| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 287 online users. » 0 Member(s) | 284 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,286
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| காந்தள்... செம்பகம்... சிறுத்தை... |
|
Posted by: இளைஞன் - 01-21-2006, 12:25 AM - Forum: தமிழீழம்
- Replies (11)
|
 |
அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்!
அரித்ரா
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2a.jpg' border='0' alt='user posted image'>
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா!
92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த வழக் கறிஞர் துரைசாமியின் முயற்சியால் சமீபத்தில் நீதிமன்றம் அரித்ராவைத் தமிழகம் அழைத்து வர அனுமதி வழங்கியது. நீண்ட போராட்டத் துக்குப் பிறகு சிறையில் இருக்கும் தன் அம்மா& அப்பாவைச் சந்தித்தார் அரித்ரா!
நளினி
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2.jpg' border='0' alt='user posted image'>
இந்த நெகிழ்ச்சியான கதை ஒரு பக்கமிருக்க, இன்னொரு புறம் ஈழம் சிவக்கிறது மறுபடியும்!
முப்பது ஆண்டு களாகத் தொடரும் ஆயுதப் போராட்டத்தில், இப்போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டால், இதுவே இறுதிப் போராக இருக்கும்!
ஈழத்துக் கடற்கரை யில் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாடும் குழந்தைகளின் கால்களில் மீண்டும் சடலங்கள் இடறும் சூழல் கவிகிறது. நான்காண்டு கால அமைதி முடிவுக்கு வந்து, இப்போது மீண்டும் தமிழர்கள் மீதான வன்முறை தொடங்கியிருக்கிறது. மாணவர்கள், இளம் பெண்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்புத் திட்டத்தை பேச்சுவார்த்தை காலத்தில் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, இப்போது பொய் நாடகம் ஆடுகிறது. ஒற்றையாட்சி முறையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் ஆதரவை நாடி வந்தால், மீண்டும் ஒரு முறை இந்தியா ஏமாந்துவிடக் கூடாது. இலங்கை அரசுக்கு ராணுவ உதவி இந்தியா செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று நம்புகிறோம்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் & பிரான்ஸில் வாழும் ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p3.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அரசியல் விமர்சகர், ÔÔஈழத் தமிழர்கள் இடைப்பட்ட இந்த நான்கு வருட யுத்த அமைதி காலத்தில் புலிகளுடன் சேர்ந்து தங்களுக்கென அறிவிக்கப்படாத தாய் தேசமான ஈழத்தைக் கிட்டத்தட்டக் கட்டியெழுப்பி விட்டனர்" என்கிறார்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ நடுவப் பணியகம், தமிழீழக் காவல் துறை, தமிழீழ வைப்பகம்(வங்கி), தமிழீழ நீதிமன்றம், தமிழீழச் சுங்கத் துறை, சட்டக் கல்லூரி, கல்வித் துறை என்று துறைவாரியாகப் பிரித்து, சீரான நிர்வாகத்துடன் புலிகளின் ஆட்சி நடக்கிறது. தேசிய மலராக காந்தள் மலரையும், தேசியப் பறவை யாக செண்பகப் பறவையையும், தேசிய விலங்காக சிறுத்தைப் புலியை யும் ஏற்கெனவே அறிவித்த புலிகள், சமீபத்தில் தங்கள் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சட்ட வரைவாக வெளியிட்டு உள்ளனர்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4a.jpg' border='0' alt='user posted image'>
முல்லைத் தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி என்று ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை இயக்குகிறார்கள். விவசாயத்துக்கும் கல்விக்கும் மானியங் களை வழங்கும் அளவு வளர்ந்திருக்கிறார்கள்.
போராளிகள்! முறையான போர்ப் பயிற்சியோடு ஈழம் பற்றிய தத்துவப் படிப்பும் கட்டாயம் படித்தாக வேண்டும். வெறும் ஆயுதப் போராளி களாக மட்டும் இளைஞர்களை வைத்திருக்காமல், அரசியல் விஞ்ஞானத்தையும் புலிகளின் கல்லூரி கற்றுக்கொடுக்கிறது. தமிழீழக் குற்றவியல் சட்டம் இப்போதே நடைமுறையில் இருக்கிறதாம்!
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6a.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர, கஸ்டம்ஸ் துறையையும் ஏற்படுத்தி, ஈழத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரிகளை வகுத்து அதை வருவாய்ப் பிரிவின் பொறுப்பில் விட்டிருக்கிறார்கள். யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாடாக தனித்து இயங்கும் வல்லமையைப் பெற்றுவிட்ட புலிகள், சர்வதேச சமூகத்தின் பார்வைக்காகத்தான் பொறுமை காப்பதாகத் தெரிகிறது.
இலங்கை அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தெரியும் சண்டையா, சமாதானமா என்பது! இதில் இந்தியாவின் நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று இரு தரப்புமே நம்புகின்றன.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6.jpg' border='0' alt='user posted image'>
ஈழத்தில் மீண்டும் அமைதி முயற்சியைத் தொடங்கும்விதமாக நார்வேயின் தூதர் எரிக் சோல்ஹேய்ம் மீண்டும் ஈழத்துக்கு வருகிறார். அவர் வந்து திரும்பிய பிறகு, விடுதலைப் புலிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடு வார்கள் என்கிறார்கள்.
அது சுதந்திரத் தமிழீழப் பிரகடன மாகவும் இருக்கலாம்!
<i>நன்றி: ஆனந்தவிகடன்
டி. அருள் எழிலன்
படம்: கே. ராஜசேகரன்</i>
|
|
|
| ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி |
|
Posted by: மேகநாதன் - 01-20-2006, 07:47 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (2)
|
 |
<span style='color:green'><b>ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! </b>
கலாநிதி செ.யோகராசா
ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (ஐஐ) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூகஇ யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (ஐஐஐ) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.
நிலைமை மேற்கூறியவாறாக அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு: ''ஆனந்தன்'' ''சுயா'') இனங்காட்டுகின்றன. இவர்களது படைப்புக்கள் சமகால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக இத்தகையவருள் ஒருவரான ''ஆனந்தன்'' 1939இலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப்பிரச்சினையின் கொடூரத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண் வாசனையோடு முதன் முதல் எழுதியவர் ~ஆனந்தன்| எனலாம். ஆக இங்கு நாம் நினைவுகூற வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன் சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவி வந்துள்ளது என்பதே!
இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சி ஒன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ.நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. (எ-டு: திரு.இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும் (கே.கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்றுவரையான ஆய்வின்படி) கூறமுடியாதுள்ளது.
இனி நாற்பதுகளுக்கு வருவோம். மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்கு உட்பட வேண்டியவராகின்றனர்.
இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் ~ஆனந்தன்| முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ.செ.முருகானந்தன்இ வரதர் அ.ந.கந்தசாமி சொக்கன் தாழையடி சபாரெத்தினம் கனகசெந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு:கு.பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைக@டாக தமிழ்ச் சமூகம் நவீனநாகரீகததிற்கு முகம் கொடுப்பதும் (நவீன நாகரீகத்தின் குறியீடாக மோட்டார் வண்டி வருகைஇ தேர்தல் முறை அரச உத்தியோகம்இ நகர உருவாக்கம்இ பணத்தின் ஆதிக்கம்) சமகால சமூகப் பிரச்சினைகளும் (சாதிஇ சீதனம்இ கோயில்வரிஇ சிறுகதைஇ பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது.
இதுவரைக் கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பாண ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தம் எதுவுமில்லை. உண்மைநிலை வேறு. ஈழத்தில் நவீனத் தன்மை (ஆழனயசன்வைல) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை. வௌ;வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீன தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது.
அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம்பெற்ற அத்தகைய ஆய்வுகளிலேயே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின் அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தினரல்லர். நிற்கஇ நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்;சி கால்கொள்கிறது. முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான் சா.இ.கமலநாதன்)இ சிவா (வா.சிவசுப்பிரமணியம் ஆசிரியர்) புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளையே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம்இ பித்தன் ஆகியோரும் சற்றுப்பின் அப்துஸ்ஸமதுஇ செ.இராசதுரைஇ எஸ்.பொ.நவம்இ அன்புமணிஇ தங்கன்இ ஆ.பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேற்குறித்த மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளருள் பித்தன்இ எஸ்.பொ.நீங்கலாக ஏனையோரது படைப்புக்களை நுனுகி நோக்கும் போது அவற்றிலே இரு வேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று ''கல்கிஇ பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி இவ்விருவகைப் பாணி. சார்ந்த படைப்புக்களிலும் தமிழக இந்தியச் சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னனியிலே எழுதினாலும்கூட அவை (ஈழத்துப் பத்திரிகை காரரினாலே'') மாற்றத்துக்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ்ஸமதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன.
''அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள்இ கல்முனைஇ திருகோணமலை என்றும் நூர்ஜகானின் தந்தை போடியார் இப்றாஹ{ம் என்றும் மற்றும் காரியாலயம் லிகிதர் மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டுஇ விந்தியமலை என்றும் ஜமீன்தார்; இப்றாஹ{ம் என்றும் ஆபிஸ் குமாஸ்தாஇ ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன'' இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948 அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994ல் வெளிவந்தமை காரணமாக ஆய்வாளரது கவனத்திற்கு உட்படுத்தப்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வுஇ பண்பாடு 15இ1997 இதழில் இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது) பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டிவை.
(அ.)மட்டக்களப்பு பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மைஇவர் கதைக@டாக சிறப்பாக வெளிப்படுகின்றது. (ஆ).முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் முதலாக இவர் கதைகழூடாக தத்துரூபமாகவும்இ துணிகரமான முறையிலும் (எ-டு: பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன) (இ) (முஸ்லிம்) பெண்களது மென்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக்களப்பிலே பித்தனது எழுத்துக்களின் ஊடாகவே புலப்படுகின்றது எனலாம்.
எஸ்.பொ.ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண் மணம் கமழ தமது சிறுகதைகள் ஊடாகப் பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர்.
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே சிறுகதை உலகினுள் பிரவேசிக்கின்றது. வ.அ.இராசரெத்தினத்தினூடாக முதன் முதலாக மூதூர்க் கிராம விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது. தவிர பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படும் போதுதான் இக்கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என்று கருதுகின்றேன்.
(அ) ~ஈழகேசரி|யில் லலிதாஇ சாவித்திரிஇ ராஜேஸ்வரிஇ வசந்தாஇ லேகினிஇ பிறேமாஇ கமலம்இ கோணேசப்பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவர்? அவர்கள் எழுதியவை யாவை?
(ஆ).திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ.முருகானந்தம் நடத்திய ~எரிமலை| சிறுசஞ்சிகையில் சிறுகதை எழுதியோர் யாவர்?
(இ).நாற்பதுகளின் இறுதியிலே மண்டூரிலிருந்து வெளியான ~பாரதி| சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்கு பற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ்.எம்.ராஜுஇ பாஞ்சாலிஇ கிரிஜா என்போர் யாவர்?
ஈ. நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன.
அயல்வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும்இ பொருந்தா மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதியதாகக் கூறப்படுகின்றது.
இவை பற்றிய விபரம்?
எவ்வாறாயினும்இ ஐம்பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை மேற் கூறியவற்றிலிருந்து புலப்படுத்துகின்றன. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது?
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்இ
(ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும்இ
(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்புஇ திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும்இ
(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.
ஆயினும் ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு.தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நினைவு கூரத்தக்கது. </span>
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
|
|
|
| சிறுபான்மையினருக்கான குரல். |
|
Posted by: kuruvikal - 01-20-2006, 07:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்குள்ளாகும் உலக நாடுகளின் பட்டியலில் இராக் முதலிடம்</b>
வன்முறை, அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களால் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் நாடுகளின் பட்டியலில் இராக் முதலிடம் வகிக்கிறது.
உலகில் சிறுபான்மையினரின் நிலை என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வறிக்கையின் பிரகாரம் உலகில் நடைபெறும் ஆயுத மோதல்கள் வன்முறை ஆகியவற்றில் முக்கல்வாசி குறிப்பிட்ட மத மற்றும் இனக் குழுக்களை இலக்குவைத்து நடத்தப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
சர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு நடத்தியுள்ள இந்த ஆய்வானது,[b] அமெரிக்க தலைமையிலான பயங்கரவதத்திற்கெதிரான யுத்தமும் உலகின் பல பாகங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்களை உருவாக்கிவருவதாக குற்றம்சாட்டியுள்ளது
மத விவகாரங்களுக்கான எமது செய்தியாளர் ஜேன் லிட்டில் தரும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/
பிபிசி தமிழ்.
|
|
|
| சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல் |
|
Posted by: நர்மதா - 01-20-2006, 06:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்
சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார்.
மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சு நடத்த முன்வருவது, சர்வதேசத்தின் அழுத்தத்தினால்தான் என்றும் இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
புதினம்
|
|
|
| போரைத் தொடங்க ஆணையிடுங்கள் |
|
Posted by: நர்மதா - 01-20-2006, 06:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
போரைத் தொடங்க ஆணையிடுங்கள்: தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு பிரகடனம் வேண்டுகோள்!
எதிரி வலிந்து போரைத் தொடங்க முனைகின்ற நிலையில் இனியும் பொறுத்திருக்காமல் போரைத் தொடங்க ஆணையிடுங்கள் என்று தமிழீழத் தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு கண்டன எழுச்சிப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன எழுச்சி நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரகடன விவரம்:
சிறிலங்கா அரசு எம்மீது வலிந்து போர் தொடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. சர்வதேசத்தின் மத்தியில் எமது இனத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கிறது. தற்போதைய அரசும், இனவெறிக் கூட்டமும் எமது உயிரினும் மேலான விடுதலையைப் பயங்கரவாதமாக்க முனைந்து செயற்படுகின்றது.
நாளுக்கு நாள் எமது உடன்பிறப்புக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். மென்போக்குக் கொண்ட தமிழ் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சாதாரண தொழிலாளிகள் அனைவரும் தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காகக் கோழைத்தனமாகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இன்றைய சமாதான சூழலை நன்கு பயன்படுத்தி சர்வதேசம் எங்கும் தமிழினத்திற்கு எதிரான நாகரீகமற்ற கபடத்தனமான கருத்துகளை முன்னெடுத்துச் செல்வதுடன் எம்மினத்தைச் சீண்டிப் பார்க்கவும் முனைகிறது சிறிலங்கா அரசு.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை மட்டும் நோர்வே நாடு வழங்கினால் போதும். அதன் தலைநகரில் பேச்சுக்கள் நடைபெறக் கூடாது எனவும், சர்வதேச நாடுகள் எல்லாம் எம் இனத்தின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளக் கூடாது என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது சிறிலங்கா அரசு.
எமது தமிழ்ப் பெண்கள், மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு நடுவீதிகளிலும் பாழ் கிணறுகளிலும் தூக்கி வீசப்படுகின்றனர். இன்றைய சமாதானச் சூழலில் புங்குடுதீவில் சகோதரி தர்சினிக்கு நடந்த அவலமும் மன்னாரில் பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோரையும் சேர்த்து எரிக்கப்பட்ட கொடுமையையும் எண்ணிப் பார்க்கின்ற போது எம் நெஞ்சங்கள் வெடிக்கின்றன.
நீண்டகாலமாக தமிழ் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம் காட்டி வருவதே சிங்கள இனவாத அரசுகளின் இனவெறிப் போக்குகளாகும். இப்படியான பாரபட்சத்துக்கு சவாலுடன் முகம் கொடுத்து கல்வியில் வெற்றி காணும் தமிழ் மாணவர் சமூகத்தை சிங்கள இன வெறியர்கள் பொறுக்க முடியாமல் நயவஞ்சகமாகக் கொலை செய்து வருகின்றனர்.
கடந்த 2002- பெப்ரவரி 23 ஆம் நாள் கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இன்று வரை நிராயுதபாணிகளாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான எமது தாயகப் பிரதேசத்திற்குள் அரசியல் பணியாற்றச் சென்ற 200-க்கும் மேற்பட்ட போராளிகளும் 500-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களும் சிங்கள இனவெறியர்களால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நெஞ்சங்களை உலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தாயகமெங்கும் நிழல் யுத்தம் ஒன்றை சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது.
வீரம் விளை நிலத்தின் வித்துக்களே!
எம் இனிய உறவுகளே! நாம் பொறுமை காத்தது போதும்! பொங்கியெழுவோம்!!
சர்வதேச சமூகமே! சிறிலங்கா பேரினவாத அரசின் கபட நடவடிக்கைகளை நன்கு விளங்கியும் நீ மௌனம் சாதிப்பது ஏன்?
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை உடன்நடைபெற அழுத்தம் கொடு!
எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரி!
இல்லையேல்...!
காலம் காலமாக அழிந்து போய் அழிவின் விளிம்பில் நிற்கும் எம் இனம் தனது எதிர்கால வாழ்விற்கும் நிலையான இருப்புக்கும் தேசியத் தலைவரின் வழிப்படுத்தலில் பொங்கியெழுவதைத் தவிர்க்க முடியாது.
எமது தமிழீழத் தேசியத் தலைவரின் மேலான கவனத்திற்கு...:
இன்றைய கண்டன எழுச்சிப் பேரணி மூலம் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியம் தங்களுக்குத் தயவாக விடுக்கும் அவசர வேண்டுகோ:
மீண்டும் போரை எதிரி வலிந்து தொடங்க முனைகின்றான். இனியும் கைகட்டி வாய்பொத்தி பேசா மடந்தைகளாக பொறுத்துக் கொண்டிருந்தது போதும். போரைத் தொடங்க ஆணையிடுங்கள். ஓயாத அலையென புயலாகப் புறப்படும் பொங்கியெழும் மக்கள் படை.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்
என்று அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்
|
|
|
| நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் |
|
Posted by: நர்மதா - 01-20-2006, 06:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்: சிறப்புத்தளபதி நகுலன்
சிறிலங்காவின் அனைத்து படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்திவாய்ந்த படைக்கட்டமைப்புக் கொண்ட நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் என சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இராணுவப் பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
அன்புக்குரிய மக்களே, நாங்கள் கடந்தகால வரலாறுகளை மறந்துவிட முடியாது எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும், எங்களுடைய உண்மையான நிலைப்பாடுகளையும் சர்வதேச சமூகம் எங்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு நீதியாக தீர்க்குமென்று இனியும் கனவு காணமுடியாது.
ஏனெனில் மன்னார்ப் பகுதியில் ஒரு சிறுவனுடன் குடும்பத்திற்கு நடந்த கதியும், யாழ்ப்பாணத்தில் குறுகிய நாட்களுக்குள் அந்த கோரச் சம்பவங்களை கூட தட்டிக்கேட்காத சர்வதேச சமூகம் எமது முழுப்பிரச்சினையில் எவ்வாறு தீர்வுகாணும்? இவ்வாறு நாளுக்கு நாள் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுமைகளை நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டியவர்களாக இன்றைய கால கட்டத்தில் உள்ளோம்.
உங்களுக்குத் தெரியும் இந்த கிளிநொச்சி மண்ணை மீட்டெடுப்பதற்காக எமது போராளிகள் கொடுத்த உயிர் தியாகங்களும் சிந்திய குருதியும் தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் நின்று கதைக்கக்கூடிய நிலை உருவாக்கியது.
அனால் இன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் ஒவ்வொரு நாள் பொழுதுகளும் நிம்மதியாக இல்லை. இன்று உயிருடன் இருப்பானா? நாளைக்கு இருப்பானா? நாளைக்கு சூரிய உதயத்தை பார்ப்பானோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இன்று மக்கள் படையாக பயிற்சி எடுக்க வந்திருக்கும் உங்களிடம் நாங்கள் கேட்பது உங்களின் இராணுவப் பயிற்சியின் ஊடாக நீங்கள் அனைவரும் நாங்கள் பாதுகாத்து நின்ற நீண்ட கிலோமீற்றர் தூரத்தை நீங்கள் வந்து காத்து நிற்பீர்களா இருந்தால் நாங்கள் அதற்கு அப்பால் போய் எமது மண்ணில் தரித்து நிற்கும் சிங்கள காடையரை சுக்குநூறாக்கி எமது தாயகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு காடையருக்கும் சமாதியைக் கட்டுவோம்.
நீங்கள் எங்கள் தலைவரையும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எங்களுடைய தலைவரை வென்று விட வேண்டும் என்பதற்காகவும் அழித்துவிட வேண்டுமென்பதற்காகவும் முயற்சித்தவர்கள். தங்களுடைய இறுதிக்காலத்தில் தமது இயலாமையால் எமது தலைவரைப் புகழ்ந்த வரலாறுகள் உண்டு. இதற்கு இந்தியா கூட விதிவிலக்கல்ல இந்தியாவின் டிக்சிட் தொடக்கம் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் ரத்வத்தை கூட எமது தலைவரை புகழ்பவர்களாகத்தான் உள்ளார்கள். ஏனெனில் தலைவர் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் சிறிலங்கா இராணுவத்திற்கும் சர்வதேசத்திற்கும் தகுந்த பதிலலைக் கொடுத்தார்.
இன்று சிறிலங்கா இராணுவமோ சிறிலங்கா அரசோ விடுதலைப் புலிகளை கடந்த காலப் புலிகளாக கருதுபவர்களாக இருந்தால் அது அவர்களுக்குரிய சாவு மணியாகத்தான் இருக்கும். இந்த 2006 ஆம் ஆண்டிலே நவீன புலிகளால் எந்த ஒரு சிறிலங்கா படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்தி வாய்ந்த படைக்கட்டமைப்பைக் கொண்ட நவீன புலிகளாக நாங்கள் இன்று உருவெடுத்துள்ளோம். இன்று எமது மண்ணில் இருக்கின்ற சிங்களப் படைகளை அழித்தொழிப்பதற்கான அந்த நாட்களை மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள அப்பான எமது தாயக உறவுகளே, நீங்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாதுகாப்பான எமது பகுதிக்குள் வந்து அந்த மண்ணை நீங்கள் வீடுவிப்பீர்களாக இருந்தால் நாங்கள் குறுகிய காலத்திற்குள் அவற்றை மீட்டெடுத்து தரக்கூடிய ஏது நிலையை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாங்கள் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனெனில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் தன்னுடைய இறுதிக்கால கட்டத்திலே தனது ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் பயன்படுத்தி தமது தாயக மண்ணில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கான ஒரு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு தயாராகுகின்ற போது அனைத்து மக்களும் அங்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இவை அனைத்தையும் தலைமை தாங்கி எந்த ஒரு சவாலையும் எதிர்கொண்டு எந்தப் படையையும் வெல்லக்கூடிய எமது தலைவருடைய படைப்பலத்திற்கு நீங்களும் தோள் கொடுப்பீர்களாக மாறுவீர்களாக இருந்தால் எமது இறுதிப் போராட்டத்தின் அந்த உச்ச கட்ட நடவடிக்கை மூலம் நாங்கள் எமது பகுதிகளில் உள்ள சிங்களக் காடையரை வெளியேற்றி எமது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வழிசமைக்க முடியும் எனவும் நகுலன் தெரிவித்தார்.
புதினம்
|
|
|
|