Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 409 online users.
» 0 Member(s) | 406 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  செஞ்சோலையின் புதிய வளாகம் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வ
Posted by: ஈழமகன் - 01-15-2006, 09:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>செஞ்சோலையின் புதிய வளாகம் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைப்பு </b>


செஞ்சோலையின் புதிய இல்லவளாகத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பொதுச்சுடரினை ஏற்றிவைத்த தேசியத் தலைவர் அவர்கள் வளாகத்தின் பெயர் பலகையினைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.

தொடர்ந்து செஞ்சோலை மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Print this item

  தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்'
Posted by: sanjee05 - 01-15-2006, 09:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

இலங்கையிலிருந்து நேற்று சனிக்கிழமை மேலும் 5 அகதிகள் படகுகள் மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளதையடுத்து அச்சம் காரணமாக இதுவரை இராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றுள்ள தமிழ் மக்களின் தொகை 38 ஆக அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் முறிவடைந்து மீண்டும் போர் மூளலாம் என்ற அச்சம் காரணமாக உண்டாகியுள்ள நெருக்கடி தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் உணரப்படுகின்றது.

மூன்று வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்தது நாளாந்தம் தமிழ் மக்கள் படகுகள் மூலம் இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற வண்ணமுள்ளனர்.

மன்னாரிலிருந்து 10,000 ரூபா செலுத்தி மீன்பிடிப் படகுகள் மூலம் பலர் இராமேஸ்வரம் சென்றுள்ளனர். 1980 களில் தமிழ் நாட்டிற்குப் பெருளவு இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் கோரி செல்வதற்கு காரணமாகவிருந்த யுத்தத்தைப் போன்று மீண்டுமொரு யுத்தம் மூளலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

இலங்கையில் எமது உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. நாங்கள் கடும் அச்சம் கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இராணுவம் எங்களை சுடுகின்றது. குழந்தைகளைக் கூட கொல்கின்றது. பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுகின்றது என இலங்கை தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்திய- இலங்கை கடற்பரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் காயமடைந்தார்.

இந்திய கடற்படையும் கரையோர காவற்படையும் சர்வதேச கடற்பரப்பில் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

தமிழ்நாடு அரசாங்கம் கச்சதீவில் மீன் பிடிப்பதற்கான உரிமையை மீளப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, தமிழ்நாடு பொலிஸார் மிகுந்த எச்சரிக்கையுடனுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் மூண்டால் பெருமளவு அகதிகள் இராமேஸ்வரத்திற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளன.

இதேவேளை, தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு இது கடும் பாதுகாப்புப் பிரச்சினையாக மாறலாம்.

http://www.thinakkural.com/New%20web%20sit...y/15/news-4.htm

Print this item

  மனவலி யாத்திரை.....!
Posted by: இளைஞன் - 01-15-2006, 08:56 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (8)

<span style='font-size:25pt;line-height:100%'>மனவலி யாத்திரை.....! </span>
- சுதந்திரா -

அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.

என்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....?
இது என்னவனின் குரல்.
நித்திரை வரேல்ல....
வாரும் வந்துபடும்...
இல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...
சொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.

ஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.

இன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.

இல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.
எனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....!
சொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....
என் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.

அவனது தொடர்பிலக்கத்தைக் குறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா.......? இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா.....? இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்....! வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....சிங்கங்களின் திமிர் அடக்கி எங்களின் மானம் காக்கும் மறவர்களாய் வருவார்கள்....

அவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.

என்னவாமக்கா....?
உங்களைக் கவனமா இருக்கட்டாம்...!
கண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.
கவனமா இருக்கட்டாமோ....?
சொல்லுங்கோ கவனமா இருக்கிறனாமெண்டு.

சிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.

அந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.
முதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.

இடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்போய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.

அன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் சித்தம் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.

அந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் , நாமெல்லாம் சீண்டுப்பண்டமென எண்ணி குண்டுகள் அள்ளிக் கொட்டிய சிங்கர்களின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.

ஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு...! அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.

அவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.

பொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...?

<b>அன்பான நண்பா....,
எங்கிருக்கிறாய் நீ...!
கல்லறையிலிருக்கிறாயா......?
அல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......?
ஊர்; சொல்லாமல் ,
உறவுகள் தெரியாமல்
உறங்கிடுவோர் வரிசையில் நீயும்
அமைதியாய் துயில்கிறாயா.....?
எங்கிருக்கிறாய் நீ.....?
உனது குரல், உனது சிரிப்பு ,
உனது துணிந்த பேச்சு ,
உனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.
நீ எங்கிருக்கிறாய்....?</b>


* <i>19.03.03</i>

Print this item

  பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் - மகிந்த ராஜபக்ச
Posted by: sanjee05 - 01-15-2006, 08:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் கொழும்பு ஊடகவிலாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார்.

குறித்த நபர் ஊடகவியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்…

ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச படையினர் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் மீது போரை வலிந்து முன்னெடுக்கக்கூடாது என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் அதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படும் முப்படைத் தளபதிகளுக்கும் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்குமான ஆட்டிலறி பீரங்கிகளுக்கான சமவலு குறைந்து காணப்படுவதால் போரை முன்னெடுக்க முடியாது என்றும் மூன்று மாதங்களுக்குள் ஆட்டிலறி பீரங்கிகள் இலங்கையை வந்து சேர்ந்துவிடும் என்றும் அதற்குப் பிற்பாடு பயங்கரவாதத்திற்கான ஒழிப்பு போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி முக்கிய புள்ளி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போரை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியிலும் ஐரோப்பிய ரீதியிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை இலகுவில் கொண்டுவரவும் மகிந்தராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என ஜேவிபி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

Print this item

  More Sri Lanka Tamils flee to India fearing war
Posted by: Vaanampaadi - 01-15-2006, 07:52 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

More Sri Lanka Tamils flee to India fearing war


CHENNAI, India (Reuters) - A new group of Sri Lankan Tamils has landed on the Indian coast claiming they are fleeing war in the island nation, police said on Sunday.

The group of 10 arrived by boat near the famous pilgrim town of Rameswaram, about 550 kms south of Chennai, capital of southern Tamil Nadu state, late on Saturday evening.

They said they were fleeing escalated violence between the government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam in northeast Lanka, police said.

Another boat carrying five people came early on Saturday after the first wave in which 33 Tamils came in two batches on Thursday and Friday.

Almost all the refugees are from Sri Lanka's Mannar coastal villages, police said.

"They say more than 3,000 more are waiting in Mannar to cross into Tamil Nadu in view of the violence," said V. Subramanian, a senior police officer at Rameswaram.

Sri Lanka is in the grip of the fear of a return to a war that killed more than 64,000 people before a truce in 2002.

Deadly attacks have taken place in recent weeks with suspected Tigers killing nine sailors in a mine ambush in the north on Thursday. Similar ambushes killed 39 military personnel in December - many in Mannar.



http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False

Print this item

  Plan B
Posted by: Vaanampaadi - 01-15-2006, 07:44 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Plan B </b>

By Amal Jayasinghe
15 January 2006 19:01 hours


Jan 15, 2006 (AFP) - Sri Lanka plans a new security force in the capital to deal with possible attacks as concern grows for a fragile ceasefire with separatist Tamil Tiger rebels, police said Sunday.

Heavily-armed troops and police have been visible in the city of 650,000 in recent weeks, in line with tighter security following clashes between troops and rebels in the country's northeast, police Deputy Inspector General Pujith Jayasundara said.
Jayasundara, who is in charge of security in the capital, said the police department was in the process of raising a specially-trained unit of a few hundred men to deal with any emergency situation in Colombo.

However, he rejected reports that Tamil rebels planned a suicide truck bomb attack in the capital.

"There is always a general threat, but nothing specific against any landmark building or anything like that," Jayasundara said.

He rejected as "rumours" a report in the privately-run Sunday Leader newspaper that Tiger rebels had planned a truck bomb attack against key economic targets in the capital.

Since early last month violence in the country's northeast, an area largely under rebel control, has killed 130 people, including 78 security personnel.

The upsurge in violence has raised fears for a ceasefire in place since February 2002, as part of a peace process to end a civil war that has claimed more than 60,000 lives since 1972.

The last attack in the capital was in July 2004 when a suspected Tiger rebel cadre detonated explosives strapped to her body.

Four police officers were killed in the bombing which was seen as a targeted attempt to kill a federal minister opposed to the Tigers.

"What is likely is that there could be an attempt by Tigers to target high profile personalities rather than go for an indiscriminate attack," a top defence source here said.

The Tamil Tigers were held responsible for such an attack in August last year when the then foreign minister Lakshman Kadirgamar was assassinated by a suspected rebel sniper.

The last Tiger attack against an economic target was on July 24, 2001 when rebels completely destroyed four parked aircraft of the national carrier SriLankan airlines at the island's only international airport.

In October 1997, the guerrillas rammed an explosives laden truck into the World Trade Centre building in Colombo, a week after Washington designated them a foreign terrorist organisation.

The European Union warned in October that it would consider a ban on the Tigers unless they renounced violence. Britain has already outlawed the Tigers.


-Amal Jayasinghe: win98win@gmail.com

http://www.lankabusinessonline.com/new_ful...scode=932096548


<b>Sri Lanka plans new security force for Colombo Sri Lanka</b>I
Sri Lanka is planning a new security force in the capital, Colombo, to deal with possible attacks by Tamil Tiger rebels.

Heavily-armed troops and police have been visible in Colombo in recent weeks, in line with tighter security, following clashes between troops and rebels in the island's northeast.

Deputy Inspector-General of Police, Pujith Jayasundara said his department was in the process of raising a specially-trained unit of a few hundred men to deal with an emergency.

However, he rejected reports that Tamil rebels were planning a suicide bomb attack in Colombo.

Since last month, violence in the northeast has killed 130 people, including 78 security personnel.

The violence has raised fears that a four-year old ceasefire is no longer holding.

http://www.radioaustralia.net.au/news/stor...es/s1547910.htm

Print this item

  ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுகிறார்கள்
Posted by: Vaanampaadi - 01-15-2006, 07:43 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Thousands flee Jaffna expecting war

PK Balachandran

Colombo, January 15, 2006|21:45 IST


About 3,500 families have fled from Jaffna peninsula to the LTTE-controlled part of the Wanni towards the south, expecting an outbreak of hostilities between the Sri Lankan armed forces and the LTTE, sources in Jaffna said on Sunday.

The LTTE has been saying for sometime that the time has come for a "final push" to secure an independent Tamil Eelam by force because the Mahinda Rajapaksa government at Colombo and the international community, have turned a deaf ear to the Tamils' long-standing demands and taken a hostile posture.

The LTTE had earlier asked its supporters to leave the peninsula and come over to the Wanni. Many of these did leave Jaffna. In the second phase, people belonging to the Wanni left. In the current phase, even those belonging to Jaffna are leaving.

One of the subsidiaries of the LTTE's humanitarian arm, Tamil Rehabilitation Organisation (TRO), has already built 1,500 shelters for the refugees from Jaffna. The TRO is said to be preparing for another tsunami, this time a politico-military one.

Anticipating war, Tamils from the coastal areas of the North Western district of Mannar are also leaving. But they are heading towards Tamil Nadu by boat. Some landed in Danushkodi last week.

Move to close Jaffna University

The LTTE has indicated that it would like Jaffna University to be closed indefinitely in protest against the actions of the Sri Lankan state, the Tamil-paramilitaries and the Sri Lankan armed forces. A final decision on this is to be announced in Jaffna by the University Students' Union on Monday.


Sources in Jaffna say that most students support the LTTE on this issue, but their parents are against an indefinite closure. However, there are parents who think that closure is better as it will safeguard the lives of their sons and daughters.

The Students Union of the University met the political leadership of the LTTE in Palai in North Wanni last week. The media were kept out of the meeting.

Solheim-Prabhakaran meeting critical

In this tense situation, much significance is attached to the visit of the Norwegian peace broker Erik Solheim to Sri Lanka in the third week of this month. He hopes to meet LTTE chief Prabhakaran on November 25 in Kilinochchi.

But it is not certain if Prabhakaran will meet him. He might choose not to meet him for political and strategic reasons. Also, the Tiger chieftain does not meet foreign dignitaries without his political advisor and interpreter Anton Balasingham being with him. It is still not known if the ailing Balasimgham, resident in London, will come to Kilinochchi.

On November 27, 2005, Prabhakaran, had warned that if President Rajapaksa did not come out with a reasonable political proposal "soon" the Tamils would have to resume their freedom struggle in 2006.

His intelligence chief, Pottu Amman, had said that the international community had abandoned the Tamils, thus indicating that the Tamils would have to carry on fighting regardless of the attitude of the international community.

LTTE challenges international community

The LTTE has been showing utter disdain for the international community in the recent past. Despite warnings from the European Union's External Commissioner, the American Ambassador in Sri Lanka and censures from the chief of the Scandinavian truce monitors, the LTTE has been killing scores of Sri Lankan soldiers and naval sailors with claymore mines and grenades with impunity in the past month and a half.

The government side has also been disregarding the international community's call to disarm or relocate its Tamil paramilitaries in the northeast, as per the ceasefire agreement. The government's plea is that there are no Tamil paramilitaries in the Tamil northeast and that the "Karuna" group is nothing but a dissident group of the LTTE over which government has no control.

http://www.hindustantimes.com/news/7598_15...00500020002.htm

Print this item

  ஈ.பி.டி.பி யினால் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் படம்
Posted by: Vaanampaadi - 01-15-2006, 06:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஞாயிறு 15-01-2006 19:44 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி யினால் இளைஞர் படுகொலை.
ஊர்சாவற்துறையில் இன்று அதிகாலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஈ.பி.டி.பி மற்றும் கடற்படையினரால் இனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதி காலை 12.30 மணியளவில் நண்பர் வீட்டில் இருக்கும் போது இவரை கடற்படையினரும் மற்றும் ஈ.பி.டி.பி யினரும் ஆகாயத்ததை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு இவரைப் பிடித்துச் சென்றுள்ளார்கள்.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/thevudeth1501061.jpg' border='0' alt='user posted image'>


இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் காலையில் வீட்டார் நண்பரின் வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிசில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்கள்

இதனைத் தொடர்ந்து பிடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக கரம்பன் சண்முகாநந்தா வித்தியாலய வீதியில் அடிகாயம் மற்றும் துப்பாக்கிச் சூட்;டுக்காயங்களுடன் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர் ஊர்காவற்துறை பருத்தியடைப்பைச் சேர்ந்த தர்மராசா தர்மசீலன் 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/thevudeth1501062.jpg' border='0' alt='user posted image'>

இவரைச் சுட்டவர்கள் என நான்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் பெயர்கள் பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் முறையே ராஐன், இராம், பிக்கப் வாகணச் சாரதி மற்றும் ஒருவருடன் இரண்டு கடற் படையினரும் இனைந்து செய்ததாக பொலிசில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சடலம் கிடந்த இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான் சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரனை நடத்தியதைத் தொடர்ந்து சடலததை யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் மரண விசாரனைக்காக ஒப்படைக்கும் படி உத்ரவுவிட்டுள்ளார்.

Pathivu

Print this item

  கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியுள்ளனர்
Posted by: Vaanampaadi - 01-15-2006, 06:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

ஞாயிறு 15-01-2006 20:32 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியுள்ளனர் – கண்காணிப்புக் குழு.
கருணாவின் ஆயுததாரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாததால் கண்காணிப்புக் குழு நடவடிக்கைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி இருப்பதாக கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தி ஏட்டுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் முன்வைத்துள்ளார்.

கருணாவின் ஆயுததாரிகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் நேரடியாக ஆதரவையோ அன்றிப் பாதுகாப்பையோ வழங்கி வருவதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கண்காணிப்புக் குழுவினருக்கு கிடைக்கப் பெறவில்லை என கூறியிருக்கும் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் எனினும் கருணாவினதும் ஆயுததாரிகளினதும் மறைவிடங்கள் உள்ளுர் மட்ட சிறீலங்கா படையினருக்கு நன்கு தெரியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கருணாவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு சிறீலங்கா படையினரிடம் கேட்கப்பட்ட போது கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியதாகவும் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Pathivu

Print this item

  போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம்
Posted by: Vaanampaadi - 01-15-2006, 06:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஞாயிறு 15-01-2006 20:31 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம்.
தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே சர்சதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் கொழும்பு ஊடகவிலாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார்.

குறித்த நபர் ஊடகவியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்…

ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச படையினர் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் மீது போரை வலிந்து முன்னெடுக்கக்கூடாது என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் அதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படும் முப்படைத் தளபதிகளுக்கும் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்குமான ஆட்டிலறி பீரங்கிகளுக்கான சமவலு குறைந்து காணப்படுவதால் போரை முன்னெடுக்க முடியாது என்றும் மூன்று மாதங்களுக்குள் ஆட்டிலறி பீரங்கிகள் இலங்கையை வந்து சேர்ந்துவிடும் என்றும் அதற்குப் பிற்பாடு பயங்கரவாதத்திற்கான ஒழிப்பு போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி முக்கிய புள்ளி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போரை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியிலும் ஐரோப்பிய ரீதியிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை இலகுவில் கொண்டுவரவும் மகிந்தராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என ஜேவிபி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் தெரிவித்துள்ளார்.



Pathivu

Print this item