2 weeks 3 days ago
நானும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் Javed Miandad விஸ்டன் புத்தகத்தை கொண்டுவந்து இலங்கை நடுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு விதிகளை விளங்கப்படுத்த சிங்கள சனம் சிங்களத்தில் கூச்சல் போட்டது நினைவுக்கு வருகிறது.
2 weeks 3 days ago
ஓம். கபில் சொன்னது ஞாபகம். அவர்களுக்கு வெளிநாட்டில் வெல்ல நீண்ட காலம் எடுத்தது. இதே விளையாட்டை, அவர்கள் அடுத்து வந்த பாகிஸ்தானிடம் காட்ட, இம்ரான் கான் தங்கள் வீரர்களைக் கூட்டிக் கொண்டுபோய் மைதானத்தின் மத்தியில் இருந்துவிட்டார்.
2 weeks 3 days ago
இவர்களின் ஊழல் வெளிவரும்போதெல்லாம் அடிச்சு பிடிச்சு ஆட்சியை கவிழ்த்து தம்மை உத்தமர்களாக காட்டுவது இவர்களின் வழமை. இப்போது அனுராவை நல்லது செய்யவிடாமல் தடுத்து, தனிமைப்படுத்தி, பொய்ப்பிரச்சாரம் செய்து, இல்லாததை வெளியிட்டு ஆட்சியை கவிழ்த்தாலுண்டு இல்லை களிதான். இந்தப்போரில் அனுரா வென்றால்; இவரின் ஜனாதிபதி கனவுக்கு முடிவு கட்டப்படும்.
2 weeks 3 days ago
நான் அந்த நேரம்..இந்திராகாந்தி பட ஆர்ட்டிஸ்ட்....கிளிநொச்சி உருத்திரபுர வாசிகசாலையில் நான் வரைந்தபடம் மாட்டப்பட்டிருந்தது ... பின்னர் இந்தியன் ஆமியிடம் சித்திரவதையும் ...அடியோடையும் இந்தியா வெறுப்பு....இந்திய கிரிகட் வீரர்களின் தனி விருப்பாலும் ....இலங்கை அணி மீதான வெறுப்பாலும் இப்ப இந்திய அணி ஆதரவாளன்
2 weeks 3 days ago
கல்லுண்டாய் வெளியில் புலிகளின் விமானம் நேற்று மீண்டும் பரீட்சிக்கப்பட்டது உதயன்: 20/1/1987 யாழ்ப்பாணம், ஜன. 30 விடுதலைப் புலிகளின் விமானம் மீண்டும் நேற்று பரீட்சார்த்தமாக பறக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. நேற்றிரவு எட்டு மணி அளவில் கல்லுண்டாய் வெளியில் இப்பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான மக்கள் விமானம் பறக்கும் முயற்சியை பார்வையிட காத்து நின்றனர். அதிகளவு பிரகாசம் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அதன் வெளிச்சத்திலேயே விமானம் ஓடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தரையில் சிறிது தூரம் ஓடவிடப்பட்ட பின்பு விமானம் மீண்டும் புலி களினால் எடுத்துச் செல்லப்பட்டது. வாகனப் போக்குவரத்துகளும் இதனால் சில மணி நேரம் ஸ்தம்பித நிலையில் இருந்தன.
2 weeks 3 days ago
அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் இந்திரா அம்மையாரின் படம் இருந்தது. அதெல்லாம் ஒரு காலம்.
2 weeks 3 days ago
87இல் புலிகளின் விமானம் வாரமலர் தினமுரசு, நவம்பர் 26-திசம்பர் 2, 1995 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பாகம் 54 | அற்புதன் யாழ்-குடாநாட்டில் நீர்வேலியில் புலிகளது விமானத் தளம் ஒன்று பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1987 இல் புலிகளது விமானம் பற்றி அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை படத்தோடு வெளியிட்ட செய்தி ஒன்று: “அரச இலக்குகளை தாக்குவதற்காக புலிகள் ஒரு சிறிய ரக விமானத்தைத் தயாரித்துப் பார்த்திருக்கிறார்கள். இரண்டு ஆசனங்களைக் கொண்ட அந்த மென்ரக விமானம் உலோகக் குழாய்களாலும், அலுமினியத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டது. ஜனவரி 1987 இல் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. பத்தடி உயரம் வரை எழுந்து விட்டுத் தரையில் விழுந்து மோதியது. அதனால் இறக்கைகளும், சக்கரங்களும் சேதமாகின. பின்னர் அவற்றை திருத்தி மீண்டும் பறக்கவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது இயங்க மறுத்துவிட்டது. எனினும் புலிகளால் விமான தயாரிப்பில் வெற்றி காணக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை.” தொகுப்பாளர் குறிப்பு: மேலுள்ளதின் முதல் பறப்பு பற்றித்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னரும் (1984) புலிகள் ஓர் விமானத்தை உருவாக்கி (அது ஒரு இருக்கை கொண்டது. இதில் கூறப்பட்டுள்ளது இரு இருக்கைகள் கொண்டது) சோதித்துள்ளதை சாத்திரியாரின் கட்டுரை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே ஒரு இருக்கை கொண்டது ஒன்றும் இரு இருக்கைகள் கொண்டது ஒன்றும் ஆக இரு விமானங்களை அவர்கள் சோதனை முயற்சியாக தயாரித்திருக்கிறார்கள்.
2 weeks 3 days ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
2 weeks 3 days ago
இந்த லீவு விட்ட சம்பவம் இரண்டு நடந்ததா....உலக சம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் பினர் நடந்த போட்டியில் இலங்கை வென்றது என்பதும் இதுதானோ ..அப்ப விளப்பம் குறைந்த பருவம்....
2 weeks 3 days ago
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற தமிழக வீரர்கள் இந்தியா அணியில் இடம் பிடித்தார்கள். இலங்கை வென்றதும் ஜெ ஆர் ஜெயவர்த்தன மறுநாள் அரச விடுமுறையாக அறிவித்தார். இலங்கை நடுவர்கள் அப்பட்டமாக இலங்கை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியா அணித்தலைவர் கபில்தேவ், இலங்கை அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் வெல்லமாட்டார்கள் என்று போட்டி முடிவில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும்போது காலநிலை சரியில்லை என்று சொல்லி போட்டியினை இலங்கை நடுவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.
2 weeks 3 days ago
இம்முறை நான் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யவில்லை. விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து இருந்தால் இந்தியா வெல்லும் என்று விடை எழுதியிருக்க மாட்டேன்.
2 weeks 3 days ago
திறமையின் அடிப்படையில்தான் விருப்பு வரும் ...வெறுப்பின் அடிப்படைலும் விருப்பு வரும் ...உதாரணம்....இந்தியா ...இலங்கைமீதான வெறுப்பிலும் இந்தியா தெரிவாகியது ...முடிவு வெற்றியோ தோல்வியோ தெரியாது..
2 weeks 3 days ago
வீரப்பனுக்கு வாழ்த்துக்கள், பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த தடவை சிறியர், குமாரசாமியரை போட்டியில் காணவில்லை. பழைய போட்டிகளில் நொந்து போனார்களோ. எனது தெரிவுகள் எல்லாம் தர நிலைகளை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் விரும்புவது எல்லாம் ஒவ்வொரு தடவையும் தர நிலையில் குறைவான அணி தர நிலையில் உயர்வான அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். விளையாட்டை பார்ப்பது எல்லாம் இல்லை. அவ்வப்போது ஓட்டவிபரத்தை பார்ப்பது மட்டும்தான். விளையாடும் பெரும்பாலான வீரர்களின் முகமே எப்படி என தெரியாது.
2 weeks 3 days ago
நீங்க எங்கையோ போய்ட்டீங்க...உங்க ஏரியாவில எனக்கு சீற் பிடிச்சு வைச்சிருக்கிறீங்களா...
2 weeks 3 days ago
சிங்கன் குதிரைஓடிப் பரீட்சை பாசாகினாலும் அடுக்குமொழி வசனத்தில் அவிட்டு விடுகிறதில் மன்னன்..
2 weeks 3 days ago
அப்பசரி ...விரைவில் பதவி இறக்கப்படுவீர்கள்.... 🙃 வீரப்பையனாரே..உங்கள் முதல்வர் பதவிக்கு எனது வாழ்த்துக்கள்
2 weeks 3 days ago
எனக்கு மட்டும் ஏன் இந்த அனுபவம் வரவில்லை? குருட்டாம் போக்கில் தெரிவு செய்வதோடு சரி. அடுத்த முறை எனது அட்மினை தெரிவு செய்ய சொல்லவேண்டியதுதான்.🤣
2 weeks 3 days ago
நான் இதே கருத்தை உக்ரேன்,ரஷ்யா சம்பந்தப்பட்ட திரிகளில் உறுதிபட எழுதியுள்ளேன்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி கிட்டங்கி.அதை வெறுத்து ஒதுக்கினால் மல்லாந்து படுத்து காறிதுப்புவதற்கு சமன். ஐரோப்பிய ஒன்றியம் என்பதை அமெரிக்கா எதிரியாகவே என்றும் பார்க்கும். இதை இன்று கண்கூடாகவே பார்க்கின்றோம். இந்த மனப்பான்மைக்காகவே நான் பிரான்ஸ் நாட்டை அன்று தொடக்கம் அதிகம் நேசிக்கின்றவன். அழிவுகள் இல்லாத நேரடி பேச்சுவார்த்தைகள். நல்லது கெட்டது எவர் பக்கம் இருந்தாலும் போர் தேவையற்றது. இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.
2 weeks 3 days ago
வாழ்த்துகள் வீரப்பையன்
2 weeks 3 days ago
தன் மதக்கொள்கை என்னவென்று தெரியாதவர் எப்படி அதை கடைப்பிடிக்கவோ பாதுகாக்கவோ முடியும்? தன் மதத்தை மதிக்கிறவன் அதைப்போலவே மற்றைய மதங்களையும் மதிப்பான். தன் மதத்தை இழிவு படுத்தி கொள்ளை அடிப்பவன் மற்றைய மதங்களையும் கொள்கைகளையும் அவமதிப்பான். புத்த மத மக்கள் இல்லாத இடத்தில அடுத்த மத வழிபாட்டு தலங்களை இடித்து, அவர்களது வழிபாட்டு உரிமையை பறித்து ஆயுத முனையில் விகாரை கட்டவேண்டும் என நினைக்கிறவன் எப்படி மற்ற மதங்களை மதிக்கிறேன் என்று கூற முடியும்? சட்டவிரோத விகாரைக்காக இத்தனை பிரச்சனைகளும் நாடக்கும் போது ஏன் மௌனமாக இருந்தார்?அடாவடி பிக்குகள் தாங்கள் மஹிந்தவின் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும்போது ஏன் மௌனம் காத்தார் இவர்? அப்படியாயின் அவர்களின் பின்னால் இவர்களே இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனையின்படியே எல்லாம் நடந்தேறுகிறது. இப்போ எல்லாவிதத்திலும் அனுராவை குற்றம் சாட்டி தாம் ஊழலில் இருந்து தப்பவும் அரசை கைப்பற்றவும் முயற்சிக்கிறார். பௌத்த அடாவடிகளை எதிர்த்தாலோ இல்லை பாதுகாத்தாலோ எதுவாக இருந்தாலும் அதை வைத்தே அனுராவை அடிக்க முயற்சிக்கிறார். இந்த பௌத்த ஆதிக்கம் விகாரை எல்லாம் இவர்கள் காலத்திலேயே உருவானது, அதற்கு இவர்களையே காரணம் காட்டுகிறார்கள் அதை எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும். நாட்டில் என்னென்ன பிரச்சனை இருக்கிறதோ அதையெல்லாம் அனுரமேல் சாட்டி அவரை எழ விடாது அடிக்கிறார்கள் இந்த நாட்டில் நீதி சமத்துவம் நிலைப்பதை விரும்பாதவர்கள்.
Checked
Sun, 03/01/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed