| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 257 online users. » 0 Member(s) | 255 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தேசியத்தைக் காத்த கையெழுத்துக்கள |
|
Posted by: Eelavan - 04-14-2004, 09:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தேசியத்தைக் காத்த கையெழுத்துக்கள்
13.04.2004
தாயகக் கோட்பாட்டுக்கும் தமிழீழத் தேசியத்திற்குமான தமிழீழ மக்களின் பலத்த அங்கீகாரம் தேர்தல் மூலம் ஒருபுறம் நிலைநாட்டப்பட்டுக்கொண்டிருக்கையில் மறுபுறம் தமிழர் தேசியமும் தமிழீழத் தாயகக் கோட்பாடும் கருணா என்ற ஒரு தனிமனிதனின் முறைதவறிய செயற்பாடுகளால் பேரபாயத்தை எதிர்நோக்கலாயின. இந்தத் தேர்தல் வெற்றியில் பொதிந்து கிடக்கும் அரசியல் ஆழத்தையும், இந்த வெற்றி கருணாவின் சிக்கல்களுக்கூடாகக் காப்பாற்றப்பட்ட விதத்தின் குறியீட்டு முக்கியத்துவத்தையும் நாம் இத் தருணத்தில் திரும்பிப்பார்ப்பது அவசியமாகிறது.
இலங்கை அரசியலின் தொங்கு பாராளுமன்றத்தின் நாற்காலிகளின் தற்காலிகம் அர்த்தமற்றதாயிருக்கலாம்.
ஆனால், நடந்தேறிய தேர்தலில் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியத்திற்கும் இறைமைக்கும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கும் வழங்கிய ஏகோபித்த அங்கீகாரம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இந்த வெற்றிக்குள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழத் தாயகத்தின் இறைமைக்கான குறியீட்டு முக்கியத்துவங்கள் பொதிந்துகிடக்கின்றன.
தாயகக் கோட்பாடு என்பது புவியியல் ரீதியாகத் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்படக்ஷகூடிய ஒரு பொதுப்பண்பாட்டிற்குரிய மக்கள் கூட்டம் வாழும் பாரம்பரிய தாய்நிலம் (Traditional homeland) என்பதாகும். இது வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தமிழீழத் தாயகமாகும். இவ்வாறான தாயகத்தில் ஒன்றித்த தேசியப் பிரக்ஞையுடன் அடையாளப்படுத்தப்படுவதே தமிழீழத் தேசியம் ஆகும்.
இந்தத் தமிழர் தாயகக் கோட்பாடே எமது தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமைக்கும் (Right to Self-determination) எமது இறைமைக்கும் (Soverignty) அடிப்படையான வித்தாகும்.
தாயகக்கோட்பாட்டில் இருந்து பிறப்பதே தன்னாட்சி உரிமை.
தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசிய இனம் தனது அரசியற் தலைவிதியைத் தானே நிருணயித்துக்கொள்ளும் உரிமையைக் கொண்டது என்பது ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் உரிமைக்கான வரைவிலக்கணமாகிறது.
இது எமது விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டிற்கான உயிர் நாடியாகும்.
இந்த அரசியல் அடித்தளத்தையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாக நிறைவேற்றினார் தமிழீழத் தேசியத்தின் தந்தை செல்வா.
இதற்கான முதலாவது பகிரங்கமான மக்கள் அங்கீகாரம் 1977ம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குக் கிடைத்த வெற்றியூடாகத் நிரூபிக்கப்பட்டது.
தன்னாட்சி உரிமைக்குத் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அரசியல் நியாயப்பாடுகளிலிருந்தே ஆயுதப்போராட்டமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பரிணாம வளர்ச்சியுறச் செய்து தேசியத் தலைவர் வழிநடாத்திக் கொண்டிருக்கிறார்.
எமது இறைமையை எவரோடும் பேரம் பேசுவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழீழ விடுதலைப்போராட்டம் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
தாயகக் கோட்பாட்டிற்கும், தன்னாட்சியுரிமைக்குமான மக்கள் அங்கீகாரத்திற்கு இதுவரை காலமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும், 1977ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்துக்குத் தமிழீழ மக்கள் அளித்த அங்கீகாரமும் திம்புத் தீர்மானங்களுமே குறியீடுகளாக அமைந்திருந்தன. இவற்றையே தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் அடிப்படையாக நினைவுபடுத்தியும் வந்துள்ளனர்.
இந்தக் கோட்பாட்டுக்கு ஒரு வலிமையான புத்துயிர் வழங்கிய வெற்றியாக, ஒரு பலத்த அரசியல் அங்கீகாரத்தை வழங்குவதாக சமீபத்திய தேர்தல் அமைந்துள்ளது.
அது மட்டுமல்ல, தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரித்தும், இடைக்கால ஆட்சி அமைவுக்கான வரைபுக்குரிய அங்கீகாரத்தையும் இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் பரந்துபட்ட மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு விடுதலை இயக்கம் என்ற குறியீட்டையும் இந்தத் தேர்தல் எழுதியிருக்கிறது.
சிங்களப் பேரினவாதம் தொங்கு பாராளுமன்றில் தொங்கிக் கிடக்க, தமிழீழத் தேசியத்திற்கு ஒரு வரலாற்றுரீதியான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த தேர்தலாக இத் தேர்தல் அமைந்தது.
தமிழீழத் தாயகக் கோட்பாடும், விடுதலைப்புலிகள் இயக்கமும் பலமாக இருக்கும்போது சர்வதேச அரசியலில் காணப்படும் தங்குதடைகள் கூட தற்காலிகமானவையாகவே அமையும் என்பதே உண்மை.
இதன் தார்ப்பரியத்தை உணர்ந்தே எதிர்ப்போராட்ட சக்திகள் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்துவிடவேண்டும் என்று சூழ்ச்கிளைச் செய்துவந்திருக்கின்றன. தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்குப் பல சிங்கள பேரினவாத சக்திகள் காலா காலமாகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுவந்துள்ளன என்பது நாம் அறிந்ததே.
ஆகவே, தேர்தலில் தமிழீழத் தேசியம் வெற்றிபெற்றது மட்டுமல்ல, பெற்ற வெற்றியைத் தற்காலிகச் சூறாவளியில் அடிபட்டுப்போய்விடாது காப்பாற்றப்படவேண்டியதும் அவசியமாகியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து மிரட்டி ஒரு தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கருணாவுக்கு எதிர்ப்போராட்ட சக்திகள் வழங்கியிருந்தன.
இவ்வாறான தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பந்துல ஜெயசேகராவிற்கு வழங்கிய பேட்டியில் கருணா வெளிப்படையாகவே கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது நடந்தேறியிருந்தால் தமிழீழத் தேசியத்திற்கு ஓர் இழுக்கு ஏற்பட்டிருக்கும். தமிழீழத் தேசியத்திற்குத் தேர்தலில் கிடைத்த அங்கீகாரம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும்.
இது நடந்தேறி விடுமோ என்ற அச்சம் சூழ்ந்த அந்த நாட்களில் எதிர்ப்போராட்ட சக்திகளின் எண்ணங்கள் தவிடுபொடியாகும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தேறியது. அது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தெரிவான 20 பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் ஒன்று கூடித் தமது கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றைப் பகிரங்கமாக வெளியிட்ட நிகழ்வு. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற தீரமான செயற்பாடு என்பதை நாம் இங்கு எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மட்டு அம்பாறையில் தெரிவான 5 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடங்கலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மொத்தம் இருபது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் ஷகூடத் தவறாமல் ஒன்று கூடிக் கையெழுத்திட்ட சம்பவம் எமது தேசியத்திற்குச் சாட்சிசொல்லும் நிகழ்வாகியது! இவ்வாறாக ஓர் அரசியற் தார்ப்பரியம் கொண்ட தேர்தல் வெற்றி பாதுகாக்கப்பட்டமை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு ஆகும்.
எதிர்ப்போராட்ட சக்திகளின் முகத்தில் இந்த நிகழ்வு கரிபூசிவிட்டது!
அந்தக் கையெழுத்துக்கள் இங்கே பிரசுரமாகின்றன:
<img src='http://www.yarl.com/forum/files/tnasignatures.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| நீங்கள் கேட்டவை |
|
Posted by: Eelavan - 04-14-2004, 09:08 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (24)
|
 |
அன்பு நெஞ்சங்களே காலத்தால் அழியாத அரிய பொருட்களை உடைய உங்களைக் கவர்ந்த திரையிசைப் பாடல்கள் ஈழ கீதங்களை இங்கே எழுதுங்கள்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
படம் - நீர்க்குமிழி
இசை - வி. குமார்
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் - கண்ணதாசன்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
|
|
|
| தமிழ் Unicode பாவனை |
|
Posted by: Eelavan - 04-14-2004, 08:54 AM - Forum: கணினி
- No Replies
|
 |
தமிழ் Unicode பாவனை பற்றிய சில விளக்கங்கள்
What can I do with Tamil Unicode Fonts other than Viewing Tamil Pages and Sending E-Mails?
<img src='http://www.yarl.com/forum/files/image4.jpg' border='0' alt='user posted image'>
http://www.pathcom.com/~u1060881/nila/
|
|
|
| அஞ்சலிகள் |
|
Posted by: Eelavan - 04-14-2004, 02:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
இரண்டுவருட போர் ஓய்வுகாலப்பகுதியின் பின்னர் எம் மண்ணில் ஏற்படவிருந்த அனர்த்தம் இரத்தக்களரி இன்றித் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இப்பிரச்சனைக்குள் சிக்கி உயிரிழந்த பொதுமக்கள்,துரோகிகளுக்குப் பலியான போராளிகள்,மீட்பு நடவடிக்கையில் இன்னுயிர் ஈந்த போராளிகள் அனவருக்கும் எமது அஞ்சலிகள்
<img src='http://www.yarl.com/forum/files/maaveerar.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
கண்ணான சுதந்திரத்தை
விற்றுக் காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது
|
|
|
| காட்சிப் பொருளாய்..... |
|
Posted by: kuruvikal - 04-13-2004, 02:39 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
<img src='http://wwwi.reuters.com/images/2004-04-13T005115Z_01_GALAXY-DC-MDF524028_RTRIDSP_2_SCIENCE-SPACE-RESTORATION-DC.jpg' border='0' alt='user posted image'>
கால் நூற்றாண்டுகளாக நாசாவால் கைவிடப்பட்டு காட்சிப் பொருளாய் உள்ள 363 அடி நீளமுள்ள Apollo moonshot Saturn V உந்துவாகனம்...இப்படம் 1999 இல் கைவிடப்பட உந்துவாகனத்தின் மேலே கொலம்பிய விண் ஓடம் கீற்றாக விண்ணைக் கிழித்துச் செல்லும் போது எடுத்தது...!
(Our Thanks to reuters and yahoo.com)
|
|
|
| புதிதாய் சிந்திப்போம்... |
|
Posted by: இளைஞன் - 04-13-2004, 02:25 PM - Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம?
- Replies (16)
|
 |
<b>புதிதாய் சிந்திப்போம்...</b>
வணக்கம் அனைவருக்கும்...
புதிய தலைப்பில், அதுவும் உருவல் ஊடுருவல் பகுதியில் புதுசா எதை எழுதப் போகிறேன் என்று யோசிக்கிறீர்களா? யோசியுங்கள். தனிய ஒரு பகுதியைப் பிரித்து எழுதவம் என்றுதான் யோசித்தேன்... ஆனாலும், முதலில் இதனுள் எழுதியபின் உங்கள் கருத்துக்களையும் பார்த்துவிட்டு செய்வோம் என்று தான் இப்போது இங்கிதனை எழுதுகிறேன்.
வலைத்தளத்தில் நாங்கள் எல்லோரும் தனித்தனியே இணையப்பக்கங்கள் அமைத்து வைத்திருக்கிறோம். ஆனாலும் எத்தனை காலத்துக்குத்தான், ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பது? செயற்படுவது? நாம் ஒரு தேசிய இனம் என்று அடிக்கடி மார்தட்டிக்கொள்கிறோம், ஆனால் ஒரு தேசிய இனமாக இருந்து எம்மை நாம் எப்படி வளர்த்தெடுக்கப் போகிறோம்? நமக்குத் தேவையானது என்ன?
1. ஒருங்கமைப்பு
2. ஒழுங்கமைப்பு
3. கூட்டுமுயற்சி
4. தேடல்/இலக்கு
எந்த ஒரு நாட்டு வலைத்தளத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு நிறுவனமாகத்தான் அநேகமாக செயற்படுகிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை நாங்கள் இன்னமும் சிறுபிள்ளைத்தனமாய் ஒவ்வொருவரும் (எல்லோருமல்ல, ஆனால் அநேகமானோர்) தமது தனிப்பட்ட விருப்பத்துக்காய் இணையத்தளம் வைத்திருக்கிறோம். இணையத்தில் மட்டுமல்ல, வேறெந்தத் துறையை எடுத்தாலும் நிறுவனமாக இயங்க எங்களால் முடிவதில்லை, அல்லது நாங்கள் முயற்சிப்பதில்லை.
இந்தியத் தமிழ் இணையத்தளங்களை எடுத்தால், அவர்கள் ஒரு கூட்டுமுயற்சியாக பலதையும் செய்கிறார்கள். ஆனால் நம்மிடையே அது இல்லை. எப்போது வளர்த்துக் கொள்ளப் போகிறோம். இனியும் நாம் மற்றையவர்களிடம் தங்கிநிற்கப் போகிறோமா? சுயமாக சிந்திக்கமாட்டோமா?
இதன் அடிப்படையில் எனக்குத் தோன்றிய ஒரு எண்ணக் கருவைத்தான் இங்கே முன்வைக்கிறேன்:
<b>4ஆம் தமிழ் - 4th tamil </b>
இணையத்தில் ஓருளவு எங்கள் எல்லோருக்கும் அனுபவம் உள்ளது. நாங்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஒரு இணையத்தளத் தமிழ் ஒருங்கமைப்பை நிறுவி அதன் மூலம் பல இணையம் சார் செயற்திட்டங்களை முன்னெடுத்து நமது தேசியத்தையும் மொழியையும் கட்டியெழுப்புகின்ற முயற்சிக்கு துணைநிற்பது தான் இதன் நோக்கம்.
மோகன் அண்ணா - யாழ் இணையத்தைக் கட்டியெழுப்பி இணையம் சார்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்த அனுபவம் இருக்கிறது.
சுரதா அண்ணா - தமிழ் எழுத்துருக்களில் கவனம் செலுத்தி அதில் தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எனவே எழுத்துரு சார்ந்த அனுபவங்கள் இவருக்குண்டு.
கண்ணன் அண்ணா - வலைப்பக்கங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிக்கக்கூடியவர். எனவே பாரதுகாப்பு சம்பந்தமான அனுபவம் இவருக்கு இருக்கிறது.
சந்திரவதனா அக்கா - யாழ் இணையத்தில் தனது ஆக்கங்கள் பலவற்றை ஆர்வத்தோடு இணைத்தவர், இணைப்பவர். அதேபோல் தனியாகவும் பல வலைப்பூக்களை ஆர்வமாக உருவாக்கி வருபவர்.
இதுபோன்று ஆர்வம் உள்ளவர்களையும் திறமையுள்ளவர்களையும் ஒன்றிணைத்து ஒரு இணையக்குழுவை உருவாக்கி பயனுள்ள பல செயற்பாடுகளை முன்னெடுப்பது நம்மினத்திற்கு பலனளிக்கும்! இதுதான் எனது எண்ணம். இதனை மேலும் மெருகூட்டி எப்படி எப்படியெல்லாம் செய்யலாம், என்னென்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்போம்.
சில உப எண்ணங்கள்:
1. உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழ் இலக்கியம் சார்ந்தவர்களுக்கான ஒரு இணையத்தளம்.
2. குழந்தைகளுக்கான இணையத்தளம்.
3. இணையத்தில் இன்று வலைத்தள வடிவமைப்பில் நம் இளைஞர்கள் சிறந்து நிற்கிறார்கள். ஆனாலும் சினிமா என்னும் குறுகிய வட்டத்துள் நிற்கின்ற அவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான சரியான வழியைக் காட்டுதல்.
4. தமிழ் மென்பொருள் உருவாக்கங்களை ஊக்குவித்தல். (உதாரணம்: Unicode, வலைத்தள Scriptகளுக்கான தமிழாக்கம்)
குற்றம் குறை இருப்பின் சொல்லுங்கள்.
என்னுடைய எண்ணக்கருவை முன்வைத்துள்ளேன்,
இணைந்து செயற்பட யார் தயார்?
பிகு: தொடக்கி வைப்பது என் வேலை, தொடர வேண்டியது உங்கள் வேலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
|
|
| வரலாறு சொல்லும் பாடங்கள்...! |
|
Posted by: kuruvikal - 04-13-2004, 10:44 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
வரலாற்றுச் சம்பவங்கள் எவையுமே ஒருமுறை வந்து ஓய்ந்து விடுவதில்லை. அவை மீண்டும் மீண்டும் தன்னை கால மேடையில் அரங்கேற்றிய வண்ணமேதான் இருக்கின்றன. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் நடந்தேறிய சம்பவம் அண்ணளவாக அதே வடிவத்தில் இன்னொரு இடத்தில் இன்னொரு காலகட்டத்தில் நடந்தேறுகிறது என்பது கண் முன்னாலேயே காணக்கூடியதாக உள்ளது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றல்ல.
<img src='http://sooriyan.com/images/stories/karuna/french.jpg' border='0' alt='user posted image'>
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது நாசிப்படைகளுக்கு தனது தேசமான பிரான்சை அடைவு வைத்த மிகப்பெரிய தனது இராணுவ வீரனுக்கு யுத்தமுடிவில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.
மறேஷால் பெத்தன் எனும் பெயர் இன்றும் பிரஞ்சு மக்களினதும் பிரஞ்சுத் தேசத்தினதும் இழுக்குச் சின்னமாகவே கருதப்படுகிறது.
உலகப் புகழ் பிரஞ்சு இராணுவக் கல்லூரியான 'சன் சீர்" ன் சாதாரண இராணுவ வீரர் பிலிப் பெத்தன் 1914ம் ஆண்டில் வெறும் கேர்ணல் பதவிக்கு மட்டுமே உயர்ந்திருந்தார்.
ஆனால் முதலாவது மகாயுத்தத்தின்போது ஜேர்மனியப் படைகள் பிரான்சின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேர்தன் மலைப்பிரதேசத்தின் பாதுகாப்பு முன்னரண்களை தொடர்ந்து ஐந்து மாதங்களாக தீவிர தாக்குதல்களுக்கு உட்படுத்தியும் அவர்களால் அதைக் கைப்பற்ற முடியாதபோதிலும் பிரெஞ்சுப்படைகளின் மன உறுதி உடைந்த நிலையில் இப்பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு பிரிகேடியர் ஜெனரலாக
நியமிக்கப்பட்டதன் பின்னரே பிலிப் பெத்தனின் இராணுவ திறமைகள் வெளிப்படுகின்றன.
இக்காலத்தில் இராணுவ மட்டத்தில் நிலவிய ஒழுங்குச் சீர்குலைவுகளை நிவர்த்தி செய்து, புதிய நம்பிக்கையை தனது வீரர்களுக்கு ஊட்டிப் பல போர்முனைகளில் வெற்றியீட்டி, பிரஞ்சு இராணுவத்தை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தார் பிலிப் பெத்தன்.
1917ல் ஜெனரல் பெத்தன் தனது இராணுவச் சாதனைகளைத் தொடர்ந்து பிரஞ்சு இராணுவத்தின் அனைத்துப் பிரிவிற்கான கொமாண்டராக நியமனம் பெறுகிறார். இராணுவத்திற்குள் ஏற்பட்ட உள்ளெதிர்ப்பைச் சமாளிக்க 554 படையினருக்கு மரண தண்டனையை வழங்கும் கொமாண்டர் பெத்தன் இராணுவத்தைப் புனரமைத்து, புதிய வியூகங்களை உருவாக்கி 1918 நவம்பரில் பிரஞ்சு இராணுவத்தின் ஜேர்மனியின் மீதான இறுதிவெற்றிக்கு வழிவகுக்கிறார்.
வெற்றியைத் தொடர்ந்து பிலிப் பெத்தனுக்கு அதியுயர் இராணுவத் தேசிய விருதான 'மறேஷால்" பட்டம் வழங்கி பிரான்ஸ் அவரைக் கௌரவித்தது.
1925ல் மொறோக்கோ காலணிக்குக் கலவரத்தையடக்கப் பிரத்தியேகமாக அனுப்பப்படும் மறேஷால் பெத்தன், 1934ல் பிரான்ஸின் யுத்தத்திற்கான அமைச்சராகவும்
நியமிக்கப்படுகிறார். 1936ல் இவர் ஸ்பெயினுக்கான தூதுவராலய உயர் ஸ்தானிகராகவும் நியமனம் பெறுகிறார்.
1940 ஆண்டின் வசந்த காலம் பிரான்சுக்கு வசந்தமாகப் பிறக்கவில்லை. நாசிப்படைகள் பிரஞ்சு நிலப்பரப்பின் எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்தது. லட்சக்கணக்கில்
மக்கள் அகதிகளாகி இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிரஞ்சுப் படைகள் நாசிகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். தேசியம் சிதைந்து, மக்கள் அகதிகளாகச் சிதறியோடிக்கொண்டிருந்த வேளையில், அரசின் முக்கிய பதவிக்கு அழைக்கப்டும் மறேஷால் பெத்தன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது வரலாற்று முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, பிரான்ஸை எதிரிகளிடமிருந்து மீட்டதால் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, மக்கள் தன்மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையைப் பயன்படுத்தி, நாசிகளுடான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக்
கைச்சாத்திடுகிறார்.
நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் வட பகுதியை நாசிகளிடம் விட்டுவிட்டு, அதுவரை காலமும் அமுலில் இருந்த அரசியற் சாசனத்தையும் குடியரசையும் குப்பையில் போட்டுவிட்டு தெற்கில் தன்னைத் தலைமைப்படுத்திய ஒரு சர்வாதிகார அரசை நிறுவும் பெத்தன் நாசிகளுடன் கூட்டொப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்.
இந்நிலைக்கு எதிராக நாசிகளுடன் போரைத் தொடர்ந்து மேற்கொண்டு நாட்டை முழுமையாக விடுவிக்கவேண்டும் எனும் அழைப்பை ஜெனரல் து கோல் லண்டனிலிருந்து விடுத்து நாட்டுப்பற்றாளர்களைத் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இவருக்கெதிராக மறேஷால் பெத்தன் மரணதண்டனை வழங்கப்பட்டதாக அறிவிக்கின்றார்.
பெத்தனின் துரோகத்த தனம் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் புலப்பட, சார்ல் து கோல்ன் தலைமை மக்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரின் தலைமையில்
நேசநாடுகளின் உதவியுடன் இறுதியில் நாசிப்படைகளிடமிருந்து தேசம் விடுவிக்கப்படடது.
ஜேர்மனிக்குத் தப்பியோடிய மறேஷால் பெத்தன், பின்னர் சுவிசுக்குச் சென்று தன் விருப்பின் பேரில் மீண்டும் பிரான்சுக்கு வருகை தந்தார்.
பிரான்சின் மிகப்பெரிய வெற்றிகளையீட்டிய மறேஷால் பெத்தன், பிரஞ்சுத் தேசியத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இப்பெரு வீரர் இறுதியில் வீரியத்தை விட்டு, சுயநலத்திற்காக, கோழைத்தனமாக தனது தாய்மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களான நாஸிகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி நாட்டை நாசப்பாதையில் இட்டுச்சென்றது மட்டுமல்லாது, தேசத்தை விடுவிக்கப் போராடியவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து தேச ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்து தேச விடுதலையைத் தாமதமாக்கினார்.
தேசத்தையும் மக்களையும் இரண்டாகக் கூறுபோட்ட இந்தத் தேசத் துரோகிக்கு, இறுதியில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.
TamilNaatham and sooriyan.com
|
|
|
| பெண்களும் சுதந்திரமும்.. யதார்த்தங்களும் பல கனவுகளும்... |
|
Posted by: kuruvikal - 04-13-2004, 10:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (20)
|
 |
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom.jpg' border='0' alt='user posted image'>
[size=16]
பெண்களுக்கு சுதந்திரம்
"பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!"
"பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவோம்!"
- என்று கோஷமிட்டு பெண் சமுதாயம் முன்னேற பாடுபட்ட பெண்கள் திடீர் என்று பாதை மாறி அவர்களை ஆண்களோடு ஒப்பிட தொடங்கினர். அங்கே தான் ஆரம்பித்தது பெண்களுக்கு பல கஷ்டங்கள்!
ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு காரியங்கள் செய்ய இயற்கை படைத்திருக்கின்றது. ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என்பதை நிரூபிக்க நாம் ஏன் ஆண்களைப் போல் நடக்க வேண்டும்? பெண்களாக இருப்பதில் தவறு என்ன?
"நீ பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்! ஒரு ஆண் அளவுக்கு திறமைசாலி!"
"இவ என் பெண்ணே இல்லை. என் பையன் மாதிரி அவ்வளவு உதவியா இருக்கா!"
இப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் தினமும் கேட்கிறோம். சொல்லவே வெட்கமா இருக்கு, இதை கேட்டு சந்தோஷம் வேற படறோம்!
முன்னே இருந்ததைவிட நம்ம நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. அலுவலகத்தில் வேலை செய்தாலும், வீட்டு வேலைகளை நாம தான் செய்ய வேண்டும்!
பத்மஜா வயது 29, குழந்தை பெற்றபின் வேலையை ராஜினாமா செய்தவர். "குழந்தையையும், வீட்டு வேலையையும் பார்க்கவே நேரம் பத்தல. இதுல வேலைக்கு எங்கே போக முடியும்? இவர் வீட்டிலே ஹெல்பா இருந்தாலும், மொத்த வேலை நான்தானே செய்யனும்."
ஆண்களுக்கு என்ன, ஜாலி தான்! பெண் பணமும் சம்பாதிக்கிறாள், வீட்டு வேலையும் செய்கிறாள். குழந்தைகளையும் சமாளிக்கிறாள், எதைத் தான் செய்யவில்லை!
பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சுஜாதாவுக்கு வயது 28, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
"எனக்கு ஆபீஸ்ல வேலை செய்ய ஆசை. ஆனால் குழந்தைங்களை ஸ்கூல்ல கொண்டு விட்டு திருப்பி கூட்டிட்டு வர ஆளில்லை. நான் அவங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறதால இப்போ இந்த பிரச்னை இல்லை. குழந்தைகளுக்காக நாம இதுகூட செய்யலேன்னா எப்படி?" என்கிறார்.
பெண் விடுதலை போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் ஆண்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் தலைவலி போதாது என்று அவர்களுடைய தொல்லைகளில் பாதியை வாங்கிக் கொண்டோம்!
எவ்வளவுதான் செய்தாலும், இன்னும் பெண்களை சமமாக நடத்த மறுக்கிறார்கள் ஆண்கள். ஷீரின் வயது 26, கம்ப்யூட்டர் என்ஜினியர். "எனக்கு மாசத்துக்கு ரூ 30,000 சம்பளம். ஆனா நான் இந்த மாசம் வேலையை ரிசைன் பண்ணுறேன். காரணம் அவருக்கு சம்பளம் ரூ 22,000, அதனாலே அவருக்கு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு! வீண் சண்டையை அவாய்ட் செய்யத்தான் இந்த ரெஸிக்னேஷன். சமுதாய கட்டுப்பாடு பெண்களைத்தான் அடங்க வைக்கிறது.
ஷீரின் கதையை படிக்கும் பலர், "அய்யோ ஒரு என்ஜினியரிங் சீட்டு வீணாப் போச்சே, முன்னேயே ஒரு பையனுக்கு விட்டு கொடுத்திருக்கலாம்!" என்று சொல்லலாம். ஆனால் "காரணமே இல்லாமல் நல்ல படிச்ச பெண்ணோட படிப்பு வீணாப் போச்சே!" என்று எத்தனைப் பேர் சொல்வார்கள்?
வெட்கப்படுவதும், சேலை கட்டுவதும், இன்னமும் பல மென்மையான உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருந்தவள் பெண். இப்போது பெண் பெண்ணாக இருக்கவே தயங்குகிறாள்!
ஆண்களுக்கு நிகராக உடை அணிந்து, அவர்களைப் போல் நடப்பதும், பேசுவதும் தான் பெண் முன்னேற்றமா? அப்படின்னா ஆண்களை சேலை உடுத்த சொல்லலாமே!
"பெண் சிசுக் கொலை எத்தனையோ குறைந்து விட்டதே!" என்று பலர் சொல்லலாம். குறைந்து விட்டது தான் இதற்கு காரணம். பெண் முன்னேற்றம் இல்லை. கருவிலேயே பெண் என்று கண்டுபிடித்து அதை கொன்று விடுவது தான்!
24 வயது வைஷாலியும் இதைத்தான் செய்தார். காரணம் அவர் முதல் குழந்தையும் பெண் என்பதால் தான் என்கிறார். "எங்க மாமியார் வீட்டிலே அடுத்த குழந்தை பையனா இருக்கனும் அப்படின்னு ஆசைப்பட்டாங்க".
<b>விரும்பியோ, விரும்பாமலோ பெண்கள் இன்றும் ஆண்களின் நிழலில் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை!</b>
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom1.jpg' border='0' alt='user posted image'>
இவை தம் விடுதலை சுதந்திரம் பற்றி சாதாரண பெண்களின் உணர்வுகள்....!
நன்றி வெப்புலகம் டொட் கொம்...!
|
|
|
| கருணாவிடயத்தில் இந்தியத்தமிழர்களின் நிலை |
|
Posted by: aathipan - 04-13-2004, 03:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கையில் தமிழ் மக்கள் இறந்தபோதெல்லாம் செய்திவெளியிட மறந்த இந்திய ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி போன்ற டிவிகள் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தது முதல் அனைத்து செய்திகளையும் ஆரவாரத்ததுடன் வெளியிட்டது கவலை தருகிறது. இப்போது அவர்கள் அடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் செய்தது குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்தாலும் இந்தியத்தமிழ் மக்களிடையே மறைந்திருந்த மரத்துப்போயிருந்த புலிகளுக்கான ஆதரவை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது என்று சொல்லலாம். பெரிய பெரிய படித்த தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம் மனம் திறந்து தங்கள் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இதற்கு இநதிய உளவுத்துளை "ரா" தான் காரணம் என்றும் கூறி உண்மையை ஒத்துக்கொண்டனர்.
சாதாரண மக்களும் கருணா செய்தது தவறு அவன் போராட்டத்தையே குழப்பிவிட்டான் என பேசிக்கொண்டனர். அது மட்டுமன்றி கட்டுக்கோப்பான இயக்கம் கலைந்துவிட்டதே ஒரு களங்கம் விடுதலைப்புலிகளின் பெயருக்கு ஏற்பட்டுவிட்டதே என வருந்தியதைகாணக்கூடியதாக இருந்தது.
கருணாநிதி வழக்கம் போல ஏதாவது சொல்லியே ஆகவோண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் சகோதரயுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூறிவைத்தார். பாவாம் அவர் என்ன செய்வார் தேர்தல் நேரம். வைக்கோ மட்டும் தான் இதை நன்கு புரிந்துகொண்டு எல்லாம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ராமதாசு வாயைத்திறக்கவில்லை என நினைக்கிறேன். ரஐனி ரசிகளுடன் ஏற்பட்ட மோதலால் இதைப்பற்றி எண்ண நேரம்கிடைத்திருக்காது.
எதுஎப்படியோ மக்கள் புலிகள் பக்கம் எனபது தெரிந்துவிட்டது.
|
|
|
|