![]() |
|
சாவு இவர்கள் வீட்டுக்குள் விழுந்தால் மட்டுமா துயர் அறிவார்கள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாவு இவர்கள் வீட்டுக்குள் விழுந்தால் மட்டுமா துயர் அறிவார்கள (/showthread.php?tid=6030) |
சாவு இவர்கள் வீட்டுக்குள் விழுந்தால் மட்டுமா துயர் அறிவார்கள - cannon - 12-29-2004 கடல் அள்ளிப்போய் தமிழீழம் , இலங்கை , இந்தியா உட்பட பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்திருக்கும் இவ்வேளையில் அதன் துயரிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் எங்கும் அழுகையும் , அவலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியத் தொலைக்காட்சியான சண்தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளான சின்னத்திரை தொடர்கள் , சினிமாப்பாடல்கள் , திரைப்படங்கள் என ஒலிபரப்பியவண்ணமேயுள்ளது. இந்தியாவிலும் இயற்கையின் சீற்றத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போய் அழிவுக்குள்ளான பிரதேசங்களெங்கும் அழுகையுடன் , துயருமாய் இருக்கின்ற இவ்வேளையில் இவற்றையெல்லாம் கணக்கில் வாங்கிக் கொள்ளாமல் சண்தொலைக்காட்சியும் , சண்வானொலியும் சின்னத்திரையையும் , சினிமாவையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சகளை வழங்க அதனை ரசிப்பதற்கென்றே ஒருகூட்டம் பின் நிற்பதை புலத்துத் தமிழர்களும் , அனைத்துத் தமிழர்களும் கவனத்தில் உள்வாங்கி இத்தகைய மனிதமற்ற ஒலி , ஒளிபரப்புக்களைப் புறந்தள்ள வேண்டும் என நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது. - ஊமை - 12-30-2004 காச்சலும் தலைவலியும் தனக்கு வந்தல் தான் தெரியும் - kavithan - 12-30-2004 தொலைக்காட்சி நிறுவனத்தை அலை கொண்டு போனால் தான் அவர்கள் அங்கிருந்து நேரடி ஓளிபரப்பு வழங்குவார்கள்... - vasisutha - 12-30-2004 8) - hari - 12-30-2004 நடிகர் சங்க தலைவர் விஜயகாந் சம்பவம் நடந்த நாள் மட்டும் படப்பிடிப்புக்களை ரத்துசெய்திருந்தார், பிறகு தங்கள் கூத்துக்களை ஆரம்பித்துவிட்டனர், அது மட்டுமா அவரின் பெரிய மனசையும் பாருங்கள் 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். - hari - 12-30-2004 ரஜனி 21 லட்சம் வழங்கியுள்ளார், இவர் ஒரு படத்தால் பெறும் இலாபம் மட்டும் 24 கோடி ! இவர்களை பார்க்கும் போது எம் புலம்பெயர்ந்த உறவுகள் மேல், எனக்கு தெரிந்தமட்டில் பலர் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தில் பல லட்சங்களை கொடுத்து உதவியுள்ளனர் - sri - 12-30-2004 http://www.thatstamil.com/news/2004/12/30/.../karnataka.html - Shan - 12-30-2004 இந்தியாவின் செயற்பாடு திமிரா அல்லது விட்டுக்கொடுப்பா? பல நாடுகள் இந்தியாவில் நடைபெற்ற அனர்த்தத்தை அடுத்து அங்கு நடைபெறும் நிவாரணப்பணிகஷளக்கு உதவ மன் வந்தன அனால் இந்தியா தமக்கு அந்த உதவிகள் தேவையில்லை என தட்டிக் கழித்துள்ளது! - Mathan - 12-30-2004 உதவி என்ற போர்வையில் மேற்கத்தைய உளவு அமைப்புகள் புகுந்துவிடும் என்ற பயமா அல்லது அலட்சியமா? |