Yarl Forum
ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா? (/showthread.php?tid=1370)



ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா? - SUNDHAL - 01-15-2006

காதலனை மறக்காமல்.......
அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள்.

பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் விட்டு, விட்டு தலைமறைவாகி விட் டான். வயிற்றில் சுமை யோடு, கண்ணீரோடு, தாய் வீடு திரும்பியவளை, நல்ல மனமும், பரந்த உள்ளமும் கொண்ட என் நண்பர், நல்ல அறிவுரை கூறி, தன்னுடனே வாழ வைத்துக் கொண்டுள்ளார்.

இப்போதுதான் அவள் தன் கணவரின் நல்ல மனதை புரிந்து கொண்டு, தன் தவறை புரிந்து கொண்டு, நல்ல மனைவியாக வாழ்கி றாள்.

Thanks:Thanthi...


- Vasampu - 01-15-2006

[b]ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்ஞசது

யோவ் சுண்டல் அதுக்கு முதல் நீர் இப்படி எழுதியது சரியா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- SUNDHAL - 01-16-2006

Vasampu Wrote:[b]ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்ஞசது

யோவ் சுண்டல் அதுக்கு முதல் நீர் இப்படி எழுதியது சரியா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:




அவசரத்துல அப்பிடி வந்திட்டுதுப்பா..


- வர்ணன் - 01-16-2006

எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும் எங்க இருந்துதான் இந்த நியூஸ் எல்லாம் எடுக்கிறீங்க எண்டு ? என் கண்ணே பட்டிடும் போல இருக்கே :wink:


- MUGATHTHAR - 01-16-2006

என்னை பொறுத்தமட்டில் அந்த காதலன் செய்தது சரியான வேலை பிறகென்ன கலியாணம் கட்டினவனையே விட்டுட்டு வாறவள் எண்டால் நாளைக்கு என்னையும் விட்டுட்டு போக மாட்டாள் எண்டு என்ன நிச்சியம் அதுதான் (குடுத்திட்டு ) தட்டி மாறியிட்டான்.................நல்ல ஒரு இழிச்சவாய் இருந்தபடியாலை திரும்பி வந்து ஒண்டும் தெரியாம வாழுறாவாம் இவளவையை எல்லாம்.......................


- SUNDHAL - 01-16-2006

திரும்பி வந்த இவாவ அவரும் மன்னிச்சு ஏத்துகிட்டாரம்
சரியான...லூ.....இருப்பான் போல இருக்கே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil:


- வர்ணன் - 01-16-2006

இதில கருத்து சொல்லுறது சரியான கஸ்டம் எண்டு நினைக்கிறன் ஏனென்றால்..
பெற்றோரின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் பண்ணின அந்த பொண்ணு..
காதலனை பிரிஞ்சதால ..தன்னை நினைச்சு அவனும் அழுதுகொண்டு இருப்பானே-துரோகம் பண்ணிட்டனே எண்டு நினைச்சது -அவள் நல்லமனசுக்கு எடுத்துக்காட்டு!

நம்பி ஒருவரை நடக்க அவர் எங்களை ஏமாத்தினால் நாங்களா கெட்டவர்?

அதே போல் திரும்பவும் அவளை ஏற்றுக்கொண்ட கணவன் இயல்பாவே நல்ல குணம் உள்ளவர் எண்டும் நினைக்கிறேன்! :roll:
அவரைப்போல நல்லமனம் கொண்டவர்கள் இலட்சத்தில் ஒருவர் மட்டுமே எங்களுள் இருப்பதால் - இந்த நிலமையை விளங்கி கொள்வது கஷ்டமா இருக்கும் என்று நினைக்கிறேன்! :roll: :roll:


- Mathan - 01-18-2006

தவறு செய்தவரை மன்னித்து திரும்ப ஏற்றுகொள்ள உண்மையிலேயே பரந்தமனப்பான்மை வேண்டும். அந்த கணவர் பாராட்டுகுரியவர் தான்.