Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 188 online users.
» 0 Member(s) | 186 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கண்டேன் அதிசய மயிலொன்று....!
Posted by: kuruvikal - 09-24-2004, 02:11 AM - Forum: கவிதை/பாடல் - Replies (28)

<img src='http://kuruvikal.yarl.net/archives/sneha400.jpg' border='0' alt='user posted image'>

கண்டேன் அதிசய மயிலொன்று - ஆங்கு
கார்மேகத் தோகை முட்டி மோத
பவளப் பாறைகள் தெறிக்குது மின்னல்,
மேகத்திடை பிறையாய் நுதல் மிளிர
சுண்டி இழுக்குது காந்தம் கொண்ட கருவிழிகள்,
கடலிடை தேடினும் கிடைக்கா வலம்புரி
மயில்தனின் கழுத்தில் காவுது
ஆபிரிக்க தங்கச் சுரங்கம்,
மலருக்கோ ஊரில் பஞ்சம்
மயிலுக்கோ காந்தலே கரமாய்,
துடியிடை காவுது தங்கக் குடம்
மயிலும் ஒடியுமோ சரிபாதியாய்
ஏங்குது மனம்,
என்னே அதிசயங்கள்
கனவுக்குகைக்குள் எத்தனை தேடல்கள்
அத்தனையும் முடிய
கண்கள் கசக்கி
சித்தம் தெளியக் கண்டேன்
அட இது அவள் நடிகை சிநேகா
சிங்காரிச்சு எடுத்த படம் என்று....!
அதோடு பறந்தது அதிசய மயில்
என் கனவுலகை விட்டுமே....!

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் - வைகோ கடிதம்
Posted by: kuruvikal - 09-24-2004, 01:22 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<b>அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் - வைகோ கடிதம்</b>

அமெரிக்காவில் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டு கிராண்ட் கோமன் தீவுப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 500 தமிழர்களைக் காக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அருகே கரிபீய கடல் பகுதியில் உள்ளது கிராண்ட் கோமன் தீவு. இங்கு சமீபத்தில் வீசிய கடும் சூறாவளி மற்றும் புயலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீவில் 250 இந்தியர் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில் 500 பேர் தமிழர்கள்.

புயல் காரணமாக வீடுகளை இழந்து இவர்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர் இல்லாமல் இவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அவல நிலை குறித்து தமிழர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வைகோவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதிய கடிதத்தில், பரிதவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி நிலையை விளக்கினார்.

கோமன் தீவில் வசித்து வரும் கனடா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இதே புயலால் பாதிக்கப்பட்டபோது அந்த நாட்டு அரசாங்கங்கள் மீட்பு உதவியை வழங்கியதை சிங்குக்கு நினைவு கூர்ந்த வைகோ, அதே போல, மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

இதுகுறித்து ஆவண செய்வதாக தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

thatstamil.com

Print this item

  நாசர் பார்வையில் தமிழக தமிழ் சினிமா...!
Posted by: kuruvikal - 09-24-2004, 01:16 AM - Forum: சினிமா - Replies (1)

<img src='http://thatstamil.com/images24/cinema/nazar300.jpg' border='0' alt='user posted image'>

நாசர்

<b>தமிழ் சினிமாவை சாடும் நாசர்</b>

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் தற்போதைய தமிழ் சினிமா, பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருவதாக நடிகர் நாசர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் விஷýவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக மாற்றத்திற்கு சினிமா என்ற தலைப்பிலான கருத்தரங்கில் நாசர் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ் சினிமா எப்படி உள்ளது, அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் என்பது பற்றி விலாவாரியாக நாசர் பேசினார். அவரது பேச்சில், தமிழ் சினிமா குறித்த அவரது வேதனை வெளிப்பட்டது.

நாசரின் பேச்சு: தமிழ் சினிமாக்காரர்களின் ஒட்டுமொத்த மன நிலையே சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. நல்ல சினிமா எடுப்பதை விட எதை காட்டினால் போணியாகும் என்ற மனநிலையில்தான் அவர்கள் படம் எடுக்கிறார்கள்.

நம்பவே முடியாத, அதீத கற்பனையுடன் கூடிய காட்சிகள்தான் இன்று தமிழ் சினிமாவை அலங்கரிக்கின்றன. நிஜம், இயல்பு என்பது இல்லாமல் போய் விட்டது. தரம் குறைந்து விட்டது. சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை சித்தரிப்பதை விட சதையை காட்டுவதில்தான் இன்றைய சினிமாக்காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.

சிங்கப்பூர், இலங்கை போன்ற உலக நாடுகளில் சமூக பிரச்சினைகளை வெளிக்காட்டும் விதமாக படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் அங்கு படங்களின் கதைக் களமாக உள்ளது.

ஆனால் நல்ல படங்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. ஆட்டோகிராப் போன்ற ஒரு சில படங்கள் மட்டும் விதிவிலக்காக நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என்றார் நாசர்.

<img src='http://thatstamil.com/images24/cinema/revathy-shilpa250.jpg' border='0' alt='user posted image'>

ரேவதி, ஷில்பா ஷெட்டி, சல்மான்கான்

தற்போது என்ன படத்தில் நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள பிர் மிலங்கே என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளதாக நாசர் தெரிவித்தார். இந்தப் படத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நாசர் நடித்துள்ளார்.

பிர் மிலங்கே படத்தில் சல்மான்கான் எய்ட்ஸ் நோயாளியாக நடித்துள்ளார். ஷில்பா ஷெட்டி, அபிஷேக் பச்சன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

thatstamil.com

Print this item

  ஒரு சிறிய ஆலோசனை
Posted by: Thusi - 09-23-2004, 09:43 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

களப்பொறுப்பாளர் கவனத்திற்கு,

தமிழினத்தின் விடிவிற்காக பாரத தேசத்தின் முன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து வீரமரணம் எய்திய தியாகி திலீபனின் நினைவு நாட்கள் இவை.

தாயகத்திலும் புலத்திலும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் அந்த வீரனை நினைவில் கொள்ளும் இவ்வேளையில் யாழ் களமும் தனது முகப்பில் திலீபண்ணையின் வாசகங்களைத் தாங்கி வரலாமே?

Print this item

  அஜீத்துக்கும் எனக்கும் சண்டை மூட்டி சிலர் குளிர்காய நினைக்கி
Posted by: ஆவி - 09-23-2004, 09:37 PM - Forum: சினிமா - Replies (3)

அஜீத்துக்கும் எனக்கும் சண்டை மூட்டி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள்-விஜய்

கில்லி வெற்றிக்குப் பின்னர்இ மதுர ரிலீஸான சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிருபர்களைச் சந்தித்தார் விஜய். அவரிடம் சரமாரியாக கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தன...

மதுர படத்தில் பல காட்சிகள்இ பாட்ஷாஇ சாமி படங்களை நினைவு படுத்தியதே?

ஆமா அதை ஒதுக்துக்கறேன். ஆனா அந்த மாதிரி கதைகளில் இதுக்கு முன்பு நான் நடித்ததில்லை. அது எனக்குப் புதுசு. என் ரசிகர்கள் விரும்புவாங்க.

அஜித்துக்கும்இ உங்களுக்கும் என்ன பிரச்சினை?

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இடையிலே இருக்கிற சில பேர்தான் அப்படிக் கிளப்பி விடறாங்க. எங்களுக்குள் சண்டையை மூட்டி சிலர் குளிர்காய நினைக்கிறாங்க. அது நடக்காது.

அடுத்த படம் என்னென்ன?

இப்ப திருப்பாச்சி படத்துல சாதாரண நடுத்தர குடும்பத்து பையனா நடிக்கிறேன். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாகும். அதற்கடுத்து தாணு தயாரிப்பில் ஒரு படம். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கல... இயக்குனர் யாருங்கிறதும் இன்னும் முடிவாகல... இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீசாகும்.

விஜய் நீங்க சமீப காலத்தில் நடிச்ச திருமலைஇ மதுரஇ திருப்பாச்சி பட டைட்டில்கள் எல்லாம் ஊர் பெயர்களிலேயே இருக்கிறதே.. சென்டிமென்ட்டா?

மௌனமாக சிரிப்பை பதிலாக்கினார்.

வித்தியாசமான கெட்-அப்இ விருது பற்றியெல்லாம் எண்ணமில்லையா?

அந்த ரிஸ்க் எல்லாம் நான் எடுக்க மாட்டேன். அப்படி எடுத்தால் கூட அது என் சொந்தப்படமாக இருக்கும். என்னைப் பொருத்தவரை வினியோகஸ்தர்கள் சந்தோஷம் தான் முக்கியம். இப்போ வெளியான மதுர படம் நிச்சயமா கில்லி அளவுக்கு இல்லை. இருந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைச்சிருக்கு. ரசிகர்களுக்கும் பிடிச்சிருக்கு. இனியும் அப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன் என்று தெளிவான விளக்கம தந்தார்.

அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிஇ நீங்க நடிக்க மாட்டீங்களா?

அப்படியெல்லாம் இல்லை. இப்போ சுக்ரன் படத்தில் கெஸ்ட்ரோல் பண்றேன். அடுத்த வருஷம் முழுப்படமும் நடிப்பேன்.

திருட்டு விசிடி பிரச்சினைக்கு நீங்க என்ன பண்ணப்போறீங்க?

தனி ஒருத்தனா எதுவும் செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்கணும். விரைவில் சரியாகும்.

ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவப் போறதா சொன்னாங்களே...

என் ரசிகர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு சொன்னாங்க... அந்த திட்டத்தைப் பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று முடித்துக் கொண்டார்.

Print this item

  அஜித்திடம் 30 கேள்விகள்
Posted by: ஆவி - 09-23-2004, 04:12 PM - Forum: சினிமா - Replies (6)

அஜித்திடம் 30 கேள்விகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
1. சிறு வயது குறும்பு?

கில்லி விளையாடி நண்பன் ரமேஷ் மண்டையை உடைத்தது.

2. கெட்ட பழக்கம்?

அடிக்கடி நகம் கடிப்பது.

3. பிடித்த கவிதை?

கடவுள் இல்லை என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள். அவன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தான்.

4. பிடித்த உடை?

பட்டுவேஷ்டி ஜிப்பா.

5. காதல் பற்றி?

ரொம்பவும் பரிசுத்தமானது.

6. வாங்கிய முதல் கம்பளம்?

ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் வாங்கிய ரூ.1500ஃ_

7. மனைவி ஷாலினி பற்றி?

என்னை நன்கு புரிந்துகொண்டவள்.

8. முத்தம்?

அது யாருக்கு என்பதை பொறுத்தது.

9. யாரையாவது உதைத்து இருக்கிறீர்களா?

நிறையபேரை யாரென்று சொல்ல.

10. பிடித்த பூ?

மல்லிகை. பூவே மல்லிகை பூவே மல்லிகை பூவே (...................... செய்கிறார்)

11. யாரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள்?

என் மனைவியைப் பார்த்துதான்.

12. உயிர் நண்பன் யார்?

நான் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லோருமே என் உயிரோட மேலான நண்பர்கள்.

13. பத்திரிகைகளில் வரும் செய்திகள் பற்றி?

திருட்டுஇ கொலைஇ கொள்ளைஇ கற்பழிப்புஇ மோசடி... இதுபோல் செய்திகளை அதிகரித்திருக்கிறது. வருத்தமாக இருக்கிறது.

14. கடவுள் நம்பிக்கை?

உண்டு.

15. அரசியல் பற்றி?

எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை.

16. சினிமா பற்றி?

புகழ்இ பணம் என்று எனக்கு விலாசம் கொடுக்கும் கோயில்.

17. கார் ரேஸ்?

உலக அளவில் சாம்பியனாக வேண்டும் என்று சொந்த பணத்தைப் போட்டு இரண்டுஇ மூன்று பந்தயங்களில் கலந்துகொண்டேன். தற்சமயம் பந்தயங்களை ஒத்தி வைத்துவிட்டு படங்களில் முழு கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். சாம்பியன் என் லட்சியக் கனவு.

18. வீடு பற்றி?

நிம்மதிஇ சந்தோஷம்இ அமைதி குதூகலம் இப்படிப்பட்ட விஷயங்கள் வீட்டில்தான் கிடைக்கும். அந்த விஷயங்கள் எனக்கு நிறையவே கிடைத்-திருக்கிறது.

19. பிடித்த கலர்?

சிகப்புஇ வெள்ளைஇ நீலம்

20. ஆசை?

எல்லாரும் எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். அதை அடைய உண்மையான முயற்சி தேவை. அடுத்தது அந்த ஆசைக்கு நாம் தகுதியா என்றும் ஆராயவேண்டும்.

21. உயரம்?

ஆறடி ஒரு அங்குலம்.

22. முகஸ்துதி?

எனக்கு பிடிக்காதது. அனாவசியமாக எனை யாராவது புகழ்ந்தால் எனக்குத் தெரிந்துவிடும்.

23. கெட்டவார்த்தை?

கோபம் வந்து கட்டுப்பாடு இழக்கும்போது எனக்கும் கெட்ட வார்த்தை வரும்.

24. வார பத்திரிகைகள் பற்றி?

நல்ல விஷயங்கள் குறைந்து கான்ட்ரவர்ஸி அதிகரித்துவிட்டது. பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி இருக்கவேண்டும்.

25. பந்த் ஸ்டார்?

ஸ்கார்பியோ

26. டிரைவிங்?

எனக்கு வேகமாக காரை ஓட்டுவதுதான் பிடிக்கும். சமீபத்தில் கொரியா போயிருந்தபோது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினேன்.

27. பிடித்த வெளிநாடு?

நியூசிலாந்து.

28. நடித்ததில் பிடித்த படம்?

நான் நடித்த எல்லா படங்களுமே பிடிக்கும். பிடிச்சுப் போகத்தானே நடிக்கிறேன்.

29. தீவிரவாதம் என்பது?

ஒழிக்கப்பட வேண்டிய தீவிர விஷயம்.

30. தியானம்?

நினைத்தபோது நான் செய்வது தியானம். நேரமில்லை என்பதைவிட சோம்பேறித்தனம்.

Print this item

  புலிகளின் பெயரால் என்னும் ஓர் உள்வீட்டுகொலை
Posted by: ஆவி - 09-23-2004, 03:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (18)

புலிகளின் பெயரால் என்னும் ஓர் உள்வீட்டுகொலை


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் ஈ.பி.டி.பி. சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் (வயது 39) இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தின் போது இவரது மனைவி காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.

வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளிநாட்டு து}துவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் நடைபெறும் என நம்பகரமாக தெரியவருகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரத்திற்கு அமைவாக அவரின் விசேட கும்பல்

நன்றி நிதர்சனம்

Print this item

  உள்ளே உள்ளது பால்வெளியே....
Posted by: சுடரோன் - 09-23-2004, 12:44 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

எண்ணமோ
வைராக்கிய விதை,
மனமோ
பசுமை நேசவயல்....

எதைக் களைவது?
எதை வளரவிடுவது?

ஓடும் ஆசைகள் ஓடட்டும்
வளரும் அன்பு வளரட்டும்

அறிவே என்னறிவே
என்னை அறிவிப்பாயா?
என்னுள்ளே என்னை ஒளிர்விப்பாயா?


நானே இயக்கும்
நாடகத்தில் நானே நடிகன்
என்னை இயக்கும் அறிவே
அறிவி என்னை அறிவி


என்னுள்ளே என் குரு
என்னுள்ளே என் வைத்தியன்
என்னுள்ளே என் தேவன்

சுற்றிலும் காதல் தேவதைகள்
பற்றிடும் காதல் ஜோதி நான்

மனதில் எழும் விநோதம்
புத்தம் புது யுகமாய் மலரும்

என்னுள்ளே என் ஆவி எழட்டும்
எட்டட்டும் எட்டுத் திசையெங்கும்

என்னுள்ளே ஜோதி
என் வெளியோ வெளிச்சம்

மனமே அறி
அறிவே மனம்
உள்ளே உள்ளது பால்வெளியே....<img src='http://www.tsao5916.com/Milkway.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கருணாவின் சகோதரன் புலிகளின் நடவடிக்கையில் பலி...!
Posted by: kuruvikal - 09-23-2004, 12:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

தமிழ் தேசிய தேசத் துரோகி கருணா மட்டக்களப்பில் இருந்து வெளியேறிய பின் அவருடைய பணிகளையும் தேசத் துரோக வேலைகளையும் சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல்களுடன் இணைந்து செய்து வந்த கருணாவின் சகோதரன் ரெஜி மாதுறு ஓயாப் பகுதியில் புலிகள் நடாத்திய இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவருடன் இன்னும் சில முக்கிய கருணா குழு உறுப்பினர்களும் பலியானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....!

<b>Karuna's brother killed in LTTE operation</b>

[TamilNet, September 23, 2004 05:34 GMT]

The deputy of renegade Liberation Tigers commander Karuna was killed in an ambush by LTTE forces in the Maduru Oya sector on the Batticaloa-Polannaruwa district border in the early hours of Thursday, according to well informed sources in the eastern district. An LTTE official said there was an operation by their special forces in the interior jungles northwest of Batticaloa against some elements of renegade commander Karuna's paramilitary, which the Tigers say is working with the Sri Lanka army. 'Reggie', the deputy leader of the paramilitary, is the elder brother of Karuna.

Two senior associates of the renegade LTTE commander, Elilan and Thumilan, were also killed in the operation, LTTE sources in the east said.

LTTE sources in Batticaloa said the paramilitary had been operating out of a Sri Lanka armed forces camp in the Maduru Oya sector near the Batticaloa border.

Print this item

  BBC க்கு உங்கள் அபிப்பிராயம் சொல்லுங்கள்...!
Posted by: kuruvikal - 09-22-2004, 11:18 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (8)

<b>பி.பி.சி சிங்கள சேவையில் இடைக்கால நிர்வாகம் பற்றிய கருத்துக் கணிப்பு

இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கபட வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பொன்றை பி.பி.சி.யின் சிங்கள சேவைகள் இணையத்தளம் தற்போது நடத்துகிறது.

இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதை ஆதரிக்கிறார்களா என்பதே கருத்துக் கணிப்பிற்கான விடயதானமாக இருக்கிறது. இக் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதில்களை அதற்குரிய ஆளியை அழுத்துவதன் மூலம் வழங்கமுடியும்.

இவ்வாக்கெடுப்பில் பங்குபெற்ற விரும்பும் வாசகர்கள் BBC Sinhala என்ற முகவரிக்குச் சென்று வாக்களிக்கலாம். </b>

puthinam.com

Print this item