1 month 1 week ago
நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு Aug 17, 2025 - 09:09 - இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmef4zsxz02n0qp4kfae9rzm6
1 month 1 week ago
17 AUG, 2025 | 07:34 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு, எனவே நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின் அரசியல் எழுச்சிளை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே, எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இன்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ் நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை (17) முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/222755
1 month 1 week ago
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரத சாதனையை முறியடிக்கும் விதமாக… காலை 4 மணியிலிருந்து, காலை 8 மணிவரை ஹர்த்தால் நடைபெறும். Inuvaijur Mayuran
1 month 1 week ago
"புதினுக்கு வெற்றி, டிரம்புக்கு ஏமாற்றம்" : சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் அலாஸ்கா உச்சிமாநாட்டில் இடம்பெறவில்லை. 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் உச்சிமாநாடு மீது ஒட்டுமொத்த உலகின் கவனம் இருந்தது. யுக்ரேன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்த பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்பிற்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால் போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை, அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை. அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு டிரம்பும் புதினும் கூட்டாக செய்தி அறிவிப்பை வாசித்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. இந்த சந்திப்பு பற்றி உலகம் முழுவதும் உள்ள இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெவ்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. சில மதிப்பீடுகள் இது புதினுக்கு வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளன. சில செய்திகள் டிரம்ப் சந்திக்கும் கடினமாக கேள்விகள் பற்றி பேசியுள்ளன. பல கட்டுரைகள் இந்த சந்திப்பு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கான தளத்தை தயார் செய்துள்ளது எனக் கூறியுள்ளன. ஆனால் தற்போதைக்கு முடிவுகள் அளவானதாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன. புதினுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது - சிஎன்என் அமெரிக்க தொலைக்காட்சியான சிஎன்என், அலாஸ்காவில் புதின் எதிர்பார்த்த அனைத்தும் அவருக்கு கிடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த செய்தி, "புதினுக்கு தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த அனைத்து முடிவுகளும் கிடைத்துவிட்டன. அதற்கு மாறாக டிரம்புக்கு சந்திப்புக்கு முந்தைய அவரின் சொந்த எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளது. டிரம்புக்கு சிறிய பலன்கள் மட்டுமே கிடைத்துள்ளதா? என சிஎன்என் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தில் யுக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கிவிட்டார்களா என்கிற கேள்வியும் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "டிரம்ப் நிறைய முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்திப்பிற்கு 10/10 மதிப்பெண் வழங்குவதாகவும் கூறினார். ஆனால் இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்கு தான் பெரிய வெற்றி கிடைத்துள்ளதையே காட்டுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிரமாண்ட வரவேற்பு, ஆனால் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இல்லை' அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தும் டிரம்புக்கு எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் கிடைக்கவில்லை என தனது செய்தியில் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், "அலாஸ்காவில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம் மற்றும் தனது வாகனத்தில் சவாரி கொடுத்து வரவேற்றார் டிரம்ப். இது பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் வாஷிங்டனுக்கு திரும்புகையில் காட்டுவதற்கு டிரம்பிடம் எதுவுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் பதவியேற்றதும் முதல் நாளிலே போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்த டிரம்ப் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டுவதில் கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சந்திப்பு மாஸ்கோவில்? ஷார்ட் வீடியோ Play video, "டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின்", கால அளவு 0,20 00:20 காணொளிக் குறிப்பு, டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின் "டிரம்ப் தனது விருந்தாளியான புதினை வரவேற்றார். ஆனால் இந்த சந்திப்பின் ஒரே முடிவு 'அடுத்த முறை மாஸ்கோவில்' என புதின் கூறியதைப் போல" அவர்கள் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டது மட்டும் தான்" என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் அமெரிக்க மண்ணில் கால் பதித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலாஸ்காவில் ராணுவ தளத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. நான்கு அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார் புதின். "இத்தகைய இணக்கமான வரவேற்பு, இரு தலைவர்களும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தை அடைய முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் "டிரம்ப் மீண்டும் மீண்டும் சுற்றியிருந்த மேடையை நோக்கியும், செய்தியாளர்களை காண்பித்தும், அமெரிக்க வலிமையின் காட்சிப்படுத்தலை நோக்கியும் சைகை செய்தார். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த தலைவர்கள், மேலே பறந்து சென்ற பி2 ஸ்டீல்த் போர் விமானங்களை மேல்நோக்கி பார்த்தபடி நடந்து சென்றனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அடுத்த சந்திப்பை மாஸ்கோவில் நடத்தலாம் என புதின் தெரிவித்துள்ளார். புகைப்படங்கள் மீதான விமர்சனம் - தி டெலிகிராப் இந்த சந்திப்பின்போது வெளியான சில புகைப்படங்கள் விமர்சனத்திற்கான காரணமாக மாறியது என பிரிட்டன் செய்தித்தாளான தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. "அமெரிக்க வீரர்கள், புதினின் விமானம் முன்பாக குனிந்து சிவப்பு கம்பளத்தை விரித்த காட்சிகள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் இறுதியில் புதினுக்கு வேண்டிய முடிவு கிடைத்தது. அமெரிக்க அதிபர் உடன் தான் கை குலுக்கும் புகைப்படத்திற்கு ஆசைப்பட்டார் புதின். உலகளாவிய அரசியலின் மிக முக்கியமான மேடையில் ரஷ்யா தற்போதும் உள்ளது என அவர் உலகிற்கு காட்ட விரும்புகிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தவறினால் அவர்கள் வரலாற்றுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Play video, "உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.", கால அளவு 4,35 04:35 காணொளிக் குறிப்பு, உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. யாருக்கும் தெரியாது - லா மோண்ட் பிரெஞ்சு செய்தித்தாளான லா மோண்டில் வெளியான செய்தி ஒன்று இந்த சந்திப்பை தோல்வி என விவரித்துள்ளது அந்த செய்தியின்படி, "அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது. எந்த ஒப்பந்தமும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை." "புதினுக்கு அழுத்தம் கொடுக்க தவறிய டிரம்ப், அதற்கு மாறாக யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் கருத்துக்கள் குழப்பத்தை உண்டாக்கியது ஹாங்காங்கைச் சேர்ந்த செய்தித்தாளான சௌத் சைனா மார்னிங் போஸ்ட் இந்த சந்திப்பிற்குப் பிறகு எழுந்த குழப்பத்தை குறிப்பிட்டு காட்டியுள்ளது. "இந்த சந்திப்பிற்குப் பிறகான டிரம்பின் கருத்துக்கள் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிற பிம்பத்தை உருவாக்கியது" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் "கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. ஆனால் டிரம்பும் சரி புதினும் சரி, யாருமே ஆக்கப்பூர்வமான முடிவுகள் அல்லது தகவல்களைப் பகிரவில்லை. அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "நிருபரின் கேள்விக்கு சைகை மூலம் பதிலளித்த புதின்", கால அளவு 0,21 00:21 காணொளிக் குறிப்பு, நிருபரின் கேள்விக்கு சைகை மூலம் பதிலளித்த புதின் இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது - குளோபல் டைம்ஸ் சீன செய்தித்தாளாக குளோபல் டைம்ஸ் இந்த சந்திப்பை ஒரு அடையாள வெற்றி என அழைத்துள்ளது. "புதினும் டிரம்பும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சுமார் மூன்று மணி நேரம் சந்தித்தனர். ஆனால் அந்த சந்திப்பு யுக்ரேன் நெருக்கடி மீது எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வல்லுநர்கள் இந்த சந்திப்பு ஒரு அடையாளகரமானது எனக் கூறியதாக அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சர்வதேச அளவில் ரஷ்யாவின் தனிமைப்படுத்தலை உடைத்துள்ளது என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கியுள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 'விரைவாக முடிந்த சந்திப்பு' Play video, "டிரம்ப் - புதின் சந்திப்பில் நடந்தது என்ன?", கால அளவு 3,55 03:55 காணொளிக் குறிப்பு, டிரம்ப் - புதின் சந்திப்பில் நடந்தது என்ன? ரஷ்ய செய்தித்தாளான மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமால்ட்ஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று இந்த சந்திப்பு விரைவாக முடிந்ததாக தெரிவித்துள்ளது. "இருவரும் மிகவும் இணக்கமாகச் சந்தித்து, இரவு உணவு கூட ஒன்றாக உண்ணாமல் இணக்கமின்றி பிரிந்து சென்றனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கானது என சிலர் கூறி வந்த நிலையில் அத்தகைய கூற்றுக்கள் வெறும் யூகங்களாக முடிந்துவிட்டன என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் "இரு தரப்பிலிருந்தும் ஐந்து கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டிரம்பும் புதினும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலே சென்றுவிட்டனர், இதனால் பலர் கோபமும் ஏமாற்றமும் அடைந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c209dpnvx1no
1 month 1 week ago
1 month 1 week ago
போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன். 1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்: போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாகத் தமிழர்கள், இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும், விடுதலைப் புலிகளாலும் காணாமல்போகச் செய்யப்பட்டதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 1980களின் பிற்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 60,000 முதல் 100,000 வரையிலான காணாமல்போனோர் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக Amnesty International 2017 இல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள், மருத்துவமனைகளில் இருந்த தமிழ் மக்கள், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்த தமிழர்கள் ஆகியோர் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டனர். காணாமல்போனவர்களின் தாய்மார்களும் மனைவியருமே இப்போராட்டத்தின் முகங்களாக நிற்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். நீதிக்கான அவர்களின் அயராத போராட்டம் தொடர்கிறது. 2016 இல், காணாமல்போன 65,000 இற்கும் அதிகமானோரின் உறவினர்களுக்கு 'இன்மைச் சான்றிதழ்' (certificate of absence) வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது சொத்துக்களை தற்காலிகமாக நிர்வகிக்கவும், தற்காலிகப் பாதுகாவலராகச் செயல்படவும் உதவுகிறது. இருப்பினும், இது நீதிக்கான உண்மையான தீர்வாக அமையவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. 2. நிலப் பிரச்சினைகளும் இனப்பரம்பல் மாற்றங்களும்: இலங்கையில் நிலம் என்பது இன மோதலின் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது. போருக்குப் பின்னரும், வடகிழக்குப் பிரதேசங்களில் நிலப் பிரச்சினைகள் ஒரு தொடர்ச்சியான சவாலாகவே உள்ளன. பாதுகாப்புப் படைகளின் நில ஆக்கிரமிப்புகள், உயர்பாதுகாப்பு வலையங்கள், அரச ஆதரவுடன் நடைபெறும் காணி அபகரிப்புகள், மற்றும் பௌத்த மதகுருமார்களின் தலையீடுடன் கூடிய புனிதப் பிரதேசங்கள் என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள் ஆகியவை தமிழ்ச் சமூகங்களிடையே பெரும் அச்சத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளன (ReliefWeb, ஆகஸ்ட் 2024). குடிசன இடப்பெயர்வு, நிலத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சுருங்கிவரும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை விவசாய நிலப் பயன்பாட்டில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திரும்பிய மக்கள் தமது சொத்துக்களை இரண்டாம் நிலை ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படுவதைக் காண்கின்றனர். இது தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் அச்சுறுத்துகிறது. 3. முன்னாள் போராளிகளின் சமூக-பொருளாதார மீளிணைவும் சவால்களும்: போர் முடிவடைந்த பின்னர், முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை சமூகத்துடன் மீளிணைப்பது ஒரு முக்கியச் சவாலாக இருந்தது. இலங்கை அரசாங்கம் 2009 முதல் 2011 வரை விரிவான புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டது. இதில் தொழில் தொடங்குவதற்கும், பின்னர் கடன் அடிப்படையிலான மீளிணைப்புத் திட்டங்களும் அடங்கும். இருப்பினும், பலர் காயங்கள், போதிய திறன்கள் இல்லாமை, சந்தைகளுக்கும் கடன்களுக்கும் போதிய அணுகல் இல்லாமை போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை (ResearchGate, 2014). வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் உத்தரவாதங்களைக் கோருவதால் முன்னாள் போராளிகள் கடன் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டனர். பொருளாதார நல்வாழ்வுக்கும் நீண்டகால அமைதிக்குமான தொடர்பு வலுவாக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பாலின ரீதியான பாகுபாடுகளும், பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் முன்னாள் பெண் போராளிகளின் மீளிணைப்பைப் பெரிதும் பாதித்தன. 4. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரச் சவால்கள்: போர் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கணவனை இழந்த, கணவர் காணாமல்போன அல்லது உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு சமூக, கலாச்சார, உடல்நல, தளபாடங்கள் மற்றும் பொருளாதார ரீதியான பல சவால்கள் உள்ளன (University of Bath research portal). பாரம்பரிய சமூகக் கட்டுப்பாடுகள், பரம்பரைச் சொத்து அல்லது கடன் சார்ந்த விடயங்களில் ஆண்களை மையப்படுத்திய விதிமுறைகள், மற்றும் பொதுத் துறையில் குறைந்த அரசியல் பங்களிப்பு ஆகியவை இவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. வேலைவாய்ப்பின்மையும், குறைந்த கூலியும் இவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. வடக்கில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 16% ஆகவும், கிழக்கில் 18% ஆகவும் உள்ளது. இது நாட்டின் சராசரியை விடவும் மிகக் குறைவு (FAO, Conflict and women's status in the North and East of Sri Lanka 1). 5. உளவியல் ரீதியான காயங்களும் மனநலப் பிரச்சினைகளும்: நீண்டகாலப் போர் ஈழத்தமிழர்களிடையே ஆழமான உளவியல் காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மனச்சோர்வு, பதட்டம், மன உளைச்சல், அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறுகள் (PTSD) போன்ற மனநலப் பிரச்சினைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கணிசமாக அதிகமாக உள்ளன (NCBI, மே 2024). சமூகத் தூரம், மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, களங்கம், மொழித் தடைகள், மற்றும் மனநலச் சேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவை சிகிச்சையைப் பெறுவதற்கான தடைகளாக உள்ளன. உயிர் இழப்புகள், குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போதல், இடம்பெயர்வு, மற்றும் வறுமை ஆகியவை மனநலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகின்றன. 6. இளைஞர் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார மீட்சி சவால்களும்: வடகிழக்கு மாகாணங்களில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாகும். கல்வித் தகுதிகள் இருந்தபோதிலும், குறிப்பாகப் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது (ResearchGate, ஆகஸ்ட் 2025). இது நம்பிக்கையின்மை, சமூக அமைதியின்மை, மற்றும் சமூகப் பிரச்சனைகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகள், குறைந்த முதலீடுகள், சந்தை அணுகல் இல்லாமை, மற்றும் அரசின் பாகுபாடு ஆகியவை இப்பகுதிகளின் பொருளாதார மீட்சியைப் பாதிக்கின்றன. கண்ணிவெடிகள், உயர்பாதுகாப்பு வலயங்கள், மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன (UK Parliament, டிசம்பர் 2023). 7. கலாச்சாரப் பண்பாட்டு அழிவும் அடையாள நெருக்கடியும்: போரும், போருக்குப் பின்னரான அரசக் கொள்கைகளும் தமிழர்களின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்கள் இடிக்கப்பட்டமை, நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை, மற்றும் போர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகியவை தமிழர்களின் நினைவுகளையும், கலாச்சார அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகளாகப் பார்க்கப்படுகின்றன (Sri Lanka Campaign, மே 2024). இது ஒரு சமூகத்தின் கூட்டு நினைவகத்தையும், கலாச்சாரப் பாரம்பரியத்தையும் இழக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மொழி, கலை, மற்றும் மரபுகள் மீதான புறக்கணிப்பும், ஆக்கிரமிப்பும் ஒரு சமூகத்தின் அடையாள நெருக்கடிக்கு வழிவகுக்கும். மீண்டெழும் சக்தி (Resilient Strength of the Community): மேலே குறிப்பிட்ட ஆழமான காயங்கள் இருந்தபோதிலும், ஈழத்தமிழ்ச் சமூகம் வியக்கத்தக்க மீண்டெழும் சக்தியைக் காட்டுகிறது. சமூகப் பிணைப்புகள்: குடும்பப் பிணைப்புகள், சமூக ஒற்றுமை, மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவு ஆகியவை கடினமான காலங்களில் மக்களுக்குப் பெரும் துணையாக நிற்கின்றன. விடாமுயற்சி: வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், கல்வியைத் தொடர்வதிலும், சமூக நீதிக்காகப் போராடுவதிலும் மக்கள் பெரும் விடாமுயற்சியைக் காட்டுகின்றனர். கல்வியின் முக்கியத்துவம்: கல்விக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், எதிர்காலத் தலைமுறையினரைத் தயார்படுத்துவதற்கான ஒரு கருவியாக உள்ளது. குரலற்றவர்களின் குரல்: காணாமல்போனோர் உறவுகளின் தொடர்ச்சியான போராட்டங்கள், அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு முன்மாதிரியாக அமைகின்றன. புலம்பெயர் சமூகத்தின் பங்கு: புலம்பெயர் தமிழ்ச் சமூகங்கள் தங்கள் சொந்த மண்ணில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கும், மீள்கட்டுமானத்திற்கும் கணிசமான ஆதரவை வழங்கி வருகின்றன. முடிவுரை: போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒருபுறம் போரின் ஆழமான காயங்களையும், மறக்க முடியாத வலிகளையும் தாங்கி நிற்கிறது. மறுபுறம், அந்த வலிகளுக்கு மத்தியிலும் மீண்டெழும் சக்தியையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டுள்ளது. நீதிக்கான தேடல், நிலப் பாதுகாப்பிற்கான கோரிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, உளவியல் ஆதரவு மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்தல் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் மையக் கருக்களாகும். இந்தக் காயங்கள் குணமடையவும், மீண்டெழும் சக்தி முழுமையாக வெளிப்படவும், நியாயமான மற்றும் நிலையான அரசியல் தீர்வு, மனித உரிமைகளின் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அத்தியாவசியமானவை. தமிழ்ச் சமூகத்தின் வலிமையையும், அமைதியான மற்றும் கௌரவமான வாழ்வுக்கான அவர்களின் உறுதிப்பாட்டையும் அங்கீகரித்து, அதற்கான வழிகளைத் திறந்துவிடுவதே எதிர்காலத்திற்கான ஒரே வழி. Posted by S.T.Seelan (S.Thanigaseelan) https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_11.html#more
1 month 1 week ago
ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் - சுமந்திரன் வடக்கு, கிழக்கு மக்களிடம் வலியுறுத்தல் Published By: VISHNU 17 AUG, 2025 | 08:10 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே முத்தையன்கட்டு இளைஞனின் மரணம். இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். வடக்கு மற்றும் கிழக்கில் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை ஹர்த்தாலில் அனைவரும் ஈடுபட வேண்டும். இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு இந்த ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வலியுறுத்தினார். முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் ஐந்து இளைஞர்களை அழைத்துச்சென்றதற்காக இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கின்ற போது இளைஞர்கள் அனுமதியின்றி முகாமிற்குள் உள்நுழைந்தார்கள் என்று எவ்வாறு குறிப்பிட முடியும். இந்த சம்பவத்தின் உண்மையையே வெளிப்படுத்த முனைகிறோம். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது எனவும் குறிப்பிட்டார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஞாயிற்றுக்கிழமை (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில் இராணுவ ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் கலந்துக்கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் பற்றி பேசப்பட்டுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் விசேடமாக குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த சம்பவம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் எப்பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். அத்துடன் இதற்கு ஹர்த்தாலின் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடுகிறார். நாட்டில் ஏனைய மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதை போன்று மக்கள் மத்தியில் இராணுவ பிரசன்னம் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தான் இராணுவத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதனை நாங்கள் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம். இராணுவத்தினரின் இடையூரின் ஒரு விளைவுதான் இந்த இளைஞனின் துரதிஸ்டவசமான மரணம். இராணுவ முகாமிற்குள் அனுமதியன்றி நுழைந்தார்கள், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது. முகாமிற்குள் சென்ற ஐவரையும் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்கான ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகிறார். கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்த ஐந்து பேரை இராணுவ முகாமுக்குள் அழைத்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இராணுவத்தினர் இவர்களை அழைத்து வந்திருப்பார்களாயின் அதனை அனுமதியற்ற நுழைவு என்று எவ்வாறு குறிப்பிட முடியும். ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரரிடம் ' அனுமதியற்ற வகையில் முகாமிற்குள் நுழைந்தவர்களை இராணுவம் கைது செய்திருக்க வேண்டும், அவர்களை கைது செய்யாமல் ஏன் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இதற்கு அமைச்சர் 'அவர்கள் சேர்ந்து வாழ பழகிவிட்டார்கள். இவர்களுக்கிடையே நல்லதொரு உறவு உள்ளது. அதனால் அவ்வாறு நடந்தது' என்று பதிலளித்துள்ளார். இதைத்தான் வெளிக்கொண்டு வர வேண்டும். இராணுவ மயமாக்கலின் சிறு உதாரணமே இது. இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை. கடந்த 15 ஆண்டுகாலமாக இந்நிலைமையே காணப்படுகிறது. இதனையே தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம், சுட்டிக்காட்டுகிறோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியாக இருந்த போது இராணுவ மயமாக்கலுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இராணுவமயமாக்கலை தடுக்கவில்லை, இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. இராணுவத்தினர் மக்கள் மத்தியில் ஒன்றிணைந்திருப்பதால் ஏற்படும் விளைவுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். எவரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. காலையில் (இன்று) மாத்திரம் ஹர்த்தாலில் ஈடுபடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடையும் வகையில் ஹர்த்தாலில் அனைவரும் ஈடுபட வேண்டும். காலை முதல் மதியம் வரை ஹர்த்தாலில் ஈடுபட்டு இந்த செய்தியை வெளிப்படுத்த வேண்டும். விடேசமாக நல்லூர் திருவிழா நடைபெறுகிறது. இதனையும் கரிசனையில் கொண்டு செயற்பட வேண்டும். இந்த ஹர்த்தால இராணுவ பிரசன்னத்துக்கு எதிரானது என்ற செய்தியை அரசாங்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். முத்தையன்கட்டு உட்பட மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக எதிர்வரும் 25 ஆம் திகதி பருத்தித்துறை நகராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/222764
1 month 1 week ago
https://youtu.be/CNqT7kR7JSs?si=VZzBgSxf7RTuHJ40 ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே
1 month 1 week ago
யாழ். நல்லூர் ஆலயப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட ஐவருக்கு விளக்கமறியல்! 17 AUG, 2025 | 07:38 PM யாழ். நல்லூரடியில் நேற்றையதினம் சனிக்கிழமை (16) வன்முறையில் ஈடுபட்ட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஐவர் அடங்கிய குறித்த குழு நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் இருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலை நடாத்திய ஐவரையும் நல்லூரடியில் கடமையில் இருந்த பொலிசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட ஐவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிவான் அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/222757
1 month 1 week ago
ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் ஏழு மணித்தியாலம் விசாரணை 17 AUG, 2025 | 04:55 PM முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் ஏழு மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/222747
1 month 1 week ago
திருகோணமலையில் வரோதயாநகர் படுகொலையின் 40வது ஆண்டு நினைவு நாள் 17 AUG, 2025 | 07:52 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பாதாள வைரவர் ஆலயத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட 11 பேருக்கும் விசேட ஆத்ம சாந்திப் பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில், குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார். 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை கன்னியா பகுதியில் இருந்து வரோதயநகர் பகுதிக்குள் டிபென்டர் வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வீதிவழியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் பாதுகாப்புத் தேடி அயல் வீடுகளிலும் தங்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். இதன்போது வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டைத் தட்டி கூப்பிட்டு அங்கு வந்த பிறீமாவில் வேலை செய்யும் வெள்ளையன் திருச்செல்வம் என்பவரை முதலாவதாக சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கு ஓடி வந்த அவரது மாமனாரான கந்தன் மாணிக்கம் என்பவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் கந்தையா வீதிக்கு திரும்பிச் சென்றனர். இதன்போது அங்கு வந்த சீனியன் மாணிக்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பயத்தில் இருந்த மக்கள் தம்பிராசா என்பவருடைய வீட்டில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தனர். இதன்போது அங்கு பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்க கந்தையா வீதிக்கு திரும்பி அங்கு இரண்டாவதாக இருந்த தம்பிராசாவின் வீட்டை தட்டி எட்டிப்பார்த்து அங்கு நிறைய மக்கள் இருக்கவே அந்த அறைக்குள் கைக்குண்டு ஒன்றை போட்டு வெடிக்கச் செய்தனர். இதன்போது அங்கிருந்து காயங்களுடன் வெளியேறி ஓடியவர்களையும் சுட்டுக் கொன்றனர், இதன்போது அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் மாலையளவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர். அங்கு காயமுற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய 8 வயதான பெண் குழந்தை காணாமல் போயிருந்தார். இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/222744
1 month 1 week ago
டிவால்ட் பிரிவிஸ்-க்காக விதிகளை மீறியதா சிஎஸ்கே? - அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் பட மூலாதாரம், R. SATISH BABU/AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மழைவிட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல் ஐபிஎல் சீசன் முடிந்தாலும், சிஎஸ்கே குறித்த சில பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை விழிப்பிலே வைத்திருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் எந்தெந்த வீரர்களை அணியில் தக்கவைக்கப் போகிறார்கள், தோனி விளையாடுவாரா, எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறார்கள் என்ற கணிப்புகளை, ஊகங்களை முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தெரிவித்து சிஎஸ்கே பரபரப்புக்கு உயிர்கொடுத்து வருகிறார்கள். அதில் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோவில், " சிஎஸ்கே அணி சில வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பரிமாற்றம் செய்வது குறித்து பேசி வருகிறது. அதில் கேப்டன் சஞ்சு சாம்ஸனை சிஎஸ்கே பக்கம் இழுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட சிலரை வழங்கவும் பேச்சு நடக்கிறது" எனத் தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி குறித்த பரபரப்பை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அஸ்வின் வீசிய அணுகுண்டு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் பிரிவிஸை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது குறித்து பேசியதுதான் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி, அது கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில் " சிஎஸ்கே அணி நிர்வாகம் பாதி சீசனின் போது காயமடைந்த குர்ஜப்நீத் சிங்கிற்குப் பதிலாக தென் ஆப்ரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸை தங்கள் அணியில் சேர்ப்பது குறித்து அணுகியது. பிரிவிஸிடம் நடத்தப்பட்ட பேரத்தின் முடிவில் அவரின் அடிப்படை விலையைவிட சிஎஸ்கே அணி கூடுதல் பணம் வழங்கியிருக்கலாம். ஏனென்றால், அந்த நேரத்தில் பிரிவிஸை சேர்க்க பல அணிகளும் அவருடன் பேரத்தில் இருந்தன. இதிலிருந்து முந்திக்கொண்டு அவரை வாங்க வேண்டும் என்ற நோக்கில் குர்ஜப்நீத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.20 கோடி விலையைவிட கூடுதலாக சிஎஸ்கே அணி கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரிவிஸின் கடந்த ஐபிஎல் சீசன் ஆகச்சிறந்ததாக இருந்தது" எனத் தெரிவித்தார். ஆனால், உண்மையில் பிரிவிஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்போது அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தில் ஒரு அணிகூட பிரிவிஸை சீண்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் ஏலமாகாத வீரர்கள் பட்டியில் பிரிவிஸ் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தார். ஆனால், பிரிவிஸின் கடந்த கால கிரிக்கெட் புள்ளிவிவரங்களை அறிந்தபின்புதான் பல்வேறு அணிகள் சீசனின் இடைப்பகுதியில் அவரை அணியில் சேர்க்க போட்டிபோட்டன, அவருக்கான கிராக்கியும் அதிகரித்தது. ஆகாஷ் சோப்ராவின் விளக்கம் பிரிவிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.2.20 கோடிக்கும் அல்லது அஸ்வின் கூற்றுப்படி அதற்கு அதிகமான விலையிலும் சிஎஸ்கே அணி வாங்கியது சரியானதா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார் ஆகாஷ் சோப்ரா அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் காயம் காரணமாக ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரை ஓர் அணி சேர்க்கும் பட்சத்தில் அவருக்கு "ப்ரோ ரேட்டா"(pro rata basis) அடிப்படையில்தான் ஊதியம் வழங்க வேண்டும். அதாவது மீதமுள்ள போட்டிகளை கணக்கிட்டு மாற்று வீரருக்கு ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இருக்கையில் பிரவிஸுக்கு அவரின் அடிப்படை விலையில் பாதியான ரூ.37.50 லட்சத்தைதான் அடிப்படையாக வைத்திருக்க வேண்டும். காயமடைந்த குர்ஜப்நீத்துக்கு பதிலாக சேர்க்கப்பட்டதால் அவருக்கான ஏலத்தொகை ரூ.2.20 கோடியிலிருந்து பாதியைத்தான் பிரிவிஸுக்கு நிர்ணயித்து மீதமுள்ள சீசனில் இருக்கும் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா பேட்டர், ஜூனியர் ஏபிடி என அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் விதிகள் மீறப்பட்டதா? பிரிவிஸ் அடிப்படை விலையில் இருந்து கூடுதலாக பணத்தை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரினார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். பிரிவிஸுக்கு கூடுதலாக பணம் வழங்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா, அதிகாரபூர்வமாக அவரால் பெற முடியுமா. சில நேரத்தில் ஐபிஎல் அணியிடம் இருக்கும் பர்ஸின் கையிருப்பு பண அ்ளவை மீறமுடியுமா, அந்த விதிமுறை மீறலை, ஓட்டைகளைத்தான் அஸ்வின் குறிப்பிட்டாரா. ஒருவேளை அதிகமான பணத்தை சிஎஸ்கே நிர்வாகம் பிரிவிஸுக்கு வழங்கினாலும் அது அடுத்த சீசனுக்கானதாக இருக்கலாம். ஏதேனும் விதிகளில் ஓட்டை இருந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்தியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார். சிஎஸ்கே விளக்கம் என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் இந்நிலையில் அஸ்வினின் குற்றச்சாட்டுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக திடீரென விளக்கம் அளித்து அஸ்வின் கூற்றை மறுத்துள்ளது. அதில் ஐபிஎல் விதிப்படி அனைத்து விதிகளை முறைப்படி பின்பற்றிதான், காயமடைந்த வீரருக்கு மாற்று வீரராக டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் கொண்டு வந்தோம் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் தொடரில் இருக்கும் விதிகளின் படிதான் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்றுவீரராக டிவால்ட் பிரிவிஸ் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் விதி 6.6ன் படி மாற்றுவீரர் விதி முறையாகக் கடைபிடிக்கப்பட்டது. 2025 டாடா ஐபிஎல் சீசனில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முறைப்படி சிஎஸ்கே நிர்வாகம் பின்பற்றிதான் டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் சேர்த்தது, அவரை ஒப்பந்தம் செய்தது. மாற்று வீரரை சேர்க்கும் ஐபிஎல் விதி 6.1 அல்லது 6.2ல் குறிப்பிட்டபடி, சீசனில் வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகமாக இல்லாதவாறு, காயமடைந்த வீரருக்கு எந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த ஊதியத்தைதான் மாற்று வீரருக்கு வழங்கினோம். அதாவது குர்ஜப்நீத்துக்கு 2025 சீசனில் ரூ.2.20 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, அது தான் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டிவால்ட் பிரிவிஸுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொகையைவிட கூடுதலாக சிஎஸ்கே நிர்வாகம் வழங்கவில்லை" என விளக்கம் அளித்தது. ஐபிஎல் விதிகள் கூறுவதென்ன? பட மூலாதாரம், GETTY IMAGES ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து விளையாட முடியாத சூழல் நிலவும்போது மாற்றுவீரரை அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்ய ஐபிஎல் விதி அனுமதிக்கிறது. ஆனால், மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடியவருக்கும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது இதன்படி, மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வீரர் ஒருவர் அந்த சீசனில் உள்ள பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்(RAAP) பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்த வீரரைத்தான் ஓர் அணி மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாற்று வீரர் ஐபிஎல் சீசன்முழுமைக்கும் வேறு எந்த போட்டித் தொடரிலும் விளையாடாமல் இருப்பாரா, அல்லது எப்போது வேறு தொடர்களில் விளையாடச் செல்வார், அவருக்கான ஒப்பந்த ஊதியம், முழு சீசனிலும் விளையாட நேர்ந்தால் அதற்கான தொகை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மாற்று வீரரின் வீரர் ஒப்பந்தம் விதிமுறைகளின்படி நீட்டிக்கப்பட்டால், அடுத்த சீசனுக்கான வீரருக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை, நடப்பு சீசனுக்கான ஊதிய உச்சவரம்பிற்கும் அதிகமாக வழங்கப்படலாம். எப்படியாகினும் அணியில் வீரர்கள் எண்ணிக்கை 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர் அந்த அணிக்காக ஏற்கெனவே போட்டியில் பங்கேற்றிருந்த போதிலும், சீசனின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அவருக்கு மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், அந்த சீசனில் 12 லீக் போட்டிக்கு முன்பாகவே காயம் அல்லது உடல்நலக்குறைவு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பிசிசிஐ அமைப்பால் நியமிக்கப்பட்ட மருத்துவர், அந்த குறிப்பிட்டவீரரின் உடல்நிலையை பரிசோதித்து காயம் ஏற்பட்டதையும், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த வீரரால் விளையாட முடியாது என்று சான்றளித்தபின்புதான் மாற்றுவீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க முடியும். ஐபிஎல் விதி பிரிவு 6.6ல் குறிப்பிட்டுள்ளபடி, "மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கான ஊதியம் என்பது காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு அந்த சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தைவிட விட அதிகமாக இருக்கக்கூடாது." விதி 6.7ல் குறிப்பிட்டுள்ளபடி "ஒரு சீசனில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கான ஊதியம் அவர் அணியில் சேர்க்கப்படும் முன், எத்தனை போட்டிகளை அந்த அணி விளையாடி முடித்துள்ளது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்றார்போல் ஊதியம் குறைக்கப்படும்." உதாரணமாக சிஎஸ்கே அணி பிரிவிஸை அணியில் சேர்க்கும் முன் 5 போட்டிகளில் பங்கேற்றிருந்தால், மீதமுள்ள லீக் போட்டிகளை மட்டும் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயிக்கப்படும். விதி 6.8ன் கீழ் " மாற்று வீரரை ஒரு அணி ஒப்பந்தம் செய்வதற்கு முன், அந்த அணி நிர்வாகம் அது தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பிசிசிஐ-க்கு அனுப்பி வைக்க வேண்டும். பிசிசிஐ ஒப்புதல் அளித்தப்பின்புதான் மாற்றுவீரருடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2pgv0y346o
1 month 1 week ago
இப்போ அவர் கண்முன் தெரிவதெல்லாம் முதலமைச்சர் பதவி மட்டுமே.
1 month 1 week ago
முன்னைய அரசுகள் நடந்து கொண்டது போல இந்த அரசும் ஆயுதப்படைகளை வைத்து அதுவும் ஊடகவியலாளர்களையே மிரட்டுவது காட்டுமிராண்டித் தனமான செயல்.இதை கட்சி சார்பில்லாமல் எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
1 month 1 week ago
போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லாம் இன்று தொலைந்த மனிதனாக வெறுப்பும் வேதனையுமாக மனித அவலங்களாக உலகம் இருப்பது பெரும் அவலம். உலக வளங்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்திடம் இருப்பதும் எத்தனையோ ஏழை நாடுகள் எவ்வித வளர்ச்சியும் இன்றி அந்த நாட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இன்றி திண்றாடுகின்றனர். உலக சமத்துவமின்மையால் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. மானிட வரலாறுகள் எல்லாம் சரிகளோடும் பிழைகளோடுமே நகர்த்திருக்கிறது. மதங்களின் பெயரிலும், காலனித்துவ அதிகார சுரண்டலின் பெயரிலும், வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தும் உலகம் எத்தனையோ அழிவுகளை சந்தித்தது. யுத்த வடுக்கள் சுமந்து சென்ற வலிகள் எண்ணில் அடங்காதவை. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலைஸ்தீனம் இப்படி எத்தனையோ நாடுகள் ஆதிக்க வல்லரசுகளின் நலன் சார்ந்த யுத்தங்களினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் எத்தனை. இந்த யுத்தங்களுக்காக செலவிடும் எத்தனையோ பில்லியன் பணத்தை கொண்டு எத்தனையோ வறிய நாடுகளை முன்னேற்ற உதவி இருக்கலாம். பசியோடும் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு பசியையும் போக்கி கல்வியை கொடுத்து உதவி இருக்கலாம். யுத்தம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இன்று ரஷ்யா உக்ரைன், பாலைஸ்தீனம் இஸ்ரேல் யுத்தங்களினால் உலகம் அமைதியை இழந்திருக்கிறது. மனித அழிவும் துன்பங்களும் தொடர்கிறது இது நிறுத்தப்பட்டு சமாதானகத்துக்கான பாதைகள் திறக்கப் பட வேண்டும். யுத்தங்கள் கொடியவை இவைகள் தவிற்கப்பட வேண்டும். மனிதத் துயர்கள் இல்லாதிருக்க வேண்டும். எதிர்கால குழந்தைகள் பயமின்றி நடந்து செல்லும் அமைதிப் பூங்காவாக உலகமே மாறும் நம்பிக்கையோடு இன்று உலகை சூழ்ந்துள்ள இருள் விலகி இதுகும் கடந்து போகட்டும். இவை எல்லாம் கடந்து போய் யுத்தம் இன்றி சமாதானமாக மனிதனை மனிதன் நேசிக்கும் மானிடமும் அறமும் கொண்ட சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் கொண்டு அன்பு என்ற மொழி பேசட்டும் அழகான பூ பூக்கட்டும். பா.உதயன் ✍️
1 month 1 week ago
என்பி பாடல்களை இணைக்கும் போது அதன் முதல்வரிகளை இணையுங்கள்.
1 month 1 week ago
மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தொடர்ந்து வலுத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கம் திட்டத்தை நிறுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுத்து ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. மக்களின் சுற்றுச்சூழல் கவலைகளும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் உரிய தீர்வை கண்டுபிடிக்க முடியுமா என்பது அடுத்தடுத்த வாரங்களில் தீர்மானிக்கப்படும்.
1 month 1 week ago
1 month 1 week ago
என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை?
1 month 1 week ago
உலகம் முழுவதும் பல,பல விதமான ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அவற்றுக்கெல்லாம் வாய் மூடி இருந்து கொண்டு......உக்ரேனுக்காக மட்டும் ஐயோ,குய்யோ,முய்யோ என அலறுவதுதான் எரிச்சலை தருகின்றது. அண்மையில் ஈழப்போராட்டத்திற்கு சமமான இன்னொரு விடுதலை இயக்கத்தை அழித்து விட்டார்கள். அதெல்லாம் உக்ரேன் விசுவாசிகளுக்கு தெரிவதில்லை.
Checked
Mon, 09/29/2025 - 18:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed