Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 172 online users.
» 0 Member(s) | 169 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  மணிதாசன் மீள்வரவு
Posted by: Manithaasan - 01-20-2006, 12:47 AM - Forum: அறிமுகம் - Replies (41)

..பொங்கல் புத்தாண்டு வாழத்துகளுடன்.யாழ் கருத்துக்கள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.............என்னைப் பலர் மறந்திருப்பீர்கள் அல்லது தெரியாமலும் இருக்கலாம்..நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வருகிறேன்

Print this item

  அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக்கொலை
Posted by: ஊமை - 01-20-2006, 12:26 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<span style='color:red'>இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர்.

[size=18]இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய நேசனை ஒரு தமிழ் குழுவினர் அடித்துக் கொலை செய்துள்ளதுடன் மனைவி கவிதா கணவனை காப்பாற்ற இடைநடுவில் அகப்பட்டதால் படுகாயமடைந்துள்ளார். நேசனை அடித்து கொலை செய்தவர்கள் இ***** ஈழத்தமிழர்கள் அகதியாக வரக்கூடாது என்று கூறி தாக்கியதாக அறியமுடிகிறது. </span>

[size=24]இது தமிழீழ-தமிழக மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அளவிற்கு செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது

மோதலுக்கு காரணம் பழைய குரோதமே

ஆதாரம்: நிதர்சனம் இணையம்

Print this item

  2 dvd 5 to dvd 9
Posted by: DV THAMILAN - 01-19-2006, 10:47 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (3)

என்னிடம் இரண்டு விதமான dvd தட்டு உள்ளது. அதை எப்படி dvd 9 மாற்றம் செய்தல். (பதிவு திருமணம்(4.7.iso) திரமணம்.iso)
எனக்கு ஏதாவதும் மென்பொருள் தேவை

Print this item

  ஜோசம் எ.பி - ஜந்து மாணவர் படுகொலைக்கு படையினரே
Posted by: வினித் - 01-19-2006, 09:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஜோசம் எ.பி - ஜந்து மாணவர் படுகொலைக்கு படையினரே
காரணம் ஜனாதிபதி நம்புவதாக தெரிவிப்பு</span>


http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp
http://www.virakesari.lk/VIRA/html/index.asp

Print this item

  சில உதவிக் குறிப்புகள்
Posted by: Vasampu - 01-19-2006, 09:24 PM - Forum: சமையல் - Replies (9)

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
________________________________________
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
________________________________________
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
________________________________________
சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
________________________________________
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
________________________________________
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
________________________________________
கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
________________________________________
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
________________________________________
தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
________________________________________
பாகற்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்இ கசப்பு காணாமல் போய்விடும்.
________________________________________
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
________________________________________
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
________________________________________
மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
________________________________________
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
________________________________________
வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
________________________________________
தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
________________________________________
எலுமிச்சை தேங்காய் புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
________________________________________
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
________________________________________
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
________________________________________
துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நன்றி: www.chennainetwork.com

Print this item

  அப்பா :(
Posted by: RaMa - 01-19-2006, 08:53 PM - Forum: கவிதை/பாடல் - Replies (43)

<img src='http://img11.imageshack.us/img11/733/appamakal7959az.jpg' border='0' alt='user posted image'>

ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே
தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே
தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே
உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே

கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே
நாம் தப்பு செய்த போதிலும்
உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே

அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்
அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள்
அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள்

தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்

ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!

Print this item

  இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்
Posted by: வினித் - 01-19-2006, 08:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்
-ஜெயராஜ்-

யுத்த நிறுத்த மீறல் என்பது தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்; யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள,; அனுமதிகள் என்பனவற்றிற்கும் அப்பால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்ற வடிவத் தினை முற்றுமுழுதாகப் பெற்றுக்கொண்டு விட்டது.

இவற்றிற்குத் தொடர்ச்சியான பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டமுடியும். அதாவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான நிழல் யுத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகள் அண்மைக்காலத்தில் மிகத் தீவிரம்பெற்று இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப்பகுதியில் பெரும் அச்சமும், பீதியும் நிலவும் பெரும் பயங்கரச்சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னதான காலத்தில்- யுத்த காலத்தில்- தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீண்டும் தமிழர் தாயகத்தில் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. இந்த வகையில்

1. ஆயுதப்படையினரால் கைது செய்யப்படு வோர் காணாமல் போதல்,

2. படுகொலை செய்யப்படுதல்,

3. கோரமான தாக்குதல்களும், சித்திரவதைகளும்,

4. பாலியல் பலாத்காரமும், படுகொலையும்.

என சிறிலங்கா ஆயுதப்படையின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இப்படுகொலை மற்றும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாததொரு நிலை உருவாகியுள்ளது என்பது வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக இச்சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எதனையுமே செய்யமுடியாதுள்ளது. இம்மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் படைத்தரப்பு வழங்குவதாக இல்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப்பிரதிநிதிகளே கைவிரித்து விட்டனர்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வொடுக்குமுறை நடவடிக்கையில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்புடன் தமிழ்த் தேச விரோதக்குழுவினரும் இணைந்துள்ளனர் என்பது வெளிப்படையானது. ஆனால் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் தமிழினத்தேச விரோதக்குழுக்கள் மாறுபட்டவையாகவுள்ளன என்பதே வேறுபாடானது.

அதாவது மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் இத்தேசவிரோதக்குழுக்களாகச் செயற்படுபவர்களில் கருணா குழுவினர் முக்கிய பாத்திரத்தை பெற்றுள்ளனர் எனின் யாழ். குடாநாட்டில் ஈ.பி.டி.பி.யினர் அப்பாத்திரத்தை வகிக்கின்றனர். ஆனால் இவ்விரு குழுக்களும் பெயரளவில் வேறுபாடனவர்களேயொழிய அவர்களின் பணி ஒன்றேயாகும்.

இன்று தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் பல இலக்குகளையும், நோக்கங்களையும் கொண்டவையாகவுள்ளன. இப்படுகொலைகள் தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியான நிலைப்பாடு கொண்டவர்கள் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்கொண்டு செல்ல முற்பட்டவர்கள் என முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வகையில் ஊடகவியலாளர்கள் ஜி.நடேசன், டி.சிவராம், விரிவுரையாளர் தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வகையில் இறுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்தாகப் பழிதீர்ப்பது போன்ற தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுவது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எடுத்துக்காட்டாக கருணா குழுவிலிருந்த இரு இளைஞர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளின் அமைப்பிடம் சரணடைந்த வேளை சரணடைந்த ஒருவரின் சகோதரிகள் மிலேச்சத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வகையிலேயே ஆயுதப்படைத் தாக்குதலுக்குள்ளாகும் இடங்களில் வாழும் அன்றி அப்பகுதியூடாகப்பயணிக்கும் மக்களைத் தாக்குவதும், சிறிலங்காப் படைத்தரப்பு படுகொலை செய்ததுமுண்டு. இந்த வகையில் பலர் அண்மைக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றிக்கும் மேலாக அச்சம், சந்தேகம் என்பன காரணமாகச் சிறிலங்காப் படைத்தரப்பால் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தி விடுவார்களோ என்ற அச்சம், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக இப்படுகொலைகள் இடம் பெறுபவையாகவுள்ளன. இவை தவிர விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகம், ஐயப்பாடு என்பவற்றின் அடிப்படையிலும் பல படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையிலானதே இறுதியாக நேற்று முன்தினம் யாழ். மானிப்பாயிலும் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தகப்பனும், மகனும் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டமையும் ஆகும்.

இவற்றிற்குப்புறம்பாக இனவெறித்தனத்தின் வெளிப்பாடாகவும், இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. இந்த வகையில் இடம்பெற்ற படுகொலைகளில் முக்கியமானதே திருமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இப்படுகொலைகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களின்;ஃ ஆயுதப் படைத்தரப்பின் இன வெறியைத்தவிர வேறு காரணங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில் இப்படுகொலைகளுக்கு காரணிகள் எதுவுமில்லை. பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும், பல்கலைக்கழகங்கள் செல்லவுள்ள மாணவர்கள் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் இப்படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை தமிழ் மக்கள் மீதான இவ்வினப்படுகொலைகளுக்கு எத்தகைய காரணிகள் பின்னணியாக இருப்பினும் சிறிலங்கா அரசினதும், அதன் ஆயுதப்படைத்தரப்பினதும்- தீர்மானங்களே அடிப்படையானவையாகும். அதாவது இப்படுகொலைகள் சிறிலங்கா அரசினதும், ஆயுதப்படையினரதும் புலனாய்வுத்துறை உட்பட- அங்கீகாரம், அனுசரணையின்றி நடைபெறுபவையாக இல்லை என்பதே நிதர்சனமானதாகும்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, வடக்கு-கிழக்கைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கான வழிமுறையாக இனப் படுகொலையையே தனது மார்க்கமாகத் தெரிவு செய்துள்ளதை அவரது சில அறிவிப்புக்களே வெளிப்படுத்தப்போதுமானதாகும்.

குறிப்பாக தமிழ் மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்கள் என்ற நிலைப்பாடும் தற்பாதுகாப்புப்பயிற்சி பெற்ற அனைவரும் விடுதலைப் புலிகளே என்பதும், சந்தேகத்திற்கிடமான அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொள்ள இராணுவத்திற்கு அவர் வழங்கியுள்ள அனுமதியும், அவர் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பிற்கு இன அழிப்பிற்கான அனைத்து அங்கீகாரத்தை அளித்துள்ளார் என்றே கொள்ளக்கூடியதாகும்.

அத்தோடு யாழ். மாவட்ட சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குப் படைத்தரப்பு ஒத்துழைக்க மறுப்பதும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் தீர்மானத்தின் பாற்பட்டதொன்றாகவே இருக்க முடியும். அதாவது தமிழர் கைது காணாமற்போதல் தொடர்பாக படுகொலை தொடர்பாக எவருக்கும் காரணம் கூறவோ, விளக்கமளிக்கவோ வேண்டிய தேவையில்லை என்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதே அதுவாகும்.

இதைத்தவிர இனப்படுகொலைக்கு சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சில் இருந்து உத்தரவிடுவோர் சிலரும் இன்றுள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், தற்போதைய பாதுகாப்பமைச்சின் ஆலோசகருமான கொட்டகதெனிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ போன்றவர்களும் உள்ளனர்.

அண்மையில் திருமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கொட்டகதெனியவின் உத்தரவே காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது கொட்டகதெனியவின் விசேட பணிப்பில் விசேடபொலிஸ் அதிரடிப்படைப்பிரிவே இப்படுகொலையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதேசமயம் இவ்வினவெறிக் கூட்டணி தமிழின விரோக்குழுக்களின் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தமது ஒத்துழைப்பையும், அங்கீகாரத்தையும் அளிக்கத்தயாராக உள்ளன என்பதை அண்மைக்காலத்தில் இவ்வின விரோதச்சக்திகள் மேற்கொள்ளும் படுகொலைகளிலிருந்து ஏனைய அழிவு நடவடிக்கைகள் வரை வெளிப்படுத்துபவையாகவுள்ளன.

இந்த வகையில் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்வது இனப்பிரச்சினைக்கு இனிப்பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவுள்ளது. அதாவது நோர்வேயின் அபிவிருத்தி மற்றும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமைச்சரும், முன்னாள் விசேட தூதுவருமான எரிக்சூல் ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா அரசு இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தியுள்ளதானது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தையே தகர்த்துவிடக்கூடியதாகும். வேறுவிதமாகக் கூறினால் பேச்சுவார்த்தைக்குப் போடும் முட்டுக்கட்டை ஆகும்.

அதாவது அண்மைக்காலம் வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை எங்கு நடத்துவது? எதனைப்பற்றி முதலில் பேசுவது என்பது முக்கியப்பிரச்சினையாக இணக்கப்பாடு காணப்படவேண்டிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை மாற்றம் கண்டுள்ளது போல் உள்ளது. ஏனெனில் சிறிலங்கா ஆயுதப்படைதரப்பு மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்கள் புரியும் படுகொலைகள் பேசுவதற்கு முன்னர் படுகொலைகள் நிறுத்தப்படுவது குறித்த அரசின் உறுதிப்பாட்டைப்பெற வேண்டிய கட்டாயத்தைப் புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பித்த நிழல் யுத்தம் இன்று முற்றிலுமாக இனவழிப்பு நடவடிக்கையாக மாற்றம் கண்டுள்ளது. இதனை இன்று எவருமே மறுப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ முடியாது. அவ்வாறு யாராவது நிராகரிப்பவர்களாக இருப்பின் அவர்களும் இப்படுகொலைகளின் பங்குதாரிகளாகவே இருக்க முடியும்.

சிறிலங்கா அரசு நிழல் யுத்தம் ஒன்றை ஆரம்பித்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளும் நிழல்யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர் என்று வைத்துக்கொண்டாலும்- அதாவது சிறிலங்கா அரசுதரப்பு கூறுவது போன்று சில தாக்குதலுக்கு புலிகளே காரணம் என வைத்துக்கொண்டாலும், இவை சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பு மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் குழுக்களுக்கும்-விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானதாகவே இருக்க முடியும்.

ஆனால் சிறிலங்கா அரசோ இன்;று இம்முறை முகப்போரைத் தமிழ் மக்களுக்கு எதிராகத்திருப்பியுள்ளது. இதன் விளைவானது அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் நடவடிக்கையாக விஸ்தரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை என்பது எத்தனை தூரம் சாத்தியப்பாடானதாக இருக்க முடியும்?.

சிறிலங்கா அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை இன அழிப்பு என்பதையே வழிமுறையாகக் கொண்டுள்ளதையே அதன் நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாகவுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களைப் பொறுமையுடன் தமிழ் மக்களின் தேசிய தலைமை இராணுவ ரீதியிலான சவால்கள் என ஏற்றுக்கொண்டாலும் இனப்படு கொலையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் அது தயாராக இருக்கமாட்டாது.

அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இன்னமும் இன அழிப்பையே சிறிலங்கா அரசாங்கம் தெரிவு செய்வதாக இருக்கும் பட்சத்தில் யுத்த நிறுத்த உடன்பாடு பற்றியும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியே இருக்கும். ஏனெனில், இனப்படுகொலைதான் தீர்வென உள்ளவர்களுடன் பேசிப் பயன் ஏதும் உண்டா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

நன்றி: ஈழநாதம்

Print this item

  நகைச்சுவை
Posted by: hari - 01-19-2006, 02:40 PM - Forum: நகைச்சுவை - Replies (54)

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????

..................................................................................
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

"25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?"

"என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்"

"வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?"

"அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்"
...................................................................................

<b>தத்துவம் 2006</b>



1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

...................................................................................

வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?

அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!

வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்

அஞ்சலக ஊழியர்: ஏன்?

வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்.

.................................................................................




Print this item

  ஈழத்து திருக்கோயில்கள்
Posted by: தூயவன் - 01-19-2006, 02:39 PM - Forum: தமிழும் நயமும் - Replies (14)

<b>லேனா தமிழ்வாணன்</b>

தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.

லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.

Print this item

  அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
Posted by: மேகநாதன் - 01-19-2006, 02:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<span style='color:red'><b>தமிழர்களின் எதிர்ப்பு நிராகரிப்பு: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! </b>

சிறிலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த அவசரகால சட்டம் நீட்டிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்ட நீட்டிப்பைத் தடுக்கும் வகையில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இருப்பினும் எதுவித வாக்கெடுப்பும் நடத்தாமலேயே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் அவசரகால சட்ட நீட்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் அப்பாவி மக்கள் மீதான சித்திரவதை உச்சத்தை அடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையும் முறையாக நடத்தப்படவில்லை" என்றார் இரா.சம்பந்தன்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா,

நாடாளுமன்றத்தை இயங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றச் செயற்பாடுகளினூடாக தங்களது கோரிக்கைகளை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும். இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பல்ல என்று கூறிவிட்டனர். அதனால்தான் பொதுமக்கள் வாழ்விடங்களில் நாங்கள் தேடுதல்களை நடத்துகிறோம் என்றார்.

நீதிமன்ற பிடியாணை உத்தரவுகள் ஏதுமின்றி சந்தேக நபர்களை நீண்டகாலத்துக்கு கைது செய்து தடுத்து வைக்க சிறிலங்கா அரச படையினருக்கும் காவல்துறையினருக்கும் இந்த அவசரகால சட்டம் அனுமதி அளிக்கிறது.

கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்து வரும் இச்சட்டத்தினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுவதும், தடுத்து வைக்கப்படுவதும், காணாமல் போவதும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. அப்பாவி மக்களை சந்தேக நபர்கள் என்ற பெயரில் இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்வதும் அதிகரித்துள்ளன.

அவசரகால சட்டத்தின் கீழான இராணுவ வன்முறைகளால் அச்சமடைந்த தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்று வருகின்றனர். பெருந்தொகையானோர் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</span>

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

Print this item