Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
டெல்லி வீரர்கள். நம்ம தூக்குதுரை டூ பிளேசி, ஜேக் பிரேசர், ராகுல், கருண் நாயர். கருண் நாயர் இருக்கிற formக்கு என்ன அடி அடிப்பானோ தெரியா. இன்றைக்கு டெல்லியின் விளையாட்டப் பாருங்க.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
தெய்வ‌மே ல‌க்னோ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு டெல்லி அணிக்காக‌ சில‌ ஆண்டு க‌ப்ட‌னாய் இருந்த‌ ரிசப் பாந் இப்போது ல‌க்கோ அணியின் க‌ப்ட‌னாய் தெரிவு செய்து இருந்தாலும் ல‌க்னோ அணியே சிற‌ந்த‌ வீர‌ர்க‌ளை வைச்சு இருக்கு..............20ஓவ‌ர் கிரிக்கேட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.............................

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு

3 months 2 weeks ago
கிழக்கைத் துண்டாடி சிங்களவர்களுக்கு தாரைவார்க்கவே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு! [Monday 2025-03-24 06:00] http://seithy.com/siteadmin/upload/srineshan-061224-seithy.jpg கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், "கூட்டமைப்பாக உருவாகினால் அது நல்ல கூட்டமைப்பாக இருக்கவேண்டும். நாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்கள். ஊழல், மோசடி, இலஞ்சம், கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் நாங்கள். ஆனால் கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாகவும் உங்களது கேள்விகள் மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன். ஆனால் நான் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. அண்மையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பு சொல்லப்பட்ட விடயத்தை அவ்வாறே கூறுகின்றேன். பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரன் அவர்களின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயல்பாடுகள் மற்றும் கையூட்டு வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றது. எனவே கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், காணாமல் ஆக்குதல், திருட்டு, லஞ்சம், தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும். ஆகவே, நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இணைத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். அது ராஜகா அமைச்சர்களாக இருந்தால் என்ன,பிரதி அமைச்சர்களாக இருந்தால் என்ன மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒரு சத்தமும் போடாமல் இருந்து கொண்டு தரகு மற்றும் லஞ்சங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றவர்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. ஆகவே, மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் நாங்கள் எந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை. அவ்வாறு இடம்பெறவும் இல்லை. நான் அறிகின்றேன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்கின்றார்கள் நாங்களும் தனியாகத்தான் கேட்கின்றோம் எந்தவித ஒப்பந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. வடக்கில் அவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றதா என அறிவித்தாயின் நாங்கள் நிச்சயமாக அந்த சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அங்கு இருக்கின்ற கட்சியின் நிர்வாகத்தோடு தொடர்புடைய செயலாளர்களோடு அல்லது தலைவர்களோடு உரையாடுகின்ற போது அறியலாம் நான் நினைக்கின்றேன். அவ்வாறு கிழக்கில் இடம்பெறவில்லை அவ்வாறான ஒப்பந்தமும் செய்யவில்லை. வடக்கிலும் குறிப்பாக யாழ் மாவட்ட மாவட்டத்திலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லை அவ்வாறு இல்லை என்றால் நான் நினைக்கின்றேன் வன்னி மாவட்டத்தில் அவ்வாறு ஏதேனும் நடைபெற்று இருந்தால் நாங்கள் அதனை கேட்டு தான் அறிய வேண்டும் இதுவரைக்கும் நான் அவ்வாறான விடயத்தை அறிந்து கொள்ளவில்லை. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றபோது நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரே இடத்தில் சந்தித்தபோது நிழல் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த நிழல் படங்களை வைத்துக்கொண்டு ஒப்பந்தங்கள் செய்ததாக தவறான கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படையில் சந்திப்போம் கைகளை கொடுப்போம் தோளில் தட்டி விட்டு வருவோம் இவ்வாறான விடையங்களை வைத்துக்கொண்டு சிலவேளைகளில் தவறான வதந்திகளை பிறக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்படுகின்றது. நிச்சயமாக கூறுகின்றேன் அவ்வாறான தமிழரசு கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்த ரீதியாக எதுவும் செய்யவில்லை. இது வெறுமனே ஒரு வதந்தியான செயல்பாடாக தான் பார்க்கின்றேன.; அது நிழல் படம் என்பது கதைக்கின்ற போது கை கொடுக்கின்ற போது சில புரளிகளை ஏற்படுத்துவதற்காக படங்களை பிடித்து போடுவார்கள் அது படம் தானே தவிர அதை எதுவிதமான அர்த்தமும் இல்லாத விடயம். பட்டலந்த சித்திரவதை முகாம் என்பது உண்மையில் நடைபெற்ற விடயம் என்பதற்கான ஆதாரம் இப்போது பதிவுகளிலும் பேச்சுக்களிலும் வந்துவிட்டது. ஆகவே அதற்குரிய நடவடிக்கைக்கு முன் ஆயத்தமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் இடம்பெற இருக்கின்றது. அந்த விவாதத்தில் நாங்களும் கலந்து கொள்ள இருக்கின்றோம். ஆகவே, பட்டலந்தயில் சிங்கள இளைஞர்கள் ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று எல்லாம் சொல்லப்படுகின்றது அதேபோன்று 88 89 காலப்பகுதியில் இந்த வேலைகளை செய்தவர்கள் 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்கு பின்னர் இதே போன்ற சித்திரவதைகள் கரடியினாறு முகாமாக இருக்கலாம் அல்லது கல்லடியாக இருக்கலாம் முறக்கொட்டான்சேனை, நாவலடி, கொன்டவெட்டுவான், சத்ருகொண்டான் போன்ற பல கிராமங்களில் சித்திரவதைகளும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் தாராளமாக நடைபெற்று இருக்கின்றது. சத்துருக்கொண்டானை எடுத்துக் கொண்டால் ஒரே நாளில் சுற்றி வளைப்பு செய்து கொக்குவில் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சேர்ந்த 186 அப்பாவி தமிழ் மக்களை அதிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு சென்று சத்துருக்கொண்டான் முகாமில் அன்று இரவு படுகொலை செய்தார்கள் அதிலும் குழந்தை பிள்ளைகளை அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறிய சாட்சியதின்படி வளைந்து இருந்த முந்திரிகை மரத்தின் மீது அவ்வாறே குழந்தைகளை வைத்து கத்திகளால் துண்டு துண்டுகளாக வெட்டி போட்டதை அவர் கண்டிருக்கின்றார். இவ்வாறு எல்லாம் படு மோசமான பாவகரமான செயல்கள் சத்துருகொண்டான் முகாமில் மாத்திரம் அல்ல கிழக்கு பல்கலைக்கழகத்திலும் 180 க்கும் மேற்பட்டவர்கள் அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டு நாவலடி முகாமில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே பட்டலந்த முகாம் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் அனேகமான படை முகாம்களில் இவ்வாறான சித்தரவதைகள் இடம் பெற்று இருக்கின்றது எனவே அதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செய்தால்தான் அவர்களை நாங்கள் சமத்துவவாதிகள் என்று கூறுவோம். அவர்கள் சமத்துவவாதிகள் என்றால் சட்டத்தின் முன்னிலையில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழர்கள் பரங்கியர்கள் மலாயர் அனைவரும் சமம் ஆகவே சட்டத்தின் மூலமாக அப்பாவிகளை பாதுகாக்க வேண்டியதும் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆகவே பட்டலந்த முகாம் நியாயத்தின் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது அது போன்று வடக்கு கிழக்கில் இருந்த முகாம்களில் இடம் பெற்ற அனைத்து சித்திரவதைகளும் படுகொலைகளும் காணமலாக்கப்பட்டதும் சந்திக்க வரவேண்டும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதனை நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருப்போம்." என்றார். http://seithy.com/breifNews.php?newsID=331045&category=TamilNews&language=tamil

இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

3 months 2 weeks ago
பாராட்டுக்கள். இந்த நிகழ்வுக்கு உதவி தூதுவராலயத்திலிருந்தும் பிரமுகர்களைக் கூப்பிட்டிருக்க வேண்டும்.

அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்!

3 months 2 weeks ago
அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்! இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். சனிக்கிழமை (22) நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அதன் உரை இன்று (24) வெளியிடப்பட்டது. அந்த உரையில், தீவு நாட்டிற்கான பலன்களை அதிகரிக்க இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் வர்த்தக இணைப்புகள் ஆகிய துறைகளில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பை வலியுறுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார். இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது. அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியில் எந்த தர்க்கத்தையும் காணவில்லை. இது அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த பெப்ரவரி 13 அன்று, கோடீஸ்வரர் கௌதம் அதானியின் கூட்டு நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க பிரிவான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் புதிய அரசாங்கம் கட்டணங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, தீவு நாட்டில் முன்மொழியப்பட்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகியது. இரண்டு திட்டங்களில் காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலும், அதை பயனர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பறிமாற்ற அமைப்புக்களை அமைப்பதிலும் நிறுவனம் மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவிருந்தது. மின்சாரச் செலவுகளைக் குறைக்க விரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கு இந்த திட்டம் உட்பட்டது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, வடகிழக்கு பிராந்தியத்தில் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இரத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தி கூறியது. அதிகாரத்தைப் பெற்ற பிறகு, முந்தைய ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்முதல் விலை உயர்ந்தது மற்றும் ஊழலைக் குறிக்கிறது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஐந்து மில்லியன் டொலர் செலவிட்ட பின்னர், அதானி அதிலிருந்து கெளரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாகக் கூறியது. புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கான ஏலங்களை இலங்கை பெற்றுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார், இது அதானி ஒரு யூனிட்டுக்கு 8.26 அமெரிக்க சென்ட் வழங்கிய கொள்முதல் விலையில் பாதி செலவாகும். எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய முதலீடுகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் மட்டுமே இலங்கைக்கு ஒரே வழியா என்று முன்னாள் ஜனாதிபதியிட் கேள்வி எழுப்பிய போது, சர்வதேச பத்திரதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடனை வெற்றிகரமாக மறுசீரமைக்கும் திறன் IMF உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். “எனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனது திட்டம் முடிக்கப்படாவிட்டால் அது மேலும் சிரமங்களைச் சந்திக்கும்.” – என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அப்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியானார். அதன் பின்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான பாதையைத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426261

அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்!

3 months 2 weeks ago

New-Project-313.jpg?resize=750%2C375&ssl

அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்!

இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.

சனிக்கிழமை (22) நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அதன் உரை இன்று (24) வெளியிடப்பட்டது.

அந்த உரையில், தீவு நாட்டிற்கான பலன்களை அதிகரிக்க இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2022 ஆம் ஆண்டு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் வர்த்தக இணைப்புகள் ஆகிய துறைகளில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பை வலியுறுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது.

அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியில் எந்த தர்க்கத்தையும் காணவில்லை.

இது அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Adani-wind-power-new.jpg?ssl=1

கடந்த பெப்ரவரி 13 அன்று, கோடீஸ்வரர் கௌதம் அதானியின் கூட்டு நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க பிரிவான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் புதிய அரசாங்கம் கட்டணங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, தீவு நாட்டில் முன்மொழியப்பட்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகியது.

இரண்டு திட்டங்களில் காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலும், அதை பயனர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பறிமாற்ற அமைப்புக்களை அமைப்பதிலும் நிறுவனம் மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவிருந்தது.

மின்சாரச் செலவுகளைக் குறைக்க விரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கு இந்த திட்டம் உட்பட்டது.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, வடகிழக்கு பிராந்தியத்தில் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இரத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தி கூறியது.

அதிகாரத்தைப் பெற்ற பிறகு, முந்தைய ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்முதல் விலை உயர்ந்தது மற்றும் ஊழலைக் குறிக்கிறது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஐந்து மில்லியன் டொலர் செலவிட்ட பின்னர், அதானி அதிலிருந்து கெளரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாகக் கூறியது.

புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கான ஏலங்களை இலங்கை பெற்றுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார், இது அதானி ஒரு யூனிட்டுக்கு 8.26 அமெரிக்க சென்ட் வழங்கிய கொள்முதல் விலையில் பாதி செலவாகும்.

எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய முதலீடுகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் மட்டுமே இலங்கைக்கு ஒரே வழியா என்று முன்னாள் ஜனாதிபதியிட் கேள்வி எழுப்பிய போது, சர்வதேச பத்திரதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடனை வெற்றிகரமாக மறுசீரமைக்கும் திறன் IMF உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார்.

“எனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனது திட்டம் முடிக்கப்படாவிட்டால் அது மேலும் சிரமங்களைச் சந்திக்கும்.” – என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அப்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியானார்.

அதன் பின்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான பாதையைத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426261

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

3 months 2 weeks ago

savukku.jpg?resize=730%2C375&ssl=1

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர்  சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர்  ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவரது  படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடை நீரைக் கொட்டி உள்ளார்கள்.   இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியதுஇ மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

இக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1426274

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

3 months 2 weeks ago
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் அவரது படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடை நீரைக் கொட்டி உள்ளார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியதுஇ மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். இக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1426274

உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்!

3 months 2 weeks ago
உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ரூ பீக் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி மைக்கேல் ஆண்டன் ஆகியோர் வழிநடத்துவதாக உறுதிபடுத்தியுள்ளனர். கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தத்தை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. இது கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற அனுமதிக்கிறது. ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் முன்னாள் இராஜதந்திரி கிரிகோரி கராசின், தற்போது ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார். மேலும் சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசு நிறுவனமான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பணிப்பாளரின் ஆலோசகர் செர்ஜி பெசெடா ஆகியோரும் உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் விதம் குறித்து பரந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுவரை புட்டின் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், 2022 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதிலிருந்து மாறாத அவரது அதிகபட்ச கோரிக்கைகளாக புட்டின் அர்த்தமுள்ள விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாரா அல்லது கடைப்பிடிப்பாரா என்பது குறித்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே சந்தேகம் உள்ளது. அமைதியைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக புட்டின் கூறுகிறார். ஆனால் உக்ரேன் அதிகாரப்பூர்வமாக அதன் நேட்டோ அபிலாஷைகளைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் நான்கு உக்ரேனியப் பகுதிகளின் முழுப் பகுதியிலிருந்தும் அதன் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். https://athavannews.com/2025/1426285

உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்!

3 months 2 weeks ago

New-Project-320.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்!

உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.

கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ரூ பீக் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி மைக்கேல் ஆண்டன் ஆகியோர் வழிநடத்துவதாக உறுதிபடுத்தியுள்ளனர்.

கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தத்தை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது.

இது கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற அனுமதிக்கிறது.

ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் முன்னாள் இராஜதந்திரி கிரிகோரி கராசின், தற்போது ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார்.

மேலும் சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசு நிறுவனமான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பணிப்பாளரின் ஆலோசகர் செர்ஜி பெசெடா ஆகியோரும் உள்ளனர்.

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் விதம் குறித்து பரந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதுவரை புட்டின் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆனால், 2022 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதிலிருந்து மாறாத அவரது அதிகபட்ச கோரிக்கைகளாக புட்டின் அர்த்தமுள்ள விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாரா அல்லது கடைப்பிடிப்பாரா என்பது குறித்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே சந்தேகம் உள்ளது.

அமைதியைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக புட்டின் கூறுகிறார்.

ஆனால் உக்ரேன் அதிகாரப்பூர்வமாக அதன் நேட்டோ அபிலாஷைகளைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் நான்கு உக்ரேனியப் பகுதிகளின் முழுப் பகுதியிலிருந்தும் அதன் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

https://athavannews.com/2025/1426285

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு!

3 months 2 weeks ago
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு! ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாசன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426298

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு!

3 months 2 weeks ago

Netumbo-Nandi-Ndaitwah.jpg?resize=750%2C

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு!

ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah)  58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத்  தெரிவு செய்யப்பட்டார்.

72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி  சாமியா சுலுஹூ ஹாசன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426298

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ரிசப் பாந்தும் ராகலும் இப்போது அணிகள் மாறி விளையாடுகினம். அவ்விரு அணிகளும் மோதுகின்றன. யார் தங்களின் பழைய அணிக்கு அடிப்பினம்.

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆதரவு

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 03:10 PM பெண்களின் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியில், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் அமைச்சரும் துணைத் தலைவருமான காமோஷிடா நவோகி, “சமாதானத்துக்கான பாதைகள்: இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்றிட்டத்தை நனவாக்குதல்” செயற்றிட்டத்தின் மூலம் ஆதரவளிக்கப்பட்ட மன்னார் மாவட்ட பெண் தொழில்முனைவோர்களை பார்வையிட்டார். கிறிசாலிஸ் நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து ஐ.நா. பெண்கள் அமைப்பினால் அமுல்படுத்தப்படும், ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான ஆதரவுடனான இந்த செயற்றிட்டமானது மோதலால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசாங்கத்தின் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன், சுமார் 500 பெண் தொழில்முனைவோர் வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்திப் பொருளின் புத்தாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலமாக தங்களது இயலளவை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளனர். இந்த இலக்கு பயிற்சிகள் அவர்களின் வணிக மாதிரிகளை மேம்படுத்த உதவுவதுடன், சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் நிலைபேண்தகு தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றையும் வழங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காமோஷிடா நவோகி, “பெண்களுக்கு அவசியமான திறன்களை வழங்குவதன் மூலமும், அவர்களின் இயலளவுகளை வெளிப்படுத்தி, நாம் சமூகங்கள் முழுவதும் எதிரொலிக்கும் நேர்மறையான மாற்றங்களை தூண்டலாம் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்து சக்தியை உருவாக்க முடியும். பெண்களின் வலுவூட்டலுக்கும், இந்த நாட்டின் நிலைபேண்தகு, உள்ளடங்கலான அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து தனது அர்ப்பணிப்பை வழங்குகிறது” என்று கூறினார். இந்த ஒத்துழைப்பானது பால்நிலை சமத்துவம் மற்றும் உள்ளடங்கலான அபிவிருத்திக்கான ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கீழ் பகிரப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றது. பொருளாதார வலுவூட்டலுக்கான வழிவகைகளை உருவாக்குவதன் மூலம் இந்த முயற்சியானது இலங்கையில் நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கிறது. https://www.virakesari.lk/article/210058

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆதரவு

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 03:10 PM

image

பெண்களின் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியில், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் அமைச்சரும் துணைத் தலைவருமான  காமோஷிடா நவோகி, “சமாதானத்துக்கான பாதைகள்: இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்றிட்டத்தை நனவாக்குதல்”  செயற்றிட்டத்தின் மூலம் ஆதரவளிக்கப்பட்ட மன்னார் மாவட்ட பெண் தொழில்முனைவோர்களை பார்வையிட்டார்.

download__1_.jpg

கிறிசாலிஸ் நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து ஐ.நா. பெண்கள் அமைப்பினால் அமுல்படுத்தப்படும், ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான ஆதரவுடனான இந்த செயற்றிட்டமானது மோதலால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 

ஜப்பான் அரசாங்கத்தின் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன், சுமார் 500 பெண் தொழில்முனைவோர் வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்திப் பொருளின் புத்தாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலமாக தங்களது இயலளவை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளனர். 

இந்த இலக்கு பயிற்சிகள் அவர்களின் வணிக மாதிரிகளை மேம்படுத்த உதவுவதுடன், சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் நிலைபேண்தகு தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றையும் வழங்கியிருக்கிறது.

download.jpg

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காமோஷிடா நவோகி, 

“பெண்களுக்கு அவசியமான திறன்களை வழங்குவதன் மூலமும், அவர்களின் இயலளவுகளை வெளிப்படுத்தி, நாம் சமூகங்கள் முழுவதும் எதிரொலிக்கும் நேர்மறையான மாற்றங்களை தூண்டலாம் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்து சக்தியை உருவாக்க முடியும். பெண்களின் வலுவூட்டலுக்கும், இந்த நாட்டின் நிலைபேண்தகு, உள்ளடங்கலான அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து தனது அர்ப்பணிப்பை வழங்குகிறது” என்று கூறினார்.

இந்த ஒத்துழைப்பானது பால்நிலை சமத்துவம் மற்றும் உள்ளடங்கலான அபிவிருத்திக்கான ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கீழ் பகிரப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றது. 

பொருளாதார வலுவூட்டலுக்கான வழிவகைகளை உருவாக்குவதன் மூலம் இந்த முயற்சியானது இலங்கையில் நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கிறது.

https://www.virakesari.lk/article/210058

யானை - மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள் - எப்படி தெரியுமா?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனாரோ டோமா பதவி, 24 மார்ச் 2025, 07:19 GMT யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது. கென்யாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேன் கூடுகளை ஆங்காங்கே இணைத்துக் கட்டியுள்ள ஒரு வகையான வேலிகள் தான் அந்தத் தீர்வு. யானைகள் தேனீக்களை வெறுக்கும் என்பதைப் பற்றி உள்ளூர் சமூகங்களின் நீண்ட கால அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒலி எழுப்பக் கூடிய கூடிய இந்தத் தடைகள் உருவாக்கப்பட்டன. இவை விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் நிலைமையை திறமையாக கட்டுப்படுத்தும் ஒரு வழியை உருவாக்குகின்றன. இப்போது இந்த முறை மொசாம்பிக்கில் இருந்து தாய்லாந்து வரை உலகம் முழுவதும் பரவி வருகின்றது. யானைகள் தேனீக்களை இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் என்ன? மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் இந்த நெரிசலான உலகில், தேனீக்கள் உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்பலாமா? மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்ட புதிய விலாங்கு மீனின் தனிச்சிறப்புகள் என்ன?22 மார்ச் 2025 சருமத்தை பொலிவூட்ட கொலாஜென் இணை மருந்துகள் உண்மையில் உதவுகிறதா? வெற்று விளம்பரமா?21 மார்ச் 2025 மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் , தற்போது உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. கென்யாவில் மக்கள் தொகையும் வளங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகள், யானைகள் நடமாடும் பகுதிகளை ஒட்டி விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில், மனிதர்களுக்கும் பெரிய உயிரினங்களான யானைகளுக்கும் இடையேயான மோதல்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. "விவசாய நிலங்கள் விரிவடைவதும், மரங்கள் வெட்டப்படுவதும், நகரமயமாக்கலும், யானைகள் போன்ற அதிக நிலப்பரப்பு தேவைப்படும் விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிப் போவதும், யானைகளை உணவு மற்றும் தண்ணீருக்காக மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தூண்டி வருகிறது," என்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த யானை பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல் குறித்த ஆலோசகரான கிரேட்டா பிரான்செஸ்கா ஐயோரி கூறுகிறார். "யானைகள் இருக்கும் இடங்களிலெல்லாம், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் குறித்த தகவல்களும் வருகின்றன." பிரிட்டனின் வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு சூழலியல் நிபுணர் கிரேம் ஷானன், இருபது ஆண்டுகளாக ஆப்பிரிக்க யானைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்தப் பிரச்னைக்குரிய பகுதிகளில் வாழ தள்ளப்படுகிற மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள் தான். "அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விவசாயம் வாழ்க்கைக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது." என்கிறார் கிரேம் ஷானன். ஆனால் நீரும், ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களும் யானைகளை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால் அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் வர நேரிடுகிறது. மக்கள் தங்கள் நிலங்களை பராமரிக்க பல மாதங்கள் உழைக்கிறார்கள். "பயிர்களை நட்டுவிட்டு, அவை காய்க்கத் தொடங்கும் தருணத்தில் யானைகள் வந்துவிடுகின்றன," என்று மனிதர்களுக்கும்-யானைகளுக்குமான மோதல் அதிகமாக இருக்கும் கென்யாவின் முவாகோமா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இம்மானுவேல் முவாம்பா தெரிவிக்கிறார். "யானைகள் வந்தால் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்" என்கிறார். "எங்களில் சிலர் வாழ்வாதாரத்துக்காக இந்தப் பயிர்களை நம்பி இருக்கிறோம், அது ஒரே இரவில் அழிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்" என்றும் முவாம்பா கூறுகிறார். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ஒன்றுக்கொன்று மோதாமல், பாதுகாப்பாக நகர்வதன் பின்னணி19 மார்ச் 2025 கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025 பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து - எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?17 மார்ச் 2025 அது மட்டுமின்றி, இத்தகைய மோதல்கள் யானைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம். பசியில் இருக்கும் 7 டன் எடையுள்ள யானைகள் பயிர்களுக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், உணவுக்காக வந்த யானைகள் மனிதர்களால் கொல்லப்படும் அபாயமும் உள்ளது. இந்த மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகளும் உள்ளூர் மக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளைச் சோதித்து வருகின்றனர். மின்சார வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள், சூரிய ஆற்றலில் விளங்கும் விளக்குகள், மிளகாய் பூசப்பட்ட செங்கற்கள், கடும் நாற்றமுள்ள யானை விரட்டிகள் மற்றும் யானைகளை பயமுறுத்த சத்தம் எழுப்புதல் போன்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறைக்கும் அதன் தனிப்பட்ட நன்மைகளும், சில குறைகளும் உள்ளன. ஆனால் யானைகளை விரட்டுவதற்குத் தேனீக்களை பயன்படுத்துவது, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான முறையாக உருவெடுத்துள்ளது. இது யானைகளை வெற்றிகரமாகத் தடுப்பதுடன், விவசாயிகளுக்கு பல விதமான கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. 2000 களின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருமான ஃபிரிட்ஸ் வோல்ராத் மற்றும் அந்த அமைப்பின் நிறுவனர் இயன் டக்ளஸ்-ஹாமில்டன், கென்யாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து ஒரு நாட்டுப்புறக் கதையை கேட்ட போது இந்த யோசனை பிறந்தது. சில பகுதிகளில் மரங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அவற்றில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன என்று சொல்லப்பட்ட அந்தக் கதை இருவரையும் ஆச்சரியப்படுத்தியது. பட மூலாதாரம்,SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, யானைகளை பயிர்களில் இருந்து விலக்கி வைப்பதற்கு தேனீக்கள் சிறந்த வழி என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன ( படம்: சேவ் த எலிபன்ட்ஸ் தொண்டு நிறுவனம்) இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட வோல்ராத் மற்றும் டக்ளஸ்-ஹாமில்டன், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பின் இணை இயக்குநர் லூசி கிங்குடன் இணைந்து, தேனீக்கள் உண்மையில் யானைகளை பயமுறுத்தக் கூடியவை தானா என்பதை அறிவியல் முறையில் ஆராயத் தொடங்கினர். 2007-க்குள், அவர்கள் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். யானைகள் காட்டு ஆப்பிரிக்க தேனீக்கள் இருக்கும் மரங்களுக்கு அருகே செல்லாது என்றும், கூடவே "அந்த இடத்தை தவிர்க்கச் சொல்லி, ஒன்றுக்கொன்று எச்சரிக்கையையும் அனுப்புகின்றன" என்றும், "தேனீக்கள் கொட்டும் தன்மையுடையவை என்பதையும் யானைகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. அதை அவை ஒருபோதும் மறக்காது" என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார் லூசி கிங். பசியுடன் வரும் யானைகளின் தாக்குதலிலிருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியும் வகையில் ஒரு புதிய முறையை லூசி கிங் உருவாக்கினார். அதாவது, தேன் கூடுகளை இணைத்துக் கட்டிய ஒரு வேலியை உருவாக்கினார். இந்த யோசனையை அவர் 2008ஆம் ஆண்டு கென்யாவின் லைக்கிபியா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாக பரிசோதித்தார். அந்தப் பகுதி, யானைகள் அடிக்கடி பயிர்களை அழிப்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வேலி பண்ணையைச் சுற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் (33 அடி) ஒரு தேன் கூடு இரு தூண்களுக்கு இடையில் வைக்கப்படுகின்றது. தேன் மெழுகு மற்றும் லெமன் கிராஸ் எண்ணெய் போன்ற இயற்கையான வாசனைகள் மூலம் ஈர்க்கப்பட்ட ஆப்பிரிக்க தேனீக்கள், இந்த கூடுகளில் இயற்கையாகவே குடியேறி வாழத் தொடங்குகின்றன. இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா?16 மார்ச் 2025 உலக தூக்க தினம்: இரவு படுத்தவுடன் தூங்க பகலில் இந்த 5 உத்திகளை பின்பற்றுங்கள்14 மார்ச் 2025 ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்13 மார்ச் 2025 "ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பண்ணைக்கு 24 தேன் கூடுகள் தேவை," என்று கிங் விளக்குகிறார். ஆனால் அதில் பாதி கூடுகள் மட்டுமே உண்மையானவை. மீதமுள்ள 12 கூடுகள் வெறும் போலிகள். இவை மஞ்சள் நிற பலகையால் செய்யப்பட்டவை. இதனால் யானைகளுக்கு, அந்த இடத்தில் உண்மையில் அதிகமான தேன் கூடுகள் இருக்கின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரே நேரத்தில் செலவுகளை குறைப்பதுடன், உண்மையான தேனீக்களுக்கு கூடுதல் இடத்தையும் வழங்குகின்றன. "யானைகள் இருட்டில் அவற்றை நெருங்கும் போது, தேனீக்களின் வாசனையும் தேனின் மணமும் உடனே அவற்றுக்குத் தெரியும். அதே சமயம் நிறைய மஞ்சள் பெட்டிகள் எங்கும் காணப்படும். எது உண்மையானது, எது போலியானது என்று யானைகளுக்கு புரியாது. அதனால் இது ஒரு மாயை போன்று தோன்றுகிறது. ஆனால் இந்த முறை நன்றாக வேலை செய்கிறது," என்கிறார் கிங். யானைகளைப் பயிர்களிலிருந்து தடுத்து உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கு மட்டும் அல்லாமல், தேனீக்களுக்காக அமைக்கப்படும் இந்த வேலிகள் அவற்றைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றன. முதலில், தேன் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். "ஒரு விவசாயியிடம் தேனும், பயிர்களும் இருந்தால், அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கும்," என்கிறார் முவாம்பா. அவர் தற்போது 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பில் 'தேன் கூடு வேலி' திட்டத்தின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முதன்முதலில் அவரது கிராமத்தில் தான் இந்த வேலிகள் பரிசோதிக்கப்பட்டன. இப்போது அவர் மற்ற விவசாயிகளுக்கு இந்த வேலிகளை எப்படிப் பொருத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைக் கற்றுத் தருகிறார். பட மூலாதாரம்,JANE WYNYARD/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, யானைகளைத் தடுப்பதுடன், தேன் கூடுகளால் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் தேன் விற்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற உதவும் (படம்: ஜேன் வைன்யார்ட்/ சேவ் த எலிபன்ட்ஸ் அமைப்பு) "பெண்கள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கிங். பொதுவாக, விவசாய வேலைகளில் அதிகம் ஈடுபடுவது பெண்களே. அவர்கள் தான் யானைகளை விரட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது, இதனால் காயம் அடைவதற்கான அபாயமும் அவர்களுக்கு அதிகமாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாள அவர்களை அனுமதிக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, வீட்டுப் பொறுப்புகள், கல்வியைத் தொடர்வது அல்லது மற்ற விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவது ஆகியவை அவர்களுக்கு சாத்தியமாகிறது," எனக் கூறுகிறார் கிங். பல ஆண்டுகளாக, கிங் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், கென்யாவில் தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் எந்தளவு பயனுள்ளதாக உள்ளன என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இன்று, இந்த வேலிகள் தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல் நாள்தோறும் நிகழும் பிரச்னையாக இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்திலும், இந்த முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2024ஆம் ஆண்டு, கிங் மற்றும் அவரது குழுவினர் ஒரு நீண்டகால ஆய்வின் முடிவை வெளியிட்டனர். இதில், இம்மானுவேல் முவாம்பா வசிக்கும் முவாம்பிட்டி மற்றும் முவாகோமா எனும் தெற்கு கென்யாவின் இரண்டு சிறிய கிராமங்களில், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளின் செயல்திறன் ஆராயப்பட்டது. இந்த சமூகங்கள் முட்டைக்கோஸ் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் உற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ளவை. இவை சாவோ தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் பல யானைகளை ஈர்க்கின்றன. கென்யாவில் உள்ள சாவோ தேசிய பூங்கா, அதிக அளவிலான யானைகளை, அதாவது சுமார் 15,000 யானைகளை கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினர். அவர்கள் தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளை அமைத்து, அதற்கான தகவல்களைத் திரட்டினார்கள். ஆய்வில், கிட்டத்தட்ட 4,000 யானைகள் இந்த வேலிகளை அணுகியதில், அதில் 75 சதவீத யானைகள் வேலியை மையமாகக் கொண்டு விரட்டப்பட்டன என்று கண்டறியப்பட்டது. மேலும், விவசாயிகள் தேன் விற்பனை மூலம் 2,250 டாலர் (சுமார் 1,740 யூரோ) வருமானம் ஈட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கென்யாவின் தைடா டவென்டாவில் உள்ள தனது பண்ணையைச் சுற்றி தேன் கூடு வேலிக்கு அடுத்ததாக ஒரு மண்வெட்டியைப் பயன்படுத்தி தனது விவசாய நிலத்தை உழும் பெண் "இது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன்," என்றும், "இந்த இயற்கையான முறையைப் பயன்படுத்தி, இந்த விலங்குகள் பண்ணைகளை நெருங்காமல் தடுக்கும் திறன் கிடைத்திருக்கிறது. இது ஒரு அருமையான யோசனை," என்றும் நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபடாத ஷானன் கூறுகிறார். இருப்பினும், இந்த ஆய்வு சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது என்பதையும் ஷானன் குறிப்பிடுகிறார். உதாரணமாக, பூக்கும் தாவரங்கள் இல்லாததால் வறட்சியான ஆண்டுகளில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2018ஆம் ஆண்டு, முந்தைய வருட வறட்சியிலிருந்து தேனீக்கள் மீண்டு வருவதில் சிரமம் ஏற்பட்ட போது, அதிகமான யானைகள் கிராமங்களில் நுழைந்தன. அப்போது அந்த வேலிகள் சுமார் 73 சதவீத யானைகளை மட்டுமே தடுப்பதில் வெற்றி கண்டன. "எந்த ஒரு முறையை அல்லது கருவியைப் போலவே, இதற்கும் சில வரம்புகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன," என்கிறார் ஷானன். தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளில், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் தான் கவலைப்படுவதாக கிங் கூறுகிறார். "முன்பு 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த வறட்சி ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட வறட்சிகள் ஏற்பட்டால், அது பெரிய சிக்கல் ஆகிவிடும். ஏனெனில் தேனீக்கள் சரியான நேரத்தில் மீண்டு வர முடியாது," என்கிறார் அவர். அதிகமான மழையும் தேனீக்களுக்கு மற்றொரு பிரச்னையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். " மரங்களிலும் புதர்களிலும் இருக்கும் பூக்களை, மழை கீழே தள்ளிவிடும். இதனால் தேனீக்கள் தேன் சேர்க்க பூக்கள் கிடைக்காது," என விளக்குகிறார் கிங். தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் சேர்த்து பிற பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, உலர்ந்த மிளகாய் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். "ஒரே ஒரு முறையில் தீர்வு கிடையாது," என்கிறார் கிங். நீரிழிவு, உடல் பருமன் மருந்துகளில் புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கன் பல்லியின் விஷம்12 மார்ச் 2025 மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 ஆனால் பரந்த அளவில் சிந்தித்தால், இப்படியான உள்ளூர் தீர்வுகள் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை குறைக்க உதவினாலும், காலநிலை மாற்றம் மற்றும் நிலவியல் சிக்கல்கள் போன்றவற்றால் அவை ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்று ஐயோரி கூறுகிறார். இதன் விளைவாக, "மக்கள் இத்தகைய முயற்சிகளில் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார். "எப்போதும் பலதரப்பட்ட அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானவை, அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது? மக்களின் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது? யானைகளும் மக்களும் எதிர்கொள்ளும் அழுத்தத்தை முறையாக எவ்வாறு குறைப்பது போன்றவை," என்று அவர் விளக்குகிறார். மேலும் "இவை பெரும்பாலும் மிகவும் சிக்கலான நடவடிக்கைகளாகவே அமையும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார் ஐயோரி . தற்போது, தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் முவாம்பா மற்றும் பிற சமூகங்களுக்கு உதவுகின்றன. "நாங்கள் இரண்டு தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் தொடங்கினோம். இப்போது மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 700 தேன் கூடுகள் உள்ளன," என்கிறார் முவாம்பா. "இது இப்போது சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயமாக உள்ளது" என்று கூறும் முவாம்பா, இப்போதெல்லாம், யானைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, "இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் யானைகள் பயிர்களைத் தாக்கியிருந்தன" என்பதை கூறும் முவாம்பா", ஆனால், இப்போது, மக்கள் எளிதில் அச்சமின்றி வாழ முடிகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz61443yz6yo

யானை - மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள் - எப்படி தெரியுமா?

3 months 2 weeks ago

யானை - மனித மோதல், தேன் கூடு வேலி

பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS

படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெனாரோ டோமா

  • பதவி,

  • 24 மார்ச் 2025, 07:19 GMT

யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது.

யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது.

கென்யாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேன் கூடுகளை ஆங்காங்கே இணைத்துக் கட்டியுள்ள ஒரு வகையான வேலிகள் தான் அந்தத் தீர்வு.

யானைகள் தேனீக்களை வெறுக்கும் என்பதைப் பற்றி உள்ளூர் சமூகங்களின் நீண்ட கால அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒலி எழுப்பக் கூடிய கூடிய இந்தத் தடைகள் உருவாக்கப்பட்டன.

இவை விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் நிலைமையை திறமையாக கட்டுப்படுத்தும் ஒரு வழியை உருவாக்குகின்றன.

இப்போது இந்த முறை மொசாம்பிக்கில் இருந்து தாய்லாந்து வரை உலகம் முழுவதும் பரவி வருகின்றது.

யானைகள் தேனீக்களை இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் என்ன?

மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் இந்த நெரிசலான உலகில், தேனீக்கள் உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்பலாமா?

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் , தற்போது உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.

கென்யாவில் மக்கள் தொகையும் வளங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகள், யானைகள் நடமாடும் பகுதிகளை ஒட்டி விரிவடைந்து வருகின்றன.

அதே நேரத்தில், மனிதர்களுக்கும் பெரிய உயிரினங்களான யானைகளுக்கும் இடையேயான மோதல்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

"விவசாய நிலங்கள் விரிவடைவதும், மரங்கள் வெட்டப்படுவதும், நகரமயமாக்கலும், யானைகள் போன்ற அதிக நிலப்பரப்பு தேவைப்படும் விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிப் போவதும், யானைகளை உணவு மற்றும் தண்ணீருக்காக மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தூண்டி வருகிறது," என்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த யானை பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல் குறித்த ஆலோசகரான கிரேட்டா பிரான்செஸ்கா ஐயோரி கூறுகிறார்.

"யானைகள் இருக்கும் இடங்களிலெல்லாம், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் குறித்த தகவல்களும் வருகின்றன."

பிரிட்டனின் வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு சூழலியல் நிபுணர் கிரேம் ஷானன், இருபது ஆண்டுகளாக ஆப்பிரிக்க யானைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்தப் பிரச்னைக்குரிய பகுதிகளில் வாழ தள்ளப்படுகிற மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள் தான்.

"அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விவசாயம் வாழ்க்கைக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது." என்கிறார் கிரேம் ஷானன்.

ஆனால் நீரும், ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களும் யானைகளை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால் அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் வர நேரிடுகிறது.

மக்கள் தங்கள் நிலங்களை பராமரிக்க பல மாதங்கள் உழைக்கிறார்கள்.

"பயிர்களை நட்டுவிட்டு, அவை காய்க்கத் தொடங்கும் தருணத்தில் யானைகள் வந்துவிடுகின்றன," என்று மனிதர்களுக்கும்-யானைகளுக்குமான மோதல் அதிகமாக இருக்கும் கென்யாவின் முவாகோமா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இம்மானுவேல் முவாம்பா தெரிவிக்கிறார்.

"யானைகள் வந்தால் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்" என்கிறார்.

"எங்களில் சிலர் வாழ்வாதாரத்துக்காக இந்தப் பயிர்களை நம்பி இருக்கிறோம், அது ஒரே இரவில் அழிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்" என்றும் முவாம்பா கூறுகிறார்.

அது மட்டுமின்றி, இத்தகைய மோதல்கள் யானைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம்.

பசியில் இருக்கும் 7 டன் எடையுள்ள யானைகள் பயிர்களுக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம்.

அதே நேரத்தில், உணவுக்காக வந்த யானைகள் மனிதர்களால் கொல்லப்படும் அபாயமும் உள்ளது.

இந்த மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகளும் உள்ளூர் மக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளைச் சோதித்து வருகின்றனர்.

மின்சார வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள், சூரிய ஆற்றலில் விளங்கும் விளக்குகள், மிளகாய் பூசப்பட்ட செங்கற்கள், கடும் நாற்றமுள்ள யானை விரட்டிகள் மற்றும் யானைகளை பயமுறுத்த சத்தம் எழுப்புதல் போன்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறைக்கும் அதன் தனிப்பட்ட நன்மைகளும், சில குறைகளும் உள்ளன.

ஆனால் யானைகளை விரட்டுவதற்குத் தேனீக்களை பயன்படுத்துவது, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான முறையாக உருவெடுத்துள்ளது.

இது யானைகளை வெற்றிகரமாகத் தடுப்பதுடன், விவசாயிகளுக்கு பல விதமான கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

2000 களின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருமான ஃபிரிட்ஸ் வோல்ராத் மற்றும் அந்த அமைப்பின் நிறுவனர் இயன் டக்ளஸ்-ஹாமில்டன், கென்யாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து ஒரு நாட்டுப்புறக் கதையை கேட்ட போது இந்த யோசனை பிறந்தது.

சில பகுதிகளில் மரங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அவற்றில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன என்று சொல்லப்பட்ட அந்தக் கதை இருவரையும் ஆச்சரியப்படுத்தியது.

யானை - மனித மோதல், தேன் கூடு வேலி

பட மூலாதாரம்,SAVE THE ELEPHANTS

படக்குறிப்பு, யானைகளை பயிர்களில் இருந்து விலக்கி வைப்பதற்கு தேனீக்கள் சிறந்த வழி என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன ( படம்: சேவ் த எலிபன்ட்ஸ் தொண்டு நிறுவனம்)

இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட வோல்ராத் மற்றும் டக்ளஸ்-ஹாமில்டன், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பின் இணை இயக்குநர் லூசி கிங்குடன் இணைந்து, தேனீக்கள் உண்மையில் யானைகளை பயமுறுத்தக் கூடியவை தானா என்பதை அறிவியல் முறையில் ஆராயத் தொடங்கினர்.

2007-க்குள், அவர்கள் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். யானைகள் காட்டு ஆப்பிரிக்க தேனீக்கள் இருக்கும் மரங்களுக்கு அருகே செல்லாது என்றும், கூடவே "அந்த இடத்தை தவிர்க்கச் சொல்லி, ஒன்றுக்கொன்று எச்சரிக்கையையும் அனுப்புகின்றன" என்றும்,

"தேனீக்கள் கொட்டும் தன்மையுடையவை என்பதையும் யானைகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. அதை அவை ஒருபோதும் மறக்காது" என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார் லூசி கிங்.

பசியுடன் வரும் யானைகளின் தாக்குதலிலிருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியும் வகையில் ஒரு புதிய முறையை லூசி கிங் உருவாக்கினார்.

அதாவது, தேன் கூடுகளை இணைத்துக் கட்டிய ஒரு வேலியை உருவாக்கினார்.

இந்த யோசனையை அவர் 2008ஆம் ஆண்டு கென்யாவின் லைக்கிபியா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாக பரிசோதித்தார்.

அந்தப் பகுதி, யானைகள் அடிக்கடி பயிர்களை அழிப்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.

அந்த வேலி பண்ணையைச் சுற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் (33 அடி) ஒரு தேன் கூடு இரு தூண்களுக்கு இடையில் வைக்கப்படுகின்றது.

தேன் மெழுகு மற்றும் லெமன் கிராஸ் எண்ணெய் போன்ற இயற்கையான வாசனைகள் மூலம் ஈர்க்கப்பட்ட ஆப்பிரிக்க தேனீக்கள், இந்த கூடுகளில் இயற்கையாகவே குடியேறி வாழத் தொடங்குகின்றன.

"ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பண்ணைக்கு 24 தேன் கூடுகள் தேவை," என்று கிங் விளக்குகிறார். ஆனால் அதில் பாதி கூடுகள் மட்டுமே உண்மையானவை.

மீதமுள்ள 12 கூடுகள் வெறும் போலிகள்.

இவை மஞ்சள் நிற பலகையால் செய்யப்பட்டவை.

இதனால் யானைகளுக்கு, அந்த இடத்தில் உண்மையில் அதிகமான தேன் கூடுகள் இருக்கின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது.

இது ஒரே நேரத்தில் செலவுகளை குறைப்பதுடன், உண்மையான தேனீக்களுக்கு கூடுதல் இடத்தையும் வழங்குகின்றன.

"யானைகள் இருட்டில் அவற்றை நெருங்கும் போது, தேனீக்களின் வாசனையும் தேனின் மணமும் உடனே அவற்றுக்குத் தெரியும். அதே சமயம் நிறைய மஞ்சள் பெட்டிகள் எங்கும் காணப்படும். எது உண்மையானது, எது போலியானது என்று யானைகளுக்கு புரியாது. அதனால் இது ஒரு மாயை போன்று தோன்றுகிறது. ஆனால் இந்த முறை நன்றாக வேலை செய்கிறது," என்கிறார் கிங்.

யானைகளைப் பயிர்களிலிருந்து தடுத்து உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கு மட்டும் அல்லாமல், தேனீக்களுக்காக அமைக்கப்படும் இந்த வேலிகள் அவற்றைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றன.

முதலில், தேன் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

"ஒரு விவசாயியிடம் தேனும், பயிர்களும் இருந்தால், அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கும்," என்கிறார் முவாம்பா.

அவர் தற்போது 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பில் 'தேன் கூடு வேலி' திட்டத்தின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முதன்முதலில் அவரது கிராமத்தில் தான் இந்த வேலிகள் பரிசோதிக்கப்பட்டன.

இப்போது அவர் மற்ற விவசாயிகளுக்கு இந்த வேலிகளை எப்படிப் பொருத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைக் கற்றுத் தருகிறார்.

யானை - மனித மோதல், தேன் கூடு வேலி

பட மூலாதாரம்,JANE WYNYARD/ SAVE THE ELEPHANTS

படக்குறிப்பு, யானைகளைத் தடுப்பதுடன், தேன் கூடுகளால் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் தேன் விற்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற உதவும் (படம்: ஜேன் வைன்யார்ட்/ சேவ் த எலிபன்ட்ஸ் அமைப்பு)

"பெண்கள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கிங்.

பொதுவாக, விவசாய வேலைகளில் அதிகம் ஈடுபடுவது பெண்களே. அவர்கள் தான் யானைகளை விரட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது, இதனால் காயம் அடைவதற்கான அபாயமும் அவர்களுக்கு அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாள அவர்களை அனுமதிக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, வீட்டுப் பொறுப்புகள், கல்வியைத் தொடர்வது அல்லது மற்ற விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவது ஆகியவை அவர்களுக்கு சாத்தியமாகிறது," எனக் கூறுகிறார் கிங்.

பல ஆண்டுகளாக, கிங் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், கென்யாவில் தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் எந்தளவு பயனுள்ளதாக உள்ளன என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

இன்று, இந்த வேலிகள் தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல் நாள்தோறும் நிகழும் பிரச்னையாக இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்திலும், இந்த முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

2024ஆம் ஆண்டு, கிங் மற்றும் அவரது குழுவினர் ஒரு நீண்டகால ஆய்வின் முடிவை வெளியிட்டனர். இதில், இம்மானுவேல் முவாம்பா வசிக்கும் முவாம்பிட்டி மற்றும் முவாகோமா எனும் தெற்கு கென்யாவின் இரண்டு சிறிய கிராமங்களில், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளின் செயல்திறன் ஆராயப்பட்டது.

இந்த சமூகங்கள் முட்டைக்கோஸ் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் உற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ளவை.

இவை சாவோ தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் பல யானைகளை ஈர்க்கின்றன.

கென்யாவில் உள்ள சாவோ தேசிய பூங்கா, அதிக அளவிலான யானைகளை, அதாவது சுமார் 15,000 யானைகளை கொண்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினர்.

அவர்கள் தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளை அமைத்து, அதற்கான தகவல்களைத் திரட்டினார்கள்.

ஆய்வில், கிட்டத்தட்ட 4,000 யானைகள் இந்த வேலிகளை அணுகியதில், அதில் 75 சதவீத யானைகள் வேலியை மையமாகக் கொண்டு விரட்டப்பட்டன என்று கண்டறியப்பட்டது.

மேலும், விவசாயிகள் தேன் விற்பனை மூலம் 2,250 டாலர் (சுமார் 1,740 யூரோ) வருமானம் ஈட்டினர்.

யானை - மனித மோதல், தேன் கூடு வேலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கென்யாவின் தைடா டவென்டாவில் உள்ள தனது பண்ணையைச் சுற்றி தேன் கூடு வேலிக்கு அடுத்ததாக ஒரு மண்வெட்டியைப் பயன்படுத்தி தனது விவசாய நிலத்தை உழும் பெண்

"இது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன்," என்றும், "இந்த இயற்கையான முறையைப் பயன்படுத்தி, இந்த விலங்குகள் பண்ணைகளை நெருங்காமல் தடுக்கும் திறன் கிடைத்திருக்கிறது. இது ஒரு அருமையான யோசனை," என்றும் நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபடாத ஷானன் கூறுகிறார்.

இருப்பினும், இந்த ஆய்வு சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது என்பதையும் ஷானன் குறிப்பிடுகிறார்.

உதாரணமாக, பூக்கும் தாவரங்கள் இல்லாததால் வறட்சியான ஆண்டுகளில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

2018ஆம் ஆண்டு, முந்தைய வருட வறட்சியிலிருந்து தேனீக்கள் மீண்டு வருவதில் சிரமம் ஏற்பட்ட போது, அதிகமான யானைகள் கிராமங்களில் நுழைந்தன.

அப்போது அந்த வேலிகள் சுமார் 73 சதவீத யானைகளை மட்டுமே தடுப்பதில் வெற்றி கண்டன. "எந்த ஒரு முறையை அல்லது கருவியைப் போலவே, இதற்கும் சில வரம்புகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன," என்கிறார் ஷானன்.

தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளில், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் தான் கவலைப்படுவதாக கிங் கூறுகிறார்.

"முன்பு 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த வறட்சி ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட வறட்சிகள் ஏற்பட்டால், அது பெரிய சிக்கல் ஆகிவிடும். ஏனெனில் தேனீக்கள் சரியான நேரத்தில் மீண்டு வர முடியாது," என்கிறார் அவர்.

அதிகமான மழையும் தேனீக்களுக்கு மற்றொரு பிரச்னையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

" மரங்களிலும் புதர்களிலும் இருக்கும் பூக்களை, மழை கீழே தள்ளிவிடும். இதனால் தேனீக்கள் தேன் சேர்க்க பூக்கள் கிடைக்காது," என விளக்குகிறார் கிங்.

தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் சேர்த்து பிற பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, உலர்ந்த மிளகாய் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

"ஒரே ஒரு முறையில் தீர்வு கிடையாது," என்கிறார் கிங்.

ஆனால் பரந்த அளவில் சிந்தித்தால், இப்படியான உள்ளூர் தீர்வுகள் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை குறைக்க உதவினாலும், காலநிலை மாற்றம் மற்றும் நிலவியல் சிக்கல்கள் போன்றவற்றால் அவை ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்று ஐயோரி கூறுகிறார்.

இதன் விளைவாக, "மக்கள் இத்தகைய முயற்சிகளில் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

"எப்போதும் பலதரப்பட்ட அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானவை, அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது? மக்களின் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது? யானைகளும் மக்களும் எதிர்கொள்ளும் அழுத்தத்தை முறையாக எவ்வாறு குறைப்பது போன்றவை," என்று அவர் விளக்குகிறார்.

மேலும் "இவை பெரும்பாலும் மிகவும் சிக்கலான நடவடிக்கைகளாகவே அமையும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார் ஐயோரி .

தற்போது, தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் முவாம்பா மற்றும் பிற சமூகங்களுக்கு உதவுகின்றன. "நாங்கள் இரண்டு தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் தொடங்கினோம். இப்போது மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 700 தேன் கூடுகள் உள்ளன," என்கிறார் முவாம்பா.

"இது இப்போது சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயமாக உள்ளது" என்று கூறும் முவாம்பா, இப்போதெல்லாம், யானைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, "இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் யானைகள் பயிர்களைத் தாக்கியிருந்தன" என்பதை கூறும் முவாம்பா", ஆனால், இப்போது, மக்கள் எளிதில் அச்சமின்றி வாழ முடிகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz61443yz6yo