புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
இதென்ன நீங்கள் அவரின் நேரஅட்டவனை தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . ........! __ காலையில் இருந்து கந்தோர் வேலை ( பெரும்பாலும் work from home தான்).......! ___ மதியம் மீன் செதில்கள் சேகரித்து சுத்தம் செய்து அருமையான வறை செய்து வைப்பார் .......! ___ மாலையில் கார் எடுத்துக் கொண்டு கழுவப்போய் விடுவார் . ......(அவரது கார் சுத்தமாய் இருந்தால், நண்பர்களின் காரை கழுவித்தாரன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு அந்த car washing center க்குப் போய் விடுவார்) . .......! இப்போது சொல்லுங்கள் அவருக்கு எங்கே நேரம் இருக்கு .......! 😂 தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . ......! இன்று நான் எஸ்கேப் ........!

சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு!

3 months ago
👇 இது போன மாசம் நடந்த சந்திப்பு. மாதா மாதம்... ஒரு பிரயோசனமும் இல்லாமல் சந்திப்பதை பார்க்க, இந்தியத் தூதரிடம்.... "மாதச் சம்பளம்" (பிச்சை) வாங்கப் போன ஆட்கள் போல உள்ளது. 😂 🤣

சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு!

3 months ago
சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேவேளை குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452834

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!

3 months ago
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்! நாளையதினம் (17) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452863

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months ago
டொல்பின்களுக்கு இலுப்பைப்பழம் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு, அசப்பில் அதுவும் கடலில் வாழும் வௌவ்வால் இனம் போலிருக்கு ........! 😂

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

3 months ago
இன்றைய வானிலை Nov 16, 2025 - 06:49 AM நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmi112n8x01nao29n1wz9zw5s

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months ago
கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்! Nov 16, 2025 - 12:01 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்கள் தமது இருப்பிடம் நோக்கிச் செல்ல சில மீனவர்கள் உதவி செய்தனர். இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கிச் சென்றன. இந்த அரிய காட்சியை மீனவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmi1c8otj01njo29nek042g41

ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 போட்டியில் வியாஸ்காந்த் பந்துவீச்சில் பிரகாசிப்பு; ஆனால் இலங்கை ஏ அணிக்கு ஏமாற்றம்

3 months ago
Published By: Vishnu 16 Nov, 2025 | 01:41 AM (நெவில் அன்தனி) கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பகே (28) ஆகிய நால்வரே துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். ஆப்கான் பந்துவீச்சில் பிலால் சமி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் சிதிக்குல்லா அத்தல் 54 ஓட்டங்களையும் இம்ரான் 34 ஓட்டங்களையும் அணித் தலைவர் தார்விஷ் ரசூலி 32 ஓட்டங்களையும் காய்ஸ் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: பிலால் சமி https://www.virakesari.lk/article/230450

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள் - "ஏழைக் குழந்தைகளுக்கு தான் பாதிப்பு"

3 months ago
கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 15 நவம்பர் 2025 கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிட்டது, அரசியல் ரீதியான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், ஏழைக்குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் இருப்பதாக விளையாட்டு அமைப்பினர் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கோவையில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் காலியிடத்தை ஏலம் விடும் நடவடிக்கையை வீட்டு வசதி வாரியம் நிறுத்திவைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவைப்புதுார் பகுதியின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதற்காக கோவை மாநகராட்சி சார்பில், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானத்திற்காக அரசியல் மோதல்! அதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த இடத்தில் கிரிக்கெட், கால்பந்து, பேட் மிண்டன், விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கே குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் நிரம்பி வழியும். மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களும் பராமரித்து வந்த இந்த மைதானத்தில் நிறைய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடப்பது வழக்கமாகவுள்ளது. இந்நிலையில் இந்த காலியிடத்தை ரூ.76 கோடிக்கு ஏலம் விடுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று டெண்டர் நோட்டீஸ் விட்டது. இதன்படி நவம்பர் 12 அன்று ஏலம் நடப்பதாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி "பாலில்லாமல் தயாரான ரசாயன நெய்" - திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் கசிந்த ஆவணங்கள் 36 வயது தேஜஸ்வி, 74 வயது நிதிஷ் குமாரிடம் தோற்க காரணம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது பல ஆண்டுகளாக பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மேம்படுத்தித்தர வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நோட்டீஸ் அறிவிப்பு, கோவை தெற்கு பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதானமாகப் பயன்படுத்தும் அந்த இடம் மொத்தம் 10.79 ஏக்கர் என்பதும், அவற்றில் 4.54 ஏக்கர் இடம் (1,97,916 சதுரஅடி பரப்பு) மருத்துவமனை உபயோகத்துக்காகவும், 6.25 ஏக்கர் இடம் (2,72,403 சதுரஅடி பரப்பு) பள்ளிக்கூடம் கட்டுவதற்கான உபயோகத்துக்காகவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த ஏல அறிவிப்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்று கோவைப்புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில், இந்த மனைப்பிரிவை உருவாக்கியதன் அடிப்படையில், இந்த நிலத்தின் உரிமையாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பதால், வாரியமே அதை முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக இந்த இடத்தை ஏலம் விடாமல் வாரியம் தவிர்த்துவந்தது. கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படாத 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீண்டும் நில உரிமையாளர்கள் வசமே ஒப்படைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதே போன்று அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்பனை செய்யப்படாத இடங்களை விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காலியிடங்களை ஏலம் விடும் பணியை வாரியம் துவங்கியது. நவம்பர் 12 அன்று ஏலம் விடுவதாக இருந்த நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே, திமுகவினர் இதுபற்றி துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசி, ஏலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதாக மக்களிடம் தெரிவித்தனர். கோவைப்புதுார் பகுதிகளில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்து, பட்டாசு வெடித்தனர். ஆனால் ஏலம் கைவிடப்பட்டதாகவோ, மைதானம் அதே நிலையில் நீடிக்குமென்றோ அரசு அல்லது வீட்டுவசதி வாரியம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. படக்குறிப்பு, மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர் இதனால் ஏலத்துக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதியன்று, அதிமுக சார்பில் 'இந்த மைதானத்தை ஏலம் விடும் திட்டத்தைக் கைவிடவேண்டும்' என்ற கோரிக்கையுடன், குனியமுத்துார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''தமிழக அரசே இந்த மைதானத்தை ஏலம் விடுவதற்கு டெண்டர் விட்டநிலையில், அதை திமுகவினரே மீட்டு விட்டதாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த மைதானத்தை முழுமையாக மீட்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்றார். படக்குறிப்பு, மைதானம் ஏலம் விடப்படுவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ''மைதானமல்ல; மருத்துவமனை, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம்!'' ஆனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபின்பே, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்கிறார் கோவைப்புதுார் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் முரளி. இவர் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய முரளி, ''கடந்த மாதத்தில் மைதானத்தை ஏலம் விட டெண்டர் விட்டதுமே, மாவட்டச் செயலாளர் ரவியிடம் தெரிவித்தோம். அவரும் துணை மேயர் வெற்றிச்செல்வனும் இணைந்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசிவிட்டனர். அவரும் உரிய அதிகாரிகளிடம் பேசி, ஏலம் விடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறிவிட்டார். அது உறுதியானபின்புதான் நாங்கள் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்தோம். ஆனால் இதுதெரிந்ததும் அதிமுகவினர் அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'' என்றார். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், வேலுமணி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், இந்த மைதானத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேபோன்று அதிமுக ஆட்சியில்தான் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதிகளவில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார். இந்த மைதானத்தை ஏலம் விடுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவைப்பிரிவு நிர்வாகப் பொறியாளர் ஜேக்கப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த இடம் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்திவந்தனர். இப்போது வாரியத்தின் இடங்களை மீட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் இந்த விளையாட்டு மைதானம் குறித்து அரசின் முடிவை தெரிந்து கொள்ள , துறையின் அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. வணிக வளாகமாக மாறிய மைதானம்! சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம். இவ்வமைப்பின் தலைவரான தியாகராஜன், இதுதொடர்பாக ஏராளமான ஆதாரங்களுடன் பெரும் பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அவர் காண்பித்தார். அதேபோன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மாஸ்டர் பிளானில் 60 சென்ட் இடம் விளையாட்டு மைதானமாகவும், 100 அடி ரோடாகவும் இருந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நடந்த முயற்சிகள், வழக்கு விபரங்களையும் வீரப்பத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பகிர்ந்தனர். படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் அங்குள்ள நுாறடி ரோட்டை 60 அடியாகக் குறைக்கவும், விளையாட்டு மைதானத்தை மனையிடமாக மாற்றவும் கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு நகர ஊரமைப்புத்துறையும் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிராக குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில், நுாறடி ரோடு, விளையாட்டு மைதானத்துக்கான ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இடம் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தப்படவில்லை. ''ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது அந்த மனைப்பிரிவில் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்களைக் காண்பித்து, அதன்படியே தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்பதுடன், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை அதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள் சட்டத்தில் (TAMIL NADU PARKS, PLAY-FIELDS AND OPEN SPACES (PRESERVATION AND REGULATION) ACT, 1959) உள்ளது.'' என்றார் தியாகராஜன். ஆனால் அதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செய்வதில்லை என்பதுதான் இவர் உட்பட பலருடைய குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. மதுரை மாநகராட்சி ஹார்வி நகரில் மதுரை மில் தொழிலாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனியாருக்கு ஒரு ஏக்கர் விளையாட்டுத் திடலை மோசடியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஜெகன். ஹார்வி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெகன், ''நகருக்குள் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு விளையாட்டு மைதானத்தை மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். பட்டா ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.'' என்கிறார். 'ஏழை குழந்தைகளுக்கு மைதானம் இல்லை' இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும், பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை நடத்தி வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களில் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்குவதே குறைவு என்ற நிலையில், அப்படி ஒதுக்கப்படும் இடங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதால் ஏழைக்குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் ரஞ்சித், ''முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது நகரங்களில் பெரிய பெரிய ஸ்டேடியங்களை அரசு கட்டுகிறது. தனியாரால் நிறைய 'டர்ஃப்' போன்ற மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானங்கள் மாயமாகிவருகின்றன. அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.'' என்கிறார். தமிழகத்தில் பொது ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பராமரிக்க வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். ஆனால் நகர ஊரமைப்புத்துறையின் ஒப்புதலுடனே இந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர். இதுகுறித்து கருத்து கேட்க அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெறவே முடியவில்லை. படக்குறிப்பு, தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக, தங்கள் அமைப்பினர் வாங்கிய தகவல்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று கூறும் தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், ''வசதி படைத்தவர்கள் பொழுதுபோக்குக்கும், உடற்பயிற்சிக்கும் எங்கேயும் செல்வார்கள். ஏழைகளுக்கு பூங்காக்களை விட்டால் வேறிடமில்லை. இந்த மைதானங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது.'' என்கிறார். மேலும் பிபிசி தமிழிடம் பேசிய அவர், கோவையில் மட்டும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த வழக்குகள் சார்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3epkqwj8w9o

டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறார் டில்வின்

3 months ago
Published By: Digital Desk 1 16 Nov, 2025 | 07:46 AM மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது டெல்லியில் உயர்மட்ட அரசியல் சந்திப்புகளில் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழு பங்கேற்கவுள்ளது. இலங்கை அரசியலிலும், பிராந்திய இராஜதந்திரத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா விஜயத்தை பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியதில் டில்வின் சில்வா முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் பிராந்தியத் தலையீட்டை அன்றும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அதன் பொதுச் செயலாளரை இந்தியாவுக்கு அனுப்புவது, கட்சியின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பாரிய இராஜதந்திர மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் செல்கிறார். இந்த விஜயம் ஜே.வி.பி.யானது பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. ஜனாதிபதி சீனாவிற்குப் பயணம் செய்து ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது அனைவரும் அறிந்ததே. ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வாவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்குப் பிறகு சீனாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயங்களின் போது ஜே.வி.பி.யின் தலைவர்கள் சீனாவுடன் முதலீட்டு உறவுகளை மேலும் வலுவாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்களை எடுத்தததாக செய்திகள் வெளியாகின. சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தியதன் பின்னணியில், இந்திய விஜயம் என்பது, இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்த விரும்பும் ஒரு கட்சி, பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர சமநிலையை நிலைநாட்ட முற்படுவதைக் காட்டுகிறது. ஒரு நாடு சார்ந்து சாய்ந்துவிடாமல், இரு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற அல்லது அவர்களின் கவலைகளைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இது அமைகிறது. இந்தச் சூழ்நிலையில், டில்வின் சில்வாவின் டெல்லி விஜயம், ஜே.வி.பி.யின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக பிரதிப்பலிக்கிறது. உயர் மட்ட அரசியல் சந்திப்புகளில் அவர் பங்கேற்பது, எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளைப் பேணுவதில் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். மறுபுறம் இந்தியாவுடனான கடந்தகால முரண்பாடுகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் தொடர்பில், இந்தியத் தலைமைக்கு நேரடியாக இராஜதந்திர விளக்கமளித்து, புதிய உறவுப் பாதையைத் தொடங்குவதற்கு இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கலாம். டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் என்பது ஜே.வி.பி.யின் இராஜதந்திரக் கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தையும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிராந்திய வல்லரசுகளுடன் முரண்படாமல் சமநிலை உறவைப் பேணுவதற்கான விருப்பத்தையும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230454

தமிழ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: தொல். திருமாவளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை

3 months ago
Published By: Vishnu 16 Nov, 2025 | 02:40 AM இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம் தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர். திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை உலகத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து, அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம். https://www.virakesari.lk/article/230452

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

3 months ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் கட்டுரை தகவல் டிஃப்பனி வெர்தைமர்‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்ததா என்பன போன்ற பரபரப்பூட்டும் தலைப்புகளில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், ஹிட்லரின் டிஎன்ஏ-வில் ஆட்டிசம், ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை மரபணு மூலம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக உயர்ந்த அளவில் இருந்தது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அவருக்கு இந்த நரம்பியல் பிரச்னைகள் இருந்ததாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை, அவருக்கு இந்த நோய்கள் இருந்தன என்று அர்த்தமல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதே நேரம், இந்த ஆராய்ச்சி எதிர்மறையான பார்வைக்கு வழிவகுக்குமா, அது நெறிமுறை ரீதியாக சரியானதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், இதுகுறித்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. "இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்று நிறைய யோசித்தேன்"என சேனல் 4இன் 'ஹிட்லரின் டிஎன்ஏ: ஒரு சர்வாதிகாரியின் ப்ளூபிரின்ட் (Hitler's DNA: Blueprint of a Dictator)' என்னும் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அவரை அணுகியபோது, ஹிட்லர் போன்ற சர்ச்சைக்குரிய நபரை ஆய்வு செய்வதில் ஏற்படும் விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். "பரபரப்பை உருவாக்குவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், இந்த ஆய்வு ஒருநாள் யாராவது ஒரு நபரால் செய்யப்படும். குறைந்தது தனது கண்காணிப்பின் கீழ் நடந்தால், அறிவியல் தரநிலைகளுடனும், "முழு எச்சரிக்கைகளுடனும்" நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதால் இதைச் செய்ய விரும்பினேன் என்கிறார். பேராசிரியர் கிங் இத்தகைய முக்கியமான மற்றும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 2012இல் லெஸ்டரில் கார் நிறுத்துமிடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது ரிச்சர்டின் எலும்புக்கூட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திய மரபணு ஆய்வை வழிநடத்தியவர். பட மூலாதாரம், Gettysburg Museum of History படக்குறிப்பு, ஹிட்லரின் பதுங்கும் இடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி. ரத்தக் கறையை கீழ்-இடது புறத்தில் தெளிவாகக் காணலாம். ஹிட்லரின் ரத்தக் கறை படிந்த துணி ரத்தக் கறை படிந்த அந்தத் துணி, 80 ஆண்டுகள் பழமையானது. அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகள் பெர்லினை நோக்கி முன்னேறியபோது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட அவரது நிலத்தடி மறைவிடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. அந்தப் மறைவிடத்தை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ கர்னல் ரோஸ்வெல் பி. ரோஸென்கிரென், இந்தத் துணியை ஓர் அபூர்வமான போர் நினைவுச் சின்னமாகக் கருதி எடுத்துச் சென்றார். இப்போது அந்தத் துணி அமெரிக்காவின் கெட்டிஸ்பர்க் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியில் உள்ள ரத்தம் உண்மையாகவே ஹிட்லருடையதுதான் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கருதுகிறார்கள். ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிட்லரின் ஆண் உறவினரிடம் இருந்து எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் Y-குரோமோசோம் சரியாகப் பொருந்தியதால், இது ஹிட்லரின் ரத்தம் என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. வரலாற்றில் முதல் முறையாக ஹிட்லரின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆய்வில், மிக மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவருடைய மரபணு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவு முக்கியமானது. ஏனென்றால், 1920களில் இருந்து அவர் யூத மரபுகளின் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவியிருந்தது. பட மூலாதாரம், Hulton Archive/Getty Images மேலும், அவருக்கு கால்மன் சிண்ட்ரோம் (Kallmann syndrome) எனப்படும் மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. இதனால் பருவமடைதல் மற்றும் பாலியல் உறுப்புகள் உருவாகும் முறை பாதிக்கப்படலாம். குறிப்பாக, சிறிய ஆணுறுப்பு மற்றும் விதைப்பை இறங்காமல் இருப்பது போன்ற நிலைகளுக்கு இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போர்க்கால பிரிட்டிஷ் பாடல்களில் கூறப்பட்ட வதந்திகளும் இருந்தன. கால்மன் சிண்ட்ரோம் பாலியல் உணர்வையும் பாதிக்கக்கூடும். இது மிகவும் சுவாரஸ்யமான கோணமாக இருப்பதாக, ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியரும் போட்ஸ்டாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அலெக்ஸ் கே குறிப்பிடுகிறார். "இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்கிறது. சரியாகச் சொன்னால், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையென்பதை வெளிப்படுத்துகிறது," என்று அவர் விளக்குகிறார். ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தது ஏன் என்பது குறித்தும், "அவருக்கு ஏன் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை" என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறார்கள். மரபணு சார்ந்த இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கான விளக்கத்தை வழங்கக்கூடும். இத்தகைய கண்டுபிடிப்புகளே இந்த ஆய்வை சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் துரி கிங் சொல்வது போல, இது "வரலாற்றையும் மரபியலையும் பிணைக்கும்" முயற்சி. பட மூலாதாரம், Tom Barnes/Channel 4 படக்குறிப்பு, மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே கவலை தெரிவிக்கும் மரபணு நிபுணர்கள் ஹிட்லருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பியல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று கூறும் முடிவுகள் மேலும் சிக்கலானவையாக, சர்ச்சைக்குரியவையாக உள்ளன. அவருடைய மரபணுவைப் பரிசோதித்து, பாலிஜெனிக் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டபோது, ஹிட்லருக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை இருப்பதற்கான சாத்தியம் அதிகம் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இங்குதான் அறிவியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது. பாலிஜெனிக் மதிப்பெண் என்பது ஒருவரின் டிஎன்ஏ-வை ஆராய்ந்து, அவருக்கு ஒரு நோய் உருவாகும் சாத்தியம் என்ன என்பதை மதிப்பிடும் முறை. இதய நோய் அல்லது பொதுவான புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான முன்கணிப்பை அறிய இது உதவுகிறது. ஆனால் இது ஒரு பெரிய மக்கள் தொகையின் தரவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுவதால், ஒரு தனிநபருக்கான முடிவுகளை வழங்கும்போது அது எப்போதும் துல்லியமானதாக இருக்காது. பிபிசி பார்த்த இந்த ஆவணப்படம் முழுக்க தொடர்ச்சியாக, இந்த டிஎன்ஏ ஆய்வு ஒரு நோயறிதல் அல்ல, மாறாக முன்கூட்டியே இருந்த சாத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி மட்டுமே என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது, ஹிட்லருக்கு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் இருந்தன என்று அர்த்தமில்லை, இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே ஆய்வு முடிவு காட்டியுள்ளது. ஆனால் சில மரபணு நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், Haacker/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர் கடந்த 2018இல் இதே ரத்த மாதிரியை ஆய்வு செய்த லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தடயவியல் மரபியல் பேராசிரியர் டெனிஸ் சின்டர்கோம்ப் கோர்ட், இந்த முடிவுகள் "மிகைப்படுத்தப்பட்டவை" என்று கருதுகிறார். "ஒருவரின் குணநலன்கள் அல்லது நடத்தையை இதன் மூலம் தீர்மானிப்பது பயனற்றது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "மரபணுவில் சாத்தியம் இருந்தாலும், அது எல்லோரிடமும் நோயாக வெளிப்படாது (incomplete penetrance). அதனால், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஒருவருக்கு நோய் இருக்கிறதா என்று நான் கணிக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கினார். இதையே மரபணு விஞ்ஞானி சுந்தியா ராமன் எளிமையாகச் சொல்கிறார். அதாவது, "உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே, அது உங்கள் உடலில் வெளிப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை." ஆவணப் படத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆட்டிசம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைமன் பாரன்-கோஹனும் இதே கருத்தை முன்வைக்கிறார். "உடலியல் (மரபணு) தகவல்களில் இருந்து ஒருவரின் நடத்தை பற்றிய நேரடி முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது" என்கிறார் அவர். "இவ்வாறான மரபணு முடிவுகளை வெளியிடும்போது எதிர்மறை கருத்து உருவாக வாய்ப்புண்டு. 'எனக்கு இருக்கும் மருத்துவ நிலை, இத்தகைய கொடூர செயல்களைச் செய்த ஒருவருடன் இணைக்கப்படுகிறதா?' என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார். அதேபோல்,"எல்லாவற்றையும் மரபணுவோடு மட்டும் சுருக்கிப் பார்க்கும் மனப்பான்மை இதிலுள்ள ஒரு பெரிய ஆபத்து" எனக் கூறும் அவர், ஏனென்றால் பரிசீலிக்க வேண்டிய பல்வேறு காரணிகள் இன்னும் உள்ளன என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம் 'இதுவொரு மலிவான செயல்' இந்தக் கண்டுபிடிப்புகளை "ஒரு மலிவான செயல்" என்று கூறி, பிரிட்டனின் தேசிய ஆட்டிசம் சங்கம் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மேலும், தரமற்ற அறிவியல் ஆய்வைவிட, இந்த ஆவணப்படம் ஆட்டிசம் உள்ளவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத விதம்தான் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது," என்று ஆராய்ச்சி உதவி இயக்குநர் டிம் நிக்கல்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், "ஆட்டிசம் உள்ளவர்கள் இதைவிடச் சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார். பிபிசி இந்த விமர்சனங்களை சேனல் 4 மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ப்ளிங்க் பிலிம்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் சைமன் பாரன்-கோஹன் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். "ஒருவரின் நடத்தை பல காரணிகளின் விளைவாக உருவாகிறது. அது மரபணுவால் மட்டுமே உருவாவதில்லை. மாறாக, குழந்தைப் பருவம், வாழ்க்கை அனுபவங்கள், வளர்ப்பு, கல்வி, கிடைக்கும் வாய்ப்புகள், சமூகம், கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களால் உருவாகிறது." "இந்த ஆவணப்படம் ஹிட்லரை பற்றி சில மரபணு சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்வது 'முன்பே உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டது' என்று சொல்லவில்லை." பட மூலாதாரம், Stephanie Bonnas படக்குறிப்பு, "ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தபோது, நான் ஒரே நேரத்தில் உற்சாகத்துடனும் கவலையுடனும் இருந்தேன்," என்று பேராசிரியர் தாமஸ் வெபர் கூறினார். ஆவணப்படத்தின் பெயரே, குறிப்பாக "Blueprint of a Dictator" என்ற இரண்டாம் பகுதி பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பெயரை "நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள வரலாற்றாசிரியர் பேராசிரியர் தாமஸ் வெபர், "சர்வாதிகாரி மரபணு என்ற ஒன்றே இல்லை" என்று தாங்கள் வலியுறுத்தி இருந்தபோது, இப்படிப்பட்ட தலைப்பு பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசியிடம் பேசுவதற்கு முன்பு வரை, அந்த ஆவணப்படத்தைப் பார்க்காத பேராசிரியர், டிஎன்ஏ பகுப்பாய்வு உற்சாகமூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார். "ஹிட்லரை பற்றி நான் முன்பே சந்தேகித்த பல விஷயங்களை இந்த மரபணு ஆய்வு உறுதிப்படுத்தியதால், உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒருவரை தவறான பண்பு கொண்டவராக மாற்றும் ஒரு 'தீய மரபணு' இருப்பதாக நினைத்து, மக்கள் மரபியலை தவறாக அல்லது மிகையாகப் புரிந்துகொள்வார்களோ" என்று அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டிசம் மற்றும் பிற சிக்கல்களுடன் வாழும் நபர்களால் இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பொது மக்களுக்கு சிக்கலான அறிவியலை விளக்கும் ஒரு துல்லியமான ஆவணப்படத்தை உருவாக்குவதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன. "இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால், சில நேரங்களில் விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் கிங் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனது பொறுப்புகளையும் ஊடக உலகின் எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர். "ஆவணப்படத்தை தயாரிப்பவர்கள் வேறொரு வழியில் எடுத்திருந்தால், இது மிகப் பரபரப்பானதாக மாறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சில நுணுக்கங்களைப் பாதுகாக்க முயன்றுள்ளனர். மேலும் நாங்களும் தேவையான பாதுகாப்பு வரம்புகளைச் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார். சேனல் 4, இந்த ஆவணப் படத்தின் பெயரைப் பாதுகாத்து, "டிஎன்ஏ-வை பொதுவாக 'வாழ்க்கையின் வரைபடம்' (blueprint of life) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்" என விளக்கியது. மேலும், தங்களின் பணி "பெரிய பார்வையாளர் வட்டத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதுதான். இந்த ஆவணப்படம் சிக்கலான அறிவியல் கருத்துகளையும் வரலாற்று ஆய்வுகளையும் அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முயல்கிறது" எனவும் தெரிவித்தது. பட மூலாதாரம், Alamy படக்குறிப்பு, கடந்த 1945இல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கும் மறைவிடத்தில் சோபாவை ஆய்வு செய்கிறார்கள். நாற்காலியின் கைப்பிடியில் காணப்படும் கறை ரத்தக்கறை என்று கூறப்படுகிறது. நெறிமுறைகள் குறித்து எழும் கேள்விகள் இந்தத் திட்டத்தின் நெறிமுறைகள் குறித்தும் பல கேள்விகள் உள்ளன. 'ஹிட்லரின் அனுமதியையோ அல்லது அவரது நேரடி வாரிசின் அனுமதியையோ பெற முடியாத நிலையில், அவரது டிஎன்ஏ-வை ஆய்வு செய்ய வேண்டுமா? அவர் வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமானவர் என்பதால், அது அவருக்கு தனியுரிமை என்ற ஒன்று இல்லாமல் போகிறதா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. "இவர் ஹிட்லர். யாராலும் அணுக முடியாத மாய மனிதர் அல்ல. அவரின் டிஎன்ஏ-வை ஆய்வு செய்யக்கூடாது என்று யார் முடிவெடுக்கிறார்கள்?" என்று பேராசிரியர் கிங் கேட்கிறார். "விஞ்ஞானிகள் இதைத்தான் செய்கிறார்கள். இறந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொல்பொருள் துறையில் இது சாதாரண நடைமுறைதான். அதை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதில்தான் சிக்கல் உருவாகிறது" என்று வரலாற்றாசிரியர் சுபத்ரா தாஸ் குறிப்பிடுகிறார். "உண்மைகள் சரியாக இருக்க வேண்டும், அனைத்தும் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் நெறிமுறை கோணத்தைப் பற்றித் தனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார் வரலாற்றாசிரியர் முனைவர் கே (Kay). ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஹிட்லர் இறந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு நேரடி வாரிசுகளும், குழந்தைகளும் இல்லை. அவர் அளித்த துன்பம் அளவிட முடியாதது. அதை, அவரது டிஎன்ஏ ஆய்வில் உள்ள நெறிமுறை சிக்கலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார். சுவாரஸ்யமான விஷயமாக, ஐரோப்பாவின் பல ஆய்வகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகம்தான் சோதனையை மேற்கொண்டது. இந்த ஆய்வு "கல்வித்துறையில் தேவையான அனைத்து நெறிமுறை மதிப்பாய்வு செயல்முறைகளையும் கடந்து முடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு நாடுகளில் நடந்த மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது" என்று ஆவணப்பட தயாரிப்பாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம், General Photographic Agency/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, 1933ஆம் ஆண்டில் ஹிட்லர்... இந்த ஆய்வு அவசியமா? இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் இல்லை. பிபிசி பல மரபணு விஞ்ஞானிகளிடமும் வரலாற்றாளர்களிடமும் பேசியது. இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது. ஆவணப் படத்தில் இடம்பெற்ற நிபுணர்கள், ஆம், இந்த ஆய்வு அவசியம் என்று சொல்வார்கள். "இந்த ஆய்வு ஹிட்லரின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் இன்னமும் நம்மை ஈர்ப்பவராகவும், பயமுறுத்தும் ஒரு நபராகவும் உள்ளார்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. "கடந்த காலத்தின் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ள நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என்கிறார் பேராசிரியர் வெபர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹிட்லர், பதுங்குமிடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு ஈவா பிரௌனை மணந்தார். "நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விவாதங்கள் புதியவை அல்ல. நாம் திடீரென்று இந்தக் கருத்தை மக்களின் மனதில் விதைக்கவில்லை. ஹிட்லருக்கு சில மனநலக் கோளாறுகள் இருந்ததா என்பது குறித்து மக்கள் பல தசாப்தங்களாகப் பேசி வந்துள்ளனர்"என்கிறார் முனைவர் கே. ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "ஹிட்லரின் செயல்களைத் தூண்டியது எது என்பதை விளக்க இதுவொரு சந்தேகத்திற்குரிய வழி என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழக சர்வதேச வரலாற்று உதவிப் பேராசிரியர் இவா வுகுசிக். வெகுஜன வன்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் வுகுசிக், மக்கள் ஏன் இதில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் "நாம் தேடும் பதில்கள் டிஎன்ஏ சோதனையிலிருந்து கிடைக்கப் போவதில்லை"என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த ஆய்வு சுவாரஸ்யமானது என்றாலும், இது வரலாற்றின் உண்மையான பாடங்களை மறைக்கும் அபாயம் இருப்பதாக வரலாற்றாசிரியர் ஆன் வான் மௌரிக் குறிப்பிடுகிறார். அதாவது, "சில சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்களே கொடூரமான வன்முறைகளில் ஈடுபடலாம், அதைத் தூண்டலாம் அல்லது அதைப் பொறுத்துக் கொள்ளலாம்" என்பதுதான் அந்தப் பாடம். ஹிட்லரின் (சாத்தியமுள்ள) சிறிய ஆணுறுப்பு போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது, இனப்படுகொலை, வெகுஜன வன்முறை எப்படி செயல்படுகிறது, ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தப் புரிதலையும் நமக்குக் கொடுக்காது என அவர் கூறுகிறார். இந்த ஆய்வு முடிந்து, தற்போது சக நிபுணர்கள் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்புகள் முழுமையாக வெளியே வரும். பேராசிரியர் வெபர் கூறுகையில், இந்த முடிவுகளை "மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும்" பயன்படுத்த வேண்டும். ஆனால், இவை ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்புகிறார். "ஆராய்ச்சி முடிவுகளின் சிறப்பு அதுதான். அதன் மதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ, 150 ஆண்டுகளுக்குப் பிறகோ, 500 ஆண்டுகளுக்குப் பிறகோ தெரியலாம். இந்த ஆய்வு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. "அறிவியலைப் பின்பற்ற வேண்டும். நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று முனைவர் கே கூறுகிறார். இது ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த ஆய்வு எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் அதில் அடங்கும். "இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் துல்லியமாக எழுத வேண்டும். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாவதற்கோ அல்லது எதிர்மறை கருத்து உருவாவதற்கோ பங்களிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். "இதுபோன்ற ஆவணப்படங்கள் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை. மக்களையும் நிகழ்வுகளையும் பாதிக்கக் கூடியது" என்று முனைவர் கே வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn7zm733vo

இந்தோ - பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும்.

3 months ago
இந்தோ - பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும். --- ----- --------- *ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செய்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி *ரணில் - மகிந்தவை, சந்திரிகா ஆகியோரை விடவும், அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை ---- --------- ------ 2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் உள்ளிட்ட இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையாளுகின்றார் என்பதை, அவருடைய சமீபத்திய காய் நகர்த்தல்கள் காண்பிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் இந்திய - சீன அரசுகளையும் கையாளும் அணுகுமுறையானது, தமது கட்சிக் கொள்கைக்கு ஏற்பவும், சர்வதேச அரசியல் - பிராந்திய பாதுகாப்பு - வர்த்தகம் ஆகியவற்றை பேணக்கூடிய முறையிலும் அமைந்துள்ளது. இது ஒருவகையில் சர்வதேச இரட்டைக் கொள்கை என்று கூறினாலும், இந்தியா - அமெரிக்கா - பிரித்தானிய அரசுகளின் ஒத்துழைப்பும் - உதவிகளும் அவசியம் என்ற கோணத்தில், அநுர காய்நகர்த்துகிறார் எனலாம். ஜேவிபியாக அல்லாமல், தேசிய மக்கள் சக்தியாக பயணிக்க வேண்டும் என்ற அநுரவின் சற்று மாறுபட்ட கொள்கைக்கு ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைகளை அப்படியே தொடர்ந்து பின்பற்றும் ரில்வின் சில்வா அதற்கு ஒத்துழைப்பதாக இல்லை. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களில் பலரும் ரில்வின் சில்வாவுடன் இணைந்திருக்கின்றனர். இப் பின்னணியில்தான் 2025 ஆம் ஆண்டு அநுர கையாண்ட சில நுட்பமான அணுகுமுறை காரணமாக ரில்வின் சில்வா அதனை ஏற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜேவிபியின் ஆரம்பகால எதிர்ப்புகளும், இந்தியாவின் விரிவுவாதக் கொள்கைகள் மீதான அதன் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. இருப்பினும், 2025 இல் ஜேவிபி அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்திய அரசாங்கத்துடன் ஜேவிபி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. அநுரகுமார இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். 2025 ஜனவரியில், ஜேவிபியின் தலைவர்கள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். இது அநுரவின் அரசியல் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர், இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இந்திய மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். ஆட்சியைக் கைப்பற்ற முன்னரே, 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்த நிலைப்பாட்டை ஜேபிவி. குறிப்பாக அநுரகுமார கையில் எடு்த்திருக்கிறார். . இந்தியாவுடனான உறவில் 2026 ஆம் ஆண்டு மேலும் சாத்தியங்கள் அதாவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் ஜேவிபிக்கும் இடையிலான உறவுகளில் புதிய வகிபாகத்தை உருவாக்கக்கூடும். அதேவேளை-- தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை அநுர 2025 இல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார். இதன் காரண - காரியம் என்பது ரில்வின் சில்வா மற்றும் அவரை மையப்படுத்திய தேசிய சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்ற சிந்தனை என்று கூறலாம். இதனை மையமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of China – CPC) ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அநுர சென்ற ஒக்ரோபர் மாதம் கைச்சாத்திட்டிருக்கிறார். ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவிற்கு சென்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அநுர, ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவுக்கு பயணம் செய்து நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பிமல் ரத்நாயக்க சீனாவுக்குச் சென்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் சீனாவை எப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வளர்த்ததோ, அதேபோன்று ஒரு செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பிமல் ரத்நாயக்க சீனாவில் விபரித்திருக்கின்றார். ரணில், மகிந்தவை பின்பற்றி ஜேவிபியும் சீனாவுடன் அந்த உறவை பேணுவதற்கு ஏற்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என கூற முடியாது. ஏனெனில், இந்த ஒப்பந்தம் கட்சி அரசியல் மாத்திரமல்ல, புவிசார் அரசியல் - பொருளாதார நலன்கள் என்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆகவே, 2025 இல் அநுர கையாளும் அணுகுமுறை என்பது ரணில், மகிந்த போன்ற தலைவர்களைவிடவும், முற்றிலும் மாறுபட்டது. அதாவது -- புவிசார் அரசியல் விவகாரங்களில் சமாளிப்பு அரசியல் என்பதைவிடவும், இதுதான் ஜேபிவி என்பதையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தும் உத்திதான் இது. குறிப்பாக -- வோஷிங்டன் – புதுடில்லி அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை முற்றிலும் மாறுபட்ட உத்தி. ஆகவே -- அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வகிபாகம் ஜேவிபி என்பதை நிரூபித்துள்ளது என்று கூறலாம். இப் பின்புலத்தில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள் – பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளது. அநுர அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செற்படுவது பற்றி பிரித்தானிய அரசுடன் விரிவாக உரையாட, ரில்வின் சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் லண்டனுக்குச் செல்லவுள்ளார். இதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் ரில்வின் சில்வாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் கூடுதல் உறவைப் பேணும் என பலராலும் எதிர்வு கூறப்பட்ட நிலையில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியும் பிரித்தானிய ஆதரவோடும், மேற்கு நாடுகளுடன் உறவை பேணும் அணுகுமுறையை அநுரகுமார, மற்றொரு பக்கத்தால் பின்பற்றி வருகிறார் என்பது கண்கூடு. ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையோடு செயற்பட்டு வரும் ரில்வின் சில்வா, அதற்கு ஒத்துழைக்க தயங்கிய ஒரு பின்னணியிலும், ரில்வின் சில்வா எதிர்காலத்தில் இந்த நாடுகளை விமர்சிக்காமல் இருக்கும் நோக்கிலும் லண்டன் பயணத்தை அநுர ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் கூறலாம். அதேநேரம் ரில்வின் சில்வா, இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஆகவே -- அநுரகுமார, தனியே இலங்கையின் ஜனாதிபதியாக அல்லாமல், இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் வெவ்வேறுபட்ட அணுகுமுறை ஒன்றை கையாண்டு, இலங்கைத்தீவின் இறைமை என்ற விவகாரத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீன - இந்திய அரசுகள் என்பதை மிக நுட்பமாக கையாளுகிறார். இலங்கையின் தேசிய தலைமை என்ற அங்கீகாரத்தை நோக்கி அவர் பயணிக்கிறார். ஆனால் -- ஈழத்தமிழர் விவகாரம் முற்றிலும் உள்ளக விவகாரம் என்ற ஜேபிவியின் கருத்தியலை மேற்கு - ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை இந்த ஆண்டு அநுர நிரூபித்துள்ளார். அத்துடன் -- மனித உரிமை மீறல் பிரச்சினைகள் - போதைப் பொருள் பிரச்சினைகள் மற்றும் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற விவகாரங்கள் எல்லாமே கடந்த 76 வருட ஆட்சியில் பழம் பெரும் கட்சிகள் விட்ட தவறு என்றும், 2026 ஆம் ஆண்டு அவை முற்றாக ஒழிக்கப்பட்டு வடும் என்ற வாக்குறுதிகளையும் அநுர சர்வதேசத்துக்கு வழங்கியியுள்ளார். குறிப்பாக -- நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பொது நிறுவனங்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் -- ரணில், மகிந்த. கோட்டாபய, சந்திரிகா ஆகிய தலைவர்கள் வடக்குக் கிழக்கில் தங்கள் தமிழ் முகவர்களை பயன்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளை மடைமாற்ற முற்பட்டு தோல்வி கண்ட அணுகுமுறையில் இருந்து, ஜேபிவி மாறுபட்ட உத்தி ஒன்றை கையாள்வதை தமிழ்த்தரப்பு அறியாமல் இருப்பதும் வேடிக்கை. குறிப்பாக --- வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தமிழர்களை வேட்பாளர்களாக ஜேபிவி கண்டறிந்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அனுபவங்களின் பிரகாரம், வரவுள்ள மாகாண சபைத் தேர்தல் அல்லது அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலாகவும் இருக்கலாம், அதில் போட்டியிட செல்வாக்குள்ள தமிழர்கள் பலரை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் - தயாரிப்புகளில், ஜேவிபி மிக நுட்பமாக கையாளும் திறன் கொண்டது. இப் பின்னணியில் --- முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் உள்வாங்கப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் -- தமிழ்த்தேசியக் கட்சிகள் எதனையும் அறியாமல் இருக்கின்றன. அதாவது -- தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி வந்துவிட்டது என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாமல் இருக்கின்றன. புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அது பற்றி புரிந்து கொண்டதாக இல்லை. சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜேவிபியின் காய்நகர்த்தல்களை நன்கு தெரிந்து செயற்படுகின்றன என்றும் கூறலாம். அதில் உண்மை இல்லாமலில்லை. ஆகவே -- அமெரிக்க - இந்திய அரசுகள் பிரித்தானிய மற்றும் சீனா போன்ற நாடுகளை கையாளும் ஜேபிவியின் அணுகுமுறை என்பது, இலங்கைத் தேசியம் என்ற ஒற்றைக் கொள்கைக்கும், ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைக்கும் வலுவூட்டப்படுகின்ற அநுரவின் நுட்பமான காய்நகர்த்தல் என்றால் அது மிகையாகாது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-

வெனிசுலா இராணுவ நடவடிக்கைகள் குறித்து தான் ஒரு முடிவை எடுத்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

3 months ago
இந்த வாரம் பல உயர்மட்ட விளக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க படைபலத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து தனது முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்கான விருப்பங்கள் குறித்து இந்த வாரம் டிரம்பிற்கு அதிகாரிகள் விளக்கினர், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர் எடைபோடுகையில், நான்கு ஆதாரங்கள் CNN இடம் தெரிவித்தன. இதற்கிடையில், பென்டகன் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்று முத்திரை குத்தியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் ஒரு டஜன் போர்க்கப்பல்களையும் 15,000 துருப்புக்களையும் பிராந்தியத்தில் குவித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களின் ஓட்டத்தைக் குறைப்பதற்கான தனது முயற்சிகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னோக்கிச் செல்லும் பாதையை நெருங்கி வருவதாக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார். "நான் ஒருவிதத்தில் முடிவு செய்துவிட்டேன் - ஆம். அதாவது, அது என்னவாக இருக்கும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது, ஆனால் நான் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் அந்தக் கூட்டங்கள் குறித்தும், அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டாரா என்பது குறித்தும் நேரடியாகக் கேட்டபோது டிரம்ப் கூறினார். https://www.cnn.com/2025/11/15/politics/venezuela-trump-military-what-we-know Epstein பிரச்சனை நாளாந்தம் கொழுந்துவிட்டு எரியும் போது இன்னுமொரு பெரிய கோட்டை கீறி Epstein கோட்டை சிறியதாக்க முனைகிறார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்

3 months ago
100 மில்லியன் டாலர் ஊழல் ஊழலைத் தொடர்ந்து நெருங்கிய கூட்டாளிகளுக்கு எதிராக ஜெலென்ஸ்கி தடைகளை விதிக்கிறார். நவம்பர் 12, 2025 பிற்பகல் 3:50 மணி (புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 13, 2025 மதியம் 12:00 மணி ) • 3 நிமிட வாசிப்பு ஒலெக்ஸி சொரோக்கின் எழுதியது 2020 ஆம் ஆண்டில், ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா / ரேடியோ லிபர்ட்டி புலனாய்வு பத்திரிகைத் திட்டமான ஸ்கீம்ஸ் மூலம் படம்பிடிக்கப்பட்ட திமூர் மிண்டிச். (திட்டங்கள்) இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் 4 நிமிடம் இந்த ஆடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது. ஆசிரியரின் குறிப்பு: பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட ஆணையைத் தொடர்ந்து இந்தக் கதை புதுப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நவம்பர் 13 அன்று தனது நெருங்கிய கூட்டாளியான திமூர் மிண்டிச் மற்றும் தொழிலதிபர் ஒலெக்சாண்டர் சுகர்மேன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார். நவம்பர் 10 முதல் நாட்டையே உலுக்கிய அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான எனர்கோடோமை மையமாகக் கொண்ட 100 மில்லியன் டாலர் ஊழல் ஊழலில் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். மிண்டிச் மற்றும் சுகர்மேன் ஆகியோர் எனர்கோடோம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஜெலென்ஸ்கியின் ஆணையின்படி , மிண்டிச்சும் சுகர்மேனும் இஸ்ரேலிய குடிமக்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட தடைகள் மூன்று ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டன. பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ, அரசாங்கம் தடைகள் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக முன்னதாகக் கூறினார். "ஒரு அசாதாரண கூட்டத்தில், திமூர் மிண்டிச் மற்றும் ஒலெக்சாண்டர் சுகர்மேன் ஆகியோருக்கு எதிராக தனிப்பட்ட தடைகளைப் பயன்படுத்துவது குறித்த தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கான முன்மொழிவுகளை அமைச்சரவை சமர்ப்பித்தது," என்று ஸ்வைரிடென்கோ நவம்பர் 12 அன்று ஃபேஸ்புக்கில் எழுதினார். நவம்பர் 11 அன்று, தேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (NABU) எட்டு பேர் மீது லஞ்சம், பதவி துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமாக பணம் சேர்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது . மாநில அணுசக்தி நிறுவனமான எனர்கோடோமுடன் வணிகம் செய்ததற்காக லஞ்சம் மற்றும் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து அந்தக் குழு, குறியீட்டுப் பெயர்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட மொழியைப் பயன்படுத்தி விவாதித்த டேப்களையும் அது வெளியிட்டது. ஊழல் திட்டத்தின் முக்கிய அமைப்பாளர் மிண்டிச் என்று பணியகம் தெரிவித்துள்ளது. அவர் ஜனாதிபதியின் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளர் ஆவார். விசாரணையின்படி, தொழிலதிபர் சுகர்மேன், பணமோசடிக்குப் பயன்படுத்தப்படும் பின் அலுவலகத்தை வழிநடத்தினார். பின் அலுவலகம் சுமார் $100 மில்லியன் பணத்தை மோசடி செய்ததாக ஊழல் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் செய்தி நிறுவனத்தின் ஆதாரங்களின்படி, பணமோசடி வழக்கில் சுகர்மேன் அமெரிக்காவிலும் விசாரணையில் உள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெலென்ஸ்கி விரும்புகிறார். மிண்டிச் மற்றும் சுகர்மேன் ஆகியோர் மீது ரகசிய தகவல் கிடைத்து, அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறினர். கசிவைத் தொடர்ந்து சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) உள் விசாரணையைத் தொடங்கியது. ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின்படி , பல முக்கிய நபர்களும் இதில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது . முன்னாள் துணைப் பிரதமர் ஒலெக்ஸி செர்னிஷோவ் , எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா ஹிரின்சுக், இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றிய நீதி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய செயலாளருமான ருஸ்டெம் உமெரோவ் ஆகியோர் இதில் சிக்கியவர்கள். நவம்பர் 12 அன்று, ஜெலென்ஸ்கி ஹலுஷ்செங்கோ மற்றும் ஹிரின்சுக்கை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். நவம்பர் 12 ஆம் தேதி முன்னதாக ஹலுஷ்செங்கோ இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஸ்வைரிடென்கோ கூறினார். "நீதி அமைச்சரும் எரிசக்தி அமைச்சரும் தங்கள் பதவிகளில் நீடிக்க முடியாது என்று நான் நம்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறினார் . "இது மற்றவற்றுடன், நம்பிக்கையின் விஷயம். குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை தீர்க்கப்பட வேண்டும்." "இந்த அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்ய" ஸ்வைரிடென்கோவிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவர்களின் ராஜினாமாக்களை ஆதரிக்குமாறு உக்ரைன் நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். https://kyivindependent.com/zelensky-to-impose-sanctions-against-his-close-associate-mindich-following-large-scale-corruption-probe-sources-say/ இந்த ஊழலின் பின்னணியில் இருக்கும் தொகை பில்லியன் தொகைகளை எட்டுவதாக கூறுகின்றனர், இந்த ஊழல்வாதிகள் யூத பின்புலம் மற்றும் அவர்களுடனான செலன்ஸ்கியின் நட்பும் ஒரு சூடான நிலையினை செலன்ஸ்கியிற்கு எதிராக உக்கிரேனியர்களிடம் உருவாக்கியுள்ளது. ஒலெக் சுகோவ் எழுதியது நவம்பர் 11, 2025 இரவு 9:47·7 நிமிடம் படித்தது (LR) நீதித்துறை அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனமான திமூர் மிண்டிச்சின் இணை உரிமையாளர், அப்போதைய துணைப் பிரதமர் ஒலெக்ஸி செர்னிஷோவ் ஆகியோர் உக்ரைனின் தொடர்ச்சியான ஊழல் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். (மார்ட்டின் பீரோ/AFP/தியரி மொனாஸ்/கெட்டி இமேஜஸ், கெய்வ் இன்டிபென்டன்ட் எழுதிய படத்தொகுப்பு) அரசியல் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் 9 நிமிடம் இந்த ஆடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது. உக்ரைனின் அரசு அணுசக்தி நிறுவனமான எனர்கோடோமை மையமாகக் கொண்ட ஊழல் விசாரணை, இதுவரை பதிவான மிகப்பெரிய அரசியல் ஊழல்களில் ஒன்றாக மாறி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட கும்பல் தலைவர் திமூர் மிண்டிச் ஆவார் , அவர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நெருங்கிய கூட்டாளியும் ஜனாதிபதியின் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளருமானவர். மிண்டிச் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு அவருக்கு ரகசிய தகவல் கிடைத்து நாட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில், தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் (NABU) மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) ஆகியவற்றின் படி, பல முக்கிய நபர்களும் இதில் சிக்கியிருந்தனர் . முன்னாள் துணைப் பிரதமர் ஒலெக்ஸி செர்னிஷோவ் , இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றிய நீதி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய செயலாளருமான ருஸ்டெம் உமெரோவ் ஆகியோர் இதில் சிக்கியவர்களில் அடங்குவர். இந்த வழக்கை, சம்பந்தப்பட்டவர்களின் பாத்திரங்களை, அதன் அர்த்தம் என்ன என்பதை கீவ் இன்டிபென்டன்ட் விளக்குகிறது. ஒரு பெரிய ஊழல் விசாரணையின் மையத்தில் ஜெலென்ஸ்கியின் ரகசிய கூட்டாளியான திமூர் மிண்டிச் யார்? Who is implicated? நவம்பர் 11 அன்று, ஊழல் தடுப்புப் பிரிவு எட்டு பேர் மீது லஞ்சம், மோசடி மற்றும் சட்டவிரோதமாக பணம் சேர்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் சுமத்தியது . அந்தக் குழு, குறியீட்டுப் பெயர்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, கூறப்படும் லஞ்சம் மற்றும் லஞ்சம் பற்றி விவாதித்த டேப்களையும் அது வெளியிட்டது. ஊழல் திட்டத்தின் முக்கிய அமைப்பாளர் மிண்டிச் என்று பணியகம் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்புப் பணியகத்தால் வெளியிடப்பட்ட பதிவுகளில், மிண்டிச் கார்ல்சன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். நவம்பர் 11 அன்று குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் இஹோர் மிரோனியுக் ஆவார், அவர் டேப்களில் ராக்கெட் என்று அழைக்கப்படுகிறார். அவர் அப்போதைய எரிசக்தி அமைச்சர் ஹலுஷ்செங்கோவின் முன்னாள் ஆலோசகராகவும், மாநில சொத்து நிதியத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் முன்னர் உக்ரேனிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆண்ட்ரி டெர்காச்சின் உதவியாளராகவும் பணியாற்றினார் , அவர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தற்போது ரஷ்ய செனட்டராக பணியாற்றுகிறார். டேப்களில் டெனோர் என்று அடையாளம் காணப்பட்ட டிமிட்ரோ பாசோவ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் முன்னாள் வழக்கறிஞர் மற்றும் எனர்கோடோமின் உடல் பாதுகாப்புத் துறையின் முன்னாள் தலைவர் ஆவார். நவம்பர் 11 அன்று குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேர் பணமோசடிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பின் அலுவலகத்தில் பணிபுரிந்ததாக NABU தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் தொழிலதிபர் ஒலெக்சாண்டர் சுகர்மேன், அவர் சுகர்மேன் என்று அழைக்கப்படுகிறார் என்று சட்ட அமலாக்க வட்டாரம் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளது. அப்போதைய துணைப் பிரதமர் ஒலெக்ஸி செர்னிஷோவ், மே 5, 2025 அன்று செக் குடியரசின் பிராகாவில் காணப்படுகிறார். (தாமஸ் தகாசிக் / சோபா இமேஜஸ் / கெட்டி இமேஜஸ் வழியாக லைட்ராக்கெட்) உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் வட்டாரங்களின்படி, பணமோசடி வழக்கில் சுகர்மேன் அமெரிக்காவிலும் விசாரணையில் உள்ளார். ஊழல் தடுப்புப் பணியகத்தின் பதிவுகளின்படி, ஊழல் திட்டத்தில் பங்கேற்றவர்கள் சே குவேரா என்று அழைக்கப்படும் முன்னாள் துணைப் பிரதமர் செர்னிஷோவுக்கு $1.2 மில்லியனையும் 100,000 யூரோக்களையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது . அவர் மீது சட்டவிரோதமாக செறிவூட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜூன் மாதம் ஊழல் தடுப்புப் பிரிவு லஞ்சம் மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக செர்னிஷோவ் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். கருத்துக்கான கோரிக்கைக்கு அவர் பதிலளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில், மிண்டிச் மற்றும் சுகர்மேன் தப்பி ஓடிவிட்டனர், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. செர்னிஷோவ் தடுத்து வைக்கப்பட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சில சமயங்களில் "எரிசக்தி அமைச்சர்" என்றும், சில சமயங்களில் "பேராசிரியர்" என்ற குறியீட்டுப் பெயராலும் அடையாளம் காணப்படும் ஹலுஷ்செங்கோ, NABU டேப்களிலும் இடம்பெறுகிறார். நவம்பர் 11 அன்று நடந்த நீதிமன்ற விசாரணையில், ஹலுஷ்செங்கோ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உமெரோவ் மீது சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தி மிண்டிச் தனது குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுவதாக ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் செர்ஹி சவிட்ஸ்கி கூறினார் . உமெரோவ் தற்போது பணிபுரியும் நீதி அமைச்சகம், எரிசக்தி அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவை கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை. குற்றச்சாட்டுகளை மறுத்த உமெரோவ், வழங்கப்பட்ட பொருட்கள் குறைந்த தரம் வாய்ந்தவை என்பதால், மிண்டிச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடனான கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகக் கூறினார். ஜெலென்ஸ்கியின் கூட்டாளியான மிண்டிச், அரசாங்கம், வணிகம் ஆகியவற்றில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறார் என்று புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். So what is the scheme? ஊழல் தடுப்புப் பணியகத்தின்படி, சப்ளையர்கள் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தடுக்காமல் இருப்பதற்கும் ஈடாக, மைரோனியுக் மற்றும் பாசோவ் ஆகியோர் எனர்கோடோமின் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 10-15% இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. NABU இன் படி, Energoatom ஆண்டு வருவாய் சுமார் 200 பில்லியன் Hr (4.7 பில்லியன் டாலர்) ஆகும். ஊழல் தடுப்புப் பணியகத்தின் கூற்றுப்படி, இராணுவச் சட்டத்தின் போது, எனர்கோட்டம் உள்ளிட்ட சில மூலோபாய நிறுவனங்களிடமிருந்து நீதிமன்றத்தில் கடன்களைக் கோருவதைத் தடைசெய்யும் அரசாங்க ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி, இந்தத் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் ஒப்பந்ததாரர்களை அச்சுறுத்தி, அழுத்தம் கொடுத்தனர். "நாங்கள் சான்றிதழை ரத்து செய்து தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை ரத்து செய்வோம்..." என்று ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தனது முயற்சிகளை விவரித்து மிரோனியுக் டேப்களில் கூறியதாகக் கூறப்படுகிறது. "இது முழு நிறுவனங்களுக்கும் முழுமையான குழப்பமாக இருக்கும். நீங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். நீங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவீர்கள், மேலும் உங்கள் அனைத்து ஊழியர்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள்." உக்ரைன் நாட்டின் அணுசக்தி நிறுவனமான எனர்கோடோம் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணை, உக்ரைனின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் ஊழல்களில் ஒன்றாக வேகமாக மாறி வருகிறது. (எனர்கோடோம் / பேஸ்புக்) இந்த ஒலிநாடாக்களில், ஊழல் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாக்க எரிசக்தி வசதிகளுக்கான தற்காப்பு நிறுவல்களை உருவாக்க தயக்கம் காட்டுகின்றனர். "அப்படியானால் இனிமேல் நாங்கள் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க மாட்டோம்?" என்று பசோவ் கூறினார். "நான் காத்திருப்பேன்," என்று மிரோனியுக் பதிலளித்தார். "இது பணத்தை வீணடிப்பது - அதற்கு மதிப்பு இல்லை." பின்னர், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கி, அத்தகைய திட்டங்களிலிருந்து பணம் சம்பாதிப்பது பற்றி விவாதிக்கிறார்கள். தற்காப்பு நிறுவல்களை நிர்மாணிப்பதற்கான இலஞ்சங்களை 10% இலிருந்து 15% ஆக அதிகரிப்பது குறித்தும் மைரோனியுக் மற்றும் பாசோவ் விவாதிக்கின்றனர். தேடுதல் வேட்டைக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி கூட்டாளி தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுவதால், சாத்தியமான கசிவு குறித்து வழக்குரைஞர்கள் விசாரிக்கின்றனர். What is Mindich's role? எனர்கோடோமில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சப் பணம், ரஷ்ய சார்பு தப்பியோடிய சட்டமன்ற உறுப்பினர் டெர்காச்சின் உறவினர்களுக்குச் சொந்தமான கிவ் நகரின் பின்புற அலுவலகத்தில் மோசடி செய்யப்பட்டதாக NABU தெரிவித்துள்ளது. பின் அலுவலகம் சுகர்மேன் தலைமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் சுமார் $100 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளார். சுகர்மேனின் செயல்பாடுகள், ஹ்ருஷெவ்ஸ்கி தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து மிண்டிச்சால் கட்டுப்படுத்தப்பட்டதாக NABU கூறியது - இது மிண்டிச் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட கட்டிடத்தைப் பற்றிய வெளிப்படையான குறிப்பு. அந்த டேப்களில், மிண்டிச்சுக்கும் ஹலுஷ்செங்கோவுக்கும் இடையே ஒரு உரையாடல் உள்ளது. திரைப்பட தயாரிப்பாளரும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளருமான திமூர் மிண்டிச், தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில். (சமூக ஊடகங்கள்) மிண்டிச் பதிவுகளில் சுகர்மேனிடமிருந்து பணம் பெறுவது குறித்தும் விவாதிக்கிறார். ஹலுஷ்செங்கோ ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்ற பிறகு இந்த உரையாடல் நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மற்றவற்றுடன், மிண்டிச், வழக்கறிஞர்கள், உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) மற்றும் பொருளாதார பாதுகாப்பு பணியகம் ஆகியவற்றுடன் பணம் தொடர்பான சில அறியப்படாத ஒப்பந்தங்களைக் குறிப்பிடுகிறார். கருத்துக்கான கோரிக்கைகளுக்கு வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகமும் SBUவும் பதிலளிக்கவில்லை. "பொருளாதார பாதுகாப்பு பணியகம் அனைத்து உண்மைகளையும் நிறுவ NABU உடன் ஒத்துழைக்கும்," என்று பணியகத்தின் தலைவர் ஒலெக்சாண்டர் சிவின்ஸ்கி கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். "இன்றைய நிலவரப்படி, கேள்விக்குரிய பதிவுகளின் போது இருந்த தலைமையின் குறிப்பிடத்தக்க பகுதியினர் ராஜினாமா செய்துள்ளனர்." "இந்த சூழ்நிலையில் தொடர்புடைய சில நபர்கள் இன்னும் இருக்கக்கூடும்" என்பதை அவர் நிராகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். "நாங்கள் எங்கள் சக ஊழியர்களுக்கு உதவுவோம், மேலும் அந்த நபர்களை அடையாளம் காண சுயாதீனமாக பணியாற்றுவோம்," என்று சிவின்ஸ்கி கூறினார். "எங்கள் அமைப்பை சுத்தப்படுத்துவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்." மிண்டிச் "ஒரு வீட்டை வாங்குகிறார்" என்றும் சுகர்மேன் டேப்களில் கூறினார். "(கார்ல்சன்) சுவிட்சர்லாந்திற்கு 3 மில்லியன் டாலர்கள் செலுத்துமாறு எங்களிடம் கேட்கிறார்," என்று அவர் கூறினார். "... இஸ்ரேலுக்கு மற்றொரு மில்லியன் (செலுத்தப்பட வேண்டும்), மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு 3 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும்." https://kyivindependent.com/explainer-who-is-implicated-in-ukraines-biggest-ongoing-corruption-case-and-what-are-they-accused-of/
Checked
Tue, 02/17/2026 - 03:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed