Aggregator

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

2 months 2 weeks ago
வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.

குட்டிக் கதைகள்.

2 months 2 weeks ago
திருவிழா கூட்டத்தில் இரண்டு நபர்கள் அவரவர் மனைவிகளை தொலைந்துவிட்டார்கள். அந்த இருவரும் அவர்களது மனைவிகளை தேடி அங்கும் இங்குமா தேடித் திரிந்தார்கள்.பிறகு.... அவர் : ஏங்க,உங்க மனைவியும் காணவில்லையா? இவர் : ஆமாங்க.அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என் மணைவி இன்னும் கிடைக்கல.உங்க மனைவி கிடச்சுட்டாங்களா? அவர் : அட இன்னும் கிடைக்கலங்க. நானும் தேடிட்டு தான் இருக்கேன். ஆமா உங்க மனைவி எப்படி இருப்பாங்க? இவர் : என் மனைவி பாக்குறதுக்கு நயன்தாரா சாயல்ல இருப்பாங்க.அவ சிரிச்சா கண்ணத்துல அழகா குழி விழும்.அதுக்கு பக்கத்துலயே சின்ன மச்சம் ஒன்னு இருக்கும்.ரோஸ் கலர் சாரி கட்டியிருப்பா.பாக்குறதுக்கு சின்ன பொண்ணு மாதிரியே இருப்பாங்க. சரிங்க உங்க மணைவி எப்படி இருப்பாங்கனு சொல்லுங்க? அவர் : அத விடுங்க. அவ கிடக்குறா கழுதை. வாங்க முதல்ல உங்க மனைவியே தேடுவோம்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 2 weeks ago
தமிழகம் தலை குனிந்த தருணம். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள். கட்டெறும்பு

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 2 weeks ago
இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க. Narendira Kumar Subramaniam

தெலுங்கானா இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

2 months 2 weeks ago
தெலுங்கானா வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு! தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து ஆலையில் நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பாஷாமிலாராமில் அமைந்துள்ள மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் வெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டார். நேற்று காலை 8:15 மணி முதல் 9:35 மணி வரை அணு உலைக்குள் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு தொழிற்சாலை கொட்டகையை தரைமட்டமாக்கியது, தொழிலாளர்கள் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசியது, மேலும் பெரிய அளவிலான அவசர நடவடிக்கையை தூண்டியது. வெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. சம்பவம் குறத்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அறிவித்தார். https://athavannews.com/2025/1437728

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்......................................... அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............................................

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
அவுஸ்ரேலியா அணி பெரிய‌ ம‌லை , வெஸ்சின்டீஸ் அணி காற்றும் போன‌ ப‌லூன் ஹா ஹா........................அடுத்த‌ மைச்சையும் அவுஸ்ரேலியா தான் வெல்லும் , ம‌ழை வ‌ராட்டி அவுஸ்ரேலியா அணி சிம்பிலா வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுவின‌ம்...............................

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
ஒரு நாள் தொட‌ரையும் இல‌ங்கை வென்று விடும் , வ‌ங்கிளாதேஸ் தொட‌ர்ந்து அன்மைக் கால‌மாக‌ ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் ப‌டு தோல்வி அடையின‌ம்.................. இலங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌ல‌மான‌ அணி...............................

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

2 months 2 weeks ago
குஜ‌ராத் அணியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு , வெங்க‌ளூர் அணிக்காக‌ இந்த‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா ப‌ந்து போட்டு சிற‌ந்த‌ வீர‌ராக‌ தெரிந்தார் , இடையில் இப்ப‌டி பிர‌ச்ச‌னை.............................கோலிய‌ பார்த்தாவ‌து குடும்ப‌ வாழ்க்கை எப்ப‌டி வாழ‌னும் என இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் தெரிந்து வைத்து இருக்குன‌ம்........................வெங்க‌ங்க‌ளூர் அணி இந்த‌ முறை கோப்பை தூக்கி விட்ட‌து தானே விளையாடின‌ வீர‌ர்க‌ளுக்கு ஏல‌த்தில் எடுத்த‌ காசை விட‌ கூட‌ கொடுத்து இருக்க‌ கூடும்.......................... இப்ப‌ தான் கிரிக்கேட்டில் மெதுவாய் வ‌ள‌ருகிறார் அதுக்கிடையில் இந்த‌ பிர‌ச்ச‌னை.......................................

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 2 weeks ago
பொருளாதார தடைகள் அரசுகளுக்கெதிராக என கூறப்பட்டாலும் அதன் இலக்கு அங்கு வாழும் மக்கள்தான், அரசுகள் பாதிப்படையமாட்டாது (எமது பிராந்தியத்திலும் கடந்த காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை அனுபவித்து வந்தவர்கள் என்பதால் இது ஒன்றும் எமக்கு புதிய விடயமல்ல), அவ்வாறிருக்கையில் ஏன் இவ்வாறான பொருளாதார தடைகள் மக்கள் மீது போடுகிறார்கள்? அதனை எவ்வாறு உலக சமூகத்தின் கண்முன்னே நடத்துகிறார்கள்? The Sanctions Paradox Invisible war இந்த புத்தகங்கள் இது தொடர்பான மேலதிக தரவுகளை தரும், ஆர்வமிருந்தால் வாங்கி படிக்கலாம்.

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

2 months 2 weeks ago
இந்தப்பிக்கு கூட்டத்திற்கு ஒரு தலைமை இருப்பதாக தெரியவில்லை. ஒழுக்கம் இல்லை, பொறுப்புகூறல் இல்லை, கேள்வி இல்லை, கோட்பாடு இல்லை, தண்டனை இல்லை, அதது தன் வயிற்றுக்கு இனவாதம் பேசுது, நிலம் பிடிக்குது, இதற்கு இல்லறத்திலேயே இருந்திருக்கலாம்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 2 weeks ago
பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள். இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

2 months 2 weeks ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது.

விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1437696