| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 488 online users. » 0 Member(s) | 485 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| Where Are All The Dead Animals? Sri Lanka Asks |
|
Posted by: Vaanampaadi - 12-30-2004, 09:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
SRI LANKA: December 30, 2004
COLOMBO - Sri Lankan wildlife officials are stunned -- the worst tsunami in memory has killed around 22,000 people along the Indian Ocean island's coast, but they can't find any dead animals.
Giant waves washed floodwaters up to 3 km (2 miles) inland at Yala National Park in the ravaged southeast, Sri Lanka's biggest wildlife reserve and home to hundreds of wild elephants and several leopards.
"The strange thing is we haven't recorded any dead animals," H.D. Ratnayake, deputy director of the national Wildlife Department, told Reuters on Wednesday.
"No elephants are dead, not even a dead hare or rabbit," he added. "I think animals can sense disaster. They have a sixth sense. They know when things are happening."
At least 40 tourists, including nine Japanese, were drowned.
The tsunami was triggered by an earthquake in the Indian Ocean on Sunday, which sent waves up to 5-metres (15-feet) high crashing onto Sri Lanka's southern, eastern and northern seaboard, flooding whole towns and villages, destroying hotels and causing widespread destruction.
REUTERS NEWS SERVICE
|
|
|
| அந்தமானின் அவலம்.. |
|
Posted by: vasisutha - 12-30-2004, 03:55 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<img src='http://photos.reuters.com/Pictures/galleries/Stories/632176283649218750/Previews/X010530020041228e0cs0002t.jpg' border='0' alt='user posted image'>
An aerial view is seen in Cambellway after a tsunami hit on Sunday in the remote Andaman and Nicobar islands chain, near the epicentre of the quake, December 28, 2004.படம்: றொய்டர்
அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப் படுகிறhர்கள்.
சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்;கர பூமி அதிர்ச்சி அந்தமான் நிகோபார் தீவுகளை கோரமாக தாக்கியது. கார் நிகோபார் தீவில் இருந்த இந்திய விமானபடை தளமே அழிந்தது. அதில் 100 வீரர்கள் பலியானார்கள்.
இதுவரை 3 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்தமானுக்கும், கார் நிகோபாருக்கும் இடையே உள்ள குட்டி தீவுகளில் வசிக்கும் மக்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
அந்தமானில் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கடற்படை கப்பல்களிலும், விமானப்படை விமானங்களிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவை விமானங்கள், ஹெலி காப்டர்கள் மூலம் தீவுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு போடப்பட்டன.
நிவாரண உதவி கிடைத்தாலும் அந்தமானில் மக்கள் அச்ச மின்றி வாழக்கூடிய நிலைமை இல்லை. ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஆப்டர்ஷாக் என்று அழைக்கப்படும் தொடர் நில அதிர்வுகள் அந்தமான் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுவரை 5 முறை தொடர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10.21 மணிக்கு மீட்டர் அளவு கோலில் 5.1 சக்தியுள்ள பூமி அதிர்ச்சி அந்தமானையும், நிகோபார் தீவுகளையும் தாக்கியது.
கடைசியாக நேற்று காலை 7 மணிக்கு 5.7 அளவுள்ள பூமி அதிர்ச்சி அதைத் தொடர்ந்து 10 நிமிடம் கழித்து 6.1 அளவுள்ள பூமிஅதிர்ச்சியும் தாக்கின. 6.1 அளவு என்பது ஓரளவு கடுமையான பூமி அதிர்ச்சி ஆகும். இதனால் ஏற்பட்ட உயிர்சேத விவரம் தெரியவில்லை.
அந்தமானில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் அங்கு தொடர்ந்து வசிக்க அஞ்சுகிறhர்கள். இதனால் அவர்கள் இந்தியன் ஏர் லைன் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கும், சென்னைக்கும் அனுப்பப்படுகிறhர்கள். தினமும் கொல்கத்தாவுக்கு 14 முறையும் சென்னைக்கு 6 முறையும் விமானங்கள் மூலம் அந்தமான் மக்கள் கொண்டு வரப்படுகிறhர்கள்.
சென்னைக்கு கொண்டு வரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.
அந்தமானில் உள்ள சிறிய தீவுகளில் சிக்கிக்கிடக்கும் சுற்றுலா பயணிகள் கடற்படை கப்பல்கள் மூலம் தலைநகர் போர்ட்பிளேர் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறhர்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் சோகமயமாக காட்சி அளிக்கின்றன.
20 முறை பறந்த படை விமானங்கள்
இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களில் 20 முறை அந்தமானுக்கு பறந்து சென்று 1200 பேரை ஏற்றிக்கொண்டு தாம்பரத்தில் இறக்கி உள்ளன. அதில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் உள்ளனர்.
அவர்களை ஏற்றிவர ஏன-் 32, ஐஎல்-76 ரகத்தை சேர்ந்த ராட்சத விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அந்தமானுக்கு சென்ற போது மருந்து, உணவு போன்ற நிவாரண பொருட்களை ஏற்றி சென்றன.
பாதி மக்கள் தொகை மாயம்
மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி சுனாமி அலை தாக்கிய அந்தமான் நிகோபார் தீவுகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு போர்ட் பிளேரில் பேட்டி அளித்த அவர் கார் நிகோபார் தீவில் வசித்த மக்களில் பாதிபேரை காணவில்லை. 7 கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன என்றhர்.
|
|
|
| இப்படி நீ ஏன் பொங்கினாயோ? |
|
Posted by: AJeevan - 12-29-2004, 11:45 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
கடல் அன்னையே இப்படி நீ
ஏன் பொங்கினாயோ
எல்லோரும்
ஒவ்வொருவரையும் காத்துக் கொள்ள
ஆயுதங்களை உருவாக்குவதிலும்
ஆயதங்களைக் கொண்டு வந்து குவிப்பதையும்
மண்ணுக்காக உயிர்களைக் கொல்வதிலுமே
முனையாக நின்றார்களே தவிர
இயற்கை அனர்த்தங்களிலிருந்து
மக்களைக் காப்பாற்ற - இவர்கள்
எவருமே எண்ணியதாக இல்லை
வந்த பின் காப்பதற்கும்
நடந்து முடிந்தவற்றுக்காக
நீலிக் கண்ணீர் வடிப்பதற்கும்
அதையே தமக்கு சாதகமான
அரசியலாக்கிக் கொள்ளவும்
சிலர் எண்ணும் போது
இதயம் குமுறுகிறது.
உங்கள் பலத்தை விட
எனது பலம் பன் மடங்கு அதிகம்
என்று கூறுவது போல
இயற்கை அன்னை சீறி எழுந்து விட்டது
போலவே எண்ணத் தோன்றுகிறது.
எனக்காகவோ
எனது குடும்பத்துக்காகவோ என்று மட்டும்
அழுவதற்கு முடியவில்லை
என் குடும்பத்திலோ
எனது உறவினர் குடும்பத்திலோ
எனது நண்பர்கள் குடும்பத்திலோ
யாரோ ஒருவர்
எனக்கு நெருங்கிய ஒருவரை
நான் இழந்திருக்கிறேன்.
யார் பெயரைச் சொல்லி அழ
எத்தனை பேரைச் சொல்லி அழ
உலகின் ஒவ்வொரு கோடியிலும்
யாராவது ஒருவர் மடிந்து இருக்கிறார்
ஆகக் குறைந்தது உல்லாசப் பிராணியாகவாவது.
உலகப் போர் ஒன்றோ
ஈழப் போரொன்றோ
வேறொரு போரோ
இனியும் வேண்டாம்
பாருங்கள் இழப்புகளை
உலகமே சாவீடாக அழுகிறது
அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள்
தமது வேற்றுமைகளை மறந்து
வேதனைகளில் இணைந்தும் பிணைந்தும்
போயிருக்கிறார்கள்
இன்று
தமது குடும்பத்தை
பற்றிச் சொல்லி அழ
தனது குடும்பமில்லை
தனது அயலவனும் எதிரியானவனுமே - இன்று
குடும்பத்திலொருவனாய்
கட்டிப் பிடித்துக் கொண்டு
அழுகிறான்.
இலங்கையில்
இன-மத-மொழி ரீதியாக
எதிரிகளானவர்களும்
ஆயுதங்களை
நேருக்கு நேர் பிடித்துக் கொண்டிருந்த
போராளிகள்
மக்கள் மற்றும் இராணுவத்தினர்;
ஒன்றாய் இணைந்து மீட்புப் பணிகளில்
ஈடுபட்டிருக்கிறார்கள்
மனிதம் மண்ணில் விதை போட்டுள்ளது.
யுத்தமொன்று வருமென
அஞ்சிய மக்களுக்கு
இன்று அதைவிட ஒரு பெரிய
இழப்பை இயற்கை கொடுத்திருக்கிறது
இனியும் ஒரு அழிவு வேண்டாம்
தாங்குவதற்கு எம்மால் முடியாது
அப்படியான ஒன்றுக்கு
இனியும் வித்திட்டால்
அது ஈனத்தனமானது
ஆயுதங்களுக்கு பதில்
அன்பை விதையுங்கள்
அடுத்தவர் மனதில் வெறியை உருவாக்குவதற்கு பதில்
கருணையை உருவாக்குங்கள்
அவரவர் உரிமைகளை மதியுங்கள்
உரிமைக்கான அங்கிகாரத்தை வழங்குங்கள்
இதைவிட நல்லதொரு தருணம்
இனியுமில்லை
பாதிக்கப் பட்டவர்கள்
இணைந்து நிற்கிறார்கள்
உயிரிழந்த அத்தனை
உயிர்களின் ஆத்துமாக்களாவது
அமைதியை உருவாக்கட்டும்
வித்தியாசமான வேண்டுதல்தான்
உங்கள் சாவின் குரல்கள்
இனி ஒரு சாவையோ சாவுகளையோ
உருவாக்காது இருக்கட்டும்...................
|
|
|
| சாவு இவர்கள் வீட்டுக்குள் விழுந்தால் மட்டுமா துயர் அறிவார்கள |
|
Posted by: cannon - 12-29-2004, 10:07 PM - Forum: புலம்
- Replies (8)
|
 |
கடல் அள்ளிப்போய் தமிழீழம் , இலங்கை , இந்தியா உட்பட பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்திருக்கும் இவ்வேளையில் அதன் துயரிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் எங்கும் அழுகையும் , அவலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியத் தொலைக்காட்சியான சண்தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளான சின்னத்திரை தொடர்கள் , சினிமாப்பாடல்கள் , திரைப்படங்கள் என ஒலிபரப்பியவண்ணமேயுள்ளது. இந்தியாவிலும் இயற்கையின் சீற்றத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போய் அழிவுக்குள்ளான பிரதேசங்களெங்கும் அழுகையுடன் , துயருமாய் இருக்கின்ற இவ்வேளையில் இவற்றையெல்லாம் கணக்கில் வாங்கிக் கொள்ளாமல் சண்தொலைக்காட்சியும் , சண்வானொலியும் சின்னத்திரையையும் ,
சினிமாவையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சகளை வழங்க அதனை ரசிப்பதற்கென்றே ஒருகூட்டம் பின் நிற்பதை புலத்துத் தமிழர்களும் , அனைத்துத் தமிழர்களும் கவனத்தில் உள்வாங்கி இத்தகைய மனிதமற்ற ஒலி , ஒளிபரப்புக்களைப் புறந்தள்ள வேண்டும் என நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது.
|
|
|
| துரோகிகளை இனம் காணுங்கள் |
|
Posted by: Suji - 12-29-2004, 09:01 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
களஉறவுகளே இணையம் ஒன்று அம்பாறையில் கருணாஅணியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுபோலக் காண்பிக்க அம்பாறையில் கருணாஅணியினருக்கும் வன்னிப்புலிகளுக்கும் மோதல் என்று செய்திவெளியிட்டிருக்கிறது. இப்படியான செய்திகளைப்பரப்பி மக்களிடம் இருந்து தங்களது சுயதேவைக்கு பணம் சேகரிக்க கூட்டாக ஒரு கும்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது. இலணடனிலிருந்து ஒலிபரப்புசெய்யும் மூன்றெழுத்து துரோகவானொலியும் வதந்(தீ)பொருள்படும் இணையமும் வேறுசிலரும் ஆயிரக்கணக்கான மக்களின் இழப்புக்களில் குளிர்காய முற்படுகின்றனர்.புனர்வாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை குழப்புவதற்கான செயற்பாடுகளை இவர்கள் செய்கிறார்கள்
விசமத்தனமான பிரச்சாரங்களை செய்கிறார்கள். விடுதலைப்புலி அணிகள் அம்பாறையில் சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவிசெய்வது யாவருக்கும் தெரிந்ததே.
அன்பான உறவுகளே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தயவுசெய்துஇதை சொல்லுங்கள். துரோகிகளை இனம் காணுங்கள்.புனர்வாழ்வுக்கழகத்தினூடாக துயரத்திலுள்ள எம் உறவு;களுக்கு உதவுங்கள்.
|
|
|
| Pirapaharan appeals for international assistance |
|
Posted by: Vaanampaadi - 12-29-2004, 06:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Pirapaharan appeals for international assistance
[TamilNet, December 29, 2004 14:09 GMT]
Mr. Velupillai Pirapaharan, leader of the Liberation Tigers, Wednesday appealed to the international community and the United Nations to generously assist the people of the northeast devasted by the Tsunami. "I express my deepest sympathies and condolences to my people who lost their kith and kin in this disaster. I also extend my deepest sympathies and condolences to our Muslim and Sinhala brethren in the south who were affected by the Tsunami", he said in a statement issued in Tamil by the headquarters of the LTTE.
He expressed his love and gratitude to expatriate Tamils for the assistance they are providing to the Tsunami devastated people of the northeast. He urged them to continue their assistance to help deal with the disaster.
Full text of the message in Tamil >>
http://www.tamilnet.com/art.html?catid=71&artid=13775
<img src='http://img159.exs.cx/img159/1774/statement29120428kk.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| தேசியத் தலைவரின் அறிக்கை |
|
Posted by: hari - 12-29-2004, 05:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/statement_291204.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/statement_291204_2.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|