| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 172 online users. » 0 Member(s) | 169 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க |
|
Posted by: மேகநாதன் - 01-19-2006, 02:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க </b>
சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்றச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமும் நாடாளுமன்ற செயலாளர் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும் அத்தகைய கடிதம் கிடைக்கவில்லை என்று தேர்தல் செயலகம் தெரிவித்திருந்தது.
அதனால் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதற்கு நேற்று முன்தினம் நடைபெற்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் மாநாட்டில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
முன் அனுமதியின்றி 3 மாதங்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாத எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி உள்ளது என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடென்றும் அந்த நிலைப்பாட்டிலிருந்தே அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் ஆராயப்படும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
|
|
|
| உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் |
|
Posted by: நர்மதா - 01-19-2006, 01:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே புலிகளின் விருப்பம்'
எங்களுக்கும் இராஜதந்திரம், புவிசார் அரசியல் பற்றி நன்கு தெரியும்
கா.வே.பாலகுமாரன்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக கடந்த சனிக்கிழமை புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;
விடுதலைப் போராட்டம் என்பது சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே.
எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் கரு, அடிப்படை ரீதியான செயற்பாடு குடியேற்றவாத காலத்தில் உருவாக்கப்பட்டு பனிப்போர் காலத்திலே வளர்ச்சியடைந்து தற்போதைய புதிய உலக ஒழுங்குக்குள்ளும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஒரு வித்தியாசத் தன்மையை நீங்கள் பார்க்கலாம். எந்த ஒரு நிலையிலும் நாங்கள் ஒரு பக்கச் சார்பெடுக்காமல் விடுதலைச் சார்போடு செயற்பட்டிருக்கிறோம். ஒரு கால கட்டத்தில் இந்தியச் சார்பாக நாங்கள் செயற்பட்டதாக தோற்றப்பாடு இருந்த போதும் கூட அதுவும் அவ்வாறாக இல்லை என்பது விரைவில் நிரூபிக்கப்பட்டது.
இன்று சர்வதேச சூழ்நிலையில் எங்களது நிலைப்பாடு தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஜே.ஆர்., அமெரிக்கா என்பக்கம் என்று சொன்னார். அதன் பின்னர் சந்திரிகா, இந்தியா என்பக்கம் என்று சொன்னார். இப்போது மகிந்தர் தான் யார் பக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என எல்லோரையும் தன் பக்கம் எனச் சொல்லிக் கொண்டு அந்த முயற்சியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சில அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கொழும்பில் உள்ள சில இனவாதப் பத்திரிகைகள் அவற்றை பாராட்டி புகழ்வதையும் நாங்கள் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
உதாரணமாக, ஐலன்ட் பத்திரிகையின் தலைப்பிலே அமெரிக்க தூதுவரின் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டும் வரவேற்பும் கொடுக்கப்பட்டிருந்ததை நாம் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இது தொடர்பாக அரசியல் எதுவும் பேச விரும்பாத போதும் சில கருத்துகளை முன் வைக்கலாம் என நினைக்கின்றோம்.
அண்மையில், ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி இங்கு வந்து சென்றதற்குப் பின்னால் அமெரிக்காவின் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட்டும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடம் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது என்று அகாசி சொன்னார்.
இலங்கை இராணுவம் நல்ல வலிமையான இராணுவம் என்றும் அதற்கு பாராட்டும் நற்சான்றிதழையும் ஜெப்ரி லான்ஸ்டெட் வெளியிட்டுள்ளார்.
இது என்னவென்று எங்களுக்குப் புரியாததாக இருந்தாலும் கூட அமெரிக்கா சென்று வந்த மங்கள சமரவீரவுக்கு ஒரு ஆறுதல் பரிசாக, இந்த மாதிரியான அறிக்கையை தூதுவர் ஊடாக அமெரிக்க அரசாங்கம் கொடுத்திருக்க முற்பட்டிருக்கக் கூடும் என்று சிலபேர் கருதுகிறார்கள்.
அது எவ்வாறாக இருந்தாலும் அமெரிக்க தூதுவரின் உரையிலேயே இரண்டு வரிகளை நாங்கள் இங்கே கவனத்தில் கொள்கிறோம்.
1. தங்களுடைய மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கக் கூடிய தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்கிறார். அவர் எங்களைத் தான் கேட்கிறார்.
2. தங்களுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் வாய்ப்புகளையும் புறந்தள்ளும் தலைவர்கள் எவ்வாறானவர்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருண்மிய சரிவு பற்றி இவ்வாறு அவர் சொல்லியிருக்கக் கூடும். ஏனென்றால் அமெரிக்கா மிக நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது.... எங்களுடைய அக்கறை பொருண்மிய நலன் பற்றியது தான் என்று. அதனால் அதைப் பற்றி நாங்கள் கதைக்க விரும்பவில்லை.
அவர்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வரக் காரணம் அண்மையிலே கொழும்பு பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது.
அண்மையிலே வெளிவந்த டெய்லி மிரர் பத்திரிகையில் கூட, முழுப் பங்குச் சந்தையின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 15 பில்லியன் அளவுக்குச் சரிந்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாம் நிச்சயமாக அமெரிக்காவிற்கு ஒரு குழப்பத்தைக் கொடுத்திருக்கக் கூடும்.
அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கையில் பங்குச் சந்தைகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கூடாகவே வணிகங்களை அமெரிக்கா மேற்கொள்வது அறிந்த விடயம். ஆனால், இந்த மாதிரியான சிக்கலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நினைக்கிறோம்.
அமெரிக்காவின் அறிக்கையும் அதற்கு முன்னால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினது அறிக்கையையும் ஒரு நிலைமையை தோற்றுவிப்பதாக சிங்களம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலையை எங்களுடைய மக்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கல் தொடர்பாக உலகம் மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகிறது என்பது மிகத் தெளிவான செய்தியாக இருக்கிறது.
அதனது புவிசார் அரசியல் மற்றும் பொருண்மிய நலனுக்கு இசைவானதாக கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்துக்கு மிகப் பெரிய பாரிய சிக்கல்கள் உலகெங்கும் பரந்து இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் சுருக்கமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏனென்றால் இந்த மாதிரியான செய்திகளுக்கூடாக எங்கள் மக்கள் கூட யோசிக்கலாம். உலகம் ஏதோ புலிகளுக்கு எதிராக திரும்புகிறது. எங்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு உலகம் மாறப் போகிறது என்று அச்சத்தை உருவாக்குவதற்கான ஒரு கருத்தாக இதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இதைச் சொல்லுகிறோம்.
இந்த கருத்துகள் சிங்கள மக்களுக்குச் சொல்வதற்காக மிகப் பெரிய மன்றாட்டத்தின் அடிப்படையில் வெளியாகி இருக்கக் கூடும். உண்மையிலே மகிந்தர் இப்படியான அறிக்கைகளையாவது வெளியிடுங்கள் என்று மன்றாடியிருக்கக் கூடும்.
தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கலில் உலகம் பெரிதாகத் தலையிட முடியாது இருக்கிறது. ஏனென்றால் இதைவிட உலகத்திலே இன்று பல்வேறு சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன.
மிகக் கடைசியாக தோன்றியிருக்கிற பாரிய சிக்கல் ஈரான் பற்றியது.
ஈரானில் உள்ள அணு ஆலைகளிலே மீண்டும் ஐ.நா.வின் அனுமதி இல்லாமல் தங்களுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பைத் தொடர்வதற்கான முடிவை ஈரான் எடுத்திருக்கிறது. உலகத்தினுடைய முக்கியமான சகல முடிவுகளையும் புறந்தள்ளி தன்னுடைய தேவைக்காக அணு ஆயுத எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் செய்வதாகக் கூறி ஐ.நா.சபையால் முத்திரையிடப்பட்ட பொருட்களை எல்லாம் உடைத்துவிட்டு தன்னுடைய உற்பத்தியை செய்ய முயன்று வருகிறது.
மீண்டும் மத்திய கிழக்கிலே இன்னொரு போர் மேகம் சூழக் கூடிய ஆபத்து ஏற்பட்டு பரபரப்பாக பேசப்படுகிற செய்தியை நாங்கள் பார்க்கிறோம்.
அதற்கு அப்பால் மிக முக்கியமான செய்தி இன்று ஈராக்கில் உள்ள நிலைமை.
ஈராக்கின் இன்றைய நிலைமை குறித்து உலகம் மிகப் பெரிய அதிர்ச்சியும் பரபரப்புமாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் மெல்ல மெல்ல பயங்கரவாதத்தைப் பயிற்றுவிக்கக் கூடிய ஏற்றுமதி செய்யக் கூடிய பயிற்றுவிக்கும் கல்விநிறுவனமாக மாறிவிட்டது என்பது ஆய்வியல் ரீதியாக இன்று நிருபிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தச் செய்திகள் அண்மையில் எகிப்திய அறிக்கைக்கு ஊடாக வெளியில் வந்தது.
அமெரிக்காவுக்கு எதிரான முழுமையான சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கைக்கொள்ளக் கூடிய அவர்கள் சொல்கிற சொற்களுக் கூடாக சொல்வதனால் இஸ்லாமியப் போராளிகளைப் பயிற்றுவிக்கக் கூடிய ஒரு தளமாக ஆப்கானை விட ஈராக் மாறிவிட்டது என்று அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்திருக்கிறது.
ஈராக்கில் உள்ளது மிகத் திறமான நகர கெரில்லாச் செயற்பாட்டுக்குரிய போராட்டக் களமாக ஈராக் மாறிவிட்டது. இப்படியான களம் ஒன்றைச் செலுத்துவதற்கு ஐரோப்பிய நகரம் ஒன்று மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது என்றும் பதுங்கு வீடுகளில் இருந்து கொண்டு ஆயுதங்களைக் கடத்திச் சென்று பாதுகாப்புப் படையினர் கண்ணுக்கு முன்னாலே வெடிகுண்டுச் சம்பவங்களையும் பல்வேறு முக்கிய பயங்கரவாதச் செயற்பாடுகளையும் நகரத்துக்கு ஊடாக செய்யக் கூடிய நிலை தோன்றியிருப்பதாகவும் அதற்கு ஈராக் ஒரு பொருத்தமான இடமாக மாறிவிட்டதாக சொல்லக் கூடிய அபாயகரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஈராக்கில் இன்று நாள் தோறும் நடக்கின்ற செய்திகள் எல்லாமே ஈராக் முழுமையாக போராளிக் குழுக்களை ஏற்றுமதி செய்யக் கூடிய பயிற்றுவிக்கக் கூடிய களமாகத் தான் இருக்கிறது.
ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு புஷ் மற்றும் பிளயரின் செல்வாக்கு தங்கள் தாயகப் பகுதிகளில் மிக மோசமாக கீழிறங்கி அவர்களது எதிர்காலமே சிக்கலாகி மாறி இருக்கிறது.
இந்த வேளையில் தான் எங்களுடைய பிரச்சினை தொடர்பாக மகிந்தர், அலறிப் பதறிக் கொண்டு திரிவதை அவர்கள் பெரிதாக எண்ணுவதற்கில்லை என்று ஓரளவுக்கு கணிப்பாக நாம் கருதுகிறோம்.
இவற்றை விட மத்திய ஆசியா என்கிற ஐந்து நாடுகளில் உள்ள வளங்களைச் சுரண்டுவதற்காக அமெரிக்கா படுகிற பாடு. அவைகள் எல்லாம் சோவியத்தின் ஒரு பகுதிகளாக இருந்து பிரிந்து போனவை. இன்று சோவியத் ரஷ்யா தோல்வியுற்ற அந்த சம்பவத்தை 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வரலாற்றுப் பிறழ்வு, தவறு என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறுகிறார்.
அதேவேளை, தஜிஸ்கிஸ்தான், கஜகிஸ்தான் போன்ற இடங்களில் அமெரிக்கா தலையிட்டு கஸ்பியன் கார்டன் என்ற திட்டத்தை முன்வைத்து அந்த இடங்களிலே தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சீனாவுக்குத் தடுப்புச் சுவராக உருவாக்கி அந்த இடத்திலே மையப் படைகளை நகர்த்துவதற்கான புதிய திட்டங்களைச் செயற்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
அங்கே மிகப் பெரிய குழப்பங்களும் பிரச்சினைகளும் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக ரீதியான செயற்பாட்டை நாங்கள் அமைதியாகக் கொண்டு வர விரும்புகிறோம் என்று அமெரிக்கா சொல்லுகிறது.
இப்படியான ஒரு வித்தியாசமான உலக ஒழுங்கிலே நாம் வாழ்கிறோம். அந்தந்த நாடுகளிலே உள்ள சிக்கல்கள் எல்லாம் ஒரு முக்கியமான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் எங்களுடைய தமிழீழச் சிக்கலும் உலகத்தின் முன்னிலையில் வந்திருக்கிறது.
அந்த வகையில் பார்த்தால், பிராந்திய ரீதியாகக் கூட இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் வலுவிழந்து காணப்படுகின்றன.
இந்துத்துவா தீவிரவாதத்தின் வெறியால் பி.ஜே.பி. கட்சி துண்டு துண்டாகச் சிதறிக் கொண்டு இருக்கிறது.
அதேபோல் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் மிக வலுவிழந்தே உள்ளது. வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசமோ, பீகாரோ இன்று காங்கிரஸுக்கு மாறானவர்களின் கையில் இருக்கிறது.
தமிழீழச் சிக்கலை முன்னிலைப்படுத்தி மகிந்தர் என்னதான் பாடுபட்டாலும் அதைக் கணக்கிலெடுப்பதற்கான ஒரு புறநிலைச் சூழல் உலகத்தில் கிடையாது. இந்த வருடத்தின் தொடக்கத்திலே இருந்து நீண்டு போகும் இந்த ஆண்டில் உலகம் செயலற்று இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
இப்படியான நிலையில் தவறான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், தவறான குழுக்களின் துணையோடு களமிறங்கி தவறான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் மகிந்தர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமான சர்வதேச சூழ்நிலையை எமது செயற்பாட்டுக்கூடாக உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்ல முடியும்.
ஆகவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கும் இராஜதந்திரம் தெரியும். நாங்களும் புவிசார் அரசியல் பற்றி அறியமுடியும். எங்களுக்கும் சாதகமான சூழ்நிலை இருப்பது தெளிவான செய்தியாக இருக்கிறது.
1999 ஆம் ஆண்டு ரைம்ஸ் சஞ்சிகையில் ஜோகனா மைக்கேரியல் எழுதிய கட்டுரையில் இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.
"இலங்கையில் உள்ள தமிழ்ப் புலிகளே! உங்கள் நேரம் இனிமேல்தான் வர இருக்கிறது" என்று எழுதியிருக்கிறார்.
இதைச் சொல்வதற்கான காரணம் தலைநகரான வாஷிங்டனிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் தூரம் முக்கியம்.
இன்று ஆப்கானை, துருக்கியை அண்டிய ஆசிய ஐரோப்பிய பகுதிகள், கிழக்கு ஆசிய பகுதிகள் தொடர்பான சிக்கல்கள் எல்லாவற்றையும் முன்னிலைப்படுத்தி நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையில் இந்த சர்வதேசத்தின் தலையீடு என்பது ஒரு அளவிலே தான் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியும் என்பது தவிர்க்க இயலாத நியதி.
அதன் காரணமாகத்தான் மகிந்தர் போன்றவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டுக் கருத்துகளைச் சொன்னாலும் கூட அந்தக் கருத்துகள் எடுபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
ஆகவே உலகம் எம் பக்கம் என்று நாம் சொல்லவில்லை. உண்மையின் பக்கம் உலகம் நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையின் பக்கம் நிற்காவிட்டாலும் இந்த பிராந்தியத்திலே நிற்க வேண்டிய அவசியம் என்ன என்று உலகம் தேட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.
எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினது செயற்பாடு காரணமாக, எங்களுடைய கருத்துகளுக்கூடாக நாங்கள் செயற்படும்போது எங்களுடைய மக்களுடைய கருத்துகளை முன்னிலைப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
அந்த வகையில் மூதூரிலே நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் கடைசியான வரிகளை உங்களுக்கு இங்கே நான் முன்வைக்க விரும்புகிறேன்.
"இனியும் என்ன யோசிக்க இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை நுழைப்பது என்பது. சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம்" என்று அந்தத் தொடர் அற்புதமாக எழுதப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள செய்தி என்னவெனில் "சாவுக்குள் வாழ்வை நாங்கள் நுழைக்கிறோம்?" இதைத்தான் நாங்கள் உலகுக்குச் சொல்லுகிறோம்.
நாங்கள் எந்தப் பயங்கரவாதச் செயலையும் செய்யவுமில்லை. எவருக்கும் எதிராக நாங்கள் போரைத் தொடங்கவும் இல்லை. நாங்கள் எங்கள் சாவிலிருந்து எங்களைக் காப்பதற்காக வாழ்வை அதற்குள் அமைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் அல்லாமல் வேறு எதுவும் கிடையாது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் உணர வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக கோருகிறோம்.
thinakural
|
|
|
| திமுகவில் சேருகிறாரா விஜய்? |
|
Posted by: Mathan - 01-19-2006, 01:09 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (17)
|
 |
திமுகவில் சேருகிறாரா விஜய்?
<img src='http://img43.imageshack.us/img43/4866/vijayh4004cb.jpg' border='0' alt='user posted image'>
அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பொதுவாக தேசிய அளவில் பிரபலமான தமிழ்க் கலைஞர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் டெல்லிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜய் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் தயாநிதி மாறன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாநிதி மாறனும், விஜய்யும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றும் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. வருமான வரி சோதனை, தயாநிதி மாறனுடன் டிவி பேட்டி, பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆகியவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து விஜய் திமுகவில் சேரப் போகிறார், வருமான வரி சோதனைகளிலிருந்து தப்பிக்க பேட்ச்அப் நடந்து விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.
மேலும், விஜய் நடித்த சச்சின் படத்தை வாங்குவது தொடர்பாக சன் டிவிக்கும், விஜய் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சச்சின் படத்தையே சன் டிவி புறக்கணித்தது. சச்சின் படம் குறித்த விளம்பரமோ அல்லது பாடல் காட்சிகளோ, படக் காட்சிகளோ சன் டிவியில் இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு விஜய்யை ஒதுக்கி வைத்தது சன் டிவி.
இந் நிலையில் அத்தனைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தயாநிதி மாறன் மூலமாக சன் டிவியுடன் விஜய் சமரசம் பேசியிருக்கலாம், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய்யை தயாநிதி மாறன் அழைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டன.
ஆனால் இதையெல்லாம் விஜய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஏபிசிடி கூட தெரியாது. நான் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த விசேஷமும் இல்லை.
பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் கலந்து கொண்டேன். இதை பெருமையாகவே உணர்கிறேன். இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக கூறுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜய்.
Thats Tamil
|
|
|
| இந்தியாவில் சினிமாவினால்... |
|
Posted by: Danklas - 01-19-2006, 12:03 PM - Forum: சினிமா
- Replies (28)
|
 |
கள நண்பர்களே, அதிலும் குறிப்பாக இந்திய நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு படம் வெளியானால் அந்த படம் வசூலில் சாதனை எண்டு வரும் செய்திகள்தான் அதிகம், ஆனால் படம் ஆக கூட 3 மாதங்களுக்கு மிஞ்சி ஓடாது, உதாரணத்துக்கு சந்திரமுகி படம் வந்தது அது வசூலில் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை எண்டு சொன்னார்கள், அதன் பிறகு விஜயின் படங்கள் திருப்பாச்சி, கஜினி, மன்மதன் என்று பல படங்கள் ஒவ்வொரு மாதமும் றிலிஸ் ஆகிக்கொண்டு இருக்க படமும் ஹிட் ஆகி, பணத்தை வாரி இறைக்கின்றது, இந்த பணம் எப்படி வருகினறது? இந்தியாவில் இருப்பவர்கள் சினிமாவை நம்பி வாழ்கின்றார்களா? அல்லது அவர்கள் சினிமாவுக்கு அடிமையாகிவிட்டார்களா? இதைப்பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்,,
மு.கு: இந்த கருத்துப்பிரிவு வீன் சச்சரவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கவில்லை...
|
|
|
| ஒரு சந்தேகம் |
|
Posted by: Luckyluke - 01-19-2006, 11:09 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (12)
|
 |
பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்...
ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது...
அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன?
|
|
|
| No Aryan Invasion---New and recent genetic proof. |
|
Posted by: rajathiraja - 01-19-2006, 06:29 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (128)
|
 |
Received July 26, 2005; accepted for publication November 3, 2005; electronically published December 16, 2005.Although considerable cultural impact on social hierarchy and language in South Asia is attributable to the arrival of nomadic Central Asian pastoralists, genetic data (mitochondrial and Y chromosomal) have yielded dramatically conflicting inferences on the genetic origins of tribes and castes of South Asia. We sought to resolve this conflict, using high-resolution data on 69 informative Y-chromosome binary markers and 10 microsatellite markers from a large set of geographically, socially, and linguistically representative ethnic groups of South Asia. We found that the influence of Central Asia on the pre-existing gene pool was minor. The ages of accumulated microsatellite variation in the majority of Indian haplogroups exceed 10,000-15,000 years, which attests to the antiquity of regional differentiation. Therefore, our data do not support models that invoke a pronounced recent genetic input from Central Asia to explain the observed genetic variation in South Asia. R1a1 and R2 haplogroups indicate demographic complexity that is inconsistent with a recent single history. Associated microsatellite analyses of the high-frequency R1a1 haplogroup chromosomes indicate independent recent histories of the Indus Valley and the peninsular Indian region. Our data are also more consistent with a peninsular origin of Dravidian speakers than a source with proximity to the Indus and with significant genetic input resulting from demic diffusion associated with agriculture. Our results underscore the importance of marker ascertainment for distinguishing phylogenetic terminal branches from basal nodes when attributing ancestral composition and temporality to either indigenous or exogenous sources. Our reappraisal indicates that pre-Holocene and Holocene-era not Indo- Europeanexpansions have shaped the distinctive South Asian Y-chromosome landscape.
http://dienekes.blogspot.com/2005/11/new-p...chromosome.html
|
|
|
|