2 months 3 weeks ago
Offside · Zidane vs. Puyol — elegance against pure warrior spirit. One glides, the other throws himself into battle… and together they made El Clásico unforgettable. Moments like this are why football lives forever. ⚔️" referrerpolicy="origin-when-cross-origin" #Zidane #Puyol #ElClasico #RealMadrid #Barcelona #FootballLegends #fblifestyle
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார். இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) அருணைவடிவேல் முதலியார் மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும், ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும், 'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும், 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை., “பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்” என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள், முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது. அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும். இவ்வாறாக நாம் காணும்பொழுது, முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது? ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும். அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும், “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன? ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர். அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும் சிவாகமங்களை இகழ்ந்து நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும். மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும் "புறப்புறம், புறம், அகப்புறம், அகம்" என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன. அவற்றுள் புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. புறச் சமயங்கள் :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. அகப்புறச் சமயங்கள் :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன. 'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? ஆசிரியர்: 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன. வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன. வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன. வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன . சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை, ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது. மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா? ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்' (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால் இப்பெயர் பெற்றது. இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html
2 months 3 weeks ago
இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல் February 11, 2015 Photo, AP Photo/Eranga Jayawardena வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது. இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரசியல் சூழலை மேம்படுத்துதல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன. இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம் நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம். தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது. பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது. தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள் அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை. இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள் கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன. மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம் இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது. சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது. இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஜோவிட்டா அருளானந்தம் யனித்ரா குமரகுரு அம்மாரா நிலாப்தீன் https://maatram.org/articles/12431
2 months 3 weeks ago
யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு சனி, 29 நவம்பர் 2025 04:33 AM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். கடந்த 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் பாதிக்கப்பட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டனர். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டனர் அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/52724
2 months 3 weeks ago
இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி 29 Nov, 2025 | 11:08 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு இராணுவப்படையினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (29) காலை வரையிலான நிலைமை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டத்தில் சுமார் 12,800 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுமார் 3580 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2960 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3100 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்கு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/231896
2 months 3 weeks ago
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விசா வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு: விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விசா காலாவதியான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அல்லது விசா கட்டணங்கள் இன்றி விமான நிலையங்கள் ஊடாக வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் தங்கியிருக்கும், குறுகிய கால அல்லது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், மேலும் விசா காலத்தை நீடித்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அறவிடாமல் வீசாவை நீடித்துக்கொள்ளச் சலுகைக்காலமும் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலச் சுற்றுலா வீசா அனுமதியை நீடிப்பதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பிரவேசித்து செயற்படுத்த முடியும்: https://eservices.immigration.gov.lk/vs/login.php https://adaderanatamil.lk/news/cmijugg1w0259o29n2610g1ou
2 months 3 weeks ago
அது… பாட்டி இல்லை. அப்பா. 😂 பாட்டியை… போன கிழமை, பூனை பிடிச்சுக் கொண்டு போட்டுது. 🤣
2 months 3 weeks ago
தமிழ்நாட்டை நெருங்கும் திட்வா புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம். 29 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல் இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே 430 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிக்கைப்படி, இது கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையோரத்தை நாளை (நவ.30) அதிகாலை அடையக்கூடும். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 29: தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. நவம்பர் 30: திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 1: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். இவைதவிர்த்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பலத்த காற்று வீச வாய்ப்பு தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நவம்பர் 29: டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 30: வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்றின் வேகம் நவம்பர் 29 காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தையும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தை அடையும் என்றும், அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது (நவம்பர் 29 அதிகாலை 5.30 நிலவரப்படி). இது அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்தக் காற்றின் வேகம் நவம்பர் 30 வரை மணிக்கு 60-70 கி.மீ ஆக நீடிக்கலாம். அவ்வப்போது அது மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் வீசலாம். நவம்பர் 30 நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் மெல்ல முன்னேற்றம் காணப்படும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதன் வேகம் அதிகரித்து, மணிக்கு 70-80 கி.மீ ஆக அதிகரித்து (அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொடும்) நவம்பர் 30 காலை வரை நீடிக்கும். இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் இன்று (நவம்பர் 29) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இன்று (நவ.29 சனிக்கிழமை) காலையும், மாலையும் நடக்க இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்துள்ளார். புதுவை மத்திய பல்கலைக் கழகத்திற்கும் இன்று (நவ.29 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் விமான சேவை ரத்து திட்வா புயல் காரணமாக கனமழை பெய்வதால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யபட்டுள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்தில் தினசரி 6 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு 5 விமான சேவைகளும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சேவையும் இயக்கப்படுகின்றன. புயல் காரணமாக ஆறு விமான சேவைகளும் இன்று (29-11-25) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விமான சேவை இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e01d21w4go
2 months 3 weeks ago
இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் Nov 29, 2025 - 09:37 AM இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmijrstq90253o29nh8tcjwu6
2 months 3 weeks ago
24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டியில் Nov 29, 2025 - 08:13 AM கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijoswdm024zo29nouiwxzg3
2 months 3 weeks ago
Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:28 AM பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் செயற்படும் விமானப்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்பார்வை செய்தார். இன்றிரவு (28) விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி குறித்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தகவல்களை அறிந்துகொண்டார். https://www.virakesari.lk/article/231873
2 months 3 weeks ago
நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு Nov 29, 2025 - 06:11 AM இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது. இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று (29) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வௌியிட்டுள்ளார். அது தொடர்பில் அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக நான் பிரார்த்திக்கின்றேன். கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது. எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=V_Sdf2mv8Z8 https://adaderanatamil.lk/news/cmijkg5l3024vo29n4dixe240
2 months 3 weeks ago
இரஸ்சியா 3 நாள்களுக்குள் உக்கிரேனை பிடித்துவிடும் என புட்டின் கூறியதாகவும் ஒரு பிரச்சாரம் வெளியானது என நினைவுள்ளது, அது எந்த பின்புலமுமில்லாமல் செய்தியாக வெளியாகியிருந்தது அது போல இதுவும் ஒரு செய்தியாக இருக்குமோ? (அதன் இணைப்பை இணைத்தீர்களென்றால் உறுதிப்படுத்த இலகுவாக இருக்கும்), இணைய தளங்களில் இவ்வாறு பல செய்திகள் வெளியாகின்றன அவற்றிற்கு ஏதாவது ஒரு பின் புலம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், இன்னொரு திரியில் கோவிட் காலத்தில் ஒரு மருத்துவ தாதியர் கோவிட் ஊசிக்கு பதிலாக தண்ணீரை கோவிட் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு போட்டதாக குறிப்பிட்டிருந்தீர்களல்லவா அது போல சாத்தியமில்லாத விடயங்களை கூட சாத்தியமாக்க இந்த இணையத்தினால் முடிகின்றது.
2 months 3 weeks ago
தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி, நவீன உக்ரைனில் அரிதாகவே காணக்கூடிய அளவுக்கு அதிகாரத்தை குவித்துள்ளார். இப்போது, அவர் இறுதியாக வெளியேற வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார். ஒலெக் சுகோவ், ஒலெக்ஸி சொரோகின் மூலம் நவம்பர் 19, 2025 காலை 4:00 மணி (புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 28, 2025 மாலை 5:30 மணிக்கு )·15 நிமிடம் படித்தது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைப் பணியாளரான ஆண்ட்ரி யெர்மக், நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் முக்கிய மாநில அமைப்புகள் முழுவதும் முடிவுகளை வடிவமைத்து, முன்னோடியில்லாத அதிகாரத்தைக் குவித்துள்ளார். (லிசா லிட்வினென்கோ/தி கியேவ் இன்டிபென்டன்ட்) அரசியல் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் 22நிமி இந்த ஆடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது. ஆசிரியரின் குறிப்பு: தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் (NABU) தனது வளாகத்தில் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து ஆண்ட்ரி யெர்மக் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நவம்பர் 28 அன்று அறிவித்தார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக், உக்ரைன் அரசாங்கத்திற்குள் முன்னோடியில்லாத அளவிலான அதிகாரத்தை ஒருங்கிணைத்துள்ளார் - பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் முக்கிய அரசு நிறுவனங்கள் முழுவதும் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். இருப்பினும், அவரது ஆதிக்கம் இருந்தபோதிலும், யெர்மக் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வருகிறார், பெரும்பாலும் உக்ரைனுக்குள்ளும் வெளிநாட்டிலும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார். யெர்மக்கின் செல்வாக்கு நம்பகமான பிரதிநிதிகள் மூலம் சட்ட அமலாக்கத்தில் விரிவடைந்து, அவரை உயர் மட்ட இராஜதந்திர கூட்டங்களின் மையத்தில் வைக்கிறது, அடிக்கடி உக்ரைனின் பாரம்பரிய வெளியுறவு சேவையை ஓரங்கட்டுகிறது. ஜெலென்ஸ்கியின் வாயில்காப்பாளராக அவரது பங்கு அவரை இன்றியமையாதவராக ஆக்கியுள்ளது, ஆனால் அவரது எங்கும் நிறைந்த தன்மை அவரது திறமைகளை விட மிக அதிகமாக இருப்பதாக புகார் கூறும் கூட்டாளிகள் மத்தியில் ஏளனம் மற்றும் விரக்திக்கும் ஆளாகியுள்ளார். "நாம் அவரை சமாளிக்க வேண்டும், அவர் ஜெலென்ஸ்கியின் ஆள்," என்று ஒரு மூத்த ஐரோப்பிய அதிகாரி கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "எங்களுக்கு வேறு வழியில்லை." மற்றொரு ஐரோப்பிய இராஜதந்திரி, உக்ரைன்-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் எதிர்காலத்திற்கான சாத்தியமான பாதைகள் குறித்து விவாதிக்கும்போது, "யெர்மக்கை (வாஷிங்டனுக்கு) மீண்டும் அனுப்புவதை விட எதுவும் சிறந்தது" என்று கூறினார். பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டனில் யெர்மக் சாதகமாகப் பார்க்கப்படவில்லை என்றும், உக்ரைனில் அவரது நற்பெயர் எப்படியோ இன்னும் மோசமாக இருப்பதாகவும் இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். யெர்மக்கின் தொலைநோக்கு சக்திகள் மற்றும் கட்டுப்பாட்டுக்கான விருப்பம் உக்ரேனிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளிடையே பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன. கியேவ் இன்டிபென்டன்டுடன் பேசியவர்கள், நாட்டின் ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதலுக்கு அவர்தான் தூண்டுதலாக இருந்தார் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். தாக்குதல் தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒன்றாக யெர்மக்கின் பங்கை அதே மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கருத்துக்கான கோரிக்கைகளுக்கு யெர்மக் பதிலளிக்கவில்லை. ஆகஸ்ட் 27, 2024 அன்று உக்ரைனின் கியேவில் அரசு நிறுவனங்களின் தலைவர்களுடனான ஒரு மன்றத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் பங்கேற்கிறார். (விக்டர் கோவல்சுக் / கெட்டி இமேஜஸ் வழியாக குளோபல் இமேஜஸ் உக்ரைன்) இப்போது, ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் நடந்த மிகப்பெரிய ஊழல் ஊழலால் உக்ரைன் அதிர்ந்து போயுள்ள நிலையில் , ஜனாதிபதியின் உள் வட்டம் சம்பந்தப்பட்டிருப்பதால், யெர்மக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெயரிடப்படவில்லை என்றாலும், அவர் சூடான இருக்கையில் இருக்கிறார். முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஜனாதிபதி போராடி வருவதால் , இறுதியாக யெர்மக்கை விடுவிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கீவ் இன்டிபென்டன்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . "ஆண்ட்ரி யெர்மக் மிகவும் செல்வாக்கு மிக்கவர் மற்றும் நாட்டிற்குள் பல பிரச்சினைகளில் ஆழமாக ஈடுபட்டுள்ளார், அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் புரிதல் இல்லாமல் இவ்வளவு பெரிய அளவிலான ஊழல் திட்டம் செயல்படுவது சாத்தியமில்லை" என்று உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மையத்தின் நிர்வாக இயக்குனர் டாரியா கலெனியுக் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். "ஜனாதிபதி இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை, ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க, அவர் இந்த ஊழல் நிறைந்த உள் வட்ட நண்பர்கள் அனைவரையும் அகற்ற வேண்டும். அவ்வளவு எளிமையானது," என்று அவர் மேலும் கூறினார். "திரு. யெர்மக் உட்பட." ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி பதவியின் மிகப்பெரிய ஊழல் ஊழல் அவரது சொந்த அணிகளில் உள்ளது. Sinking ship? யெர்மக்கின் மோசமான சர்வவியாபித்தனம்தான் இறுதியாக அவரை மூழ்கடிக்கக்கூடும்: கடந்த வாரம் உக்ரைனை உலுக்கிய பெரிய அளவிலான ஊழல் விசாரணைக்கு நெருக்கமான கெய்வ் இன்டிபென்டன்ட் வட்டாரத்தின்படி , ஜனாதிபதியின் தலைமைப் பணியாளரும் அதில் இடம்பெறுகிறார். விசாரணையின் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்புப் பிரிவு, ஜனாதிபதியின் நண்பர்களும் உயர் அரசு அதிகாரிகளும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அரசு ஒப்பந்தங்களிலிருந்து லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டும் டேப்களை வெளியிட்டுள்ளது. 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கும்பல் தலைவர் திமூர் மிண்டிச் ஆவார் , அவர் ஜெலென்ஸ்கியின் நெருங்கிய கூட்டாளியும் ஜனாதிபதியின் முன்னாள் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளருமானவர். மிண்டிச் கடந்த காலத்தில் யெர்மக்கை "அவரது நண்பர்" என்று அழைத்தார் . மிண்டிச் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவருக்கு ரகசிய தகவல் கிடைத்து, நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஜெலென்ஸ்கியின் கூட்டாளியும் முன்னாள் துணைப் பிரதமருமான ஒலெக்ஸி செர்னிஷோவ் , இந்த ஆண்டு தொடக்கத்தில் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றிய நீதி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ, எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா ஹிரின்சுக் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய செயலாளருமான ருஸ்டெம் உமெரோவ் ஆகியோரும் அடங்குவர். (LR) நீதித்துறை அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் குவார்டல் 95 தயாரிப்பு நிறுவனமான திமூர் மிண்டிச்சின் இணை உரிமையாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா ஹிரின்சுக் ஆகியோர் உக்ரைனின் தொடர்ச்சியான ஊழல் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். (கெட்டி இமேஜஸ்/சமூக ஊடகங்கள்/கெய்வ் இன்டிபென்டன்ட் வழங்கும் படத்தொகுப்பு) புலனாய்வாளர்கள், வெளியிடப்பட்ட பகுதி மட்டும் தங்களிடம் இல்லை என்பதை தெளிவுபடுத்தினர், மேலும் வேறு யாரெல்லாம் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று நாடு யூகித்து வருகிறது. சட்ட அமலாக்கத்தில் உள்ள கியேவ் இன்டிபென்டன்ட் வட்டாரத்தின்படி, இந்தத் திட்டத்தின் சில பணம், செர்னிஷோவ் மேற்பார்வையிட்ட கியேவுக்கு வெளியே நான்கு ஆடம்பர வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது . வீடுகளில் ஒன்று, யெர்மக்கிற்காக என்று வட்டாரம் கூறியது. கெய்வ் இன்டிபென்டன்ட் கருத்துக்காக யெர்மக்கை அணுகியது. ஊழல், சட்டவிரோத செல்வாக்கை பெருக்குதல் மற்றும் லஞ்சம் ஆகியவை பல ஆண்டுகளாக யெர்மக்கின் அலுவலகத்தைச் சூழ்ந்துள்ளன. யெர்மக்கின் முன்னாள் துணைத் தலைவர் ஆண்ட்ரி ஸ்மிர்னோவ் மீது சட்டவிரோத செறிவூட்டல், பணமோசடி மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இரண்டு முன்னாள் துணைத் தலைவர்கள் - கைரிலோ டைமோஷென்கோ மற்றும் ரோஸ்டிஸ்லாவ் ஷுர்மா - ஊழல் வழக்குகளில் விசாரிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்படவில்லை. யெர்மக்கின் ஆட்சிக் காலத்தில், அவரது கூட்டாளிகள் சிலர் குறிப்பிடத்தக்க செல்வத்தைச் குவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு Bihus.info நடத்திய விசாரணையின்படி, திரைப்பட தயாரிப்பாளரும் யெர்மக்கின் முன்னாள் வணிக கூட்டாளியுமான ஆர்டெம் கோலியுபாயேவ், யெர்மக்கின் பதவிக் காலத்தில் தனது வணிக சாம்ராஜ்யத்தை வெகுவாக விரிவுபடுத்தியுள்ளார், ரியல் எஸ்டேட் மற்றும் ட்ரோன் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் கோலியுபாயேவ் மாநில ஒளிப்பதிவு ஆதரவு கவுன்சிலின் தலைவரானார், மேலும் முழு அளவிலான படையெடுப்பின் போது தனது படங்களுக்கு மாநில நிதியுதவியைப் பெற்றார். யெர்மக்கின் விமர்சகர்களைப் பொறுத்தவரை, அவரது உயர்மட்டக் கீழ் அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகள் மீதான ஊழல் வழக்குகளும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய ஜனாதிபதி அலுவலகம் தயக்கம் காட்டுவதும், யெர்மக் ஊழலைப் பொறுத்துக்கொள்கிறார் அல்லது அவரும் அதில் சிக்கியுள்ளார் என்பதைக் காட்டுகிறது. "நாட்டில், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அரசாங்கத்திலும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், ஆண்ட்ரி யெர்மக் இல்லாமல் பணியாளர் முடிவுகள் சாத்தியமற்றது என்பது இரகசியமல்ல" என்று கலெனியுக் கூறினார். சட்ட அமலாக்கத் துறையைச் சேர்ந்த ஒருவர், யெர்மக் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். ஆனால், அதற்கு நேர்மாறான தகவல்கள் வந்தாலும், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். "யெர்மக் இல்லாமல் (ஜெலென்ஸ்கி) என்ன செய்வார்?" அவர்கள் புன்னகையுடன் கேட்டார்கள். ஒரு பெரிய ஊழல் விசாரணையின் மையத்தில் ஜெலென்ஸ்கியின் ரகசிய கூட்டாளியான திமூர் மிண்டிச் யார்? Zelensky needs a Yermak 2010 முதல் யெர்மக்குடன் பழகிய ஜனாதிபதி, எந்த முன் அரசியல் அனுபவமும் இல்லாத முன்னாள் வழக்கறிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான அவரை அதிகாரத்தின் உச்சிக்குக் கொண்டு வந்த ஒரே தங்கச் சீட்டாக ஆனார். தனது நிபுணத்துவப் பகுதிக்கு மேலே பணிநிலைகளை எடுத்துக்கொண்டு, ஜனாதிபதியின் கருத்து செயல்படுத்தப்படுவதையும், சவால் செய்யப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதன் மூலம் யெர்மக் தரவரிசையில் உயர்ந்தார். "அவர் தன்னை ஜனாதிபதிக்கு முற்றிலும் அர்ப்பணிப்புள்ள ஒருவராக - சரியான நிறைவேற்றுபவராகக் காட்டிக் கொண்டார்," என்று அரசியல் ஆய்வாளர் வோலோடிமிர் ஃபெசென்கோ கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "ஜெலென்ஸ்கிக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க, வசதியான மற்றும் பயனுள்ள கருவியாக மாறுவதே அவரது முக்கிய குறிக்கோள். அவர் தனக்கென எந்த சிறப்புப் பங்கையும் கோரவில்லை." ஜனாதிபதியின் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலையும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான பரிவர்த்தனைகளையும் கையிலெடுத்ததன் மூலம், யெர்மக் ஜனாதிபதியின் முழு மனதுடன் கூடிய நம்பிக்கையைப் பெற முடிந்தது. "ஜெலென்ஸ்கியின் ரிமோட் கண்ட்ரோலில் எர்மக் முக்கிய பொத்தான்." இறுதியில், 2020 ஆம் ஆண்டில் யெர்மக் ஜனாதிபதியின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார், அவரது ஆடம்பரமான முன்னோடி ஆண்ட்ரி போஹ்டனுக்குப் பதிலாக. அன்றிலிருந்து அவர் ஜனாதிபதியின் காதை விடவில்லை. யெர்மக்கின் செல்வாக்கின் ரகசியம் என்னவென்றால், அவர் ஜெலென்ஸ்கியின் விருப்பங்களுக்கு இணங்குகிறார், இது அவரை உளவியல் ரீதியாக ஆறுதலான நிலையில் வைத்திருக்கிறது என்று ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். "யெர்மக்கின் பலம் என்னவென்றால், அவர் தன்னை வேலைகளைச் செய்து முடிக்கும் சிறந்த ஆபரேட்டராக சித்தரித்துக் கொள்கிறார்," என்று ஃபெசென்கோ கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "ஜெலென்ஸ்கியின் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள முக்கிய பொத்தான் யெர்மக்." ஜெலென்ஸ்கியின் விருப்பங்களுடன் அவர் உடன்படவில்லை என்றாலும், யெர்மக் அவற்றைச் செயல்படுத்துகிறார் என்றும், அவரது "அதிகாரம் எப்போதும் ஜனாதிபதியின் அருகில் இருப்பதிலும் அவர் சொல்வதைச் செயல்படுத்துவதிலும் உள்ளது" என்றும் அவர் கூறினார். மற்றொரு முன்னாள் ஊழியர் கூறுகையில், யெர்மக் ஜெலென்ஸ்கிக்கு வசதியானவர், ஏனெனில் அவர் தன்னைத்தானே கோபப்படுத்திக் கொள்கிறார், பொது விமர்சனங்களை உள்வாங்குகிறார். படிப்படியாக, யெர்மக் முன்னோடியில்லாத வகையில் அதிகாரத்தைக் குவித்து வருகிறார், நடைமுறையில் ஜனாதிபதிக்குப் பிறகு உக்ரைனின் இரண்டாவது தளபதியாக மாறியுள்ளார். செப்டம்பர் 23, 2025 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (ஆர்) மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி (எல்) ஆண்ட்ரி யெர்மக். (சிப் சோமோடெவில்லா / கெட்டி இமேஜஸ்) ஜனாதிபதி அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள், ஜெலென்ஸ்கி நிர்வாகத்தின் அன்றாட இயக்கவியலில் ஆழமாக ஈடுபடவில்லை என்றும், நிர்வாகம் மற்றும் உண்மையான நிர்வாகத்தின் நடைமுறை அம்சங்களை நிர்வகிப்பதற்கு யெர்மக் பெரும்பாலும் பொறுப்பாவார் என்றும் கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தனர். ஆதாரங்களில் ஒன்று, ஜெலென்ஸ்கியை மூலோபாயத்தை அமைக்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்றும், யெர்மக்கை கட்டுப்படுத்தி செயல்படுத்தும் தலைமை இயக்க அதிகாரி என்றும் விவரித்தது. இந்த அதிகார இயக்கவியலின் ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், ஜெலென்ஸ்கி நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ உதவியைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளார், மேலும் யெர்மக் இந்த உத்தியைச் செயல்படுத்த உயர் மேற்கத்திய அதிகாரிகளைச் சந்திக்கிறார். யெர்மக்கின் மகத்தான அதிகாரம் இருந்தபோதிலும், அவர் ஜெலென்ஸ்கியிடமிருந்து சுயாதீனமாக செயல்படவில்லை - அவரது முன்னோடி போஹ்டனுக்கு மாறாக, ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் ஊழியர்கள் கியேவ் இன்டிபென்டன்ட்டிடம் தெரிவித்தனர். ஆதாரங்களில் ஒன்று ஜெலென்ஸ்கியையும் யெர்மக்கையும் "யின் மற்றும் யாங்" என்று விவரித்தது, மேலும் அவர்கள் இரண்டு அல்ல, ஒரு நிறுவனம் என்று நகைச்சுவையாகக் கூறியது. யெர்மக் ஜனாதிபதியிடமிருந்து சுயாதீனமான ஒரு வாழ்க்கையைத் தொடங்க வாய்ப்பில்லை என்று ஃபெசென்கோ வாதிட்டார். "யெர்மக் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்," என்று ஃபெசென்கோ கூறினார். "அவர் நீண்ட காலத்திற்கு முன்பே அந்தப் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெலென்ஸ்கியின் வலது கை மனிதராக, அவரது முக்கிய கருவியாக இருப்பதே அவரது உச்சம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அதுதான் அவரது உச்சம்." ஜெலென்ஸ்கியை இவ்வாறு சார்ந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று யெர்மக்கின் பிரபலமின்மை. மார்ச் மாதம் ரஸும்கோவ் மையம் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, 17.5% உக்ரேனியர்கள் மட்டுமே யெர்மக்கை நம்பினர், மேலும் 67% பேர் அவரை நம்பவில்லை. உக்ரைனின் நடந்து வரும் அணுசக்தி ஊழல் ஊழல், விளக்கப்பட்டது. Accumulating unprecedented power ஜனாதிபதி அலுவலகம் இவ்வளவு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெலென்ஸ்கியின் மக்கள் சேவகர் கட்சி 450 இடங்களில் 254 இடங்களைப் பெற்றது, இது இன்றுவரை மிகச் சமீபத்தியது. இதற்கு நேர்மாறாக, ஜெலென்ஸ்கியின் முன்னோடியான பெட்ரோ பொரோஷென்கோ நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறவில்லை, மேலும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டியிருந்தது, இது அவரது அதிகாரத்தை மட்டுப்படுத்தியது. மற்றொரு காரணம், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு காரணமாக, 2022 இல் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், தற்போதைய நிர்வாகம் முன்னெப்போதும் இல்லாத போர்க்கால அதிகாரங்களைப் பெற்றது. எங்களுடன் சேருங்கள்சமூகம் உக்ரைனில் சுதந்திரமான பத்திரிகையை ஆதரிக்கவும். இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள். எங்களை ஆதரிக்கவும் போரோஷென்கோவின் ஐரோப்பிய ஒற்றுமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், ஜெலென்ஸ்கியின் எதிர்ப்பாளருமான வோலோடிமிர் அரியேவ், தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் அதிகாரத்தை திறம்பட கைப்பற்றியுள்ளது என்று வாதிட்டார். "எல்லாமே ஜனாதிபதி அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது," என்று அவர் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "ஜனாதிபதி அலுவலகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, பாராளுமன்றமோ அல்லது அமைச்சரவையோ அல்ல." "உக்ரைன் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் செல்வாக்கு மிகவும் பலவீனமானது" என்று ஃபெசென்கோ கூறினார். 2014 யூரோமைடன் புரட்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் கீழ் கூட எதிர்க்கட்சி மிகவும் வலுவாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார். இதன் விளைவாக, அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து, சட்டமியற்றுபவர்களுக்கு எந்தச் சட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்பதைச் சொல்வது ஜனாதிபதி அலுவலகமே என்று ஜெலென்ஸ்கியின் ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர்கள் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தனர். ஜூலை மாதம், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது, மேலும் யூலியா ஸ்வைரிடென்கோ டெனிஸ் ஷ்மிஹாலுக்குப் பதிலாகப் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஜூலை 16, 2025 அன்று உக்ரைனின் கெய்வில் டெனிஸ் ஷ்மிஹாலின் உக்ரைன் பிரதமர் பதவியை வெர்கோவ்னா ராடா ஏற்றுக்கொண்ட பிறகு, யூலியா ஸ்வைரிடென்கோ (இடது) டெனிஸ் ஷ்மிஹாலை (வலது) கைதட்டுகிறார். (ஆண்ட்ரி நெஸ்டெரென்கோ/குளோபல் இமேஜஸ் உக்ரைன் வழியாக கெட்டி இமேஜஸ்) ஷ்மிஹால் ஒரு சுயாதீன நபராக இல்லாவிட்டாலும், ஸ்வைரிடென்கோ குறிப்பாக யெர்மக்கிற்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரோஸ்லாவ் யுர்ச்சிஷின் மற்றும் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் ஆகியோர் கியேவ் இன்டிபென்டன்ட்டிடம் தெரிவித்தனர். ஸ்வைரிடென்கோ 2020 முதல் 2021 வரை யெர்மக்கின் துணைத் தலைவராக இருந்தார், பின்னர் அரசாங்கத்தில் சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் குழுவுடன் கனிம ஒப்பந்தத்தை வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் ஸ்வைரிடென்கோ யெர்மக் மற்றும் ஜெலென்ஸ்கியின் நம்பிக்கையைப் பெற்றதாக ஃபெசென்கோ கூறினார் . அவர் ஷ்மிஹாலை விட திறமையானவராகவும் அர்ப்பணிப்புள்ளவராகவும் பார்க்கப்படுகிறார். "இது வெறும் விசுவாசம் மட்டுமல்ல - அது உண்மையான பக்தி," என்று அவர் மேலும் கூறினார், ஸ்வைரிடென்கோவை விவரித்தார். "அவளுக்குப் பணிகள் கொடுக்கப்படும்போது, அவள் அவற்றை உன்னிப்பாகச் செய்கிறாள். முதலாளிகள் அதை விரும்புகிறார்கள்." உக்ரைன்ஸ்கா பிராவ்டா மற்றும் டிஜெர்கலோ டைஷ்னியா செய்தி நிறுவனங்களின்படி, யெர்மக்கின் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளிகள் வரி, சுங்கம் மற்றும் நிதி கண்காணிப்பு நிறுவனங்களுக்கும், ஏகபோக எதிர்ப்புக் குழு மற்றும் மாநில சொத்து நிதிக்கும் தலைமை தாங்குகின்றனர். "... ஜனாதிபதி அலுவலகத்தில் சில வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது என்பது இரகசியமல்ல." ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான விட்டலி ஷாபுனின், யெர்மக் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் கைகளில் அதிகாரத்தின் ஏகபோகம் முன்னெப்போதும் இல்லாதது என்று வாதிட்டார். இருப்பினும், சமீபத்திய ஊழல் ஊழலுக்குப் பிறகு , ஜெலென்ஸ்கியின் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியது. "இது ஒரு பெரிய அடி, ஆனால் இதன் மோசமான பகுதி என்னவென்றால், நாம் அதன் முடிவில் இருக்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை, அது இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கலாம்," என்று பெயர் வெளியிட விரும்பாத நிலையில் பேசிய அரசாங்க சார்பு உக்ரேனிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். "இந்த வழக்கில் திரு. யெர்மக்கின் ராஜினாமா அரசாங்கத்தைச் சுற்றியுள்ள இந்த குறிப்பிட்ட கிளர்ச்சியை நிச்சயமாகக் குறைக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் ஜனாதிபதி அலுவலகத்தில் சில வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது என்பது இரகசியமல்ல" என்று அரசாங்க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஃபெடிர் வெனிஸ்லாவ்ஸ்கி நவம்பர் 18 அன்று கூறினார். விளக்குபவர்: உக்ரைனின் மிகப்பெரிய ஊழல் திட்டம் ரஷ்யாவுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? Running the law enforcement apparatus ஜனாதிபதி அலுவலகத்தின் கட்டுப்பாடு சட்டமன்ற மற்றும் நிர்வாகக் கிளைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை - சட்ட அமலாக்கம் மற்றும் நீதித்துறையும் யெர்மக்கின் கட்டைவிரலின் கீழ் உள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தின் நலன்களுக்காக சட்ட அமலாக்க அமைப்பை இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்ட மைய நபர் ஜெலென்ஸ்கியின் துணைத் தலைவர் ஓலே டடரோவ் ஆவார். ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர் விசாரணைகளின்படி, டடரோவ் உக்ரைனின் மாநில புலனாய்வுப் பிரிவு, தேசிய காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படுகிறது. யெர்மக் மற்றும் டாடரோவ் இடையே மோதல் இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் வந்தாலும், அத்தகைய மோதல் அவர்களின் அதிகார இயக்கவியலை பாதிக்கிறது என்பதை சட்ட அமலாக்கத்தில் உள்ள கியேவ் இன்டிபென்டன்ட் வட்டாரங்கள் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. ஏப்ரல் 12, 2023 அன்று உக்ரைனில் உள்ள கிய்வில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் (ஆர்) மற்றும் அவரது சர்ச்சைக்குரிய துணை ஓலே டாடரோவ் (எல்) உக்ரைனின் சட்ட அமலாக்க அமைப்பை நன்கு அறிந்த ஒரே நபராக ஜெலென்ஸ்கியும் யெர்மக்கும் டடரோவை மிகவும் தேவை என்று வட்டாரங்கள் வாதிட்டன, ஏனெனில் அவர்கள் அவரை தங்கள் நலன்களுக்காக இயக்கும் அளவுக்கு அவரைப் பார்த்தார்கள். வட்டாரங்கள் டடரோவை "புத்திசாலி" மற்றும் "தொழில்முறை" என்று வர்ணித்தன. டடரோவைச் சுற்றியுள்ள ஊழல் ஊழல்கள் மற்றும் சர்ச்சைகள் இருந்தபோதிலும், ஜெலென்ஸ்கியும் யெர்மக்கும் அவரை இடைநீக்கம் செய்யவோ அல்லது பணிநீக்கம் செய்யவோ மறுத்ததற்கான காரணத்தை இது விளக்கக்கூடும். ஜனாதிபதி அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு ஒரு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக டடரோவ் மீது 2020 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களும் வழக்கைத் தடுத்தன, இறுதியில் அது 2022 இல் மூடப்பட்டது. இருப்பினும், யெர்மக் படிப்படியாக தனது சக்திவாய்ந்த துணைவரை ஓரங்கட்டி வருகிறார். ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட புதிய வழக்கறிஞர் ஜெனரல் ருஸ்லான் கிராவ்சென்கோ, யெர்மாக் பாதுகாவலராகக் காணப்படுகிறார் என்று ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். "இந்த ஆண்டு கோடையில் NABU மற்றும் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) ஆகியவற்றின் சுதந்திரத்தை அகற்றும் ஒரு குறிக்கோளுடன் நியமிக்கப்பட்ட ருஸ்லான் கிராவ்சென்கோ, நேரடியாக ஆண்ட்ரி யெர்மக்கிடம் அறிக்கை அளிக்கிறார்," என்று கலெனியுக் கூறினார். ஜூலை மாதம், கிராவ்சென்கோ தேசிய ஊழல் தடுப்புப் பணியகத்தில் (NABU) விரிவான சோதனைகளுக்கு அங்கீகாரம் அளித்தார். அடுத்த நாள், Zelensky, NABU-வை அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஜெனரலுக்குக் கீழ்ப்படுத்தும் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டார். உக்ரைனின் கியேவில் ஜூன் 17, 2025 அன்று நடைபெற்ற வெர்கோவ்னா ராடாவின் முழுமையான அமர்வின் போது உக்ரைன் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான ருஸ்லான் கிராவ்சென்கோ பேசுகிறார். (ஆண்ட்ரி நெஸ்டெரென்கோ / கெட்டி இமேஜஸ் வழியாக உக்ரைனின் குளோபல் இமேஜஸ்) தெரு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸின் அழுத்தங்களைத் தொடர்ந்து பணியகத்தின் சுதந்திரம் பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. NABU மற்றும் SAPO மீதான ஒடுக்குமுறையை யெர்மக் தலைமை தாங்கினார் என்று யுர்ச்சிஷின், ஜெலெஸ்னியாக் மற்றும் நிலைமையை நேரடியாக அறிந்த இரண்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெலென்ஸ்கியின் உள் வட்டத்திற்கு எதிரான வழக்குகள் "யெர்மக்கின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவரது நிலையை பலவீனப்படுத்தியது" என்று யுர்ச்சிஷின் வாதிட்டார். பல மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் அதையே செய்தார்கள். உக்ரைனின் மிகப்பெரிய ஊழல் வழக்கில் செல்வாக்கு செலுத்தும் வலையமைப்பை வழக்கறிஞர்கள் விவரிக்கின்றனர் Spearheading foreign policy உள்நாட்டு விவகாரங்களில் யெர்மக்கின் செல்வாக்கு முடிவற்றது. இருப்பினும், அனைத்து அதிகாரம் கொண்ட தலைமைத் தளபதி உண்மையிலேயே அனுபவிப்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை இயக்குவதைத்தான் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் கூற்றுப்படி தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டு ஜெலென்ஸ்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, யெர்மக் ரஷ்யாவுடனான உக்ரைனின் தலைமை பேச்சுவார்த்தையாளராக ஆனார். அப்போது ரஷ்யாவின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் துணைத் தலைவராகவும் இருந்த டிமிட்ரி கோசாக்குடன் யெர்மக் நெருங்கிய தொடர்பில் இருந்தார். முழு அளவிலான படையெடுப்பின் போது, யெர்மக் வெளியுறவுக் கொள்கைக்கான ஜெலென்ஸ்கியின் விருப்பமான நபராக ஆனார். அவர் தொடர்ந்து வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். "வெளியுறவுக் கொள்கையில் ஜனாதிபதி அலுவலகத்தின் செல்வாக்கு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது," என்று ஃபெசென்கோ கூறினார், போரின் காரணமாக ஜெலென்ஸ்கி நிர்வாகத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றமே இதற்குக் காரணம் என்று கூறினார். அப்போதைய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (இடது) மற்றும் உக்ரைன் (வலது) ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவரான ஆண்ட்ரி யெர்மக் ஆகியோர் மார்ச் 20, 2024 அன்று உக்ரைனின் கியேவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள். (விளாடிமிர் ஷ்டாங்கோ / கெட்டி இமேஜஸ் வழியாக அனடோலு) "ஜெலென்ஸ்கிக்கு இது ஒரு முக்கிய முன்னுரிமை" என்பதால், யெர்மக் வெளியுறவுக் கொள்கையில் கவனம் செலுத்துகிறார் என்று ஃபெசென்கோ வாதிட்டார். "ஜெலென்ஸ்கி விரும்புவதுதான் யெர்மக்கின் இயக்கத்தை வரையறுக்கிறது," என்று அவர் மேலும் கூறினார். யெர்மக் படிப்படியாக நாட்டின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை ஒதுக்கித் தள்ளி, இறுதியில் 2024 இல் அவருக்குப் பதிலாக யெர்மக்கின் துணை அமைச்சராக இருந்த ஆண்ட்ரி சிபிஹாவை நியமித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை விரும்பிய யெர்மக்கை குலேபா எரிச்சலடையச் செய்ததாக உள் நபர்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ அப்போது செய்தி வெளியிட்டது. டிரம்பின் குழு உறுப்பினர்கள் யெர்மக்குடன் பேச விரும்பவில்லை. 2024 இல் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, யெர்மக்கின் அதிர்ஷ்டம் பாதிக்கப்பட்டது. டிரம்ப்பின் குழு உறுப்பினர்கள் யெர்மக்குடன் பேச விரும்பவில்லை என்று பல வட்டாரங்கள் கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தன. சல்லிவனுடனான அவரது உறவுகள் காரணமாக அவர் ஒரு பாகுபாடானவராகக் காணப்படுகிறார், அதே நேரத்தில் அவரது பங்கு தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆயினும்கூட, துருக்கி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல ஜெலென்ஸ்கி அவரை தொடர்ந்து அனுப்புகிறார். ஜூன் மாதத்தில், அவரது தொடர்புகளை நன்கு அறிந்த 10 பேரை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகள் "யெர்மக்கை அமெரிக்க அரசியல் பற்றி அறியாதவராகவும், சிராய்ப்புணர்வோடு மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் அதிகமாகக் கோருவதாகவும் கண்டறிந்தனர்" என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டது. யெர்மக் "மூத்த டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்புகளைப் பெற போராடினார்", மேலும் பல சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டதாக பொலிட்டிகோ தெரிவித்துள்ளது. முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்க யெர்மக்கின் விருப்பமும் அவரது துரதிர்ஷ்டங்களும் கியேவில் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளன, முக்கிய உக்ரேனிய நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி மிகவும் விரும்பப்படாத பேச்சுவார்த்தையாளராக உள்ளார் என்பது வெளிப்படையான ரகசியமாகவும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும் உரையாடலின் தலைப்பாகவும் உள்ளது. "யெர்மக் பயணம் செய்வதை மிகவும் விரும்புகிறார், வெளிப்படையாக," என்று ஒரு மூத்த ஐரோப்பிய தூதர் கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அளித்த முறைசாரா உரையாடலின் போது கூறினார். உயர் அதிகாரிகளுக்கு சொகுசு வீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டதாக எனர்கோட்டம் ஊழல் திட்டம் சந்தேகிக்கிறது என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். No one left to challenge Yermak இருப்பினும், யெர்மக் நிலைமையை நன்கு அறிந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவரது பதில்? அவரைக் கேள்வி கேட்பவர்களை, அரசியல் திறனைக் காட்டுபவர்களை அல்லது கெட்ட செய்திகளைக் கொண்டு வருபவர்களை விரட்டுங்கள். ஜெலென்ஸ்கியும் யெர்மக்கும் அதிக லட்சியம் கொண்டவர்களாகவும் தனித்து நிற்கும் நபர்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பல வட்டாரங்கள் கீவ் இன்டிபென்டன்டிடம் தெரிவித்தன. உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான வலேரி ஜலுஷ்னி மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒருவர். அவர் 2024 இல் பணிநீக்கம் செய்யப்பட்டு, கியேவிலிருந்து கெளரவமான நாடுகடத்தப்பட்டவராகக் கருதப்படும் இங்கிலாந்துக்கான தூதராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 24, 2025 அன்று லண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்தில் உக்ரைனின் முன்னாள் தளபதியும் தற்போதைய இங்கிலாந்து தூதருமான வலேரி ஜலுஷ்னி. (கெட்டி இமேஜஸ் வழியாக ரசித் நெகாட்டி அஸ்லிம்/அனடோலு) ஜலுஷ்னி பெருகிய முறையில் பிரபலமடைந்த பிறகு ஓரங்கட்டப்பட்டார், மேலும் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் ஜெலென்ஸ்கிக்கு ஒரு சாத்தியமான போட்டியாளராகக் கருதப்பட்டார். உள்கட்டமைப்பு அமைச்சரும் துணைப் பிரதமருமான ஒலெக்சாண்டர் குப்ரகோவ் 2024 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளராகக் காணப்பட்டார். குப்ரகோவ் அதிகப்படியான லட்சியவாதி, தன்னாட்சி முறையில் செயல்பட்டவர், அமெரிக்க தூதரகத்துடன் நேரடி தொடர்பைப் பேணி வந்தார் என்ற கருத்துக்களால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு வட்டாரங்கள் தெரிவித்தன. யெர்மக் வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறப்படும் அதிகாரிகளில் துணைப் பிரதமரும் டிஜிட்டல் உருமாற்ற அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ் என்பவரும் ஒருவர். 2024 ஆம் ஆண்டில், இராணுவத்திற்கான ட்ரோன் கொள்முதல் ஃபெடோரோவின் அமைச்சகத்திலிருந்து அமைச்சரவைக்கு மாற்றப்பட்டது. ட்ரோன் கொள்முதலை தானே கட்டுப்படுத்த ஃபெடோரோவை ஓரங்கட்ட யெர்மக் முயற்சிப்பதாக ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் அப்போது குற்றம் சாட்டினர். ஜெலென்ஸ்கியைச் சுற்றி வேறு சில குரல்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், யெர்மக் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். "ஜனாதிபதியின் தலையில் உள்ள சிந்தனை ஒரு தனி நபரால் வடிவமைக்கப்படுகிறது," என்று ஷபுனின் கூறினார். "மேலும் ஜெலென்ஸ்கி ஒரு நிர்வாக மேதையாக இருந்தாலும் கூட, அது இன்னும் ஒரு பேரழிவாகவே இருக்கும்." https://kyivindependent.com/who-is-andriy-yermak-and-can-ukraines-new-corruption-scandal-finally-sink-him/
2 months 3 weeks ago
'சாண் ஏற முழம் சறுக்கும் நிலை.' சதிராடும் பௌத்த பிக்குகளை கொண்டுபோனால் நாடு அமைதியடையும்.
2 months 3 weeks ago
இரஸ்சியாவிற்கு ஐரோப்பிய நாடுகள் மேல் தாக்குதல் செய்யும் எந்தவித நோக்கம் இல்லை எனவும் அவ்வாறு கூறுவது அபத்தாமானது வேணுமென்றால் எழுத்துபூர்வ உறுதிமொழி வழ்ங்கலாம் என புட்டின் அறிவித்துள்ளார், ] எனக்கு இதை படிக்கின்ற போது பழைய நினைவுகள் வருகின்றது 😂 மூன்று வருடங்களுக்கு முன்பு புடின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தை உக்கிரேன் எல்லையில் கொண்டுவந்து குவித்தார் .உடனே உக்ரைனும் மேற்குலகநாடுகளும் உக்ரைன் ஆக்கிரமிப்பை ரஷ்யா ஆரம்பிக்க போவதாக உறுதியுடன் தெரித்தனர். நல்லவரான புடின் உடனே விளங்கபடுத்தினார் ரஷ்ய எல்லையில் எங்கள் இராணுவம் ஒரு தற்காப்பு பயிற்சியை தான் செய்கின்றது. எந்த ஒரு நாட்டிற்கும் அச்சுறுத்தலை செய்சதற்கு இல்லை உக்ரைனை ஆக்கிரமிக்கப் போவதும் இல்லை 😂
2 months 3 weeks ago
29 Nov, 2025 | 12:07 AM தீவிரமான வானிலை காரணமாக கொழும்புத் துறைமுகத்தின் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான பலத்த மழையும், அதனுடன் கூடிய பலத்த காற்றும் பதிவாகி வருகின்றன. இந்த நிலைமை துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதால், எந்தவித அனர்த்தமும் ஏற்படாத வகையில் செயல்பாடுகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் (Terminals) செயற்பாடுகள், சரக்கு ஏற்ற இறக்க பணிகள், கப்பல் நகர்த்தல் மற்றும் தொடர்புடைய சேவைகள் முழுமையாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. வானிலை நிலைமை சீராகும் தருணத்தில் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என துறைமுக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் | Virakesari.lk
2 months 3 weeks ago
28 Nov, 2025 | 11:37 PM வவுனியா, சாந்தசோலை ஏ - 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில், ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர். காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது வவுனியாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் - இருவர் பலி | Virakesari.lk
2 months 3 weeks ago
28 Nov, 2025 | 11:51 PM யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 28/11/2025 பி.ப 6 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 அங்கத்தவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அரியாலை உவர் நீர் தடுப்பணை தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை அராலி உவர் நீர் தடுப்பணையின் கதவுகள் திறக்கபட்டுள்ளதுடன், தேவைக்கேற்ற வகையில் மேலதிக கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறியத்தரப்பட்டுள்ளது. எனவே இத்தடுப்பணைகளிற்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது, காரைநகர் பாலத்திலே கடல் அலை மேவுவதனால் பொதுமக்கள் அவதானத்துடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணித் தாய்மார்கள் பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளிற்கு சென்று தங்குமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சீரற்ற வானிலையால் யாழில் 4,140 பேர் பாதிப்பு - யாழ். மாவட்ட அரச அதிபர் | Virakesari.lk
Checked
Sat, 02/21/2026 - 07:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed