புதிய பதிவுகள்2

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

3 months 2 weeks ago
நடிகர் ராஜேஷ் ஜனரஞ்சகமான யுரியூப் புரோகிராம்களையும் வெளியிட்டு வந்தார். மாஜிக் செய்யும் இளைஞர்களையும் அழைத்துப் பேட்டிகண்டு வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டடியது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆனதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...

3 months 2 weeks ago
இங்குள்ள சிலருக்கு நீங்கள் எல்லோரும் 'கூத்தாடிகள்' அல்லவா, நன்றாக வடயம் அறிந்தவர்களாக தோற்றம் அளிப்பவர்களுக்கும்? இந்த பேட்டியை அவதானித்ஹால் , அவர்ளுக்கு இப்படியான கூர்மையான கிரகித்தல், சிந்தனை, திறமைகள் போன்றவை இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

3 months 2 weeks ago
அதிபர் ரம்பை நோக்கித்திரும்பியுள்ள முதலாவது சாட்டையாக நோக்கலாமா?அவரது எல்லை கடந்த அதிகாரத்துக்கும் விழுந்த சாட்டையடியா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...

3 months 2 weeks ago
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ

3 months 2 weeks ago
அதேதான் என் நினைப்பும், நாட்டுக்கே ராஜாவானாலும், வீட்டில் 😂

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் பிளேஆஃப் சுற்று எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? ஓர் அலசல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று ( மே29) தொடங்குகின்றன. 2 அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும், 2 அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடுகின்றன. இந்த ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அடுத்த மாதத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பல வெளிநாட்டு தொடர்கள் தொடங்க இருப்பதால், ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் லீக் ஆட்டங்களில் பல நேரங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருப்பது அணிகளுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. இருப்பினும் அதை ஈடுகட்டும் நோக்கில் வேறு வீரர்களை அணியில் சேர்த்து ப்ளேஆஃப் சுற்றை 4 அணிகளும் எதிர்நோக்குகின்றன. அந்த வகையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாததால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகும். ப்ளே ஆஃப் சுற்று எப்படி நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, பஞ்சாப், குஜராத், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நியூ சண்டிகரில்தான் முதல் தகுதிச் சுற்றும், எலிமினேட்டர் சுற்றும் நடக்கின்றன. இதில் பஞ்சாப், ஆர்சிபி அணிகள் 19 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்து முதல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி, 16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் போட்டியிடும். இதில் முதல் தகுதிச் சுற்றில் மோதும் இரு அணிகளில் எந்த அணி வெல்கிறதோ அது நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் 2வது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெல்லும் அணிதான் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதாவது முதல் தகுதிச் சுற்றில் வென்ற அணியுடன் கோப்பைக்கான போராட்டத்தில் ஈடுபட முடியும். இதுதான் ப்ளே ஆஃப் சுற்று நடக்கும் முறையாகும். ஆர்சிபி அணி எப்படி தயாராகியுள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடிவரும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் போராடுகிறது. இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். "ஈசாலா கப் நமதே" என்ற கோஷம் இந்த முறை நனவாகாதா என்ற ஏக்கம் ரசிகர்கள் முகத்தில் தெரிகிறது. கடந்த 6 சீசன்களில் 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஆர்சிபி திணறுகிறது. ஆனால் இந்த முறை ஆர்சிபி அணி சீசன் தொடக்கத்தில் இருந்து அற்புதமாக தயாராகி வந்திருக்கிறது. பெங்களூரைத் தவிர்த்து வெளி-மைதானங்களில் நடந்த 7 போட்டிகளிலும் ஆர்சிபி வென்று சாதனை படைத்தது. வலுவான பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அற்புதமான கலவையுடன் ஆர்சிபி அணி இருக்கிறது. பஞ்சாப் அணியுடன் இதுவரை ஐபிஎல் தொடரில் 35 முறை மோதியுள்ள ஆர்சிபி அணி 17 முறை வென்றுள்ளது, 18 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனிலும் பெங்களூருவில் பஞ்சாப் அணியிடம் தோற்ற ஆர்சிபி அணி, முலான்பூரில் வைத்து பஞ்சாப் அணியை வென்று பதிலடி கொடுத்தது. பஞ்சாப் அணிக்கு எந்தவிதத்திலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சளைக்காத அணியாக ஆர்சிபி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் யார் இல்லை? ஆர்சிபி அணியில் லீக் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல், லுங்கி இங்கிடி ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார்கள், அதேபோல காயத்தால் தேவ்தத் படிக்கலும் ஆடமாட்டார். இவர்கள் 3 பேரும் இல்லாத நிலையில் ஆர்சிபி களமிறங்குகிறது. இதில் இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசபராபாணியும், படிக்கலுக்குப் பதிலாக மயங்க் அகர்வால், டிம் சீபர்ட் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். இதில் டிம் டேவிட் தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்று நடக்கும் ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் அவருக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்கலாம். டிம் டேவிட்டுக்கு இணையாக பெரிய ஹிட்டராக லிவிங்ஸ்டோன் இருக்கமாட்டார் என்றபோதிலும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். இதில் முக்கிய அம்சமாக ஹேசல்வுட் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று விளையாடுவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால், முசாபராபாணி ஆகியோர் இருப்பது பெரிய வலிமையாகும். அதேபோல சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் இருப்பதும், பேட்டர்கள் வரிசையில் விராட் கோலி, பில் சால்ட், பட்டிதார், மயங்க் அகர்வால், ரோமாரியா ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் வரை நல்ல பேட்டிங் செய்யக்கூடிய வரிசை இருப்பது மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வென்றுவிட்டால், 2016ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு ஆர்சிபி முன்னேறும். பஞ்சாப் அணி பைனலுக்கு முன்னேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26 கோடி கொடுத்து வாங்கியது வீண்போகவில்லை என்பது அணியை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்து நிரூபித்துவிட்டார். அடுத்ததாக பைனலை எதிர்நோக்கி பஞ்சாப் அணி இருக்கிறது. கடைசியாக 2014-ஆம் ஆண்டு பைனலுக்கு முன்னேறிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றது, அதன்பின் 10 ஆண்டுகளாக அந்த அணி பைனலுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை. இந்நிலையில் இந்த முறை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னேறியுள்ளது. லீக் போட்டிகளில் சில வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சுவைத்து வந்த பஞ்சாப் அணி, கடைசி சுற்று லீக் போட்டிகளில் வென்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியுடன் மோதும் பஞ்சாப் அணி வென்றி பெற்றால், நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். பஞ்சாப் அணியில் லீக் போட்டிகளில் ஆடிய மார்க்கோ யான்சென், மேக்ஸ்வெல், பெர்குசன் ஆகியோர் ப்ளே ஆப் சுற்றில் ஆடமாட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, கெயில் ஜேமிஸன், மிட்ஷெல் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியைப் பொருத்தவரை இந்த சீசன் முழுவதுமே பெரும்பாலும் உள்நாட்டு வீரர்களை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வீரர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக யாரையும் ப்ளேயிங் லெவனில் கொண்டுவரவில்லை. ஆதலால், யான்சென், மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணியை பெரிதாக பாதிக்காது. அதேசமயம், காயத்தால் ஆடாமல் இருந்த சஹல் அணிக்கு திரும்புவது பெரிய பலம். யான்சென் இல்லாத நிலையில் ஜேமிஸன் கொண்டுவரப்படலாம். இதைத் தவிர பெரிதாக பஞ்சாப் அணியில் மாற்றம் இருக்காது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பஞ்சாப் அணி ஆர்சிபி அணிக்கு வலுவான சவால் அளிக்கும். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே ஓரளவுக்கு அச்சுறுத்தல் தரக் கூடியவர். மற்றவகையில் ஜேமிஸன், ஓமர்சாய் பந்துவீச்சை ஆர்சிபி வீரர்கள் எளிதாக ஆடிவிடக்கூடியவர்கள். ஆனால் சுழற்பந்துவீச்சில் ஹர்பிரித் பிரார், சஹல் ஆகியோரின் 8 ஓவர்கள் நிச்சயமாக சவாலாக இருக்கும். பேட்டிங்கில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ், இங்கிலிஸ், நேஹல் வதேரா, சசாங்சிங், ஸ்டாய்னிஷ், ஓமர்சாய், ஜேமிசன் வரை சிறப்பாகவே பேட் செய்யக்கூடிய வரிசையை பஞ்சாப் வைத்துள்ளது ஆர்சிபி அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்சிபி அணியை ஒப்பிடும்போது சற்று வலிமையாக இருப்பது சாதகமான அம்சமாகும். குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குஜராத் அணியின் சுப்மான் கில் மற்றும் ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றுகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து வந்தநிலையில் கடைசி இரு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளால் 18 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதனால் எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் ஆடி, அதில் வென்று, 2வது தகுதிச்சுற்றில் ஆடி வென்று, பைனலுக்கு முன்னேறய வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி இருக்கிறது. குஜராத் அணிக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர், ரபாடா, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக இலங்கை வீரர் குஷால் மென்டிஸ், சனகா சேர்க்கப்பட்டுள்ளனர். பட்லர், ரபாடா, பிலிப்ஸ் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவுதான். ஏனென்றால், குஜராத் அணி லீக் போட்டிகளில் சேர்த்த ரன்களில் 73% ரன்கள் டாப்ஆர்டரில் 3 பேட்டர்கள் சேர்த்ததாகும், அதில் பட்லரும் ஒருவர். பட்லர் அணியில் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பலவீனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதை குஷால் மெண்டிஸ் நிரப்புவாரா என்பதும் தெரியவில்லை. அடுத்ததாக லெக் ஸ்பின்னர் ரஷீத் கானின் மோசமான ஃபார்ம் குஜராத் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ரஷீத் கான் 14 போட்டிகளில் ஆடி இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு 9 ரன்களும் 53 பந்துவீச்சு சராசரி வைத்து மோசமாக பந்துவீசி வருகிறார். எலிமினேட்டர் சுற்றில் ரஷித் கான் எழுச்சி பெற்று பந்து வீசினால் தான் குஜராத் அணி தப்பிக்க முடியும் இல்லாவிட்டால் கடினம் தான். ரஷித் கான் தவிர்த்து சாய் கிஷோர், திவேட்டியா இருவர் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை வேகப்பந்துவீச்சில் சிராஜ், அர்ஷத் கான், கோட்ஸி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை. வலுவான பந்துவீச்சு இல்லாததால் தான் கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் குஜராத் அணி, எதிரணியான சிஎஸ்கே, லக்னெள அணியை 230 ரன்கள் வரை சேர்க்க அனுமதித்தது. குஜராத் அணியின் முக்கியமான பலவீனம் கடந்த 2 போட்டிகளிலும் அம்பலப்பட்டுவிட்டது. லீக் சுற்றுகளில் பெற்ற வெற்றிகள் பெரும்பாலும் டாப்ஆர்டரில் இருக்கும் சுதர்சன், கில், பட்லர் ஆகியோர் சேர்த்த ரன்களால் பெற்ற வெற்றியாகும். நடுவரிசை பேட்டர்களை வைத்து குஜராத் அணி பெரிதாக சோதித்துப் பார்க்கவில்லை. டாப்-ஆர்டரில் 3 பேட்டர்களே பெரும்பாலான போட்டிகளை முடித்துவிட்டனர். இந்தச் சூழலில் கடந்த 2 போட்டிகளிலும் நடுவரிசை பேட்டர்களை களமிறங்கி பேட் செய்யும்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எந்தஅளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. உண்மையில் குஜராத் அணியின் நடுவரிசையில் ராதர்போர்ட், ஷாருக்கான், திவேட்டியா ஆகியோர் இருந்தாலும் இவர்களின் பேட்டிங்கில் நிலைத்தன்மைஇல்லாதது பலவீனம். குஜராத் அணி ஒட்டுமொத்தத்தில் கில், சுதர்சன் இருவரின் தொடக்க பேட்டிங்கை நம்பியை இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், குஜராத் அணியின் நிலைமை மதில்மேல் நிற்கும் பூனையாக மாறிவிடும். 6-வது கோப்பையை நோக்கி மும்பை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா மும்பை அணி தோல்வியுடன் சீசனைத் தொடங்கினாலும் பும்ராவின் வருகை, ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் ஃபார்முக்கு திரும்பியபின் மும்பை அணி வலுவாக வலம் வந்தது. 16 புள்ளிகளுடன் இருந்தாலும் மும்பை அணி வைத்திருக்கும் ரன்ரேட் முதலிடத்தில் இருக்கும் அணியிடமே இல்லை. எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. லீக் சுற்றுகளில் குஜராத் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலுமே மும்பை அணி தோற்றுள்ளது. ஆனால் அப்போதிருந்த மும்பை அணியைவிட முற்றிலும் மாறியுள்ளது தான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறது. மும்பை அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்றாலும் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மும்பை அணி அனைத்து அணிகளுக்கும் சாவலாகவே திகழ்கிறது. பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹர் என வகையான பந்துவீச்சாளர்கள், சான்ட்னர், கரன் சர்மா, நமன் திர் என சுழற்பந்துவீச்சாளர்களுடன் நடுப்பகுதி ஓவர்களை நகர்த்துகிறது. மும்பை அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்கள் வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன், கார்பின் போஸ் ஆகியோர் இல்லாவிட்டாலும், பேர்ஸ்டோ, அசலங்கா, கிளீசன் வருகை அந்த அணிக்கு பெரிய பலம் சேர்க்கும். ரோஹித் சர்மாவுடன், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நின்றுவிட்டால் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்வது உறுதியாகும். இது தவிர சூர்யகுமார், திலக் வர்மா, அசலங்கா அல்லது பேவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், சான்ட்னர் வரை ஓரளவு நிலைத்து ஆடக்கூடிய பேட்டர்களை மும்பை அணி வைத்துள்ளது. குஜராத் அணியை ஒப்பிடும்போது, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாகவே மும்பை அணி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபிக்கும், பஞ்சாப் அணிக்கும் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்தையும், கடைசிப் பந்துவரை பரபரப்புடன் நகரும் என நம்பலாம். ஏனென்றால் இரு அணிகளுமே தங்களிடம் இருந்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளன. உள்நாட்டு வீரர்களும் வலுவாக இருப்பதால் நிச்சயம் சவாலாக இருக்கும். எலிமினேட்டர் சுற்றைப் பொருத்தவரை குஜராத் அணி, மும்பை அணி இடையிலான ஆட்டத்தில் சாய் சுதர்சன், சுப்மான் கில் ஆட்டம் ரசிகர்களை ஈர்க்கலாம். மும்பை அணி முதலில் பேட் செய்து 230 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துவிட்டாலும் குஜராத் அணி திணறக்கூடும். ஆதலால், எலிமினேட்டர் போட்டி, குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c308v0qyqn4o

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 02:33 PM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார். இரு அரசுகள் தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது. அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம். பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை. இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது. பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது. கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை மக்ரோனின் முன்னிலை பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார். ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை. இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார். இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார். இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார். இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை. இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215904

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலை ; 240க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், சட்டத்தரணிகள் நீதியமைச்சருக்கு கடிதம்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 29 MAY, 2025 | 02:21 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும், மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என 240க்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் மதகுருமாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள இவர்கள், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். நீதியமைச்சருக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து பரிந்துரைகளை கருத்துக்களை யோசனைகளை முன்வைக்குமாறு கோரும் பத்திரிகை அறிவிப்பு குறித்து (லங்காதீப 16-5-2025 இல் வெளியானது இலங்கையின் கரிசனை கொண்டுள்ள பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் பதிலளிக்கின்றோம். பொதுமக்களிற்கு தங்கள் கருத்துக்கள் யோசனைகள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு வெறுமனே இரண்டுவார கால அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் பொதுமக்களிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற மிகக்கடுமையான ஒடுக்குமுறை சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் தக்கவைக்காது என்ற வெளிப்படையான வாக்குறுதியும் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என வெளியாகும் அறிக்கைகளும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும்,மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயல். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேசிய மக்கள் வழங்கிய வாக்குறுதி தற்போது ஆட்சியில் உள்ள கட்சியினால் மழுப்பப்படுகின்றது. இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை பார்க்கும்போது இலங்கையின் பெரும்பான்மை நிர்வாக சாதனங்கள் , இனவெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் எவ்வாறு சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விடயம் குறித்த அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த குழுவில் முக்கியமானவர்கள் உள்வாங்கப்படவில்லை, பெருமளவிற்கு அரசாங்க அதிகாரிகள் காணப்படுகின்றனர், இராணுவத்தினரும்,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் காணப்படுகின்றனர், ஆனால் பாதிக்கப்ட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களோ தமிழ் முஸ்லீம் சமூகத்தினரோ இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த குழு மக்களின் பார்வையில் எந்த நியாயதன்மையும் இல்லாததாக காணப்படுகின்றது, மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக,குறிப்பாக எங்கள் சமூகத்தில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக இது காணப்படவில்லை. ஈவிரக்கமற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மனித உயிர்களிற்கு ஏற்பட்ட பாரிய அளவு இழப்புகள், ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து நீதியமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/215983

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

3 months 2 weeks ago
நடிகர் ராஜேஷ் காலமானார் - ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷின் மனைவி கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும், தவிர்க்க இயலாத காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷ் தெரிவித்திருந்தார். கே. பாக்கியராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படத்தில் நடிகர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்தார். இதுவே அவரது முதல் படமாக அமைந்தது. 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது. 2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ் ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி? 1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை. சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qg5g8glq0o

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

3 months 2 weeks ago
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 02:07 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தொடர்பான வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது. இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடயதானங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணாமல் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள். அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான , தொடர்புடைய மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும் போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது. ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215984

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
அண்ணை, வழக்குப் போட்டவர் சு.சாமி எல்லோ? அதை முன்னெடுத்தது தி.மு.க என்று நினைக்கிறேன். வாய்தாவால் கர்நாடகத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி? லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?

தபாலக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 01:21 PM தபாலக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை. முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது. இருவரது குரல் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. https://www.virakesari.lk/article/215978
Checked
Tue, 09/16/2025 - 01:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed