Aggregator

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

3 weeks 2 days ago
அதிபர் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பு 'மிகவும் பயனுள்ளதாக' முடிந்தது Published By: Vishnu 17 Oct, 2025 | 03:28 AM உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியில் சந்திக்க உள்ளனர். இரு நாடுகளின் தலைவர்களும் வியாழக்கிழமை (16) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும், இந்த உடன்பாட்டை எட்டியதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அதன்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளது, மேலும் இரு அதிபர்களின் சந்திப்பின் திகதி அங்கு முடிவு செய்யப்படும். ஹங்கேரியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான புடாபெஸ்டில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை (17) வாஷிங்டன், டிசியில் அதிபர் டிரம்புடன் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227933

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
கொழும்பில் தொட‌ர்ந்து ம‌ழை பெய்வ‌தால் இர‌ண்டு விளையாட்டு ஏற்க்க‌ன‌வே கைவிட‌ப் ப‌ட்ட‌து.................இன்றையான் விளையாட்டும் ம‌ழையால் த‌டைப் ப‌ட‌க் கூடும் , இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி....................இந்த‌ உல‌க‌ கோப்பையை டுபாயில் வைத்து இருக்க‌லாம் , போன‌ வ‌ருட‌ம் ம‌க‌ளிர் 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை டுபாயில் தான் வைச்ச‌வை அங்கு எல்லா போட்டியும் சிற‌ப்பாக‌ ந‌ட‌ந்த‌து........................................................................

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

3 weeks 2 days ago
ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி கூறினாரா? ; ட்ரம்ப் கருத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம்! Published By: Digital Desk 3 16 Oct, 2025 | 02:02 PM ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. எனினும், டிரம்பின் கருத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி உறுதியளித்தாரா என்பது குறித்து அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: "மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன." வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த அறிக்கையில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து நேரடியாகத் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் அதன் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் இன்று (புதன்கிழமை) உறுதியளித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்" எனத் தெரிவித்திருந்தார். டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், "டிரம்பைக் கண்டு மோடி பயப்படுகிறார்.ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து, அதை டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/227876

இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு

3 weeks 2 days ago
Published By: Digital Desk 3 17 Oct, 2025 | 04:38 PM பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228017

இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு

3 weeks 2 days ago

Published By: Digital Desk 3

17 Oct, 2025 | 04:38 PM

image

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.

G3dMVXNXcAAEi_b.jpg

G3dMTKRWoAAPRl0.jpg

G3dMUOPXEAAeUbh.jpg

https://www.virakesari.lk/article/228017

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்

3 weeks 2 days ago
மகிந்த ஜனாதிபதியாகி, செய்த உருப்படியான வேலை என்றால்... தனது மொக்கு மகனை, வக்கீல் சோதனை பாஸ் பண்ண வைத்து விட்டார். 😂

கைகூ வடிவில்!

3 weeks 2 days ago
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” ***************************************************** தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது. “காதல்” ********************************************************** பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள் “காமம்” ***************************************************** மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில் தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள். “இந்தியமீனவர்கள்” **************************************************** ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல். “நாக்கு” ***************************************************** பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. “மனித எலும்புக்கூடுகள்” தொடரும்… அன்புடன்-பசுவூர்க்கோபி.

கைகூ வடிவில்!

3 weeks 2 days ago

கைக்கூ வடிவில்...

நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி

ஐஸ் மழை கொட்டுகிறது

    நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள்.

   “போதை”

*************************************************

ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள்

   ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள்.

   “விபத்து”

***************************************************

பட்ட மரமும் துளிர் விடுகின்றது

   பார்ப்பதற்கு யாருமில்லை.

   “முதியவர்கள்”

*****************************************************

எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை

   தலையில் கொட்டுகிறார்கள்.

   “வடி”

****************************************************

நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன

   “மரக்கறிச் சந்தை”

*****************************************************

தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது.

   “காதல்”

**********************************************************

பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள்

   “காமம்”

*****************************************************

மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில்

   தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள்.

   “இந்தியமீனவர்கள்”

****************************************************

   ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை

   உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல்.

   “நாக்கு”

*****************************************************

    பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து

   இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது.

   “மனித எலும்புக்கூடுகள்”

தொடரும்…

அன்புடன்-பசுவூர்க்கோபி.

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

3 weeks 2 days ago
தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது; ஒரு பவுண் 410,000 ரூபா! நாளுக்கு நாள் புதிய சாதனைகளை முறியடித்துச் செல்லும் தங்கத்தின் விலையானது வெள்ளிக்கிழமை (17) மற்றொரு முக்கியமான வரம்பைத் தாண்டியது. அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதற்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அதிக வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ளக்கூடும் என்ற வதந்திகளும் காரணம் என்றும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை தங்கக் கட்டியின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,379.93 ஆக உயர்ந்து, 30 டிரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டியது. இது 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் அதிகபட்ச வாராந்திர இலாபத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை 165.61 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,649 ஐத் தாண்டியது. இன்று தங்கத்தின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட $4,380 ஐத் தொட்டுள்ளன. இது குறித்த மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தின் இரு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள், அதிகரித்து வரும் நிதி மற்றும் கடன் அளவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலையும் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதன்படி, அதன் விலை வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் $54.3775 ஆக புதிய உச்சத்தை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 379,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450577

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

3 weeks 2 days ago
இதை அமெரிக்கா / மேற்கு பின்கதவால் செய்தன, ண்மையில் அது ராஜதந்திரத்தின் ஒரு பகுதி. இஹை போல நடந்தது (அல்லது செய்ததுக்கு) மிக நல்ல உதாரணம் சுயஸ் கால்வாய் யுத்தத்தில், பிரித்தானியாத்வம். பிரான்சும் படைபலத்தை பாவிப்பதை பற்றி முடிவ கூட்டாக எடுத்தாலும், பிரித்தானியா, பிரான்ஸை நம்பாமல் இஸ்ரேலை இழுத்து, இஸ்ரயேலிடம் பிரான்சும் தாக்கும் என்று சொல்லி, பிரான்ஸ் பின்னாக்க டிதோங்கி, பின் இஸ்ரேல் பிரான்சிடம் கேட்டே பிரான்ஸ்ம் சேர்நத் எகிப்தை தாக்கியது. இதுவும் பின்கதவாலேயே நடந்தது - அனால் டிரம்ப் இப்பொது வெளிப்படையாக பொய்யாக சொல்வது. ஈரான், அணுத்துறையை கைவிட்டு, இறங்கிவந்து இரத்து கேட்பது, ஏறி சண்டைக்கு முன்னும், இப்போதும் சொல்லி இருப்பது , வேறுஓர் ஓர் உதாரணம்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 2 days ago
ம‌ழை வ‌ராம‌ விட்டால் இல‌ங்கை அணிய‌ தென் ஆபிரிக்கா வென்று விடும் இல‌ங்கை தொட‌க்க‌ ம‌க‌ளிர் காய‌ம் இரான்டு விக்கேட் 10ஓவ‌ரோட‌ போய் விட்ட‌து.............................

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

3 weeks 2 days ago
வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.

'புளூடூத்திங்' பழக்கத்தால் பரவும் எச்.ஐ.வி. தொற்று!

3 weeks 2 days ago
இதுதான் வெள்ளைகாரன் அடிக்கடி சொல்லும் thin line வாதா. மெல்லிய கோட்டுக்கு இந்த பக்கம் நிற்கும் வரை நகைச்சுவை, அந்தபக்கம் போனால் கெட்டவார்த்தை🤣.

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

3 weeks 2 days ago
இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது. அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது. நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம். கொசுறு நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ. அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.