புதிய பதிவுகள்2

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் இடம்பெற்ற தீப்பந்த எழுச்சி போராட்டம்

3 months ago
11 Nov, 2025 | 09:52 AM மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை (10) நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக் குழுவின் ஏற்பாட்டில்,அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள்,போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் முன் வைத்துள்ளனர். மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது. அமைக்கப்பட்ட (தம்ப்பவனி நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும் அரசு தம் மக்களின் கோரிக்கை யாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230044

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!

3 months ago
கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது Nov 11, 2025 - 07:09 AM கொட்டாஞ்சேனை - 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் வெல்லம்பிட்டி மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கித்தாரிக்கு தங்குமிட வசதி மற்றும் வாகன உதவிகளை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கரவண்டியும், 2 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிரான்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றது. முன்னதாக குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhtwli6401igo29nwapdxb7u

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months ago
டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? புலனாய்வு தீவிரம் பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார். வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுதொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். படக்குறிப்பு, கார் வெடிப்பு நடந்த இடத்தைக் காட்டும் வரைபடமும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேரில் கண்டது என்ன? பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்றிரவு பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது ஆசாத், சம்பவ இடத்திற்கு வந்தபோது குறைந்தது நான்கு உடல்கள் தரையில் இருப்பபதைக் கண்டதாக கூறினார். "உடல்களுக்கு அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. நானும் வேறு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடல்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்." என்று அவர் கூறினார். பட மூலாதாரம், PTI டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன? டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.52 மணிக்கு கார் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஹெச்-1பி விசா: அமெரிக்காவின் புதிய முடிவு இந்தியர்களை அதிகம் பாதிக்கும் என்ற அச்சம் ஏன்? தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இடையே ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் ஏன்? டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? புலனாய்வு தீவிரம் டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 8 பேர் பலி - அமித் ஷா கூறியது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது "வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் அரசு கட்டடங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப், சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், "செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ, செங்கோட்டை, அரசு கட்டடங்கள் மற்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) தங்களது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அமித் ஷா கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்தார். தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "என்எஸ்ஜி மற்றும் என்ஐஏ குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். "நான் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றும் அவர் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgk8vvd9n7o

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்

3 months ago
Nov 11, 2025 - 08:00 AM மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர். 'அவிஷ்க புத்தா' எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் படகு நேற்று (10) விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது படகிலிருந்த 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் எனத் தெரியவந்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகை, மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பாக பதிவாகியுள்ளது. அதேவேளை, மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை அந்நாட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்றும் கடற்படையின் விஷேட குழுவொன்று மாலைத்தீவுக்கு சென்றுள்ளதுடன், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhtyena801ihqplpyw437h3m

அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்

3 months ago
அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்? பட மூலாதாரம், @abikinger/Instagram 10 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார். செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. 2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள். நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது. பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது. பட மூலாதாரம், @abikinger/Instagram இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார். அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார். அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர். அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர். ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர். அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4p7y0dkqo

சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை

3 months ago
11 Nov, 2025 | 09:15 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது, அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றுகையில், சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்த போதே சபாநாயகர் இவ்வாறு எச்சரித்தார். அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுஜீவ சேனசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த போது, உங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முடியாது என்று சுஜீவ சேனசிங்கவுக்கு சபாநாயகர் கூறினார். எனினும் சுஜீவ சேனசிங்க தொடர்ந்தும் எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில் தயவு செய்து நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இங்கே இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் உங்களை வெளியேற்ற நேரிடும் என்று எச்சரித்தார். இதேவேளை அர்ச்சுனா இராமநாதன் எம்.பியும் தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். அது ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இதனால் அமைச்சரை தொடர்ந்தும் பேசுமாறு சபாநாயகர் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்த போது, நீங்களும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் இங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் கூறினார். https://www.virakesari.lk/article/230046

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
ஆள விடுங்க. ஒவ்வொரு வார்த்தையையுமா விளக்க முடியும். என்னால் இதுக்கு மேல எழுத முடியாது. இத்தோட முடிச்சுக்கிறேன். நன்றி.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்

3 months ago
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள் Iryna Balachuk, Mykhailo Tkach — 10 நவம்பர், 09:14 டைமர் மிண்டிச் (இடது). புகைப்படம்: ஸ்கெமி 61003 61003 பற்றி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நிறுவிய உக்ரேனிய தயாரிப்பு நிறுவனமான குவார்டல் 95 இன் இணை உரிமையாளரும் தொழிலதிபருமான டைமூர் மிண்டிச், நவம்பர் 10 அன்று உக்ரைனை விட்டு வெளியேறினார் - தேசிய ஊழல் தடுப்புப் பணியகத்தின் (NABU) தேடுதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு. மூலம்: அரசியல் வட்டாரங்களில் உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள் ஒரு மூலத்திலிருந்து மேற்கோள்: "தேடல்களுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, மிண்டிச் இரவில் நாட்டை விட்டு வெளியேறினார்." விவரங்கள்: முன்னதாக, NABU துப்பறியும் நபர்கள் மிண்டிச்சின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவிடம் தெரிவித்தன. உக்ரைன்ஸ்கா பிராவ்தா NABU விடம் இருந்து ஒரு கருத்தைக் கோரியுள்ளது, அது கிடைத்தவுடன் அதை வெளியிடும். பின்னணி: ஜூலை மாதம், உக்ரைன்ஸ்கா பிராவ்தா, ஒரு செல்வாக்கு மிக்க ஊழல் எதிர்ப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, NABU மற்றும் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) மிண்டிச் மீது வழங்க சந்தேக அறிவிப்பைத் தயாரித்து வருவதாகக் கூறியது. NABU மற்றும் SAPO ஊழியர்கள் " ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த அதே முகவரியில் உள்ள ஒரு பிளாட்டில் மிண்டிச்சைப் பதிவு செய்ய முடிந்தது " என்று வணிக வட்டாரங்களில் உள்ள உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள் தெரிவித்தன. மிண்டிச் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும், இது பணமோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் உக்ரைன்ஸ்கா பிராவ்தா தெரிவித்தார். உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்களின்படி, அமெரிக்க புலனாய்வாளர்கள் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம், இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் மற்றும் "சுகர்மேன்" என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் ஆகியோரை விசாரித்து வருகின்றனர். (இந்தப் பெயர் தொழிலதிபர் மைக்கைலோ சுகர்மேனுடன் பொருந்துவதாகத் தெரிகிறது. ஹோலோஸ் (குரல்) பிரிவின் எம்.பி. யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக்கின் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுகர்மேன் மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் "முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு ஒடேசா துறைமுக ஆலையுடன் தொடர்புடையவை."). https://www.pravda.com.ua/eng/news/2025/11/10/8006609/ உள்வீட்டு தகவலாக இருக்குமா?

ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 months ago
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 3185 - ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது. மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் சேர்ந்து 20வது தடைகள் தொகுப்பைத் தயாரித்து வருகிறோம். இந்த தொகுப்பின் உள்ளடக்கங்கள் ஒரு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம். உக்ரேனிய குழந்தைகளை கடத்துபவர்கள் பற்றிய புதுப்பிப்புகளும் இருக்கும் - இது உண்மையிலேயே உலகளாவிய அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் . விவரங்கள்: ரஷ்ய போர் உற்பத்தியை செயல்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் மிக அதிக அழுத்தம் இருக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறினார். மேற்கோள்: " ஒவ்வொரு ரஷ்ய ஏவுகணையும், ஒவ்வொரு ரஷ்ய ட்ரோனும் மற்ற நாடுகளின், குறிப்பிட்ட நாடுகளின் குறிப்பிட்ட கூறுகளைக் கொண்டுள்ளது - அவை இல்லாமல், ரஷ்ய ஆயுதங்கள் எதுவும் இருக்காது. இதற்கான பணிகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் இந்தப் பொறுப்பு குறிப்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ளது. " மேலும் விவரங்கள்: உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக வரும் வாரங்களில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஜெலென்ஸ்கி அறிவித்தார். மேற்கோள்: " சில நாடுகள் ஏற்கனவே எங்களுக்கு உதவி வருகின்றன, குறிப்பாக வடக்கு ஐரோப்பாவின் நாடுகள், மேலும் தெற்கு ஐரோப்பாவின் நாடுகளுடனும் நாங்கள் ஒப்பந்தங்களைத் தயாரித்து வருகிறோம். மேலும் அரசியல் பார்வையில், உக்ரேனியர்களுக்கு, நமது மாநிலத்திற்கு, ஐரோப்பாவிற்குள் புவியியல் ரீதியாக சமநிலையான ஆதரவு மிகவும் முக்கியமானது. " Ukrainska PravdaZelenskyy: EU expected to prepare 20th Russia sanctions p...Ukrainian President Volodymyr Zelenskyy says the European Union has begun work on its 20th Russia sanctions package, which is expected to be ready within a month. Ukraine has proposed adding Russian lமேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம்.

மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால

3 months ago
அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
"There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.” Albert Einstein (மிராக்கிளை, காம்பிளக்ஸ் என பொருள் கொள்க). இடியப்பத்தின் சுவை ஏன் குன்றியது என்பதற்கான விடையை மாவை ஆராய்ந்தாலே கண்டு பிடித்து விட முடியும். இடியப்பத்தின் நூல்களின் சிக்கலை ஆராய்ந்து அதை காண முடியாது. கோஷான்😂 #Boutique shop economics #பெட்டிக்கடை பொருளியல்

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
ஆவணங்கள் 5 வருட மீளாய்விற்குட்படது (7 வருடம் அல்ல), நீங்கள்கூறுவது வேறு விடயம் என நினைக்கிறேன் (Default records?) அது பற்றி தெரியவில்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
வரி விடயத்தில் நனைத்து சுமக்கிறோம் என நினைக்கிறேன். மீண்டும் back to basics போய், அடிப்படையை விளங்கினால் அதிகம் சிக்கலான வரி கொள்கைகளுக்குள் மாட்டி விழி பிதுங்க வேண்டி வராது. மிக இலகுவாக - புரிந்து கொள்ள கூடியது - ஒரு கம்பெனியின் உருவாகிவிட்ட வரிச்சுமையின் பால்பட்ட வரிக்காசு திறைசேரிக்கு சொந்தமானது . கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த வரிப்பணம் தகுந்த நேரத்தில் அரசை போய் சேர்ந்திருக்கும். இது கிட்டதட்ட ஊழியரின் சம்பள காசு போன்றதே. கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த சம்பள பணம் தகுந்த நேரத்தில் ஊழியரை போய் சேர்ந்திருக்கும். இரெண்டையிம் கட்ட முடியாமல் கம்பெனியை வங்குரோத்தாக்கி விட்டு, எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என டிவிடெண்ட் என இருப்பதையும் துடைச்சு வழிச்சு கொண்டு, நாட்டை விட்டு கம்பி நீட்டினால்…. அது அரசுக்கும், ஊழியருக்கும் போடப்பட்ட நாமமே. அப்புட்டுத்தே.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
இங்கே எழுதும் சிலருக்கு சஞ்சீவை தனிப்பட்டு தெரிந்திருக்கலாம் என எழுதியவர் நீங்கள் - அதைத்தான் சொன்னேன். மற்றது இதில் பலர் சம்பந்த பட்டிருக்கலாம் என்பதை யாரும், நான் உட்பட ஏற்காமல் இல்லை. அப்படி இருக்க, நீங்கள் மீள மீள இதில் இவர்கள் மட்டுமே சம்பந்தபட்டனர் என நாம் எழுதுகிறோம் என ஏன் எழுதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. இதை தவிர நீங்கள் தனிப்பட்டு என்னை நோக்கி எழுதியதாக தெரியவில்லை. மேலே சொன்ன இரு விடயங்களையும் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் மீள, மீள ஒப்புவிக்கிறீர்கள் என்பது மட்டுமே என் மனதை குடையும் கேள்வி.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
இது ஒரு தனிநிறுவனமாக இருந்த ஒரு நிறுவனத்தினை அதனை வூல்வேர்த் எனும் பப்ளிக் லிஸ்டட் நிறுவனத்திடமிருந்து ஆங்கரேஜ் எனும் நிறுவனம் 115 மில்லியன் ஒப்புதல் விலையினை 20 மில்லியன் பணத்திற்கு வாங்கி, புதிதாக பல கிளைகளை ஆரம்பித்து பப்ளிக் லிஸ்ட் செய்து (பங்கு சந்தையில்) 520 மில்லியனுக்கு விற்றுவிட்டு, அதன் கையிருப்புக்களான 58 மில்லியனை விற்றுத்தள்ளி விட்டு கம்பி நீட்டி விட்டார்கள், இதில் வங்கிகளும் ஆங்கரேஜ் நிறுவனமும் ஆதாயம் பெற்றனர் சாதாரண முதலீட்டாளர்கள் நட்டமடைந்தனர், இதுதான் உண்மையில் திட்டமிட்ட ஏமாற்று முயற்சி, ஆங்கரேஜ் நிறுவனம் தனது பங்குகள் முழுவதையும் விற்று விட்டார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்த தம்பதிகள் அவ்வாறு திட்டமிட்டு செய்திருக்கவில்லை என கருதுகிறேன். https://www.aph.gov.au/DocumentStore.ashx?id=fd49fc87-6bc3-460c-81fc-293c5a92edc5&subId=410892#:~:text=Dick%20Smith's%20share%20price%20remained%20strong%20long%20after%20the%20IPO.&text=trade%20around%20the%20IPO%20issue,to%20justify%20the%20new%20facility.
Checked
Sun, 02/15/2026 - 21:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed