Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
இந்த கறுப்பு ஆடுகளத்தில் (மழை வரும் என குறிப்பிட்டுள்ளார்கள் பிட்ச் எவ்வகையானது எனக்கூறவில்லை ஆனால் இலங்கை அணி கறுப்பு ஆடுகளத்தில் விளையாட விரும்பலாம் எனும் அடிப்படையில்) எவ்வாறு இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்யலாம் என கருதுகிறேன். பந்து வீச்சு லைன் 4 அல்லது 5 விக்கெட் லெந்த் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லர் லெந்த். பவர் பிளேயில் எல்லைக்கோட்டில் எக்ராகவர் மற்றும் பொயின்ரில் களத்தடுப்பு உள்ளக வட்டத்தில் சிலிப், சோர்ட் தேர்ட், சோர்ட் பைன் லெக் (விக்கெட் கீப்பருக்கு இரு பக்கமான) சோர்ட் மிட் விக்கெட், மிட் ஒன், மிட் ஓப் பவர் பிளே பின்னர் எல்லை கோட்டு களத்தடுப்பில் மிட்விக்கெட், ஸ்குயார் லெக், எக்ரா கவர், பொயின்ர் (அனைத்தும் டீப்) உள்ளக வட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இலங்கை அணி சிலிப் பயன்படுத்தாது என கருதுகிறேன் 10 ஓவருக்கு மேல், இறுதி 10 ஓவருக்கு லோங் ஓப் இல் மேலதிக களத்தடுப்பு போடக்கூடும் என கருதுகிறேன். கள உறவுகளே ஆட்ட சுவாரசியத்திற்காக குறித்த விடயத்தினை பதிவிட்டுள்ளேன் இவ்வாறுதான் நிகழும் என கூறமுடியாது, உங்கள் களத்தடுப்புகளையும் சுவாரசியத்திற்காக பதியுங்கள்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 2 days ago
பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
ம‌ழையால் த‌ப்பின‌ அணிக‌ள் எது என்று பார்த்தால் முத‌லாவ‌து இங்லாந் , இர‌ண்டாவ‌து நியுசிலாந் கொழும்பு மைதான‌த்தில் 250ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதி வாத்தி அண்ணா , இர‌ண்டு நாளுக்கு முத‌ல் இல‌ங்கை ம‌க‌ளிர் 258ர‌ன்ஸ் அடிச்சு முடிக்க‌ உட‌ன‌ ம‌ழை பெய்த‌தால் விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்ட‌து😁..........................

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

3 weeks 2 days ago
இவ்வளவு பாரிய போதை பொருள்கள் திடிர் திடிர் என்று கைபற்ற அதை உபயோகித்த நபர்களுக்கு மாற்றீடு தேவையே அதை எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள் ? குறைந்த பட்ச சாதாரண வியாதிகளுக்கு உரிய மருந்தே தட்டுபாடான நாட்டில் போதை புனர்வாழ்வு மையங்கள் எப்படி நிறுவ போகிறார்கள் ?அப்படியான புனர் வாழ்வு மையங்கள் இல்லாமல் போகும் பட்சம் மிக மிக கொடூரமாக சட்டம் ஒழுங்கு பாதிக்க படும் என்பதை மிக இலகுவாக மறந்து விடுகிறார்கள் . இறுதி யுத்தத்தில் எப்படியாவது தமிழரை அழித்து தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை தமிழர் அழியணும் எனும் இன கோதாவில் ராஜபக்சா குடும்பத்தால் அறிமுகபடுத்தபட்ட விளைவுகளுக்கு சிங்களம் பொதி சுமக்கிறது .

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
இன்றைய போட்டி இலங்கையில் நடைபெறும் என கருதுகிறேன் (தெரியவில்லை), இலங்கை அணி தனது சுழல் பந்து வீச்சிலே நம்பிக்கை வைத்து களமிறங்கும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட்டு திட்டங்களுடன் வருவார்கள். சிகப்பு நிற ஆடுகளத்தினை பெரிதும் இலங்கை தெரிவு செய்யாது என கருதுகிறேன், ஆனாலும் சிகப்பு நிற ஆடுகளமும் சரியான திட்டமிடலுடன் விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடியினை குடுக்கமுடியும். இலங்கை அணி கறுப்புநிற ஆடுகளத்தினையே எடுத்து வரும் என கருதுகிறேன், இதில் சுவாரசியமாக இருக்கும் விடயம் இலங்கை அணி எவ்வாறு களத்தடுப்பினை தேர்வு செய்கிறதென, ஏனெனில் கறுப்பு ஆடுகளத்தில் சுவீப் அடிகள் சரியாக வராது ஆனால் களத்தடுப்பில் மட்டையாளர்களை அதனை தூண்டுமாறு களத்தடுப்பினை தெரிவு செய்வார்கள், இரண்டாவது பந்தின் லைன் மற்றும் லெந்த். இலங்கை அணி மிகவும் பாதுகாப்பான களத்தடுப்பினை பாவிக்கிறார்கள் இது போட்டியினை பார்ப்பவர்களுக்கும் ஆர்வத்தினை குறைத்து விடும். நேற்றைய போட்டியில் அவுஸ் அணி சுழல் பந்து வீச்சிற்கு பந்தினை விக்கெட் லைனில் வீசி மிடோன் மிடோப் உள்ளே வைத்து சுவீப்பினை இல்லாமல் ஆக்கும் முறையில் களத்தடுப்பினை பிரயோகித்து துடுப்பாட்டக்காரை தூக்கி அடிக்க தூண்டும் ஆக்கிரோசமான களத்தடுப்பினை சிகப்பு ஆடுகளத்தில் பயன்படுத்தினார்கள். போட்டியினை வெல்லும் எண்ணத்துடன் விளையாட வேண்டும், பங்களாதேச அணி கூட அதனை சரியாக கையாண்டார்கள், அதனை பார்க்கும் போது இலங்கை அணி பங்களாதேச அணியுடன் போட்டி மிக கடுமையாக இலங்கைக்கு இருக்கலாம்.

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

3 weeks 2 days ago
தெற்கு கடலில் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு! இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1450562

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

3 weeks 2 days ago
வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை! இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும். இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது. இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1450559

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

3 weeks 2 days ago

New-Project-205.jpg?resize=750%2C375&ssl

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து.

இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 

சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும்.

இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது.

இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1450559

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

3 weeks 2 days ago
தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை! இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர். இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர். அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2025/1450553

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

3 weeks 2 days ago

New-Project-203.jpg?resize=750%2C375&ssl

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர்.

அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2025/1450553

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

3 weeks 2 days ago
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு! உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார். அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார். உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது. எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும். இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது. அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது. திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1450565

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

3 weeks 2 days ago

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார்.

அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார்.

உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது.

எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.

எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும்.

இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது.

இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது.

திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். 

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450565

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

3 weeks 2 days ago
பின்னிருக்கையில் 145 சென்ரிமீற்றர் உயரத்திற்கு கீழிருக்கும் குழந்தைகள் குழந்தைகள் ஆசனம் மற்றும் பூஸ்ரர் ஆசனம் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் முன்னிருக்கையின் கீழிருகும் ஆழி இணைப்பு சீற்றை முன் பின்னாக நகர்த்தும் போது காரின் கணனியினுடனான தொடர்பினை இழந்துவிடும் பொதுவாக அதற்கான விளக்கு எரிய வேண்டும் சில சமயம் அவை காட்டுவதில்லை. ஆனால் OBD 2 அதற்கான B174800 பிழை குறிகாட்டும், முற்று முழுதான வாகன அறிகுறியிலும் தங்கியிருக்கமுடியாது என கருதுகிறேன், இந்த கருவி ஆக குறைந்த விலையில் அமேசன் $40 வாங்கலாம் (மலிவான). இணைப்பினை கழற்றி மீண்டும் இணைத்தால் போதும், அதற்கு முன்னர் காரின் மின்சேமிப்புக்கலத்தின் எதிர் முனையினை அகற்றவேண்டும் (இந்த செயல் அனைத்து காரின் இயங்கு நிலையினையும் ஆரம்ப நிலைக்கு மாற்றிவிடும் அதனால் காரின் காற்று விகிதம் மாறுபடும் சில காலத்திற்கு பின் சரியாகிவிடும் அல்லது அந்த கருவியிலேயே (OBD 2 ) அதனை சரி செய்யும் பொறிமுறை உண்டு) கார் நீண்ட பயணத்திற்கு முன்னரான சரிபார்ப்பு போன்றவற்றிற்கும் உதவும். நான் மெக்கானிக் இல்லை எனவே எனது கருத்து தவறாக இருக்கலாம், இது ஒரு ஆலோசனையும் இல்லை எனது அனுபவம். இணைப்பு சரி செய்தபின் அந்த கருவியிலேயே ஒருவர் உடகார்ந்து , வெறுமையாக சீற்றினை விட்டு காரின் கணனி சரியாக எடையினை உணர்கிறதா எனவும் பார்க்கமுடியும் (சரியாக இணைப்பு வேலை செய்கிறதா என)

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
கீலி ஒரு குறும்புக்காரர் என கேள்விப்பட்டுள்ளேன், அவர் பல தடவை இலங்கை அணி முன்னால் தலைவர் ரணதுங்கவுடன் முரண்பட்டுள்ளாராம், ஒரு முறை பந்து வீச்சாளரிடம் ரண்துங்கவின் கால்களுக்கு ஒரு மார்ஸ் (இனிப்பு) போடு இவன் எடுத்துவிடுவான் எனவும், இன்னொரு முறை காயம் காரணமாக? ரணதுங்க ஓட முடியாது என கூறி ஜெய சூரியாவினை ஓட்டத்திற்கு அழைத்த போது அவரை கேவலப்படுத்தியதால் ஏதோ குளறுபடிகள் ஏற்பட்டதாக நினைவுள்ளது (இந்த விடயங்கள் பற்றி சரியாக தெரியவில்லை). தென்னாபிரிக்க அணி விளையாடுவதனை பார்க்கவில்லை, ஆனால் இலங்கை அணி விளையாடுவதனை பார்க்கும் போது இலங்கை அணி நிச்சயமாக தோற்கும் அணியாக தெரிகிறது, அதனை விட எந்த அணியினை தெரிவு செய்தேன் என்பது கூட தெரியவில்லை, இன்றைய போட்டியினை நிச்சயமாக பார்க்கபோவதில்லை எனும் முடிவுடன் உள்ளேன்.

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

3 weeks 2 days ago
ம்ம்ம்… இந்தியா அல்லவா…. அப்படித்தான் இருக்கும். சடுதியாக பிரேக் போடுவது என்பது வாகனம் ஓட்டும் போது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதுதான் டிரைவிங் டெஸ்டில் இதையும் சோதிப்பார்கள். யூகே சட்டப்படி ஒரு வாகனத்தை பின்னால் இருந்து அடித்தால் அடித்தவர் மீதுதான் பிழை. மிக, மிக அரிதாக சிசிடிவி போன்ற சாட்சிகள் இருந்தால் மட்டுமே அடிவாங்கியவர் மீது குற்றம் காணப்படும். அப்போது கூட 50:50 என்றே முடியும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks 2 days ago
ஜெனீவாவின் இயலாமை. ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 weeks 2 days ago
என்ன போதைபொருள் கடத்தல்மன்னர்கள் மட்டுமா தேசிய ந்ல்லிணக்கத்துடன் செய்ல்பட வேணும் என்ற சட்டம் இருக்கா? மார்று கொள்ள்கை மாணிக்கங்கள் நாங்களும் தேசிய நல்லிணக்கத்துடன் செயல் பட்டு தீவை வளர்ர்சி பாதையில் நடத்துவோமல்ல...

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா

3 weeks 2 days ago
இனவாதம்,மத வாதம்,ஐஸ்வாதம்,கஞ்ஞாவாதம்,பாதால உலகவாதம்,கடத்தல் வாதம்,கப்ப வாதம் போன்றவை இல்லாத படை வீரர்களாக வாங்கோ என்று சொல்லுறார்