| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 256 online users. » 0 Member(s) | 253 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,290
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| "தப்பாக என்னை நினைத்துவிட்டாள்"- ஒரு கற்பனை |
|
Posted by: puthiravan - 01-15-2006, 06:27 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா...
----------------------------------------------
Quote:இனிப்பும் கசப்புமாய் என் காதல்
காதலுக்கு பல எதிரிகள்
இங்குண்டு மற்றவர்களுக்கு?
ஏனோ எனக்கு என்
காதலே எதிரியாய் போனதேன்?
அன்பாய் தான் இருக்கிறான்
அழகாய் தான் எனை ரசிக்கிறான்
நிறைவாய் தான் தருகிறான்
நிறைமதியாய் எனை தாங்குறான்
இருந்தும் எனக்கேனோ
நிம்மதியாய் ஒருநாளும்
உறங்கமுடியவில்லை..
என்னவனின் அன்பு
முகம் இதுவெனில்
அவன் அடுத்த முகம்...
நண்பர்கள் உனக்கெதுக்கு
வேண்டாம் என விட்டுவிட்டேன்
நானிருக்க சுற்றம் ஏன்
அதை கூட விட்டு விட்டேன்
படிப்பெதற்கு, வேலை எதற்கு
நான் உன்னை பார்த்துக்கொள்வேன்
அவன் மேல் உள்ள அன்பில்
அத்தனையும் துறந்துவிட்டேன்
கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்
நானா? அவர்களா?
என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?
எப்படி தான் சுவாசிக்க முடியும்?
கல்லானானுல் கணவன்
புல்லானாலும் புருஸன்
என வாழவா??
அல்ல
என்க்கென ஒரு மனம்
இருக்கென நான் முதலில்
உணர்ந்து
வேறு பாதை செல்லவா?
இனிக்கும் காதல்
எனக்கு மட்டும்
இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!
¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø...
-------------------------------------------
¸ñ§½..
§À¨¾ô ¦Àñ§½...
§¸û!
¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý
±¾ü¸¡¸?
¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢
þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É,
º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ
¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý.
ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö...
«ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä
¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡?
¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷
§À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡?
ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É
§¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö
¯É째 ¦¾Ã¢Ôõ ¿£
ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ,
ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ
«Ð¾¡ý §¸¡Àò¾¢ø «ýÚ
¸ò¾¢Å¢ð§¼ý,
"¯É즸¾üÌ ÀÊô¦ÀýÚ"
«¨¾ þó¾ «÷ò¾ò¾¢ø
¦¸¡ûš¡ ¿£?
¯ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ측..
´Õ ¿¡û "Tஇம் Hஒர்டொன்" þø
§Å¨Ä ¦ºöÐ
ÍÎõ ¾ñ½£÷ ¨¸Â¢ø °üÈ¢
ÐÊì¸ Å£ÎÅóÐ §º÷󾡧Â..
±ý ÁÉõ «ýÚ ÐÊò¾ ÐÊôÒ
¦¾Ã¢Â¡¾¡ ¯ÉìÌ..
º¡¸ÊòРŢð¼¡ÂÊ ±ý¨É «ýÚ
«Ð ¾¡ý ¦º¡ý§Éý,
"¯ÉìÌ þÉ¢ §Å¨Ä §Å½¡õ" ±ýÚ.
¸¨¼º¢Â¡¸ ¦ÀüÈÅ÷¸ÙìÌ
Åó¾¡ö...
¯ý ¦Àü§È¡÷¸û þÈóÐ
þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É.
¾¢ÉÓõ «Å÷¸¨Ç ¿¢¨ÉòÐ,
«Å÷¸û À¼ò¾¢ý Óý ¿¢ýÚ - ¿£
«ØÅ¨¾ À¡÷ì¸ ÓÊ¡Р¾¡ý
¦º¡ý§Éý,
"§Å½¡õ «Å÷¸¨Ç ÁÈ" ±ýÚ
¾ôÀ¡¸ ÒâóÐ ¦¸¡ñÎŢ𼡧Â!
þýÚõ ¦º¡ø¸¢§Èý §¸û!
Á£ñÎõ ¦º¡ø¸¢§Èý §¸û!
¿¡ý ¯ÉìÌ '±ó¾Å¨¸Â¢Öõ
¦À¡Õò¾ÁüÈÅý' ±ýÚ ¿£
¿¢¨Éò¾¡ø..
§À¡..
¯ÉìÌ À¢Êò¾ Å¡ú쨸¨Â
«¨ÁòÐì ¦¸¡û!
¿¡ý «¾üÌ ¾¨¼ÂøÄ..
þÐ ¯ý Å¡ú쨸, ¯ý Å¢ÕôÀõ.
¬É¡ø ´ý¨È ÁðÎõ Áɾ¢ø
¨ÅòÐ즸¡û.
¿£ þÕó¾ ±ý ÁÉÁ¡Ç¢¨¸Â¢ø
§Å¦È¡Õò¾¢ìÌ þ¼õ þø¨Ä¢ɢ.
|
|
|
| ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா? |
|
Posted by: SUNDHAL - 01-15-2006, 06:09 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
காதலனை மறக்காமல்.......
அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள்.
பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் விட்டு, விட்டு தலைமறைவாகி விட் டான். வயிற்றில் சுமை யோடு, கண்ணீரோடு, தாய் வீடு திரும்பியவளை, நல்ல மனமும், பரந்த உள்ளமும் கொண்ட என் நண்பர், நல்ல அறிவுரை கூறி, தன்னுடனே வாழ வைத்துக் கொண்டுள்ளார்.
இப்போதுதான் அவள் தன் கணவரின் நல்ல மனதை புரிந்து கொண்டு, தன் தவறை புரிந்து கொண்டு, நல்ல மனைவியாக வாழ்கி றாள்.
Thanks:Thanthi...
|
|
|
| கவலையும் கொழுப்பு தான் |
|
Posted by: SUNDHAL - 01-15-2006, 03:23 PM - Forum: மருத்துவம்
- Replies (9)
|
 |
மாரடைப்புக்கு புது காரணம்
கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.
மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.
ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது. மூச்சு பாதிக்கப்படுகிறது என்கின்றனர். மனம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வியாதிகளுக்கு "சைக்கோ சொமாட்டிக்' காரணிகள் தான் காரணம் என்று மருத்துவ ரீதியாக சொல்வதுண்டு.
மனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, யாருக்காவது செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று டென்ஷன் ஆவது... ஆகியவை தான் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணம்.
இப்படி மனம் பாதிக்கப்படுவது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மருத்துவ நிபுணர்கள், இது தொடர்பாக 20 ஆரோக்கியமான ஆண், பெண்களை "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.
அப்படி பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் சில புராஜக்ட்கள் தந்து, அதன் மூலம் அவர்கள் மனதில் அழுத்தம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அப்படி அழுத்தம் அதிகமாகும் போது, அது, ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தனர்.
இந்த பரிசோதனைகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, மருத்துவ நிபுணர்கள், "மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும் போது, ரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் ஸ்ட்ரெஸ் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான தெரபிக்கள் முக்கியம் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவில், "யுரேகா அலர்ட்' என்ற வெப்சைட்டில் இது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக "சைக்கோ பிசியாலஜி' அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Thanks inamalar...
|
|
|
| மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்? |
|
Posted by: வினித் - 01-15-2006, 12:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்?
* சிங்கள ஊடகங்கள் கிளப்பும் புரளி சந்தேகத்துடன் பார்க்கும் பொலிஸார்
எஸ்.நயனகணேசன்
இன்று இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் புலிகளாவார்கள். தென்னிலங்கையில் வாழும் மக்கள் பொலிஸாரால் தாக்குதலுக்கிலக்காகும் பொழுது பொலிஸார் குண்டர்களாவார்கள். அதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் தாக்கப்படும் பொழுது அப்பொலிஸார் தேசாபிமானிகளாவார்கள். தெற்கில் மக்கள் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் சாதாரண பொதுமக்களாவார்கள். வடக்கில் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் புலிகளாவார்கள். இதுதான் இன்றைய சிங்கள நாளேடுகளின் ஊடக ஒழுக்கநெறியாக அமைந்துள்ளது.
கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலை பீச் ரோட்டில் இடம்பெற்ற படுகொலையின்போது கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்திருந்த விதம் மிகவும் வேதனைக்குரிய வகையிலும் விசனப்படக்கூடிய வகையிலும் இருந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரசுரமான `சத்தின' என்ற சிங்கள வாரப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றும் தவறான செய்தி வழங்கும் வகையிலே பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் தம் வசமிருந்த குண்டொன்று வெடித்ததனாலேயே உயிரிழந்ததாக செய்தியறிக்கையிடப்பட்டிருந்தமை எவ்வளவு பெரிய குற்றம்!
அனைத்து சிங்கள நாளேடுகளும் தமது செய்தியறிக்கையினூடாக இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய இரண்டையுமே தமது செய்திக்கு மூலமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. அதில் எந்தவொரு பத்திரிகையும் அயலவர்களின் தகவல்களைப் பெற்று அத்தகவல்களை உள்ளடக்கி செய்திகளை பிரசுரித்திருக்கவில்லை.
இலங்கையின் அதிகளவு ஊழல் நிறைந்த இடமாக இந்நாட்டு மக்களால் நம்பப்படும் பொலிஸ் தகவல் மூலம்மீது மட்டும் தங்கியிருக்கும் பத்திரிகைகளை எந்தளவு தூரம் நம்பிக்கை கொள்ள முடியும்.
சம்பவ தினத்திற்கு மறுதினம் இவ்விளைவுகளின் மரண விசாரணையினை மேற்கொண்ட நீதிபதி இவ் ஐந்து படுகொலைகளும் துப்பாக்கிச் சூட்டினாலேயே நிகழ்ந்துள்ளது என தீர்மானித்தார். ஆனால் இச்செய்தியினை மறுநாள் எந்தவொரு சிங்களப் பத்திரிகையும் பிரசுரிப்பதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (லங்காதீப பத்திரிகையைத் தவிர.)
இச்சம்பவம் தொடர்பாக "சத்தின" பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததாவது:
"திருகோணமலை நகரம் புலிகள் இயக்கத்தின் கொடூரத்திற்குட்பட்ட மற்றுமொரு நகரமாகும். அவர்களது பிரதான நோக்கம் சிங்கள மக்களை நகரத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, முழுப் பிரதேசத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும். அந்நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடந்த வார காலப்பகுதிகளில் திருகோணமலை நகர் முழுவதும் பாரிய வன்செயல்களை புலிகள் மேற்கொண்டனர்.
புலிகளின் தேவையானது எந்த வகையிலாவது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை பீதியடையச் செய்து நகரத்திலிருந்து விரட்டியடித்து நகரத்தின் வியாபார வலயமைப்பை தம் வசம் எடுத்துக் கொள்வதாகும். அவ்வாறு நகரத்திலிருந்து இவர்கள் விரட்டியடிக்கப்பட்டால் புலிகளின் நோக்கம் இலகுவில் நிறைவேறிவிடும்.
இக்கட்டுரையாளரின் கூற்றுக்கு ஏற்ப திருகோணமலையில் சிங்களவர்களின் வருகையும் அம்மக்களின் ஆதிக்கமும் எவ்வாறு வேரூண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடுதல் முக்கியமாகும்.
கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் திருகோணமலை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் திட்டமிட்ட வகையில் செயற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களினால் இத்தலையெழுத்துக்கு இரையான இனங்கள் இன்று இனங்கண்டு கொள்ள முடியாத வகையில் மாற்றமடைந்துள்ள மாவட்டமாகும். இன்று திருகோணமலையின் ஆதிக்கத்தின் பாரிய அரசியல் குரலாக அமைந்துள்ள ஜே.வி.பி. அந்நிலைமையினை எட்டுவதற்கும் இக்குடியேற்ற திட்டமே காரணம் என்பதனையும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.
1824 ஆம் ஆண்டு திருகோணமலையில் தமிழ் இனத்தின் சனத்தொகை வீதம் 76.5% மாகவும், 1901 ஆம் ஆண்டளவில் 60% மாக அது வீழ்ச்சி கண்டது. 1981 ஆம் ஆண்டளவில் 37% மான நிலையினை அடைந்தது. சிங்கள மக்களின் தொகை 1901 இல் 5% மாகவும் 1981 இல் 33% மாகவும் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் தாயக பூமி எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டது என்பதனை சுட்டிக்காட்டுவதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் 1950 ஆண்டு காலப்பகுதியில் இக்குடியேற்ற மக்களிடம் டி.எஸ்.சேனாநாயக்க கூறிய விடயமொன்றினை இங்கு குறிப்பிடுதல் முக்கியமானதாகும். "இன்று நீங்கள் இங்கு அழைத்து வரப்பட்டு உங்களுக்கு காணித்துண்டொன்று வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் கிராமங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் சமுத்திரத்தில் மிதக்கும் மரக்கட்டையைப் போலானவர்களாவீர்கள். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழு நாடும் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும், சிங்கள மக்களுக்காக நடக்கும் இறுதிப் போராட்டம் பதவியா சமதரையிலேயே இடம்பெறும்... இந்நாட்டை பிரிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் உங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு ஏற்படும். நீங்கள் தான் சிங்களவர்களின் இறுதி பாதுகாப்பு அரணாவீர்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகையிலேயே சிங்களவர்களின் ஆதிக்கம் திருகோணமலையில் தடம்பதிக்கப்பட்டது. இன்றைய சிங்கள சமூகம் இதனை உணர மறுக்கின்றது. அதனை சிங்கள ஊடகங்கள் மறைமுகமாக வரவேற்கின்றன.
இக்கட்டுரையினை நோக்கும் பொழுது பக்கச் சார்பான முறையில் சிங்கள சமூகத்தினருக்கு தவறான செய்தியினை வழங்கியுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை மாணவர்கள் என குறிப்பிடுவதற்கு மாறாக புலிகளென்றே சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளுக்கும் புலிகளை குற்றஞ்சாட்டுவதும், அனைத்து தமிழர்களையும் புலிகள் என முத்திரை குத்துவதனையும் இவ் ஊடகங்கள் தவிர்த்து ஒழுக்க நெறிசார்ந்த ஊடகவியலைக் கொண்டு சிங்கள சமூகத்தினருக்கு சரியான தகவல்களை வழங்குவதற்கு வழி சமைப்பதன் மூலம் நாட்டில் ஏற்படும் பதற்றங்களை தவிர்க்க முடியும் என்பதனை பணிவுடன் இவ் ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
புலிகள் இயக்கத்திற்கு மலையகத்திலிருந்து இரண்டாயிரம் பேர்....
கடந்த 6 ஆம் திகதி பிரசுரமான `லக்பிம' பத்திரிகை தமது தலைப்புச் செய்தியினை "புலிகள் அமைப்பிற்கு தோட்டப் பகுதிகளிலிருந்து இரண்டாயிரம் பேர்" என தீட்டியிருந்தது.
உப தலைப்புச் செய்தியாக இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு தலைவர்கள் மலையகத்திற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மலையக தோட்டப் பகுதிகளிலிருந்து புலிகள் அமைப்பில் இரண்டாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்காக அவ்வியக்கத்தின் ஆயுதப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட குழுவொன்று இத்தினங்களில் தோட்டப்பகுதிகளுக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தோட்டப் பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவரொருவர் தோட்டப் பகுதியிலிருந்து இரண்டாயிரம் இளைஞர், யுவதிகளை புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.
தோட்டப் பகுதியிலிருந்து வடக்கிற்கு மற்றும் கிழக்கிற்கு சென்று அங்கு புலிகளின் முகாம்களில் பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகள் இப்புலிகளின் பிரமுகர்களுடன் மீண்டும் தோட்டப் பகுதிகளுக்கு வந்துள்ளதுடன் இச் செயற்பாட்டினை மேற்கொள்வதாகவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சிங்கள இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதாயின் விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு புலிகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில் "அப்படி ஒரு விடயமும் இங்கு இல்லை. சிங்களப் பத்திரிகைகள் தமது வழமையான செய்திப் போக்கினை கொண்டு பொய்யான செய்தியொன்றினை பிரசுரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இச் செய்தி தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் ஆர்.யோகராஜன் கருத்து தெரிவிக்கையில், `இச் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது. இதுவொரு வதந்தி. தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை நசுக்கி ஆழ்வதற்காக செயற்பாடும் இனவாத அமைப்புகளின் செயற்படுகளே இச் செய்தியின் பின்னணி. அத்துடன், எல்லாத் தமிழர்களும் புலிகள் அல்ல. தமிழர்களை சிறுபான்மையென நினைத்து அடிமைப்படுத்துவதற்கு மேற்கொண்ட விளைவினாலேயே வடக்கில் இன்ற ஆயுத போராட்டம் உருவானது. இந்நாட்டின் இந்திய வம்சாவளி சமூகம் மட்டுமே ஆயுதம் ஏந்தாத சமூகம். இச்சமூகத்தினரையும் ஆயுதம் ஏந்துவதற்கு வழிசமைக்க வேண்டாமென இனவாத அரசியல் வாதிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இச் செய்தி தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பதுளை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், "இன்று தோட்டப் பகுதிகளிலிருக்கும் அதிகளவு இளைஞர்கள் தமது வீட்டில் கொழும்புக்கு வேலைக்குப் போவதாக கூறிவிட்டுச் செல்கின்றனர். அதனால் எமக்கு சந்தேகம். இவர்கள் எங்கு செல்கிறார்கள் என எமக்குத் தெரியாது. இவ்வாறு வந்துள்ளார்கள் என எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தாம் எவ்வேளையிலும் அவதானத்துடனேயே இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
இச் செய்தியறிக்கை எவ்வித மூலதாரங்களையும் உறுதியாகவும், தெளிவாகவும் வாசகர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டன. அது மட்டுமன்றி, இச் செய்தியின் காரணமாக மலையக மக்கள் மத்தியில் பல அச்சங்கள் தோன்றியுள்ளன.
ஊடகத்தின் கடப்பாடுகளில் ஒன்றுதான் பதற்றத்தைக் தணிப்பது. ஆனால் லக்பிம பத்திரிகை இக்கடப்பாட்டினை மீறியுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
பத்திரிகைகள் பிழையற்ற தன்மை மற்றும் தொழில் நேர்மை, அத்துடன் பொது நலனுக்காக புலனாய்வு பத்திரிகைத் தொழிலின் தலைசிறந்த பண்பாடுகளை பேணுவதற்காகப் பத்திரிகைகள் சளைக்காது முயற்சியெடுத்தல் வேண்டும்.
இச் செய்தி இலங்கை பத்திரிகைப் புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கைச் செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக்கோவையில் 5.3 இல் குறிப்பிட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் ஒருவர் தாம் அறிந்தும் அல்லது வேண்டுமென்றே சமய ஒற்றுமை இன்மையை அல்லது வன்செயல்களை தூண்டலாகாது என்பது. இச் செய்திக்கு ஏற்ப இப்பத்திரிகை ஆசிரியர் இந்நெறியினையும் மீறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினக்குரல்
|
|
|
| மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி |
|
Posted by: வினித் - 01-15-2006, 12:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி!
அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை!
* ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர்
-எஸ்.ஜே.எம்.-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார்.
14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார்.
`விசா' அனுமதியை தூதரகம் மறுத்தது, இந்திய வெளிவிவகார அமைச்சுடன் போராடிய அரித்திரா, இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கும் தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தன் தாய் தந்தையரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி இந்திய அரசுடன் போராடிய அரித்திரா அதில் வெற்றி கண்டார். தமிழ்நாடு சென்ற அரித்திரா கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தனது பெற்றோரை வேலூர் சிறையில் பார்த்தார்.
அரித்திரா பெற்றோரை சந்திக்க வேலூர் சிறைக்கு வருகிறார் என்பதை அறிந்து பெருமளவு செய்தியாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தனர். செய்தியாளர்கள் அரித்திராவை படம் எடுக்க முடியாதவாறு அவரின் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டு அழைத்து வரப்பட்டார். உயரமான வெள்ளை நிறமுடையவர். அவருடன் நளினியின் தாய் பத்மா, முருகனின் தாய் நேசமணி, நளினியின் சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர்.
முதலில் வேலூர் சிறையிலுள்ள விசேட பெண்கள் பிரிவுக்கு சென்று தனது தாயைப் பார்த்தார் அரித்திரா. தன் மகளைக் கண்ட நளினி மிகுந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி மேலிட்டுக் காணப்பட்டதாகவும் கண் கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தனது தாயுடன் பேசிவிட்டு அங்கிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள ஆண்கள் சிறைக்குச் சென்று தந்தையையும் பார்த்தார்.
மரண தண்டனை, விதிக்கப்பட்டுள்ள முருகன் தன் மகளைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால், சில அடி இடைவெளிகளிலேயே தந்தையும் மகளும் சந்தித்தனர் என நளினி, முருகனின் சட்டத்தரணி எஸ். துரைசாமி தெரிவித்தார்.
தனது பெற்றோரை சந்தித்த வேளையில் அரித்திரா அடிக்கடி மனமுடைந்து காணப்பட்டதாகவும் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை, மற்றும் தனது கல்வி குறித்து விளக்கியதாகவும் சிறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் விசா அனுமதியை ரத்துச் செய்து, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுவோமென புலனாய்வுத் துறை அதிகாரிகள் அரித்திராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 மாத கால விசா அனுமதியில் சென்றுள்ள அரித்திரா, தங்கியிருக்கும் இடத்தை இரகசியமாகப் பேண வேண்டும். தமது ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையான சீ.பி.ஐ.க்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையை விட்டு வெளியே வந்த அரித்திராவை சூழ்ந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். பெருந்தொகையான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் அவற்றுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். உடனடியாக சட்டத்தரணியின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
ஆனால், முருகனின் தாயார் நேசமணி கருத்துத் தெரிவிக்கையில், `இலங்கையில் தினமும் கொலைகள் நடைபெறுகின்றன' என்றார்.
தனது மகளுடன் வெளியில் சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஒரு மாத காலத்துக்கு அனுமதி தருமாறு வேலூர் சிறை தலைமை அதிகாரி இராமச்சந்திரனிடம் நளினி கோரியுள்ளார்.
முருகன் தனது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக நளினிக்கும் மரண தண்டனையே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூக்கிலிட்டால் அவர்களது பிள்ளை அநாதையாகிவிடுமென காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்தே, நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
1991 மேயில் தமிழ் நாட்டில் வைத்து ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். முருகன் இக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் விடுதலைப் புலி அங்கத்தவரெனவும் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். நளினியை முருகன் காதலித்திருந்தார். ராஜீவின் கொலைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர். இக் கொலைச் சதித் திட்டத்தை நளினியும் தெரிந்து வைத்திருந்தார் எனக்கூறி நளினி கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்படும்போது நளினி கர்ப்பிணியாகவே இருந்தார்.
சிறையில் தனது பிள்ளையை பெற்றெடுத்த நளினி 6 வருடங்களாக மகள் அரித்திராவை தன்னுடனேயே சிறையில் வளர்த்து வந்தார். பின்னர் அரித்திரா தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் வந்த தனது கல்வியைத் தொடங்கினார். தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் பாடசாலையில் சிறப்பாக கல்வி கற்று வருகின்றார்.
நன்றி:தினக்குரல்
|
|
|
| சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா? |
|
Posted by: வினித் - 01-15-2006, 12:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா?
* தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது
நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன.
புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தினமும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்களும் படையினரும் கொல்லப்படுகின்றனர். ஊடுருவல் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. பாரிய மோதலொன்றுக்கான மிக மோசமான தாக்குதல்களெல்லாம் இடம் பெற்றுவிட்டதால் முழு அளவிலான போர் எப்போது வெடிக்கப் போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுப்பப்படுகிறது.
படையினர் மீதான தாக்குதல்களை மக்கள் படையே மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் படையென்ற பெயரில் புலிகளே இந்தத் தாக்குதல்களை நடத்தி வருவதாக படைத் தரப்பு கூறுகின்றது.
கிழக்கில் கருணா குழுவென்ற பெயரில் இராணுவமே தங்கள் மீது தாக்குதலை நடத்துவதாகப் புலிகள் கூறிவந்த போதெல்லாம் அதனை முற்றாக மறுத்து வந்த இராணுவம், தற்போது மக்கள் படையே படையினர் மீது தாக்குதல் நடத்துவதாகப் புலிகள் கூறும்போது அதனை ஏற்க மறுக்கிறது.
கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் தற்போது வடக்கில் முழு அளவில் மோதலாகிவிட்டது. கிளேமோர் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன் துப்பாக்கிச் சூடுகளும் கைக்குண்டுத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் பதிலடியாக படையினர் அப்பாவிப் பொது மக்களையே தாக்குகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படையினரின் தாக்குதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாரிய இராணுவ நகர்வுகளின் போதே மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். ஆனால், இன்றோ யுத்த நிறுத்தம் அமுலிலிருக்கையில் வடக்கிலிருந்து தினமும் பெருமளவு மக்கள் பாதுகாப்புத் தேடி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். மீண்டும் தமிழகம் நோக்கியும் அகதிகள் செல்லத் தொடங்கிவிட்டனர்.
இந்தச் சூழ்நிலையிலேயே எரிக் சொல்ஹெய்மின் வருகைக்காக அரசு காத்திருக்கிறது. ஆனாலும், அவரது வருகை சமாதானத்தை ஏற்படுத்துமா அல்லது முழு அளவில் போரைத் தொடக்கிவிடுமா என்ற அச்சமும் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மிக மோசமானதொரு உறவு நிலையே உள்ளது. நிழல் யுத்தமும் பொதுக் கட்டமைப்பு நிராகரிப்பும் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதித்த அதேநேரம், நோர்வே அனுசரணையாளர்களுக்கும், புதிய அரசுக்குமிடையிலான உறவு நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.
மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபடும் மூன்றாந் தரப்பின் நெருங்கிய உறவு நிலையே சுமுகமானதொரு சூழ்நிலையைப் பேண உதவும். நீண்டகாலப் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் மிகச் சிறியகால சமாதான முயற்சிகள் மூலம் நெருக்கமாகிவிடக்கூடிய சாத்தியமில்லை.
ஆனாலும், மோதலில் ஈடுபட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் சமரச முயற்சிக்கு வந்த அனுசரணையாளருடன், மோதலில் ஈடுபட்டவர்கள் சிறப்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சமரச முயற்சிக்கு மிக அவசியம்.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் வேண்டுகோளின் பேரில்தான் சமரச முயற்சிக்கு நோர்வே வந்தது. நோர்வேயை அழைத்த இரு தரப்பும் கூறினால் மட்டுமே அனுசரணை முயற்சியிலிருந்து நோர்வே வெளியேறும். ஒரு தரப்பின் வெறுப்புக்காக நோர்வே இங்கிருந்து வெளியேறுமென எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் ஆட்சிமாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் அரசு தரப்பும் அடிக்கடி மாறுகிறது. ஆனால், புலிகள் தரப்பில் மாற்றமெதுவுமில்லை. எனினும் அரச தரப்பில் மாற்றங்கள் வரும்போது அவர்கள் அனுசரணையாளர்களையும் தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்ற முயல்வதால் அரசு தரப்புக்கும், அனுசரணையாளர்களுக்கும் இடையிலான உறவு வலுவற்றதாயுள்ளது.
அதேநேரம், தமிழர் தரப்பு நியாயங்கள் சமாதானப் பேச்சுகளின் போது முன்னிலைப்படுத்தப்பட்டு அதற்கான நீதியான தீர்வு வலியுறுத்தப்படும்போது உரிய தீர்வை முன்வைக்குமாறு அனுசரணையாளர்கள் அழுத்தம் கொடுப்பர். ஆனாலும், நியாயமான தீர்வுக்குச் செல்லாது அதனைத்தட்டிக் கழிக்க வேண்டுமானால் அனுசரணையாளர்களின் அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டிய தேவை அரசுக்கு ஏற்படும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அனுசரணையாளர்களை மாற்றி நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்காது, இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்பட்டால் அது தங்களது நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவித்து விடுமெனக் கருதி இங்கு நியாயமான தீர்வு எட்டப்படுவதை விரும்பாத ஒரு நாட்டை அந்த இடத்தில் அனுசரணையாளராக்கி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடவே இலங்கை அரசு முயல்கிறது.
தற்போதைய நிலையில் இலங்கையின் புதிய அரசுக்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இடையில் மோசமான உறவே நிலவுகிறது. சில அழுத்தங்களால் தான், அனுசரணைப் பணியைத் தொடருமாறு நோர்வேயை புதிய ஜனாதிபதி மகிந்த அழைத்துள்ளார். இவ்விருதரப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பாரிய விரிசல் தற்போதைய மோதல் நிலைக்கு முடிவு கட்ட உதவாதென்றே கருதப்படுகிறது.
நாட்டில் மீண்டும் பெரும் போர் வெடிப்பதைத் தடுக்க வேண்டுமானால் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக சந்திப்பொன்று நடைபெறவேண்டும். அந்தச் சந்திப்பானது போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்குரியதாயிருக்க வேண்டும். ஆனாலும், பேச்சுகள் ஆரம்பமாவதற்கு இலங்கை அரசின் நிலைப்பாடு பெரும் தடங்கலாயுள்ளது.
அரசுக்கும் புலிகளுக்குமிடையே மோசமான உறவு நிலை, அரசுக்கும் நோர்வேக்குமிடையே மிக மோசமான உறவு நிலை, போர்நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்தும் பேச்சுகளை விடுத்து போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை செய்யும் பேச்சுகளே நடைபெற வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு, பேச்சுகளை ஐரோப்பிய நாடுகளில் நடத்துவதற்கு சம்மதிக்காது ஆசிய நாடுகளிலேயே நடத்த வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு என்பவையே பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகுமா என்ற பெருங் கேள்வியை எழுப்பியுள்ளன.
அரசுக்கும் புலிகளுக்குமான உறவு நிலையையும் அரசுக்கும் அனுசரணையாளர்களுக்குமிடையிலான உறவு நிலையையும் ஒரு புறம் வைத்தாலும் போர்நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதிலும் பேச்சுகளை ஆசிய நாட்டிலேயே நடத்த வேண்டுமென்பதிலும் கடுமையாகவிருக்கும் இலங்கை அரசின் நிலைப்பாட்டில் தளர்வு ஏற்படுமா என்பது பெரும் கேள்வியாகும்.
நாடு மிக மோசமான நிலையிலிருக்கையிலும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் மிக முக்கியமான சந்திப்புக்காக வரவுள்ள சூழ்நிலையிலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன் ஸ்ரெட்டின் கருத்து, பேச்சுக்கான வாய்ப்பை பெருமளவில் குறைத்து விட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சமாதான முயற்சிகளைக் கைவிட்டு புலிகள் மீண்டும் போருக்குச் செல்வார்களேயானால் அதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமெனவும், புலிகள் எதிர்பாராதளவுக்கு மிகவும் வலிமைமிக்கதொரு இலங்கைப் படைகளையே அவர்கள் சந்திக்க வேண்டியிருக்குமெனவும் எச்சரித்ததன் மூலம், போருக்குச் செல்வதன் மூலம் புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா முழு உதவியையும் வழங்குமென்றதொரு வலுவான உணர்வை இலங்கைக்கு ஏற்படுத்தி விட்டது.
இது சமாதானப் பேச்சுக்கான வாய்ப்பை பெரிதும் குழப்பி விடக் கூடியதென்பதை அமெரிக்கா உணரத் தவறிவிட்டதா அல்லது, மிக மோசமடைந்து வரும் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முயலும் நோர்வேக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியா என்பது தெரியவில்லை.
வடக்கு-கிழக்கில் தற்போது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படுவதை அமெரிக்கா அறியத் தவறிவிட்டது. படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அப்பாவிப் பொதுமக்களே தினமும் படையினரால் கொல்லப்படுகின்றனர். பல்கலைக்கழக சமூகம் உட்பட அப்பாவிகளே தினமும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர்.
படையினர் மீதான தாக்குதல்களை பெரிதுபடுத்திதும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு புலிச் சாயம் பூசுகின்றன. திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் புலிகளே எனக்கூற இன்றும் இந்த சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முயல்கின்றன. அப்பாவித் தமிழர்களையெல்லாம் படையினர் கொன்று குவிக்கும் போது, அவர்களையெல்லாம் புலிகளென்றே இவர்கள் கூறுகின்றனர்.
யுத்தநிறுத்த காலத்தில் கூட பொதுமக்கள் உயிர் காக்கத் தப்பியோடுவது பற்றி எந்தவொரு ஊடகமும் தெரிவிக்க முன்வருவதில்லை. நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் ஒருவிதமாகவும் தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாகவும் செய்திகளைப் பிரசுரிக்கும் நிலைமையே இந்த நாட்டில் நிலவுகிறது. இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்கா உணரத் தவறிவிட்டது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் படையணிகள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. வன்னியிலும் திருகோணமலை தம்பலகாமத்திலும் புலிகளின் பகுதிக்குள் ஆழ ஊடுருவிச் சென்ற படையணிகள் தாக்கியதில் மூன்று புலிகள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை கடவானைப் பகுதியில் ஊடுருவிச் சென்ற இராணுவ அணியொன்று தங்களது முகாமொன்றின் மீது பலத்த தாக்குதலை நடத்தியதில் பல போராளிகள் காணாமல் போய்விட்டதாகப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். இது மிக மோசமானதொரு தாக்குதலெனவும் முகாமொன்றை தாக்குமளவிற்கு படையினர் ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுசிறு தாக்குல்கள், கைக்குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள், கிளேமோர் தாக்குதல்கள், ஆழ ஊடுருவித் தாக்குதல் என்ற நிலைமைகள் மாறி புலிகளின் பகுதிக்குள் பெருமளவில் ஊடுருவி அவர்களது முகாமை தாக்கியழிக்கும் நிலைக்கு இன்று நிலைமை சென்றுவிட்டதால், தாக்குதல் பதில் தாக்குதலென பெரும் மோதல் வெடிக்கும் நிலைமை தோன்றிவிட்டது.
கடற்படையின் டோரா படகை திருமலைக் கடலில் புலிகள் மூழ்கடித்துவிட்டதாக அரசும் படைத் தரப்பும் குற்றஞ்சாட்டினாலும் அதனை முற்றாக மறுக்கும் எழிலன், கிழக்கில் கடல் வலயத்தடையை அமுல்படுத்துவதற்காக படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கதையே டோரா மீதான தாக்குதலென கூறியுள்ளார்.
திருமலை துறைமுகத்திற்கு சமீபமாக இந்த டோரா மீது புலிகளின் கரும்புலிப் படகே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. இந்தச் சம்பவத்தில் சிதறிய படகின் சிதைவுகளெதுவுமே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனதாகக் கூறப்படும் 13 கடற்படையினரும் உயிரிழந்திருந்தால் அவர்களது சடலங்கள் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது.
டோராவிலிருந்து இரு கடற்படையினர் சிறு சிறு காயங்களுடன் தப்பினார்களென்றால் ஏனைய கடற்படையினரின் சடலங்கள் சின்னாபின்னமாகிப் போகக்கூடிய வாய்ப்பில்லை. ஆனாலும், அவர்களது சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததுடன் சிதறிய டோராவின் எதுவித சிதைவையும் கூட கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உண்மையிலேயே அங்கு என்ன நடந்ததென்ற கேள்வி போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், ஆசிய நாடொன்றை தவிர வேறு எங்கும் பேச்சுகளை நடத்தக்கூடாதென ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியுள்ளன. இவ்விரு கட்சிகளினதும் பிடியில்தான் தற்போதைய அரசு உள்ளதால் இவர்களது அழுத்தத்தையும் மீறி ஜனாதிபதி மகிந்தவால் ஆசியாவிலிருந்து ஐரோப்பா செல்ல முடியாது. இதனால் பேச்சுக்கான வாய்ப்பும் உடனடியாக இல்லாது போய்விடப் போகிறது.
எரிக் சொல்ஹெய்மும் இலங்கை வரும்போது முழு அளவிலானதொரு போர்ச் சூழ்நிலையே இருக்குமே தவிர, சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கக் கூடியதொரு சூழ்நிலை இருக்கமாட்டாதென்பது இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் மட்டுமல்லாது, நோர்வேக்கும் நன்கு தெரிந்திருக்கும்.
இதனால் எரிக் சொல்ஹெய்மின் வருகையின் மூலம் முழு அளவிலான போருக்கான திகதியை நிர்ணயித்து விடலாமென்ற ஆபத்தான நிலையுமுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சமாதானப் பேச்சுக்கான புறச்சூழ்நிலை அடியோடு கெட்டுவிட்டது. இலங்கையில் போர்நிறுத்தமென்று ஒன்று அமுலிலிருக்கிறதா என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவே கேள்வியெழுப்புமளவிற்கு புறச்சூழ்நிலை இல்லாது பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலை தோன்றிவிட்டது.
சொல்ஹெய்ம் இரு தரப்பையும் சந்திக்க இன்னும் ஒருவாரமிருப்பதால் நாட்டில் அடுத்து என்ன நிகழப் போகின்றது என்பதை பெரும்பாலும் இந்த வாரம் நிர்ணயித்துவிடும். எனவே, சொல்ஹெய்மினது இலங்கை விஜயம் தோல்வியடைந்தால்....?</b>
http://www.thinakural.com
|
|
|
| நூலகம் வலைத்தளம் இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது. |
|
Posted by: Snegethy - 01-15-2006, 08:26 AM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
<b>நூலகம்</b>
www.noolaham.net
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
2006 இன் முதல்பதிவினை, முதன்முதல் புதிய தமிழ் மணத்தில் வரவிருக்கும் எனது பதிவினை ஒரு நல்ல செய்தியோடு பிரசுரிக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக பலரதும் கூட்டுழைப்பில் சிறுகச்சிறுக வளர்ந்து வந்த நூலகம் வலைத்தளம்
இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது.
ஈழநூல் திட்டமாக ஆரம்பித்து, கோபி, பிரதீபா போன்றோரின் ஒத்துழைப்புடன் வளர்ந்து, ஈழநாதனின் இலங்கை வருகையுடன் சடுதியான வளர்ச்சியை எட்டி இன்று தரமான இலவச நூலகமாக இவ்வலைத்தளம் உங்கள் முன் நிற்கிறது.
நூலகம் என்பது, ஈழத்து எழுத்தாவணங்களை இணையத்தில் மின்வடிவில் பேணவும், பகிரவும் உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும். இவ்வலைத்தளத்தின் பின்னணியில் இயங்கும் நூலகம் திட்டம், நூலகம் நூலகம்மடலாடற்குழுவில் இணைந்துள்ள பல ஆர்வலர்களின் கூட்டுழைப்பாகும்.
இவ்வலைத்தளம் எவருக்கும் சொந்தமானதல்ல. எந்த அமைப்போடும் தொடர்பு பட்டதல்ல.
இத்திட்டத்தின் பணிகளை பொறுப்பெடுத்து செய்பவர்கள் முழுக்க முழுக்க தன்னார்வலர்களே. தத்தமக்கு முடியக்கூடிய பணிகளை அவரவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றனர். ஒருங்கிணைக்கும் பணிகூட இவ்வாறே பொறுப்பேற்கப்படுகிறது.
மின்வடிவாக்கப்பட்ட அத்தனை புத்தகங்களும், ஆவணங்களும் தமிழ் யுனிகோட் குறிமுறையில் உள்ளன. இவற்றை நீங்கள் எந்த இயங்குதளத்திலிருந்தும் படிக்க முடியும். அத்தோடு சேமித்துக்கொள்ளவோ, நகலெடுக்கவோ தொழிநுட்பரீதியான தடைகள் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்களின் உரிமம் தொடர்பான பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு.
இன்னமும் முழுமையாக மெப்புப்பார்க்கப்படாத நூல்கள் உள்ளிட 100 நூல்கள் தற்போது வலையேற்றப்பட்டுள்ளன. 100 நூல்களுக்குமான தொடுப்புக்கள் விரைவில் முழுமைப்படுத்தப்படும்.
திட்டத்தினுடைய விளக்கக்குறிப்புக்கள் உதவி ஆவணங்கள் அனைத்தும் விக்கி விக்கி பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. எவரும் அங்கே பங்களிப்புகள் வழங்கலாம்.
நூலகம் திட்டத்தின் மற்றுமொரு கிளைத்திட்டமான ஈழத்து இலக்கிய கலைக்களஞ்சியம் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எமக்கென தனியான கலைக்களஞ்சியம் எதனையும் நாம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
திறந்த நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் விக்கிபீடியாவுக்கு பங்களித்தல் மூலமே எமக்கான சிறந்த கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்க முடியும் என நாம் திடமாக நம்புகிறோம்.
விக்கிபீடியாவுக்கான பங்களிப்பை ஊக்குவிக்குமுகமாக விக்கிபீடியாவிலுள்ள ஈழத்து இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் தனியான பக்கம் தனியான பக்கம் ஒன்றில் தொடுப்புக்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நூலகம் குழுவினர் தமது கலைக்களஞ்சிய கட்டுரைகளை நேரடியாகவே விக்கிபீடியாவுக்கு வழங்குவர்.
வெகு விரைவில் நூலகம் உதவி ஆவணங்கள் விக்கி புத்தகங்கள் பகுதியில் சேர்க்கப்படவுள்ளன.
நூல்களை, ஒலி வடிவிலும், திறந்த ஆவண (Open Document Text) வடிவிலும் வழங்கும் எண்ணம் உள்ளது. விரைவில் அது நனவாகும்.
எமது எதிர்கால சந்ததி, இணையத் தேடுபொறி ஒன்றின் மூலம் தமிழிலேயே தனது தேவைகளுக்காக ஈழத்து நூல்களை தேடிப்பெறக்கூடிய வசதி கிடைக்கவேண்டும். அவ்வாறு தேடிப்பெறும் நூல்களை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக பயன்படுத்தவேண்டும். அவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான உரிமம் சார்ந்த விடயங்களை சிக்கல்களை களைவதற்கு மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். வெல்வோம்.
அனைவரும் நூலகத்திற்கு வருகை தாருங்கள், பயன்படுத்துங்கள் எம்மோடு மடலாடலில் இணைந்துகொள்ளுங்கள்.
எல்லாவற்றும் மேலாக, உங்களுக்கு திருப்தியாய் இருந்தால் உங்கள் தளங்களில் எமக்கு இணைப்புக்கொடுங்கள்.
கூகிள் புறாக்கள் எம்மை தேடிவரட்டும்.
-மு.மயூரன்-
Nanri :-http://mauran.blogspot.com/2006/01/blog-post.html
|
|
|
| போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி படங்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-15-2006, 07:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வடபோர்முனை போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 04:40 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தைத் திருநாளான நேற்று சனிக்கிழமை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இடையிலான சூட்டுப் போட்டியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் சூட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் களமுனைத் தளபதிகளும் , போராளிகளும் பங்குபற்றினர்.
<img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115001.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115002.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115003.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115004.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2006/2006JAN/20060115005.jpg' border='0' alt='user posted image'>
Puthinam
|
|
|
| அமெரிக்க FBI அதிகாரிகள் இலங்கை வருகிறார்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-15-2006, 07:36 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>US FBI officials here on Tiger probe </b>
Sunday, 15 January 2006 - 3:17 AM SL Time
The United States is sending a top level team to Sri Lanka comprising agents of the Federal Bureau of Investigation (FBI) and the Department of State. They will arrive in Colombo on January 24.
The Sunday Times learns that among other matters the team will familiarize themselves with the prevailing security situation and activities of the Liberation Tigers of Tamil Eelam. The LTTE is a banned organization in the US.
The team is to determine matters relating to Tiger guerrilla links to other terror groups against whom US is now waging a war. It is also likely to focus on money laundering and similar activity by Tiger guerilla groups in violation of US laws.
The visit is the direct outcome of the US tour by Foreign Minister Mangala Samaraweera. He held talks in Washington D.C. with senior officials of the Department of Defence and officials dealing with counter terrorism, financial crimes and related matters.
It was only last Tuesday that US Ambassador Jeffrey Lunstead warned the LTTE that if it chose to abandon the search for peace, the Sri Lankan military would emerge 'stronger, more determined and capable'.
Speaking at luncheon meeting of the American Chamber of Commerce (Sri Lanka Chapter), he said US military assistance to Sri Lanka would continue but added that that did not mean the US feared a war would erupt. (See also Thalif Deen`s column on Page 14)
Meanwhile, R. Nicholas Burns, US Under Secretary of State for Political Affairs ' the No. 3 in the State Department ' will also arrive on January 24.
Mr. Burns is set to meet President Rajapakse and other top government officials during his two-day visit before heading to New Delhi to prepare for U.S. President George Bush`s arrival later this month.
These top-level visits take place amid growing concern by the international community for what is left of the cease-fire and a possible flare-up of war.
The European Union`s commissioner for external relations, Benita Ferrero-Waldner, said earlier this week,`we may now be witnessing Sri Lanka`s slow but resolute drift back towards civil war.`
Source(s)
Sunday Times
http://www.lankanewspapers.com/news/2006/1/5251.html
|
|
|
| இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு |
|
Posted by: rajathiraja - 01-15-2006, 07:02 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<b>இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம் </b>
ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவியேற்ற பின்னர் நிலைமை மாறி விட்டது.
கடந்தாண்டு இறுதியில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ராக்கெட் வீசி தாக்கப்பட்டது. இலங்கை கடற்படையினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த இரு சம்பவங்களையும் புலிகள் மறுத்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் 100 பேர் பலியாகி யுள்ளனர்.
அமெரிக்கா அரசு சார்பில் இந்த மோதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், மோதல்கள் தொடர்கின்றன.
இலங்கை மட்டகளப்பில் நார்வே நாட்டு அமைதித் துõதர்கள் தலைமையிலான சண்டை நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தங்கியிருந்த அலுவலக கட்டடத்தின் மீது நேற்று யாரோ சில மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும், கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் புலிகள் மறுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து சண்டை நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹெலன் வோலப்ஸ் டாட்டிர் கூறுகையில், ""தாக்குதல் சம்பவத்திற்கு பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. முதல்முறையாக எங்கள் அலுவலகம் <உள்ள கட்டடம் நேரடியாக தாக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மூன்றாண்டு காலத்திற்கு பின்பு கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் மட்டும் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். நேற்று மட்டும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.
இதுகுறித்து கவுசல்யா என்ற 19 வயதுப் பெண் கூறுகையில்,""நாங்கள் தலைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணமாக கொடுத்து தமிழ்நாடு வந்திருக்கி றோம். இலங்கையில் இனி அமைதியாக வாழ முடியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நாங்கள் பீதியில் இருந்தோம். ராணுவத்தினர் எங்கள் மீது துப்பாக்கியால் சுடுகின்றனர். குழந்தைகளை கொன்று குவிக் கின்றனர். பெண்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குகின்றனர். நாங்கள் உயிருக்கு பயந்தே இங்கு வந்திருக்கிறோம்,'' என்றார்.
ஏற்கனவே வந்துள்ளவர்களில் 24 பேர் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 12ம் தேதி இங்கு வந்தனர். அடுத்து வந்துள்ள ஒன்பது பேரும் மன்னார் மாவட்டத்திலுள்ள தெசலையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மண்டபம் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1980ம் ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : dinamalar.com
http://www.dinamalar.com/2006jan15/imp1.asp
|
|
|
|