Aggregator
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.
ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.
நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.
அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் வெளியிடும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தது தெரியவந்துள்ளது.
அந்தப் பதிவுகளைப் பார்க்கும் மக்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்திய நிலையில், மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?
இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது
கட்டுரை தகவல்
ஆனந்த் மணி திரிபாதி
பிபிசி செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பொட்டாசியம் என்ற உடனேயே, பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு வாழைப்பழத்தால் மட்டும் உங்கள் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்க முடியாது.
பொட்டாசியம் என்றால் என்ன?
உடல் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான முக்கியமான கனிமம் பொட்டாசியம். இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சிறுநீரகங்கள் அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, செல்கள் சரியாக செயல்பட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பொட்டாசியம் என்பது நுண்ணூட்டச்சத்து மிக்க கனிமம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் இது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது"என்று எஸ்ஏபி டயட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மூத்த ஆலோசகர் உணவியல் நிபுணர் டாக்டர் அதிதி சர்மா கூறுகிறார்.
பொட்டாசியம் உடலில் ஒரு எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது.
தசை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துகிறது.
நரம்புகள் சமிக்ஞைகளை சரியாக அனுப்ப உதவுகிறது.
"பொட்டாசியம் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இது நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு எலக்ட்ரோலைட். இது இதயம், மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு தசையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது" என்று எய்ம்ஸின் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.
தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். இது தசைகள் சுருங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மேலும் , நமது உடலின் pH ஐ சமப்படுத்தவும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றவும் உதவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொட்டாசியம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
பொட்டாசியத்தின் தேவை
தினமும் சராசரியாக 3,500 மில்லிகிராம் பொட்டாசியத்தை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.
உணவில் இருந்து பொட்டாசியம் கிடைக்குமா?
ஆம், உணவில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் பொட்டாசியம் எளிதில் கிடைக்கும்.
ஆனால் பிரச்னை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் கூட பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை.
அவர்களின் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகின்றன.
பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 10 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் தினசரி பொட்டாசியம் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என அறியப்படுகிறது.
பொட்டாசியம் குறைபாட்டின் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக, பொட்டாசியம் குறைபாடு உணவுமுறையால் மட்டும் ஏற்படுவதில்லை.
சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக ஏற்படுகிறது.
பொட்டாசியம் குறைபாடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
"பொட்டாசியம் குறைபாடு தசை பிடிப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவே இருக்கும். இது மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இது ரத்த அழுத்தத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.
பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன ?
பொதுவாக, சிறுநீரகங்கள் சிறுநீரின் வழியாக அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றும், ஆனால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை சரியாக நடக்காது.
அது போன்ற சூழ்நிலையில், உடலில் பொட்டாசியம் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு சீரற்றதாகி, இதயம் செயலிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
இதனால் தான், சிறுநீரக நோயாளிகள் பெரும்பாலும் பொட்டாசியம் குறைந்த உணவை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொட்டாசியம் குறைபாடு, இதயம், நரம்புகள் மற்றும் தசைகளைப் பாதிக்கிறது, ஆனால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதும் ஆபத்தானது என்று விளக்குகிறார் மருத்துவர் அதிதி சர்மா.
பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் இதயம் செயலிழக்கலாம். எனவே, அதை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது, அதே நேரத்தில் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்குகிறது.
வாழைப்பழங்கள் பொட்டாசியத்தை வழங்குகின்றன, ஆனால் அவற்றை மிகச் சிறந்த அல்லது அதிக அளவில் பொட்டாசியம் தரும் உணவு என வகைப்படுத்த முடியாது.
ஒரு வாழைப்பழம், ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் சுமார் 10% மட்டுமே வழங்கும். ஆனால் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்கும் திறன் கொண்டது.
அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்கள்
உலர்ந்த பழங்கள்
பச்சை இலை காய்கறிகள்
நட்ஸ் மற்றும் விதைகள்
பால் மற்றும் தயிர்
பருப்பு வகைகள்
மீன்
பொட்டாசியம் சமநிலையை பராமரிக்க, முடிந்தவரை அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால்.
பொட்டாசியம் தேங்காய் நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இது பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகிறது.
சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம்
பெரும்பாலான மக்களுக்கு, 3,700 மி.கி அல்லது அதற்கும் குறைவான பொட்டாசியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
ஆனால் வயதானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை (உப்பு மாற்றுகள் உட்பட) எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால், அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான பொட்டாசியத்தை எளிதில் அகற்ற முடியாது.
மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்காமல் அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அதிதி சர்மா அறிவுறுத்துகிறார்.
ஒருவர் தினமும் பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறது.
எனவே கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டிய அவசியமில்லை.
பானங்களில் பொட்டாசியம் இருக்க வேண்டுமா ?

படக்குறிப்பு, ஒரு கிளாஸ் தக்காளி சாற்றில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.
வியர்வையின் மூலம் சிறிதளவு பொட்டாசியம் வெளியேறுகிறது. எனவே உடற்பயிற்சிக்குப் பிறகு அதை நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.
தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.
தோல் நீக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் ஒரு நல்ல வழி. அவை பொட்டாசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை மீட்டெடுக்கின்றன.
பொட்டாசியத்தை அதிகரிக்க எளிதான வழிகள்
தினமும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் (எ.கா., காலை உணவில் ஒரு பழம், மதிய உணவுடன் ஒரு பழம் மற்றும் ஒரு காய்கறி, இரவு உணவில் இரண்டு காய்கறிகள்).
தினமும் மூன்று பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (பாலுடன் காபி, சாலட்டில் சீஸ் அல்லது தயிர்)
வாரம் ஒரு முறை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள்.
சிற்றுண்டிகளுக்கு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மதிய உணவு அல்லது இரவு உணவோடு சாலட் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
'புளூடூத்திங்' பழக்கத்தால் பரவும் எச்.ஐ.வி. தொற்று!
தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
மலேசியாவில் புதிய வகை கொரோனா, மர்ம காய்ச்சல் : 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
மலேசியாவில் புதிய வகை கொரோனா, மர்ம காய்ச்சல் : 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
Published By: Digital Desk 3
16 Oct, 2025 | 11:46 AM
![]()
மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.
பாடசாலைகளில் இந்தக் காய்ச்சல் பரவல், ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 4 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் இறுதி பரீட்சை எழுத உள்ள நிலையில், இந்த திடீர் தொற்று அதிகரிப்பு மாணவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார்.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு
Published By: Vishnu
17 Oct, 2025 | 03:52 AM
![]()
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.
ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.
தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
16 Oct, 2025 | 03:32 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை.
அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது.இறுதியில் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளானார்கள்.
இந்த அரசாங்கமும் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.அந்த குற்றச்சாட்;டுக்களை சட்டத்தின் முன் நிரூபித்து உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. நாங்கள் எந்தத் தேர்தல்களுக்கும் தயார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தினார்.ஆகவே தேர்தலை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை என்றார்.
'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?
'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook
கட்டுரை தகவல்
சிராஜ்
பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல் இல்லை'. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?" எனக் கேட்டார்.
அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, "நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் 'ஹீரோ மெட்டீரியல்' என்பதை நீங்கள் சொல்ல முடியாது. 'ஹீரோவாக' இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை" என்றார்.
இது குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "ஒல்லியாக, கருப்பாக இருக்கிறேன் போன்ற உருவக்கேலிகளை சிறு வயதிலிருந்தே கேட்டுள்ளேன். அவை பழகிவிட்டன. 'லவ் டுடே' திரைப்பட நிகழ்வுகளிலும் இதை எதிர்கொண்டேன். மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார்? உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு 'ஹீரோ மெட்டீரியல்' அல்லது 'கதாநாயக பிம்பம்' தேவையா, பிற இந்திய திரைப்படத் துறைகளில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
தியாகராஜ பாகவதர் மற்றும் பியூ சின்னப்பா

பட மூலாதாரம், @NFAIOfficial
படக்குறிப்பு, எம்.கே. தியாகராஜ பாகவதர்
"தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என விவரிக்கப்படும் தியாகராஜ பாகவதராக இருக்கட்டும் அல்லது பிரபல நடிகர் பியூ சின்னப்பாவாக இருக்கட்டும், இருவருமே அவர்களது பாடும் திறனால் பிரபலமானவர்கள். அப்போது இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற விஷயமே இல்லை" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.
பாம்பின் கண்- தமிழ் சினிமா ஓர் அறிமுகம், திரையில் விரியும் சமூகம், சித்திரம் பேசுதடி போன்ற தமிழ் சினிமா குறித்த நூல்களை இவர் எழுதியுள்ளார்.
"இந்தி சினிமா மற்றும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் தொடக்கம் முதலே ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பம் இருந்தது. காலப்போக்கில் அது தமிழ் சினிமாவிலும் பரவியது, குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில். ஹீரோ என்பவர் அழகாக, கட்டுமஸ்தாக இருக்க வேண்டும், படத்தின் இறுதிவரை மரணிக்கவே கூடாது, பெண்கள் பின்னால் போகக்கூடாது, பெண்கள் தான் அவர் பின்னால் வர வேண்டும் என எழுதப்படாத விதிகள். இன்றுவரை எம்ஜிஆரை நினைவுகூறுபவர்கள் அவரது 'அழகைப்' பற்றி தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்" என்கிறார் தியடோர் பாஸ்கர்.
இதே கருத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜா. தீபா, "எம்ஜிஆருக்குப் பிறகு 'ஒரு ஹீரோ' என்றாலே அழகாக, குறிப்பாக 'வெள்ளை தோலுடன்' இருக்க வேண்டுமென்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவானது. சிவாஜி சில திரைப்படங்களில் அதை உடைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் ரஜினியின் வருகை ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தது." என்கிறார்.
சிவாஜியின் 'ஹீரோ மெட்டீரியல்' அல்லாத வித்தியாசமான முயற்சிகளுக்கு சிறந்த உதாரணம், 1954இல் வெளியான 'அந்த நாள்' எனும் திரைப்படம். அதில் படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவாஜியின் கதாபாத்திரம் (ராஜன்) இறந்துவிடும். யார் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் கதை.

பட மூலாதாரம், Dwarakish
படக்குறிப்பு, 1984இல் ரஜினி நாயகனாக நடித்து இந்தியில் வெளியான 'கங்வா' திரைப்படம்.
இருப்பினும் சிவாஜியைப் போல அல்லாமல், ரஜினி தொடக்கத்தில் சில திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகன், வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த பின்பே 'ஹீரோவாக' வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் ஜா. தீபா, "உருவத்தைத் தாண்டி தனக்கான திறமையை சில 'கதாபாத்திரங்களில்' நிரூபித்த பின் தான் ரஜினியால் அந்தக் கேலிகளை கடந்துவர முடிந்தது." என்கிறார்.
ஆனால், தமிழில் ஒரு கதாநாயகனாக பிரபலமான பின்பும் கூட, 1980களில் இந்தியில் அறிமுகமானபோது, உருவக்கேலிகளை எதிர்கொண்டதாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார்.
"கங்வா (1984இல் வெளியான இந்தித் திரைப்படம், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் (1983) படத்தின் மறுஆக்கம்) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 'கருப்பு ஹீரோ' என காதுபடவே பேசுவார்கள். 'அந்தா கானுன்', 'கங்வா' திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகே, என்னை பாலிவுட்டில் 'ஹீரோவாக' மதிக்கத் தொடங்கினார்கள்" என்று ரஜினி பேசியிருப்பார்.
ரஜினி பாலிவுட்டில் எதிர்கொண்ட ஒன்றை தான், பிரதீப் தெலுங்கு சினிமாவில் எதிர்கொள்கிறார் எனக் கூறும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கர், "'அழகாக இல்லை' என்ற காரணத்திற்காக சினிமா ரசிகர்கள் எந்த நடிகரையும் ஒதுக்கியதில்லை. 'ஹீரோ மெட்டீரியல்' என்ற ஒன்று உருவாக சினிமாதுறையினரே காரணம். குறிப்பாக 'க்ளோஸ்-அப் ஷாட்களில்' (Close-up shot) ஹீரோ 'சிவப்பாக, அழகாக' இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்தார்கள்." என்கிறார்.
ஹைதராபாத்தில் 'டியூட்' பட நிகழ்வில் நடந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆந்திராவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜி.ஆர். மகரிஷி, "அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி நிச்சயம் கண்டத்திற்குரியது. தெலுங்கு மக்கள் மட்டுமல்ல எந்த மொழி மக்களும், உருவத்தை வைத்து ஒரு நடிகரை ஒதுக்க மாட்டார்கள். திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்" என்று கூறினார்.
பாலிவுட்டில் என்ன நிலை?

பட மூலாதாரம், Colour Yellow Productions
படக்குறிப்பு, ராஞ்சனா (2013) என்ற பாலிவுட் படத்தில், 'குந்தன் சங்கர்' என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருப்பார் தனுஷ்.
நடிகர் தனுஷ் தான் எதிர்கொண்ட உருவக்கேலிகள் குறித்து பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.
"நடிக்க வந்த புதிதில், முகத்திற்கு நேராகவே 'இவனெல்லாம் ஹீரோவா?' எனப் பேசுவார்கள். ஒருமுறை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, என் காருக்குள் சென்று சிறிது நேரம் அழுதேன். இன்றும் கூட உருவக்கேலிகள் என்னை துரத்துகின்றன" என்று ஒருமுறை தனுஷ் பேசியிருந்தார்.
2021இல் 'லிட்டில் திங்ஸ்' என்ற இந்தி மொழி இணையத் தொடரில், 'நீ என்றாவது உன் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? தனுஷ் போல இருக்கிறாய்' என ஒரு கதாபாத்திரம் தனது நண்பனைப் பார்த்து கேலி செய்யும். இந்தக் காட்சிக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
"பாலிவுட்டில் ஒரு ஹீரோ 'வெள்ளை தோலுடன்', கட்டுமஸ்தாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. திரைத்துறையினர் தான் அவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சத்யம் சிங்.
"தனுஷ் பாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஆனால் அவர் நடித்த பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என காட்டியுள்ளார்கள். அதேபோல, ரஜினிக்கும் லுங்கிக்கும் என்ன சம்மந்தம், ஆனால் 'லுங்கி டான்ஸ்' என்று ரஜினிக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பாடல் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் உள்ளது. மேலும், அதில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகாவின் உறவினர்களாக வரும் கதாபாத்திர சித்தரிப்புகளைப் பார்த்தால், நான் சொல்வது புரியும். எனவே இது நிறம், உருவம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் பாலிவுட் செல்ல வேண்டிய தூரம் அதிகம்." என்கிறார் சத்யம் சிங்.
மலையாள சினிமாவில் என்ன நிலை?

பட மூலாதாரம், Thriveni Productions
படக்குறிப்பு, 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) மலையாள திரைப்படத்தில் கலாபவன் மணி.
மலையாளத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஃபஹத் பாசில், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்று கூறப்படும் பிம்பத்தை உடைத்தவர்களே.
"பரத் கோபி, திலகன், முரளி, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவர்கள். முக்கியமாக கலாபவன் மணி பிற மொழிகளில் வில்லனாக பிரபலமடைந்தாலும், மலையாளத்தில் அவர் 'ஹீரோவாக' பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்" என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த துணை இயக்குநர் மற்றும் துணை நடிகர் தாரிக் கலாம்.
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காசி (2001), மலையாளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) என்ற திரைப்படத்தின் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகனாக நடித்தவர், கலாபவன் மணி.
"நிச்சயமாக இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற பிம்பம் மொத்தமாக உடைய வேண்டும். ஒரு நாயகன் என்பவன் 'அசகாய சூரன்' என்று திரைப்படங்களில் காட்டுவதால் தான், அதை நம்பி, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகின்றன. நடிகர்களை அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கத் தொடங்கினால், அனைத்தும் மாறும்" என்று கூறுகிறார் தியடோர் பாஸ்கர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு