புதிய பதிவுகள்2

கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது

2 months 1 week ago
தங்கமுலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி விவகாரம்; சந்தேக நபரான பெண்ணுக்கு பிணை! 17 JUL, 2025 | 02:10 PM தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பெண்ணை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைதுசெய்ய்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மே மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (14) கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220219

மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2 months 1 week ago
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா? 17 JUL, 2025 | 04:03 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு கடந்த திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற நிலையில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பெண் என அடையாளம் காணப்பட்ட இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என சமூக ஊடகங்களில் தற்போது பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறன. ஏனென்றால் இந்த சுற்றுலாப் பயணியின் கடவுச்சீட்டில் பாலினம் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/220231

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

2 months 1 week ago
செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும்.- மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள் - மெலானி குணதிலக Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 05:19 PM செம்மணி தெற்கில் உள்ள எங்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றது. யுத்தத்தின்போது மக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டபோது எங்களில் பலர் எங்கள் மனதுகளில் துப்பாக்கி ரவைகளையும் குண்டுவெடிப்புகளையும் உருவாக்கினோம். நாங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றை. ஆனால் யுத்தத்தின்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தின் பெயரால் பாலியல் வன்முறை சிறுவர் பாலியல் வன்முறை உட்பட பல விடயங்கள் இடம்பெற்றன. இன்றும் செம்மணியிலிருந்து எலும்புகள் வெளியாகும் போது அப்போது அரந்தலாவை என்பதே எங்கள் குற்ற மனச்சாட்சியாக உள்ளது. இனவாத அரசியல்வாதிகளும் அரசியலுக்கான இனவெறியை பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகளும் ஊடகங்களும் பல வருடங்களாக வெறுப்பினால் உரமிடப்பட்டிருந்த மனங்களின் மனச்சாட்சியை அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் காயங்களை குணப்படுத்துவதற்கு நாங்கள் ஆழமாக தோண்டி அந்த காயங்களை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பிரீத் கேட்க்கும் நாட்டில் பொதுமக்கள் சிறிய சிறுவர்களாக புதைக்கப்பட்டபோது எம்மிடமிருந்து பறிபோன விழுமியங்கள் குறித்து நாங்கள் மீள ஆராயவேண்டும். வடக்குகிழக்கு மக்கள் தங்களிற்கு எதிரான அநீதிகள் குறித்து குரல் எழுப்பும் ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் மனச்சாட்சிகளை மறைத்துவைத்திருக்கின்றோம் என்பதை நாங்கள் உணரவேண்டும். வடக்கில் நடந்த குற்றங்களும் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களும் மெல்லிசைகளில் சொல்லப்பட்ட கதைகளில் எழுதப்பட்ட கவிதைகளில் தொலைந்து போயின என்பதை தெற்கில் உள்ள நாம் உணரவேண்டும். நாங்கள் இறக்கவில்லை என்று சொன்னாலும் மரணத்தை நோக்கிப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. செம்மணிக்கு நீதி கேட்கும்போது சிறு குழந்தைகளின் எலும்புகள் வெளிப்படும்போது அது ஒரு இருண்ட உணர்வு. ஆனால் "அப்புறம் அரலகங்வில அறந்தலவா" என்று அலறும் இதயத்துடன் சிறிது நேரம் உட்காருங்கள். கோபத்தைத் தாண்டி குற்ற உணர்வை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சிரமத்தைத் தாங்கி அந்த உணர்வை அடையாளம் காணுங்கள். இனவெறி மதம் சார்ந்த பெயரடைகளை அகற்றி மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்கத் தொடங்க வேண்டிய இடம் அதுதான். செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும். மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள். https://www.virakesari.lk/article/220156

குட்டிக் கதைகள்.

2 months 1 week ago
Khabar Hydhiri Hydhiri onopsderStm0fhc998m9518h96899gc22413t5c92h6c006420922h4u2hi · இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் " இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில." "நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். "டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க" என்றார். "நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். "அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். "எனக்கு கண் பார்வை சரி இல்லை, மருந்து தாங்க டாக்டர்". "சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய்" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர். "இது 500 ரூபாய் நோட்டாச்சே" என்று பதறினார் இவர். "வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்" பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது... கிடிப்பாவது... படித்ததில் பகிர்வது.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months 1 week ago
🤣............... நல்ல ஒரு வலுவான காரணம், வாதவூரான்.................😜. ஒரு பிள்ளையின் பின்னால் எத்தனை பேர்கள் சுற்றுகின்றார்கள் என்ற ஒரு கணக்கு கூட 80 களில் இருந்தது. எவருமே கலைக்காத பிள்ளைகளும் வேறு ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டார்கள் போல. சில ஆசிரியர்கள் கூட, குறிப்பாக விலங்கியல் படிப்பித்த தம்பிராசா ஆசிரியர், தூய/பிரயோக கணிதங்கள் படிப்பித்த கணேசலிங்கம் ஆசிரியர் போன்றோர், இதற்கு ஒரு சின்னக் காரணமோ தெரியவில்லை. அவர்கள் வகுப்புகளில் போட்ட அதட்டில் பிள்ளைகள் தெறித்து ஓடினார்கள். கணிதப் பிரிவிலிருந்து வர்த்தகப் பிரிவிற்கு பாய்ந்தோடிய ஒரு சக மாணவியைப் பற்றி முன்னர் எழுதியிருக்கின்றேன்................

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் இணக்கம்

2 months 1 week ago
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம் Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 11:34 AM காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது. கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது; இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது; பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்; இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல். சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும் பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/220201

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதி ஊடாக நடந்தார் இளவரசர் ஹரி

2 months 1 week ago
17 JUL, 2025 | 10:58 AM அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரிட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார். ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார். தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார். தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார். வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார். 1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது. டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது. https://www.virakesari.lk/article/220194

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்

2 months 1 week ago
திரும்ப திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months 1 week ago
அதுக்கு உங்களைப்போல பெடியள் தான் காரணம். சயிக்கிளில் பின்னாலை கலைச்சு உசுப்பேத்தி விட்டிடுவியள் அதுகளுக்கு தலை கால் புரியாது படிப்பை விட்டிடுங்கள்

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்

2 months 1 week ago
Published By: VISHNU 17 JUL, 2025 | 08:11 PM தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், வியாழக்கிழமை (ஜூலை 17) மதியம் அவர் உயிரிழந்தார். வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன். தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்த படங்களை இயக்கியுள்ளார். மேலும், வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி, பீட்ஸா 3 என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னதாக, தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என கருதப்படும் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து, தனது 60 வயதில், வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் தன்னுடன் நடித்த ஷிர்லே தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/220264

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months 1 week ago
👍............... இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை. சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு முஸ்லிம்களால் செய்யப்பட்ட படுகொலைகள் தொடர்பில் என்னுடைய பாரிய ஆவணக்கட்டை நீங்கள் மேலே வாசிக்கலாம் கீழே முஸ்லிம்களால் செய்யப்பட்ட வீரமுனை படுகொலை தொடர்பில் மக்களின் வாக்குமூலங்கள்: அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம். தமிழர் தகவல் நடுவத்தின்

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்

2 months 1 week ago
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
கரி ஆனந்தசங்கரி அவர்கட்கு திரிசங்கு நிலைதான் போல. இவை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. ஆனால், கள நிலவரங்களை பார்த்தால் அவரை அசைக்கமுடியாது போல் உள்ளது. ஆட்டிப்பார்க்க மட்டுமே முடியும்.

'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி

2 months 1 week ago
உண்மை மதங்கள் அவசியமில்லை. சரி பிழை கண்டு பிடித்து அதற்கேற்ப செயல்பட வைக்கும் அறத்திசை காட்டி (moral compass) பலமாக இருந்தால் போதும் என்பது என் அபிப்பிராயம். இப்படியான அறத்திசைகாட்டியை, மத அமைப்புகளுக்குள்ளும் ஊக்குவிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்பதன் ஒரு உதாரணமாகத் தான் யேசு சபைக் குருக்களைப் பற்றி எழுதினேன். சில சமயங்களில் மத அமைப்புகளின் உள்ளே இருந்து தான் விடயங்களை மாற்ற வேண்டும். உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.
Checked
Sat, 09/27/2025 - 18:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed