புதிய பதிவுகள்2

கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]

2 weeks 3 days ago
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 ✈️ பாகம் 10 – வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புதல் துபாயின் கடைசி நாளின் காலையில், ஹோட்டல் திரைகள் வழியாக காலைச் சூரியன் மெதுவாக உள்நுழைந்து, தங்க நிற அழகைப் பரப்பியது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் — மூவருமே உற்சாகத்துடன் இருந்தனர் என்றாலும் ஓரளவு வருத்தத்தோடும் காணப்பட்டனர். இன்று அவர்கள் வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் இதயத்தில் துபாய் பற்றிய நிறைந்த நினைவுகள் இன்னும் ஒரு பொக்கிஷமாக, அவர்களுடன் பயணித்தன. “தாத்தா… எனக்கு துபாயை விட்டுப் போக மனசில்லை!” என்று தனது சிறிய சூட்­கேஸை அணைத்தபடி நிலன் சொன்னான். தாத்தா அன்பாகச் சிரித்தார். "எனக்குத் தெரியும், சின்னப் பயணி. ஆனால் ஒவ்வொரு சாகசத்திற்கும் ஒரு முடிவு உண்டு - வீட்டில் கட்டாயம் ஒரு புதிய கதை காத்திருக்கும்." என்றார் நிலன் தனக்குப் பிடித்த நினைவுப் பொருளான, மர்ஜன் தீவில் [Marjan Island] இருந்து வாங்கப்பட்ட ஒரு சிறிய மணல் கோட்டை [sandcastle] மாதிரியை வைத்திருந்தான், அதே நேரத்தில் திரேன் துபாய் மால் ஒட்டக சவாரியிலிருந்து வாங்கப்பட்ட தனது சிறிய [மினியேச்சர்] டிராகனைக் கையில் பிடித்திருந்தான். மிராக்கிள் கார்டனில் இருந்து வாங்கப்பட்ட மலர் வடிவங்களைக் கொண்ட ஒரு சிறிய, மென்மையான பொம்மை ஒன்றை பேபி ஆரின் கையில் வைத்திருந்தான். மூவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு, விமான நிலையத்துக்கு சென்றனர்.நிலன் கோபுரத்தின் மேலிருந்து “மேகங்களைத் தொட்ட” அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். திரேன் ஒட்டகப் பந்தயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். குட்டி ஆரின் தன் மழலை மொழியில் ஒவ்வொரு சாகசத்திற்கும் தனக்கே உரிய சிறிய பெயரைச் சொல்வது போல், ஏதேதோ சொல்லி சொல்லி, மகிழ்ச்சியாக கூவி விளையாடினான். விமான நிலையத்தில், அவர்கள் பயண ஆயத்தம் [செக்-இன்] மற்றும் பாதுகாப்பு சோதனை — எல்லாவற்றையும் நிதானமாக முடித்தனர். நிலன் தன் கடவுச்சீட்டை [பாஸ்போர்ட்டை] பெரியவரைப் போல கவனமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். திரேன் கன்வேயர் பெல்ட்கள் மற்றும் ஸ்கேனர்களில் தங்கள் சாமான்கள் சீராக நகர்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். குட்டி ஆரின் தாத்தாவின் கையில் பாதுகாப்பாக இருந்தபடி, ஒவ்வொரு ஒளி, ஒலி, அசைவையும் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் புறப்படும் அறையில் காத்திருக்கும் போது, நிலன் ஜன்னலுக்குப் பக்கத்தில் தனது முகத்தை ஒட்டி வைத்துக் கொண்டு, வெளிய புறப்படும் விமானங்களுக்கு கையை அசைத்தான். திரேன், அங்கே எத்தனை விமானங்கள் வெளியே நிற்கின்றன என்று ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தான். அதேபோல, ஒவ்வொரு விமானமும் என்ஜின் சத்தத்துடன் நகரும் போது ஆரின் தனது இரு கைகளையும் தட்டினான். விரைவில், விமானத்தில் ஏற வேண்டிய நேரம் வந்தது. குழந்தைகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர், அவர்களின் உற்சாகம் தூக்க கலக்கத்துடன் கலந்திருந்தது. விமானம் வானத்தில் உயர்ந்ததும், நிலன் கிசுகிசுத்தான், “தாத்தா... நாங்கள் எப்போதாவது திரும்பி வருவோமா?” "நிச்சயமா, சின்ன சாகசக்காரனே," என்று தாத்தா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். பின், "அதுவரை, அந்த மாயாஜாலத்தை எங்கள் இதயங்களில் உயிரோடு வைத்திருப்போம்." என்றார். மேகங்களுக்கு மேலே விமானம் பறந்த போது, குழந்தைகள் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்து, தங்களுக்குக் கீழே நகரம் சுருங்குவதைக் கண்டார்கள். துபாயின் கோபுரங்கள் ரத்தினங்களைப் போல மின்னின, பாலைவனம் தங்க மணலைப் போல பரவியிருந்தது, மிராக்கிள் கார்டன் கீழே ஒரு வண்ணமயமான ஒட்டுவேலை போல் அல்லது ஒரு வண்ண பட்டு விரிப்பு போலத் தெரிந்தது. மேகங்கள் தங்களுக்கு போய் வருகிறோம் என விடைபெற்று செல்வது போல், நிலன் கற்பனை செய்தான், திரேன் மீண்டும் தான் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வதை கற்பனை செய்தான், சிறிய ஆரின் பூக்கள் மற்றும் கோபுரங்களைக் கனவு கண்டு தூங்கச் சென்றான். விமானம் இறுதியாக லண்டனைத் தொட்டு, வெல்வின் கார்டன் நகரத்துக்கு காரில் அவர்கள் சென்றபோது, குடும்பத்தினர் குளிர்ந்த காலைக் காற்றில் காலடி எடுத்து வைத்தனர், அங்கு பழக்கமான தெருக்கள், நட்பு அண்டை வீட்டார் மற்றும் வீட்டின் தாராளமான வசதி அவர்களை வரவேற்றது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் ஆகியோர் தங்கள் நினைவுகளை ஒரு பொக்கிஷம் போல சுமந்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். தாத்தா தனது சிறிய ஆய்வாளர்களைப் பார்த்து சிரித்தார். "இதயம் இருக்கும் இடம் தான் வீடு," என்று அவர் மெதுவாகச் சொன்னார். "இப்போது, நம் இதயங்கள் - சாகசங்கள், சிரிப்பு மற்றும் மந்திரத்தால் நிறைந்துள்ளன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள் ... ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசத்தை, வீட்டில் கூட நடத்த முடியும்." என்றார். அன்று மாலை, குழந்தைகள் நினைவுப் பொருட்களை அவிழ்த்து, துபாயின் படங்களை வரைந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிலன் தனது சிறிய மணல் கோட்டையை அலமாரியில் கவனமாக வைத்தான், திரேன் தனது ஒட்டக உருவங்களை வரிசையாக அடுக்கி வைத்தான், ஆரின் தனது பளபளப்பான மலர் பொம்மையை, முகத்தில் ஒரு திருப்தியான புன்னகையுடன் இறுக்கமாகக் கட்டிப் பிடித்தான். இரவு வந்தபோது, தாத்தா குழந்தைகளைப் படுக்கையில் படுக்க வைத்தார். "இனிய இரவு, என் சிறிய சாகசக்காரர்களே," என்று அவர் கிசுகிசுத்தார். "மேகங்கள், அரண்மனைகள், ஒட்டகங்கள் மற்றும் தோட்டங்களைப் பற்றிய கனவு உலகம் ... எப்போதும் நீங்கள் ஆராய்வதற்காகக் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று அவர்களுக்கு கூறினார். அத்துடன், ஆச்சரியம், சிரிப்பு மற்றும் துபாய்க்கான அவர்களின் மறக்க முடியாத பயணத்தின் மாயாஜாலம் நிறைந்த இதயங்களுடன் குழந்தைகள் அமைதியான தூக்கத்தில் மூழ்கினர்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/33756943097287571/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
மேற்கு இந்திய தீவுகளின் துடுப்பாட்டம் பார்க்கவில்லை, ஆனால் பந்து வீச்சினை பார்த்தேன். பவர் பிளேயில் செப்பர்ட்டின் பந்து வீச்சிற்கு எல்லை கோட்டில் நிற்கும் இரண்டு வீரர்களிற்கு டீப் ஸ்குயார் லெக்கில் ஒரு வீரரும், டீப் மிட் விக்கெட்டிற்கு ஒரு விரரும் நின்றார்கள், மிக தெளிவாக லெக் ஸ்டம்ப் லைன், ஸோர்ட் பைன் லெக்கில் ஒரு வீரரை வைத்தன் மூலம் லெந்தினையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது, ஆக லைனும் லெந்தும் தெளிவாக துடுப்பாட்ட வீரருக்கு தெரியும் நிலை, துடுப்பாட்ட வீரர் விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுத்து ஒப் சைட்டில் அடிக்க தூண்டினார்கள். சாமர் ஜோசப்பிற்கு அந்த இரண்டு எல்லைக்கோட்டு வீரர்களும் டீப் பைன் லெக், டீப் ஸ்குயார் லெக் அத்துடன் ஸோர்ட் தேர்ட் மான். சுழல் பந்து வீச்சிற்கு ஸோர்ட் பைன்லெக் டீப் ஸ்குயார்லெக். முக்கியமாக 7 -14 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளத்தடுப்பு சுழலிற்கு லெக் சைடில் உரிய பாதுகாப்பு மூலம் துடுப்பாட்ட வீரர்களை விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க தூண்டிய்து, வேகப்பந்து வீச்சிற்கு பலமான பாக்வேர்ட் பீல்டிங். மேற்கிந்தியதீவுகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரவி ராம்போல் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் மிக சிறந்த திட்டமிடல்.

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

2 weeks 3 days ago
குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..! 11 Feb, 2026 | 05:18 PM மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் . நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர். குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238418

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
பெரிய‌ப்பு ஜ‌ந்து நாள் ப‌ரிட்சையும் பாஸ் ஆகியாச்சு நாளையான் ப‌ரிட்சையும் பாஸ் ப‌ண்ணுவேன் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு லொள்😁😄................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
மேற்கிந்தியா அமோக வெற்றி. இங்கிலாந்து சுழலில் மாட்டுப் பட்டு சுருண்டது. குடகேஸ் மோத்தி எப்போதும் அவர்களை சுழட்டி அடிப்பார். இன்றும் அதே நடந்தது.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 3 days ago
யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் - பவானந்தராஜா எம்.பி! 11 Feb, 2026 | 04:23 PM யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். புதன்கிழமை (11) வட்டுக்கோட்டை - இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள் கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். பொலிஸாரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், "சங்கானை பிரதேச செயலர் பிரிவில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வலி மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறினீர்கள். அது தொடர்பான முன்னேற்றம் என்ன?" என் கேள்வி எழுப்பினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தெரிவிக்கையில், நாங்கள் இது தொடர்பான சில விபரங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இரவிலோ அல்லது ஒரு கிழமையிலோ நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆறுதலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/238406

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

2 weeks 3 days ago
அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர் Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 05:09 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர். லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது. அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது. வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர். "இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/238415

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

2 weeks 3 days ago
வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு 3 தடவைகளாக 50000 ரூபா வீதம் 150000 ரூபா மொத்தமாக மலசலகூடத்தை பூரணப்படுத்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம். இருப்பு 178,803.62 +50025=128,778.62 தற்போதைய வங்கி மீதி. வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு மூன்றாவது தடவையாக 50000 ரூபா வைப்பிடப்பட்டது. காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.

குட்டிக் கதைகள்.

2 weeks 3 days ago
psoeotrnSd1vlg9 m3ra94fé1meliit2fcmuf:,g9a4r0h96t91fc3hf471 · " பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார். சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா? " = இயக்குனர் ஸ்ரீதரின் , ' திரும்பிப் பார்க்கிறேன் ' நூலிலிருந்து . முகநூல் பதிவு - பிரசாந்த் !

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

2 weeks 3 days ago
"எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்" - பெருந்தோட்ட மக்கள் நெகிழ்ச்சி Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 04:57 PM எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான் என பெருந்தோட்ட மக்கள் தங்களது நெகிழ்ச்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர். நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நுவரெலியா - அட்டன் பிரதான வீதி நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு சென்று அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி குறித்த தோட்டப்பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் அவரை மிகவும் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். தமக்கான சம்பளத்தை அதிகரித்தமைக்காக இதன்போது தொழிலாளர்கள் ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தொழிலாளர்கள், “எங்களது சம்பளத்தை உயர்த்தியது மட்டுமன்றி, எங்களது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்” எனத் தெரிவித்தனர். தங்களைச் சந்திக்க வந்த முதல் ஜனாதிபதி இவரே என அவர்கள் இதன்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/238407
Checked
Sun, 03/01/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed