புதிய பதிவுகள்2

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

2 weeks 2 days ago
வணிகக் கப்பல் பாதுகாப்பு சேவைகள் மூலம் 4 மாதங்களில் 598,250 அமெரிக்க டாலர் ஈட்டிய இலங்கை கடற்படை Published By: Vishnu 12 Feb, 2026 | 04:06 AM மேலும், இலங்கை கடற்படை ஏற்கனவே கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால், கடற்படையால் குறைந்தபட்ச கூடுதல் செலவில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை சேவைகளை வழங்குவதை விரிவுபடுத்த முடிந்தது. தனியார் நிறுவனங்கள் தொடர்பான முந்தைய இயக்க முறைமையின் கீழ், தேசிய நலனுக்காக மிகக் குறைந்த வருவாய் மட்டுமே ஈட்டப்பட்டது, மேலும் புதிய செயல்படுத்தலுடன், முழு வருவாயும் அந்நியச் செலாவணியாக ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படுகிறது. 2009 செப்டம்பர் 10, அன்று, வணிகக் கப்பல்களுக்கு (கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்) பாதுகாப்பு வழங்கும் ஆயுதமேந்திய காவலர்களுக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை சேமிக்கும் பணியை கடற்படை தொடங்கியது, மேலும் சரியான நேரத்தில் அறிவுறுத்தல்களின் பேரில், இந்த நடவடிக்கைகள் தனியார் பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. சேவைகளை வழங்குவதற்காக உள்ளூர் நாணயத்தில் கடற்படைக்கு மிகச் சிறிய தொகை செலுத்தப்பட்டது, மேலும் அந்த பங்குதாரர்கள் மொத்த வருவாயில் மிகக் குறைந்த தொகையை உள்ளூர் நாணயத்தில் அரசாங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடற்படை 2025 அக்டோபர் 03 முதல் 2026 பிப்ரவரி 08 வரை 323 கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் கடற்படை நேரடியாக ஈட்டிய 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி வருவாயை தேசிய நலன் மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளால் வழங்கப்படும் வாகனங்கள் அல்லது கப்பல்களைப் பயன்படுத்தி, இலங்கை கடற்படையின் ஆயுதக் கிடங்குகளில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்கும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அத்தகைய துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் வசதியாக, இலங்கை கடற்படையுடன் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. https://www.virakesari.lk/article/238432

டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன?

2 weeks 2 days ago
டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் கட்டுரை தகவல் டேனியல் புஷ் பிபிசி நியூஸ் 12 பிப்ரவரி 2026, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது, இரான் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகக் கூறினார். இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரான் மீது தான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையிலும் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மட்டுமின்றி, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான அதன் ஆதரவைத் துண்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்குமாறு நெதன்யாகு டிரம்ப்பை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்குப் பதில் நடவடிக்கையாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக இரான் பரிந்துரைத்துள்ளது, ஆனால் பிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. வெள்ளை மாளிகை சந்திப்பிற்கு முன்னதாக, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நாடு 'அவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்குப் பணியாது' என்று எச்சரித்தார். நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் - இது மற்ற உலகத் தலைவர்களை விட அதிகமாகும். இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இரு தலைவர்களும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சந்திப்பில் பேசினர். இதில் நெதன்யாகு கேமராக்களின் பார்வையில் படாமல் ஒரு பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அழைத்து வரப்பட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் அவருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. இது தொடர்பாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு "மிகவும் நன்றாக" இருந்தது என்று கூறினார். "இரானுடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தவிர, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டார். ஓர் ஒப்பந்தமே தனது "விருப்பம்" என்றும், ஆனால் அப்படி ஒன்றை எட்ட முடியாவிட்டால் "அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் கூறியது என்ன? பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும், அவர்களது "நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உறவை" தொடர ஒப்புக்கொண்டதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்பிற்கு நெருக்கமானவராக இருக்கும் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு இரான் ஒரு இருப்பு ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார், பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறார். செவ்வாயன்று வாஷிங்டன் வந்தடைந்த பிறகு, நெதன்யாகு டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரைச் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அவர்கள் இரானுடன் நடத்திய "முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த சமீபத்திய தகவல்களை" இருவரும் வழங்கியதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் நெதன்யாகுவின் பயணம் அமைந்துள்ளது. அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் மற்றும் போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்தத் தவறினால் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். செவ்வாயன்று, மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அனுப்புவது குறித்து தான் "யோசித்து" வருவதாக டிரம்ப் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வெகுஜனப் போராட்டங்களுக்கு எதிரான இரான் அரசாங்கத்தின் அடக்குமுறையை நிறுத்துவதற்காக, இரான் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தியதையடுத்து, கடந்த மாதம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழு அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டது. "எங்களிடம் அங்கு சென்று கொண்டிருக்கும் ஒரு கடற்படை உள்ளது, மற்றொன்றும் செல்லக்கூடும்," என்று டிரம்ப் ஆக்ஸியோஸுக்கு (Axios) அளித்த பேட்டியில் கூறினார். "இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு விரும்புகிறது. ஒரு இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியமே" என்றும் அவர் கூறினார். அதேபோல, ஒரு நல்ல ஒப்பந்தம் என்றால் "அணு ஆயுதங்கள் இல்லை, ஏவுகணைகள் இல்லை" என்று பொருள் என டிரம்ப் 'ஃபாக்ஸ் பிசினஸ்' நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம்,Iranian Presidency/WANA/Handout via REUTERS படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அதிகப்படியான கோரிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்று எச்சரித்தார். இரானின் நிலைப்பாடு புதனன்று தெஹ்ரானில் இரானின் இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் பேரணியில் பெசெஷ்கியன் ஆற்றிய உரையில், "எங்கள் இரான் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பணியாது, ஆனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்ட அண்டை நாடுகளுடன் முழு பலத்துடன் உரையாடலைத் தொடர்கிறோம்" எனக் கூறினார். தனது நாடு "அணு ஆயுதங்களைப் பெற முயலவில்லை" என்பதையும் இரான் அதிபர் மீண்டும் வலியுறுத்தினார். "இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் மற்றும் எந்தவொரு சரிபார்ப்புக்கும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமையை தங்கள் நாடு கொண்டுள்ளது என்று இஸ்ரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். டிரம்புடனான உறவை பயன்படுத்துவாரா நெதன்யாகு? இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்புக் கவலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு பரந்த அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு, டிரம்புடனான தனது உறவைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் அழுத்தத்தில் நெதன்யாகு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "இரான் உடனான ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அவசரத்தில், இரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது சில குழுக்களுக்கான அதன் ஆதரவு அல்லது அதன் அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்வார் என்று இஸ்ரேல் கவலைப்படுகிறது," என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு சேவைப் பள்ளியின் பேராசிரியர் டேனியல் பைமன் கூறினார். "டிரம்பின் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட முடிவை விட ஒரு ஒப்பந்தத்தையே அதிகம் விரும்புகிறது என்பது இஸ்ரேலின் கவலையாக உள்ளது" என பைமன் கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, இரான் தலைவர்கள் இப்போது பலவீனமான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போது இரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன. "இரான் ஆட்சி இன்று உண்மையிலேயே பலவீனமாக உள்ளது," என்று கடற்படை முதுகலை பள்ளியின் பேராசிரியரும் மத்திய கிழக்கு அரசியல் நிபுணருமான முகமது ஹபீஸ் கூறுகிறார். "அமெரிக்காவும் இஸ்ரேலும் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்கிறார்கள். இரான் பின்தங்கிய நிலையில் உள்ளது, அவர்களால் இந்த அதிகபட்ச கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்." என்று ஹபீஸ் கூறுகிறார். பெரிய மோதலை டிரம்ப் விரும்புவாரா? டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இரான் உடனான ஒபாமா காலத்து அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் மற்றும் இரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போருக்கு முன்னதாக ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கடந்த ஆண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது. சமீபத்திய வாரங்களில் கடுமையான உரையாடல்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளால் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்ட முடியாவிட்டால் கூட, இரானுடன் ஒரு நேரடி ராணுவ மோதலைத் தவிர்க்க டிரம்ப் விரும்பலாம் என்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "தேர்தல் ஆண்டிற்குள் நுழையும் போது இரானுடன் ஒரு பெரிய ராணுவ மோதலை டிரம்ப் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இரான் மக்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்" என்று இராக் மற்றும் துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஜெஃப்ரி கூறினார். அடுத்த கட்டத்தில் காஸா ஒப்பந்தம் காஸாவில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை அமல்படுத்துமாறு டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த பயணமும் அமைந்துள்ளது. புதனன்று, டிரம்பின் 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) உறுப்பினராக கையெழுத்திடுவதற்காக நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "வரலாற்றில் அதிபர் டிரம்ப்பை விடச் சிறந்த நண்பர் இஸ்ரேலுக்கு இருந்ததில்லை" என்றார். "அதிபர் டிரம்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஸா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், மத்திய கிழக்கில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் எங்களது கூட்டாளியான இஸ்ரேலுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறினார். இஸ்ரேலுக்குள் 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தொடங்கிய இரண்டு ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த அக்டோபரில் இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 71,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரையொருவர் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் செய்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றன. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸாவிலிருந்து இஸ்ரேலிய ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல் மற்றும் கடலோரப் பகுதியின் புனரமைப்பு ஆகியவற்றைக் கோரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதில் இரு தரப்பினரும் அதிக முன்னேற்றம் அடையவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn87gvm42eyo

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

2 weeks 2 days ago
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்! Feb 12, 2026 - 01:04 PM கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlj576880005356nzo74yx4g

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு

2 weeks 2 days ago
மெட்டா வோ அல்லது வேறு எந்த நிறுவனமோ இப்படி சொல்வதத்திற்கு அருகதையற்றவர்கள். ஏனெனில் , சீன பீறுவனமான ஹுவாவேயை அமெரிக்கா அரசு கான் அசுரர் வளர்ச்சி காரணாமாக, அமெரிக்க நிறுவணங்களுக்கு போட்டியை அகற்றுவதத்திற்கு அழிக்க , முடக்க முனைந்தபோது எதிர்ப்பு காட்டாமல், ஆமோதித்த அமெரிக்கா நிருணங்கள்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
வாகனம் ஒழுங்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்தப்பட்டபின் துப்பாக்கிச்சூடு நடந்ததா என்கிற சந்தேகமும் எழுகிறது. வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்தால் வாகனத்தின் சில்லுகளுக்கு சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சாரதியை இலக்கு வைத்து வேண்டுமென்றே சூடு நடத்தியிருக்கிறார்கள். துருப்பிடித்த வாள், மற்றொன்று பிடியற்ற கத்திபோல் தெரிகிறது, அதுவும் கதவுக்கருகில் சாதாரணமாக கிடக்கிறது. மரணத்தை ஏற்படுத்தி அதன்பின் சான்றுகளை சோடித்துள்ளனர். குறிப்பிட்ட பொலிஸாருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், உடன் சென்ற மற்றுமொருவர் போதைப்பொருள் பரிசோதனையில் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் வெளிவந்ததாகவும், குறிப்பிட்டளவு போதைப்பொருளை வாகனத்திலிருந்து கைப்பற்றியதாகவும் போலீசார் முதலில் அறிவித்திருந்தனர், பின்னர் வேறு விதமாக சோடித்துள்ளனர். எதற்காக இத்தனை குழப்பமான வெளிப்படுத்தல்கள்? தங்களுக்கு வேண்டுமென்றால் போலீசார் மாத்தையா சலாம் போடுவார்கள், எது வேண்டுமானாலும் செய்யலாம் போலீசார் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எப்போ வரவு குறைகிறதோ அப்போ இல்லாத குற்றத்தை சுமத்தி சுடுவார்கள். போலீஸ், இராணுவம் பாம்பு போன்றவர்கள் பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் ஒருநாள் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராக உயர்த்துவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

2 weeks 2 days ago
இவரும் ஒரு தோற்றுப்போன ஜனாதிபதியே. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எல்லோரும் அனுராவுக்கு பாடம் எடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் யாரும் அரசியலில் சித்தியடைந்தவர்களல்லர். அப்படியாயின் அனுராவின் கையில் ஜானாதிபதி பதவி சென்றிருக்க வாய்ப்பேயில்லை.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 2 days ago
தாங்களே கும்பலாக செய்தி என்ற பெயரில் உருட்டுகளும் செய்தி திரிப்புகளையும் தங்களுக்கு விருப்பமான் தலைப்புகளை இட்டு யுரூப், ரிக்ரொக், ஃபேஸ் புக் என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது. பின்னர் அதையே கொண்டுவந்து ஆதாரம் என்பது. இப்பவ்வும் அந்தப் பழைய நினைப்பில். 😂

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

2 weeks 2 days ago
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது February 12, 2026 11:53 am பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

2 weeks 2 days ago
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம் வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம்.ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது.ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை. வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம். வாகனம், பாதுகாப்பு என்பதை எடுப்பதில்லை எனத் தீர்மானித்தோம். இங்கு எமக்கு போக்குவரத்து பொலிஸார் மட்டும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாஸவுக்கு இதை விட பாதுகாப்பு வழங்கப்படும். சுமந்திரனுக்கும் பாதுகாப்பு உள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது தேவையானளவு மக்களை சந்தித்தார். அரசாங்கத்தினால் அளிக்கப்படும் வரப்பிரசாதத்தை முடிந்தவரை எடுப்பதில்லை. முப்பது வருட யுத்தம் மாத்திரம் பிரச்சினை இல்லை நூறு வருட வீதியும் பிரச்சினை தான். பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடத்தை கையளிக்க தயார் என்றாலும் வேலி அடைக்க பணம் இல்லை என்கிறார்கள். பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். நல்ல விடயம் மக்களை சென்றடையாத விதத்தில் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் கல்வி மறுசீரமைப்பு திருத்தம். தேசிய மக்கள் சக்தி அனைவரும் படித்தவர்கள். ஆனால் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்ட சிறு பிழையை காரணம் காட்டி பெரிய போராட்டத்திற்கு தயாரானார். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மறுசீரமைப்பு கோஷங்களுடன் இணைந்து கொண்டனர் – என்றார். https://akkinikkunchu.com/359632/

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு

2 weeks 2 days ago
இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு 12 Feb, 2026 | 01:55 PM கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார். இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற்றில் 6 போர்களை வரி விதித்தே தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். “நீங்கள் இந்த போரை நிறுத்தவில்லை என்றால், நான் உங்களுக்கு அதிகளவு வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு உடன்பட்டு போரை நிறுத்தியுள்ளனர். ‘ட்ரம்ப் எங்களது போரை நிறுத்தி, குறைந்தது 10 மில்லியன் மக்களின் உயிர்களை காப்பாற்றிவிட்டார்’ என பாகிஸ்தான் பிரதமரே என்னிடம் கூறியிருக்கிறார்” என ட்ரம்ப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியமைக்கு தானே காரணம் என ட்ரம்ப் பல முறை தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு மே 10ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், தற்போது அதையே 80வது முறையாக பெருமைபடக் கூறுவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை விரும்பாத இந்தியா ட்ரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. https://www.virakesari.lk/article/238479

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
வ‌ண்டு ஹச‌ர‌ங்காவுக்கு ப‌தில் விளையாட‌ வ‌ந்த‌ இன்னொரு வீர‌ர் ர‌ன்ஸ்ச‌ ந‌ல்லா விட்டு கொடுக்கிறார் சின்ன‌ அணியே இவ‌ரின் ப‌ந்துக்கு இந்த‌ அடி என்றால் பெரிய‌ அணிக‌ள் எப்ப‌டி அடிப்பின‌ம் என‌ க‌ற்ப‌மை ப‌ண்ணி பார்த்தேன் லொள்.........................

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

2 weeks 3 days ago
ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது! போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1464464
Checked
Sun, 03/01/2026 - 08:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed