01-15-2006, 12:23 PM
மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி!
அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை!
* ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர்
-எஸ்.ஜே.எம்.-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார்.
14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார்.
`விசா' அனுமதியை தூதரகம் மறுத்தது, இந்திய வெளிவிவகார அமைச்சுடன் போராடிய அரித்திரா, இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கும் தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தன் தாய் தந்தையரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி இந்திய அரசுடன் போராடிய அரித்திரா அதில் வெற்றி கண்டார். தமிழ்நாடு சென்ற அரித்திரா கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தனது பெற்றோரை வேலூர் சிறையில் பார்த்தார்.
அரித்திரா பெற்றோரை சந்திக்க வேலூர் சிறைக்கு வருகிறார் என்பதை அறிந்து பெருமளவு செய்தியாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தனர். செய்தியாளர்கள் அரித்திராவை படம் எடுக்க முடியாதவாறு அவரின் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டு அழைத்து வரப்பட்டார். உயரமான வெள்ளை நிறமுடையவர். அவருடன் நளினியின் தாய் பத்மா, முருகனின் தாய் நேசமணி, நளினியின் சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர்.
முதலில் வேலூர் சிறையிலுள்ள விசேட பெண்கள் பிரிவுக்கு சென்று தனது தாயைப் பார்த்தார் அரித்திரா. தன் மகளைக் கண்ட நளினி மிகுந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி மேலிட்டுக் காணப்பட்டதாகவும் கண் கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தனது தாயுடன் பேசிவிட்டு அங்கிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள ஆண்கள் சிறைக்குச் சென்று தந்தையையும் பார்த்தார்.
மரண தண்டனை, விதிக்கப்பட்டுள்ள முருகன் தன் மகளைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால், சில அடி இடைவெளிகளிலேயே தந்தையும் மகளும் சந்தித்தனர் என நளினி, முருகனின் சட்டத்தரணி எஸ். துரைசாமி தெரிவித்தார்.
தனது பெற்றோரை சந்தித்த வேளையில் அரித்திரா அடிக்கடி மனமுடைந்து காணப்பட்டதாகவும் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை, மற்றும் தனது கல்வி குறித்து விளக்கியதாகவும் சிறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் விசா அனுமதியை ரத்துச் செய்து, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுவோமென புலனாய்வுத் துறை அதிகாரிகள் அரித்திராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 மாத கால விசா அனுமதியில் சென்றுள்ள அரித்திரா, தங்கியிருக்கும் இடத்தை இரகசியமாகப் பேண வேண்டும். தமது ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையான சீ.பி.ஐ.க்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையை விட்டு வெளியே வந்த அரித்திராவை சூழ்ந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். பெருந்தொகையான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் அவற்றுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். உடனடியாக சட்டத்தரணியின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
ஆனால், முருகனின் தாயார் நேசமணி கருத்துத் தெரிவிக்கையில், `இலங்கையில் தினமும் கொலைகள் நடைபெறுகின்றன' என்றார்.
தனது மகளுடன் வெளியில் சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஒரு மாத காலத்துக்கு அனுமதி தருமாறு வேலூர் சிறை தலைமை அதிகாரி இராமச்சந்திரனிடம் நளினி கோரியுள்ளார்.
முருகன் தனது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக நளினிக்கும் மரண தண்டனையே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூக்கிலிட்டால் அவர்களது பிள்ளை அநாதையாகிவிடுமென காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்தே, நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
1991 மேயில் தமிழ் நாட்டில் வைத்து ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். முருகன் இக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் விடுதலைப் புலி அங்கத்தவரெனவும் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். நளினியை முருகன் காதலித்திருந்தார். ராஜீவின் கொலைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர். இக் கொலைச் சதித் திட்டத்தை நளினியும் தெரிந்து வைத்திருந்தார் எனக்கூறி நளினி கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்படும்போது நளினி கர்ப்பிணியாகவே இருந்தார்.
சிறையில் தனது பிள்ளையை பெற்றெடுத்த நளினி 6 வருடங்களாக மகள் அரித்திராவை தன்னுடனேயே சிறையில் வளர்த்து வந்தார். பின்னர் அரித்திரா தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் வந்த தனது கல்வியைத் தொடங்கினார். தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் பாடசாலையில் சிறப்பாக கல்வி கற்று வருகின்றார்.
நன்றி:தினக்குரல்
அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை!
* ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர்
-எஸ்.ஜே.எம்.-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார்.
14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார்.
`விசா' அனுமதியை தூதரகம் மறுத்தது, இந்திய வெளிவிவகார அமைச்சுடன் போராடிய அரித்திரா, இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கும் தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தன் தாய் தந்தையரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி இந்திய அரசுடன் போராடிய அரித்திரா அதில் வெற்றி கண்டார். தமிழ்நாடு சென்ற அரித்திரா கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தனது பெற்றோரை வேலூர் சிறையில் பார்த்தார்.
அரித்திரா பெற்றோரை சந்திக்க வேலூர் சிறைக்கு வருகிறார் என்பதை அறிந்து பெருமளவு செய்தியாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தனர். செய்தியாளர்கள் அரித்திராவை படம் எடுக்க முடியாதவாறு அவரின் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டு அழைத்து வரப்பட்டார். உயரமான வெள்ளை நிறமுடையவர். அவருடன் நளினியின் தாய் பத்மா, முருகனின் தாய் நேசமணி, நளினியின் சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர்.
முதலில் வேலூர் சிறையிலுள்ள விசேட பெண்கள் பிரிவுக்கு சென்று தனது தாயைப் பார்த்தார் அரித்திரா. தன் மகளைக் கண்ட நளினி மிகுந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி மேலிட்டுக் காணப்பட்டதாகவும் கண் கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தனது தாயுடன் பேசிவிட்டு அங்கிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள ஆண்கள் சிறைக்குச் சென்று தந்தையையும் பார்த்தார்.
மரண தண்டனை, விதிக்கப்பட்டுள்ள முருகன் தன் மகளைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால், சில அடி இடைவெளிகளிலேயே தந்தையும் மகளும் சந்தித்தனர் என நளினி, முருகனின் சட்டத்தரணி எஸ். துரைசாமி தெரிவித்தார்.
தனது பெற்றோரை சந்தித்த வேளையில் அரித்திரா அடிக்கடி மனமுடைந்து காணப்பட்டதாகவும் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை, மற்றும் தனது கல்வி குறித்து விளக்கியதாகவும் சிறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் விசா அனுமதியை ரத்துச் செய்து, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுவோமென புலனாய்வுத் துறை அதிகாரிகள் அரித்திராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 மாத கால விசா அனுமதியில் சென்றுள்ள அரித்திரா, தங்கியிருக்கும் இடத்தை இரகசியமாகப் பேண வேண்டும். தமது ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையான சீ.பி.ஐ.க்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையை விட்டு வெளியே வந்த அரித்திராவை சூழ்ந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். பெருந்தொகையான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் அவற்றுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். உடனடியாக சட்டத்தரணியின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
ஆனால், முருகனின் தாயார் நேசமணி கருத்துத் தெரிவிக்கையில், `இலங்கையில் தினமும் கொலைகள் நடைபெறுகின்றன' என்றார்.
தனது மகளுடன் வெளியில் சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஒரு மாத காலத்துக்கு அனுமதி தருமாறு வேலூர் சிறை தலைமை அதிகாரி இராமச்சந்திரனிடம் நளினி கோரியுள்ளார்.
முருகன் தனது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக நளினிக்கும் மரண தண்டனையே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூக்கிலிட்டால் அவர்களது பிள்ளை அநாதையாகிவிடுமென காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்தே, நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
1991 மேயில் தமிழ் நாட்டில் வைத்து ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். முருகன் இக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் விடுதலைப் புலி அங்கத்தவரெனவும் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். நளினியை முருகன் காதலித்திருந்தார். ராஜீவின் கொலைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர். இக் கொலைச் சதித் திட்டத்தை நளினியும் தெரிந்து வைத்திருந்தார் எனக்கூறி நளினி கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்படும்போது நளினி கர்ப்பிணியாகவே இருந்தார்.
சிறையில் தனது பிள்ளையை பெற்றெடுத்த நளினி 6 வருடங்களாக மகள் அரித்திராவை தன்னுடனேயே சிறையில் வளர்த்து வந்தார். பின்னர் அரித்திரா தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் வந்த தனது கல்வியைத் தொடங்கினார். தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் பாடசாலையில் சிறப்பாக கல்வி கற்று வருகின்றார்.
நன்றி:தினக்குரல்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&