புதிய பதிவுகள்2

வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!

2 months 1 week ago
இவர்கள் எல்லாம் உயிருடன் இருப்பதே இப்பதான் தெரியும். குட்டையை குழப்ப இந்தியா அனுப்பி வைத்திருக்கும். 10 வாக்கு எடுக்க வக்கு இல்லாததுகள் எல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிடுவது கேவலம்.

வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!

2 months 1 week ago
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..! July 16, 2025 — அழகு குணசீலன் — இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிரசவமான, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் மீள்வருகை தமிழ்த்தேசிய அரசியலிலும், ஊடகங்களிலும் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் வரதர் இந்திய படைகளுடன் கப்பலேறிய பின்னர் இதற்கு முன்னரும் சில தடவைகள் இலங்கை வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு முக்கியத்துவத்தை தமிழ்த்தேசிய அரசியலும், ஊடகங்களும் அவருக்கு வழங்கவில்லை. அப்படியானால் இப்போது மட்டும் ஏன்? இதன் பின்னணி என்ன? திடீரென்று கடந்த சில தினங்களாக மாகாணசபை தேர்தல் ‘மந்திரம் ‘ கொழும்பு அரசியலிலும், தமிழ்த்தேசிய அரசியலிலும் சற்று சத்தமாக ஓதப்படுகிறது. வரதராஜப்பெருமாளின் மீள் வருகை ஒரு தற்செயல் நிகழ்வல்ல. காலக்கணக்கு பார்த்து நகர்த்தப்படுகின்ற ஒரு காய்நகர்வு. இலங்கையின் இன்றைய தேசிய, பூகோள அரசியல் சூழலில் இந்த அனைத்து தமிழ்த்தரப்பு அரசியலும் புதுடெல்கியின் நிகழ்சி நிரலின் அடிப்படையில் இயக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் வலுக்கிறது. 1. 2023 இல் அன்றைய யாழ்ப்பாண தமிழரசு எம்.பி. சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்பித்த தனிநபர் பிரேரணை கிடப்பில் கிடக்கின்ற நிலையில் தற்போது, இ.சாணக்கியன் எம்.பி. இந்த தனிநபர் பிரேரணையை தனது பெயரில் மீண்டும் சமர்ப்பித்துள்ளார். 2. என்.பி.பி. அரசாங்க பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை சபைகள் அமைச்சர், மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். 3. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இலங்கை வந்து அவரின் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். சகா சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்திருக்கிறார். 4. தமிழ்த்தேசிய கட்சிகள் பலவும் மாகாணசபை தேர்தலை விரைவில் நடாத்தவேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை கோரியுள்ளன. 5. செம்மணி தோண்டப்படுகிறது, புலிகளின் குருக்கள் மடம் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை கோரியிருக்கிறது. புலிகளின் மற்றைய கொலைகளும் பேசப்படுகின்றன. 6. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த உறவு கிழக்குமாகாண சபையை இணைந்து கைப்பற்றுவதற்கான நகர்வு என்று கூறப்படுகிறது. 7. செப்டம்பரில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சர்வதேச விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன மீண்டும் பேசப்படும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வடக்குக்கு சென்ற எல்லா பிரதான வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு தீர்வை ‘பிடி கொடுக்காமல்’ விற்பனை செய்தனர். அநுரகுமார திசாநாயக்க தாங்கள் மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அது இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்றாலும் அரசியல் அமைப்பு மாற்றம் செய்யப்படும்வரை இருக்கின்ற மாகாணசபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு அவை இயங்க வழிசமைக்கப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது அநுரவின் அமைச்சர் புதிய புரளியை கிளப்பி எல்லை நிர்ணயம் பற்றி பூச்சுற்றுகிறார். வரதராஜப்பெருமாளின் வருகையும், தமிழ்த்தேசிய கட்சிகளின் நகர்வும், ஜெனிவாவில் இலங்கைக்கு இந்திய அணியின் ஆதரவு தேவைப்படுவதும் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை முன்னெடுப்பதற்கான சரியான காலம் என்பதை இந்தியா கணக்கு பார்த்து வரதராஜப்பெருமாளுக்கு ஊடாக காயை நகர்த்துகிறது. ஒரு வகையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் மாகாணசபை தேர்தலுக்கான ஒரு திகதியை அல்லது வாக்குறுதியை அநுர அரசிடம் இருந்து பெறுவதற்கு இது பொருத்தமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அநுர அரசாங்கம் இந்த அழுத்தத்தை சீன அணியைக் கொண்டு எவ்வாறு சமாளிக்கப்போகிது என்பதும் மற்றொரு கேள்வியாகும். கொழும்பை இந்தியப் பக்கம் தள்ளுவதா? சீனப் பக்கம் தள்ளுவதா? என்பதை தீர்மானிக்கும் பந்து அமெரிக்காவிடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் இருக்கிறது. அதேவேளை கொழும்பு வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் “மூன்றாவது” தரப்புக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி சகா விஜயஹேரத்துடன் கை குலுயிருக்கிறார். ” ….இறுதித் தீர்வுக்கான முயற்சி ஒரு புறம் நடக்கட்டும்.அது சமஷ்டியா? அல்லது அதற்கும் மேலானதா? எல்லாத் தமிழ்த்தரப்பும் செயற்படட்டும். ஆனால் அதற்கிடையில் இருக்கின்ற மாகாணசபை முறைமையை முழு அளவில் நடைமுறைப்படுத்தச் செய்வதற்கான ஒரு சமாந்தர முயற்சியே இது……”. வரதராஜப் பெருமாளின் வருகைக்கான காரணத்தையும், அதன் பின்னணியையும் தெளிவாக விளங்கிக்கொள்ள அரசியல் அகராதி எதுவும் மேலதிகமாகத் தேவையில்லை. உண்மையில் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாகாணசபைக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இல்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் படிப்படியாக கொழும்பால் மீளப்பெறப்பட்டு விட்டன. இன்னும் காலம் கடத்தினால் “கோவணத்தையும்” இழந்த கதைதான் என்பதை வரதர் சொல்லாமல் சொல்லியுள்ளார். முதலில் இருக்கின்ற அடித்தளம் காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மேல் கட்டி எழுப்புவதெல்லாம் பிறகு பார்க்கலாம் என்பது வரதர் வாதம். சரிதான். ஈழப்பிரகடனம் செய்து அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாகவும், சுயவிமர்சனமாகவும், குற்ற உணர்வாகவும் இவை இருக்கமுடியும். ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் சகா சுரேஷ்பிரேமச்சந்திரனைச் சந்தித்தபோது வரதருக்கு சுரேஷ் அளித்த பதில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததாக இருப்பது அரசியல் வேடிக்கை. “….. ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எப். இன் வேலைத்திட்டத்திற்குள் இந்த விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருப்பதாக..” சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு போடு போட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டு திண்ணையில் படுத்து தூங்கியபோது சமஷ்டிக்கு வேட்டியை மடித்துக்கட்டியவர், சிவாஜிலிங்கம் அணியில் இன்னும் தீவிரமாக பேசியவர் இப்போது ‘வேலைத்திட்டம் ‘ பற்றி வரதருக்கு வகுப்பெடுத்துள்ளார். கதிரைகளுக்காக சேர்வதும், பிரிவதும் அறிக்கை விடுவதுமாக 2009 க்கு பின்னர் அரசியல் செய்த ஈ.பி.ஆர்.எல்.எப். அதற்கு முன்னர் புலிகளின் அரசியலையே நியாயப்படுத்தியது, கோரிக்கையாக்கியது. இப்போது வேலைத்திட்டமாம்…வேலைத்திட்டம். தமிழ்த்தேசிய பாராளுமன்ற சக்திகளை ஒன்றிணைப்பதில் தனக்கு இருக்கக்கூடிய பெரிய தடை தமிழரசும், தமிழ்க் காங்கிரஸும் என்பதை வரதர் அடையாளம் கண்டுள்ளார். அதனால்தான் தான் அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்ற முன் நிபந்தனையை தனக்கு தானே அவர் விதித்துள்ளார். இதன் மூலம் தமிழ்த்தேசிய ‘கதிரைகள் ‘ தன் மீது அலர்ட்டாக மாட்டார்கள் என்று வரதர் நம்புகிறார். ஆனால் வரதராஜப் பெருமாளின் இந்த முயற்சிக்கு அவரின் கடந்த கால அரசியல் ஒரு தடையாக அமையாது என்று அடித்துச்சொல்ல முடியாது. இது அவரின் முயற்சி மீதான மிகப்பெரிய பலவீனமாகவும், நம்பிக்கையீனமாகவும் அமையும். சிங்கள பௌத்த பேரினவாதத்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் குறுந்தமிழ்த்தேசிய தீவிர வாதத்தாலும் அவர் மிக விரைவாக ‘இந்திய கைக்கூலியாக’ அடையாளப்படுத்தப்பட அதிககாலம் பிடிக்காது. அது மட்டுமின்றி வரதரின் பயணத்தில் குறுக்கே கட்டை போடக்கூடியவர்கள் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும். ‘ஒரு நாடு இரு தேசம்’ கஜேந்திரகுமார் மாகாணசபை தேர்தல் நடந்தால் போட்டியிடுவோம் ஆனால் இப்போதைக்கு அவசியமில்லை என்று நழுவலாம். சுமந்திரன் பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களுக்கு இதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கவில்லை. எனவே அதிகாரப்பகிர்வு வடிவத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்று சட்டவாதம் செய்யலாம். இவர்கள் இருவரது அணுகுமுறையும் ஒனறில் ஒன்று தங்கியிருக்கும் சதுரங்கம் என்பதால் வரதருக்கு பெரும் சவாலாக அமைய வாய்ப்புண்டு. வழிக்கு கொண்டு வரவேண்டியது இந்தியாவின் பொறுப்பு. “இருப்பதை பலப்படுத்தும்” என்ற முக்கிய இலக்கில் அதிகாரப்பரகிர்வை நோக்கி நகர்வதே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இன்றிருக்கின்ற ஒரேவழி. வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பன எல்லாம் வெறும் மண்குதிரைகள் . ஆனால் கஜேந்திரகுமார் குமார் இந்த மண்குதிரையில் ஏறினால் அதற்கு போட்டியாக சுமந்திரனும் ஏறமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களின் கடந்த கால கதிரை அரசியல் இதையே தமிழ்த்தேசிய அரசியில் மீதப்படுத்தி இருக்கிறது. இறுதியாக ஒரு விடயம். இது சமூக ஊடகங்களில் வெளியானது. இதைப்பதிவிட்டவர் வரதர் – சுரேஷ் சந்திப்பில் பங்குபற்றிய நடராஜா கமலாகரன். “அன்று தோழர் நாபாவோடு தோழர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசையும் அது திறம்படச் செயற்பட்டதையும் நான் அதில் உறுப்பினராக இருந்து மக்கள் பணிபுரிந்ததையும் மறந்திடவும் கூடுமோ?” நாபாவை துணைக்கழைப்பது உங்கள் கதிரை அரசியலால் அவரை அவமதிப்பது. ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். மாகாணசபை ஆட்சியில் உங்கள் “மக்கள் பணி”யை வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் ஒன்றும் ஞாபகமறதி நோயாளர்கள் அல்ல. இவ்வாறான புனைவுகளின் மூலம் மக்களோடு விளையாடாதும், வரதரின் முயற்சிக்கு குறுக்கே நீங்களே தடையைப் போடாமல் சும்மா இருப்பதே சுகம். நீங்கள் நினைப்பது போன்று தமிழ், முஸ்லீம் மக்கள் உங்களை எப்படி மறந்திட முடியும்? மாகாணசபை வரதர் ஆட்சியின் வண்டவாளங்களையும், அந்த அடாவடித்தன அரசியல் பயணித்த தண்டவாளங்களையும் மக்கள் மறக்க அவர்கள் நீங்கள் கப்பலேறிய பின்னரும், 2009 பின்னரும் பிறந்தவர்கள் அல்ல. மாகாணசபை சபை மூலமாக அதிகாரப்பகிர்வு அடிப்படை கட்டமைப்பை தக்க வைக்க அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். புலிகளுக்கு பின்னால் போன அனைவரும் செய்ய வேண்டிய பிராயச்சித்தம். https://arangamnews.com/?p=12163

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
ஹரி ஆனந்தசங்கரி ஒருவருக்கு உதவி செய்யப் போய், சிக்கலில் மாட்டிக் கொண்டது தூரதிஷ்டவசமானது. என்றாலும்… கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் நம்ப்பிக்கை ஆறுதலான விடயம். 🙂 இப்படியான உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களை குறி வைத்து சிங்கள அரசே பின்னுக்கு இருந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்  விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை

2 months 1 week ago
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை July 16, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கங்களுக்கு அக்கறை இருப்பதாக நம்புவதற்கு காரணம் இல்லை. இது விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு எதையும் காணவும் முடியவில்லை. பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கப்படுவதைப் போன்று பொருளாதாரத்துடன் சம்பந்தப்படாத குற்றங்கள் விடயத்தில் நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடனான ஊடாட்டங்களைப் பொறுத்தவரையிலும் கூட முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே அணுகுமுறைகளையே இன்றைய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது. ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக அவ்வப்போது உறுதியளிக்கின்ற அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அவருக்கு சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கியது. அவரும் கூட பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திடம் ஒப்பீட்டளவில் நேர்மறையான அணுகுமுறையை அடையாளம் கண்டதைப் போன்று சில கருத்துக்களை வெளியிட்டார். தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய வொல்கர் டேர்க் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளுவதற்கு சர்வதேச தராதரங்களுடன் கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றே உகந்தது என்று கூறினார். அவரது இந்த கருத்து அரசாங்கத்துக்கு பெரும் திருப்தியைக் கொடுத்திருக்கும் என்கின்ற அதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்பில் இதுவரையில் கசப்பான அனுபவங்களைக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது கடுமையான ஏமாற்றமாகவே இருந்தது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையில் நிச்சயமாக பிரதிபலிக்கும். மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளும் மைய நாடுகள் எத்தகைய புதிய தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றன என்பதே தற்போது சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒரு பொறிமுறையை அமைப்பதற்கு வழிவகுத்த (தற்போது நடைமுறையில் இருக்கும்) 51/1 தீர்மானத்தை மேலும் நீடிப்பதே பயனுடையதாக இருக்கும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் பலர் கருதுகிறார்கள். புதியதொரு தீர்மானம் சிலவேளைகளில் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை இல்லாமல் செய்துவிடவும் கூடும் என்ற நியாயமான அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.. யாழ்ப்பாணம் செம்மணியில் தற்போது தொடர்ச்சியாக தோண்டியெடுக்கப்பட்டுவரும் மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கில் கோரிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி மக்கள் போராட்டத்துக்கு வடக்கு – கிழக்கு சமூக இயக்கம் என்ற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவது வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்திருந்தால் இதேபோன்ற ஒத்துழைப்பு கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ தெரியவில்லை. . ஆனால், கொழும்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது செம்மணி விவகாரத்தில் சர்வதேச ஈடுபாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து சந்தேகம் எழுகிறது. ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய விரிவான கடிதம் ஒன்றில் செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் வெளிக்காட்டுவதாக சுட்டிக்காட்டி, அவை தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். அதேவேளை, செம்மணி புதைகுழி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேர்மையுடன் நடந்து கொள்ளப் போவதில்லை என்று கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். அந்த புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அவருடன் சேர்ந்து நின்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு ஊக்கம் கொடுத்ததை அவர் காரணமாகவும் சுட்டிக்காட்டினார். செம்மணியில் தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் போர்கால அட்டூழியங்கள் தொடர்பில் மீண்டும் சர்வதேச மட்டத்தில் கூடுதல் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக பதவிக்குவந்த பின்னரான சூழ்நிவையில் சர்வதேச புவிசார் அரசியலிலும் உலகளாவிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிலும் ஏற்பட்டிருக்கும் விபரீதமான மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கை பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. இது இவ்வாறிருக்க, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கடந்த வாரம் தெரிவித்த ஒரு கருத்து கவனத்துக்குரியதாக இருக்கிறது. கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் 50 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தன்னைத் தானே விசாரணைக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது என்றும் அது மிகவும் சவால்மிக்க பணி என்றும் கூறினார். அந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கச் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். “ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கார்டினல் ரஞ்சித் அடிக்கடி விடுகின்ற வேண்டுகோளை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுக்கும். பல சந்தர்ப்பங்களில் அமைதியான முறையில் அந்த வேண்டுகோளை விடுக்கும் கார்டினல் சில சந்தர்ப்பங்களில் குண்டுத் தாக்குதல்களைப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார். ஆனால் நாம் அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிப்போம். நீதியான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு குடிமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய தலைவர்களே இன்று இலங்கைக்கு தேவைப்படுகிறார்கள்” என்றும் ஜனாதிபதி தனதுரையில் மேலும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பேசிய கார்டினல் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அவற்றின் பின்னணியில் இருந்த சதியைக் கண்டறியுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே மூன்று அரசாங்கங்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும், எந்த பயனும் இல்லாத நிலையில், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக கார்டினல் எச்சரிக்கை விடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஜெனீவாவுக்கு சென்று முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடமும் அவர் முறைப்பாடு செய்தார். அண்மையில் இலங்கை வந்திருந்த வொல்கர் டேர்க்கும் கார்டினலைச் சந்தித்துப் பேசினார். இப்போது அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என்று நம்புகிறாரோ இல்லையோ வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு வழியில்லை. அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியது தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை நடத்திய கட்டமைப்பைச் சேர்ந்தோர் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இயங்குகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேவேளை அரசாங்கம் தன்னைத்தானே விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டதன் அர்த்தம் சவால்மிக்க நிலைவரத்துக்கு மத்தியிலும், உண்மை கண்டறியப்படும் என்பதேயாகும் என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் கூறினார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் ஏன் தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளாகின்றன? உண்மையைக் கண்டறிவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதுடன் எவரையாவது பாதுகாக்க வேண்டிய தேவையும் கூட இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், தற்போதைய அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? 2019 ஏப்ரில் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் இரு நீதிமன்ற வழக்குகள் உட்பட ஏழு உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆறு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது நியமித்த இரு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற நாட்களில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முதலில் 2019 ஏப்ரில் 22 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி விஜித மலலகொட தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த குழு அதன் அறிக்கையை சிறிசேனவிடம் 2019 ஜூன் 10 ஆம் திகதி கையளித்தது. இரண்டாவதாக, குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதத்துக்கு பிறகு 2019 மே 22 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலமாக அன்றைய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. மூன்றாவதாக, ஜனாதிபதி சிறிசேன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி நீதியரசர் சில்வாவினால் கையளிக்கப்பட்டது. நான்காவதாக, மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களாக இருந்த ஜனாதிபதி சிறிசேன உட்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 12 அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதி சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுச்சேவை தலைவர் நிலாந்த ஜெயவர்தன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று 2023 ஜனவரி 13 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்தாவதாக, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் அரச புலனாய்வு சேவை இருந்ததாக கூறும் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அதையடுத்து கிளம்பிய சர்ச்சை காரணமாக அந்த வீடியோவில் வெளியான தகவல்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்தார். ஆறாவதாக, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய புலனாய்வு அம்சங்களை ஆராய்வதற்கு 2024 ஜூனில் ஜனாதிபதி விக்கிரசிங்க முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். முன்னைய ஐந்து விசாரணைக் குழுக்களுமே புலனாய்வு அமைப்புக்களின் குறைபாடுகளையும் தவறுகளையும் விசாரணை செய்ததுடன் புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் விக்கிரமசிங்க எதற்காக இன்னொரு விசாரணைக் குழுவை நியமித்தார் என்று அந்த நேரத்தில் கேள்வி எழுந்தது. உள்நாட்டு விசாரணைகள் சகலவற்றையும் தவிர, ஜனாதிபதி விக்கிரமசிங்க பேர்லினில் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு 2023 அக்டோபரில் அளித்த நேர்காணலில் ஆறு வெளிநாடுகளின் விசாரணையாளர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் கூறினார். மேலும், குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பெரிய ஒரு சதித்திட்டம் இருந்தது என்று அன்றைய சட்டமா அதிபர் டப்புல டி.லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இவ்வாறாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு என்று ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. இவற்றில் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே மிகவும் முக்கியமானது. ஆனால், அதில் கூறப்பட்டவற்றின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கமும் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவிக்கிறதே தவிர முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்கத்தயாராக இல்லை. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் ஆறாவது வருட நினைவுதினமான கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதியளவில் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கூறினார். அவரது அறிவிப்பு நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இறுதியில் எல்லாம் புஷ்வாணமாகவே போனது. முன்னர் மறைத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அன்றைய தினம் திசநாயக்க அறிவித்தார்.அந்தளவில் அந்த விவகாரம் தற்போது நிற்கிறது. இப்போது அவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் முன்னிலையில் அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியிருக்கிறார். குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு தனது அரசாங்கத்துக்கும் ஓரளவு பொறுப்பு இருக்கிறது என்பதா அவரது அந்தக் கூற்றின் அர்த்தம்? சூத்திரதாரிகள் என்றைக்காவது சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று நம்பவது (இதுகாலவரையான நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ) கஷ்டமாக இருக்கிறது. (ஈழநாடு) https://arangamnews.com/?p=12156

வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு

2 months 1 week ago
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு â தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பின் கேந்திர மையமாகவுள்ள வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விமான படை முகாம் 1985 ஆம் ஆண்டு 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றல், மூடப்பட்ட வீதிகளை திறத்தல் காணி விடுவிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நகைகளை மீள ஒப்படைத்தல் என்பன தற்போது கண்காட்சி போன்று இடம்பெறுகின்றன. 2024.03.23 ஆம் திகதியன்று எஸ்.ஞானசம்பந்தன் என்பவர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அக்கடிதத்தில் வவுனியா விமான படை முகாம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒருபகுதி தனது தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது. ஆகவே இந்த காணியை விடுவித்து தனக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரியிருந்தார். இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் இந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விமானப் படையிடம் அறிக்கை கோரினார் .2024.07.04 ஆம் திகதியன்று விமானப் படை இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் ‘1985 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக இந்த காணி விமான படைக்கு கையளிக்கப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 1997.12.12 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட இந்த காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள எஸ்.ஞானசம்பந்தன் என்பவரின் தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரம் என்பவர் 2 இலட்சம் ரூபா நஷ் ஈட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் எஸ்.ஞானசம்பந்தர் என்பவர் இந்த முயற்சியை கைவிட்டு விட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது காணியை விடுவிக்குமாறு 2024.12.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இந்த கடிதத்தை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கடிதம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்பு கடிதம் ஒன்றை எழுதி, குறித்த காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விமானப்படைக்கு ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?இந்த ஆலோசனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே வழங்கியுள்ளார். இந்த விமானப் படை முகாமை அகற்றி இவ்விடத்தில் ஆரம்ப குடியிருப்பாளர்களை மீண்டும் அந்த காணியில் குடிமயர்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் அறிவித்தாரா?இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன.1985 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே இந்த முகாமுக்கான காணிகள் பெறப்பட்டன. எனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார். https://akkinikkunchu.com/?p=333108

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

2 months 1 week ago
ஐ.நா. இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் பிறப்பு விகிதத்தை கணக்கில் எடுக்கவில்லைப் போலுள்ளது. எடுத்திருந்தால்… ஐ.நா. தலையில் கை வைத்திருக்கும். 😂

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

2 months 1 week ago
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்! சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன. ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது. சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வார இறுதியில் ட்ரூஸ் போராளிகளுக்கும் உள்ளூர் பெடோயின் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதனால் மோதலை அடக்க சிரிய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து அரசாங்க ஆதரவுப் படைகளும் மோதலில் இணைந்துள்ளன. இது பெரும்பாலும் சுவைடாவில் வசிக்கும் ட்ரூஸ் சமூகத்திற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (SOHR) தெரிவித்துள்ளது. புதன்கிழமை சுவைடா தேசிய மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் உள்ள பெரிய ட்ரூஸ் மக்கள்தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரூஸ் சமூகங்களின் சுய-அறிவிக்கப்பட்ட பாதுகாவலராக இஸ்ரேல் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மே மாதத்தில், சுவைதாவில் நடந்த வன்முறைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது. சிரிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல் மூலமாக சிரியாவின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியும் இருந்தது. ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளைப் பிரிவைப் பின்பற்றும் ஒரு அரபு சிறுபான்மைக் குழுவாகும். பெரும்பாலான ட்ரூஸ் இனத்தவர்கள் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் வாழ்கின்றனர். சிரியாவில் 700,000 ட்ரூஸ் இனத்தவர்களும், லெபனானில் 300,000 பேரும், இஸ்ரேலில் 140,000 பேரும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=333131

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர் July 17, 2025 11:31 am பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது. தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. 2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார். எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார். ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 months 1 week ago
Last Bench Memes eordSnpotsf9fg1u132e79hij c:gc11lu9c1im05lftac,3 h0hhtc71t85 · யாழ்ப்பாணத்தை பொருத்தவரை பிட்டை விட அதிகம் கவர்ந்த ஒரு விஷயம் ஊர்களின்ட பெயர்கள் தான்..! ஊர்களின் பெயர்களில் தவறுகள் ஏதும் இருப்பின் திருத்திக் கொள்ளத் தெரிவிக்கவும் அ அச்சுவேலி அச்செழு அத்தாய் அத்தியடி அம்பன் அராலி அரியாலை அல்லாரை அல்லைப்பிட்டி அல்வாய் அளவெட்டி அறுகுவெளி அனலைதீவு ஆ ஆவரங்கால் ஆழியவளை ஆனைக்கோட்டை ஆனைப்பந்தி இ இடைக்காடு (யாழ்ப்பாணம்) இணுவில் இமையாணன் இயற்றாலை இராமாவில் இருபாலை இலக்கணாவத்தை இளவாலை ஈ ஈச்சங்காடு (யாழ்ப்பாணம்) ஈச்சமோட்டை ஈவினை உ உசன் உடுத்துறை உடுப்பிட்டி உடுவில் உயரப்புலம் உரும்பிராய் ஊ ஊரெழு ஊர்காவற்துறை எ எழுதுமட்டுவாள் எழுவைதீவு ஏ ஏழாலை ஒ ஒட்டகப்புலம் க கச்சாய் கட்டுடை கட்டுவன் கட்டைக்காடு கட்டைவேலி கணேஸ்வரம் கதிரிப்பாய் கந்தர்மடம் கந்தரோடை கப்பூது கரணவாய் கரந்தன் கரம்பகம் கரம்பைக்குறிச்சி கரம்பொன் கரவெட்டி கருகம்பனை கற்பகற்சோலை கல்வயல் கல்வியங்காடு களபூமி கற்கோவளம் காங்கேசன்துறை காரைநகர் கீரிமலை குடத்தனை குடாரப்பு குறிகாட்டுவான் குப்பிளான் குருநகர் குரும்பசிட்டி கெருடாவில் கெற்பெலி கேரதீவு கைதடி கைதடி நுணாவில் கொக்குவில் கொம்பர்மூலை கொடிகாமம் கொம்பன்தறை கொல்லன்கலட்டி கொழும்புத்துறை கோண்டாவில் கோப்பாய் கோயிலாக்கண்டி கோயிற்குடியிருப்பு ச சங்கத்தானை சங்கரத்தை சங்கானை சங்குவேலி சண்டிலிப்பாய் சந்திரபுரம் சரசாலை சாவகச்சேரி சாவல்கட்டு சிங்கைநகர் சித்தங்கேணி சித்தன்கேணி சிந்துபுரம் சில்லாலை சிறுப்பிட்டி சிறுவிளான் சுன்னாகம் சுண்டிக்குளி சுதுமலை சுழிபுரம் சுன்னாகம் செம்பியன்பற்று த தச்சன்தோப்பு தந்தை செல்வாபுரம் தம்பாலை தம்பாட்டி தனங்கிளப்பு தாவடி தாவளை திருநெல்வேலி (இலங்கை) தும்பளை துர்க்காபுரம் துன்னாலை தெல்லிப்பழை தேவபுரம் தையிட்டி தொண்டைமானாறு தொல்புரம் ந நயினாதீவு நல்லூர் (யாழ்ப்பாணம்) நவக்கிரி நவாலி நாகர்கோவில் (இலங்கை) நாயன்மார்கட்டு நாரந்தனை நாவற்காடு நாவற்குழி நாவாந்துறை நிலாவரை நீர்வேலி நீராவியடி நுணாவில் நெல்லியடி நெடுந்தீவு ப பண்டத்தரிப்பு பண்ணாகம் பத்தமேனி பருத்தித்துறை பலாலி பன்னாலை பனிப்புலம் பாசையூர் பாலாவி (தென்மராட்சி) பிரான்பற்று புத்தூர், யாழ்ப்பாணம் புலோலி புங்குடுதீவு ( பொன்கொடு தீவு ) புளியங்கூடல் புன்னாலைக்கட்டுவன் பெரியவிளான் பொலிகண்டி பொன்னாலை ம மட்டுவில் மண்டைதீவு மணல்காடு மந்துவில் (யாழ்ப்பாணம்) மயிலிட்டி மருதங்கேணி மருதனார்மடம் சந்தி மல்லாகம் மாகியடிப்பு மறவன்புலவு மாகியப்பிட்டி மாதகல் மாரீசன்கூடல் மாவலித்துறை மாவிட்டபுரம் மானிப்பாய் மிருசுவில் மீசாலை முள்ளானை முள்ளியான் மூளாய் வ வதிரி வட்டுக்கோட்டை வடமராட்சி வடலியடைப்பு வண்ணார்பண்ணை வயாவிளான் வரணி வல்லிபுரம் வல்வெட்டி வல்லிபட்டிணந்துறை வளலாய் வறுத்தலைவிளான் வாதரவத்தை விடத்தல்பளை வித்தகபுரம் வியாபாரிமூலை வீமன்காமம் வெள்ளாம்போக்கட்டி வெற்றிலைக்கேணி வேலணைத் தீவு எங்களுக்கு கிடைத்த தரவுகளின் படி எங்களால் திரட்ட முடிந்த ஊர்களின் பெயர் மட்டுமே உள்ளன.

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

2 months 1 week ago
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல் July 17, 2025 இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. https://www.ilakku.org/இலங்கையில்-பிறப்பு-விகித/

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 1 week ago
இது வருடாவருடம் நடக்கும் சம்பவம். எத்தனை கஸ்ரப்பட்டு படித்து முன்னுக்கு வருகிறார்கள், இது சாதாரண மாணவர்கள் செய்யும் வேலையல்ல. நாளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டியவர்கள். இவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. பிறரின் துன்பத்தில் மகிழும்மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.

சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்

2 months 1 week ago
சாவகச்சேரி நகரசபையின் தீர்மானம் வரவேற்கத் தக்கது. இந்த முன் மாதிரியை பின்பற்றி மற்றைய நகர, கிராம சபைகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் காப்பகம் அமைக்க முன் வரவேண்டும். 🐕 🐕‍🦺 ஊரில்… நாய்த் தொல்லை, பெரும் தொல்லையப்பா. வீதியால் நடந்து போனால் குலைக்குது, சைக்கிளில் போனல் விட்டு திரத்துது… இதுகளுக்கு என்ன வேணுமென்றே தெரியவில்லை. போகவும் வரவும் பெரிய கொட்டன் பொல்லையும் கொண்டு திரிய வேண்டிக் கிடக்குது. 😂 👨🏾‍🦯

சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!

2 months 1 week ago
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு! Vhg ஜூலை 17, 2025 சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் (20-07-2025)ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

2 months 1 week ago
இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை General17 July 2025 இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்று நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சனை, இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/410389/sri-lanka-india-fishing-rights-agreement-to-be-discussed

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmd6q258e019lqp4kloaq3nlw

முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!

2 months 1 week ago
முதல்வர் தமிழரசு கட்சி ✅. துணை முதல்வர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒட்டுக்குழு கட்சியா? அல்லது…. இருவரும் ஒரே கட்சியா.

மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!

2 months 1 week ago
மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு! மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது. எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் - என்றார். https://newuthayan.com/article/மன்னாரில்_காற்றாலை_திட்டம்_உடனடியாக_நிறுத்தவேண்டும்_-_அருட்தந்தை_மக்காஸ்_எச்சரிப்பு!

முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!

2 months 1 week ago
முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்! யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வின் போது, முதல்வர் இருக்கத்தக்கதாக, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது. விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்றவகையில் தலையிட்டுக் கருத்துகளை வெளியிட்டபடி கொண்டிருந்தார். ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தையும் அவர் வழங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. https://newuthayan.com/article/முதல்வரின்_விடயத்தில்_மூக்கை_நுழைத்த_துணைமுதல்வர்;_நேற்றைய_அமர்வில்_கடும்_நேரவிரயம்!

சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்

2 months 1 week ago
சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம் சாவகச்சேரி நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றபோதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள், இடைநடுவில் கைவிடும் திட்டம் போலல்லாமல் சிறப்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர். https://newuthayan.com/article/சாவகச்சேரியில்_நாய்கள்_காப்பகம்;_நகரசபையில்_தீர்மானம்
Checked
Sat, 09/27/2025 - 18:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed