Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு சொல்லும் பாடங்கள்...!
#1
வரலாற்றுச் சம்பவங்கள் எவையுமே ஒருமுறை வந்து ஓய்ந்து விடுவதில்லை. அவை மீண்டும் மீண்டும் தன்னை கால மேடையில் அரங்கேற்றிய வண்ணமேதான் இருக்கின்றன. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் நடந்தேறிய சம்பவம் அண்ணளவாக அதே வடிவத்தில் இன்னொரு இடத்தில் இன்னொரு காலகட்டத்தில் நடந்தேறுகிறது என்பது கண் முன்னாலேயே காணக்கூடியதாக உள்ளது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றல்ல.

<img src='http://sooriyan.com/images/stories/karuna/french.jpg' border='0' alt='user posted image'>

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது நாசிப்படைகளுக்கு தனது தேசமான பிரான்சை அடைவு வைத்த மிகப்பெரிய தனது இராணுவ வீரனுக்கு யுத்தமுடிவில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.

மறேஷால் பெத்தன் எனும் பெயர் இன்றும் பிரஞ்சு மக்களினதும் பிரஞ்சுத் தேசத்தினதும் இழுக்குச் சின்னமாகவே கருதப்படுகிறது.

உலகப் புகழ் பிரஞ்சு இராணுவக் கல்லூரியான 'சன் சீர்" ன் சாதாரண இராணுவ வீரர் பிலிப் பெத்தன் 1914ம் ஆண்டில் வெறும் கேர்ணல் பதவிக்கு மட்டுமே உயர்ந்திருந்தார்.

ஆனால் முதலாவது மகாயுத்தத்தின்போது ஜேர்மனியப் படைகள் பிரான்சின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேர்தன் மலைப்பிரதேசத்தின் பாதுகாப்பு முன்னரண்களை தொடர்ந்து ஐந்து மாதங்களாக தீவிர தாக்குதல்களுக்கு உட்படுத்தியும் அவர்களால் அதைக் கைப்பற்ற முடியாதபோதிலும் பிரெஞ்சுப்படைகளின் மன உறுதி உடைந்த நிலையில் இப்பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு பிரிகேடியர் ஜெனரலாக
நியமிக்கப்பட்டதன் பின்னரே பிலிப் பெத்தனின் இராணுவ திறமைகள் வெளிப்படுகின்றன.

இக்காலத்தில் இராணுவ மட்டத்தில் நிலவிய ஒழுங்குச் சீர்குலைவுகளை நிவர்த்தி செய்து, புதிய நம்பிக்கையை தனது வீரர்களுக்கு ஊட்டிப் பல போர்முனைகளில் வெற்றியீட்டி, பிரஞ்சு இராணுவத்தை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தார் பிலிப் பெத்தன்.

1917ல் ஜெனரல் பெத்தன் தனது இராணுவச் சாதனைகளைத் தொடர்ந்து பிரஞ்சு இராணுவத்தின் அனைத்துப் பிரிவிற்கான கொமாண்டராக நியமனம் பெறுகிறார். இராணுவத்திற்குள் ஏற்பட்ட உள்ளெதிர்ப்பைச் சமாளிக்க 554 படையினருக்கு மரண தண்டனையை வழங்கும் கொமாண்டர் பெத்தன் இராணுவத்தைப் புனரமைத்து, புதிய வியூகங்களை உருவாக்கி 1918 நவம்பரில் பிரஞ்சு இராணுவத்தின் ஜேர்மனியின் மீதான இறுதிவெற்றிக்கு வழிவகுக்கிறார்.

வெற்றியைத் தொடர்ந்து பிலிப் பெத்தனுக்கு அதியுயர் இராணுவத் தேசிய விருதான 'மறேஷால்" பட்டம் வழங்கி பிரான்ஸ் அவரைக் கௌரவித்தது.

1925ல் மொறோக்கோ காலணிக்குக் கலவரத்தையடக்கப் பிரத்தியேகமாக அனுப்பப்படும் மறேஷால் பெத்தன், 1934ல் பிரான்ஸின் யுத்தத்திற்கான அமைச்சராகவும்
நியமிக்கப்படுகிறார். 1936ல் இவர் ஸ்பெயினுக்கான தூதுவராலய உயர் ஸ்தானிகராகவும் நியமனம் பெறுகிறார்.

1940 ஆண்டின் வசந்த காலம் பிரான்சுக்கு வசந்தமாகப் பிறக்கவில்லை. நாசிப்படைகள் பிரஞ்சு நிலப்பரப்பின் எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்தது. லட்சக்கணக்கில்
மக்கள் அகதிகளாகி இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிரஞ்சுப் படைகள் நாசிகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். தேசியம் சிதைந்து, மக்கள் அகதிகளாகச் சிதறியோடிக்கொண்டிருந்த வேளையில், அரசின் முக்கிய பதவிக்கு அழைக்கப்டும் மறேஷால் பெத்தன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது வரலாற்று முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, பிரான்ஸை எதிரிகளிடமிருந்து மீட்டதால் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, மக்கள் தன்மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையைப் பயன்படுத்தி, நாசிகளுடான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக்
கைச்சாத்திடுகிறார்.

நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் வட பகுதியை நாசிகளிடம் விட்டுவிட்டு, அதுவரை காலமும் அமுலில் இருந்த அரசியற் சாசனத்தையும் குடியரசையும் குப்பையில் போட்டுவிட்டு தெற்கில் தன்னைத் தலைமைப்படுத்திய ஒரு சர்வாதிகார அரசை நிறுவும் பெத்தன் நாசிகளுடன் கூட்டொப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்.

இந்நிலைக்கு எதிராக நாசிகளுடன் போரைத் தொடர்ந்து மேற்கொண்டு நாட்டை முழுமையாக விடுவிக்கவேண்டும் எனும் அழைப்பை ஜெனரல் து கோல் லண்டனிலிருந்து விடுத்து நாட்டுப்பற்றாளர்களைத் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இவருக்கெதிராக மறேஷால் பெத்தன் மரணதண்டனை வழங்கப்பட்டதாக அறிவிக்கின்றார்.

பெத்தனின் துரோகத்த தனம் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் புலப்பட, சார்ல் து கோல்ன் தலைமை மக்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரின் தலைமையில்
நேசநாடுகளின் உதவியுடன் இறுதியில் நாசிப்படைகளிடமிருந்து தேசம் விடுவிக்கப்படடது.

ஜேர்மனிக்குத் தப்பியோடிய மறேஷால் பெத்தன், பின்னர் சுவிசுக்குச் சென்று தன் விருப்பின் பேரில் மீண்டும் பிரான்சுக்கு வருகை தந்தார்.

பிரான்சின் மிகப்பெரிய வெற்றிகளையீட்டிய மறேஷால் பெத்தன், பிரஞ்சுத் தேசியத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இப்பெரு வீரர் இறுதியில் வீரியத்தை விட்டு, சுயநலத்திற்காக, கோழைத்தனமாக தனது தாய்மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களான நாஸிகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி நாட்டை நாசப்பாதையில் இட்டுச்சென்றது மட்டுமல்லாது, தேசத்தை விடுவிக்கப் போராடியவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து தேச ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்து தேச விடுதலையைத் தாமதமாக்கினார்.

தேசத்தையும் மக்களையும் இரண்டாகக் கூறுபோட்ட இந்தத் தேசத் துரோகிக்கு, இறுதியில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.


TamilNaatham and sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>மீண்டும் JR அரசின் தந்திரோபாயம்! </b>

தமிழர்கள் வசிக்கும் முக்கிய வெளிநாடுகளுக்குத் தமிழ்த் தூதுவர்கள்!! ஒரு நாட்டின் அரசானது அதனது நலன்கனைப் பேணவும், அதன் கொள்கைகளை நியாயப்படுத்தவும், வேறொரு நாட்டிற்கு அதன் வதிவுத் தூதர்களை அனுப்பிச் செயற்படவைக்கிறது. இவைகளைச் அரசு சார்பாகச்; சிறந்த முறையில் செய்ய, நம்பிக்கையான முறையிலும், விசுவாசகமாகவும் செயற்படக்கூடியவர் எனக் கருதப்படுபவரை அது தேர்ந்தெடுத்து, வதிவுத் தூதுவரா வெளிநாட்டிற்கு அனுப்புகிறது.

ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை நடாத்திவரும் இன்றைய காலகட்டத்தில், தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளுக்கு அனுப்பப்படும் வதிவுத் தூதுவர்கள், இலங்கை அரசின் நலன்களைப் பேணவும், இலங்கை அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும், முக்கிய ஒரு வேலையைச் செய்யவேண்டியுள்ளது. அது என்னவென்றால், <b>குறிப்பிட்ட அந்த நாட்டில் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிக்கும் தமிழ் மக்களின் விபரங்களை இரகசியமாகச் சேகரித்தும், அவர்களின் செயற்பாட்டுத் திட்டங்களை இரகசியமாக அறிந்தும், அவற்றை ஆராய்ந்து, அரசுக்கு அறிவிப்பதும், முறியடிப்பு வேலைகளையும், எதிர் பிரசாரங்களையும்; செய்வதுமாகும்</b>!

இந்தநிலையில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் பெருமெண்ணிக்கைகளில் வாழும் நாடுகளுக்கு, கற்றோர்கள், பெரியோர்கள் எனக் கருதப்படும் தமிழர்களை வதிவுத் தூதுவர்களாக அனுப்பி, தமிழ் பேசும் மக்களிடையே ஊடுருவல்களை மேற்கொண்டு, தகவல்களைச் சேகரித்தும், எதிர்ப்பிரசாரங்களைச் செய்தும், முறியடிப்பு வேலைகளைச் செய்வதே, தந்திரோபாயமானது.

1977ஆம் ஆண்டின் பின்னர் JR அரசால் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயத்தினை, இன்றைய அரசு கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

1977ஆம் அண்டில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள்மீது சிங்களத் தீவிரவாதிகளால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர்கள் தீவிரவாதிகளாக ஆகுவதைத் தடுக்க, JR அரசானது வெளிநாட்டுப் பணத்தை (Foreign Exchange) வழங்கி, தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு வெளியேறி, பிற நாடுகளுக்குச் செல்வதை ஊக்குவித்தது.

இதனால் பல்லாயிரக்கணிக்கான தமிழ் இளைஞர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்து சென்றனர்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்குத் தரை மார்க்கமாகச் சென்றிருந்த தமிழ் இளைஞர்கள், இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத போக்கை நன்கு உணர்ந்திருந்த நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் புதிதாக அடைந்திருந்த தமிழ் இளைஞர்களை அரசியல் தஞ்சம் கோர உதவி, அவர்களிடமிருந்து பெறப்பட்ட சிறு நிதியுதவிகளைக் கொண்டு, இலங்கை அரசியலை அந்தந்த நாட்டு அரசுகளுக்கும்;, அமைப்புக்களுக்கும் விளக்கவும், விடுதலைப் போராட்டத்திற்கான பிரசாரங்களைச் செய்யவும் திட்டமிட்டுச் செயற்பட ஆரம்பித்திருந்ததுடன், இந்த நாடுகளில் தமிழ் பேசும்; மக்களுக்கெனச் சட்டரீதியலான அமைப்புக்களையும் உருவாக்கித் திட்டமிட்ட விதத்தில் செயற்பட்டனர்.

தமது தந்திரோபாயம் முறியடிக்கப்படுவதை உணர்ந்த துசு அரசானது, எதிர் முறியடிப்பு வேலைகளைச் செய்ய, இரண்டு காரியங்களைச் செய்தது. அவையாவன:

1. மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்களை வதிவுத் தூதுவர்களாக அனுப்பி, தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவல்களைச் செய்து, தமிழர்களின் திட்டங்களை அறிந்து, முறியடிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்த முயன்றமை Idea

2. தமிழர் கூட்டணியின் தலைவரையும், MP களையும் இந்நாடுகளுக்கு அனுப்பி, இளைஞர்களைப் பிரித்து, தமக்கு ஆதரவாக தமிழர் அமைப்புக்களை ஆரம்பித்துச் செயற்பட முயற்சித்தமை. Idea

அதிஷ்டவசமாக, யாழ்குடாவின் சுயநல அரசியல்வாதிகளின் கெடுபிடிகளால் துன்பமான அனுபவங்களைப் ஏற்கனவே பெற்றிருந்த பல இளைஞர்கள் இந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வந்ததால், JR அரசினதும், தமிழர் கூட்டணியினதும் சதிவேலைகளை முறியடித்து, தமிழர்களது விடுதலைப் போராட்டம் முன்னேற வழிகோலியிருந்தனர்.

<b>இன்று இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டமானது அதனது மிக முக்கிய கட்டத்தினை அடைந்துள்ள வேளையில், தமிழர்கள் பெருமளவில் வாழும் வெளிநாடுகளில் சதி, நாசகார வேலைகளைச் செய்யவும், இரகசியமாகத் தகவல்களைத் தமிழர்கள் மத்தியிலிருந்து பெற்று, முறியடிப்பு வேலைகளைச் செய்யவும், எதிர்ப்பிரசாரங்களை மேற்கொள்ளவும் தமிழர்களால் கற்றோர், பெரியோர் எனக் கருதப்படுபவர்களை அந்த நாடுகளில் வதிவுத் தூதுவர்களாக நியமிக்கும் திட்டமானது இன்றைய அரசினால் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது. சில நாடுகளுக்கான தூதுவர்கள், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டும் உள்ளதாக அறிய வருகிறது.</b>

இதில் வியப்பானது என்னவெனில், இந்த நாசகார, சதி வேலைகளில் அரசுக்கு விசுவாசமாகச் செயற்படக்கூடியவர்கள் எனக் கருதப்படும் சிலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவர்களாக இருப்பதும். <b>தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தாம் ஆதரவு அளிப்பதுபோலவும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் தாம் அக்கறை உடையவர்களாகவும் மேடைகளிலுடாகவும், தினசரிகலுடாகவும் காட்டிவந்தவர்களுமாகும்</b>!

இந்தநிலையில், கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களும், விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துச் செயற்படுபவர்களும், <b>அரசினால் தூதுவர்களாகப் பதிதாக அனுப்பப்படும் தமிழர்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்காளால் மேற்கொள்ளப்படவுள்ள முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத் தம்மைத் தயார்ப்படுத்வேண்டியுள்ளது.</b>

அடக்குமுறையாளர்களதும், கைக்கூலிகளினதும் செயற்பாடுகளை தமிழ் பேசும் மக்கள் இன்னும் அறியாத முட்டாள்களாகத்தான் உள்ளனர் என இவர்கள் கருதுவது, நகைப்புக்கிடமானது!

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டமானது இவர்களைப் போன்ற பலரை ஏற்கனவே கண்டுவந்துள்ளது என்பதும் அவதானிக்கத் தக்கது!

ஆனால், விடுதலைப் போராட்டம் முன்னேறியவாறுதான் உள்ளது! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

யாழிலிருந்து சாணக்கியன
TamilSociety.com
Reply
#3
<b>சமாதானத்தின் பெயரால் ஏமாற்றப்பட்ட
பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்</b>-
<i>பெ.முத்துலிங்கம்-</i>


நான்கு தசாப்தங்களாக பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிய யசீர் அரபாத் தம் மக்கள் சுதந்திரமான புூமியில் வாழ்வதினைக் காணாமலே மறைந்து விட்டார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரை பலஸ்தீன விடுதலைப் போராட்டமும், தென்னாபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்ற போராட்டங்களாகும்.

இப் போராட்டங்களில் பலஸ்தீன போராட்டம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இஸ்ரேலிய மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகத் தோன்றியதொன்றாகும். நாடற்றவர்களாக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு நாடு வழங்கும் முயற்சியின் விளைவால் பலஸ்தீனியர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். தாம் இழந்த நாட்டினை பெறுவதற்காக போராடிய பலஸ்தீன மக்கள் பல நாடுகளில் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் ஆதரவும், இராணுவப் பயிற்சியும் அளித்து வந்தனர்.

<i>பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக பல்வேறு போராளி குழுக்கள் ஆயுதமேந்தி போராடிய போதிலும் யசீர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கமே அங்கீகரிக்கப்பட்ட விடுதலை இயக்கமாக கருதப்பட்டது.</i> சமாதானப் பேச்சுவார்த்தையின் போது யசீர் அரபாத்தின் தலைமையிலான இயக்கத்துடனே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அரசியல், ஆயுத இயக்கத்திற்கு தலைமையளித்த சிறந்த அரசியல் இராணுவ மூலோபாயவாதியான யசீர் அரபாத் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது மிகக் கவனமாக தனது நகர்வுகளை மேற்கொண்டாராயினும், சோவியத் யுூனியனின் வீழ்ச்சியின் பின்னர் தோன்றிய சர்வதேச நிலைமையை கருத்திற் கொண்டு, மேற்கொண்ட நகர்வில் தோல்வி கண்டாரென்றே கூற வேண்டும்.

தொண்ணுாறுகளில் சோவியத் யுூனியன் வீழ்ச்சியுற்றப் பின் தோன்றிய சர்வதேச தனிபலத்தைக் கருத்திற் கொண்டு, முன்னெடுக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையில் யசீர் அரபாத் கலந்துகொண்டார். இச்சந்தர்ப்பத்தில் ஏனைய போராளிக் குழுக்கள் இதனை எதிர்த்த போதும் யசீர் அரபாத் புதிதாக தோன்றியுள்ள சர்வதேச தனிப்பலத்தையும், அதன் கைக்கூலியாக செயற்பட்டு வரும் இஸ்ரேலினையும் கருத்திற் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

<b> பேச்சுவார்த்தைக் காலங்களில் பலஸ்தீன இயக்கம் இராணுவ ரீதியில் பலவீனமடைந்ததுடன், பேச்சுவார்த்தையின் இறுதியில் தாம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட விடுதலைப் பிராந்தியத்தை விட சிறிய பிராந்தியத்தில் பலஸ்தீன நாட்டினை உருவாக்கிக் கொள்ள யசீர் அரபாத் சம்மதிக்க நேர்ந்தது. </b> Idea

<b>பலஸ்தீனர்கள் வாழ்ந்துவந்த பிரதேசங்களில், இஸ்ரேல் கடந்த நான்கு தசாப்தங்களாக குடியேற்றங்களை மேற்கொண்டமையினால் அகண்ட பலஸ்தீனத்தை இழக்க வேண்டிய சூழலுக்கு யசீர் அரபாத் தள்ளப்பட்டார். </b>Idea

<b>தோன்றியுள்ள புதிய இராணுவ சமபலத்தைக் கருத்திற் கொண்டு யசீர் அரபாத் சிறிய பலஸ்தீன நாட்டிற்கு இணங்கிய போதிலும் அந்நாட்டினை நடத்திச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. சமாதான உடன்படிக்கையில் இணங்கியவாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஐந்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டது. </b> Idea

இந்நிலையில் ஏனைய விடுதலைக் குழுக்கள் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டன. இதனைச் சாட்டாக கொண்டு இஸ்ரேல் பதில் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், யசீர் அரபாத்தின் இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு, கடந்த இரண்டரை வருடங்களாக அவரை அவரது இராணுவ முகாம்களுக்குள்ளேயே முடக்கி வைத்தது நோய்வாய்ப்பட்டு பாரிஸிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை அதற்குள்ளேயே யசீர் அரபாத் வாழ நேர்ந்தது.

<b> பலஸ்தீனத்தின் தந்தையான யசீர் அரபாத் இவ்வாறு திறந்த சிறைக் கைதியாக்கப்பட்டவேளை, சமாதானப் பேச்சுவார்த்தையை ஊக்குவித்த நோர்வேயும் ஏனைய நாடுகளும் யசீர் அரபாத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை முறியடிக்க முன்வரவில்லை. </b> Idea

சமாதானத்திற்கான நோபல் பரிசை யசீர் அரபாத்திற்கு வழங்க சிபாரிசு செய்த எந்தவொரு நாடும் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. ஈற்றில் பலஸ்தீன நாட்டிற்காக ஆயுதமேந்தி போராடிய யசீர் அரபாத், சமாதானத்திற்கு இணங்கிய போதிலும் சுதந்திர பலஸ்தீனத்தைக் காணாமலே இறந்துவிட்டார். சமாதானம் என்ற போர்வையில் யசீர் அரபாத் ஏமாற்றப்பட்டுள்ளார். :evil: Cry


யசீர் அரபாத்திற்கு நடந்த இச்சம்பவம் ஏனைய விடுதலை இயக்கங்களுக்கும் நல்ல பாடமாகும். Idea

<b>சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போதும் ஒரு போதும் தமது இராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. குறிப்பாக தமது இராணுவ பலத்தினை சமச்சீருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்துக் கொண்ட அமைப்புகளே ஈற்றில் வெற்றி பெறும் நிலைப்பாட்டினை அடைந்துள்ளன.</b>

1975 ல் வெற்றி பெற்ற வியட்னாம் 1960 களிலும், 1970 களிலும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இராணுவ பலத்துடனே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதுவே அதன் புூரண வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 1990இல் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ{ம் இவ்வாறான நிலைப்பாட்டினையே கடைப்பிடித்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தமது இராணுவப் பலத்தை வைத்துக் கொண்டே இறுதித் தீர்விற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால், யசீர் அரபாத் அவ்வாறானதொரு நிலையை தொடர்ந்து பேணவில்லை. அதுவே எதிர்தரப்பு அவரையும் அவரது இயக்கத்தினையும் கண்டு அஞ்சாது தாம் கொடுப்பவைகளை பெற்றுக் கொள்ளும் நிலைக்குத்தள்ளியது.

<b><i>இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியாத விடுதலை போராட்டங்களை சமாதான என்ற ஆயுதம் மூலமாகவே இன்றைய முதலாளித்துவம் வெற்றி கண்டுள்ளது. </i></b>சோஷலிச போராட்ட அமைப்புகளாயிருந்தாலென்ன தேசிய விடுதலை அமைப்புகளாயிருந்தாலென்ன, சமாதானம் எனும் பொறிக்குள் சிக்கியே முதலாளித்துவவாதிகளின் விருப்பிற்குட்பட்ட தீர்வினைப் பெற்றுள்ளன. கடந்த இரண்டு தசாப்தத்தில் உலக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மட்டுமே தமது விருப்பிற்கமைவான வெற்றியை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றுள்ளது.

எனவே யசீர் அரபாத்தின் அனுபவத்தை விடுதலை அமைப்புகள் கருத்திற் கொள்ள வேண்டும். <i>பலஸ்தீன இஸ்ரேல் சமாதானப் பேச்சுவாத்தையை முன்னெடுக்கப் பிரதானப் பங்குவகித்த நோர்வே, யசீர் அரபாத் பகிரங்கமாக சிறைவைக்கப்பட்டவேளை, அவரை மீட்பதற்கு து}து செல்லவில்லை</i>.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருவதாக கூறும் நோர்வே போன்ற நடுநிலை நாடுகள் ஈற்றில் குறிப்பிட்ட நாட்டின் முதலாளித்துவத்தினை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரலையே கொண்டிருக்கும். ஆரம்பத்தில் போராட்ட குழுக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கடைப்பிடித்து சமாதான பொறியில் சிக்கவைப்பதை தமது நோக்காக கொண்டிருக்கும். இலங்கையின் விடுதலை அமைப்புகளும் விதிவிலக்கல்ல. இன்று விடுதலைப் புலிகள் அமைப்பும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட செய்வதில் நோர்வே வெற்றிக் கண்டுள்ளது.

படிப்படியாக அவ்வியக்கத்தையும் சமாதான பொறியில் சிக்கவைத்து ஈற்றில் முதலாளித்துவ அரசினால் தருவதை பெற்றுக் கொள்ளும் நிலைக்குச் கொண்டு செல்ல முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

மோதல் தவிர்ப்பு நடவடிக்கையில் அல்லது மோதல் பரிமாற்றம் என்ற செயற்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் கடைப்பிடிக்கும் முதலாவது உபாயம் மோதல் தவிர்ப்பினை கூடிய காலம்வரை கொண்டு செல்வதாகும். இதன் நோக்கம் போராட்ட அமைப்புகளை இராணுவ மனோ ரீதியாக பலவீனப்படுத்துவதாகும்.

பலஸ்தீன மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர கெரில்லா வீரனாக புறப்பட்ட யசீர் அரபாத் ஈற்றில் சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவராக மடிந்தார். ஆனால் அவரால் தமது மக்களுக்கு புூரண விடிவினை பெற்றுத் தர முடியாது போய்விட்டது.

சமாதானம் எனும் பொறியில் தாம் சிக்குண்டதை உணர்ந்தவுடன், அதிலிருந்து மீள பிரயத்தனங்களை முன்னெடுத்த போதும் உள்ளக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் காணப்பட்ட சுூழ்நிலை அதற்கு இடமளிக்க வில்லை. சர்வதேச ஆதரவு இராணுவ மோதலுக்கு கிடைக்கவில்லை. மாறாக இடைக்கால கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கே கிடைத்தது. இவ் அபிவிருத்திக்கான உதவிகள் ஒரு புறமும், மறுபுறம் சமாதானத்தை நீடிக்கும் படியான அழுத்தமுமே சர்வதேச ரீதியாக அதிகரித்தது. இதன் பிரதி விளைவு தரப்படுவதை பெற்றுக் கொள்ளும் நிலைக்கே வழிவகுத்தது. சமாதான தந்தையாகப் பரிமாற்றமடைந்த பலஸ்தீனத்தின் தந்தை பலஸ்தீனத்தை காணாமலேயே இறந்துவிட்டார். இதுவே சர்வதேச சமாதானத் தீர்வு தரும் படிப்பினை. Idea

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (14.07.04)
Reply
#4
வரலாறு...?...தெரிந்தும்....பாதை மாறுபவர்கள்...ஏராளம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)