| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 246 online users. » 0 Member(s) | 243 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,292
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும் |
|
Posted by: Vaanampaadi - 01-14-2006, 10:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சனி 14-01-2006 14:41 மணி தமிழீழம் [நிருபர் மகான்]
மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்: பொங்கி எழும் மக்கள் படை
அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்தாவிடின் சிறிலங்காப் படையினர் காவலரண் மற்றும் சிறிய முகாம்களை தாக்கப் போவதாக பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொங்கிஎழும் மக்கள் படை சிறிலங்கா இராணுவத்திற்கு பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ் மக்கள் எமது போராட்ட வரலாற்றில் எமக்கெதிராக சூளுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீறாப்புப் பேசி போர் முரசு கொட்டிய இராணுவத்தளபதிகளையும் கண்டவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் பிரேமதாச, டில்கிறிட் பண்டார விஜயதுங்கா, வெண்புறா சந்திரிக்கா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி நின்றவர்களே! இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களின் சூழுரைகளுக்கும், ஏவல்களுக்கும் என்ன நடந்தது. என்பது எல்லோருக்கும் வெளிச்சம்.
அத்துலத் முதலி ரஞ்சன் விஜயரெத்தினா, அனுரத்த ரத்வத்தை போன்ற பாதுகாபபு அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக விட்ட சவால்கள் யாவும் வெற்று வேட்டுக்களாகப் போன்ற வரலாறு,
பிரிக்கேடியர், விஜயதுங்க முதல் கமில்டல் வணசிங்க டென்சில் கொப்பேயக்கடுவ, ரொகான், தளுவத்த, லயன்ல் பலகல்ல என வீராப்பு பேசி போர்முரசு கொட்டி தமிழீழ படுகொலை புரிந்து தமிழ் மக்களை அடக்க நினைத்தவர் யாவரும் அடக்கிப் போனதும் வரலாறு இவ்வாறு தமிழருக்கு எதிராக சூளுரைத்த தலைவர்களும் ஒன்று திரண்ட பலத்தின் முன்னால் மண்டியிட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்ததுதான் சிங்களத்தின் வரலாறு. இந்த வரிசையில் பழைய பல்லவிக்கு புதிய மெட்டமைய்த்து சிங்கள தேசத்திற்கு மங்களம் பாடப் புறப்பட்டு ………..
மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்களத்தில் இன்னுமொரு சப்புமல் குமரவாக| தன்னை நிலை நிறுத்த முயலும் சரத் பொன்சேகா தமிழ் தரப்பினரை தப்புக் கணக்குப் போடுவதுதான் வேடிக்கை.
தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரின் களம்பல கண்டதாக தன்மைப் பற்றி பிதற்றிக் கொள்ளும் இந்த மேஜர் ஜெனரல் அக்காலங்களில் தானும் தனது படைகளும் வாங்கிக் கட்டிக் கொண்டதை மறந்து பிதற்றுவதுதான் பரிதாபம்.
இனிவரும் காலங்களில் எமது தாக்குதல்களை விரிவுபடுத்தவுள்ளோம். எமது தாக்குதல்களுக்கு பயந்து பின்னர் வந்து அப்பாவி மக்களை தாக்குவதையும் சுட்டுக் கொலை செய்வதையும், கைது செய்வதையும் சிங்கள இராணுவம் நிறுத்தாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் காவலரண்களையும், சிறிய படைமுகாம்களையும் தாக்குவோம் என எச்சரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
Pathivu
|
|
|
| ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்த |
|
Posted by: Vaanampaadi - 01-14-2006, 10:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும்</b>
ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்த முடியுமென அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் பானு விடுத்த அச்சுறுத்தலையிட்டு ஷ்ரீலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப எந்தவொரு தாக்குதலுக்கும் விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை உயரதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் ஷ்ரீலங்கா விமானப்படையினர் ஷ்ரீலங்காவின் வெவ்வேறு பிரதேசங்களிலும் நான்கு இடங்களில் ராடர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிலையங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் ராடர் கருவிகள் தாக்குதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அக்கருவிகள் மூலம் விமானம் ஒன்று தரையிலிருந்து ஆகாயத்தில் உயர எழுந்து செல்லும் முன்னரே கண்காணித்துத் தாக்குதலை நடத்த முடியுமென்றும் மேலும் ஷ்ரீலங்கா விமானப்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி புலிகள் இயக்க தலைவர் பானுவின் அச்சுறுத்தல்பற்றி விமானப் படையைச் சேர்ந்த சிரேஷ்ட விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், குறித்த புலிகள் இயக்கத் தலைவர் பானு "ஸ்வின்" வகையைச் சேர்ந்த இரண்டு சிறிய விமானங்களை வைத்துக் கொண்டு விமானப் படையினரை அச்சுறுத்துவதாகவும், ஷ்ரீலங்கா விமானப்படையிடம் இருக்கும் ஒரு மிக் விமானத்தின் மூலம் ஒரே ஒரு தாக்குதலில் இரணைமடுவிலிருக்கும் புலிகளின் விமானத் தளத்தை முற்றுமுழுதாக அழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
-திவயின : 12.01.2006-
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...14/Shinhala.htm
|
|
|
| யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி |
|
Posted by: Vaanampaadi - 01-14-2006, 10:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி: மூவர் படுகாயம்
Written by Paandiyan Saturday, 14 January 2006
யாழ். தீவகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு கடற் படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் கடற்படையினர் கடற்படையினர் ஈடுபட்டபோது வீதியாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் ஒரு கடற்படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த மூன்று கடற்படையினரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து, அப்பகுதியில் மேலதிக கடற்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sankathi
|
|
|
| மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! |
|
Posted by: மேகநாதன் - 01-14-2006, 09:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! </b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு வாழைச்சேனை - ஏறாவூர் மிச்சநகர் போன்ற கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பராக்கிரமபாகு சமுத்திரத்தின் கதவுகள் பத்தும் திறந்து விடப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு - மன்னம்பிட்டிப் பாலத்திற்குச் சமீபமாக நீர் பாய்வதால் மட்டக்களப்பு - திருமலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
|
|
|
| மைக்ரோவேவ் சக்கரை பொங்கல |
|
Posted by: தூயா - 01-14-2006, 09:27 AM - Forum: சமையல்
- Replies (8)
|
 |
<b>மைக்ரோவேவ் சக்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
அரிசி 2 கப்
உடைத்த பாதி பயறு 1 கப்
தேங்காய் பால் 1 கப்
சக்கரை - உங்களுக்கு எவளவு வேணுமோ போடலாம்
நீர் - 4 கப்
நெய் - 3 டேபில் கரண்டி (நிறைய போட்ட பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிட வாய்ப்பு உண்டு)
ஏலக்காய் - 4 (தூளாக்கி போடுங்கோ, இல்லாடி கடிபடும், நல்லா இருக்கது)
1. பயறை சிறிது வறுத்து கொள்ளவும். சாப்பிட்டு பார்த்தால் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும்.
2. அரிசி,நீர்,பால் இவற்றை கலந்து மைக்கோவேவில் வைத்து மீடியத்தில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
3. சிறிதளவு நீரில் சக்கரையை நன்றாக கரைக்கவும்.
4. சக்கரையையும் மிகுதி உள்ள பொருட்களையும் ஒன்றாக போட்டு கலக்கி 2 நிமிடத்துக்கு வைக்கவும்.
5. கையை சுடாமல் கவனமாக எடுத்து, பாத்திரத்தில் போடவும். வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.
இது தனியாக ஏதோ காரணத்தால் தங்கி இருந்து படிக்கு/வேலை பார்க்கும் சகோதரங்களுக்காக....
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்</b>
|
|
|
| சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி |
|
Posted by: மேகநாதன் - 01-14-2006, 09:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! </b>
அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறுபேரை கொன்றுள்ளதாக வெளியான செய்தி முற்றுமுழுதான பொய்யான வதந்தியாகும்.
இச்செய்தியை உருவாக்குவதற்காக தேசவிரோதக் குழுவினர் அம்பாறை மாந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து சாகாமம் என்ற இடத்தில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அடித்துத் தாக்கியதோடு அவர்களைத் துன்புறுத்தினார்கள்.
பின்பு அவர்கள் அக்கரைப்பற்றுக் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளார்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதோடு தமிழ் மக்களையும் துன்புறுத்தி வருகின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது<span style='font-size:25pt;line-height:100%'></span>
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
|
|
|
| செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் |
|
Posted by: Vaanampaadi - 01-14-2006, 08:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
<b>செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் </b>
நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார்.
ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன.
இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவதற்கான ஹெலிகொப்டர் வசதிகளை வழங்குவது என்று அரச உயர்மட்டம் கொள்கை அளவில் தீர்மானித்திருப்பதாக நம்பகமாக அறியவந் திருக்கிறது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சியில் அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வேயின் விசேட தூது வரும், அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இவ் வருட முதல் வாரம் தொடக்கம் அடுத்த செவ் வாய்க்கிழமை வரை தமது குடும்பத்துடன் எகிப்தில் விடுமுறையைக் கழித்து வருகின் றார்.
விடுமுறையை முடித்துக் கொண்டு நோர் வேத் தலைநகர் ஒஸ்லோவுக்குத் திரும்பும் அவர்,எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
24 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்திப்பார்.
அடுத்த நாள் அவர் கிளிநொச்சிக்குச் செல் கிறார். அங்கு அவர் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார்.
அங்கு புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நேரடியாக சந்திப்பதற்கு சொல்ஹெய்ம் விரும்புகிறார் எனத் தெரிகின்றது. ஆனால், சொல்ஹெய்ம் வன்னி வரும் சமயத்தில் அங்கு புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பால சிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
அன்ரன் பாலசிங்கத்தின் பிரசன்னம் இல்லாமல் எரிக் சொல்ஹெய்மையோ அல் லது வேறு சர்வதேசத் தலைவர்களையோ தலைவர்பிரபாகரன் சந்திக்கமாட்டார் என்றும் தெரிகின்றது.
இச்சந்தர்ப்பத்திற்காக லண்டனிலிருந்து வன்னிக்குச் செல்வதற்கு மதியுரைஞர் பாலசிங்கம் தயார் என்றாலும் அதற்கான சூழ் நிலைகள், வசதிகள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர் லண்டனிலிருந்து புறப்படு வார் என்றும் கூறப்படுகின்றது.
முதலாவதாக அவரது பயணத்துக்கான பாதுகாப்பு உரிய சம்பந்தப்பட்ட தரப்புக ளால் அதற்கேயுரித்தான வழிமுறையில் உறு திப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பு சூழ்நிலை யும் நிலவ வேண்டும். மோசமான மோதல் கள், அழிவுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கொழும்பு ஊடாக அவர் வன்னிக்குச் செல்ல முயலமாட்டார் எனத் தெரிகிறது.
அடுத்ததாக, கட்டுநாயக்கா விமான நிலை யத்திலிருந்து வன்னி வரை தாமதமின்றிப் பயணம் செய்வதற்கு அவருக்கு ஹெலிகொப்டர் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்தகைய நிலைமை உறுதியானால்தான் அவரது வன்னி வருகை இடம்பெறும் என் கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி செல்ல விரும்பினால்,கட்டுநõயக்கா விமான நிலை யத்திலிருந்து விசேட ஹெலிகொப்டர் வசதி அவருக்கு வழங்கலாம் என அரசுத் தலைமை கொள்கையளவில் நேற்று முன் தினம் மாலை முடிவு செய்திருப்பதாக நம்ப கமாக அறியவந்தது.
அரசுத் தலைமையின் இந்தத் தீர்மானத்தை, பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி புறந்தள்ளாமல் செயற்படுத்தக் கூடிய விருப்ப நிலையில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப் புகள் தயாராக இருக்கின்றனவா என்பது இன்னும் தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் ஏதும் இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தரையி றங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலத்தில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும்,இராஜதந்திரிகளும் புலி களின் கிளிநொச்சித் தலைமையகத்துக்குச் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டிய தேவை எழுந்த போதெல்லாம் ஒன்றில் வவுனியா வரை அல்லது பலாலி வரை இலங்கை விமானப் படை வான்கலங்களில் சென்று அங்கிருந்து தரை மார்க்கமாகவே கிளிநொச்சிக்குச் சென்றனர்.
இந்தப் பின்னணியில் மதியுரைஞர் பால சிங்கத்தை ஏற்றிக் கொண்டு புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் ஹெலிகொப்டரை இறக்க விமானப்படை தயாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எது எப்படியென்றாலும் மதியுரைஞர் பாலசிங்கம் இப்போதைய சூழ்நிலையில் வன்னி வருவதனால் அது இலங்கையில் எரிக் சொல்ஹெய்ம் தங்கி நிற்கும் காலத்தை ஒட்டியதாக இருக்கும் என ஊகிக்க முடிகின்றது.
தனது உத்தேச வன்னிப்பயணம் குறித்து மதியுரைஞர் பாலசிங்கம் தீர்க்கமான முடிவு எதையும் இன்னும் எடுக்கவில்லை என்றும்
நிலைமையைப் பொறுத்து தலைவர் பிரபாகரனுடன் கலந்தாலோசித்து, அவரது வழி காட்டலுக்கு அமைய பாலசிங்கம் அடுத்த வாரமளவில் ஒரு முடிவை எடுக்கக் கூடும் என்றும் தெரியவருகின்றது.
இதனிடையே, 23ஆம் திகதி கொழும்பு வந்து, 25 ஆம் திகதி வன்னி சென்று, புலிகளின் தலைவர்களைச் சந்திக்கும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பி லிருந்து புறப்படமுன்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பார் எனத் தெரிகிறது.
அதற்கேற்றவகையில் அவரது நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிந் தது.
எரிக் சொல்ஹெய்ம் இம்முறை கொழும்பு வந்து திரும்புவதற்கு முன்னர் அரசு புலிகள் சமாதானப் பேச்சுக் குறித்தும், அது நடத்தப்படக் கூடிய இடம் குறித்தும் திட்டவட்ட மான ஒரு முடிவு எட்டப்பட்டுவிடும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் உறுதிதெரிவித்தன.
uthayan.com
இணைப்பு : : kugan
Sat, 14 Jan 2006, 06:10:32 GMT
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
|
|
|
| ஜோக்குகள், 2006 |
|
Posted by: sooriyamuhi - 01-14-2006, 05:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
""எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக் கைகளாலும் தடம்புரளாத நாம், சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற் கான திடசங்கற்பத்தை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்வோம்.''
இவ்வாறு தமது தைப்பொங்கல் செய்தி யில் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அவர் தைப்பொங்கலை ஒட்டி விடுத்த செய்தி வருமாறு :
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் உதயமாகும் முதலாவது தைப்பொங்கலின் போது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முது மொழிக்கமைய இந்தத் தை மாதத்தை ஒரு அதிஷ்ட மாதமாக நீங்கள் கருதுகின்றீர்கள்.
உண்மையிலேயே இந்தத் தை மாதத்துடன் ஆரம்பிக்கின்ற வருடம் உங்களுக்கு நன்மை தரும் அதிஷ்ட வருடமாக அமையக்கூடிய தாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக்கை களாலும் தடம்புரளாத நாம் சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற்கான திட சங்கற்பத்தை இத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உரிய நேரத்தில் மழை பொழிந்து வயல் கள் செழிப்பதற்கு உதவியதற்காக எங்கள் மூதாதையர்கள் சூரிய தேவனுக்கும், கால்நடை களுக்கும் தைப்பொங்கல் தினத்தன்று நன்றி செலுத்துவது போல, சமாதானத்துக்காகப் பொறுமை காத்துச் செயற்படும் சகலருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால், சமாதானம் நிலைபெறும் பட்சத்திலேயே விவசாயிகளைப் போல அனைவரும் செழிப் பையும், சௌபாக்கியத்தையும் அடைய முடி யும். யுத்தத்தினால் அழிந்துபோன அனைத்தையும் மீண்டும் நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாங்கள் கடமைப்பட் டுள்ளோம்.
வாக்குறுதிகளை உடன்படிக்கைகளுள் உள்ளடக்குவதோடு நிற்காது அவற்றை நடை முறைப்படுத்துவதையே எங்கள் கொள்கை யாக நாங்கள் மேற்கொள்ளவேண்டும் என் பதை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். எங்கள் அனைவருக்குமிடையே அந்நி யோன்யமான புரிந்துணர்வு நிலவும் பட்சத்தி லேயே உடன்படிக்கைகளைப் பாதுகாக்க முடி யும். இந்தத் தைப்பொங்கல் தினத்தில் ஆரம் பிக்கின்ற வருடம் உங்கள் மொழியைப் பொறுத்தவரையில் நீங்கள் அனுபவிக்கின்ற இடர்கள் அனைத்தும் நீங்கும் வருடமாக அமையும். சிங்கள மொழி மூலம் நிர்வாகம் செய்யப்படுகின்ற பிரதேசங்களில் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் முகங்கொடுக்கின்ற இடர்களை நீக்கும் வகையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு செய்த சிபார்சுகளை விரைவாக நடைமுறைப்படுத்தி இனங்களுக்கிடையே புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவோம். எங்களின் இந்த எதிர்பார்ப்பை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட மாட்டோம். அடுத்த தைப்பெங்கல் தினத்தின்போது இப்போதையதிலும் பார்க்கக் கூடுதலான சௌபாக்கிய பொங்கலை நீங்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே இத்தைப்பொங்கல் தினத்தில் இவற்றை நான் கூறுகின்றேன்.
தைப்பொங்கல் தினத்தில் பொங்கல் பானையில் இடப்படும் பால் கிழக்குப் பக்கமாகப் பொங்கிச் சரிவது அதிஷ்டமானது என்ற நம்பிக்கை உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். அதன்படி, உங்கள் அனைவரினதும் வீடுகளில் பொங்கல் பானையில் இடப்படும் பால் கிழக்குப் பக்கமாகப் பொங்கிச் சரிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வளம் நிறைந்ததாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று உள்ளது.
|
|
|
| பச்சைப் பன்றிகள் |
|
Posted by: kuruvikal - 01-14-2006, 03:39 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41208000/jpg/_41208332_glow203.jpg' border='0' alt='user posted image'>
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் வழி கணணிகளின் மின்னியல் இலத்திரனியல் உபகரணங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உயிரியல் தொழில்நுட்பத்தின் வழியும் உலகம் பலப்பல புதுமைகளை சாதித்து வருகிறது..!
கடலில் வாழும் ஜெலி (விழுது மீன்கள்) மீன்களில் இருந்து பெறப்பட்ட டி என் ஏ (DNA) அலகுகளை பன்றி முளையத்துள் (embryo) செலுத்தி பச்சை நிறப் புளொரொளிர்வுப் (fluorescent) பன்றிகளை தாய்வான் நாட்டு உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். பகலில் பச்சையாகவும் இரவில் நீலமாகவும் இந்தப் பன்றிகள் மின்சூல் அளவு ஒளியை வெளிவிட்டபடி உலா வருகின்றனவாம்.!
பன்றிகளின் உடற்தொழிற்பாட்டுக்கும் மனிதர்களின் உடற்தொழிற்பாட்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதால் இந்தப் புளொரொளிர்வுப் பன்றிகளை பயன்படுத்தி மனிதனில் உள்ள நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பன்றிகளை சாதாரண பன்றிகளுடன் இனக்கலப்புச் செய்வதன் மூலம் இன்னும் பல புளொரொர்வுப் பன்றிகளை சுலபமாகப் பெறவும் முடியும்..!
தகவல் ஆதாரம் இங்கு ... http://kuruvikal.blogspot.com/ - படம் - பிபிசி.கொம்
|
|
|
|