| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 312 online users. » 0 Member(s) | 309 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| அமெரிக்கர்களுக்காக "கோணல்"! |
|
Posted by: கறுணா - 01-05-2005, 04:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் அமெரிக்கன் டோக்ஸ்ஸ்ஸ்ஸ்.......
முன்பொருமுறை என்மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான நாசவேலை செய்ய முற்பட்டு, தோல்வியடைந்து சுருண்டு கிடந்த நீங்கள்? மீண்டும் ஒருமுறை இந்த சுனாமியென்ற என்ற கோதாரியை காரணமாக காட்டி வந்திறங்கியுள்ளீர்களாம்? உங்கள் வரவையொட்டி பல ஊகங்களை இங்கும் அயல்நாட்டிலுமுள்ள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன..........
1) முற்றுமுழுதாக சிதைந்து அழிந்து போயுள்ள சிறீலங்காவின் கரையோர பாதுகாப்பு நிலவரங்களினால், சிறீலங்கா சிங்கள அரசின் அவசர அழைப்பை ஏற்று வந்ததாகவும் ........
2) விடுதலைப் புலிகளின் வளர்ச்சியையும், கட்டுமாணங்களையும், படையணிகளையும் கண்காணிப்பதற்காகவென்றும் .....
3) இந்தியா என்ற பூனைக்கு மணி கட்டுவதற்காகவுமென்றும் ...........
4) அரபு நாடுகளிலிருந்து உங்களது பசிபிக் தளங்களுக்கான மசகு எண்ணை வி்நியோகங்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமென்றும் ..........
............ பலபல காரணங்கள் இராணுவ, அரசியல் ஆய்வாளர்களினால் கூறப்படும் இவ்வேளையில் "கோணலின்" இராணுவ புலனாய்வுப்பிரிவானது உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்திருப்பதை உலகிற்கு அம்பலப் படுத்த வேண்டிய சூழ்நிலையில் "கோணல்" இருப்பதை அறியத்தருகிறேன்.
"உலகில் பல நாடுகளில் உயிருடனே மனித இனங்களை ருசிபார்த்து சுவைத்து வந்த உங்களுக்கு, தற்போது இறந்த அழுகிய பிணங்களைச் சுவைக்க ஆசை வந்து விட்டதாக எனது புலனாய்வுப் பிரிவினர் எனக்கு அறியத் தந்துள்ளார்கள்". தற்போதைய சூழ்நிலையில் உங்களது உந்த அதீத ஆசைக்கு இலங்கைதான் தகுந்த இடமாக நீங்கள் தேர்வு செய்திருப்பதையும் எனக்கு அறியத் தந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாடுகளும், இந்தியாவும் உங்களது இந்த அற்புதமான செயலுக்கு இடம் தராதென்பதால் இலங்கைதான் சரியான இடமென்பது எனது நிலைப்பாடும் கூட.
தற்போது இறந்த அழுகிய பிணங்கள் இலங்கையில் பல இடங்களில் எரிக்கத் தொடங்கி விட்டார்கள் என செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆனால் உங்கள் விருப்புகளுக்கு மாறாக பிணங்கள் எரிக்கப்படும் சூழ்நிலையில், உங்களை நக்கி வாழும் இந்தக் கோணல், உங்கள் நிகழ்கால ஆசைகளை நிறைவேற்றும் நோக்குடன் பல தரவுகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பலபல இடங்களில் இறந்த பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதால், அவைகள் புழுக்கள், பூச்சிகள் பிடித்த நிலையில் உங்கள் சுவைக்கேற்ற அழுகிய பக்குவத்திலிருக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். குறிப்பாக தெற்கில் பல பிணந்தின்னிகள் முகாமிட்டிருக்கும் இவ்வேளையில் உங்களுக்கு பல போட்டிகள் ஏற்படலாம். அவைகளை எல்லாம் முறியடித்து, உங்களது இந்த அற்புதமான மெச்சத்தக்க அரிய அழுகிய பிணந்தின்னும் பணியானது வெற்றிபெறுமென்பதில் எனக்கு அதீத நம்பிக்கையுண்டு.
உங்களுக்காக உயிருடன் இருக்கும் காலம் பூராக நக்கக் காத்திருக்கும் இந்தக் "கோணல்" துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடிக் கொண்டிருக்கிறேன். மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் ...... உங்களுக்காக ..... இப்படி அரிய பல புலனாய்வுத் தகவல்களுடன் .............
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| புலிகள் பகுதிக்கு செல்லும் ஜநா செயலர் |
|
Posted by: Mathan - 01-05-2005, 03:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'>கனாமியால் பாதிகப்பட்ட பிரதேசங்களை பார்வையிட இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் சபை செயலர் கொபி அனான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கும் செல்வார் என்று தெரிகின்றது.</span>
Annan's Lanka visit to include LTTE controlled areas
Colombo, Jan 4 (UNI) UN Secretary General Koffi Annan will visit the areas of Northern Wani region controlled by the Tamil Tiger rebels during his two-day official visit to the tsunami hit Sri Lanka scheduled this weekend, LTTE sources said this evening.
''Yes, he will be visiting our areas to see the large-scale death and destruction caused by tsunami waves,'' the sources said.
Mr Annan is scheduled to visit Colombo on a two-day official visit after attending the special summit of ASEAN leaders to be held in Jakarta on Thursday.
During his stay in Colombo, the UN Secretary General will be visiting some of the hardest-hit areas in the country, where the death-toll had crossed 30,000 while nearly 4000 people are still missing.
Meanwhile, the US Secretary of State Colin Powell is also expected to visit the Sri Lankan capital on Friday. His visit will coincide with the arrival of 1500 US Marine troops backed by huge helipad assault ship, Bon Homme Richard and at least 20 helicopters, to join the international task force in carrying out the relief operations.
|
|
|
| புதிய மட்டுறுத்துனர்கள் |
|
Posted by: Mathan - 01-05-2005, 02:58 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (156)
|
 |
புதிய மட்டுறுத்துனர்கள் யாழினி (புலம், சிந்தனைக் களம் மற்றும் இளைப்பாறுங்களம்) கவிதன் (அறிவியற் களம்)இருவருக்கும் வாழ்த்துக்கள். கள உறுப்பினர்கள் அவர்களை வரவேற்று ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றேன்.
|
|
|
| புலிகள் பகுதிக்கு இராணுவம் ரத்ததானம் ??? |
|
Posted by: Mathan - 01-05-2005, 02:35 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (8)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'>புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை ராணுவம் இரத்ததானம் வழங்கியதாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கிற்கு இலங்கை அரசு நிவாரண பணிகளை சரிவர செய்யவில்லை என்று புலிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் அதனை முறியடிக்க இலங்கை அரசு பிரச்சார/ஊடக போரில் இறங்கியுள்ளது போல் தெரிகின்றது. இதோ அந்த செய்தி .........</span>
Sri Lankan soldiers give blood to tsunami victims in rebel-held areas
Associated Press, Wed January 5, 2005 05:02 EST . COLOMBO, Sri Lanka (AP) Sri Lankan soldiers donated blood to help tsunami victims in the island's rebel-controlled north, a military spokesman said Wednesday. The gesture was unusual because Sri Lanka's army and the Tamil Tiger rebels have fought a bitter war since the insurgents launched their violent campaign for a separate homeland for the island's minority Tamils in 1983.
The military has also been accused of rampant human rights abuses against the Tamil minority.
The two sides stopped fighting after a Norwegian-brokered truce was signed in February 2002. But peace talks collapsed in April 2003 because of differences over power-sharing, and efforts to revive them have repeatedly failed.
More than 30,000 people were killed in Sri Lanka and hundreds of thousands displaced in the tsunamis that hit many Asian countries last week.
|
|
|
| கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? |
|
Posted by: ஊமை - 01-05-2005, 06:40 AM - Forum: மருத்துவம்
- Replies (22)
|
 |
ஆத்;திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக...
கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?
கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தை கட்டு;ப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சுழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகாpத்தல்;, எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.
கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்
9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
11. கோபம் வருகிறது என்று தொpந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.
16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
|
|
|
| புயல் எச்சரிக்கை மையம் அறிவிப்பு................ |
|
Posted by: ஊமை - 01-05-2005, 06:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அந்தமானில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 6 அளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆந்திர கடற்கரையில் ராட்சத அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த மாதம் 26-ந்தேதி ரிக்டர் அளவு கோலில் 8-9 அளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா? இந்த பூமி அதிர்ச்சி சென்னை, ஆந்திரா, கேரளா, அந்தமான் நிகோபார் தீவு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய இடங்களில் உணரப்பட்டது. அப்போது பூமி குலுங்கியது.
இந்த பூமி அதிர்ச்சியின் காரணமாக மேற்கண்ட நாடுகளில் சுனாமி அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கின. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.
இந்த பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுமித்ரா தீவை மையமாக கொண்டு தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் ஒரு அதிர்வு 6.3 அளவுக்கு இருந்தது. இந்த தொடர் அதிர்வு கள் எல்லாம் சுனாமி தாக்கிய பெரும்பாலான நாடுகளில் உணரப்பட்டன. அதில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவுக்கு இருந்தது. அந்தமானில் மட்டும் இதுவரை 99 முறை தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நேற்று அந்தமானில் மேற்கு கடற்கரையை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 6 அளவுக்கான பூமி அதிர்ச்சி நேற்று ஏற்பட்டது. அந்தமான் இதன் எதிரொலியாக ஆந்திர கடற்கரையில் வழக்கமான அலைகளை விட ஒரு மீட்டர் (3 அடி) உயரத் துக்கு அதிகமாக அலைகள் எழும்பி தாக்கும் என்று விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையம் நேற்று இரவு அறிவித்து உள்ளது.
ஆந்திர கடற்கரையில் வழக்கத்தை விட பரிய அலைகள் எழும்புவதால் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரைகளிலும் அதே போன்ற அலைகள் எழும் அபாயம் உள்ளது.
|
|
|
| கழுகுகள் வந்திறங்கி விட்டன |
|
Posted by: Thaven - 01-05-2005, 04:07 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (4)
|
 |
அன்புச் சகோதர சகோதரிகளே சந்திரிக்கா தனது கடற்படைக்கு ஏற்பட்ட இழப்பை மற்றைய நாட்டு தலைவர்களுக்கு சொல்லியழுத சம்பவத்தின் விளைவைப் பார்த்தீர்களா? சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த கழுகுகள் வந்திறங்கி விட்டன, இது எங்கு போய் முடியுமோ! அந்த பிரபாகரனுக்குத்தான் வெளிச்சம். :?: :!:
|
|
|
|