புதிய பதிவுகள்2

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 3 days ago
இதை சிறிலங்கா பொலிசுக்கு வக்காலத்தாகப் பார்க்காதீர்கள். இரண்டு இடங்களில் பொலிஸ் நிறுத்தும் படி கட்டளை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மிக இலகுவான கேள்விகள்: ஏன் நிறுத்தவில்லை? தப்பி ஓட வேண்டிய தேவை என்ன இருந்தது? மரணம் துயரத்திற்குரியது தான். ஆனால், மரணத்தை விட மோசமா சார் சிங்களப் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவது? இதே போல ஒரு யாழ் பல்கலை மாணவர் சில ஆண்டுகள் முன்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று பொலிஸ் சுட்டதும், மக்கள் கொதித்ததும் நடந்தது. லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 weeks 3 days ago
இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா வெற்றி; ஆப்கானிஸ்தானின் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாட்டம் Published By: Vishnu 11 Feb, 2026 | 06:36 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா இரட்டை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் ஓவரில் முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும். இப் போட்டி முடிவுடன் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதன் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த (187 ஓட்டங்கள்) எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் இரண்டாவது தடவையாக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் பிரகாரம் சம்நிலையில் முடிவடையும் போட்டி, சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணி தீர்மானிக்கப்படும்வரை சுப்பர் ஓவர் தொடரவேண்டும். இதற்கு அமைய அமுல்படுத்தப்பட்ட இரண்டாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்களையும் இழந்து 19 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. சமநிலையில் போட்டி முடிவு தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (5) ஆட்டம் இழந்த பின்னர் குவின்டன் டி கொக், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ரெயான் ரிக்ல்டன் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களை விட டிவோல்ட் ப்ரவிஸ் 23 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது. கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கெகிசோ ரபடாவின் முதலாவது முதலாவது பந்து நோபோலானது. அடுத்த பந்து வைட் ஆக ப்றீ ஹிட் தொடர்ந்து. ஆனால், ப்றீ ஹிட்டை நூர் அஹ்மத் சரியாக பயன்படுத்தாததுடன் அந்தப் பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. அடுத்த பந்தில் நூர் அஹ்மத் பக்கவாட்டில் நகர்ந்து சிக்ஸாக விளாசினார். கடைசி 4 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மூன்றவாது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. ரபடா வீசிய 4ஆவது பந்தும் நோபோலானதுடன் அந்தப் பந்தில் 2 ஓட்டங்களும் பெறப்பட்டது. இப்போது கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தை நூர் அஹ்மத் வைட் லோங் ஓன்னை நோக்கி பந்தை அடித்து 2 ஓட்டங்களைப் பெற முயற்சித்தார். ஆனால், களத்தடுப்பில் வேகமாக செயல்பட்ட மார்க்கோ ஜென்சன் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர் ரபடாவுக்கு எறிந்தார். அதனைப் பிடித்த ரபடா மின்னேல் வேகத்தில் தாவி பந்துடன் இடது கையால் ஸ்டம்ப்களை தட்டி பஸால்ஹக் பாறூக்கியை ரன் அவுட் ஆக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 4 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவரைவிட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (22), அணித் தலைவர் ராஷித் கான் (20) ஆகிய இருவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர். நூர் அஹ்மத் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதன் பின்னர் முதலாவது சுப்பர் சம நிலையில் முடிவடைய இரண்டாவது சுப்பர் ஓவரில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது. https://www.virakesari.lk/article/238426

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
உண்மைதான். அந்தப் பிரபலமான ஓட்டமிழப்பு போல. தென்னாபிரிக்கா அரையிறுதியில் அவுஸ்ரேலியாவிடம் அடைந்த தோல்வி. இப்போ ஆப்கானிஸ்தான்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 3 days ago
வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள், வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என வாகனத்தில் இருந்த சிறிய தந்தை தெரிவித்துள்ளார். பொலீசாரே... துப்பாக்கிச் சூடு நடாத்தி சிறுவனை கொன்று, மற்றையவர்களை கைது பண்ணிய பின்... யாரும் அவ்விடத்தில் இல்லாத நிலையில், அந்த வாகனத்த்துள்... சாணகம், கயிறு , வாள் போன்ற்வற்றை கொண்டு போய் வைத்து.. அவர்களை மாட்டுக் கள்ளர் என நிறுவ பார்க்கிறார்கள். இலங்கை போலீசார்.. வழக்குகலாய் திசை திருப்பி தாம் தப்புவது இது முதல் முறையல்ல.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
துரதிஷ்டமான ஆப்கான். தென்னாபிரிக்காதான் இவ்வாறான துரதிஷ்ட அணி. மழை எல்லாம் வந்து அவர்களை நாசம் செய்யும். இப்ப ஆப்கான் அப்பிடியான ஒரு அணி ஆகிக் கொண்டு இருக்கிறதா.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 3 days ago
பொலிஸார் வாகனத்தை மறித்த போது... நிற்காமல் போயிருந்தால், பின்னுக்கு இருந்துதான் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள். அப்படியிருக்க... சிறுவனின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளையை தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் கொலை செய்து விட்டு இப்போ... தமக்கு சாதகமாக இச் சம்பவத்தை திசை திருப்புகின்றார்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
நான் பார்த்த‌ ம‌ட்டில் இப்போது ஒற்றுமையாக‌ தான் விளையாடுகின‌ம் ப‌ல‌ தீவுக‌ளில் இருந்து வ‌ந்த‌ வீர‌ர்க‌ள் ஒரு அணியாக‌ விளையாடுவ‌து சிர‌ம‌ம் தான்..............ஜ‌பிஎல் வ‌ருகையும் வெஸ்சின்டீஸ் அணிய‌ ரொம்ப‌ பாதிச்சு போட்டுது ஜ‌பிஎல்ல‌ விளையாடுவ‌த‌ற்காக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம்.............................

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 3 days ago
அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை! யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர். வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464397

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு. வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2 weeks 3 days ago
கியூபாவில் எரிசக்தி முடக்கம். கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கியூபாவின் சர்வதேச விமான நிலையங்களில் கடந்த 10 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை விமான எரிபொருள் கிடைக்காது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில், ஏர் கனடா, ஏர் டிரான்சாட் மற்றும் வெஸ்ட்ஜெட் போன்ற முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதன் விளைவாக கியூபாவில் சிக்கியுள்ள சுமார் 3,000 பயணிகளை மீட்பதற்காக ஏர் கனடா நிறுவனம் வெற்று விமானங்களை அனுப்பி வருகின்றது. வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வர்த்தக வரி மிரட்டல்கள் காரணமாக, டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கியுள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க கியூபா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அரசு நிறுவனங்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை, வங்கி வேலை நேரக் குறைப்பு மற்றும் எரிபொருள் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. அடிப்படைச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2026/1464388

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2 weeks 3 days ago
எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்தினார். மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது. அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இதவேளை ஐக்கிய நாடுகள், பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1464329

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!

2 weeks 3 days ago
சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அறிவியல் உலகை ஆள்கிறார் என லூசுதனமாய் பேஸ்புக்கில் எழுதபடும் பிஸ்கோத்து தகவல்களை இப்படித்தான் நாறடிக்க வேண்டும். இல்லை என்றால் நிஜமாக சாதிக்கும் தமிழரின் சாதனைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். கீழே மித்திலாவின் வேலையிட புரோபைலை தந்துள்ளேன். அவர் ஒரு சாதராண முனைவர்தான். அப்படி ஒன்றும் அரிய சாதனை நிகழ்தியதாக அதில் இல்லை. தமிழன் என்பதால் பிஎச்டி எடுப்பது, மருத்தடிக்கும் விமான லைன்சன்ஸ், ரோட்டு கூட்டு இயந்திர லைசன்ஸ் எடுப்பதை எல்லாம் சாதனை என கொண்டாடுவதும், ஏனையோரும் அதை ஏற்க வேண்டும் என நினைப்பதும் மடமை. இவற்றை எல்லாம் ஒரு அமேசன் பழங்குடியில் செய்யதால் அதன் முதன் முயற்சி பாராட்டலாம், ஈழதமிழரில் அல்ல. https://profiles.sydney.edu.au/mehala.balamurali

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 3 days ago
ஓம் போன‌ வ‌ருட‌மே ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் இதுவ‌ரை 17 ஜ‌பிஎல் மைச்சில் விளையாடி இருக்கிறார்................இவ‌ர் ந‌ட‌ந்து முடிந்த‌ விக்வாஸ் தொட‌ரிலும் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌வ‌ர்.........ந‌ல்ல‌ வீர‌ர்.................இவ‌ரின் கைய் அசைவு வித்தியாச‌ம்...........................
Checked
Sun, 03/01/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed