புதிய பதிவுகள்2

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
உலகம் எங்கேயோ போயிட்டுது இப்பத்தான் எங்கடை புலம் பெயர் சனம் நித்திரையால் எழும்பி பார்க்கினம் போல் உள்ளது .

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

3 months 2 weeks ago
சீமான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.தமிழ்நாட்டில் யாரும் வாழலாம் ஆனால் ஆளும் உரிமை தமிழருக்கே வேண்டும் என்கிறார். கேரளாவிலோ>ஆந்திராவிலோ அல்லது தமிழர்கள் பெரும்பானமையாக வாழும்கர்நாடகாவிலோ ஒரு தமிழர் முதல்வராக முடியுமா?இவர்கள் மலையாளிகளாக>தெலுங்கர்களாக>கன்னடர்களாக தமது நிலத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்பொழுது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்திராவிடர்களாக இருக்க வேண்டும். இது தமிழ்களை ஆள்வதற்காக உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டமிட்டு திராவிடர்கள் செய்த செயல்.தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமழைப்படிக்காதே அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதுதான் முற்போக்குவாதமா? அல்லது பெண்கள் தங்கள் கருப்பையை அகற்ற வேண்டும் என்று சொன்னதுதான் முற்போக்குவாதமா?தமிழ்நாட்டின் தெருப்பெயர்களில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்ட மை காயமுன்னமே ஜிகே நாயுடு மேம்பாலம் என்று தங்கள் இனத்தவரின் சாதிப்பெயரை முன்னிபலப்படுத்துவது எந்தவகையான சமூகநீதி? எல்லோரும் இனத்தூய்மைவாதம் பேசும் போது சாதிகளை முன்னிறுத்தும் போது சீமான் மட்டும் இனத்தூய்மைவாதம் பேசுகிறார் என்று எப்படிக் கூறமுடியும்.பிஸேபின் B ரீம் திமுகவின் B ரீம் என்று ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுவதும் வாக்குக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் கட்சி நடத்துபவர் காசுவாங்கி விட்டார் . திமுகவிடம் காசுவாங்கி விட்டார் பிஜேபியிடம் காசு வாங்கி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? சீமான் ஏன் ஒழித்து காசு வாங்க வேண்டும் நேடியாக கூட்டணி பேரம் நடத்தினால் காசும் வரும் தேர்தல் செலவுகளையும் அவர்களே கவனிப்பார்கள்.சீமான் கட்சியினருக்கும் சட்டசபையில் பாராளுமன்றத்திற்குள் துழைவதற்கும் இலகுவாக இருக்கும்.

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

3 months 2 weeks ago
யார் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களை கொத்தடிமைகளாக குத்தகை எடுத்த தொண்டைமானுக்கும், அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு தற்போதைய மாற்றம் குடைச்சல் கொடுக்க தான் செய்யும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
முடிச்சு விட்டாங்கள். இந்தியாவுக்கு இரண்டாவது பாரிய இழப்பு. இந்த உலக கிண்ணம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி ஓட்ட விகிதம் முக்கியமாக போகின்றது.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

3 months 2 weeks ago
நான் நினைக்கிறேன் விஜய் வந்து சீமானின் வாக்கு வங்கியை முன் தள்ளி செய்திருக்கிறார். ஒரு அரசியல் கட்சி, அதன் தலைமை, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதனூடாக எப்படி இருக்க வேண்டும் என்று சீமானின் தலைமை அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் மக்கள் என்பதை உதாரணமாக்கி செல்கிறார். நன்றி வணக்கம் விஜய்.

பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை

3 months 2 weeks ago
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இந்த வருடத்தில் அந்த தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை, ஊட்டச் சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அதில் கவனம் செலுத்தி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். வறுமைக்கும், கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சிறந்த கல்வி திட்டத்தை உறுதி செய்வோம். மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடைவதற்கு அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgnbia9400y3qplpzn52d1sl

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

3 months 2 weeks ago
வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர் Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 04:23 PM வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெற்ற இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொகுதி அங்குரார்ப்பண நிகழ்விலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இந்தியாவின் உதவியுடன் செயல்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்படுகிறது. இது இந்தியா – இலங்கை உறவின் ஆழத்தையும் நட்பையும் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் இணைந்து மக்களின் வாழ்க்கை நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளால் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. “சப்கா சாஸ், சப்கா விகாஸ்” (அனைவருடனும் வளர்ச்சி) என்ற மந்திரத்தின் கீழ் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அதேபோல் இலங்கையும் “வேறு ஒரு நாடு, அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இது இரு நாடுகளின் வரலாற்று, கலாச்சார, சமூக பிணைப்புகளின் சின்னமாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பாலமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்றைய திட்டம் — மொத்தம் 14,000 வீடுகள் — அந்த சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டத்தில் 4,000 வீடுகள் நிறைவு பெற்றுள்ளன. 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தபடி, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்று அதில் இரண்டாம் கட்டம் துவங்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 65,000 வீடுகள், ரூ. 64 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தையும் மேம்பட்ட வாழ்க்கையையும் அளிக்கும். வீடுகள் கட்டுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டுவதே இந்தியாவின் நோக்கம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உட்புகுத்தல் போன்ற துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து பணிபுரிகிறது. இதுவரை பல பள்ளிகளுக்கு சயின்ஸ் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து, இந்தியா 2.5 பில்லியன் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன — குறிப்பாக STEM ஆசிரியர் பயிற்சி திட்டம் மூலம் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல், சுகாதார வசதிகள், கல்வி நிறுவன மேம்பாடு, சமூக இணைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிரதமர் மோடி அவர்கள் தனது அண்மைய விஜயத்தின் போது சீகதா அம்மன் ஆலய அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான உதவிகளையும் அறிவித்திருந்தார். இதனால் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் வேகமாக நடைபெறும். இந்தியாவின் உதவி என்பது ஒரு நண்பனின் உதவியல்ல — ஒரு குடும்ப உறுப்பினரின் பொறுப்புணர்வு கொண்ட உதவியாகும். இன்றைய நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய பூர்விகத் தமிழர் சமூகத்துக்கான ஆதரவு எப்போதும் தொடரும். திருவள்ளுவர் கூறியது போல — “விருப்பறாச் சுற்றம் இகயின் அருப்பறா ஆகும் பலவும் தரும்.” அதாவது, உண்மையான பாசமும் நம்பிக்கையும் கொண்ட உறவு பல நன்மைகளை அளிக்கும். அந்த உறவின் அடிப்படையில் தான் இந்தியா–இலங்கை நட்புறவு வேரூன்றி வளர்ந்து வருகிறது. இறுதியாக, நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்கள் புதிய இல்லங்களில் ஒளியையும் நம்பிக்கையையும் காணட்டும் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/227554

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இயன் ஹீலியின் மருமகள், மிச்சல் ஸ்டாக்கின் மனைவி, இன்று போட்டு அடி அடி என்று அடிச்சுவிட்டிருக்கிறா. ஆஸ்லி ஹீலிதான் இன்றைய நாயகி.

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
இல்லாததை இருப்பதாக கனவு காணமுடியாதே அண்ணை! இயற்கையானதை ஏற்றுக்கொள்ளத் தானே வேணும். முழு மனித உலகத்தோரும் ஆபிரிக்க வழித்தோன்றல்களே எனின் உயர்வு தாழ்வு ஏது?

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
இன்று களத்தினை இறுதியாக வந்த பதிப்பிற்குப் புதுப்பித்துள்ளேன். அதில் உள்நுழையும் பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டு உங்களுக்கு சரியாகப் காண்பிக்கவில்லையோ தெரியவில்லை. நான் மூன்று வெவ்வேறு உலாவிகளில் (Chrome, Brave, Firefox) முயற்சிக்கும் போது சரியாகத்தான் காண்பிக்கின்றது. பதிவின் முன் உள்ள புள்ளியினை அழுத்திப்பார்க்கலாம்

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா? அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪 தேசம் நெட் ஜெயபாலனுக்கு ஒரு கொப்பி ரைட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்🤣

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்

3 months 2 weeks ago
திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம் 12 Oct, 2025 | 04:45 PM திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்றும் அவர்கள் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளனவு எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதே வேலை முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று (11) மாலை கைது செய்துள்ளனர். இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் தொடர்ந்தும் போராட்டங்களுடனேயை செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது முன்னுக்கு பின்னுக்கு முரணான கருச்தாக சூரிய மின் சக்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதா இல்லையா தொடர்பான கருத்துக்களையே ஆளும் தரப்பு எம்.பிக்கள் கூறுவருவதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் 800 ஏக்கரில் தற்போது வரைக்கும் 200 ஏக்கரளவில் சூரிய மின் சக்தி திட்டத்துக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப் பகுதியில் உள்ள இரு குளங்களை மூடி இதனை முன்னெடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227548

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

3 months 2 weeks ago
12 Oct, 2025 | 04:32 PM கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227553

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள்

3 months 2 weeks ago
பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்க்கும் திறன் தாலிபனுக்கு இருக்கிறதா? - மோதலுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. 58 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் ஆப்கன் தாலிபன் ராணுவம் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து சனிக்கிழமை இரவு பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் படைகள் 21 ஆப்கன் எல்லைகளைக் கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத பயிற்சி தளங்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட இடங்களை அழித்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். பதில் தாக்குதலில் "200-க்கும் மேற்பட்ட தாலிபன் மற்றும் கூட்டாளி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி வியாழக்கிழமை காபூலுக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீசியதாக அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, வான்வழித் தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் "பாகிஸ்தான் மக்களின் உயிரைப் பாதுகாக்க தேவையானவற்றை நாங்கள் செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்." எனக் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அவர்களின் எல்லை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானிடம் அவர் வலியுறுத்தினார். தாலிபன் ஆட்சிக்கு பிறகான பயங்கர மோதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடக்கும் மிகக் கடுமையான மோதல்களில் ஒன்று இந்த சமீபத்திய மோதல் ஆகும். பாகிஸ்தானுக்குள் தீவிர தாக்குதல்களை நடத்திய தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு, தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதால், இருநாட்டு உறவுகள் படிப்படியாக மோசமடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை தாலிபன் மறுக்கிறது. பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் அமீர் ஜியா, இந்த மோதலை தேவையற்ற மோதல் எனவும் இரு தரப்பின் ராஜதந்திரத்தின் தோல்வி என்றும் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை தாலிபன் அரசு கவனிக்கவில்லை என்றார். ஆனால் பாகிஸ்தான் நீண்ட காலமாக ஒற்றை புள்ளி கோரிக்கையுடனே இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார். "பல தசாப்தங்களாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன்களுக்கான ஆதரவை தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வந்தது" என்று அவர் கூறினார். "கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, நாம் எங்கே தவறு செய்தோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நன்றியற்றவர்கள் என்று அழைப்பது போன்ற கடுமையான மொழியைப் பயன்படுத்துவது பிளவை ஆழப்படுத்தும்." என்றார். ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் டுராண்ட் கோடு எனப்படும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகிரும் டுராண்ட் கோடு. பல மாதங்களாக இருந்த ராஜதந்திர நெருக்கடிக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அமைதியற்ற உறவு மீண்டும் வெளிப்படையான மோதலின் விளிம்பில் வந்து நிற்கிறது என்பதை இந்த சமீபத்திய மோதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2021-ல் தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் அடிக்கடி வெடித்தன. தங்களின் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், TTPயின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் பாகிஸ்தான், தாலிபன்களின் வருகையை முதலில் வரவேற்றது. TTP என்பது ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் சித்தாந்த ரீதியாக இணைந்த ஆனால் பாகிஸ்தான் அரசை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும் குழு ஆகும். மாறி மாறி குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images மாறாக வன்முறை அதிகரித்துள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட TTP தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆப்கன் அதிகாரிகள், தங்களுடைய நிலப்பரப்பில் இருந்து வீரர்கள் செயல்பட அனுமதி அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சொல்லப்படுபவை என கூறுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், டுராண்ட் கோட்டின் வேலி அமைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சாமன், குர்ரம் மற்றும் பஜௌர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய தூப்பாக்கிச் சூடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் அவ்வப்போது முக்கிய வர்த்தகங்கள் மூடப்படுகின்றன. பரஸ்பர அவநம்பிக்கை, பொருளாதார நெருக்கடி மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறை இல்லாமை ஆகியவை ஒரு காலத்தில் செல்வாக்குக்கான ரகசியப் போராட்டமாக இருந்த ஒன்றை வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க நாடுகளிடம் பாகிஸ்தான் உதவியை நாடலாம் என்கிறார் ஜியா இஸ்லாமாபாத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளரான இம்தியாஸ் குல், இந்த வன்முறை மாதக் கணக்கில் நடந்த பதற்றத்தின் தர்க்கரீதியான விளைவு என்கிறார். "பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வரும் TTP-க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் ஆட்சி மறுப்பது, பாகிஸ்தானுக்கு குறைந்த வாய்ப்புகளையே அளிக்கிறது" என்று அவர் கூறினார். "தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் ராஜதந்திர உதவியை நாட வேண்டும்" என்று ஜியா யோசனை கூறினார். பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இரு நாடுகளில் எந்த நாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலும், இருநாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த நெருக்கடி, பிரச்னைக்கு சரியான காரணத்தை உருவாக்கியுள்ளது" வாஷிங்டன் டிசியில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். மேலும் "பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தாலிபன்களுக்கு இல்லை" என்றார். "இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் பொதுமக்களின் கோபத்தைத் தணித்தவுடன் அவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது." என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9303v350qdo

கொழும்புப் பல்கலைக்கழக புற்றுநோய்க்கான மருந்து': இலங்கை புற்றுநோயியல் கல்லூரி கவலை

3 months 2 weeks ago
கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். கண்டனம் அக்கடிதத்தில், "இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து கல்லூரி மிகவும் கவலை கொள்கிறது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவின் தயாரிப்பு 'ஊட்டச்சத்து உணவுப் பொருள்' என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர யுக்தி குறித்து வைத்தியர் சனத் வணிகசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிச் சிக்கல் "இந்த விளம்பரம், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களை மிகவும் தவறாக வழிநடத்துகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதாரமற்ற சிகிச்சைகள், உண்மையான உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைத் தாமதப்படுத்துவதுடன், நிதிச் சிக்கலை ஏற்படுத்தி, அறிவியல் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும் என்று கல்லூரி தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/university-of-colombo-cancer-medicine-1760241944#google_vignette

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
நானும் இந்த குப்பை கூழங்களாஈ வாசித்தேன் ...எத்தனையோ சனம்வேற்றினத்தவரை மணந்து படம் போடுது...இந்தக் கலியாணத்துக்குத்தான் ...இவ்வளவு வரவேற்பு...காரணம் பெண்ணிந்தாய் இனவிடுதலையை ..தீவிரமாக ஆதரிப்பவர்...காப்புலி என்ற வார்த்தையை சர்வசாதரணமாக பாவிக்கின்றார்கள்...
Checked
Sat, 01/31/2026 - 04:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed