Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 156 online users.
» 0 Member(s) | 154 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,267
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,462
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  நெடுமாறன் பிணையில் விடுதலை செய்தி உறுதியாகிவிட்டது
Posted by: kayanmathi - 12-18-2003, 09:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

புதினம் இணையத்தளம்: http://www.eelampage.com/index.shtml?id=20...81418252622&in=

Print this item

  நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
Posted by: kayanmathi - 12-17-2003, 01:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

இச்செய்தி www.puthinam.com இல் மட்டும்தான் வந்திருக்கிறது எந்தளவு உண்மையோ தெரியாது.

Print this item

  தமிழன் 2003 தேர்வு
Posted by: yarl - 12-17-2003, 12:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இந்த வருடத்திற்கான பத்திரிகைககளில் பிரபலமான தமிழர்கள் 5 வரை தற்ஸ்ரமில் கொம் தேர்விற்கு நிறுத்தியுள்ளார்கள்.

அதில் வைகோவும் திருமாவளவனும் சேர்த்தி

நான் வைகோவை தெரிவுசெய்துள்ளேன்.

http://www.thatstamil.com/person-of-the-ye...year/index.html

Print this item

  joke
Posted by: vasisutha - 12-17-2003, 02:28 AM - Forum: நகைச்சுவை - Replies (3)

<img src='http://skins.hotbar.com/skins/mailskins/img/040103/040103watchdog_dog_bark_md_clr_prv.gif' border='0' alt='user posted image'>

Print this item

  சதாம் கைதுக்குப்பின்.. ஆய்வு
Posted by: Mathivathanan - 12-16-2003, 09:00 PM - Forum: புலம் - Replies (55)

சதாம் குசேன் கைதுக்குப்பின் என்றொரு சிறப்பு நிகழ்ச்சி எங்களின்ரை வானொலி ஒண்டிலை போச்சுது. சேடமிழுக்க இழுக்க ஏதொ பெரிய காரசாரமான ஆய்வு..

விடயத்துக்கு நேரடியா வாறன்.. சதாம் நல்லவனோ கெட்டவனோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் தன்னுடைய நாட்டிலை மாற்றுக்கருத்து வைத்தவன் எதிராகக் கருத்துதெரிவித்த அத்தனைபேரையும் எமலோகத்துக்கு எக்ஸ்பிரஸ் புலட்டிலை அனுப்பிவன் எண்டது உலகத்துக்கே தெரியும். தான் தனது கட்சி தனது ஆதரவாளர் எண்டு தனது இன மக்களையே ஆயதத்தால் கிலி அரசாங்கம் நடாத்தி அடக்கி ஆண்டவன் எண்டும் உலகத்துக்குத் தெரியும். அதைவிட வெளிநாட்டான் அங்குபோய் அவனுக்கு எதிராக கதைச்சுப்போட்டு உசிரோடை திரும்ப முடியாது சதாமிடமிருந்து தப்பிவர முடியாது என்றும் ஆய்வுசெய்த இருவருக்கும் நன்றாகவே தெரியும்.. எண்டு நான் நினைக்கிறன்.
இப்படியான சதாம் என்ற முன்னாள் ஈராக்கிய நாட்டுத் தலைவனுக்கு சார்பாக பிரித்தானியா.. பிரான்ஸ்.. அமெரிக்கா.. போன்ற கொடூரமான பயங்கர ஜனநாயக நாடுகளிலையிருந்துதான் :wink: கருத்து தெரிவிக்க முடியும் எண்டு அடித்துச் சொல்லுறன்.

இவங்களெல்லாம் கொடூரமான ஜனநாயக நாடுகளிலையிருந்து அந்த நாட்டு மக்களால் ஜனநாயகமாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுக்கு எதிராகக் கத்தத்தான் லாயக்கு எண்டு நான் நினைக்கிறன். நீங்கள் என்ன நினைக்கிறியள்..?

அதுக்குப் பெயர்தான் ஜனநாயகமோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  என் ப்ரியமானவளே....
Posted by: shivadev - 12-16-2003, 04:56 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

<img src='http://vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/10003/1%7E6.jpg' border='0' alt='user posted image'>


என் ப்ரியமானவளே....
அல்லி வளர் கேணி என்பேன்
வெளிச்சிறிதும் சொல்லிடா
மெல்லிய மனையாள் நெஞசம்...

புல்வெளிகளின் பனித்துளி போல்
புனிதமான உன் பாதஙகள்....
மல்லிகை மலருக்கு ஒப்பிட்டு
நோக்கிடினும் ம்டிதுயில மனம் ஏங்கும்...
பனித்துளியாய் படிந்திடவே
பாதம் தேடி வருகிறேன்...
பணம் வேண்டாம் எனக்கு
உன் மனதில் ஒரு இடம் தா........

இரவு நேர கடல் அலைகள்
இனிதான உன் முகத்தை
என் கண் முன்னே
கொண்டு நிறுத்துகின்றன...

கண்மணி உன்னை சந்திப்பேனா?
இல்லை கண்ணீரிலேயே கரைந்து போவேனா??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  Autism
Posted by: mohamed - 12-16-2003, 11:39 AM - Forum: மருத்துவம் - Replies (4)

நேற்று மாலை 9 மணிக்கு சனல் 5இல் சிறுபிள்ளைகளை தாக்கும் ஓட்டிசம் என்ற குறைபாடு பற்றிய உண்மை திரை நாடகமாக காட்டப்பட்டது. ஓட்டிசம் அனேகமாக ஆண் குழந்தைகளை தாக்கும் ஒரு குறைபாடு. மன வளர்ச்சி உள வளர்ச்சி மற்றும் தொடர்பாடலலில் பாரிய குறைபாடுகளை ஏற்படுத்தும் இந்த குறைபாடு எதனால் தோன்றுகிறது என்பது இன்னமும் கேள்விக் குறியே, ஆனால் இரவு சின்னத்திரையில் ஒலிபரப்பான அந்த நாடகத்தில் தாய் தனது மகனின் இந்த குறைக்கு முக்கூட்டு தடுப்புூசியே காரணம் என குற்றஞ்சாட்டியதுடன் அதை நிரூபிகக்க வைத்திய உதவியை நாடுவதும் அதன் பின் என்ன நடைபெற்றது என்பதுவே அந்த நாடகத்தின் மீதி.
முக்கூட்டு தடுப்புூசி (அம்மை, பொக்களிப்பான் போன்ற பயங்கர வியாதிகளுக்கான தடுப்புூசி ) முன்று மோசமான வியாதிகள் வராது இருப்பதற்காக சிறு குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி. இந்த தடுப்புூசி போட்ட பின்னரே தமது குழந்தைகழுக்கு இந்த குறைபாடு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்ட பிரித்தானிய மருத்துவ தலைமைகளே அதை இல்லை என்று மறுத்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி ஆராட்சி செய்த வைத்தியர் இது பற்றிய உண்மைகளை கண்டறியும் போது அவர் மறைமுகமாக அந்த ஆராட்சி செய்வதை மருத்துவ பீட தலைமைகள் தடுக்க முனைந்ததுடன் அவர் அந்த ஆராட்சியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதில் முக்கிய வியடம் என்ன வென்றால் இந்த தடுப்பூசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களே இதன் பின்னணியில் இருப்பதுதான். தமது இலாபங்களுக்காக குழந்தைகளின் எதிர் காலத்தை இருளில் விடக் கூட இந்த அமைப்புகள் தயாராக உள்ளதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நான் இங்கு கேட்க வந்த விடயம் ஐரோப்பாவில் ஏனைய நாடுகளிலும் இந்த முக் கூட்டு தடுப்பூசி ஒரே தடைவையில் போடப்படுகிறதா? ஓட்டிசம் என்ற குறைபாடு மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவில் உள்ளது போல் அதிக அளவில் உள்ளதா? பதில் தந்தால் உதவியாக இருக்கும்! இரவு சின்னத்திரையில் வந்த அந்த நாடகம் இந்த குறை பாடு பற்றியும் முக்கூட்டு தடுப்புூசி பற்றியும் பல விளக்கங்களை தந்தது. இது பற்றி யாராவது அறிய விரும்பின் இங்கே எழுதவும்.

Print this item

  உங்கள் பார்வைக்கு சில புகைப்படங்கள்.....
Posted by: shivadev - 12-16-2003, 11:38 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (43)

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E2.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E3.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E4.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E5.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E6.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E7.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E8.jpg

http://www.vithiyatharan.com/vithiphotosho..._SHOCKI%7E1.jpg

படங்களின் அகோரம் (அப்படித்தான் நான் கருதுகின்றேன்) காரணமாக படங்களை நேரடியாக இங்கு காண்பிக்காது இணைப்பாக மாற்றியுள்ளேன். - மோகன்

Print this item

  வணக்கம் தமிழ் மக்களே.....
Posted by: shivadev - 12-15-2003, 03:29 PM - Forum: அறிமுகம் - Replies (52)

வணக்கம் தமிழ் மக்களே...இது உங்கள் சிவா ....தமிழகத்திலிருந்து....இயல்பில் நான் ஒரு பொறியாளன்....தற்ச்சமயம் என்னுடைய ஆராய்ச்சி கல்விக்காக அசாம் மானிலத்தில் உள்ள குவகாத்தி மாநகரில் ஐ ஐ டி யில் பியெச்.டி படித்து வருகின்றேன்...என்னுடைய ஆராய்ச்சி இடுப்புக்கு மாற்று மூட்டு செய்வது......தமிழில் அடிப்பது முதல் முறை என்பதால் தவறு இருந்தால் மன்னிக்கவும்...அன்புடன்,
சிவா.....

Print this item

  நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
Posted by: shanthy - 12-15-2003, 09:11 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் தீக்குழித்த 15.12.1995 நினைவின் எட்டாண்டு நிறைவில் இக்கவி அவனுக்காய்......)


அப்துல் ரவூப் !
எட்டாண்டின் முன் எங்களுக்காயெரிந்தவன்.
சந்தனங்களாய் புலிகள்
செந்தணலில் எரிந்து கொண்டிருந்த சமயம்
வெந்தணலால் தனைமூட்டி
எங்கள் விழயழுகை பொறுக்காமல்
வெந்தவன்.

இருபத்து நான்கு வயதில்
ஈழத்தவன் வாழ்வுக்கு
ஆதரவுக் கரம் நீட்டி
அணைந்த சுடர்.

மானத்தான் அவன்
மரணத்தையெழுதி வைத்து
அணுவணுவாய் அவன் சுவாசம்
அழித்த து}யவன்.
அன்றோடு அவன் கதை
அழிபட்டுப் போகவில்லை.
இன்றும் அவன் சாவின் பொருள்
எங்கள் நெஞ்சுகளில் எரிகிறது.

நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்.

மாரியில் வந்து சேரும்
மாவீரர் நினைவு நாளில்
அவனுக்காயும் விளக்கெரியும்.
விழிகசிய அவனுக்கும் - எம்
வீரரின் கல்லறைகள்
விழாவெடுக்கும்.

இருவேறு தேசங்களின்
எல்லைகளை அலையின் கைகளால்
எல்லை நாட்டிய உப்பு நீரின்
உவர்ப்பில் கூட அப்துல் ரவூப் - உன்
உயிர் வாசம்.

'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"
நீ சொல்லிப்போன வார்த்தைகள் இவை.

இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை.

பத்தாண்டின் முன் பேசிய வார்த்தைக்கே
புத்தாயிரம் தாண்டிய இவ்வாண்டில்
பொடாவெனும் பெயரில்
பொல்லெடுத்து ஆடுகிறது.
பேயொன்றின் கதை கேட்டு
உன் தேசம் பேசிய வாய்களையெல்லாம்
மூடிய சிறைகளுக்குள்
மறைத்து வைத்துள்ளது.
இதுதானாம் உங்கள் நாட்டுச் சனநாயகம்.

எது சொல்ல ?
எதைச் சொல்ல ?
எங்களுக்குள் நீங்கள்
இன்றும் இருக்கின்றீர்
தங்களுக்குள் பல நினைத்து
தள்ளியிருந்தாலும் பொறுத்திடலாம்
கொள்ளி எடுத்து வைத்துப்
பேய் கொடிய ஆட்டம்.

பறவாயில்லை நண்ப ,
பொறுத்திருக்கிறோம்
பேய் தன் சுயம் அறிந்து
பெண்ணாகி , எம் பொன்னு}ரைப் , புலிகளைப்
புரிந்திடும் வரை
பொறுத்திருப்போம்.

நன்றி மறவோம் - உன்
நாமம் மறவோம்.
உன் நினைவென்றும் - எம்
உயிர் மடியில் உறைந்திருக்கும்.

12.12.03.

Print this item