புதிய பதிவுகள்2

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2 weeks 2 days ago
சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 12:50 PM சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி வைரலாகி சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முன்பே அதை முடக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய கட்டுப்பாடுகளை செயல்படுவது மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/238465

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
சமூக வலைத்தளங்கள், வட்ஸப் எல்லாம் பிழையான தகவல்கள் வருகின்றன. நம்பகத்தன்மையானவர்களே பிழையான தகவல்களை பரப்புகின்றனர். பையனுக்கு 17 வயதுதான்.. அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்! அவதூறு பரப்பப்படுவதாக கவலை! adminFebruary 11, 2026 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. காவற்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவற்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். அது தொடர்பில் 10ஆம் திகதி காவற்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள். அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன. அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ? அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவற்தறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம். இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார் கவலை! எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார். காவற்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான். அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவற்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன என வீட்டார் தெரிவித்துள்ளனர் https://globaltamilnews.net/2026/228929/ சவப்பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம் Janu / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:18 அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பு.கஜிந்தன் https://www.tamilmirror.lk/செய்திகள்/சவப்-பெட்டியுடன்-வீதியில்-ஆர்ப்பாட்டம்/175-372375

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு

2 weeks 2 days ago
ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 09:37 AM பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றான வட்ஸ்அப் செயலியை ரஷ்யாவில் முற்றிலும் முடக்க அந்நாட்டு அராசாங்கம் முயற்சித்து வருவதாக மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான 'ரோஸ்கோம்னாட்ஸோர்' வட்ஸ்அப் செயலியை அதன் உத்தியோகபூர்வ இணையக் கையேட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள பயனர்கள் வட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலியின் 'மெட்டா' (Meta) நிறுவனம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "ரஷ்ய அரசாங்கம் மக்களை 'MAX' என்ற செயலியை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக வட்ஸ்அப்பை முடக்கியுள்ளது. இந்த 'மேக்ஸ்' செயலி என்பது பயனர்களைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் உருவாக்கப்பட்ட அரசாங்க உளவு செயலி (State-owned surveillance app) ஆகும்." என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ரஷ்ய சட்டதிட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் கட்டுப்பட்டால் மட்டுமே, வட்ஸ்அப்பை மீண்டும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். பயங்கரவாதம் மற்றும் மோசடி தொடர்பான தகவல்களைப் பகிர மெட்டா மறுப்பதால், பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். உக்ரேன் மீதான போர் ஆரம்பித்த 2022-ஆம் ஆண்டு முதல், ரஷ்யாவில் பல மேற்கத்திய செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (Twitter) ஆகிய சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் (FaceTime) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் முடக்கப்பட்டன. ரஷ்யாவில் மிகவும் பிரபலமான டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்த அதன் நிறுவனர் பாவெல் துரோவ், "இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை" எனக் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய அரசாங்கம் ஊக்குவிக்கும் 'MAX' செயலி, சீனாவிலுள்ள 'வீசாட்' (WeChat) போன்ற ஒரு செயலி ஆகும். இது பயனர்களின் இருப்பிடம், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை அரசாங்கம் எளிதாகக் கண்காணிக்க வழிவகுக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய சூழலில், ரஷ்யாவில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான வட்ஸ்அப் பயனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238445

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்! Feb 12, 2026 - 08:17 AM அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. மேலும், உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmliuv1140004356n4urg9d74

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
ஓ அப்பிடியா. ஆப்கானிஸ்தான் கதவைத் தட்டிக் கொண்டு இருக்கினம். தென்னாபிரிக்காவின் துரதிஷ்டம் அவர்களைப் பீடித்துக் கொண்டதோ என்னமோ. கிட்ட வந்து வந்து போகினம்.

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

2 weeks 2 days ago
திடீர் சந்திப்பு! Feb 11, 2026 - 11:47 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். -மலையக நிருபர் சதீஸ்குமார்- https://adaderanatamil.lk/top-picture/cmlhn0ioo0007356n34ryw0vp

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 weeks 2 days ago
முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 12 Feb, 2026 | 03:27 AM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண வராற்றில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டு அணிகளுக்கு இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்தை 30 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது. ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் குவித்த அபார அரைச் சதம், குடாகேஷ் மோட்டி, ரொஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகள் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை சுலபமாக்கின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (1), அணித் தலைவர் ஷாய் ஹோப் (0) ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் மோசமான நிலையில் இருந்தது. (8 - 2 விக்.) இந் நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர் (23), ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரொஸ்டன் சேஸ் 34 ஓட்டங்களைப் பெற்று நான்காவதாக ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபர்ட், 5ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் 51 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜேசன் ஹோல்டருடன் 61 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர். ரோவ்மன் பவல் 14 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 42 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஆதில் ராஷித் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தனது இன்னிங்ஸை வேகமாக ஆரம்பித்தபோதிலும் சிரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் சற்று தடுமாற்றம் அடைந்தது. பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 20 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் பில் சோல்ட் 30 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜொஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர 7ஆவது ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜொஸ் பட்லர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துடன் மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. டோம் பென்டன் (2), ஜேக்கப் பெத்தேல் (33) ஆகிய இருவரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் (17), சாம் கரன் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால், இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. மத்திய வரிசை வீரர் சாம் கரன் தனித்து போராடியபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. அவர் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரொஸ்டன் சேஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் https://www.virakesari.lk/article/238431

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

2 weeks 2 days ago
வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்! Feb 12, 2026 - 07:48 AM வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmlitscqb0003356nw9h8gvla

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

2 weeks 2 days ago
கனடா துப்பாக்கிச் சூடு ; 18 வயதுடைய நபர் சந்தேகநபராக அடையாளம் Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 12:25 PM கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் தனது வீட்டில் தாய் மற்றும் தம்பி ஆகியோரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர், பின்னர் அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சந்தேக நபர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில், 39 வயதுடைய பெண் கல்வியாளர் ஒருவரும், 12 வயதுடைய பெண் மாணவர்கள் மூவரும், 12 மற்றும் 13 வயதுடைய ஆண் மாணவர்கள் இருவரும் அடங்குவர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருப்பதாக நம்பவில்லை என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் பிரதி ஆணையாளர் டுவைன் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்புகளுக்காகப் பலமுறை பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர்களது வீட்டிற்குப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். இதில் சில அழைப்புகள் மனநலம் சார்ந்தவையாகவும், ஆயுதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும் இருந்துள்ளன. சந்தேகநபருக்கு துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அது காலாவதியானது எனவும் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் தாக்குதல் நடத்திய பாடசாலையை விட்டு 04 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விலகியவர் என்பதும் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/238461

புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்

2 weeks 2 days ago
இந்த விமானப்பறப்பு முயற்சியை நான் காணவில்லை. ஆனால் போய் பார்த்து வந்தவர்களின் நேரடி விபரிப்பை கேட்டுள்ளேன். VW வான்/பஸ் ஒன்றின் இயந்திரமே பயன்பட்டது என சொன்னார்கள். மீனவரின் வலையில் அகப்பட்ட ஹெலியை புலிகள் பார்வைக்கு வைத்த போது பள்ளிக்கூடத்தால் நேரே போய் பார்த்தேன். அப்போதே இயந்திர பகுதி அகற்றபட்டிருந்தது. பாசிபடிந்து ஒரு வித கடல் மணம் வீசியது. புலிகள் இதை திருத்தியதும் முதலாவது அடி கோட்டைக்குத்தான் என நாம் நண்பர்கள் (பிரைமறி பெடியள்) எமக்குள் பேசி கொண்டோம்😂. டெலோ இப்படி எதுவும் செய்யதாக ஒரு நியாபகமும் இல்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
முதலாவது டெஸ்ட் வெற்றிக்கு பின் (இந்தியாவை வென்றது) - ஜேஆர் லீவு விட்டார். மெண்டில் கேப்டன். 1985. அப்போ இந்தியா ஒருநாள் உலக கோப்பை சாம்பியன். டெஸ்டிற்க்கென அப்போ உலக போட்டி (WTC) இருக்கவில்லை. ஆகவே ODI உலக சாம்பியனை Test போட்டியில் இலங்கை வென்றாலும் கூட, உலக சாம்பியன் அணியை வீழ்தியதாக மார்தட்டி கொண்டது. இதேபோல் ஒரு விடுமுறை 1996 இல், லாகூரில் றணதுங்க தலைமையிலான அணி அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பையை வென்ற போது சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டது.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 3 days ago
யாழ்க்கள உறவுகளே, திரியோடு தொடர்புடைய சம்பந்தரையாவின் உரையாதலால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
83 இல் உலக ஒருநாள் சாம்பியன் இந்தியா . அணித்தலைவர்- கபில் தேவ் 84/85 இல் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்போட்டி விளையாடியது. இங்கிலாந்து 2 :1 இல் வென்றது. அசாருதீன் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் 100 ஒட்டங்கள் ( இச்சாதனை இன்னும் முறியடியக்கப்படவில்லை) . அணித்தலைவர்- கவாஸ்கர் பிறகு இலங்கைக்கு கபில் தேவ் தலைமையில் இந்தியா சென்றது

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
இலங்கையின் துலீப் மெண்டிஸின் தாயகமாக ஓமன் மாறியது ஏன்? முன்னாள் இலங்கை கேப்டன், ஓமன் ஒரு கிரிக்கெட் நாடாக எழுச்சி பெறுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மதுஷ்கா பாலசூரியா பிப்ரவரி 12, 2026, காலை 6:24 • 8 மணி நேரத்திற்கு முன்பு தலைமை பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பொறுப்பில் உள்ளார் • ஐ.சி.சி/கெட்டி இமேஜஸ் துலீப் மெண்டிஸ் முதன்முதலில் மஸ்கட்டில் வந்தபோது , ஒரு வளர்ந்து வரும் நாடு சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்க உதவினார். அவர் அங்கு தங்கியிருப்பது குறுகிய காலம் மட்டுமே என்று எதிர்பார்த்தார். அது 13 ஆண்டுகளுக்கு முன்பு. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 போட்டிகள் ஓமானின் நான்காவது டி20 உலகக் கோப்பையாகும் , மேலும் மெண்டிஸ் இந்தப் பயணம் முழுவதும் விளையாடியுள்ளார். அசோசியேட் கிரிக்கெட்டில் போட்டி சக்தியாக வளர்ந்துள்ள ஒரு பாலைவன நாட்டில் அவர் தங்கி இரண்டாவது வீட்டைக் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. "ஆரம்பத்தில் நான் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் அங்கு சென்றேன், இப்போது சுமார் 13 [14] வருடங்கள் அங்கேயே இருக்கிறேன்," என்று ஓமான் தலைமை பயிற்சியாளரான மெண்டிஸ், கொழும்பில் உள்ள தனது பழைய ஸ்டாம்பிங் மைதானத்தில் இருக்கும்போது கூறுகிறார், அங்கு அவர்கள் தங்கள் அனைத்து குரூப் பி போட்டிகளுக்கும் தளமாகக் கொண்டுள்ளனர். அவரைச் சுற்றி, டிரஸ்ஸிங் ரூம் பரபரப்பாக இருக்கிறது, வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு வீரர்கள் தயாராகும் போது அவர் வளர்த்த அணி மனப்பான்மையால் நிரம்பியுள்ளது . மேலும் அங்குதான் அவர் ஓமன் கிரிக்கெட்டின் தலைமையுடன் ஒரு உரையாடலை நினைவு கூர்ந்தார், அதுதான் அவர் நிரந்தரமாக நிலைத்திருக்க ஊக்கியாக இருந்தது. "பங்கஜ் [ஓமன் கிரிக்கெட்டின் தலைவர் கிம்ஜி] எவ்வளவு நேரம் நான் தொடர்ந்து விளையாடப் போகிறேன், நான் வந்து செட்டில் ஆக விரும்புகிறேனா என்று கேட்டார்," என்று மெண்டிஸ் கூறுகிறார். "அந்த நேரத்தில், அது சரியான இடம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஓமன் கிரிக்கெட்டை நிர்வகித்து வந்தவர்கள் அற்புதமானவர்கள் என்று நான் சொல்ல வேண்டும்." சர்வதேச விளையாட்டில் மெண்டிஸ் கண்டறிந்தது அரிதானது. பல பயிற்சியாளர்கள் குழு தலையீட்டை எதிர்த்துப் போராடினாலும், அவருக்கு "சுதந்திரமான கையை" வழங்க ஒரு தலைவர்கள் குழு இருந்தது. "அவர்கள் எனக்கு அதிகாரம் கொடுத்ததால், வாரியத்தில் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நாங்கள் பல [முன்மொழிவுகளை] முன்னெடுத்துச் சென்றோம். உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, சில சமயங்களில் நாங்கள் தோல்வியடைந்தோம், ஆனால் நீங்கள் அதை சரிசெய்து முன்னேறுங்கள்." மெண்டிஸின் பதவிக் காலத்தில் ஓமன் கிரிக்கெட்டின் வளர்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்ள, முதலில் ஒரு படி பின்வாங்க வேண்டும். அவர் தொடங்கியபோது, அவர்களின் உள்கட்டமைப்பு மிகக் குறைவாகவே இருந்தது. 1979 ஆம் ஆண்டு மறைந்த கனக்சி ஜி கிம்ஜியால் நிறுவப்பட்ட ஓமன் கிரிக்கெட், 2000 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் இணைப்பு உறுப்பினரானது, 2015 ஆம் ஆண்டு - மெண்டிஸ் இணைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு - டி20 அந்தஸ்தையும், 2019 ஆம் ஆண்டு ஒருநாள் அந்தஸ்தையும் பெற்றது. இன்று, மஸ்கட், பெரும்பாலான டெஸ்ட் நாடுகளுடன் போட்டியிடும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த அகாடமி ஏழு பிட்ச்கள் (வேகமான, மெதுவான மற்றும் சாதாரண) கொண்ட அதிநவீன உட்புற வசதியைக் கொண்டுள்ளது, இது முழுமையாக குளிரூட்டப்பட்ட சூழலில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் தரிசு நிலம் "அழகான பசுமையான" புல்வெளியால் மாற்றப்பட்டுள்ளது, அரசாங்கம் சமீபத்தில் வாரியத்திற்கு மூன்று கூடுதல் மைதானங்களை பரிசாக வழங்கியது. மஸ்கட்டை மையமாகக் கொண்டிருந்தாலும், கிரிக்கெட் ஒரு தலைநகர-நகர விளையாட்டாக மட்டும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சலாலா மற்றும் சோஹர் வரை விளையாட்டை எடுத்துச் செல்ல மெண்டிஸ் முயற்சிக்கிறார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டின் உயர்மட்டப் பிரிவிற்கான பாதை சிக்கல்கள் இல்லாமல் இல்லை. 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, "கௌரவ" வாரியத்திலிருந்து தொழில்முறை நிறுவனமாக மாறுவது, அகிப் இலியாஸ் மற்றும் ஜீஷன் மக்சூத் போன்ற நட்சத்திரங்கள் உட்பட 11 மூத்த வீரர்கள், பரிசுத் தொகை செலுத்தப்படாதது தொடர்பாக வாரியத்துடன் மோதியபோது, திருப்புமுனையை அடைந்தது . இதன் விளைவுகள் கடுமையாக இருந்தன. வாரியம் மத்திய ஒப்பந்தங்களை இடைநிறுத்தியது, மேலும் ஓமானில் வசிப்பது பெரும்பாலும் இந்த விளையாட்டு விசாக்களுடன் தொடர்புடையது என்பதால், பல வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜூலை 2025 க்குள் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்துவதாக வாரியம் இறுதியில் உறுதியளித்த போதிலும் , நடைமுறைத் தடைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, இந்த சம்பவம் வேகமாக வளர்ந்து வரும் அமைப்பில் உராய்வை எடுத்துக்காட்டுகிறது. "நல்லதை மட்டுமே செய்ய விரும்பும் உணர்ச்சிவசப்பட்ட நபர்கள்" என்று வாரிய உறுப்பினர்களைக் கருதும் மெண்டிஸுக்கு, இந்தத் தடைகள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தன. "தடைகள் இருந்தன என்று நான் கூறுவேன், நீங்கள் அதைக் கடக்க வேண்டும்," என்று மெண்டிஸ் தத்துவார்த்தமாக கூறுகிறார். "தடைகள் வரும்போது, நாங்கள் அதை ஒரு குழுவாக விவாதித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம். நாங்கள் ஒரு அசோசியேட் நாடு, அசோசியேட்டிற்கும் டெஸ்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது." மெண்டிஸ் இந்தப் பிராந்தியத்தில் முன்னுரிமைகள் குறித்து யதார்த்தமானவர். ஓமான் ஒரு பகுதியாக இருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில், அவர்களின் வீரர்கள் குழுவின் பணி அட்டவணைக்கு ஏற்றவாறு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறார். "உள்கட்டமைப்பு மற்றும் அனைத்தும் வெள்ளை பந்து விளையாட்டுக்கு ஏற்றதாக உள்ளன," என்று மெண்டிஸ் கூறுகிறார். "அவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக அங்கு வருகிறார்கள், இருப்பினும் இப்போது அது சற்று மாறி வருகிறது. அணி சிறப்பாக செயல்படும்போது, மக்கள் பேசத் தொடங்குகிறார்கள்... 1996 இல் நாங்கள் [இலங்கை] உலகக் கோப்பையை வென்றது போல." 1970கள் மற்றும் 80களில் உலகின் மிகவும் பயங்கரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேனாக, மெண்டிஸ் நவீன விளையாட்டை ஒரு நுணுக்கமான பார்வையுடன் பார்க்கிறார். அவர் விளையாட்டுத் திறனை வியக்கும்போது, தூய்மையான கலைகளில் சரிவைக் காண்கிறார். "நவீன கால கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது... இது கிட்டத்தட்ட விளையாட்டு வீரர்கள் விளையாடுவது போன்றது. ஆனால் பேட்டிங் நுட்பமும் தரமும் கொஞ்சம் குறைந்துவிட்டன என்று நான் கூறுவேன்." ஆனால் அதையும் மீறி, நவீன வீரர் தனது சகாப்தத்துடன் ஒப்பிடும்போது கொண்டிருக்கும் பாதுகாப்பை அவர் பொறாமைப்படுகிறார். "இன்று நீங்கள் கிரிக்கெட்டுக்குள் வந்து அதை ஒரு தொழிலாக மாற்றுவேன் என்று சொல்லலாம். அது ஒரு நன்மை." https://www.espncricinfo.com/story/why-oman-became-home-to-sri-lanka-s-duleep-mendis-1523579
Checked
Sun, 03/01/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed