1 month 2 weeks ago
பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது குறித்து உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ” பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார். ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது. தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். https://athavannews.com/2025/1442747
1 month 2 weeks ago
தானே தனக்குள் ரசிக்கின்றாள் தலை முழுகாமல் இருக்கின்றாள் ......... ! 😍
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா பெண் : மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே ஆண் : ஆ…..ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே பெண் : ஆ…..ஆ…..ஆ….மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே பெண் : {தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள் ஆண் : இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்} (2) பெண் : உயிரோடு உயிராய் ஆண் : ஒன்றாகி நிற்கும் பெண் : உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள் ஆண் : பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது பெண் : ஆஅ……ஆ…..தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது ஆண் : இளவேனிர் காலத்தில் திருமணமோ பெண் : இனி எப்போதும் வாராத நறுமணமோ ஆண் : பூவென்ன பூவோ பெண் : வண்டென்ன வண்டோ ஆண் : சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ பெண் : கதை இதுவோ ....... ! --- இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா ---
1 month 2 weeks ago
ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.
1 month 2 weeks ago
https://www.facebook.com/share/p/1Asnnfg7yV/?mibextid=wwXIfr
1 month 2 weeks ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 18 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 18 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் தேவநம்பியதிஸ்ஸ இருந்தாரா?' இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை. ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka] மேலே குறிப்பிட்டுள்ளபடி, விஜயன் முதல் தேவநம்பியதிஸ்ஸ வரை எந்த வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரங்களும் இல்லாமல் இந்த மன்னர்கள் காணப்படு கிறார்கள். அப்படி என்றால், அன்றைய காலத்தில் இலங்கையில் அரசர்கள் இல்லை என்பதல்ல. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த கண்டு பிடிக்கப்பட்ட மன்னர்கள் 'புத்த மதத்தின் பக்தியுள்ளவர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு / 'serene joy and emotions of the pious.' பதிலாக இங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மகாவம்சம் அத்தியாயத்தின் முடிவிலும் இது கூறப்பட்டுள்ளது. தேரவாத பௌத்தத்தில், பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் உருவாக்கவென, மகாவம்சம் அதன் வாசகர்களிடையே இப்படி, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் ஒரு உணர்வுகளை தூண்டவும் மற்றும் கண்மூடித்தனமான ஒரு பக்தியை வளர்க்கவும் என்று நாம் கருதலாம். இது வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றுபவர்களிடையே ஆழமான உணர்ச்சி மற்றும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு உரையாக இருக்கலாம். / In Theravada Buddhism, serene joy and emotion of the pious relates to the emotional impact the Mahavamsa aims to create in its readers. It represents both the desired emotional response to its teachings and the ultimate goal of its compilation: to foster spiritual feelings and devotion within the audience. This highlights the Mahavamsa as a text designed not only for historical recounting but also for evoking a deep emotional and spiritual connection among its followers. முன்பே கூறியது போல், சில அனுமானங்களின்படி, மூத்தசிவா குறைந்தது 137 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது, அதன்படி, மூத்தசிவா அரியணை ஏறும் போது அவனுக்கு 77 அகவையாகும். முத்தசிவனுக்கு முப்பது வயது இருக்கும் போது இரண்டாவது மகன் தேவநம்பிய தீசன் பிறந்திருந்தால், அரியணை ஏறும் போது தேவநம்பியதிசனுக்கு 107 வயது இருந்திருக்கும், மேலும் அவர் 147 வயது வரை மிகவும் பழுத்த வயது வரை தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் [(107-30-30)+60+40, அல்லது 137 - 30 + 40 வரை]. இப்போது அசேல மன்னனின் ஆட்சியைப் பார்ப்போம். அசேல முத்தசிவாவின் ஒன்பதாவது மகன். முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அவர் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். தேவநம்பிய திசாவுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து சேனா மற்றும் குட்டாகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். எங்கள் முன்னைய ஊகத்தின் படி அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் இருந்ததால் அல்லது முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அசேல பிறந்தார் என்றால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அல்லது 137- 50 + 40 + 10+ 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். இது ஒரு பரிதாபகரமான பொய்யாக இருக்க வேண்டும். பண்டுக முதல் அசேல வரையிலான ஆட்சியாளர்களின் வயது வழக்கத்தை விட மிக அதிகம். புத்தர் மறைந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தின்படி புத்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இரண்டு மரபுகளுக்கும் இடையே நூற்று பதினெட்டு ஆண்டுகால மாறுபாடு உள்ளது. இப்போது அறிஞர்கள் புத்தர் இறந்த ஆண்டை கி பி 400 க்கும் கி பி 369 க்கும் இடையில் கணிக்கிறார்கள். பண்டுவாசுதேவரில் இருந்து அசேல வரையிலான ஆட்சியின் நீளம், தமிழ் மன்னர்களான சேனனும் குத்திகனும் [22 ஆண்டுகள்] தவிர, 30, 20, 70, 60, 40, 10, 10, 10 மற்றும் 10 ஆகியவை ஆகும். இவர்கள் எல்லோரும் எல்லோரும் நேர்த்தியான வட்ட இரட்டை எண்களாக இருப்பதும் ஆச்சரியமே! இனி வரும் பாடங்களில் பண்டுவாசுதேவருக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான சகாப்தம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும். Part: 18 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did Devanampiyatissa really exist?' Let us now look at Devanampiyatissa again. He was the second son of Mutasiva. Asoka was also the second son of Bindusara. Devanampiyatissa ruled for forty years as per the Ceylon chronicles. Asoka ruled for thirty-seven years after his consecration as per the Ceylon chronicles. However, Asoka assumed the power about four years prior to his formal coronation. Asoka therefore ruled forty-one years in total as per the Ceylon chronicles. The Indian tradition says that Asoka ruled thirty-six years after the coronation. Adding four years prior to the coronation, Asoka ruled forty years, as did Devanampiyatissa. Both are with the same epithet ‘Devanampiya’. Therefore, the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet. He could not have been a real person. That is why there are no archaeological or inscriptional evidence in Lanka about Devanampiyatissa while evidences for Asoka are available in length and breadth of India except in Tamil country. Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka. As noted above, Vijaya to Devanampiyatissa are invented kings without any historical or archaeological evidences. This does not mean that there were no kings in Ceylon during that time. There must have been chieftains in various parts of Lanka, and all their names were obliterated and these invented kings were substituted for the serene joy and emotions of the pious. As stated above, Mutasiva must have lived to a very old age of one hundred and thirty seven. If the second son Tissa was born when Mutasiva was thirty years of age, then Devanampiyatissa would have been 107 years of age when he ascended the throne, and he should have continued to live for the very ripe age of 147 years, [(107-30-30)+60+40, or 137 - 30 + 40] Now let us look at the king Asela’s rule. Asela was the ninth son of Mutasiva. Suppose he was born when Mutasiva was fifty years of age. Considering the rules of Uttiya (10 years), Mahasiva (10 years), Suratissa (10 years), Sena and Guttika (22 years), Asela must have ascended the throne when he was, (107-30-50)+60+40+ 10+ 10 + 10 + 22, 179 years of age and he must have been killed by Elara when Asela was 189 of age, after the reign of ten years. This must be a pathetic lie. The ages of rulers from Panduka to Asela are very much longer than usual. Asoka’s coronation took place two hundred and eighteen years after the demise of the Buddha as per the Ceylonese chronicles. However, Asoka’s coronation took place only one hundred years after the demise of the Buddha as per the Indian tradition. There is a variation of one hundred and eighteen years between the two traditions. Now scholars prefer 400 B. C. to 369 B. C. as the preferred range in which the Buddha died. The lengths of reigns from Panduvasudeva to Asela, except the Damila kings Sena and Guttika [22 years] - 30, 20, 70, 60, 40, 10, 10, 10 and 10 are neat round even numbers indicating cooked up numbers. The era between Panduvasudeva to Dutthagamani is analysed in detail further down in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 19 தொடரும் / Will Follow
1 month 2 weeks ago
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/
1 month 2 weeks ago
கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார். புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை. இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில் பட்டும்படாமல் உள்ளது. மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள். ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=12248
1 month 2 weeks ago
காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும் குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.
1 month 2 weeks ago
‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார். https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/
1 month 2 weeks ago
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர். காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார். எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. https://oruvan.com/un-strongly-condemns-journalists-killed-in-israeli-attack/
1 month 2 weeks ago
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி! ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன். நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம். இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார். அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=336592
1 month 2 weeks ago
மன்னாரில் கடும் பதற்ற நிலை - குவிக்கபட்டுள்ள பொலிஸார்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் பாதுகாப்பு தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிசார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/08/blog-post_80.html
1 month 2 weeks ago
அன்பை விட நன்றி அதிக கனமுள்ளது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது ........ ஆசிரியர் கானுக்கு பாராட்டுக்கள் ....... ! 🙏
1 month 2 weeks ago
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2025/08/26.html
1 month 2 weeks ago
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந் Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார். அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது. இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை. இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது. எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம். இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது. இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள். எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது. ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள். இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை. ஒன்பது மாத குழந்தை தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை. வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன். தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்? இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது. ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல் என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/222376
1 month 2 weeks ago
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை லக்ஸ்மன் ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?” என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது. தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. அந்தக் கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கடிதத்தை அனுப்பும் வகையில், அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றருந்தது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்தத் தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. தமிழரசுக் கட்சி இதில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இணைத்துக் கொள்ளாமல் என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவித தீர்மானத்துடன், பிடிவாதத்துடன், தனிக்காட்டு ராஜா நிலைமையில் செயற்படுவதே தெரிகிறது. இருந்தாலும், அவர்களால் உருவாக்கப்படும் மாயைத் தோற்றத்தை உண்மையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தளத்தில் நடைபெறுகிறது என்றே இந்தக்கருத்தினை அடிப்படையில் கொண்டு பார்க்க முடியும். அதே போன்றதொரு நிலையே விடுதலைப்புலிகளின் தலைமையின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கலைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இருந்தாலும் முழுப் பழியும் கூட்டமைப்பில் இணைந்திருந்த மற்றைய கட்சிகளின் மீதே சுமத்தப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தாமாக விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் பிழை என்பதை யாரும் கடுமையாகச் சொல்வதற்கல்ல சாதாரணமாகக் கூறுவதற்குக் கூட தயாரில்லை. தனிப்பட்ட ஒருவருடைய, ஒரு கட்சியினுடைய விடயங்கள் எழுந்தமானமாக, ஏகபோகத்தனத்துடன் மேற்கொள்ளப்படுவது யாராலும் கேள்விக்குட்படுத்தப்படாதிருப்பது என்வோ சரியாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான விடங்களில் எழுந்தமானமாகச் செயற்படுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு கட்சிக்குப் புரியாதிருக்கையில் பொதுமைப்படக் கருத்துக்கள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல் தடவையல்ல என்ற வகையில் திருத்த வேண்டியவர்களைத் திருத்தியாகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வாந்தாகவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தயாரிப்பதற்கான ஆரம்பப்பணியை மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தொடங்கியிருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக இணைந்து முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு மீண்டும் கிளிநொச்சியில் நடைபெற்று ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் பிரதானமாக இனப்பிரச்சினைத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்காமல் பன்னாட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இரண்டாவதாக, போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்கினால், அதற்குக் காலவரையறை இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனைத் தீர்மானிப்பதற்குப் பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்திருந்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து சர்வதேசத்துக்கு ஒற்றுமையாக முதன் முதலில் எழுதியக் கடிதமாக இது அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தினால் சாதகமான விளைவேதும் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியே இருக்கிறது. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத் திறமையாகச் செயற்பட்டதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு இலங்கைக்குள் வருகைதந்து செயற்பட இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தச் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கதே. யானைக்கு மணியைக் கட்டுதல் என்கிற விடயம் நடைபெறாதிருக்கையில் யாரேனும் மணியைக் கட்டியானால் பிரச்சினை என்கிற தோரணை உருவாக்கப்படுவது தவறாகும். எல்லோருடைய நோக்கமும் ஒன்றாக இருக்கையில் யார் மணியைக் கட்டினால் என்ன என்று சிந்திக்கின்ற நேர்மை இல்லாமலிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1948 தொடங்கி, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கையாளப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கையாளப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் இணைந்து கையாண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாண்டிருக்கிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினைக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில் இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரிக் கொண்டிருக்கையில், புதிதாக ஆட்சியிலுள்ள அரசாங்கமும் உள்நாட்டுப் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. எனவே, உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நடத்திய ஊடகச் சந்திப்பில், தமது கட்சி கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியதாகவும், உள்நாட்டுப் பொறிமுறையைத் தாம் கோரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைப் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக அவர் கூறுவதற்குக் காரணம் என்ன. கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து பங்குகொள்ளாதிருந்ததுடன், அவர் அதனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால், தம்முடைய அரசியலை செய்வதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் வெளிப்படை. தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தரப்புத் தாங்களே என விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்துக் கொண்டிருந்து பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்காக உருவாக்கிக் கொண்டனர். ஆனால், ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் யுத்த மௌனிப்பின் பின் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. விலக்கப்பட்டதாகக் கொள்ளலாமா என்பது இப்போதும் சந்தேகமானது. அத்துடன் விலக்கப்பட்டனவா, விலகிக் கொண்டனவா, விலகுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதால் அது ஏற்பட்டதா என்பது இன்னமும் யாராலும் புரிதலுக்குட்படுத்தப்படவில்லை என்பது வேறு விடயம். இந்த நிலையில், ஒவ்வொரு விடயத்திற்கும் வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுவது நடைபெறுகிறது.இவற்றினை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் விளங்கிக் கொள்வதும், நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கென்று செயற்படுகின்ற கட்சிகள் தாய்க் கட்சி, தந்தை கட்சி, ஏக தரப்பு என்றெல்லாம் நடந்து கொள்வது சர்வதேச தரப்புகளை அணுகுகின்ற வேளைகளிலும் தேவைதானா என்பதுவே கேள்வியாக இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைப் பேசுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் ஐ.நா. என்ற வகையில், இதனைப் பலவீனமான நிலையுடன் அணுகுவதால் பயன் ஒன்று விளையுமா என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. ஆனால், பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு இனப்படுகொலையைத் திட்டமிட்டவகையில் நடத்தி வந்த ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையுடன் அரசியல் நடத்துவதால் பயன் விளையுமானால் நல்லதே. ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள, ஈர்த்துக் கொள்ளப் பரந்துபட்ட வேலைத் திட்டங்களில்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது. இது தமிழரசுக் கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரியவைக்கப்படுதலே நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓற்றுமையின்மையே-தமிழரின்-இயலாமை/91-362706
1 month 2 weeks ago
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்! யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இவ் விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/article/மட்டுவிலில்_அமைந்துள்ள_பொருளாதார_மத்திய_நிலையத்தை_பார்வையிட்ட_அமைச்சர்!
1 month 2 weeks ago
சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்! கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. https://www.samakalam.com/சைபர்-குற்ற-மையங்கள்-பாத/
1 month 2 weeks ago
Checked
Mon, 09/29/2025 - 12:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed