1 month 4 weeks ago
நாங்கள் செத்த பிறகு பறைமேளத்தை அடித்தால் என்ன, தவில் நாதசுவரம் வாசித்தால் என்ன எங்களுக்கு கேட்கவா போகின்றது. உயில் என எழுதினால் செத்தவீட்டுக்கு வருபவர்கள் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என எழுதி வைத்தால், அத்துடன் எமது நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என கூறிச்சென்றால் கடைசி நேரத்திலும், செத்த பிறகும் ஒரு திருப்தியை ஏற்படுத்தலாம்.
1 month 4 weeks ago
https://youtu.be/El105nYqmjo https://youtu.be/El105nYqmjo https://youtu.be/krUINBTOew4 https://youtu.be/kuL8tvgMt_A https://youtu.be/kuL8tvgMtA
1 month 4 weeks ago
யாழ். செம்மணி மனித புதைகுழிகளில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு ; இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 29 JUL, 2025 | 09:12 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். அதன் போது, 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கபடும் - என்றார். https://www.virakesari.lk/article/221315
1 month 4 weeks ago
இனிய பாரதியின் இன்னும் ஒரு சகாவான் சபாபதி மட்டு கிரான் வைத்து சிஜடி யினரால் கைது இதுவரை இனிய பாரதியின் சகாக்கள் 4 பேர் கைது Published By: VISHNU 29 JUL, 2025 | 08:41 PM இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி யினர் கைது செய்துள்ளனர். ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர். இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/221313
1 month 4 weeks ago
யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி, காதலன், யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில் Published By: VISHNU 29 JUL, 2025 | 08:31 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார். அதேவேளை, திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும், நகைகளை விற்று வாங்கிய அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டு, சான்று பொருளாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221312#google_vignette
1 month 4 weeks ago
Published By: VISHNU 29 JUL, 2025 | 06:23 PM செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர். ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது. செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர். இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே. ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது. உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும். அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே. இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம். https://www.virakesari.lk/article/221307
1 month 4 weeks ago
சுமையுடன் நின்றாலும் சுகமாய் நிக்கிறேன் .......... ! 😀
1 month 4 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. ஐ.நா. இன்னும் அதிகாரப்பூர்வமாக "பஞ்சம்" என்று அறிவிக்கவில்லை. ஆனால், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC- Integrated Food Security Phase Classification) எச்சரிக்கிறது. பட மூலாதாரம், ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது பஞ்சம் என்றால் என்ன, அது எப்போது அறிவிக்கப்படுகிறது? ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்க பயன்படும் உலகளாவிய தரநிலை. இதில் கட்டம் 5 தான் மிக உயர்ந்த கட்டமாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சம். பஞ்சம் என்பது பின்வரும் நிலைகளை சந்திக்கும் ஒரு தீவிர சூழ்நிலையை குறிக்கிறது. 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது ஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பது காஸாவின் மொத்த மக்களும் (2.1 மில்லியன் பேர்) கட்டம் 3 (நெருக்கடி) அல்லது அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர் என IPC கூறுகிறது. மே மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் கிட்டத்தட்ட 469,500 பேர் பேரழிவு நிலையை (IPC கட்டம் 5) அனுபவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழல் ஏற்பட்டவுடன், ஐ.நா. பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. சில சமயங்களில் ஒரு நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்தோ, பெரும்பாலும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அல்லது மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்தோ இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பட மூலாதாரம், MAJDI FATHI/NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லையில் இருந்து வரும் உதவி லாரிகளில் இருந்து பாலத்தீனியர்கள் மாவு மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள் பசியால் வாடும் போது ஒருவரின் உடலுக்கு என்ன நடக்கும்? பட்டினி என்பது நீண்ட காலமாக உணவு இல்லாததால் ஏற்படுகிறது. இதனால் உடல், அதன் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக உடல், உணவை குளுக்கோஸாக உடைக்கிறது. ஆனால் உணவு நிறுத்தப்படும்போது, உடல் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிட, கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைகோஜனை உடைக்கத் தொடங்குகிறது. அங்குள்ள வளங்கள் தீர்ந்துவிட்டால், உடல் தேங்கிய கொழுப்பை உடைத்து, இறுதியில் தசை திரளையும் உடைத்து, போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யும். பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இது மூளையை பாதித்து, மாயத்தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் நேரடியாக பட்டினியால் இறக்க நேரிடலாம். ஆனால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால், சுவாசம் அல்லது செரிமான அமைப்புகளில் ஏற்படும் தொற்றுகள் போன்ற சிக்கல்களால் அடிக்கடி இறக்கின்றனர். பட்டினி ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது. "நீங்கள் திடீரென்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக மாட்டீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு அல்லது அதுபோன்ற நோய்கள் இருந்திருக்கலாம்," என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து துறையின் கௌரவ மூத்த ஆராய்ச்சி பேராசிரியர் சார்லோட் ரைட். மேலும், "முன்பு ஆரோக்கியமாக இருந்த, ஆனால் இப்போது பட்டினியால் வாடத் தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு, உணவு கிடைத்தால் அதை சாப்பிட்டு ஜீரணிக்கத் தேவையான ஆற்றல் இன்னும் இருக்கும். மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்"என்றும் பேராசிரியர் ரைட் விளக்குகிறார். படக்குறிப்பு,பசியின் நீண்ட கால விளைவுகள் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது? குழந்தைப் பருவத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பது, வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில், அறிவாற்றல் வளர்ச்சியில் (cognitive development) குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலை (stunting) ஆகியவை அடங்கும். உடல் வளர்ச்சி குன்றிய நிலை (Stunting) என்பது, மோசமான ஊட்டச்சத்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், மற்றும் போதிய உளவியல் மற்றும் சமூக தூண்டுதல் இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் குறைபாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது. பொதுவாக, இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் உயரத்தை விட குறைவாக இருப்பார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காவிட்டால், இரத்த சோகை, ப்ரீ -எக்லாம்ப்சியா, ரத்தக்கசிவு, மரணம் போன்ற தீவிர சிக்கல்களை தாய்மார்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல், குழந்தைகள் இறந்து பிறப்பது, குறைவான எடையுடன் பிறப்பது, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது யுனிசெஃப். அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தேவையான சத்தான பாலை உற்பத்தி செய்ய போராடலாம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மெடிசின்ஸ் சன்ஸ் பிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் நுரதீன் அலிபாபா கூறுகையில், 'இதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது' என்கிறார் . "வளர்ச்சிக் குறைபாடு என்பது மீள முடியாதது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள காலத்தை கடந்த பிறகும், குறைந்த உயரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலும் நிரந்தர கற்றல் குறைபாடும் இருக்கும், அது அவர்கள் பள்ளியில் சேரும் வரை தெளிவாக தெரியாது" என்று கூறிய மருத்துவர் அலிபாபா, "ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும்" என்றும் கூறுகிறார். "நிறைய மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறுமிகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். அவர்கள் கருத்தரித்தால், இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்." ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நிலை) இன்னொரு சிக்கலாக உருவாகலாம். "வயதான பிறகு எலும்புகள் மடிக்கக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், ஒரு சிறிய நிகழ்வும் கூட எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்," என்று மருத்துவர் அலிபாபா விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் பாலத்தீனியர்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் ? "இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் தேவை. முதலாவது, காஸாவிற்கு அதிகளவிலான உணவு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, விலையுயர்ந்த சிகிச்சை உணவுகள் வழங்கப்பட வேண்டும்"என்று பேராசிரியர் ரைட் கூறினார். "குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேகமாக உணவளிக்க வேண்டும்." "தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும், அதன்மூலம் அவர் குழந்தைக்கு உணவளிக்க முடியும். ஆனால், ஆண்களை விட , பெண்களிடம் உணவு சென்றடைவதை உறுதிசெய்வது தான் உண்மையான சவால் உணவு " "முக்கியமான செய்தி என்னவெனில், குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும், அவர்களுக்கு பெரிய அளவு உதவி தேவையில்லை." 'ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தரும். அதற்கான சிகிச்சை எப்போதும் நேரடியானதல்ல' என விளக்குகிறார் பிபிசி அரபு சுகாதார நிருபரும், மருத்துவராக பயிற்சி பெற்ற ஸ்மிதா முண்டாசாத். கடுமையான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படலாம். "மேலும், நோய்த்தொற்றுகள் அல்லது பிற சிக்கல்களுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும்," என்றும் அவர் கூறினார். "சில சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு மிக விரைவாக அல்லது தவறான உணவை கொடுப்பது ஆபத்தானது. "அதனால், பசிக்காக உணவை வழங்குவது மட்டும் போதாது. சரியான உணவையும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்மிதா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrkj8zep71o
1 month 4 weeks ago
29 JUL, 2025 | 04:13 PM தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்துவைத்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. 11ஆவது மாவட்டமாக, நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த இல்லம் முக்கியமாக தேவைப்படும். காரணம், வீட்டில் ஆண்கள் அல்லது வீட்டுத் தலைவர்களின் மதுபாவனை அல்லது போதைப்பொருள் பாவனையினால் விளையும் வன்முறையினால் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணமுள்ளது. அதற்கான சிறந்த தீர்வாகவே இந்த பாதுகாப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள பொலிஸாரின் உதவியுடன் இயங்கி வருகிறது. இந்த பாதுகாப்பு இல்லத்தினை நம்பி வருபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி, வைத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, உளநல ஆலோசனை வழங்கி, மருத்துவம் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளது. இதனால் வாழும் வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து, பெண்கள் தமது பாதுகாப்புக்காக இந்த இல்லங்களுக்கு வருகைதந்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கானதாக இந்த இல்லங்கள் அமையும். மேலும், இல்லங்களுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு, அதற்கான சட்ட நடவடிக்கையும் இல்லத்தின் ஊடாக எடுக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆரோக்கியமான பிரஜையாக வாழலாம் என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்போது திறந்துவைக்கப்பட்ட தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221287
1 month 4 weeks ago
1 month 4 weeks ago
சஜீவன் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம் ; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்படும் - ரவிகரன் எச்சரிக்கை 29 JUL, 2025 | 03:56 PM முல்லைத்தீவு - மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தபப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மல்லாவி பொலிஸாரை எச்சரித்துள்ளார். அதேவேளை சஜீவனின் படுகொலை விவகாரம் தொடர்பில் தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதுடன், இந்த விவகாரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார். மல்லாவியில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி, மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்றபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலருக்கெதிராக சஜீவனின் குடும்பத்தினரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாடு அளிக்கப்பட்டும் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொலிஸாரால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த வகையில் சஜீவனின் படுகொலை இடம்பெற்று பத்தொன்பதாம் நாளன்று கடந்த 16.08.2024 அன்றும், அதன் பிற்பாடு ஏழு மாதங்கள் கடந்து, 14.03.2025 அன்றும் படுகொலைக்கான நீதி கோரி, மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக சஜீவனின் படுகொலை இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ள நிலையிலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள், ரவிகரன் ஆகியோர் இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது மல்லாவி பேருந்து நிலைய வளாகத்திலிருந்து மல்லாவிப் பொலிஸ் நிலையம் வரை சென்றது. சஜீவனுக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலைக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவ்வேளை, ரவிகரன் தெரிவிக்கையில், ஒரு வருடகாலமாக சஜீவனின் கொலைக்கு நீதி கோரி இந்த மக்கள் போராடிவருகின்றனர். இருப்பினும் இந்தப் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் படுகொலைக்கான நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இந்த கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனில், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தப் படுகொலை விவகாரத்தில் மல்லாவிப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு தெரியப்படுத்துவதுடன், இந்த படுகொலைக்கான நீதியை உடனடியாக வழங்குமாறும் கோரவுள்ளேன் என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இந்தப் படுகொலை விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைக்கு விரைந்து உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன்போது சஜீவனின் படுகொலைக்கு விரைந்து நீதி வழங்குமாறு கோரி மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொதுமக்கள் சார்பாக துரைராசா ரவிகரனால் மகஜர் ஒன்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/221285
1 month 4 weeks ago
எதிர்மறையான தலைப்பும் செய்தியுமாய் இருப்பதால் கருத்தெழுத சங்கடமாய் உணர்கின்றேன் . ........ எதுவாயினும் நடக்கும்போது நடக்கட்டும் .......நீங்கள் நலமுடன் வாழவேண்டும் . ....... !
1 month 4 weeks ago
லலித் மற்றும் குகன் : காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் 2011 டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியங்களை வழங்குவதற்காக, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றமும் அவ்வாறான அறிவிப்பினை விடுத்திருந்தது. ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இதன் விளைவாக, அவர் ஜனாதிபதி என்ற தகுதியில் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை. இப்போது அவர் ஜனாதிபதியாக இல்லை என்று, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல்களை பரிசீலித்ததோடு, 2024 டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்கள். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து, பின்னர் முன்னணி சோசலிச கட்சி என்று அறியப்பட்ட ஒரு பிரிவுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு இளைஞர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இறுதியாக காணப்பட்டனர். போரினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக லலித் நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார். டிசம்பர் 9ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து இருவரும் கடைசியாக வெளியேறியதாக ஊடகவியலாளர் ஷாலிகா விமலசேன குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குகனின் மனைவி டிசம்பர் 14 அன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் காணப்பட்டதை கண்டுள்ளார். எனினும், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். டிசம்பர் 13ஆம் திகதி கோப்பாய் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குகனின் மனைவிக்கு பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9ஆம் திகதி அதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கு அருகில் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குழுவொன்று லலித் மற்றும் குகன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலதிக விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஒருவேளை குற்றவாளிகளை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் அவர்களை குறிப்பிடுவதற்கு பயந்து முன்வராமல் இருந்திருக்கலாம். அவிசாவளையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த லலித், நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். அவருடன் காணாமல் போன குகன் முருகானந்தனும் அரசியல் செயற்பாட்டாளரும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். குகன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார். ஆனால் 1999 ஆம் ஆண்டில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹாவில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாக உள்ள வருண தீப்தி ராஜபக்ஷ, டிசம்பர் 9, 2021 அன்று பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டபோது இந்த காணாமல் போன விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார் – “லலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை குறித்து நான் பாரிய நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். அது என் மனதை கனக்கச் செய்தது. அந்த நேரத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர் நண்பர்கள், தலைமறைவாக இருந்து, உதுல் பிரேமரத்னவுக்கும் (வழக்கறிஞரும் ஆர்வலருமான) எனக்கும், லலித் மற்றும் குகன் எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவ்வப்போது தகவல் அளித்தனர். அந்தத் தகவல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், லலித் மற்றும் குகன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உதுலையும் என்னையும் எங்களுக்குத் தெரிந்த பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொள்ளத் தூண்டியது. ஆளுநராகவும், பின்னர் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்த ராஜித் கீர்த்தி தென்னகோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.” 2009 டிசம்பர் 15 அன்று, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்: “லலித்குமாரும் குகன் முருகானந்தனும் காணாமல் போகவில்லை; அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. அவர்கள் விரைவில் பொலிஸ் அல்லது இராணுவத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். எனினும் உறுதியளித்தபடி மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடத்தியது. ஆனால், அவர்களை அங்கு காணவில்லை. லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 15 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என பல செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். லலித் குமார் வீரராஜ், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://puja.lk/ta/story/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/
1 month 4 weeks ago
'தந்திரமாக பேசி அழைத்துச் சென்றான்' - மென்பொறியாளர் ஆணவக்கொலையில் என்ன நடந்தது? படக்குறிப்பு,கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும் 29 ஜூலை 2025, 02:47 GMT நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார். காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னணி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார். படக்குறிப்பு,சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் கவின் செல்வ கணேஷ் என்ன நடந்தது? கொலை தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: கவின் செல்வ கணேஷ் சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல் நலமின்றி இருந்த அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார். கவின் பாளையங்கோட்டை வந்திருந்ததை அறிந்த அவரது காதலியின் சகோதரரான சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக்கொலையில் முடிந்துள்ளது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சுர்ஜித் ஒப்புதல் வாக்குமூலம் பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், "சுர்ஜித்தின் அக்காவும், கவின் செல்வ கணேஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதல் சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை சுர்ஜித் அவரது அக்காவை கண்டித்ததுடன், கவினையும் அழைத்து எச்சரித்துள்ளார். ஆனால், சுர்ஜித்தின் அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த சுர்ஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டதாக சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தாய்-தந்தையே காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட சுர்ஜித் "கவினை தந்திரமாக பேசி சுர்ஜித் அழைத்துச் சென்றான்" பிபிசி தமிழிடம் அழுது கொண்டே பேசிய கவினின் தாய் தமிழ் செல்வி, "எனக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ். பொறியியல் முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தான். பள்ளியில் படிக்கும் போதே கவினும் சுர்ஜித்தின் அக்காவும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பதால், எங்களது பின்னணி சுர்ஜித்தின் குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும். ஒரு வாரத்துக்கு முன் கீழே விழுந்த என் அப்பாவுக்கு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். அவருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுர்ஜித்தின் அக்காவிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் மருத்துவராக பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு கவின் அழைத்துச் சென்றான். கவினுடன் நான், எனது மற்றொரு மகன் மற்றும் என் சகோதரர் ஆகியோருடன் உடன் வந்திருந்தோம்." என கூறினார். மேலும் பேசிய அவர், "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சித்த மருத்துவமனைக்கு என் அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த போது சுர்ஜித் அங்கே வந்தான். அவனது பெற்றோர் கவினை பார்க்க வேண்டும் என கூறியதாக சொல்லி சுர்ஜித் அழைத்தான். அதை நம்பி சுர்ஜித்துடன் கவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான். சித்த மருத்துவ ஆலோசனை முடிந்த பின் நானும் எனது இளைய மகனும் மற்றும் என் தம்பி கேடிசி நகர் சாலையில் சென்ற போது எனது மகனுடன் சுர்ஜித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். இதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற போது என்னை தகாத வார்த்தையில் சுர்ஜித் திட்டினான். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் என் மகனை சுர்ஜித் கொலை செய்துவிட்டான். கவினை கொலை செய்ய தூண்டிய சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். "ஒரு இளைஞனை சாதி மிருகமாக்கி உள்ளது" சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பெற்றோர் காவல்துறையில் பணியாற்றும் நிலையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத இளைஞனால் அவரது அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு சாதி வன்மமே காரணம்." என்றார். 2022ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்து ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் தேவை என்று மனு அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த தனி சட்டத்தையும் தமிழக அரசு இயற்றவில்லை என அவர் கூறினார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு அளித்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் இது பின்பற்றப்படவில்லை எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். "ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கதிர். பட மூலாதாரம்,KATHIR படக்குறிப்பு,ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் கதிர் கவின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. தாராபுரம்: பட்டியலின தொழிலாளி மரணம் - சமூக அமைப்புகள் சந்தேக குரல் சிவன் மலையில் பட்டியல் சமூக திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் 'ஏழு வகையறா' யார்? சாதிய பாகுபாடு சர்ச்சை: காஞ்சி கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு என்ன நடந்தது? போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்த பின்னரே முக்காணியில் சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdy548e5v7o
1 month 4 weeks ago
ஓவல் மைதான பராமரிப்பாளருடன் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் கடும் வாக்குவாதம் Published By: VISHNU 29 JUL, 2025 | 06:42 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசியும் ஐந்தாவதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில், மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்ட்டிஸ் மற்றும் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது லீ ஃபோர்ட்டிஸை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டிப் பேசிய கௌதம் கம்பீர், 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை' என கூறியுள்ளார். அவர்கள் இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது திட்டவட்டமாக தெரியவராத போதிலும், கம்பீரிடம் ஃபோர்ட்டிஸ் ஏதோ கூறியதை அடுத்தே கம்பீர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் வியாழக்ழமை (31) ஆரம்பமாகவுள்ள கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சியின்போது உணர்ச்சிவசப்பட்ட கம்பீர், மைதான பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் துடுப்பாட்டப் பயிற்றுநர் சித்தன்ஷு கோட்டாக் தலையிட்டு நிலைமை கட்டுப்படுத்தியுள்ளார். 'இதனை நான் முறையிடுவேன்' என ஃபோர்ட்டிஸ் தெரிவித்ததால் வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது. 'உங்களுக்கு என்ன முறையிடவேண்டுமோ அதை போய் முறையிடுங்கள்' என கம்பீர் சற்று காரசாரமாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து கோட்டாக் தலையிட்டு, மைதான பராமரிப்பாளரை தனியாக ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று 'நாங்கள் எதையும் சேதப்படுத்த மாட்டோம்' என கூறியுள்ளார். இந்தியாவின் மற்றைய பயிற்றுநர்களான மோர்னி மோர்க்கல், ரெயான் டுஷே ஆகிய இருவரும் இந்த வாக்குவாத்தை கேட்டவண்ணம் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் எதிற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாகாத போதிலும் அவர்கள் இருவரும் பயிற்சிக்கான ஆடுகளங்களின் தன்மை குறித்து வாதிட்டிருக்கலாம் என தெரிகிறது. எவ்வாறாயினும் மீண்டும் ஃபோர்ட்டிஸை நோக்கி திரும்பிய கம்பீர், எனது அணி 'என்ன செய்யக்கூடாது' என அவர் சொல்லத் தேவையில்லை என்றார். 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு சொல்ல முடியாது. நீங்கள் வெறுமனே ஒரு மைதான பராமரிப்பாளர். அதற்குமேல் எதுவும் இல்லை' என கம்பீர் தெரிவித்தது வீடியோவில் காணப்பட்டது. அதன் பின்னர் இருவரும் தத்தம் வழிகளில் சென்றதுடன் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை கம்பீர் மேற்பார்வை செய்யத் தொடங்கினார். பின்னர் மைதானத்திலிருந்து தனது அறையை நோக்கி சென்ற ஃபோர்ட்டிஸ், 'இது ஒரு மிக முக்கியமான போட்டி. அவர் (கம்பீர்) உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்' என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221308
1 month 4 weeks ago
இருவர், 2009 இன் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
1 month 4 weeks ago
யாரை நம்பி நான் எழுத பின்னூடம் ஒன்று?.🤥 இப்படிக்கு ஏமாந்த ஓருறவு.😭
1 month 4 weeks ago
❤️
1 month 4 weeks ago
லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!
1 month 4 weeks ago
இங்கே தான் கிடக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு பதில் வராது
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed