Yarl Forum
என் ப்ரியமானவளே.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் ப்ரியமானவளே.... (/showthread.php?tid=7667)



என் ப்ரியமானவளே.... - shivadev - 12-16-2003

<img src='http://vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/10003/1%7E6.jpg' border='0' alt='user posted image'>


என் ப்ரியமானவளே....
அல்லி வளர் கேணி என்பேன்
வெளிச்சிறிதும் சொல்லிடா
மெல்லிய மனையாள் நெஞசம்...

புல்வெளிகளின் பனித்துளி போல்
புனிதமான உன் பாதஙகள்....
மல்லிகை மலருக்கு ஒப்பிட்டு
நோக்கிடினும் ம்டிதுயில மனம் ஏங்கும்...
பனித்துளியாய் படிந்திடவே
பாதம் தேடி வருகிறேன்...
பணம் வேண்டாம் எனக்கு
உன் மனதில் ஒரு இடம் தா........

இரவு நேர கடல் அலைகள்
இனிதான உன் முகத்தை
என் கண் முன்னே
கொண்டு நிறுத்துகின்றன...

கண்மணி உன்னை சந்திப்பேனா?
இல்லை கண்ணீரிலேயே கரைந்து போவேனா??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- nalayiny - 12-16-2003

கவிதைதந்து யாழ் களத்திற்கு புதியதொரு மெரு கூட்டலை தந்திருக்கிறீர்கள்.

உங்கள் தளம் பாற்தேன். (உங்கள் தளம் என நினைத்து) ?அங்கிருந்து என்மனதை ஒரு நொடியில் என் வீட்டிற்கு அழைத்தச்சென்ற ஒரு படம் சுட்டுக்கொண்டு வந்து விட்டேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://www.vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/thumb_coconut%20tree.jpg' border='0' alt='user posted image'>


- shivadev - 12-16-2003

நன்றி நளாயினி...மேலும் தொடர்வேன்....
அன்புடன்,
உங்கள்,
சிவா....


பாராட்டுகள் - இளைஞன் - 12-19-2003

பாராட்டுகள் சிவா...

படத்திற்கான கவிதையா? கவிதைக்கான படமா? அற்புதமான பொருத்தம். வலிகளைக் கவிதை வடிக்குமென்றால், வலிக்கான மருந்தினையும் அது படைக்குமல்லவா? தொடருங்கள்.

பிடித்த வரிகள்: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:கண்மணி உன்னை சந்திப்பேனா?
இல்லை கண்ணீரிலேயே கரைந்து போவேனா???



- shivadev - 12-19-2003

நன்றி இளைனனே....தொடர்வேன்....
சிவா...


- kuruvikal - 12-19-2003

------நண்பர் சிவாவின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு எழுதியது அகற்றப்பட்டுள்ளது...! இது தொடர்பில் களநிர்வாகத்திற்கு ஏதாவது அசெளகரியங்கள் எழுமானால் அதற்கும் மனம் வருந்துகிறோம்...----


இதோ நாம் அங்கு ரசித்த இன்னோர் அர்புதக் கவிதை இதே படத்துக்கு இன்னொருவர் எழுதி இருந்தார்....இதோ அது....

------------------------------------
என் பிரியமானவளே
காலை எழுந்ததும்
அருகிரு 'மடு'வோரம்
உந்தன் கோலம் காண
ஓடோடோடிப் போவேன்,
உன் 'பிறை' நெற்றி
'விற்' புருவம்
'கயல்' விழியோடு 'நிலா' முகம்
என்று அழகு கண்டு,
செவ்விதழ் பூவாகி
இனிய அருவி போல்
தேன் மொழி பேச
கேட்பதோர் ஆனந்தம் கொண்டேன்
காளை நானும்
உன்னையே காதலித்தேன்
காலம் காலமாய்....!

காலம் மாறியது
விஞ்ஞானம் என்று
ஏதேதோ வந்தது
அணுகுண்டும் பிறந்தது
கூட அமெரிக்க அமுக்க வெடியும் பிறந்தது...!
ஒரு காலை வேளையில்
F-16 போட்ட குண்டில்
நீ சிதைந்தாயே..!

ஐ.நா வில் கூட்டமாம்
இயற்கையவளே உன்னைப் பாதுக்காக்க
ஆனால்
ஏட்டிக்குப் போட்டியாய்
அடுக்கி வைத்துள்ளார்
ஏவுகணையும் அணுகுண்டும்
கணப்பொழுதில் உன்னை அழித்திடவே...!
என்ன மானிடர்
தாம் தவழும் மடியிலே
குழிதோண்டும் நிலையில்
என்று
தம் எதிர்காலச்சந்ததிக்காய் தெளிவரோ...!
இப்பேதையர்....!

Voice of love for Nature. (shysumi)

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- shivadev - 12-20-2003

அது வேறு இது வேறு நண்பரே....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->