புதிய பதிவுகள்2

செம்மணி - துண்டி முகாம்கள் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரண தண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!

1 month 1 week ago
செம்மணி - துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ! Published By: DIGITAL DESK 3 17 AUG, 2025 | 09:48 AM (நா.தனுஜா) அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக, செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் என்று அறிவித்துள்ள கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1996 களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 1996 களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார். அவரது வெளிப்படுத்தல்களின் முதற்பகுதி வருமாறு: 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதனூடாக வெளிப்படுத்துகிறேன். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு மேலதிகமாக, விடயங்களை யாழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இதனை வெளிப்படுத்துகிறேன். எனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கடந்த 3 ஆம் திகதியன்று 'வீரகேசரி' பத்திரிகையில் முதற்பக்கத்தில் வெளியானது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் உண்மையானவை என்பதை நான் யாழ் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக செம்மணிக்கு அப்பால் முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன். 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் வெளிப்படுத்தியபோது, அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன. 1998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கூற்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார என்ற அதிகாரி மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. நான் மேல் நீதிமன்றத்தில் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த அதிகாரி, கடிதத்தை வாசித்துவிட்டுத் திருப்பித்தாருங்கள் என்றார். நான் அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுப்பதற்கு மறுத்தபோது அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர். இருப்பினும் அங்கிருந்த ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அவ்வதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்தொடர்ந்திருந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. 1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தை போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்தபோது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் 'பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை விடுத்து செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்த செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது எனது சார்பில் முன்னிலையாவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவதற்கு குமார் பொன்னம்பலத்துக்கு விமானவசதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது. இவ்விடயம் அவ்வேளையில் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது. 1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன். இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். அரியாலை 7 ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன. அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.' (சோமரத்ன ராஜபக்ஷவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயங்களின் தொடர்ச்சி எதிர்வரும் ஞாயிற்கிழமை (24) வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்படும்.) https://www.virakesari.lk/article/222706

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

1 month 1 week ago
யாழ். நல்லூர் ஆலய பகுதியில் வாள்வெட்டு : இளைஞன் காயம், ஐவர் கைது! 17 AUG, 2025 | 07:44 AM யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில், ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில், பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்டனர். இந்நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர். அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை காப்பற்றப்பட்டு அம்பியூலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதும், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222703

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
ஆக்கிரமிப்பு என்பது எந்த வகையில் வந்தாலும் எவர் செய்தாலும் நண்பர்கள் உடன்பிறப்புகள் என்று கிடையாது. அவர்கள் எதிரிகளே. எமக்கு ஆதரவு தேவை என்பதற்காக கண்டும் காணாமலும் செல்வோமானால் ஆக்கிரமிப்பு சார்ந்து அழுகுரல் எழுப்பும் தகமையை இழக்க நேரிடும். உன் தவறுகளை ஏற்று நான் மண்டியிடாவிட்டால் என்னை சுடுவாய் என்றால் நின்று கொண்டே சுடு என்பது தான் சரியானது. மற்றது அனைத்தும் அடிமையானது தான்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

1 month 1 week ago
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நேற்றையதினம் நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர். அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. https://athavannews.com/2025/1443294

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
விரிவாக்கப்பட்ட அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன 16.08.2025 05:43 அலாஸ்காவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான விரிவாக்கப்பட்ட வடிவப் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன, இதனால் தலைவர்களின் உச்சிமாநாடு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அது ஸ்கை நியூஸின் கூற்றுப்படி , உக்ரின்ஃபார்ம் நிருபர் ஒருவர் தெரிவிக்கிறார். "கிரெம்ளின் மற்றும் வெள்ளை மாளிகை இரண்டும் கடந்த சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் டிரம்ப்-புடின் உச்சிமாநாடு முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளன. அவர்கள் தங்கள் மூத்த அணிகளுடன் ஒரு வேலை மதிய உணவை உட்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் மூன்றுக்கு மூன்று பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தன," என்று அந்த ஊடகம் எழுதியது. விளாடிமிர் புடின் ஏற்கனவே தனது விமானத்தில் ஏறி ரஷ்யாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாக ஸ்கை நியூஸ் மேலும் கூறியது. மேலும் படிக்க: புடினுடனான சந்திப்பை 'பயனுள்ள' என்று டிரம்ப் கூறுகிறார், ஜெலென்ஸ்கியை அழைக்க திட்டமிட்டுள்ளார் டிரம்ப் மற்றும் புதின் இடையே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, "பரஸ்பர புரிதல்" மட்டுமே விளைவாக அறிவிக்கப்பட்டது. புதினுடனான தனது சந்திப்பு குறித்து விவாதிக்க நேட்டோ உறுப்பினர்களையும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் விரைவில் தொடர்பு கொள்வதாக டிரம்ப் உறுதியளித்தார். ரஷ்ய சர்வாதிகாரி புடினுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் பயனுள்ளதாக" இருந்ததாக டிரம்ப் கூறினார். இதன் அர்த்தம் பேச்சுவார்த்தை சரியான உடன்பாடு எட்டப்படாததனால் அடுத்த கட்ட தீர்விற்கான அலுவலக ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை, இது ஒரு தோல்விகரமான பேச்சுவார்த்தை என கூறியுள்ளது உக்ரின்போர்ம் இணையம்.

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
Trump told Europeans that Putin wants all of Ukraine's Donbas in exchange for end of war Russian President Vladimir Putin spelled out his demands for “land swaps” with Ukraine during his nearly three-hour summit with US President Donald Trump yesterday, including his insistence Ukraine gives up the Donbas region in eastern Ukraine, according to European officials familiar with Trump’s accounting of the meeting to his counterparts afterward. Putin said in exchange, he would be willing to freeze the current front lines in the rest of Ukraine — in the regions of Kherson and Zaporizhzhia — and agree to a promise not to attack Ukraine or other European nations again. But he didn’t back away from a demand to eliminate what Russia calls the “root causes” of the war in Ukraine — code for reducing the size of Kyiv’s military, abandoning its aspirations to join NATO and becoming a neutral state. The details of Putin’s conditions emerged when Trump briefed European leaders on the talks as he was arriving back in Washington early this morning. Trump said he believed a deal could be reached quickly if Putin’s conditions were met, and that he would discuss the matter with Ukrainian President Volodymyr Zelensky at the White House on Monday, the officials said. https://www.cnn.com/politics/live-news/trump-putin-meeting-news-08-16-25#cmeecgnxb00073b6omudrlidp நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான கிட்டத்தட்ட மூன்று மணி நேர உச்சிமாநாட்டின் போது, உக்ரைனுடன் "நில பரிமாற்றங்கள்" செய்வதற்கான தனது கோரிக்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கினார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை உக்ரைன் கைவிட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல் உட்பட, இந்த சந்திப்பை டிரம்ப் பின்னர் தனது சகாக்களிடம் தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஈடாக, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் - கெர்சன் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் - தற்போதைய முன்னணிப் படைகளை முடக்கவும், உக்ரைனையோ அல்லது பிற ஐரோப்பிய நாடுகளையோ மீண்டும் தாக்குவதில்லை என்ற வாக்குறுதியை ஏற்கவும் தயாராக இருப்பதாக புடின் கூறினார். ஆனால், உக்ரைனில் போரின் "மூலக் காரணங்கள்" என்று ரஷ்யா அழைப்பதை நீக்குவதற்கான கோரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை - கியேவின் இராணுவத்தின் அளவைக் குறைத்தல், நேட்டோவில் சேருவதற்கான அதன் விருப்பங்களைக் கைவிட்டு நடுநிலை நாடாக மாறுவதற்கான குறியீடு. டிரம்ப் இன்று அதிகாலை வாஷிங்டனுக்குத் திரும்பும்போது பேச்சுவார்த்தைகள் குறித்து ஐரோப்பியத் தலைவர்களுக்கு விளக்கியபோது புடினின் நிபந்தனைகளின் விவரங்கள் வெளிப்பட்டன. புடினின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாகவும் டிரம்ப் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழாக்கம் கூகிள் ஆண்டவர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
சுமந்திரனும், சிவஞானமும் சேர்ந்து தீக்குளித்தால்…. எனது ஆதரவு உண்டு. 👍🏽😀

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம். எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி கடையடைப்பு தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. முழுமையான பங்களிப்பு இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் - என குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilwinகடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் - தமிழ...எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்குஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதர...சுமந்திரனின் ஹர்த்தாலுக்கு வலுக்கும் எதிர்ப்பும் பின்னணியும்.

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
திங்கள்கிழமை ட்ரம்ப் செலன்ஸ்கி சந்திப்பில் புதிய திருப்பமாக ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உக்கிரேன் இராணுவநிலை உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்ந்லையினை அடிப்படையாக கொண்டு ஒரு போர் நிறுத்தம் மட்டும் எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முயலக்கூடும், அதன் மூலம் உக்கிரேன் படையினை வலுப்படுத்த தேவையான ஒரு கால அவகாசத்தினை பெறுவதனை நோக்கமாகக்கொண்டு பேச்சுவார்த்தையின் போக்கினை நிரந்தர தீர்வு நோக்கி நகர்வில்லாமல் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தல். இந்த விட்யத்திற்கு இரஸ்சியா உடன்படாது ஆனால் அமெரிக்க அரசிற்கு இரஸ்சியாவினை உடன்பட வைப்பதற்காக பொருளாதார அழுத்தம் ஏற்படுத்தலாம் எனும் விடயத்தினை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விற்க முனையலாம். ஆனால் ட்ரம்பின் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான அண்மைய ஒப்பந்தத்தில் தனது மேலாண்மையினை காட்டியுள்ளார், இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க எந்தளவிற்கு நலனை பெறும் என்பதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தையின் போக்கு அமைந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை பெருமளவில் அரிய மூலப்பொருளில் தங்கியுள்ள நிலையில், சீனாவுடனான வர்த்தக வரிப்போரில் பின்வாங்குவது போல இரஸ்சியாவிற்கு சாதகமான முடிவையே அமெரிக்கா எடுக்கும் என கருதுகிறேன். F-35 ஏறத்தாழ 900 பவுண்ட் அரிய கனிமங்களையும், வெர்ஜினியா தர நீர்மூழ்கிகள் ஏறத்தாழ 10000 பவுண்ட் அரிய கனிமங்களின் பங்களிப்பில் தங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இரஸ்சிய சார்பு நிலை எடுக்க வாய்ப்புக்கள் இருக்கலாம், ஆனால் இரஸ்சியாவிடம் சீனாவினை போல அரிய கனிமங்கள் இல்லை. போர் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உக்கிரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும், செலன்ஸ்கியிற்கும் தனிப்பட்ட உத்தரவாதத்தினை மேற்கு நாடுகள் வழங்கவேண்டும். இறுதியாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை பலிகொண்ட போர் முடிவிற்கு வரவுள்ளது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 1 week ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 19 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 19 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'இரண்டு வெளிநாட்டு குதிரை வியாபாரிகள் மற்றொரு நாட்டின் பெரிய அரசை கைப்பற்ற முடியுமா?' இராசவலியமானது மூத்தசிவனின் ஆட்சியை இரண்டாகப் பிரித்து விரிவு படுத்தி உள்ளது: கணதிஸ்ஸ (Ganatissa) 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் மற்றும் மூத்ததிஸ்ஸ (Mutatissa) 60 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், ஆட்சி காலத்தை, முன்னையதை விட கூட்டி உள்ளது. மற்ற இரண்டு வரலாற்றுக்களிலும் உள்ள 'மூத்தசிவா' என்ற தமிழ், சைவம் ஒலிக்கும் பெயர் இராசவலியில் 'மூத்ததிஸ்ஸ'வாக மாறியுள்ளது. வரலாற்று நூல்களில் கொடுக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட ஆட்சி கால [இறையாண்மைகளின்] பட்டியலைப் பயன்படுத்தி, இலங்கை "காலவரிசை வரலாறு அல்லது நாளாகமம்" களுக்கு இடையிலான உறுதிப்படுத்தல்கள் மற்றும் முரண்பாடுகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸவின் மறைவுக்குப் பிறகு உத்திய [Uttiya] பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். மகிந்த தேரர் அவரது ஆட்சிக் காலத்தில் தான் காலமானார். சிவன் (மகாவம்சத்தில் உள்ள மகாசிவன்) உத்தியாவுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் மகாசிவனுக்குப் பிறகு சுரதிசா மேலும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். இரண்டு தமிழர் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் பன்னிரண்டு ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் (மகாவம்சம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தார்கள் என்கிறது). தீபவம்சம் 'தமிழ்' மக்கள் என்று பேசுவது இதுவே முதல் முறை என்றாலும் இளவரசர்களின் ஆட்சிகள் நீதியானவை தான் என்றும் ஒத்துக்கொள்கிறது. தேவநம்பியதிஸ்ஸவின் ஒன்பதாவது சகோதரனான அசேல சேனாவையும் குட்டாவையும் கொன்று பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். தீபவம்சம் சேனா மற்றும் குட்டா இருவரும் இளவரசர்கள் என்று கூறுகிறது, ஆனால் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா இருவரும் ஒரு குதிரை வியாபாரியின் மகன்கள் என்று கூறுகிறார். இப்படித்தான் தமிழர்களின் நன்மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக களங்கப்படுத்துகிறார் மகாநாமா. அவர் வேண்டுமென்றே சேனாவையும் குட்டாவையும் அரச வம்சத்தில் பிறக்கவில்லை என்றும் அவர்களை வெளிநாட்டினராக சித்தரிக்கிறார். என்றாலும் இந்த இருவரும் சோழநாட்டிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருந்து வந்ததாக, முதல் எழுதப்பட்ட தீபவம்சம் கூறவில்லை. மகாவம்சம் இவர்கள் "தமிழ் குதிரை வியாபாரிகள்" என்று மட்டுமே குறிப்பிடுவது நம்பக்கூடியதாக இல்லை. எனவே, சேனன் மற்றும் குத்திகன் [சேனா மற்றும் குட்டா] வெறும் குதிரை வியாபாரிகளாக இருக்கமுடியாது? என்று எண்ணுகிறேன். ஒருவேளை வியாபாரிகள் மாதிரியான ஒரு வேடத்தில் தந்திரமாக இலங்கை அரசுக்குள் ஊடுருவி இருக்கலாம்? இவர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றி 22 வருடங்கள் நேர்மையான ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் போர்திறன், ஆயுதங்கள் மற்றும் ஒழுங்கமைந்த சேனை இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. அதாவது, இவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல; போர்வீரர் வியாபாரிகள் (merchant-warriors) அல்லது துணை இராணுவத் தலைவர்கள் ஆக இருக்கலாம்? உதாரணமாக, தமிழ்நாட்டில் பழங்காலம் முதல் வேளிர், கரையார், செட்டியார் [Velir, Karaiyar, and Chettiars] போன்ற சமூகங்கள், வாணிபம் மற்றும் போர் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது வரலாறாகும். மேலும் டயோக்ளீஷியன் (Diocletian – ரோமன் பேரரசு), நெப்போலியன் (Napoleon Bonaparte – பிரான்ஸ்), சந்திரகுப்த மௌரியர் (Chandragupta Maurya – இந்தியா) ஆகியோர் அரச பரம்பரையில் இல்லாமல், அரசை கைப்பற்றிய உண்மை வரலாற்று சம்பவங்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் இராணுவத்தில் பதவிவகுத்தவர்கள் அல்லது தனது சொந்த பழங்குடியினருக்கு வலுவான விசுவாச உணர்வு கொண்டவர்களாக இருந்தவர்களாகும். உதாரணமாக டயோக்ளீஷியன் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் இராணுவத்தில் உயர்ந்து, அதன் பின் பேரரசை கைப்பறியவர்கள் ஆகும். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் அவரிடம் இருந்து கற்று தேர்ந்த பின்பே, சந்திரகுப்த மௌரியர், நந்தர் அரசை வீழ்த்தி, மௌரிய பேரரசை நிறுவியவர் ஆகும். Part: 19 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Can two foreign horse traders conquer the Great Kingdom of another country?' The Rajavaliya amplified the reign of Mutasiva into two: Ganatissa (40 years) and Mutatissa (60 years). The Tamil sounding name Mutasiva in the other two chronicles has become Mutatissa in the Rajavaliya. One can compare and contrast the corroborations and conflicts between the Ceylon chronicles using the list of sovereigns as Appendix to this chapter. Uttiya ruled for ten years after the demise of Devanampiyatissa. Mahinda Thera died during his reign. Siva (Mahasiva in the Mahavamsa) ruled for ten years after Uttiya, and Suratissa ruled for another ten years after Mahasiva. Two Damila princes Sena and Gutta righteously ruled for twelve years (The Mahavamsa says ruled justly for twenty-two years). This is the first time the Dipavamsa speaks of ‘Damila’ people and the reigns of the princes are righteous. The younger, ninth brother of Devanampiyatissa, Asela, killed Sena and Gutta and ruled for ten years. The Dipavamsa says Sena and Gutta are princes, but Mahanama, the author of the Mahavamsa says both are sons of a horse trader. This is how Mahanama tarnishing the image of Tamils, little by little. He was deliberate to denigrate Sena and Gutta as of no royal birth and wanted to portray them as foreigners. The Dipavamsa does not say that both came from Chola or Tamil country. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 20 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1BF4uw3Vf8/?mibextid=wwXIfr

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
அவரவர் தங்கள் காரியத்தை சாதித்து கொண்டனர் . உலகிற்கு படங் காட்டினார் . இவளவு செலவும் யாருடைய ...பணம் ? வருந்தி உழைக்கும் ஒருவரின் வரிப்பணம் .

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.

1 month 1 week ago
செய்தியில் தெளிவில்லை, இங்கு சொல்ல வந்தது இலண்டன் அருங்காட்சியகமா (London museum) அல்லது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமா(British museum)

ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு

1 month 1 week ago
ஓரினச்சேர்க்கை வத்திக்கான் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகத்தானே தெரிகின்றது. இங்கு பேராயர் வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளாரா?

ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!

1 month 1 week ago
ரஜனிகாந்த் தான் நல்லவன் இல்லை என நேரடி வாக்குமூலம் கொடுத்தாலும் அவர் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள். 😄
Checked
Mon, 09/29/2025 - 18:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed