புதிய பதிவுகள்2
Sea Tigers Commanders | Naval Wing of LTTE
This album contains the Maaveerar images of the Sea Tigers commanders.
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மார்ச் மாதம் முதலாம் திகதிக்கும் 12ம் திகதிக்குமிடையில் வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் தரநிலையுடனான பெயர் விரிப்பு: கடற்புலி லெப். கேணல் சலீம் லெப். கேணல் மாறன் லெப். கேணல் அன்பழகன் லெப். கேணல் எழில்செல்வன் (ராதா வான்காப்புப் படையணி) மேஜர் தமிழ்மாறன் மேஜர் மலர்செம்மல் கப்டன் இளவேலன் கப்டன் கலைக்கதிரவன் கப்டன் கதிர்நிலவன் கப்டன் கலையினியன் மார்ச் 30: சாலைக் கடற்பரப்பில் நடந்த சமரில் கடற்புலி லெப். கேணல் மாறன் மற்றும் சில போராளிகள்
ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
விசாரணைகள் மேலும் எனது செய்திகள் கருத்து தொடர்ந்து படிக்க ராய்ட்டர்ஸுக்கு குழுசேரவும். ராய்ட்டர்ஸின் உலகளாவிய நம்பகமான செய்திகளுக்கான வரம்பற்ற அணுகல். இறுதி விலைஒரு டாலர் 1.5/வாரம் ஒவ்வொரு 4 வாரங்களுக்கும் முன்கூட்டியே A$6 வசூலிக்கப்படும்.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். ஏற்கனவே குழுசேர்ந்துள்ளீர்களா? உள்நுழையவும் ரஷ்யாவின் பிரையன்ஸ்கில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய் குழாய் பாதையைத் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் மூலம் செப்டம்பர் 7, 2025 இரவு 10:52 GMT+10 10 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது நிறுவனங்கள் Neftyanaya Kompaniya Rosneft' PAO MOL மக்யார் ஓலாஜ் எஸ் காசிபரி நிர்ட் கெய்வ், செப்டம்பர் 7 (ராய்ட்டர்ஸ்) - ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி, "விரிவான தீ சேதத்தை" ஏற்படுத்தியதாக அதன் ட்ரோன் படைகளின் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி ஞாயிற்றுக்கிழமை டெலிகிராம் என்ற செய்தி செயலியில் தெரிவித்தார். ராய்ட்டர்ஸால் இந்த அறிக்கைகளை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ரஷ்யாவிடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை. உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . 2022 இல் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறவுகளைத் துண்டித்த பிறகும், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகங்களை வாங்குவதைத் தொடர்ந்து , போக்குவரத்து குழாய் பாதை ரஷ்ய எண்ணெயை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு வழங்குகிறது . ஹங்கேரிய சுத்திகரிப்பு நிறுவனமான MOL (MOLB.BU) இன் செய்தித் தொடர்பாளர், புதிய தாவலைத் திறக்கிறதுநாட்டிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறினார். ஸ்லோவாக்கியாவின் பொருளாதார அமைச்சர் டெனிசா சகோவா, ஸ்லோவாக்கியாவுக்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். உக்ரைன் மீதான மாஸ்கோவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக , எதிரியின் ஒட்டுமொத்த போர் முயற்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக, ரஷ்ய எரிசக்தி இலக்குகள் மீதான அதன் தாக்குதல்கள் இருப்பதாக கீவ் கூறுகிறது. ரஷ்யாவிலிருந்து உக்ரைன் வழியாக ஸ்லோவாக்கியாவை அடையும் குழாய் பாதையின் மீது உக்ரேனிய தாக்குதல்கள் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதி சமீபத்திய வாரங்களில் பல முறை தடைபட்டுள்ளது. கீவ் நகரில் ஒலேனா ஹர்மாஷ் மற்றும் பாவெல் பாலிட்யுக் ஆகியோரால் அறிக்கையிடப்பட்டது, வார்சாவில் ஆலன் சார்லிஷ், பிராகாவில் ஜேசன் ஹோவெட் ஆகியோரால் கூடுதல் அறிக்கையிடப்பட்டது; மெல்போர்னில் லிடியா கெல்லி எழுதியது; வில்லியம் மல்லார்ட், கிளாரன்ஸ் பெர்னாண்டஸ் மற்றும் டோமாஸ் ஜானோவ்ஸ்கி ஆகியோரால் திருத்தப்பட்டது. எங்கள் தரநிலைகள்: தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை கோட்பாடுகள்., புதிய தாவலைத் திறக்கிறது உக்கிரேனின் இந்த தாக்குதல்கள் நேட்டோவின் ஆர்டிகல் 5 தூண்டாதா? அல்லது நேட்டோ ஒரு வெத்து வேட்டு என உக்கிரேன் நினைகிறதா?
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
இது எல்லாம் நம்ம இனத்தின் தலை விதி...45 வயது ...
செம்மணியும் ஆன்மீகவாதி
நான் நினைக்கின்றேன்...வாரிதி என்று பின்னால் முடியும் பெயராக இருக்கும்
எனக்கு பிடித்த சில வரிகள்.
இருட்டுக்குப் பயந்தால் தூங்க முடியாது கஷ்டத்துக்கு பயந்தால் வாழ முடியாது. உழைக்க பயந்தால் வாழ முடியாது. வாழக் கற்றுக் கொள் வாழ்க்கை ஒரு முறைதான் வாய்ப்பு தரும். ஒரு காலத்தில் என் பிள்ளைகள் கூட தனியே நடக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் என் மனைவி என் கை பிடித்து தான் நடக்க ஆசைப்படுகிறாள். காடு மலை தாண்டி ஆவது கல்வி கற்று விடு. கட்டியவன் கை விடடாலும் நாம் கற்றுக்கொண்ட கல்வி ஒருபோதும் நம்மைக் கைவிடாது. எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் " நீ நல்லாய் இருப்பாய் ""என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்போடு ஓடச் செய்கிறது உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்கும் வரை அதன் அருமை தெரியாது .எப்போது பழுதடைந்து போகிறதோ அப்போது தான். அதனருமை பெருமை புரியும் . வாழ்க்கை சற்று கடினமான தேர்வு தான் பலர் அதில் தோல்வியுற காரணம் ,அவரவர்க்கு தனித்தனி கேள்வித்தாள் என அறியாது பிறரைப் பார்த்து நகலெடுப்பது தான் சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கி கொண்டு நம்மை எழுந்து நடமாட வைக்கும். நம் மனம் தான் சிறந்த நண்பன். உதவிக்கு யாரும் இல்லை எண்ணாதே.தைரியமாய் போராடு உதவிக்கு நான் இருக்கிறேன் .இப்படிக்கு தன்னம்பிக்கை அனைத்தும் ஒரு நாள் கடந்து போகும் எனக் காத்திருந்தேன் . ஆனால் எதுவும் கடந்து போகாது பழகிப்போகும் என உணர்த்தி விட்டது காலம். காலத்துக்கேற்ப மாறவில்லை என்றால் அதுவாகவே நம்மை மாற்றி விடும்.
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
பிராயச்சித்தம் போல.....
வணக்கம்
நல் வரவாகுக . தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் — வீரகத்தி தனபாலசிங்கம் —
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் அவதானியுமான நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை பாராட்டியபோது இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு அக்கறை காட்டாமல் இருந்தார்களோ தெரியவில்லை. அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது. பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக கூறமுடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன் மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. “இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது. “அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார். கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா செய்த உடன்படிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது. இத்தகைய பின்புலத்தில் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். “இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார். இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும் அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை. கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை, மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட, மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில் அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத உணர்ச்சிகளை தூண்டிவிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதாக தெரிகிறது. வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும் ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர். கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை. காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக கச்சதீவு உடன்படிக்கை பற்றி மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி கச்சதீவு விவகாரத்தை மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது. திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். https://arangamnews.com/?p=12304
மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு
Published By: Vishnu 07 Sep, 2025 | 09:52 PM ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224481
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல் நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf9w523x009eqplp48cd1nqe
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
திருகோணமலையில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு Published By: Vishnu 07 Sep, 2025 | 06:55 PM திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் சனிக்கிழமை (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். அங்கு நடைபெற்ற தேர் பவனியின் போது வானவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசை அருகில் இருந்த ஒருவர் காலால் உதைத்துள்ளார். அது மற்றொருவரைத் தாக்கி வெடித்ததில், அவர் தீவிரமாக காயமடைந்தார். காயமடைந்தவர் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கந்தளாய் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/224475
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
பரிசில்கள் தருவதாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுகின்றது. இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். கைப்பேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmf9hm1sd009aqplpul2ndo92
விமர்சனம் : காந்தி கண்ணாடி
இந்த படம் அதிகளவில் பேசப்படுவது போல் உள்ளதே. பாலா சிவ கார்த்திகேயன் போல் வளர்வாரா?
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
செம்மணியும் ஆன்மீகவாதி
அந்த ஆன்மிகவாதியின் பெயர் என்ன? ஆறுதிருமுருகனா?
செம்மணியும் ஆன்மீகவாதி
செம்மணியும் ஆன்மீகவாதியும் -- எனது சிறு விளக்கம் --- --- --- கட்டிட பணிகளை தற்காலிகமாக அவர் நிறுத்துவதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என்று, சிலர் எனது கட்டுரைப் பதிவின் கீழ் கருத்திட்டுள்ளனர். சரி, அதனை நான் மதிக்கிறேன்- மாற்றம் வரும் என எனது கட்டுரையில் கோப்பாய் பிரதேச தவிசாளர் தியாகராஜா நிரோஸ் அவருடன் உரையாடிய விடயம் உண்டு. ஆனால் --- 1 1) இப்படியொரு பின்னணியில் அவர் அங்கு கட்டிடம் கட்ட முற்பட்டமை தவறு அல்லவா? 2) யூலை 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த பின்னர்தானே கட்டிடம் கட்டும் பணிகளை அவர் நிறுத்தியுள்ளார்? 3) செம்மணியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருவது தெரியாமலா அவர் கட்டிடம் கட்டும் பணிகளை அங்கு ஆரம்பித்தார்? அத்துடன், கிரிசாந்தி உட்பட 600 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - யுவதிகள் கொல்லப்பட்டு செம்மணி பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் என 1999 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டிருந்தது. இது தெரியாமலா அந்தக் காணியை அவர் பெற்று கொண்டார்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே, சாரதியின் இரத்த மாதிரிகளை இன்று (7) அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmf9gmnv000a5o29n9id9zhxf
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed