3 months ago
தீருவில் சதுக்கத்தில் மாவீரர்நாள் ஏற்பாடுகள் மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் துப்புரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறை தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுச் சதுக்கத்தில் வருடா வருடம் மாவீரர்நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வல்வெட்டித்துறை நகரசபைச் செயலாளரின் ஏற்பாட்டில் தீருவில் சதுக்கத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற்பாட்டுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். அதனையடுத்து நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றுவதற்கு வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் அறிவுறுத்தலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் தீருவில் சதுக்க மைதானத்தில் துப்புரவு செய்யப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. https://newuthayan.com/article/தீருவில்_சதுக்கத்தில்_மாவீரர்நாள்_ஏற்பாடுகள்
3 months ago
கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வெற்றிகொண்ட பாகிஸ்தான் தொடரை முழுமையாக (3 - 0) கைப்பற்றியது Published By: Vishnu 17 Nov, 2025 | 12:23 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக கைப்பற்றியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் ஈட்டிய மூன்றாவது முழுமையான வெற்றி இதுவாகும். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹசீபுல்லா கான் 4ஆவது ஓவரில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (8 - 1 விக்.) எனினும், பக்கார் ஸமான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். பக்கார் ஸமான் 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் மேலும் இரண்டு விக்கெட்கள் சிரான இடைவெளியில் சரிந்தன. பாபர் அஸாம் 34 ஒட்டங்களையும் சல்மான் அகா 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் மொஹம்மத் ரிஸ்வான், ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை இலகுவாக வெற்றியீட்ட உதவினர். மொஹமத் ரிஸ்வான் 61 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்தவீச்சில் ஜெவ்றி வெண்டசே 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார ஆகிய இருவரும் இந்தப் போட்டியிலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும், அதன் பின்னர் இலங்கை அணியினால் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்த முடியாமல் போனது. துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் அறிமுக வீரர் பவன் ரத்நாயக்க 32 ஓட்டங்களையும் காமில் மிஷார 29 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் வசிம் (கனிஷ்ட) 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பைசால் அக்ரம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மொஹம்மத் வசிம் (கனிஷ்ட) தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப் https://www.virakesari.lk/article/230524
3 months ago
பம்பாய் மிட்டாசு… நம்ம ஊரு…மிட்டாசு பம்பாய் மிட்டாசு… இழுத்தால் ..நாலடி போகும் இதன் விலையோ பத்து சதம் மட்டுமே.. இரப்பர் மிட்டாசை காவிவரும் இராமையா இனிக்க இனிக்க பேசுவார் இரும்பான உடல்வாகும்.. இதயத்தில்….இரக்கமும் கொண்டவர்.. சண்டிக்கட்டு கட்டிய மட்டக்களப்பு சாரமும்…இடுப்பில் காசு போட சுருக்குப் பையும்…வெற்றிலை சாறுவழியும் கடவாயும்…இராமரின் டிரேட் மார்க் சாற்றை துடைக்கவும்… சாய மிட்டாசின் கறை துடைக்கவும் சால்வை த் துண்டொண்று தோழிலிருக்கும்.. தொழில் தருமம்…தவறாத மனுசன் அவர் நாலடியில் நல்ல வழு வழுத்த தடியில் நல்ல சிவப்புக் கலரில் சுற்றிய மிட்டாசுடன் நிமிர்த நடையுடன்…கணீர்குரலில் பம் ..பம்பக் …குரல் கேட்டதும் பறந்துபோய் சுற்றி வளைப்போம் …இராமையாவை நீண்டவழி நடந்து வரும் இராமையாவின் அன்றாடக் கடமைகள் வடலிக் காணியிலும் வயிற்றை நிரப்ப பனங்கள்ளும்தான்… இப்படியே நாள் முழுக்க நின்றாலும் கூட இனிப்பை இழுத்து மடித்துத் தருகையில் இவர்பற்றிய எந்த அபிப்பிரயமும் மறந்து போகும் இந்த சுவை நாவில் பட்டு …சிவப்பாமாறும் இனிய தருணம் …அப்பப்பா…சொல்லி மாளாது இலங்கைபோய் … இராமையா போன்றோரை தேடி இளைச்சுக் கழைச்சதுதான் மிச்சம்… இது நம்ம அனுபவம்.....சாப்பிட்டுப் பாருங்க
3 months ago
சவுதியில் கோர விபத்து - 42 இந்தியர்கள் உயிரிழப்பு? Nov 17, 2025 - 11:02 AM சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்ட போதும், அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmi2pjooo01oto29ntmqftv21
3 months ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 17 நவம்பர் 2025, 02:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்? தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் உள்ளே உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரவும் பிரியவும் தொடங்கி, ஒரு கட்டியை உருவாக்கும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தச் சிதைந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவை என்றாலும், இந்த நோயின் விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்துச் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் புற்றுநோய் பற்றி தெரிவிக்கும் அமைப்பான 'கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகள்' (Surveillance, Epidemiology, and End Results - Seer) தரவுத்தளத்தின்படி, அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோயின் நிகழ்வு விகிதம் 1980 மற்றும் 2016 க்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஆண்களில் 1 லட்சம் பேரில் 2.39 லிருந்து 7.54 பேருக்கும், பெண்களில் 1 லட்சம் பேரில் 6.15 லிருந்து 21.28 பேருக்கும் உயர்ந்துள்ளது. "மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் அதிகரித்து வரும் சில புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோயும் ஒன்றாகும்," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCSF) உட்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சான்சியானா ரோமன் கூறுகிறார். அப்படியானால், இந்த பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணியில் என்ன இருக்கிறது? குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு (ionising radiation) ஆளாவது தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணு விபத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில், பெலாரஸ், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் குழந்தைகளிடையே இந்த நோயின் விகிதங்கள் வேகமாக உயர்ந்தன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில், 1958 முதல் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36% பேருக்கு குழந்தைப் பருவத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தைராய்டு புற்றுநோய் எண்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இத்தகைய உயர்வை விளக்கக்கூடிய வகையில் 80கள் அல்லது 90களில் அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணுசக்திப் பேரழிவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் நிபுணர்கள் குழப்பமடைந்தனர், இருப்பினும் இறுதியில் ஒரு விளக்கம் முன்வைக்கப்பட்டது - நோயறிதல் மேம்பட்டதுதான் இதற்குக் காரணமா? 1980களில், மருத்துவர்கள் முதன்முறையாக தைராய்டு அல்ட்ராசோனோகிராபியைப் (thyroid ultrasonography) பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி தைராய்டு சுரப்பியின் படங்களை உருவாக்கும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். முன்பு கண்டறிய முடியாத மிகச் சிறிய தைராய்டு புற்றுநோய்களை மருத்துவர்கள் கண்டறிய இந்த முறை உதவியது. பின்னர் 1990களில், சந்தேகத்திற்கிடமான கட்டிகள் புற்றுநோயா என கண்டறிய மருத்துவர்கள் அந்த கட்டியிலிருந்து செல்களைச் சேகரிக்க தொடங்கினர். இது நுண் ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (fine needle aspiration biopsy) என்று அழைக்கப்படும் நுட்பமாகும். "முன்பு, மருத்துவர்கள் கட்டிகளைத் கண்டறிய தைராய்டு சுரப்பியைத் தொட்டுப் பார்ப்பார்கள்," என்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் காரி கிடாஹாரா கூறுகிறார். "ஆனால் அல்ட்ராசோனோகிராபி போன்ற நுட்பங்கள் மூலம், மருத்துவர்களால் சிறிய அளவிலான முடிச்சுகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றிலிருந்து பயாப்ஸி எடுக்க முடிந்தது. இது சிறிய அளவிலான பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிய வழிவகுத்தது, அவை முன்பு (உடலைத் தொட்டுச் சோதிக்கும் முறையால்) உணரப்படாது." மற்ற ஆதாரங்களும் இந்த அதிகப்படியான நோயறிதல் (over-diagnosis) கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளன. உதாரணமாக, தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அதிகமானாலும், தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் நிலையாக இருப்பது போல் தோன்றியது. இதற்கிடையில், தென் கொரியாவில் தேசிய தைராய்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதிப்பு அதிகமாக இருந்தது. திட்டம் குறைக்கப்பட்டபோது விகிதங்களும் மீண்டும் சரிந்தன. கிடாஹாரா, "ஒட்டுமொத்தமாக இந்த மாதிரிகள் அதிகப்படியான நோயறிதலுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, கண்டறியப்படாமல் விடப்பட்டிருந்தால், அந்த நபர்களுக்கு அறிகுறிகளையோ அல்லது மரணத்தையோ ஒருபோதும் ஏற்படுத்தாத நோயை அதிகமாகக் கண்டறிதல் ஆகும்," என்று கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுசக்திப் பேரழிவுக்குப் பிறகு யுக்ரேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் கடுமையாக அதிகரித்தன. சிறிய பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்கள் பொதுவாக வளரும் மற்றும் சிகிச்சைக்கு நன்றாக குணமாகும் என்று இப்போது நமக்குத் தெரியும். இவை அரிதாகவே அபாயகரமானவையாக இருக்கின்றன. மேலும், இதை முன்பே கணிக்கவும் முடியும். ஆனால் அந்தக் காலத்தில், இந்தப் புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிவது பலருக்குத் தேவையற்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு வழிவகுத்தது. இதில் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவது, அதைத் தொடர்ந்து எஞ்சிய செல்களை அகற்ற கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவைசிகிச்சை சில சமயங்களில் குரல் நாண் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் கதிரியக்க அயோடின் சிகிச்சையும் இரண்டாம் நிலை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதன் விளைவாக, அமெரிக்காவில் இப்போது வெகு தீவிர புற்றுநோய்களுக்கு மட்டுமே கதிரியக்க அயோடின் பயன்படுத்தப்படுவதுடன், பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க மருந்தின் அளவுகள் குறைக்கப்படுகின்றன. தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பெரும்பாலும் அதை பகுதியளவு அகற்றுகிறார்கள் அல்லது 'கண்காணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள். இதன் விளைவாக, கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் இப்போது நிலையானதாகிவிட்டன என்று கூறுகின்றன. உதாரணமாக, 2010 இல் 1 லட்சம் பேருக்குச் சராசரியாக 13.9 புதிய பாதிப்புகள் இருந்தன, அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் கிடைத்த கடைசி ஆண்டான 2022 இல் 1 லட்சம் பேரில் 14.1 பாதிப்புகள் இருந்தன. இருப்பினும், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே பாதிப்பு விகிதம் அதிகரிப்புக்கு முழுமையாக விளக்கமாக இருக்கமுடியாது என்று சில விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக வாதிடுகின்றனர். இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் துறைப் பேராசிரியரான ரிக்கார்டோ விக்னேரி ஒரு ஆய்வில், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்தால், சிறந்த நோயறிதல் நடைமுறைகளைக் கொண்ட உயர் வருமான நாடுகளில் மட்டுமே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று வாதிடுகிறார். இருப்பினும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அது உண்மையல்ல என்கிறார் அவர். "வலுவான பரிசோதனை இல்லாத இடங்களிலும் கூட தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன," என்று ரோமன் கூறுகிறார். "பெரிய மற்றும் மிகவும் முற்றிய கட்டிகளும் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. இது நோயறிதல் சார்பு மற்றும் நோய் பாதிப்பின் உண்மையான அதிகரிப்பு இரண்டின் கலவையையும் நாம் பார்க்கிறோம் என்பதைக் குறிக்கிறது." தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்ப கட்டங்களில் அதிகமாகக் கண்டறியப்படுவதாலும் சிகிச்சையின் விளைவுகள் மேம்பட்டுள்ளதாலும், தைராய்டு புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று விக்னேரி கூறுகிறார். இருப்பினும், இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு சுமார் 0.5 ஆக நிலையானதாகவே உள்ளது, சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சி.டி. ஸ்கேன்கள் போன்ற அதிக அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சுடன் கூடிய நடைமுறைகளின் அதிகரிப்பு, பதிப்பு விகித உயர்வுக்குப் பங்களிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, ஒரு ஆய்வு கலிபோர்னியாவில் 2000 முதல் 2017 வரை கண்டறியப்பட்ட 69,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளை ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் காலப்போக்கில் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். அந்த அதிகரிப்பு கட்டியின் அளவு மற்றும் புற்றுநோயின் நிலையோடு தொடர்பில்லாமல் இருந்தது, இது மிகச் சிறிய கட்டிகளின் மேம்பட்ட நோயறிதலைத் தவிர வேறு ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. 2017 இல், கிடாஹாராவும் அவரது குழுவும் 1974-2013 க்கும் இடையில் கண்டறியப்பட்ட 77,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளின் மருத்துவப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பாதிப்புகள் தைராய்டு சுரப்பியில் சிறிய பாப்பிலரி கட்டிகளால் ஏற்பட்டாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த பரவும் (metastatic) பாப்பிலரி புற்றுநோய்களும் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை என்றாலும், இவை ஆண்டுக்கு 1.1% என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதையும் ஆய்வு காட்டியது. கிடாஹாரா, "இந்த மிகவும் தீவிரமான கட்டிகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடிய வேறு ஏதாவது ஒன்று இருக்கலாம் என்று காட்டுகிறது," என்கிறார். முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுபவனவற்றில் உடல் பருமனும் ஒன்று, இது 1980 களில் இருந்து, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிக எடைக்கும் தைராய்டு புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக ஆரோக்கியமான மக்களுடன் தொடங்கி ஒரு நீண்ட கால அடிப்படையில் நடத்தப்படும் குழு ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக பிஎம்ஐ (BMI) கொண்ட நபர்கள் ஆரோக்கியமான பிஎம்ஐ கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் வாழ்நாளில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு 50% க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. அதிக பிஎம்ஐ தீவிரமான புற்றுநோய் கட்டி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பாதிப்பு கண்டறியப்படும்போது பெரிய அளவில் இருப்பது அல்லது புற்றுநோய் எளிதில் பரவக்கூடிய ஒரு பிறழ்வைக் கொண்டிருப்பது. "எங்கள் ஆராய்ச்சியில், அதிக பிஎம்ஐ, தைராய்டு புற்றுநோய் தொடர்பான மரணத்தின் அதிக அபாயத்துடன் தொடர்பு இருப்பதையும் கண்டோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே இது வெறும் பாதிப்பு கண்டறிதல் சார்பு அல்ல என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாக இருந்தது. அதிக பிஎம்ஐ கொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று தைராய்டைச் சோதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக தைராய்டு புற்றுநோய் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிக பிஎம்ஐ இருப்பது தைராய்டு புற்றுநோய் உருவாவது மற்றும் வளர்ச்சியுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரம் இது." இருப்பினும், உடல் பருமன் எப்படித் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடல் பருமன் கொண்டவர்களுக்குத் தைராய்டு செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. உதாரணமாக, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் (TSH) அதிக அளவு கொண்ட நபர்கள் அதிக பிஎம்ஐயையும் கொண்டிருக்கிறார்கள். "சாத்தியமான அடிப்படை வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது இன்னும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, ஆனால் இது பல காரணிகளால் இருக்கலாம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "உடல் பருமன் பல உடலியல் விளைவுகளைக் கொண்டுள்ளது, எனவே வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீயணைப்பு நுரை போன்ற பொதுவான பொருட்களில் காணப்படும் உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்களும் (Endocrine-disrupting chemicals) தைராய்டு புற்றுநோய் அபாயத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்கலாம் பிற விஞ்ஞானிகள், சாதாரண வீட்டுப் பொருட்கள் மற்றும் கரிமப் பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் "உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்கள்" (endocrine disrupting chemicals - EDCs) காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடலின் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கவோ, தடுக்கவோ அல்லது அவற்றில் குறுக்கிடும் தன்மையுடையவையாகவோ இருக்கும். உதாரணமாக, பெர்ஃப்ளூரோஆக்டனோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோஆக்டேன்சல்பானிக் அமிலம் (PFOS) ஆகியவை இதில் அடங்கும். இவை சமையல் பாத்திரங்கள் மற்றும் காகித உணவுப் பொதிவு முதல் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் தீயணைக்கும் நுரை வரை பல பொருட்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய ரசாயனங்களைத் தைராய்டு புற்றுநோயுடன் இணைக்கும் சான்றுகள் கலவையாகவே உள்ளன. பிற ஆய்வுகள், சுவடு கூறுகள் (trace elements) ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. சுவடு கூறுகள் என்பவை உயிரினங்களுக்கு மிகச் சிறிய அளவில் மட்டுமே தேவைப்படும் ரசாயனத் தனிமங்கள் ஆகும். இருப்பினும், அவை தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானவை. "தீவு நாடுகளில் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எரிமலை வெடிப்புகள் தொடர்பான சுவடு கூறுகளைப் பற்றிய கருதுகோள்கள் உள்ளன. அதனால் துத்தநாகம் (zinc), காட்மியம் (cadmium), வனேடியம் (vanadium) போன்ற வேறு சில ரசாயனங்கள் இந்தச் சூழல்களில் அதிக தைராய்டு புற்றுநோய் விகிதங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் நேரடித் தொடர்பை காட்டுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட அதிக தொற்றுநோயியல் ஆய்வுகள் எதுவும் இல்லை." இருப்பினும், நோயறிதலுக்கான மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கிடாஹாரா நம்புகிறார். குறிப்பாக அமெரிக்காவில் 80களிலிருந்து சி.டி. (CT) மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன்கள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன்களும் அடங்கும். இந்த சி.டி. ஸ்கேன்கள் தைராய்டு சுரப்பிக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கதிர்வீச்சை அளிக்கின்றன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மீதான ஆய்வுகள் போன்ற பிற ஆய்வுகளிலிருந்து கதிர்வீச்சுக்கும் தைராய்டு புற்றுநோய்க்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் அறிந்திருப்பதன் மூலம், அத்தகைய கதிர்வீச்சின் விளைவுகளை நாம் மாதிரிப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இனிவரும் காலங்களில், ஆண்டுக்கு அமெரிக்காவில் சுமார் 3,500 தைராய்டு புற்றுநோய்கள் சி.டி. ஸ்கேன் விகிதங்களால் நேரடியாக ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. "இளம் தைராய்டு சுரப்பி, வயதானவர்களின் தைராய்டு சுரப்பியை விடக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே சி.டி. ஸ்கேன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் உயர்வுக்குப் பகுதி பங்களிக்கக்கூடும் என்பது சாத்தியமே." இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்றிணைந்த பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. "நாம் சுற்றுச்சூழல், வளர்சிதை மாற்றம், உணவு மற்றும் ஹார்மோன் தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அத்துடன் அடிப்படை மரபணு ஏற்புத்திறனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல காரணி நிகழ்வைப் பார்க்கிறோம்," என்று ரோமன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgzjx316dyo
3 months ago
அப்ப பலாலியில் போய் இறங்குவது என்பது எப்பவுமே கனவு தான்.☹️
3 months ago
புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Digital Desk 1 17 Nov, 2025 | 11:25 AM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17) விளக்கமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230548
3 months ago
3 months ago
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்! அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் அனுமதிப் பத்திரங்களை விரைவாக அச்சிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குருணாகலிலும் விரைவில் அச்சிடும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1452918
3 months ago
அததெரண கருத்துப்படம்.
3 months ago
பெண் சுற்றுலாப் பயணி மீதான பாலியல் வன்புணர்வு முயற்சி; சந்தேக நபர் கைது! அருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக ஊடக தளங்களில் பரவிய காணொளியில், இலங்கையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணை சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, சந்தேக நபரை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்காக இலங்கை பொலிஸார் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (16) மாலை சந்தேக நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, இந்த குற்றம் 2025.10.25 அன்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், சுற்றுலாப் பிரிவு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூட்டு நடவடிக்கையின் பின்னணியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் அடையாளத்தை மாற்றியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452900
3 months ago
இன்றைய வானிலை 17 Nov, 2025 | 06:07 AM இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230533
3 months ago
வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது Published By: Vishnu 17 Nov, 2025 | 02:45 AM திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தொடர்புடைய 23 வயதான திருமணமான இளைஞர் ஒருவரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கைக்கு வந்திருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா மேற்கொண்டபோது ஒருவன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு செய்திருந்தார். மேலும், சம்பவத்தின் காட்சியையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதையடுத்து இது பெரும் கவனம் பெற்றது. சுற்றுலா பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பெண் அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230531
3 months ago
ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், நடிகர்களான அஜித் குமார், அரவிந்த் சுவாமி மற்றும் குஷ்பு ஆகியோரின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் முதல்வர் மற்றும் நடிகர்களின் வெளிப்புற வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னர், பொலிஸார் அதிரடியாக செயல்பட்டு, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முழுமையாக சோதனை செய்தனர். எனினும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த மாதமும் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. ஒக்டோபர் 3 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதற்கிடையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி, சென்னை விமான நிலைய முகாமையாளர் அலுவலகத்திற்கும் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மர்மமான மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலின்படி, விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் சக்திவாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் அது ஒரு புரளியாகவும் மாறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452928
3 months ago
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு! சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிகள் இன்னும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை சரிபார்த்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. https://athavannews.com/2025/1452932
3 months ago
படக்குறிப்பு,(இடமிருந்து) தமிமுன் அன்சாரி, தனியரசு, கிருஷ்ணசாமி, வேல்முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வாய்ப்புகளை எடை போடத் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறிய கட்சிகள் தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை நோக்கி காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது? 2021-ல் யார் எந்தப் பக்கம் இருந்தனர்? கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள் தவிர, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆர். அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக மக்கள் முன்னணி போன்றவையும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தேசிய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன. மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கலப்பை மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் இயக்கம் போன்ற சிறிய அமைப்புகளும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்தன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்றிருந்தது. நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது தமிழகத்தில் அரசியல் காட்சிகள் சற்று மாறியிருந்தன. தி.மு.க. கூட்டணி மக்கள் நீதி மய்யத்தை இணைத்துக் கொண்டு அதே போலத் தொடர, தேசிய ஜனநாயகக் கூட்டணயில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியிருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'ஒரு லிட்டர் பால் கூட இல்லாமல் லட்சக்கணக்கான கிலோ நெய் தயாரிப்பு' - திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கு ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி விசாரித்த முக்கிய வழக்குகளும் சர்ச்சைகளும் வாங்காத ரூ.100 லஞ்சத்திற்காக 39 ஆண்டு 'தண்டனை' அனுபவித்த ஒருவரின் துயரக் கதை End of அதிகம் படிக்கப்பட்டது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர, புதிய தமிழகம் கட்சியும் எஸ்டிபிஐ கட்சியும் இடம்பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தவிர, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காட்சிகள் மாறியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்த அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் சிறிய கட்சிகள் தங்களுக்கான வாய்ப்புகளை எடைபோடத் துவங்கியுள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி பட மூலாதாரம், Facebook/Velmurugan T படக்குறிப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க. கூட்டணியில் அவ்வப்போது அதிருப்திக் குரலை எழுப்பிவரும் கட்சி தி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறார் தி. வேல்முருகன். 2021ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் தி. வேல்முருகன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சட்டமன்றத்தில் பல தருணங்களில் தி.மு.க. அமைச்சர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டன. அதேபோல, சபாநாயகருக்கும் தி. வேல்முருகனுக்கும் இடையிலும் மோதல்கள் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் எல்லாம் தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார் வேல்முருகன். இந்தத் தேர்தலில் என்ன திட்டத்தில் இருக்கிறார் அவர்? "நான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்போம். எங்கள் தகுதிக்குரிய இடங்களை எதிர்பார்ப்போம். அந்த அளவுக்குரிய இடங்கள் கிடைக்காவிட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அங்கே செல்ல முடியாது. த.வெ.க. ஒரு நடிகரின் கட்சி. அங்கேயும் செல்ல முடியாது. ஆனால், வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்குரிய இடங்களை நாங்கள் நிச்சயம் எதிர்பார்ப்போம்" என பிபிசியிடம் தெரிவித்தார் வேல்முருகன். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பட மூலாதாரம், Facebook/Thaniyarasu படக்குறிப்பு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு நீண்ட காலமாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் ஒன்று உ. தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. கோவை செழியனுடன் சில காலம் இணைந்து செயல்பட்டுவந்த உ. தனியரசு, 2001ஆம் ஆண்டில் கோவையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை துவக்கினார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலலிதா மறைந்த பிறகும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தார். ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உ. தனியரசுவுக்கு இடம் ஏதும் தரப்படவில்லை. "2021ல் தி.மு.கவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அ.தி.மு.கவிலேயே இருக்கத் தீர்மானித்தேன். இறுதி நேரத்தில் இடம் வழங்கப்படவில்லை" என்கிறார் தனியரசு. இதற்குப் பிறகு அவரது கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.பக்கம் திரும்பியது. "கடந்த வியாழக்கிழமையன்று முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த முறை தி.மு.க. கூட்டணியில்தான் இடம்பெற விரும்புகிறேன்." என பிபிசியிடம் தெரிவித்தார் தனியரசு. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இருக்கும் நிலையில், மேலும் ஒரு கொங்குப் பகுதிக்கான கட்சியும் அதே கூட்டணயில் இடம்பெற முடியுமா என கேட்ட போது, "அவர்களோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. ஆகவே, கூட்டணியில் இடம்பெற முடியுமென்றுதான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் உ. தனியரசு. மனிதநேய ஜனநாயகக் கட்சி பட மூலாதாரம், Facebook/Thaminum Ansari படக்குறிப்பு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து 2016ஆம் ஆண்டில் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உருவானது. 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு இரு இடங்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு. தமிமுன் அன்சாரி வெற்றிபெற்றார். ஜெ. ஜெயலலிதா மறைந்த பிறகும் தொடர்ந்து அக்கட்சி அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவான பிறகு அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார் தமிமுன் அன்சாரி. இந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார் மு. தமிமுன் அன்சாரி. "2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியை எதிர்த்துவருகிறோம். இந்த முறை தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் இடம்பெறுவோம்" என்கிறார் அவர். புதிய தமிழகம் கட்சி பட மூலாதாரம், Facebook/Dr K Krishnasamy படக்குறிப்பு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் போட்டியிட்டது அக்கட்சி. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்தத் தருணத்தில் கே. கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்தார். ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "வரும் ஜனவரி 7ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்குப் பிறகுதான் கூட்டணி தொடர்பான எங்கள் நிலைப்பாட்டைச் சொல்வோம். இப்போது எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மக்களின் நிலை மோசமடைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எல்லாவிதங்களிலும் மோசமான நிலையை எட்டியிருக்கிறோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் முடிவெடுப்போம். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செயல்திட்டம். அதனை மனதில்வைத்து கூட்டணி முடிவுகளை எடுப்போம்" என்றார் கே. கிருஷ்ணசாமி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் அதிலிருந்து வெளியேறியது ஏன் என கேட்டதற்கு "அ.தி.மு.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. அதைப் பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் சுதந்திரமாக இயங்குகிறோம். அவ்வளவுதான்" என்கிறார் கிருஷ்ணசாமி. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பட மூலாதாரம், Facebook/John Pandian படக்குறிப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்த ஜான் பாண்டியன், 2000வது ஆண்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலும் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டார் ஜான் பாண்டியன். பிறகு, 2017ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2021ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2024ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறார் ஜான் பாண்டியன். வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என கேட்டதற்கு, "நாங்கள் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது எங்கள் கட்சியினரைக் கலந்தாலோசித்துத்தான் முடிவுசெய்வோம். அந்தத் தருணத்தில்தான் அதைச் சொல்ல முடியும்" என பிபிசியிடம் தெரிவித்தார் ஜான் பாண்டியன். சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) பட மூலாதாரம், Facebook/Nellai Mubarak படக்குறிப்பு, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவவர் முபாரக் சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து இக்கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனியாகவே மூன்று இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது, தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால், உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தமாக 32 இடங்களில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டது. 2021லும் அதே கூட்டணியில் இடம்பெற்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் (திண்டுக்கல்) போட்டியிட்டது. ஆனால், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிவிட்டு அந்தக் கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ வெளியேறியது. இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக். "எங்கள் கட்சியின் பொதுக் குழுதான் தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்கும். வரும் ஜனவரி மாதத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கவிருக்கிறோம். இந்த முறை எப்படியும் சட்டமன்றத்தில் எங்கள் கணக்கைத் துவங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து முடிவெடுப்போம்" என்கிறார் முபாரக். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y9r2gxjv7o
3 months ago
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும். அந்த காலம் முடிந்ததும், அகதி அந்தஸ்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும். அதிலும் குறிப்பாக — நிரந்தர குடியிருப்புக்கான காத்திருப்பு காலம் 5 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. இதன்படி, அகதி அந்தஸ்துடன் இருக்கும் காலத்தில் ஒருவரின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்பட்டால், அவர் பிரித்தானியாவை விட்டு நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்படும். இந்த கொள்கை, டென்மார்க் நாட்டின் கடுமையான குடியேற்ற மாதிரியை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. டென்மார்கில் அகதிகளுக்கு பொதுவாக 2 ஆண்டுகள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில், Labour கட்சியின் சில எம்.பிக்களிடமிருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் முடியும் 12 மாதங்களில், பிரித்தானியாவில் 1 லட்சத்து 9,343 பேர் அகதி விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 17% அதிகம். இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகள் மூலம் 39,000-க்கும் மேற்பட்டோர் பிரித்தானியா வந்துள்ளனர். இது 2024 மற்றும் 2023 ஆண்டுகளை ஏற்கனவே தாண்டியுள்ளது. https://athavannews.com/2025/1452942
3 months ago
Published By: Digital Desk 1 17 Nov, 2025 | 08:08 AM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவிற்கமைய இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பேஸ்புக் பதிவில் குறித்த காணொளியை வெளியிட்டு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர். மக்கள் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர். எனினும், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவுகள், ஒரு பொலிஸ் அதிகாரி போல தோன்றும் ஒருவர், சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக பிக்குவிடம் பணிகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதை காட்டுகிறது. ஆனால் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம், பொலிஸார் தங்கள் கடமையை செய்யாததை பற்றி நான் நேற்று இரவு தெரிவித்தேன். யாரும் சட்டத்திற்கு மேலானவரல்ல என்று கூறும் ஜேவிபியின் வாக்குறுதி, பௌத்த பிக்குகள் தொடர்பாக வரும்போது செயல்படுத்தப்படாததாகத் தோன்றுகிறது என்றும் கூறினேன். இதனை தொடர்ந்து சிலை அகற்றப்பட்டுள்ளது, மேலும் சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானமும் அகற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அரசு செயற்படுவதையொட்டி அவர் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடவும் அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/230534
3 months ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months ago
Checked
Tue, 02/17/2026 - 12:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed