| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 163 online users. » 0 Member(s) | 160 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| சாயிபாபா பற்றிய புலனாய்வு நிகழ்ச்சி |
|
Posted by: AJeevan - 06-19-2004, 08:54 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (12)
|
 |
<b>சாயிபாபா பற்றிய புலனாய்வு நிகழ்ச்சி</b>
:? "யேசுவாகவும் ,புத்தனாகவும், உலக மதத்தை தோற்றுவித்தவராக எண்ணிய சாயிபாபாவை, நான் நேரடியாக பார்க்க எண்ணி, 21வருடங்களுக்கு முன் அவரை நான் என் மனக் கண்ணால்தான் பார்க்க ஆசைப்பட்டேன். அவரைப் பார்த்தால் மனதில் ஓர் அதிர்வு ஏற்படும்........................."
:oops: "சாயிபாபாவை இவ்லகின் தேவன் என எண்ணியிருந்த எனக்கு, என் மகனை இப்படிப் பண்ணியிருப்பதாகத் தெரிந்த போது........................."
தொலைக் காட்சிக்காக தயாரிக்கப்பட்ட புலனாய்வு நிகழ்ச்சியின் வானோலி வடிவம் நாளை (20.06.2004) BBCதமிழ்ஒலியில்..............................
http://www.bbc.co.uk/tamil/2115.ram
|
|
|
| எப்ப வருமோ டாட் காம்! |
|
Posted by: vasisutha - 06-19-2004, 04:10 AM - Forum: நகைச்சுவை
- Replies (8)
|
 |
அடடா, எவ்வளவு தகவல்கள் இணையதளங்களில். அதுவும், மிக மிக ரகசியமானவைகூட. மெயில் பாக்ஸýக்குள் நுழைந்த போது, "மிக ரகசியமான இ.மெயில் முகவரிகள்' என்ற தலைப்பில் ஒரு புதிய மெயில். அதுவும், நம் கோடம்பாக்கத்து கனவு நட்சத்திரங்களின் முகவரிகள். தனது "கற்பனை'யில் கண்டுபிடித்து உலகம் முழுவதும் அனுப்பியிருக்கிறார் ஒரு குறும்புக்காரர். இதை சீரியஸôகக் குறித்து வைக்காமல், சிரித்து மகிழுங்கள். ஜஸ்ட் ஃபார் தமாஷ்!
[ரஜினிகாந்த்: superstar@futurecm.com
கமல்ஹாசன்: marudhanayagam@eppavarumo.com
ரம்பா: thunderthighs@bhadhalagoor.org
தேவயானி: nee_yallam@herione.com
சின்னி ஜெயந்த்: Silpaans@gilmaa.com
பிரபுதேவா : aaduraraasa@boneless.com
விஜய் : stylemannan@nenappu.com
அப்பாஸ்: handsome@flop.com
வெண்ணிறஆடைமூர்த்தி:thambriiiii@thambri.com
சத்யராஜ் :lollu@mollamari.com
பிரகாஷ்ராஜ் : orey@overacting.org
ஏ.ஆர். ரஹ்மான் : tamilkolai@godisgreat.com
இளையராஜா : outdated@genius.com
கவுண்டமணி : naye_naye_naye@naye.com
மணிவண்ணன் : thaadi@thathuvam.thanni.com
தேவா : copyisaithendral@gaana.com
அஜீத் : kmannan@oreex-pressions.com
சரோஜா தேவி : ath-thaan@daivam.com
கஜோல் : sema_figure@nach.com
தேங்காய் சீனிவாசன் : silupusipan@ kalai.org
மணிரத்னம் : Keeps his Mail ID secret
விஜயகாந்த் : inspector@tamilnattupolice.com
பி.சி. ஸ்ரீராம் : oli@irul.com
ராமராஜன் : pasunesan@araidrawer.org
மோகன் : mohan@mike.org
த்ரிஷா : Superfigure @ lovable.com
இது எப்படி இருக்கு?
dinamani,com
|
|
|
| ஒரு விபரீத ஜோடி! |
|
Posted by: vasisutha - 06-19-2004, 02:58 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (109)
|
 |
<b>[size=18]பொண்ணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணமாம்?!
கேர்ள் ஃப்ரண்ட் என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை கிளப்பியிருக்கிறது. லெஸ்பியன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது.
இரண்டு பெண்கள் படுநெருக்கமாக உறவாடுவதாக காட்டப்படுவது நம் கலாச்சாரத்தையே குழிதோண்டிப் புதைப்பதுபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை அனுமதிக்க மாட்டோம்.. என்று சொல்லி, மும்பையில் இந்தத் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் எதிரில் போராட்டம் நடத்துகிறது சிவசேனா கட்சி. ஒரு தியேட்டர் கொளுத்தப்பட்டு விட்டது.
வளர்ந்த நாடுகளே வெறுக்கும் முறையற்ற உறவை, ஆணும் பெண்ணுமான குடும்ப அமைப்பில் மாறா நம்பிக்கை கொண்ட இந்தியாவில் திணிப்பது எந்தவகையில் நியாயம்? என்று கொதிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஸன்.
இப்படி ஒரு திரைப்படத்துக்கே பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இரண்டு பெண்கள் கணவன் & மனைவியாகவே வாழ்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு சட்டபூர்வமான அனுமதியும் தந்திருக்கிறது! எங்கோ அமெரிக்காவில் அல்ல. சில நூறு கிலோ மீட்டருக்குள் இருக்கிற கேரளாவில்!
<img src='http://www.vikatan.com/aval/2004/jul/02072004/p9.jpg' border='0' alt='user posted image'>
திருவனந்தபுரம் அருகே வசிக்கும் நந்துவும் ஷீலாவும்தான் அந்த விபரீத ஜோடி!
காதலுக்கு கண்ணில்லைனுதான் கேட்டிருக்கேன். எம்பொண்ணுக்கு அறிவே இல்லாம போச்சு என்று நந்துவின் பெற்றோரும், எங்களைப் பார்த்து ஊரே சிரிக்கும்படி பண்ணிட்டா.. என்று ஷீலாவின் பெற்றோரும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்க..
அப்படி எதுவும் நாங்க தப்பா செஞ்சிடல.. என்று தீர்மானமான குரலில் சொல்கிறது இந்த ஜோடி.
கடந்த ஆண்டு இவர்களின் முறையற்ற காதல் வெளியே தெரிந்ததுமே சலசலப்பு எழுந்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் போராட, கடைசியில் நீதிமன்றமே இவர்கள் இணைந்துவாழ அனுமதி அளித்துவிட்டது!
கிரீம் கலர் டைட் பான்ட், செக் ஷர்ட், இடுப்பை இறுக்கி வைத்திருக்கும் பெல்ட்.. பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து ஸ்டைலாக முடிவாரி, மூக்குக் கண்ணாடி வழி பார்வையை கம்பீரமாக்கி, காலுக்கு மேலே கால் போட்டு நந்து நம்முன் பேச உட்கார்ந்ததைப் பார்த்து நாமே ஒரு நிமிடம் சந்தேகித்தோம். அச்சு அசல் டீனேஜ் பையன் மாதிரி இருந்தார்(ள்!).
நந்துவுக்கு நேர்மாறு ஷீலா! பெண்மைக்கே உரிய அடக்கம், மென்மை, பய உணர்வோடு பவ்யமாக நந்துவின் அருகே அமர்ந்தார்.
நந்து முழுக்க முழுக்க ஒரு ஆணைப்போல பாவனை செய்துகொண்டு ஆக்ஷன் கொடுக்க, பேச ஆரம்பித்ததும் பேச்சிலும் ஒரு வேகம், ஆதிக்கம் தெரிந்தது. எங்க வீட்ல ஆம்பள பொம்பள வித்தியாசமில்லாமத்தான் எங்களை வளத்தாங்க. நான் ஷீலாவ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் அப்பா கத்தினாங்க. பிடிக்கலை. வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். ஆனா, திடுதிப்புனு ஷீலாவ கூட்டிகிட்டுப் போவேனு யாரும் நினைச்சுப் பாக்கல. எங்களோட காதல்ல எந்த தப்பும் இல்லைனு நம்பறோம். அதை இந்த சமூகம் விமரிசனம் பண்ணினா அதைப் பத்தியும் நாங்க கவலைப்படறதா இல்லை.. என்று எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாகப் பேசியவர்,
சிவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உருவானவர்தானே ஐயப்பன்? அப்படி உருவான கடவுளை கும்பிடற இந்த சமூகம் எங்களை எந்த முகத்தோடு விமரிசனம் பண்ணுது? பகவான் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும்கூட அப்படி ஒரு ஆசை இருந்ததே?
நாங்க ரெண்டு பேருமே திருப்தியா இருக்கோம். ஸ்னேகபூர்வம்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். உள்ளம் ஒண்ணாவும் உருவம் வேறாவும் இருந்து எங்களை மாதிரி அவஸ்தைப்படறவங்களுக்கு உதவி செய்யத் தயாரா இருக்கோம்.. என்றார் படபடவென.
நந்து பேசுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஷீலா, வாய் திறந்தார்..
நான் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தப்ப, ஒரு கல்யாணத்திலதான் நந்துவை சந்திச்சேன். முதல்ல பாத்தப்ப பையன்னுதான் நெனச்சேன். அப்புறம்தான் பொண்ணுனு தெரிஞ்சது. பழகினோம். நல்ல தோழிகளானோம். அடிக்கடி சந்திச்சு பேசவும், நட்பு காதலா மாறிடுச்சு.. என்றவர் தொடர்ந்தார்..
நந்து என்னைக் காதலிக்கறதா சொன்னப்ப நிஜமாவே சந்தோஷப்பட்டேன். எனக்கு வரவேண்டிய புருஷன் எப்படி இருக்கணும்னு என் மனசுல நினைச்சேனோ அதே உருவம் நந்துவுக்கு. என் வீட்டுல விஷயம் தெரிஞ்சதும் அட்டகாசம் பண்ணினாங்க. வீட்டுல இருந்து துரத்திவிட்டாங்க. கவலையே படலை. எனக்கு தோள் கொடுக்க நந்து இருந்தா.. என்றவர், தாங்கள் சந்தித்த போராட்டங்களை அடுக்கினார்.
முதல்ல எங்க அப்பாதான் போலீஸ்ல புகார் கொடுத்தார். இயற்கைக்கு விரோதமான குற்றம் செஞ்சதா எங்க மேல போலீஸ் வழக்கு பதிவு செஞ்சது. ஆனா, வழக்கு பதிவு பண்ணதுல இருந்த தப்பை சுட்டிக்காட்டி நீதிபதி எங்களை விட்டுட்டாரு.
அதுக்கப்புறம் ஊர்க்காரங்களும், எங்க வீட்டுக்காரங்களும் சேர்ந்து நந்து போதை மருந்துக்கு அடிமைனு பொய்ச் செய்தியை பரப்பினாங்க. கள்ளக் கடத்தல்ல எங்களுக்கு பங்கு உண்டுனு குற்றம் சுமத்தி ஜெயில்ல வைக்கப் பாத்தாங்க. அப்பதான் சகயாத்திரிகானு ஒரு இயக்கம் இருக்கறது எங்களுக்கு தெரிஞ்சது. அதில் உறுப்பினரா இருக்கும் டாக்டர் ஜெயஸ்ரீயும், மைத்திரேயனும் எங்களுக்கு உதவினாங்க. அவங்க மட்டும் இல்லேன்னா நாங்க எப்பவோ தற்கொலை செஞ்சிருப்போம்..! என்று அவர் சொல்லிமுடித்தபோது, அங்கே வந்தார் டாக்டர் ஜெயஸ்ரீ (இவரது பாதுகாப்பில்தான் நந்துவும் ஷீலாவும் இருக்கிறார்கள்).
நாற்பத்தேழு வயதாகும் டாக்டர் ஜெயஸ்ரீயை புரட்சிப் பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள் கேரளாவில். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண் களுக்காகவே ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அவர்களுடைய பிரச்னைகளை சமுதாயத்தின் முன் புட்டுப்புட்டு வைத்தவர். இப்போது லெஸ்பியன் ஜோடிக்கு அடைக்கலம் தந்திருப்பதால் மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார்.
ஜெயஸ்ரீயிடம் பேசியபோது, என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன பண்ணுவேனோ அதைத்தான் நந்து&ஷீலா விஷயத்திலயும் செஞ்சேன்.. என்றவர், ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் புதுசா முளைச்ச விஷயமல்ல. எல்லா காலத்திலயும் இருந்துட்டுத்தான் இருக்கு.
சும்மா கொழுப்பெடுத்துப் போய் இப்படி பண்ணுதுங்கனு எல்லோரும் விமரிசனம் பண்றாங்க. அவங்களோட மனசை யாரும் பார்க்கறதில்லை. மரபுக் கோளாறுகளால் வர்ற குழப்பம் இது. குழந்தை பிறக்கும் முன்னே நிர்ணயிக்கப்பட்ட விஷயம். இதில் அவங்க தப்பு எதுவுமே இல்லே. உடல் உறுப்புக்கள் பெண்போல இருந்தாலும் மனசெல்லாம் ஆண் போலத்தான் இருக்கும். காதல் கனவுலகூட பெண்கள்தான் வருவாங்க. சொல்லப்போனா, இது அந்த பொண்ணுங்களோட விருப்பமே இல்லாம அவங்கமேல விதி திணிச்ச விஷயம். இதைப் புரிஞ்சுக்காம சமுதாயம், சட்டம், குடும்பம்னு எல்லாம் ஒண்ணுசேர்ந்து அவங்களை எதிர்த்தா என்ன பண்ணுவாங்க? செத்துடுவாங்க. அநியாயமா அதுக்கு அனுமதிக்கலாமா? என்று விரிவாகவே பேசினார் ஜெயஸ்ரீ.
சகயாத்திரிகா என்ற அமைப்பு பற்றி விவரித்த ஜெயஸ்ரீ, தேவிகாமேனன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்தறாங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் உணர்வுகளை வெளியே சொல்ல முடியாம, தற்கொலை பண்ணிக்க நினைக்கிறாங்க பலபேர். அவங்களுக்கு முறையான தெளிவை தர்றதுதான் இந்த அமைப்போட நோக்கம். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், பேராசிரியர்கள் இப்படி பல பெரிய மனிதர்கள் இங்கே வர்றாங்க. அவங்களுக்கு செமினார் வகுப்பு நடத்தறோம்.. என்றார்.
நந்து & ஷீலா தம்பதி பக்கம் திரும்பினோம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒண்ணு சேந்துட்டீங்க. உங்களோட வருங்காலம் எப்படி இருக்கணும்னு ஆசைப்படறீங்க? என்று கேட்டோம்.
இப்ப சமூகசேவை மையத்தில வேலை செய்யறோம். சம்பளம் வருது. இன்னும் நல்ல வேலையா பார்க்கணும். அமெரிக்காவிலிருந்து சிலர் எங்களைப் பத்தித் தெரிஞ்சு கிட்டு வேலை தர்றதா சொல்லியிருக்காங்க. எங்கே போனாலும், பிரிஞ்சுடாம நாங்க ஒற்றுமையா வாழணும்.. அதான் ஆசை! என்று நந்து நிறுத்த,
ஒரு வீடு கட்டணும். ஒரு குழந்தையை தத்து எடுக்கணும். குடும்பமா வாழணும்.. என்று சொன்ன ஷீலா குடும்பம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்தவராக சிறிது தடுமாறினார்!
===================
[b]மரபுக் கோளாறு மட்டுமல்ல..!
</b>
<i>டாக்டர் ஜெயஸ்ரீயை போலவே, ஹோமோ செக்ஸில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இயங்குகிறார் திருவனந்தபுரம் எஸ்.யூ.டி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல நிபுணர் பி.பி.எஸ்.சந்த். அவரைச் சந்தித்தபோது,
என்னோட ஆராய்ச்சியின்படி நாற்பது சதவீதம் பேர் இப்படி ஒரே பாலின விருப்பத்தோடு இருக்காங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் மனநோயாக இருக்கும்னு எண்ணி அதை ஒரு நோயாகத்தான் நினைக்கிறாங்க பலர்.
என்கிட்ட வர்ற நோயாளிகளில் பலர் சொல்லும் காரணங்கள் நாம் சமுதாயத்தில் ஆராய்ந்து மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியவை. கல்யாணம் ஆனவர்கள் தான் ரொம்பவும் பாதிக்கப்படுறாங்க. கணவருக்கு மனைவி மீதோ, மனைவிக்கு கணவன் மீதோ ஈர்ப்பில்லாம சண்டை சச்சரவும் வந்து, விவாகரத்துல போய்க்கூட முடிஞ்சிருக்கு. ஆனால், வெளிப்படையாக நான் ஒரு ஹோமோசெக்ஸ் பிரியன்னு சொல்லிக்க பயப்படறாங்க. காரணம் சமூகம் வீசும் அவச்சொற்கள்..!
லெஸ்பியன் உணர்வு வர மரபுக் கோளாறு மட்டும்தான் காரணம்னு சொல்லிட முடியாது. அப்பா அம்மாவை படுத்தும் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆண் ஆதிக்கம், சுதந்திரம் பறிபோகுமோ என்கிற அச்சம்.. இதெல்லாம்கூட உள்ளுக்குள் ஊறி பெண்துணையே பாதுகாப்புங்கிற எண்ணத்தை உருவாக்குதுனு நம்பறேன்..</i>
avalvikatan,com
|
|
|
| முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம் |
|
Posted by: AJeevan - 06-18-2004, 11:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (29)
|
 |
இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு இனங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என
<span style='font-size:25pt;line-height:100%'>ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்தின் நல்லெண்ணத்தைப் பரப்பும் தூதுவராக
நியமனம் பெற்றிருக்கும்
<img src='http://www.webdunia.com/sports/photogallery/2002_01/images/2Muttiah%20Muralitharan.jpg' border='0' alt='user posted image'>
முத்தையா முரளீதரன் </span>
கூறியுளார்.
முரளீதரனுக்கு வாழ்த்துகள் . . . . . . . . . . . . .
AJeevan
_______________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்
|
|
|
| நிறக்குருடு . . . . . . . . . |
|
Posted by: AJeevan - 06-18-2004, 10:47 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
நிறக்குருடு . . . . . . . . .
<img src='http://www.tamillinux.org/venkat/myblog/archives/color_cones.png' border='0' alt='user posted image'>
என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தில் வருங்காலத்தில் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக தகவமை ஒளியியலைப் (Adaptive Optics) பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சாதாரணமாக நல்ல பார்வை உள்ளவர்களுக்கும் தகவமை ஒளியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளைத் தருவதன் மூலம் அவருடைய பார்வைய உயர்த்த முடியும் என்பது 'அதிபார்வை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையின் முக்கிய தகவல். அதாவது, இது நாள் வரை நாம் இயற்கையாக மனிதனின் பார்வைத் திறன் என்று அறிந்திருந்ததை இன்னும் கொஞ்சம் நீட்டித்து கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்துவது.
அந்தக் கட்டுரையின் கதாநாயகர் டாக்டர் டேவ் வில்லியம்ஸ் (ரோச்செஸ்டர் பல்கலைக்கழகம்) குழுவிலிருந்து இப்பொழுது இன்னும் சில முன்னேற்றங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நிறக்குருடு (Colour Blindness) உள்ள மனிதர்களுக்கு சாதாரணமான மனிதர்களின் விழித்திரை கூம்புகளில் (Retinal Cones) இருப்பதில் மூன்றில் ஒரு பங்கு சிதிலமடைந்திருப்பது தகவமை ஒளியியல் கருவிகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் வண்ணம் காணும் திறனுக்கு அவன் விழித்திரையில் (Retina) இருக்கும் கூம்புவடிவ செல்கள்தான் காரணம். (இன்னொரு வகை விழித்திரை செல்கள் தடி வடிவம் (Rod Cells) கொண்டவை, இவை குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவுகின்றன. குறைந்த வெளிச்சத்தில் எல்லாமே கிட்டத்தட்ட கறுப்பு-வெளுப்பைப் போலக் காட்சியளிப்பதைக் கண்டிருக்கிறீர்களா?). கூம்புச் செல்கள் ஓரளவுக்கு அதிக வெளிச்சத்தில்தான் செயல்படும். இந்தக் கூம்புச் செல்களில் மூன்று வகை உண்டு. இவை குறைந்த, நடு, உயர் அலைநீள வண்ணங்களை உணர்கின்றன. (படத்தில் முறையே S, M, L-Cones என்று காட்டப்படிருக்கின்றன) கூம்புச் செல்களுள் சில பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறக்குருட்டு உண்டாகிறது.
more details:-
http://www.tamillinux.org/venkat/myblog/ar...00325.html#more
|
|
|
| கனேடியத் தேர்தல் |
|
Posted by: AJeevan - 06-18-2004, 10:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.tamillinux.org/venkat/myblog/archives/canada_votes.png' border='0' alt='user posted image'>
நடந்து முடிந்த இந்தியத் தேர்தல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் இரண்டுக்கும் இடையே கனடாவில் தேர்தல் வருகிறது. வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலைப்பற்றி கனேடியரல்லாதவருக்கான அறிமுகம் இது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சனைகள், எதிர்ப்பார்ப்புகள், முக்கியமாக இதில் புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி எழுத உத்தேசம். பொதுவாக கனடாவைப் பற்றி பிற நாட்டு பத்திரிக்கைகள் அதிகம் எழுதுவதில்லை. மிகவும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் நடக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் குறைவு. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல பிற நாட்டு விவகாரங்களில் கனடா நேரடியாகத் தலையிடுவது மிகவும் குறைவு என்பதால் கனடாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிற நாடுகளுக்கு இல்லை என்று தோன்றுகிறது.
மேலதிக தகவல்கள்:-
http://www.tamillinux.org/venkat/myblog/ar...00326.html#more
|
|
|
| கணனி மென்பொருள்கள் என்றதலைப்பு அவசியமா?ஆம்/இல்லை. |
|
Posted by: kavithan - 06-18-2004, 03:31 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (2)
|
 |
அனைவருக்கும்வணக்கம்,
நீங்கள் அறுவியல் களத்தினுள் கணனி சம்மந்தப்பட்டவற்றையும், மற்றும் காணொளி களத்தை தனியாகவும் வைத்திருக்கிறீர்கள். அந்த காணொளி களத்தில்தான் அது சம்பந்தமான மென்பொருள்களைப்பற்றி எழுதமுடியும்.ஆனால் மென் பொருள்கள் பல தனித்து வீடியோ சம்பத்தப்பட்டது அல்ல அவற்றுக்கு பலவிதமான தொழிற்பாடுகள் உண்டு. மற்றும் பலர் மென்பொருள்களை பாவித்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் காணொளியில் ஆர்வம் அற்றவராக இருந்தால் அதற்கு செல்லமாட்டார்கள். எனவே அறவியல்களத்தல் கணனி சம்மந்தப்பட்ட தலைப்பகளுடன் <span style='font-size:25pt;line-height:100%'>கணனிமென்பொருள்கள் </span>என்றதலைப்பில் ஒருபகுதியை நீங்கள் தொடங்கினல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றல் எங்களால் பயன்படுத்தக்கூடிய எல்லா மென் பொருள்களும் கணனிக்கு கீழ்தான் அடங்கும், அடங்கினால்லால் தான் எல்லோரும் இலகுவாகப் பயனடைவார்கள் என்பது எனதுகருத்து.
கணனிப்பகுதியில் மென்பொருள் என்பது அவசியம்
உங்கள்கருத்து என்னவோ?
இயக்குனரே,மட்டுறுத்தினர்களே,அங்கத்தவர்களே வாசகர்களே.
கவிதன்
|
|
|
| புன்னகைக்குள் ஒரு புலம்பல் |
|
Posted by: Kanthar - 06-18-2004, 02:19 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<img src='http://www.heromaker.net/hobbies/film/bridgetoofar3.jpg' border='0' alt='user posted image'>
<b>புன்னகைக்குள் ஒரு புலம்பல்</b>
இஸ்ரேல் அனுப்பியது இரும்புதான் - ஏன்
இந்தியா அனுப்பியதும் இரகசியம்தான்
அண்டப்புளுகுக்காய்தான் அமெரிக்கா அனுப்பியது - இன்னும்
டொலருக்காய்தான் ரஷ்சியாவும் அனுப்பியது
சீனாவும் சிங்களமும் நல்ல உறவுதான் - இந்திய
எதிர்ப்பு பாகிஸ்தானும் நல்ல பரிவுதான்
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !
மொத்தத்தில் முழு உலகுமே சிங்களத்தின் சினேகம்- ஆக
சித்தம் குழம்பிப்போய் நாம் நிற்கிறோம் முழு உலகுமே எமக்கு எதிரி
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !!
அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி
அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி
நேற்றைய நண்பன் இன்று எதிரி
இன்றைய நண்பன் நாளைய......................
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை - மொழியில்லா
அந்த புன்னகைக்குள் ஒரு புலம்பல் !!!
|
|
|
|