| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 311 online users. » 0 Member(s) | 308 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| கொழுப்பை கண்டறியும் பெலாட்ரின் |
|
Posted by: ஊமை - 01-06-2005, 10:07 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
நமது உடம்பில் இருக்கும் கொழுப்பின் (கொலஸ்ட்ரோல்) அளவை இதுவரை ரத்தத்தை எடுத்து அதனை சோதித்து பார்த்து கண்டறிந்து வந்தார்கள். இப்போது நவீன ஆராய்ச் சியின் புதிய முறையில் கொலஸ்ட்றோலை கண்டறியும் பெலாட்ரின் என்ற நவீன சோதனை கண்டறியப்பட்டுள்ளது. நமது உடம்பில் எல்.டி.எல் என்கின்ற கெட்டக் கொழுப்பும், ஏச்.டி.எல் என்கின்ற நல்ல கொழுப்பும் உள்ளது. எல்.டி. எல் நமது உடம்பில் அதிகமி ருந்தால் இருதய ரத்தக் குழாய்க ளில் படிந்து இருதய நோய் களை உண்டாக்கும். ஏச்.டி. எல் கொழுப்பு எவ்வளவு அதிகமிருந்தாலும் எந்த பாதிப்புமில்லை. பெலாட்ரின்-
நவீன சோதனை முறையில் ரத்தத்தை உறிஞ்சு எடுத்து சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஈ.ஸி.ஜி எந்திரம் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள பெலாட்ரின் சாதனத்தின் மூலம் நமது உடம்பில் இருக்கும் கெட்டக் கொழுப்பு எவ்வளவு, நல்ல கொழுப்பு எவ்வளவு என்று துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். இங்கிலாந்தில் ஸ்ரொக் ஹோம் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்தான் இந்த பெலாட்ரின் நவீன கொலஸ்ட்ரோல் கண்டறியும் எந்திரத்தை கண்டறிந்துள்ளனர். வரும் யூன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு உலகம் முழு தும் இந்த எந்திரம் புழக்கத்திற்கு வரப்போகிறது.
|
|
|
| குழந்தை அறிவு திறனை மழுங்கடிக்கும் புகைத்தல் நோய் |
|
Posted by: ஊமை - 01-06-2005, 10:00 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள், அதை பிடிப்பவரை மட்டும் பாதிக்காமல், சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் என்று தெரியும். அதிலும் புகையை சுவாசிப்பவர்கள் குழந்தைகளாக இருந்தால் உடல் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்பதும் அறிந்ததே. ஆனால் புகையிலைப் பொருட்கள் மூலம் உண்டாகும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் மங்கும் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அமரிக்காவில் செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பழக்கத்தால் சிறுவர்களின் அறிவுத் திறன் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது? என்று கண்டுபிடிக்க 4400 சிறுவர்கள் பங்கேற்ற ஒரு ஆய்வு நடந்தது. இந்த சிறுவர்கள் அனைவரும் 6 முதல் 16 வயது வரை நிரம்பியவர்கள். முதலில் புகையிலையில் காணப்படும் நிகோட்டின் எனும் வேதிப்பொருளால் உண்டாகும் மாற்றத்தின் அளவு கணக்கிடப்பட்டது. பின்னர் குழந்தைகளின் அறிவு திறன் சோதிக்கப்பட்டது. இதற்காக வாசிக்கும் திறன், கணித அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது மேற்படி வேதிப்பொருள் அதிகமாக காணப்படும் குழந்தைகளின் அறிவுத் திறன் குறைந்து இருந்தது தெரிய வந்தது.
குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகமாக காணப்படுகிறதென்றhல் அக்குழந்தை செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங்கினால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தம். இதற்கு தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குழந்தைகள் பெரும்பாலும் வீடுகளில் தான் அதிக நேரத்தை கழிக்கிறார்கள். இதுமாதிரி நேரத்தில் அவர்களுக்கு செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் நெருங்கிய உறவுக்காரர்களாக தான் இருக்க முடியும். அடுத்து குழந்தைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பவர்களும் இதற்கு காரணம்.
இந்நிலையில் தாங்கள் விடும் புகையால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப் படுகிறhர்கள் என்ற அறிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே குழந்தைகளை இப்பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியும்.
|
|
|
| மார்பகத்தின் அளவுக்கு, தாய்ப்பாலுக்கும் தொடர்பு உண்டா? |
|
Posted by: ஊமை - 01-06-2005, 09:53 AM - Forum: மருத்துவம்
- Replies (14)
|
 |
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒருவேளை கருத்தரித்து விட்டாலும் தொடர்ந்து பால் கொடுக்கலாம். ஆனால் சிலர் இக்காலங்களில் பால் கொடுப்பது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தும் என்று நினைத்து நிறுத்தி விடுகின்றனர். இது மிகவும் தவறானது. குறைந்தது 10 மாதங்களாவது பால் கொடுத்து வந்தால் தான் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு சரியான அஸ்திவாரம் கிடைக்கும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு போதுமான அளவுக்கு பால் சுரக்காது என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை. மார்பகத்தின் பெரும்பாகம் கொழுப்பால் நிரப்பப்பட்டு இருக்கும். ஒரு சிறிய பாகத்தில் மட்டும்தான் பால் சுரப்பிகள் உள்ளன. கருத்தரித்த பிறகு தான் பால் உற்பத்தி செய்யக்கூடிய சுரப்பிகள் பெருகுகின்றன. குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன பிறகு மார்பகங்களில் அதிக அளவில் பால் உற்பத்தியாகும். அப்போது மார்பகங்கள் மேலும் சற்று அதிகமாய் பெருக்கும்.
ஆகையால் கர்ப்பத்திற்கு முன் சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள் கூட குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவுக்கு பாலை உற்பத்தி செய்ய முடியும்.
|
|
|
| வாழையின் அற்புத ஆற்றல்கள் |
|
Posted by: ஊமை - 01-06-2005, 09:49 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
வாழைப்பழத்தில் கணக்கற்ற சத்துக்கள் காணப்படுவதால் நமது முன்னோர்கள் எல்லாவிதமான சுப, அசுப காரியங்களிலும் அதைப் பயன்படு;த்தும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். 100 கிராம் வாழைப் பழத்தில் 1-05 கிராம் கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலைப் பெற சுமார் 21_2 கிலோ வாழைப்பழம் மட்டும் போதுமானது. வாழைப்பழத்தில் சி விட்டமின் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்பு, பொட்டாசியம், சோடியம், பொஸ்பரம் மற்றும் சிறிய அளவில் செம்புத் சத்து உள்ளது.
பொதுவாக வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், பித்த சம்பந்தமான நோய்களும் குணமாகும். இதுதவிர நவீன ஆய்வில் நெப்ரைடிஸ் எனப்படும் சிறுநீரக நோய், மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம், குடல்புண் ஆகியவற்றையும் வாழைப்பழங்கள் குணப்படுத்தும் என்கிறார்கள்.
வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சித்தர்கள் வாக்குப்படி ரஸ்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் வாழை காமாலைக்கு நல்லது. பச்சை வாழை வெப்பத்தை குறைக்கும். மலை வாழை சோகத்தை நீக்கும். பேயன் வாழையால் குடற்புண் தீரும். கரப்பான் நோயை அதிகப்படுத்துவது நவரை வாழை. இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை என பல வகைகள் உள்ளன.
|
|
|
| பெண்களை மிரட்டும் வெள்ளைப் பேய் |
|
Posted by: ஊமை - 01-06-2005, 09:45 AM - Forum: மருத்துவம்
- Replies (6)
|
 |
இன்றைய நாளில் நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது ஏன்?
பெண்கள் முன்பெல்லாம் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்கள் வரை இருக்கும் மாதவிடாய்க்கு இரத்த போக்கை உறிஞ்சும் பாதுகாப்பு துணியை பயன்படுத்தி னார்கள். லேசான வெந்நீரில் யோனி பகுதியை சுத்தம் செய்வார்கள். இன்றைய சூழ்நிலையில் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறhர்கள். இதனால் பெண்குறியை சுத்தம் செய்வதில்லை. இன்றைய நாகரீகம் பெண்களுக்கு தரும் அவஸ்தையான பரிசு என்றே இதனை குறிப்பிடலாம். இதன் மூலம் யோனி துவாரத்தின் வழியாக எபலோபியன் எனப்படும் வைரஸ் கிருமிகள் கருப்பையின் வாயை சென்றடைந்து நோய் தொற்றை உண்டாக்குகின்றன. இதனால் கருப்பையில் புண் உண்டாகி இப்புண்களிலிருந்து சீழ் உருவாகி பெண்குறியின் வழியாக வெளியேறும். இதுவே வெள்ளை படுதலுக்கு காரணமாகிறது. எனவே பெண்கள் உள்ளாடைகளை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். அடிக்கடி கருக்கலைப்பு செய்வதாலும், மாத விடாயின் போது உறவு கொள்வதால்கூட வெள்ளைப்படுதல் உண்டாகலாம்.
* திருமணமான பெண்களுக்கு மட்டும்தான் வெள்ளைப்படுதல் வருமா? இளம் பெண்களுக்கும் வருமா?
திருமணமான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால், கிருமி தொற்று ஏற்படுவதால், குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப் படாவிட்டால் கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இளம் பெண்களுக்கும் உடல் சூடு, பலகீனம், வேலை பளு, சரியான முறையில் உணவு உண்ணாமை ஆகிய காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
* வெள்ளைப்படுதல் இருக்கும் பெண்களுக்கு சுய பராமரிப்பு எச்சரிக்கை என்ன?
பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சிறுநீர் கழித்தபின் கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். இதனால் கிருமி தொற்றில் இருந்து தப்பிக்கலாம். மாதவிடாய் சமயத்தில் சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். பொது கழிப்பிடங்களை பயன்படுத்த கூடாது. உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் மற்ற வரிடம் வாங்கி உடுத்தக் கூடாது. வெள்ளைப்படுதல் இருந்தால் வெட்கப்படாமல் தக்க மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். இல்லையேல் கருப்பையில் புற்று உண்டாக காரணமாகி உடல் சூடு அதிகாpக்காமல், குளிர்ச்சியான காய்கறிகள், பழவகைகள் சாப்பிடலாம். வெள்ளைப்படுவதால் சில பெண்களுக்கு முடி உதிர்தல் உண்டாகலாம். மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு கூட மறை முகமாக வெள்ளைப்படுதல் காரணமாகிறது. எனவே இதை அலட்சியம் செய்யாமல் முறையான நல்ல பழக்க வழக்கம், சத்தான உணவு, சுகாதாரமான இருப்பிடம் போன்றவற்றுடன் கருப்பையை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
* மருந்து எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் வருவது எதனால்?
பெண்களை பொறுத்தவரை தங்கள் உடல் நலனை விட குடும்பத்தாhpன் நலனிலே அதிக அக்கறை காட்டுவார்கள். ஒரே மருத்துவரை அணுகி தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்வதில்லை. 10 நாட்கள் மருந்து சாப்பிட்டு சாpயாகிவிட்டால் உடனே மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மீண்டும், மீண்டும் வருகிறது. சித்த மருத்துவத்தை பொறுத்த வரை அல்லது 6 மாதம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் இந்நோய் மீண்டும் வராமல் தடுக்கலாம். எந்தவகை நோயாக இருந்தாலும் அதற்குறிய காலத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டால் மட்டுமே முழுமையாக குணப்படுத்த முடியும்.
* வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு தடவை சிகிச்சை செய்து கொண்டால் மறுபடியும் வராதா?
வெள்ளைப்படுதலுக்கு முறையான மருத்துவம் செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் இதை பெண்கள் கவனிப்பதில்லை. யோனி வாயில் அhpப்பு ஏற்பட்டு புண் உண்டாகி துர்நாற்றம் உண்டாகும் நிலையில்தான் டாக்டரை சந்திப்பார்கள். இப்படிப்பட்ட பெண்கள் தொடர்ந்து 3 அல்லது 6 மாதம் மருந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
* வெள்ளைப்படுதலால் விளையும் கெடுதல்கள் என்னென்ன?
பெண்களுக்கு இடுப்புவலி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு பசி இருக்காது. அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் கூடிய வலி. யோனி துவாரத்திலும் தொடையின் இரண்டு பகுதியிலும் வெள்ளைப்படுவதால் அரிப்பு ஏற்படும். இதனால் இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் (பலகீனமாக) காணப்படுவார்கள். வெள்ளைப்படுவதால் முடி அதிகம் உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது.
* கர்ப்பப்பையில் கட்டிகள் வர காரணம் என்ன?
பெண்களில் குழந்தையில்லாதவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கர்ப்பப்பையில் கட்டிகள் இருப்பதால் அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகும். பெண்கள் தங்கள் கைகளால் வயிற்றில் தடவி பார்த்தாலே கட்டிகள் தென்படும்.
அடிவயிற்றில் வலி ஏற்படும். கருத்தரித்த பெண்களுக்கு இக்கட்டிகளால் கருச் சிதைவு உண்டாகலாம். இதை கவனிக் காமல் விட்டு விட்டால் கருப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகம் சுரப்பதால்கூட கட்டிகள் உருவாகலாம்.
* வெள்ளைப்படுதல் உள்ள பெண்களுக்கு அறிவுரை என்ன?
வெள்ளைப்படுதலுக்கு முறையான மருந்து எடுக்காவிட்டால் பெண்ணின் யோனி வாயில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகி துர்நாற்றம் உண்டாகும். மேலும் கருப்பையில் புண், கட்டி உருவாகலாம். கருப்பை புற்றும் உண்டாகலாம். தக்க மருத்துவ சிகிச்சை காணாவிடில் குழந்தை பேற்றின் போது சிரமம் ஏற்படும். எனவே தாமதிக்காமல் இதற்கு தகுந்த சிகிச்சை எடுப்பது நல்லது.
* வெள்ளைப்படுதல், கருப்பை கட்டி போன்ற பிரச்சினையில் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சிறுநீர் கழித்த பின்பு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதனால் கிருமி தொற்றில் இருந்து தப்பிக்கலாம். மாதவிடாய் சமயத்தில் சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். மாதத்தில் 2 அல்லது 3 முறை மாத விடாய் தோன்றினாலும், அடிவயிற்றில் வலி உண்டாகி அதிக அளவு இரத்தப் போக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்பட்டாலும் மருத்துவரை அவசியம் நாடவேண்டும்.
* வெள்ளைப்படுதலுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சிகிச்சை உள்ளது?
சோற்று கற்றhழையில் தயார் செய்த லேகியம், அருகம்புல், வெள்ளருகு போன்ற மூலிகை இலைகளால் தயார் செய்த மாத்திரைகள், பவுடர்கள், அசோகப்பட்டையில் தயாரித்த டானிக் போன்றவைகளை உள்ளுக்குள் எடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் குணம் பெறும். இந்த சித்த மருந்துகள் எந்தவித பின் விளைவும் கொடுக்காது என்பதுடன் மீண்டும் வராமலும் ஆரோக்கியம் தரும். மேலும் வெள்ளைப் படுதலுக்கு என்று பிரத்தியேகமான வெளி பிரயோகம் செய்யக் கூடிய சித்த மருந்தையும் பயன்படுத்தலாம்.
|
|
|
| டங்கீலஸ் அவர்களால் எழுதபட்ட |
|
Posted by: Mathuran - 01-06-2005, 04:07 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
ÌÕÅ¢ ¿£í¸û ¦º¡ýɾ¢¨ÄÔõ ¯ñ¨Á¸û þÕì¸ò¾¡ý ¦ºöÔÐ...
¬ÉÖõ À¡Õí§¸¡ ¯ñ¨Á¸¨Ç ¦ÅǢ즸¡ñΚþ¢¨Ä °¼í¸û Àò¾¢Ã¢¨¸¸Ùû þ¨ÉÂò¾Çí¸Ç§¼¡ º¢É¢Á¡×õ ¯ûǼì¸ôÀÎÐ.. (ÀÄ À¼í¸û ¦À¡ØÐ§À¡ìÌ «õºÁ¡¸ þÕ츢ýȧÀ¡Ðõ ´Õº¢Ä À¼í¸û ¯ñ¨Á¸¨Ç ¦º¡øÄ¢ Áì¸¨Ç ¾¢Õò¾À¡÷츢ýÈÉ) «ôÀÊ À¡÷째¸ º¢É¢Á¡Å¢¨Ä Å¡ÈÐ ±øÄ¡ò¨¾Ôõ ¦À¡ØÐ§À¡ì¸¡¸ ±ÎòÐì¸ ÓÊ¡Ð, «É¨Á墀 ´Õ ¬í¸¢Ä ¾¢¨ÃôÀ¼õ "¾¡ §¼ «ùÃ÷ ÕÁ¡§Ã¡" («¨¾ ¿¡ý ±ýÉõ À¡÷ì¸Å¢ø¨Ä ¬É¡ø «¨¾ ÀüȢ ŢÁ÷ºÉí¸¨Ç §¸ûÅ¢ÀðÊÕ츢§Èý) «¾ý þÂìÌÉ÷ ±¾¢÷¸¡Äò¾¢ø ¿¢¸Æ ÜÊ «ºõÀ¡Å¢¾í¸¨Ç(þÂü¨¸Â¢ý) º¢É¢Á¡ ãÄõ ¯Ä¸òÐìÌ ¦¾Ã¢Å¢ì¸ÓýÀðÎûÇ¡÷.. «É¡Öõ ¬í¸¢Ä º¢É¢Á¡¨ÅÔõ þó¾¢Â º¢É¢Á¡¨ÅÔõ ´ôÀ¢¼ ÓÊ¡о¡ý þÕó¾¡Öõ þó¾¢Â º¢É¢Á¡Å¢Ä ¸¡ðθ¢ýÈ º¢Ä ¯ñ¨ÁÂ¡É ºõÀÅí¸¨Ç ¿¡í¸û ¯Ú¾¢ÀÎòи¢ýÈ Å¨¸Â¢ø «Å÷¸§Ç ¯Ú¾¢ÀÎò¾ Өɸ¢È¡÷¸û...
®Æò¾¢§Ä º¢í¸Ç «¼ìÌӨȸÙìÌ ±¾¢Ã¡¸ ¸¢Ç÷óÐ ±Æ ¾Á¢úÁì¸¨Ç àñʾ¡¸ Ţξ¨ÄÒÄ¢¸Ç¢ý ¾¨ÄÅ÷ «ô§À¡¨¾Â ¾Á¢Æ¸ Ó¾¨Ä¨ÁîºÃ¢¼õ "±ôÀÊ ¯í¸ÙìÌ þó¾ н£× À¢Èó¾Ð" ±ñÎ §¸ð¼¾üìÌ ¯í¸Ç¢ý Àðí¸¨Ç À¡÷òо¡ý ±ñÎ ¦º¡øÄ¢ «Å¨Ã ¬îºÃ¢ÂôÀ¼¨Åò¾¾¡¸ ¿¡ý ±í§¸§ƒ¡ ´Õ þ¼ò¾¢ø Å¡º¢ò¾ ¾¡¸ ¡À¸õ þÕ츢ýÈÐ...
_________________
«¨ÉòР¡ú¸Ç §¾¡Æ÷¸û §¾¡Æ¢¸ÙìÌõ ±ÉÐ ¿ò¾¡÷ ÁüÚõ Òò¾¡ñÎ ¿øÅ¡úòÐì¸û
டங்கீலஸ் அவர்களால் எழுதபட்ட இக்கருத்தினை இன்றய (சுனாமி) நிலை கருதி மீள பிரசூரிக்கின்றேன்.
நன்றி டங்கிலஸ்
அன்புடன்
விதுரன்
|
|
|
| Swiss unite in grief for tsunami victims |
|
Posted by: AJeevan - 01-06-2005, 12:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Swiss unite in grief for tsunami victims
swissinfo January 5, 2005 9:04 PM
<img src='http://www.swissinfo.org/xobix_media/images/tsr/2005/actu20050105_5449829_0.jpg' border='0' alt='user posted image'>
President Samuel Schmid at the memorial service on Wednesday (Keystone)
President Samuel Schmid has urged the Swiss to triumph over adversity during a day of national mourning for the victims of the Asian tsunami disaster.
His appeal at a memorial service in Bern on Wednesday came as donations for the tragedy reached record levels.
RELATED ITEMS
Firms pledge aid to quake victims
"It's like a nuclear bomb has gone off"
Several hundred Swiss dead in tidal waves
Speaking at the multi-faith service in Bern's cathedral, Schmid said the Swiss people shared the grief of all those who had lost loved ones.
He offered his condolences to the families of the missing and the dead, and urged them not to give up hope.
Let us not be overwhelmed by grief, let us turn towards life, he said.
But the Swiss president acknowledged that the loss would be harder to bear for those whose relatives would never be found.
More than 1,200 people, including tsunami survivors and victims families, attended the service.
Children lit candles in the cathedral 11 symbolising the tsunami-hit nations and five representing the home continents of all the victims.
Death toll
So far 23 Swiss have been confirmed dead and 500 are still unaccounted for.
On Tuesday Schmid told the nation that the final death toll would run to several hundred.
We won't give up. We will continue searching. We haven't lost hope, said Foreign Minister Micheline Calmy-Rey at an emotional news conference in Bern on Wednesday.
At midday church bells rang out across the country to mark a Europe-wide silence for the dead. Flags hung at half-mast on federal buildings in the capital.
Swiss television broadcast special programmes on Wednesday night for Swiss Solidarity, which works with local organisations in disaster-hit areas.
By late evening the fundraising arm of the Swiss Broadcasting Corporation had collected a record SFr90 million ($77 million).
Aid effort
The Swiss government has pledged SFr27 million in aid and has sent 24 forensic specialists to Thailand to help identify victims of the tsunami.
The Swiss Agency for Development and Cooperation has sent relief teams to Indonesia, Sri Lanka, India, Thailand and the Maldives.
Up to 150,000 people are estimated to have died in the disaster. Indonesia is the worst affected country with around 95,000 deaths, followed by Sri Lanka with at least 30,000 dead.
Around 10,000 tourists, mostly Europeans, lost their lives in the tidal waves.
The United Nations said on Wednesday that donations for victims of the Indian Ocean tsunami were arriving faster than they could be recorded, pushing the amount pledged toward $4 billion.
We are recording pledges of between three and four billion dollars which shows that indeed the world is coming together in a manner we have never ever seen before, said Jan Egeland, the UN emergency relief coordinator.
|
|
|
| தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! |
|
Posted by: sinnappu - 01-05-2005, 11:46 PM - Forum: தமிழீழம்
- Replies (65)
|
 |
<b> <span style='font-size:30pt;line-height:100%'> தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து</span>
<img src='http://img32.exs.cx/img32/5233/thalaivarrrrrrrrrrrrrrrrrrrrrr.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>[b]நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு போராளி</b></span>
<b>தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு வே.பிரபாகரன்</b>
|
|
|
| அந்நியப் படையை அழைக்கத் தேவையில்லை |
|
Posted by: Mathuran - 01-05-2005, 11:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மக்களுக்கான நிவாரணாப் பணிகளை இலங்கை இராணுவம் மூலமாகவோ, அல்லது அந்நிய நாட்டு இராணுவங்கள் மூலமாகவோ மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால், அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
சபை ஒத்துவைப்பு வேளை கலந்துரையாடலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரன் மேலும் கூறியதாவது:
இலங்கையில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தையடுத்து அந்நிய நாட்டு இராணுவங்கள் இங்கு படையெடுத்து வருகின்றன. இதையிட்டு நாம் கவலைப்படப் போவதில்லை. இந்த இராணுவத்தினைக் கொண்டு அரசாங்கம் தென்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளட்டும். தேவையானால் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்தால் அவர்களும் தமது படைகளை அரசாங்கத்துக்கு உதவ அனுப்பி வைப்பார்கள். ஆனால் இலங்கை படைமூலமாகவோ, வெளிநாட்டுப் படை மூலமாகவோ வடக்கு,கிழக்கு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு முயன்றால் அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.
விடுதலைப் புலிகள் குறித்து பொய்ப் பிரசாரங்களை சில இனவாத ஊடகங்கள் முடுக்கி விட்டுள்ளன. இவ்வாறான செயல்களை நாம் உண்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்த இராணுவத்திடமும் உதவிக்காக கையேந்த தயாராயில்லை என்றார்.
நன்றி தினக்குரல்
|
|
|
|