| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 266 online users. » 0 Member(s) | 263 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| அடிமை வாழ்வு பாடமின்னும் படிக்கலாமா? |
|
Posted by: tamilan - 11-25-2004, 08:04 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு
அடிமை வாழ்வு பாடமின்னும் படிக்கலாமா?
நல்ல அமுதமென்று நஞ்சையள்ளிக் குடிக்கலாமா?
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா?
பெற்ற தாயிடத்தில் அன்பிலாமல் இருக்கலாமா?
---------- திரைப்படப் பாடல்
|
|
|
| இரசாயன விஞ்ஞானம் - உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய் |
|
Posted by: kuruvikal - 11-24-2004, 09:17 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/sci_nat_enl_1101213564/img/laun.jpg' border='0' alt='user posted image'>
பச்சையாக இருப்பது பரிசோதனைக் குழாய் உள்ளே இருப்பது தாக்கமுறும் மூலக் கூறுகள்...! இதைப் பார்வையிட இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron microscope) அவசியம்...!
பென்சில் கரியின் (graphite) ஒரு அணு பருமனுடைய படைகளைக் (sheets) கொண்டு உருவாக்கப்பட்ட காபன் பிறதிருப்பமான நனோ ரியூப்கள் கொண்டு ஆக்கப்பட்ட மிக நுண்ணிய இரசாயனக் குழாய்களில் நிகழத்தப்பட்ட இரசாயனத் தாக்கத்தின் வாயிலாக கிளை கொண்ட நீண்ட மூலக்கூறுகளுக்குப் பதில் நீண்ட சங்கிலி அமைப்பான மூலக்கூறுகளை உருவாக்கி பிரித்தானிய ஒக்ஸ்பேட் மற்றும் நொட்டின்காம் பல்கலைக்கழக இரசாயன ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்...!
இத் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் தொழில்துறையில் புகுத்தி குறைந்த செலவில் பயன்மிக்க இரசாயன விளைவுகளை (polymers) பெறமுடியும் என்று கருத்துக் கூறப்பட்டுள்ளது...!
இந்த பரிசோதனைக் குழாயின் (test tube) பருமன் என்ன தெரியுமா...
உள்விட்டம் (inner diameter) 1.2 X 10^-9 m (nano) ரும் நீளம் (length) ( 2 x 10^-6 m (micro) ரும் ஆகும்...!
கனவளவு (volume) கிட்டத்தட்ட 2 ஜிப்ரோ லீற்றர்கள் (zeptolitres) ... பாவனையில் உள்ள கனவளவுக்கான இரண்டாவது சிறிய அலகு...!
For more details
<span style='font-size:16pt;line-height:100%'>This is an exclusive post in tamil for yarl forum...!
Source bbc.com</span>
|
|
|
| இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது |
|
Posted by: aathipan - 11-24-2004, 07:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
பலாலி விமான நிலைய சீரமைப்பு
இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது
யாழ்ப்பாண மாணவர் சங்கம் கோரிக்கை
கொழும்புஇ நவ.21-
"பலாலி விமான நிலை யத்தை சீரமைக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது" என்று யாழ்ப்பாண மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:_
உதவக் கூடாது
ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை இலங்கை அரசு நசுக்க பார்க்கிறது. அந்த முயற் சிக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தை சீரமைக்கவும்இ அதன் ஓடுதளத்தை பெரிதாக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசு நிதி உதவி பெற முயற்சி செய்கிறது.
பலாலி விமானப்படை தளத்தின் அருகே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வசித்து வந்தனர். ராணுவ நடவடிக்கையில் அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுடைய விவசாய நிலங்களும் பலாலி விமானதளம் அருகே உள்ளன.
பலாலி விமான தளத்தை விரிவுபடுத்தினால் அகதி முகாமில் உள்ள தமிழர்கள் தங்கள் வீடுகளை இழந்து விடுவார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அகதிகளாகத்தான் வாழ வேண்டும். எனவே பலாலி விமான தள திட்டத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கக் கூடாது.
உறவு
இந்தியாவுக்கும் ஈழ தமிழர்களுக்கும் இடையே நிலவும் நல்லுறவைஇ இலங்கை அரசு தனது சுய லாபத்துக்காக கெடுக்க பார்க்கிறது. இலங்கையின் தவ றான வழிகாட்டுதலுக்கு இந்தியா ஆளாகி விட வேண்டாம்.
இந்தியாவுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் நிலவும் நூற்றாண்டு கால நட்புறவு நீடிக்க வேண்டும். ஈழ தமிழர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிப்பதுடன் அவர்களுடைய சட்டப்பூர்வ அரசியல் விருப்பங்கள் நிறைவேற இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு தங்கள் கடிதத்தில் யாழ்ப்பாண மாணவர் சங்கம் கூறியிருக்கிறது.
|
|
|
| படத்தில் அல்ல நிஜத்தில் "பிட்" |
|
Posted by: kuruvikal - 11-24-2004, 12:22 PM - Forum: சினிமா
- Replies (7)
|
 |
"பிட்" (copy) அடித்து பிடிபட்ட "பாய்ஸ்" பரத்...!
பி.காம். செமஸ்டர் தேர்வில் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளார் பாய்ஸ் (boys) பட நாயகர்களில் ஒருவரான பரத்.
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் நான்கு நாயகர்களில் பரத்தும் ஒருவர். மற்றவர்களை பரத் அதி வேகமாக முன்னுக்கு வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட 4 ஸ்டூடண்ட்ஸ், ரீமாõ சென்னுடன் செல்லமே ஆகிய படங்களில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பி.காம் படித்து வரும் பரத், சென்னை புதுக் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் நேற்று கலந்து கொண்டார். கார்பரேட் அக்கவுன்டிங் தாளுக்கான தேர்வு நடந்தது.
அநத்ப் பரிட்øசாய பரத் எழுதிக் கொண்டிருந்தபோது அவரை சோதனையிட்ட தேர்வு மைய அதிகாரி, அவரிடம் சில "பிட் பேப்பர்கள்" இருந்ததைக் கண்டார். உடனடியாக பரத் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்.
thatstamil.com
|
|
|
| இப்படியும் மனிதர்கள் |
|
Posted by: Thiyaham - 11-24-2004, 02:15 AM - Forum: புலம்
- Replies (9)
|
 |
இன்று மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிகொண்டிருக்கும் போது வான் ஒன்றில் வந்த இருவர் என்னை அழைத்து ஓர் டிஜிற்ரல் கமறாவை காண்பித்து 350 டொலர் வாங்குகிறாயா என கேட்டார்கள். நானும் கிட்ட போய் பார்த்தேன் அது ஓர் Canon EOS 6.3MP Digital Rebel Camera கமரா. அதன் சந்தைப்பெறுமதி கிட்டத்தட்ட 1200 டொலர்கள். நானும் நினைத்தேன் அதிஸ்டம் என்பது இப்படியா அடிக்க வேண்டும் என.... எல்லாம் புதிது போல பக்கிங் சுப்பராக இருந்தது. கமறாவை எடுத்து கையில் தந்தார்கள் பார்க்கும்படி. ஆனால் கமறா பொலித்தீனினால் சுற்றி இறுக்கமாக ஒட்டப்பட்டிருந்தது. நான் அப்பொலித்தீனை அவிழ்க்க முற்பட்ட போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்... "நீ வாங்காமல் விட்டால் தாங்கள் மற்றவர்க்கு விற்க முடியாதாம் என" இவ்வளவு நேரமும் ஏமாந்த சோனகிரியாட்டம் நின்ற எனக்கு அப்போ தான் மூளையில் ஏதோ பொறி தட்ட ஆரம்பித்தது. பின்னர் கமறாவை உற்று பார்த்தேன் அது ஓர் உண்மையான கமறாவே கிடையாது. அது ஓர் விளையாட்டுப்பொருள். அப்போ தான் என் அதிஸ்டம் என்னை விட்டு விலகியதையும் அதே சமயம் நேரவிருந்த துரதிஸ்டம் விலகியதையும் புரிந்து கொண்டேன்.
இப்படியான சம்பவங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ நடந்திருந்தால் இங்கே அறிய தாருங்களேன் :!: :!:
|
|
|
| "ரி.ரி.என்" இலவசமாக ஒளிபரப்பாகுமா? |
|
Posted by: cannon - 11-23-2004, 11:11 PM - Forum: புலம்
- Replies (41)
|
 |
இது மாவீரர் வாரம். தேசியம், தாயகம் என்ற கனவுகளுடனே மண்ணினுள்ளும், காற்றினுள்ளும், கடனிலுள்ளும் கலந்த எங்கள் தெய்வங்களை நினைவு கூரும் வாரம். கடந்த வருடம் மாவீரர் நாட்களில் "ரி.ரி.என்" ஊடாக பார்த்த காட்சிகள் இன்றும் கண்முன்னால் .... இம்முறை மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவில் சகல தமிழ் இல்லங்களிலும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இலவசமாக ஒளிபரப்பாகுமா?
பொங்கள். வருசம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு இலவசமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியானது, ஏன் மாவீரர் நாட்களுக்கு இலவசமாக ஒளிபரப்பக்கூடாது?
சாதி, சமயம் என்ற சாக்கடைகளைத் தகத்தெறிந்த எம் தெய்வங்களின் நினைவலைகள் ஒவ்வொரு புலம் பெயர் தமிழர்களின் வீடுகளில் ஒலிக்க, ஒளிக்க ஏற்பாடு கண்டிப்பாகச் செய்யப்படவேண்டும்?
இவ்வொலிபரப்பானது களத்தில் இன்றைய சூழ்நிலை கருதி, புலத்தில் தமிழ்த் தேசிய உணர்வுகளை விளிப்படையச் செய்வதற்க்காக குறுகிய சிந்தனைகளை விடுத்து சகல தமிழ் மக்களும் பார்க்க, கேட்க வழியேற்படுத்தப்படவேண்டும்.
|
|
|
| இப்படியுமா..? (குறும்படம்) |
|
Posted by: sOliyAn - 11-23-2004, 09:27 PM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
இப்படியுமா? (குறும்படம்)
விரைவில் வெளிவரவுள்ளது!
ஈழவர் திரைக்கலை மன்றம்
அளிக்கும்
ஐரோப்பிய திரைப் படைப்பகம்
பிறேமன் தமிழ்க்கலை மன்ற
ஒருங்கிணைப்பில்
நாச்சிமார் கோயிலடி இராஜனின்
இப்படியுமா? (குறும்படம்)
இசை: பிரவீன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ரமேஷ் பத்மநாதன்
தயாரிப்பு ஒருங்கமைப்பு: ரகுநாதன்
தயாரிப்பு: பாரிஸ்டர் எஸ்.ஜே.யோசெப்
திரைக்கதை, வசனம், இயக்கம்: நாச்சிமார்கோயிலடி இராஜன்
|
|
|
| பொறி (குறும்படம்) |
|
Posted by: sOliyAn - 11-23-2004, 09:26 PM - Forum: குறும்படங்கள்
- Replies (4)
|
 |
ஈழவர் திரைக் கலை மன்றமும் ஜேர்மன் தமிழ்க்கலை மன்றமும் இணைந்து தயாரிக்கும் பொறி என்னும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இசை: ஜுட் நிக்ஸன்
ஒளிப்பதிவு: அஜீவன்
படத்தொகுப்பு, இணை ஒளிப்பதிவு: ரமேஷ் பத்மநாதன்
தயாரிப்பு ஒருங்கமைப்பு: ரகுநாதன்
தயாரிப்பு: பாரிஸ்டர் எஸ்.ஜே.யோசெப்
திரைக்கதை, வசனம், இயக்கம்: நாச்சிமார்கோயிலடி இராஜன்
|
|
|
|