3 months ago
இவரையெல்லாம் "கள்ள மௌனத்தோடு மொள்ளக் கடந்து" போய் விடுவீனம் எங்கள் பட்டாசு உறுப்பினர்கள்😂! ஆனால் சுமந்திரன் அல்லது சாணக்கியன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே மூத்திரம், சீ ஆத்திரம் வந்து வெடித்துத் தள்ளி விடுவார்கள்😎!
3 months ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அம்மு ·rdSnooestpttm6lt148a161026ah1ti51g0i4mg51934hl8m1141h3a gl1a · JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்கச் சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரைச் சந்தித்தார். பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அந்த தங்கப் பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், அவனுக்கு மரியாதைக் கொடுப்போம். 3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம். 5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நிச்சயமாக வெற்றி பெறுவதில்லை... இது தான் உண்மை √ Voir la traduction ......!
3 months ago
ஒரே நபர் செய்திகளை வழங்குபவராக இருக்கலாம் அண்ணை. கற்கை மையம் என்பதை மையன் என்றும் எழுதி இருக்கிறார்கள்! "சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" எழுத்துப்பிழை தான், கருத்து பொருத்தமாக இருக்கே!! சட்டத்துணையோடு நிலக்கொள்ளை, வளக்கொள்ளை தானே நடந்தது/நடக்குது!
3 months ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tpdesnrSoocm8hg80l4cfcg9 i1mcu47ti91f2luu5u31i6t6428hm1hh900 · பைரவர்!!!! எங்கள் தெருவில் நிறைய வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். இது போக நாலு தெரு நாயும் உண்டு.!!!ஏதாவது ஒரு வீட்டில் உள்ள நாய் தனியாக வெளியே வந்தால்,தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து சத்தம் போட்டு,வீட்டு நாயை விரட்டும்!!!! வேற தெருவில் இருந்து ஏதாவது நாய்,தனியாகவோ,குரூப்பாகவோ வந்தால், எங்கள் தெருவில் உள்ள தெரு நாய்கள்,வீட்டு நாய்கள் எல்லாம் சேர்ந்து, வந்த நாயை சத்தம் போட்டு விரட்டி விடும்.!!!எங்க ஏரியா உள்ளே வராதே என்பது போல்.!!! பைரவருக்கே இந்த கதி.இதில் நடந்து போவோரையும்,காரில் போவோரையும் பைரவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.!!!!!!பைக்,சைக்கிள் டூ வீலரில் போகிறவர்களை நன்றாகவே தெரு அத்தம் வரை விரட்டுவார்கள். பயங்கர சத்தம் போடுவார்கள்.பாவம் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.!!! எனக்கு ஒரு 7__10 வயது இருக்கும் போது,இப்படி தொல்லை கொடுக்கிற நாய்களின் வாயை கட்டி விடுவார்கள் விசயம் தெரிந்தவர்கள்.!!!அப்புறம் அந்த நாய் சத்தம்போடாது(குறைக்காது) உணவு சாப்பிடாது..!!!! எங்க பெரியப்பாவிடம் சிலர் நாயை கூட்டிட்டு வருவாங்க.!!இந்த நாய் குறைக்க மாட்டேங்குது,சாப்பிடவும் மாட்டேங்குது,தெருவில் போன எவனோ இதன் வாயை கட்டி விட்டான் என சொல்வார்கள்.இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறது என சொல்வார்கள்.!!! உடனே எங்க பெரியப்பா நாயின் தலையை தடவி கொடுப்பார்.கொஞ்சம் தண்ணி வைத்து அதன் கழுத்தை தடவி கொடுப்பார்..அப்புறம் சொல்வார்.என்ன பைரவரே(நாய் என்று எப்போதும் சொல்ல மாட்டார்.)தெருவில் போகும் ஆட்களை ரொம்ப பயமுறுத்தக் கூடாது. வீட்டுக்குள்ள வந்தா மட்டும் சத்தம் போடுங்க என சொல்லிக்கொண்டே அவர் கையை நீட்டுவார்.அதில் பெரியம்மா,அத்தை,பாட்டி யாராவது ஒருத்தர் ஒரு துண்டு கருப்பட்டியை அவர் கையில் வைப்பார்கள்.!!!! அவர் அதை வாங்கி,நாய்க்கிட்ட போடுவார்.அந்த கருப்பட்டியை நாய் நக்கி,நக்கி திங்கும்.அப்புறம் ஊளையிடும்.!!! பெரியப்பா சொல்வார்,உன் பைரவருக்கு வாய் கட்டை அவிழ்த்து விட்டாச்சி.வீட்டுக்கு போயி கொஞ்சம் தண்ணீர் குடு. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சி சாப்பாடு குடு. என்பார். அப்புறம் அந்த நாய் வழக்கம் போல சத்தம் போடும்,சாப்பிடும்.!!! இன்று வரை எனக்கு இது ஒரு புரியாத புதிர் தான்.!!! இது மனிதர்களை,மெஸ்பரிஸம்,பண்ற மாதிரியா??? அல்லது மனோதத்துவம் முறையா எனக்கு தெரியல.????எப்படி சாத்தியம் .!!!இந்தக்கேள்வி எனக்குள் பல வருஷங்களாக இருக்கிறது.!!! உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.!!!தெரிந்து கொள்கிறேன்.!!!! இது எப்படி,என்று பெரியப்பாவிடம் கேட்போம். எங்களுக்கும் நாய்க்கு வாயை கட்டவும்,அவிழ்த்து விடவும் சொல்லித்தாங்க என்று பல முறை கேட்டிருக்கிறோம்.அதற்க்கு அவர் சொல்லும் ஒரே பதில்.!!!! அம்மாவாசை,பௌர்ணமி இந்த இரண்டு நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ,ஆறு,கடல்,குளம் இவற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு,இரு கை கூப்பி ஓம்,ஓம் என ஒரு லட்சம் தடவை சொல்லனும்!!!!! மொத்தம் 41 நாட்கள் இவ்வாறு செய்தால், நீ சொன்னதெல்லாம் பலிக்கும்.அப்படின்னு சொல்வார்.!!! ஒரு கண்டிஷன் இதற்க்கு பணம் வாங்க கூடாது.ஒரு சேவையாக செய்யனும் என சொல்வார்.!!! இந்த அபூர்வ கலையை எங்க தாத்தாவிடம் இருந்து அவர் மட்டும் தான் கற்றார்.!!! ஆனால் பெரியப்பா யாருக்குமே சொல்லிக் கொடுக்க வில்லை.அவரோடு மறைந்து விட்டது அவர் கற்ற வித்தை.!!!!! தமிழர்களின் நிறைய வித்தைகள், கலைகள் யாவும் கிராமத்தை விட்டு நகரத்திற்க்கு வந்தவுடன் அழிந்து விட்டது.!!! நன்றி.!!!இது என் கற்பனை கதை அல்ல!!!🙏🏻".......!
3 months ago
பனி மலர் · Venkatesan Vellore · தன் நண்பரை காண மாடியில் உள்ள அவர் வீட்டுக்கு படத்தில் உள்ளவர் படியேறி செல்கிறார். அது மழைக்காலம் என்பதால் நண்பரின் மனைவி தன் புடவையை உலர்த்த வாசலில் கொடி கட்டி காயபோட்டிருக்கிறார். இவர் உள்ளே நுழையும்போதே " இதுதான் வாயில் புடவை என்பதோ?" என கேட்க, அதைகேட்ட நண்பரும் அவரது மனைவியும் வாய்விட்டு சிரித்தார்களாம். ------------------------ இவரும், குமரி அனந்தனும் அன்று ஒரே மேடையில் பேசுவதாக நிகழ்ச்சி இருந்தது. முதலில் குமரி அனந்தன் அட்டகாசமாய் பேசி கைத்தட்டல் பெற்று அமர்ந்துவிட்டார். அடுத்து இவரை அழைத்திருக்கின்றனர். இவர் மேடைக்கு முன் நின்று, குமரி அனந்தனை பார்த்து " எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்? என கேட்க, அவரோ அமர்ந்திருந்தவாறே " வண்ணாரப்பேட்டை" என்றாராம். " அதான், எனக்கு முன்னே வெளுத்து வாங்கிவிட்டீர்" என சொல்ல ....கூட்டம் சிரிப்பாலும் கரவொலியாலும் ஆர்ப்பரித்ததாம். -------------------- இலக்கிய கூட்டம் முடிந்து காரில் சென்று கொண்டிருக்கிறார். கார் திடிரென நின்றுவிட்டது. கூட வந்தவர்கள் இவரை உட்கார சொல்லிவிட்டு, கீழே இறங்கி தள்ளியிருக்கிறார்கள். கார் கிளம்பவில்லை. உடனே இவரும் கீழே இறங்கி காரை தள்ளியிருக்கிறார். " நீங்க ஏன் வந்தீங்க? என அதில் ஒருவர் கேட்க, " என்னை தள்ளாதவன்னு யாரும் சொல்லிட கூடாதுல்ல. அதான் வந்தேன்". என சொல்ல... எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்களாம். அப்படியொரு சிலேடை பேச்சில் மன்னராக திகழ்ந்த கி.வா.ஜ.வின் நினைவுநாள்தான் இன்று. கவிஞராக, எழுத்தாளராக, கலைமகள் இதழின் ஆசிரியராக, இலக்கிய சொற்பொழிவாளராக திகழ்ந்த இவர், தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.சா.வின் மாணவர் ஆவார். Voir la traduction
3 months ago
https://www.facebook.com/share/v/1QjqLD6rrc/
3 months ago
இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.
3 months ago
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 10 பேர் பலி - பயங்கரவாதிகளின் சதிச்செயலா ? சிக்கிய 2 பேர் மீது தீவிர விசாரணை! 10 Nov, 2025 | 10:09 PM இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் (Red Fort Metro Station) அருகே இன்று திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, இன்று மாலை 6:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தில், அருகிலிருந்த வேன், ஆட்டோ மற்றும் கார் உட்பட 8 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை நிர்வாகம், 8 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG)உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் நடந்த நேரமும், இடமும் சதிச்செயலுக்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் கூட்டுத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் மருத்துவர்கள் உட்பட சிலர், 360 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயுத விநியோகம் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெடிவிபத்து தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்து சிக்கிய 2 பேரிடம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது, வெடிப்புக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். டெல்லியின் முக்கியப் பகுதிகளான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மும்பை, உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/230038
3 months ago
😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?
3 months ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே } (2) ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ......! --- மயக்கமென்ன ---
3 months ago
ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு! Nov 9, 2025 - 04:54 PM சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் 'அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் - ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு' மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு இதனை தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் பங்கேற்கவுள்ளனர். குறித்த நிகழ்வில், சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmhrmloq601hho29nlp0u8ssc
3 months ago
பொன்னெழில் பூத்தது புதுவானில் .......! 😍
3 months ago
10 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன. வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது. இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது. ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/229999
3 months ago
செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி Nov 10, 2025 - 08:30 PM டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. https://adaderanatamil.lk/news/cmht9rd7j01ifqplp3b0o3b17
3 months ago
கோபமடைந்த பாகுபலி யானை! நாயைத் துரத்திய சிறுத்தை!
3 months ago
காணொளி
3 months ago
ரவிராஜ் அவர்களின் கொடூரக் கொலை நிகழ்ந்த போது நான் கொழும்புக்கு வந்து இரண்டு மாதங்கள்.கொலை நடந்த இடம் மிகப் பெரிய பாதுக்காப்பு நிறைந்த இடம். சிங்களப் பேரினவாதம் எமக்காக அனைத்து மக்களோடும் இணைந்து போராடிய ஒருவரை கொடூரமாக கொன்று தீர்த்தது. கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள் ஐவரும் 2015இல் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைக்கு இன்றுவரை நீதி நிலை நாட்டப்படவில்லை. இந்தக் கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் தான் இன்று பாரிய ஐஸ் போதைப் பொருள் மூலப்பொருளை வைத்திருந்தாக கைதாகியிருந்த சம்பத் மனம்பெரி. ரவிராஜ் கொலையில் அவர் பின்னர் அரச தரப்பு சாட்சியாகவும் மாறியிருந்தார். இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் NPP/JVPயின் தமிழ் உறுப்பினர்கள் இந்தக் கொலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பது தான் பெரும் ஆச்சர்யம். இன்று தடுத்து வைத்திருக்கும் மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று அழும் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா? அன்று இந்தக் கொலையின் பின்னர் JVP வெளியிட்ட மோசமான அறிக்கையை நாம் மறக்கவில்லை. The JVP: "We don't agree with the political views of Mr. Raviraj. However, we respect the democratic right he has to hold such views. It is the political heritage of murderous separatist Tiger terrorists to savagely murder their political enemies". ஜே.வி.பி: "திரு. ரவிராஜ்சின் அரசியல் கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. இருப்பினும், அத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்க அவருக்கு உள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம். கொலைகார பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளின் அரசியல் பாரம்பரியம், அவர்களின் அரசியல் எதிரிகளை கொடூரமாக கொலை செய்வது" Vaishu Pusparaj
3 months ago
பட மூலாதாரம், VEERU SINDHI 10 நவம்பர் 2025, 14:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை. மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images பட மூலாதாரம், ANI வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது. படக்குறிப்பு, வெடிப்பில் காயமடைந்தவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன? டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே சிவப்பு சிக்னல் காரணமாக மெதுவாகச் சென்ற வாகனம் மாலை 6.52 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட வாகனத்தில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர். "வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், ன்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். படக்குறிப்பு, வெடிப்பு ஏற்பட்டதில் சேதமடைந்த வாகனத்தின் ஒரு பகுதி இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாகவும், சிலர் இறந்ததாகவும் டெல்லி காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். "சிலர் காயமடைந்துள்ளனர், சிலர் இறந்துள்ளனர். சரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றார். 'கட்டடத்தின் ஜன்னல் குலுங்கியது' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராஜ்தர் பாண்டே அந்தப் பகுதி காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. "நாங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்தோம்... நான் அதை என் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். வெடிப்பு ஏற்பட்டபோது மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது'' என அருகில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ''வெடிப்பு நடந்தபோது நான் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று நான் இதற்கு முன்பு கேட்காத அளவுக்கு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. நான் மூன்று முறை விழுந்தேன். இதற்குப் பிறகு, அருகில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர்" என்று செங்கோட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் ரெஹ்மான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு, செங்கோட்டை டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய பிரதமர் இக்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn23y182lo
3 months ago
பெண் விவகாரம்: ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக கால அவகாசம் கோரினார் செல்வம் அடைக்கலநாதன்! ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கால அவகாசம் கோரியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டைப் பல தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்வைத்துக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் அடைக்கலநாதன் பிழையாக நடந்து கொண்டார் என்ற சாரப்படவே அனைத்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். இந் நிலையில் அவர் உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென தலைமைக் குழு உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கால அவகாசம் கோரியுள்ளார். Jaffna Vision
3 months ago
சிங்கள பேரிவாத அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 19 ஆவது நினைவில்... சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட இளம் அரசியல் தலைவர் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜ் மாமனிதர் நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் விடுதலை கூட்டணியில் ( உதயசூரியன் ) இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் பதவி ஏற்றார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க உறுதியுடன் செயற்பட்டார். போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார். உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது. ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த நேர்காணலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். Kunalan Karunagaran
Checked
Sun, 02/15/2026 - 21:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed