புதிய பதிவுகள்2

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

3 months 2 weeks ago
இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும். பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா? சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 2 weeks ago
இங்கே பணி புரியும் அனேகமானவர்கள் வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் ,மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.பொதுவாக நான் ஊர் நிலவரங்கள் பற்றியே பார்ப்பதனால் அறிந்திருக்கிறேன்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 2 weeks ago
சாதாரணமாக உணவு நிலையங்கள் விடுதிகள் வியாபார நிலையங்கள் ஆகியவையே இப்படியான சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுகின்ற வழமை இது அசாதாரணம் ஆகவே அந்த நிலையத்தை சார்ந்த தொழிலாளர்களே இந்த முறைப்பாட்டை செய்திருக்க வேண்டும் எப்படியாகிலும் தவறு எங்கே நடந்தாலும் தவறுதான்.

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months 2 weeks ago
நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 2 weeks ago
ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவு அங்கேயே தயார் செய்யப்பட்டால்.... அதுவும் அழுகிய நிலையில் இருக்கும் மரக்கறிகளை சமைப்பதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தால்.... குற்றம் தானே

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது. அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது கேள்வி என்னவென்றால் 1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ? 2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ? பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்
Checked
Sat, 02/21/2026 - 22:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed