்பலம் படைத்த மென்பான உற்பத்தியாளர் சங்கமும் அமெரிக்க அச்சக உரிமையாளர் சங்கமும் போர்க் கொடி தூக்கின. இவற்றின் அரசியல் மற்றும் பணம் செல்வாக்கை கண்டு பயந்த அமெரிக்க அரசு தடையை நீக்கியது.
ஆனால், சீனாவின் கைக்குள் சூடானின் எண்ணெய் வளம் போகாமல் இருப்பதற்கும், அரபிப்பசை உற்பத்தி மீது செல்வாக்குச் செலுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் திட்டம் தீட்டிச் செயல்பட்டன.
தென் சூடான் போராட்ட இயக்கம் தன் சொந்தக் காலில் சுதந்திரமாக நின்று செயல்படும் ஓர் அமைப்பு அல்ல. அமெரிக்க, பிரித்தானிய செல்வாக்கிற்கு அமையவே அதன் தலைமை செயல்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது படிப்படியாகத் தமது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தென் சூடான் போராட்ட இயக்கத்தை பேச்சுவார்த்தையில் இறக்கின.
சூடான் அரசுக்கும் தென்சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் ஆரம்பித்த பேச்சுக்களுக்கு நோர்வே அனுசரணையாளராக நியமிக்கப்பட்டது.
(நோர்வேயை அனுசரணையாளராக கொண்டு வருவதில் அமெரிக்காவே பின்னின்று செயற்பட்டது.)
மேற்படி பேச்சுக்களின் ஊடாக சூடான் அரசு மீது தனது செல்வாக்கைப் பெருக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளம், கனிம வளம், அரபிப்பசை மற்றும் செங்கடல் பாதைகள் ஆகியவற்றை தான் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகிறது.
நோர்வேயின் அனுசரணையோடு நடைபெற்ற பேச்சுக்களின் விளைவாக சூடான் அரசுக்கும் தென் சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது.
இந்த இடைக்கால நிர்வாக அமைப்பு பற்றிய உடன்படிக்கை ;மச்சாக்கோஸ் ப்றொட்டக்கோல் (ஆயஉhயமழள Pசழவழஉழட) என அறியப்படுகிறது.
இந்த உடன்பாட்டின் கீழ் தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை எந்தவித தங்குதடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் நிறுவப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் காலமுடிவில் (6 ஆண்டுகள்) தென் சூடான் மக்கள் ஐக்கியப்பட்ட சூடானுக்குள் இருப்பதா அல்லது பிரிந்து தனிநாடாகச் செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக சர்வதேச hPதியாகக் கண்காணிக்கப்பட்ட தேர்தல் ஒன்று நடத்தப்படும் என வரையறுக்கப்பட்டது.
ஈராக்கிற்கு அடுத்ததாக சூடான் பிரச்சினை சர்வதேச கவனத்தை இன்று ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டுப் போரொன்றின் தீர்வுக்கு ஒரு இடைக்கால நிருவாக கட்டமைப்பு முக்கியமானது என்பதும் ஒரு சமூகத்தின் சுயநிர்ணய உரிமை ஜனநாயக hPதியாக தீர்மானிக்கப்படலாம் என்பதும் ஒதுக்க முடியாத விடயங்களாக உள்ளன.
ஐக்கிய சூடானுக்குள் தென்சூடான் மக்கள் தொடர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இடைக்கால ஒழுங்கு பயன்படவேண்டும் என மச்சாகோஸ் உடன்பாடு கூறுகிறது.
அதேபோல ஐக்கிய இலங்கைக்குள் தாம் தொடர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்த சிறிலங்கா அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வரலாற்று வாய்ப்பாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை நோக்கப்பட வேண்டும் என்பதை நாம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பவேண்டும்.
சூடானில் ஒரு கதை இலங்கையில் ஒரு கதை என ஆகவும் பம்மாத்து விட முடியாத நிலையில் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் உள்ளன.
இதில் மிக முக்கியமானது என்னவெனில், சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான வரலாற்றுக்காரணங்கள் தென் சூடான் மக்களைவிட தமிழீழ மக்களுக்கே மிக அதிகமாகவே உள்ளன.
சூடானின் இடைக்காலத் தீர்வுத்திட்டத்தைப் போலல்லாது புலிகள் முன்வைத்துள்ள இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபைத்திட்டம் எமது முழுச் சுயநிர்ணய உரிமையை கொள்கையளவில் மட்டுமன்றி நடைமுறையிலும் செயற்படுத்தும் கட்டமைப்புகளைப் பற்றியும் பேசுகிறது.
எமது வளங்கள், எமது நிலம் ஆகியவற்றின் மீதான எமது உரிமையையும் வலியுறுத்துகிறது. ஆனால், சூடானில் இடைக்காலத் தீர்வு அமெரிக்க நலன்களையும் உள்ளடக்குவதால் இவை பற்றித்தெளிவாகப் பேசவில்லை.
எனினும், சூடானின் இடைக்காலத்தீர்வும் அதன் அடிப்படையாக அமைந்துள்ள சுயநிர்ணய உரிமைக்கோட்பாடும் இவற்றிற்கு மேற்கு நாடுகள் வழங்கிய ஆதரவும் எமக்கு சாதகமாகவே உள்ளன. இதனாலேயே, சிங்களப் பேரினவாதிகள் கலங்கிக் குழம்புகின்றனர்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் முழங்குவது மட்டுமே எமது அரசியல் வேலை என்று சும்மாயிருக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் இதுபோன்ற விடயங்களை மேலும் கற்று மக்களிடையே இறங்கி வேலை செய்ய வேண்டும்.
http://www.webtamilan.com/politics/2004/08.../blog-post.html
|
|
|
| நம்பிக்கை தரும் தமிழகம் |
|
Posted by: வியாசன் - 01-11-2006, 08:55 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
ஈழத் தமிழருக்காக தமிழகத்தின் நிலைப்பாடு மாறியது எப்படி? நான்கு ஆண்டு கால நல்லெண்ண நடவடிக்கையால் கனிந்துள்ள வெற்றி ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள்ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள்
சோ.ஜெயமுரளி
இராணுவத்தின் கொடூரப்பிடிக்குள் நசியுண்டு தினமும் பிணவாடையிலேயே கண்விழிக்கும் தமிழர் தாயகம்இ தனக்காக குரல்கொடுக்க எவருமில்லையா என்ற ஏக்கத்துடனுள்ளபோதுஇ தாய்த் தமிழகத்தின் அண்மைய அரவணைப்பு சற்று ஆறுதலடைவேயே செய்துள்ளது.
இங்கு எம்மீது பேரிடியாய் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜங்களுக்கான எதிர்ப்புகள் அல்லது இரத்தக்கொதிப்பு தற்போது தாய் நாட்டிலிருந்து உடனுக்குடனேயே வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாகஇ கடந்த திங்கள் இரவு திருகோணமலையில் 5 அப்பாவி மாணவர்களை படைகளால் நடுத்தெருவில் படுக்கவைத்து ஈவிரக்கமின்றி காதுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஹவிடுதலைச் சிறுத்தைகள்' அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் "எங்கள் தங்கை தர்ஷிசினிக்கு வீர வணக்கம்"( புங்குடுதீவில் கடற்படைகளால் குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்ட சகோதரி)இ " எங்கள் ஐயா பரராஜசிங்கத்திற்கு வீர வணக்கம்" இ "திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வீர வணக்கம்" போன்ற கோஷங்கள் ஓங்கி ஒலித்ததுடன் "சிங்கள அரசுக்கு இந்தியா உதவிவழங்கக் கூடாது" இ "தமிழினத்தை அழிக்கும் சிங்கள இன வெறியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்காதே" "மற்றும் தமிழீழத்தை அங்கீகரி " ஆகிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தை நடாத்த சென்னை பொலிஸாரால் ஒரு மணி நேரமே வழங்கப்பட்டிருந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.) அமைப்பின் செயலாளர் தொல். திருமாவளவன்இ பாட்டாளி மக்கள் கட்சியின் ( பா.ம.க.) துணைத் தலைவர் சீ.ஆர். பாஸ்கரன்இ மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ( ம.தி.மு.க) நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் அதியமான்இ கவிஞர் அறிவுமதிஇ இயக்குநர்களான சீமான்இ புகழேந்தி தங்கராசுஇ தமிழர் இயக்க தலைவர் தியாகுஇ தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி சு.பத்மநாதன்இ தமிழ் மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழன்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான உணர்ச்சிக் குமுறல்கள் நவம்பர்இ டிசம்பர் காலப்பகுதியில்இ அதாவது மாவீரர் வாரத்தையொட்டியதாக ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பத்தில் சுவரொட்டிகளூடாக வெளிப்படத் தொடங்கிய இக் கொதிப்புகள்இ இந்திய அரசின் ஆட்சிப்பீடத்தை நோக்கிய ஆதங்க கடிதங்களாயும் பின்னர் மகாநாடாயும் மாறிஇ கருத்தரங்கமாகவும் கண்டனப் பேரணிகளாகவும் வந்துள்ளன. இவை ஒரு சில வாரங்களில் மாத்திரம் இடம்பெற்ற பரிணமிப்புகளே.
இதைவிடஇ " ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு ஒப்பான தமிழினப் பணி வேறெதுவுமில்லை " என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழகத்தின் முதுபெரும் கல்வியாளருமான வா.செ. குழந்தைசாமி' ஈழத் தமிழர் பாதுகாப்பு மகாநாடு நடாத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில்இ "ஈழப்பிரச்சினை தொடர்பாக தங்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டம் பற்றிய செய்திகளை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டேன். இலங்கைத் தமிழருக்கு நியாயம் செய்ய உதவுவதை ஒத்த தமிழினப்பணி வேறெதுவுமில்லை. அயல் நாட்டுடன் நல்லுறவு என்ற பெயரில் தமிழர்கட்கு எதிரான இலங்கை இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இந்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் இம் முயற்சிக்கு தமிழினம் தலை வணங்கி நன்றி சொல்லும். இந்தத் தமிழர் நலம் விளையும் எண்ணற்ற தமிழ் உள்ளங்களோடு நானும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ சென்னையில் கடந்த வியாழனன்று ஹஈழத் தமிழர் உரிமை - சமாதான விழித்தீர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கமொன்றும் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமைவகித்த தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவியும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி கருத்துத் தெரிவிக்கையில்;
" சமாதான காலத்திலும் கூட ஈழத்தமிழர்களுக்கான மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி அவர்கள் மீது வன்முறைகளும் திணிக்கப்பட்டுள்ளன. சமாதானத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் தம்பி பிரபாகரன் போர்நிறுத்தத்தை அறிவித்தார். அப்போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.
வரலாற்று சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தை தகர்த்த கையோடுதான் இராணுவ சமநிலை நின்றுஇ போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன். 4 ஆண்டுகளாக சமாதான பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் இலங்கை அரசு எதையும் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. மாறாகஇ தமிழர்கள்மீது வன்முறையையே அது கட்டவிழ்த்து விட்டுள்ளது" என அவர் முழங்கியுள்ளார்.
அதேபோல்இ அங்கு உரையாற்றிய கவிஞர் இன்குலாப்இ "இலங்கையில் புத்த மதம் என்பது சிங்கள மதம். அது இனங்களை ஒன்றிணைக்கப் பயன்படவில்லை. மத அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது. அந்த பாகிஸ்தானிலிருந்துதான் வங்கதேசம் பிரிந்தது. மதத்துக்கு இனங்களை ஒன்றிணைக்கக் கூடிய சக்தியில்லை .
ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இந்தப் போருக்கு முதலில் தமிழர்கள் முகம் கொடுத்தார்கள். இனி சிங்கள மக்கள் முகம் கொடுப்பார்கள்." என்றார்.
இக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையைப் பார்க்கும் போது தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி கல்வியியலாளர்கள்இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்இ மனிதவுரிமை ஆர்வலர்கள்இ தமிழினப் பற்றாளர்கள்இ கலைஞர்கள் என அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அல்லது அரவணைப்பு கருத்துக்கள் நீண்டகாலத்தின் பின் வரத் தொடங்கியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் நாட்டின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து கடந்த சில வாரங்களாக இத்தகைய உணர்வுகள் வெளிப்படுவதற்கான காரணத்தை அண்மையில் சென்னை சென்று திரும்பிய தகைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி விளக்குகையில்இ
" ஈழத்திலே தமிழ் மக்களை சிங்கள அரசு அடக்குகிறது. தமிழர்களுக்கு பாதகமாக அது நடக்கிறது. சிங்கள அரசு இந்தியாவின் ஆதரவுடனேயே இவ்வாறு நடந்துகொள்கிறதென்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதாவதுஇ சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த எண்ணம் எழுந்துள்ளதைக் காண முடிகிறது.
இதற்கு பல காரணங்களிருப்பினும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் இந்திய விஜயம்இ அவர்கள் அங்கு வெளியிட்ட ஹ புலி விரோத' கருத்தக்களுமே தமிழ்நாட்டு மக்களின் கொதிப்புக்கு தூபமிட்டுள்ளது என்பது எனது கருத்து. இதையோர் பெரும் எழுச்சியெனக் கூற முடியாவிட்டாலும் தற்போது அங்கு ஏற்பட்டிருப்பது பிரக்ஞை (தமிழுணர்வு) என்று கூறலாம் இதில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோபாலசாமியின் தொழிற்பாடு முக்கிய பங்கு வகித்துள்ளது" என்றார்.
வை.கோ.இ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் தமிழீழத்தின் பிந்திய நிலைவரத்தை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அதிலுள்ள யதார்த்தம் மிக்கதும் உணர்வுள்ளதுமான கருத்துக்கள் அங்குள்ள ஏனைய தமிழின பற்றாளர்களை முழு மூச்சுடன் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உசுப்பி விட்டுள்ளதாக நோக்கர்களால் தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ அங்கு தங்கியிருந்த போதும் சரிஇ அவர் தனது பயணத்தை ஆரம்பிக்க முன்னும்இ பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னும் சரி தமிழகம் அவரை விட்டு வைக்கவில்லை. பேரினவாதத்துக்கு எதிரான தனது ஆத்திரத்தை அது உறுதியாக வெளிப்படுத்தியது.
குறிப்பாகஇ மகிந்த இந்திய மண்ணில் கால் வைக்கக் கூடாதென தமது உச்சக்கட்ட கொதிப்பை வெளிப்படுத்தியதுடன் இலங்கைக்கு உதவினால் தமிழகம் இன்னோர் காஷ்மீராக மாறுமெனவும் எச்சரித்தது.
எமது பிரச்சினைகள் விடயத்தில் மிக நீண்டகாலமாகவே ஹ உறங்கு நிலை' யிலிருந்த தமிழகம்இ தற்போது விழித்துக்கொண்டுள்ளதன் தார்ப்பரியம் என்னவென விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரனை கேட்ட போது:
"தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான தொப்புள்கொடி உறவு என்றுமே இருந்துதான் வருகிறது. இந்த உறவை அரசியல் சக்திகளே அடக்கியும் முடக்கியும் வந்துள்ளன. இதனால் அங்கு நீறு பூத்த நெருப்பாகயிருந்து கொண்டிருந்த உணர்வு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.
அதுவும் நீண்டகால வரலாற்று அவதானிப்பின் பின்னரேயே இவ்வாறன கருத்துக்கள் திரளுகின்றதை நீங்கள் பார்க்கலாம்.நாம் 4 ஆண்டு காலமாக கடைப்பிடித்த பொறுமைஇ பாரிய விட்டுக் கொடுப்புகள். மாறாகஇ இலங்கை அரசு எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன் முறைஇ தற்போது மகிந்த எம் மீது பாரிய போரைத் திணிக்க முற்படுவது போன்ற பல்வேறு விடயங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் தற்போது தமது தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.
அதே சமயம்இ டில்லியில் மாத்திரமன்றி இந்தியா முழுவதும் எமக்கு எதிரான பல குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் யாரென்பது எமக்கு நன்றாக தெரியும்" என்றார்.
தமிழகத்தில் திரளுகின்ற ஈழத் தமிழர்கள் குறித்த கருத்துக்கள் இரு தளங்களிலுள்ளன. ஆனால் அவை ஒரே மேடையில் வெளிப்படுகின்றன.
கம்யூனிச கட்சிகளைச் சேர்ந்தவர்கள்இ ஈழத் தமிழர்களை சிங்கள அரசு துன்புறுத்துகிறது. எனவேஇ இந்தியா இலங்கைக்கு உதவக் கூடாதெனவும் சமாதான முயற்சிகளில் இந்தியாவை இழுத்து தமக்கேற்ற விதத்தில் தீர்வுகளை திணிக்க இலங்கை முற்படுவதாகவும் அந்தப் பொறிக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாதுஇ ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக செயற்படக் கூடாதென குரல் எழுப்புகின்றனர்.
இக் கருத்துக்கு மேலதிகமாக திராவிடர் கழகங்களைச் சேர்ந்தவர்களும் தமிழுணர்வை உரத்த குரலில் கூறுபவர்களும் தமிழீழத்தை அங்கீகரிஇ விடுதலைப் புலிகளை அங்கீகரி எனத் தெரிவிக்கின்றனர்.
சிலர் சற்று அடக்கியும் மற்றவர்கள் உரத்தும் ஒரே மேடையிலேயே முழங்கி வருகின்றனர். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறனுக்கு புலிகள் குறித்து பேசக் கூடாதென நீதிமன்ற தடையுள்ளது. மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சிகளுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாதென்றிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணா நிதி செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் தமது கொள்கை எனவும். ஆனால்இ ஈழத் தமிழர் பாதிக்கப்படக் கூடாதென்ற தமது கொள்கையில் எதுவித மாற்றமுமில்லையென மாற்றமில்லாமல் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா' மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டதன் மூலம் தனக்கு ஏற்படவிருந்த அரசியல் சிக்கலிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. சில மாதங்களில் மாநில தேர்தல் அங்கு நடைபெறவுள்ளது.
தமிழீழ அரவணைப்பில் தனக்கெதிரான கட்சிகள் (தி.மு.க.தலைமையிலான கூட்டணி) முழு மூச்சாக ஈடுபட்டுள்ள வேளையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் தேர்தலில் அது தனக்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். மக்கள் மனங்களில் ஹ தமிழின விரோதி' என்ற தோற்றம் ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்திலேயே ஜெயலலிதா இச் சந்திப்பை தவிர்த்தாரெனவும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான முரண்பாடும் ( சோனியா - ஜெயலலிதா முரண்பாடு) இதற்கான நெருடலை ஏற்படுத்தியிருக்கலாமெனவும் தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்கஇ தமிழகத்தின் அடிப்படைப்பலம் கிடைத்தால் 2007 இல் தமிழீழம் மலர்வது சாத்தியமென அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்திருக்கிறார்.
ஹ புலி ஆதரவு அரசியல் ' தமிழ் நாட்டில் இருந்தபோது பல குழப்பநிலை அங்கு ஏற்பட்டது என்பது உண்மை . ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் நிலை வேறு. ஈழ விடுதலைப் போராட்டத்தை நீண்டகாலமாக அவதானித்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தர்க்கரீதியான வெளிப்பாடாகவே அங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இது எமக்கு பெரும் வெற்றியே. விடுதலைப் புலிகளின் கடந்த 4 ஆண்டுகால காய்நகர்த்தல் களிலிருந்து கனிந்த வெற்றியே இது.
" சிறிலங்கா நீ ஆனாஇ எல்.ரீ.ரீ.ஈ. நானான எனக் காதலி பாட "ஐயையோ வாயைக்கொஞ்சம் மூடு" என காதலன் ஹநடுங்கும்' சினிமா பாடல் தமிழகத்திலிருந்து வந்து சொற்பநாட்களுக்குள்ளேயே தமிழகம் தன் வாயைத் திறந்துவிட்டது.
திறந்துள்ள இவ் வாயை மூட பேரினவாதிகள் கடும் பிரயத்தனமெடுப்பார்கள் என்பது திண்ணம். அதற்கு வழமைபோல் இந்தியாவுக்கு ஹபுலிப் பேதி'யை கொடுப்பார்களென்பதும் தமிழகத்திலுள்ள ஹபுலி விரோதி' களுக்கு தூபமிடுவார்களென்பதும் வரலாறு சொல்லும் பாடம்.
எனவேஇ இந்தியாவுக்கு ஹ புலிப் பேதி ' கொடுத்து தமிழகத்தின் வாயை மூட பேரினவாதிகள் முற்படுகின்றபோது இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நோய்க்கான நிவாரணியை வழங்குவதற்கு தமிழர் தாயகத்திலுள்ள பொது அமைப்புகள் தயாராக வேண்டும்.
சிங்களம் டில்லிக்கு புலியைக் காட்டினால்இ நாம் ஹவலி'யைக் காட்ட வேண்டும்.
நன்றி தினக்குரல்
|
|
|
| இராணுவப் புலனாய்வாளரின் துப்பாகிச் சூட்டிற்கு ஒருவர் பலி. |
|
Posted by: Vaanampaadi - 01-11-2006, 05:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புதன் 11-01-2006 15:57 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
<b>இராணுவப் புலனாய்வாளரின் துப்பாகிச் சூட்டிற்கு ஒருவர் பலி.</b>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/puthurdethi1101061.jpg' border='0' alt='user posted image'>
புத்தூர் பகுதியில் இரவு நேரம் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சூட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்டவர் புத்தூர் சரஸ்வதி சனசமூகநிலையப் பகுதியைச் சேர்ந்த தம்பு நடேசு வயது 50 என்பவரே சிறுப்பிட்டி மடத்தடியில் உள்ள பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.
நேற்று இரவு 9.00 மணியளவில் குறிப்பிட்டவரின் வீட்டிற்குச் சென்ற ஆயுததாரிகளான இராணுவப் புலனாய்வாளர்கள் இவரை விசாரனை செய்து விட்டு விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள.; இரவு குறிப்பிட்டவர் வீட்டிற்குத் திரும்பாததைத் தொடர்ந்து விசாரனை செய்த போது காலையில் இவரின் சடலம் கிடப்பதாகக் தெரியவந்ததைத் தொடர்ந்து அச்சுவேலிப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் சடலம் கிடந்த இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஐpனி இளங்கோவனுடன் சென்றனர் சடலத்ரதப் பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மரணவிசாரனையை மேற் கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து சடலம் வையித்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
|
|
|
| தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை |
|
Posted by: Vaanampaadi - 01-11-2006, 05:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
புதன் 11-01-2006 16:11 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
<b>தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை.</b>
இன்று நன்பகல் 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு சமுர்த்திஅபிவிருத்த உத்தியோகத்தர் ஒருவர் பலியானார். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியாக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
மட்டுவில் தெற்கு தோப்பு என்னும் இடத்தைச் சேர்ந்த செல்வி. கணபதிப்பிள்ளை பவளராணி வயது 32 என்பவரே பலியானவராவார். இவரின் வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாதவர்கள் இவரை அழைத்துக் சென்று கதைத்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இவரைச் சுட்டுவிட்டு ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவருடைய துப்பாக்கிப் பிரயோகத்தியகான காரணம் தெரியவில்லை. இவர் கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி அமைப்பினருடன் இயங்கியதன் மூலம் குறிப்பிட்ட வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட இடத்திற்கு இராணுவத்தினரும் சாவகச்சேரிப் பொலிசாரும் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிக்கும் பொலிசாரினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வையிட்ட நீதிபதி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வையித்திய சாலையில் ஒப்படைக்கும் படி பணித்துள்ளார்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
|
|
|
| விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் - ஹிந்துஸ்தான் டைம்ஸ் |
|
Posted by: Vaanampaadi - 01-11-2006, 05:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
புதன் 11-01-2006 21:21 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்]
<b>விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அச்சமே பேச்சுக்களை தொடங்க முட்டுக்கட்டையாக இருக்கிறது - ஹிந்துஸ்தான் டைம்ஸ்.</b>
தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அம்சமே தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழ் தரப்புக்களை ஆதாரம் காட்டி இந்த கருத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆசிய நாடு ஒன்றிலோ அல்லது தென்னாபிரிக்காவிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது அங்கு தமக்கு சம உரிமைத்தன்மை வழங்கப்படாது என தமிழீழ விடுதலைப் புலிகள் எண்ணுகின்றனர்.
சர்வதேசம் ஏற்றுக்கொண்ட இறைமைக் கொண்;ட நாடு ஒன்றுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
எனவே தான் அரசாங்கம் முன்வைத்த இந்த இரண்டு இடங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஹிந்துதாஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை தமிழீழ விடுதலைப்புலிகள் விரும்புவதற்கு முக்கிய காரணம் நோர்வே கடந்த பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சமதன்மையை வழங்கியிருந்தது.
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்லோ மாநாட்டின் போது நோர்வே நாடு முன்னாள் பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கும் சம பாதுகாப்பை வழங்கியிருந்தது.
பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் கொடியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் மேசையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நோர்வே உட்பட மேற்கத்தைய நாடுகளை தவிர்;ந்த பிற நாடுகளில் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகும் நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்காமைக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் இரண்டு காரணங்களை குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கிடைக்கும் மேற்கத்தைய வரவேற்பபை குறைப்பதும்
சமாதான முனைப்புகளுக்கு மேற்கத்தைய நாடுகளில் இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பதுமே இந்த இரண்டு காரணங்களாகும்.
இதேவேளை அரசாங்க தரப்பு ஏன் நோர்வேயை பேச்சுவார்த்தை தளமாக ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகிறது என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நாட்டின் நம்பிக்கையில்லை என்றபோதும் வேறு வழியில்லை என்ற நிலையில் நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக ஏற்றுக்கொண்டமை,
அத்துடன் தென்னிந்திய பின்கதவின் ஊடாக நாட்டின் பிரிவினைக்கு இந்திய அரசாங்கம் உதவாது என்ற காரணங்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்காக சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
|
|
|
| வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் |
|
Posted by: Vaanampaadi - 01-11-2006, 04:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை</b>
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நாட்டின் அவசரகாலச் சட்டம் நாடைமுறைப்படுத்தப்பட்டுள்து.
இது அரசாங்க அதிகாரிகளுக்கு பரந்தளவு அதிகாரத்தை வழங்குகிறது. எனவே அரசினதும் பாதுகாப்புப் படையினரினதும் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறீர்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கடல் கோள் காரணமாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததுடன் ;நாட்டின் நான்கு திசைகளினதும் கரையோரங்கள் பெரும் பாதிப்புள்ளாகின. இதன் போது பாதிக்கப்பட்ட விடுதிகள் மற்றும் வசதிகள் மீள புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதிக்கான சுற்றுலாத்துறை வசதிகளை உறுதிப்படுத்திய பின்னNh உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்தோர் எதிர் நோக்கும் பொதுவான பிரச்சினை கடவுச் சீட்டுகளை தொலைப்பதும் உடல் நிலை பாதிக்கப்படுவதுமாகும். இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முன்னர் கட்டாயமாக மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைப்பு : : SanJay
Wed, 11 Jan 2006, 12:44:24 GMT
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
|
|
|
|