| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 453 online users. » 0 Member(s) | 451 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,086
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கனடாவில் தமிழ் பெண் தற்கொலை.... |
|
Posted by: Nitharsan - 02-01-2005, 10:07 AM - Forum: புலம்
- Replies (28)
|
 |
கனடாவில் தமிழ் பெண் தற்கொலை
ரோரன்ரோவில் 401 பெருந்தெருவில் (high way) வானக நெரிசல் நிறைந்த நேரத்தில் வீதிக்கு மேலிருந்த மற்றுமொரு சிறுவீதிக்கான பாலத்தில் நின்று குதித்து தமிழ் பெண்னொருவர் தற்க் கொலை செய்துள்ளார். 21 வயதான அவர் பற்றிய முழுமையான விபரங்கள் அறியமுடியவில்லை. இருப்பினும் அவர் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) கல்விகற்று வந்தவர். தினமும் தனது பகுதி நேர வேலைக்கு செல்லம் இவர் வழமைபோல் வேலைக்கு செல்வதாய் சொல்லி விட்டே தற் கொலை செய்துள்ளனர். இச் செய்தியை கனடிய தேசிய ஊடகங்கள் முதல் தமிழ் ஊடகங்கள் வரை அனைத்தும் மூடி மறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது........
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| வணக்கங்கள் |
|
Posted by: Malalai - 02-01-2005, 08:13 AM - Forum: அறிமுகம்
- Replies (45)
|
 |
சகோதரர்களே இந்த மழலையின் மழலை வணக்கங்கள்
உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி
அன்புடன்
மழலை
|
|
|
| சமையல் - செய்முறை வேண்டுகோள் |
|
Posted by: thamizh.nila - 02-01-2005, 04:26 AM - Forum: சமையல்
- Replies (37)
|
 |
Request for Recipes -இது தான் தலைப்பு. யாராவது தமிழ் ஆக்கபடுத்தி மாற்றி விடுங்கள். நன்றி.
request = வேண்டுகோள்
recipe = செய்முறை
ஆகவே என்ன தலைப்பு? = தலைப்பு வசி அண்ணா சொல்லிட்டார்...அண்ணாக்கு எல்லோரும் நன்றி சொல்லுங்கோ...
|
|
|
| மதி கொண்ட விழி திறவீரோ...??! |
|
Posted by: kuruvikal - 02-01-2005, 03:32 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (118)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/walking-fire.jpg' border='0' alt='user posted image'>
<b>ஆணுக்குப் பெண்
ஒருவனுக்கு ஒருத்தி
அற்புதமாய் இயற்கையது
ஒரு விதி சமைக்க
சதி செய்து விதி மறுக்கின்றார்
வரம்பில்லா மதியாளர்...!
வேதனைகள் வாழ்வாக
வேடிக்கை உலகாக
பூமி உருள்கிறது
அரை நொடிப் பொழுதினில்
அகிலமெங்கும் பல கோல நாடகங்கள்
அரங்கேறுது
இளசுகள் நமக்கோ
தலை சுத்துது....!
பாட்டன் பாட்டி காலமது
கற்காலம் என்றாலும்
நற்காலம்
இது கணணிக் காலமாம்
கண்டதெல்லாம் காட்சியாக
களிப்பது எதுவுமின்றி
மனுதர்மம் வாழ்வுக்கு வழிதேடி
முகாரி இசைக்குது...!
சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது....!
அன்புக்கு ஒருத்தி
ஆயுள் வரை அவளே துணைவி
காலம் போய்....
மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார்
சந்திக்குச் சந்தி கணணியில்
காவல் இருக்கின்றார்
விழி மூடா மதி மூடிகள்...!
படியும் தாண்டாள் பத்தினி
மூடநம்பிக்கை என்றாக
படிப்படியாய் பத்தினிகள்
பலகாலம் ஏறி இறங்கின்றார்
நாளைக்கு ஒரு கரம் பிடிக்க
விவாகரத்துக்கு....!
தெருவோர நாய் கூட
கட்டுவிட்டு ஓடினால்
பதறிய சமூகம்
கட்டறுந்து போகுது
கலிகால முன்னேற்றம் கண்டு
புதிய உலகு படைக்கவாம்...!
பாவம்...
அந்த அப்பு ஆச்சி காலத்து
காக்கை தன் பரம்பரை
இன்னும் அந்த ஆலமரக்கிளையில்
அதே கொள்ளி செருகி
கூடு கட்டுது
அதற்கு கலியென்று மாற
கற்றுக் கொடுக்கவில்லை இயற்கை...!
மனிதன் மட்டும் மாறிவிட்டான்
பதறாமல் பாவங்கள்
பண்ணக் கற்றுவிட்டான்
கலி வந்த குடியாகி
கவிழாமல் காப்பாற்ற
மார்க்கம் ஏதோ....???!
கல்விக்கண் உள்ளீரே
மதி கொண்ட விழி திறவீரோ
உம் கதி தான் அறிவீரோ...?!</b>
நன்றி --- http://kuruvikal.yarl.net/
|
|
|
| Ricky Martin |
|
Posted by: Mathan - 02-01-2005, 03:22 AM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
Ricky Martin
<img src='http://www.celebwelove.com/Ricky_Martin/ricky_martin05.jpg' border='0' alt='user posted image'>
இங்கிருக்கும் பலரைப்போலவே எனக்கும் Ricky Martin என்றதும் "Livin' La Vida Loca"தான் ஞாபகம் வரும். இப்போது கேட்டாலும் உற்சாகத் துள்ளல் தன்பாட்டில் ஓடி வரும். ஒரு காலத்தில் எங்கே பார்த்தாலும் Ricky Martin என்ற பெயரையும் புகைப்படங்களையும் பார்க்கலாம். ஆனால், இப்போது ஆளை எங்கேயுமே காணக் கிடைப்பதில்லை.
சமீபத்தில் Oprahவின் நிகழ்ச்சியில் Ricky Martinஐக் காணக்கூடியதாக இருந்தது. ரிக்கி மார்ட்டினின் பெயரைச் சொன்னதுமே ஒரே கூச்சலும் கும்மாளமுந்தான். ஆனால், ரிக்கி மார்ட்டினின் முகம் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. நிகழ்ச்சி அப்படிப்பட்டது. "Livin' La Vida Loca" ரிக்கி மார்ட்டினை விட, இந்த ரிக்கி மார்ட்டின் என்ன சொல்ல வருகிறார் என்று கவனமாகக் கேட்க வைத்தது.
சமீபத்தைய சுனாமிப் பேரழிவு பற்றிய செய்திகளுக்கு நடுவில் ரிக்கி மார்ட்டின் தாய்லாந்து சென்றிருக்கிறார் என்ற ஒரு பெட்டிச் செய்தியை என்னைப்போல பலரும் படித்திருக்கலாம். ரிக்கி மார்ட்டின் தாய்லாந்துக்குச் சென்றது சுனாமியால் பாதிக்கப் பட்ட இள வயதினருக்காக. இளவயதினரை தத்தம் தொழில், கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துபவர் கூட்டம் தாய்லாந்தில் வந்து சேர்ந்தபடி இருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் தான் அங்கு சென்றதாக ரிக்கி மார்ட்டின் சொன்னார். ரிக்கி மார்ட்டினோடு ஓப்ராவின் குழுவினரும் சென்றிருந்தனர். ஆதரவற்ற இள வயதினருக்காகத் தான் அங்கு தொடர் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து அங்கே தங்கி 600 வீடுகள் மற்றும் தேவையான வசதிகளைச் செய்து முடிக்கும்வரை தான் அங்கே இருக்கப்போவதாகவும் ரிக்கி மார்ட்டின் சொன்னார்.
அனாதரவான இளவயதினர் குழந்தைகள் எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ரிக்கி மார்ட்டின் விவரிக்கும்போதே பார்வையாளர் கூட்டம் விக்கித்துப்போனது. ஓப்ராவிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, சமீபத்தில் கைதான Pedophile ஒருவனைப் பற்றிச் சொன்னார். அவன் ஐந்து மாதக் ஆண் குழந்தை ஒன்றை சீரழித்தான் என்று ரிக்கி மார்ட்டின் சொன்னதைக் கேட்டு விக்கித்துப்போகதவர்கள் இருக்க முடியாது.
உணர்ச்சி கொப்பளிக்கும் முகத்துடனான இந்த ரிக்கி மார்ட்டினை முந்தைய ரிக்கி மார்ட்டினை விட ரொம்பவே பிடித்திருந்தது. ரிக்கி மார்ட்டின், விவேக் ஓபராய் போல ஒரு சில ஹ¥ரோக்களும் இருக்கிறார்கள்.
rickymartinfoundation.org
நன்றி - மதி கந்தசாமி
|
|
|
| கண்ணில் தெரியும் கதைகள் |
|
Posted by: Mathan - 02-01-2005, 02:36 AM - Forum: கணினி
- Replies (1)
|
 |
கண்ணில் தெரியும் கதைகள்
<img src='http://www.icuiti.com/image/Sean-iPOD.jpg' border='0' alt='user posted image'>
மடிக்கணினியின் மூலம் இணையத்தில் உலாவிக்கொண்டே காரில் (தானே ஓட்டாதபோது ) போகலாம், ஆனால் கணினி மூடியே இருக்கும். செல்பேசியில் ஓடும் குறும்படத்தை முழுத் திரையரங்க அனுபவத்துடன் நடந்துகொண்டோ, ஓடிக்கொண்டோ பார்க்கலாம். (விவகாரமான மேட்டரா இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பார்க்க முடியும் ) காரின் பின்சீட்டில் தொல்லைதரும் குழந்தைகளை சாந்தப்படுத்த கனமான டிவிடி ப்ளேயர்கள் வேண்டாம். பெரிய 14/15 அங்குலத் திரையை ஒளிர்விக்கவே தன் சேமக்கலனின் ஆற்றலில் பெரும்பகுதியை செலவிடும் மடிக்கணினிகள் இனி மணிக்கணக்கில் நிற்காமல், மின்னேற்றம் பெறாமல் இயங்கலாம்.
இதெல்லாம் எப்படி? எப்போது?
நான் வசிக்கும் ரோச்சஸ்டர் உலகின் ஒளிப்பிம்பவியலில் முக்கியமான இடத்தைப் பெற்ற (Imaging capital of the World) ஒன்று. முதல் ஒளிநகல் நிறுவனமான ஸெராக்ஸ்(Xerox), நிழற்படவியலில் முத்திரை பதித்த கொடாக்(Kodak), கண்ணில் அணியும் கண்னாடிகள்/காண்டாக்ட் லென்ஸ்/லேசர் திருத்தம் இவற்றில் சாதனை புரியும் பாஷ்&லோம்ப்(Bausch&Lomb) இந்த மூன்று முக்கியமான நிறுவனங்கள் இங்கே தான் உள்ளன.
இந்த வரிசையில் கண்ணில் அணிந்துகொள்ளும் விடியோத்திரை தயாரிகும் ஐக்விட் என்ற நிறுவனம் பற்றி இன்று உள்ளூர் டிவியில் செய்தியொன்றைக் கண்டேன். ஆர்வமும் வியப்பும் தந்தது அவர்கள் வெளிக் கொண்டுவந்திருக்கும் திரை.
<img src='http://www.icuiti.com/image/V920-Labeled.jpg' border='0' alt='user posted image'>
இதில் காணப்படும் பிம்பம் 11 அடி தூரத்தில் உள்ள திரையில் இருப்பதுபோல மாயத்தோற்றம் கொண்டதாக இருக்கும். பார்க்கத்தான் பொடிசு, 11 அடிதூரத்தில் சுமார் ஐந்தரை அடி அளவில் ஒரு திரையில் படம் விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குமாம். மேலும் விவரங்களுக்கு அவர்கள் இணையத்தளத்தைப் பார்க்கலாம்.
http://www.icuiti.com/play.html
ஆர்டர் போட்டால் குறைந்தது 3 வாரம் காத்திருக்கவேண்டுமாம். அத்தனை டிமாண்டாம்! ஒன்று விலை $500 அதாவது ஏறக்குறைய 25 000 ரூபாய்! ஆனால் பொடிஜாமானக் கிறுக்கனான எனக்கு பார்க்கப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. ஹும்.. ஒருநாள் $100க்குக் கீழே வரும் அப்போது வாங்கிக்கலாம்.
நன்றி - காசி
|
|
|
| Sherbet or Milk shake; |
|
Posted by: Niththila - 02-01-2005, 02:30 AM - Forum: சமையல்
- Replies (7)
|
 |
ஸர்பத் செய்யிறது எண்டால் தேவையானவை
ஸ்ர்பத் சிரப் தேவையான அளவு (தமிழ் அல்லது இந்தியன் பாகிஸ்தானி கடைகளில் கிடைக்கும்.)
ரின் மில்க் 1 ரின்
தண்ணி டேஸ்டுக்கு ஏற்ப
கசகசா 6 மேசைக் கரண்டி
செய்முறை:
கசகசாவை(தமிழ்க்கடையில் வாங்கலாம்) 2 மணித்தியலத்துக்கு முதல் கொஞ்ச தண்ணியில ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் ரின் பாலையும் தண்ணீரையும் ஸர்பத் ஸிரப்புடன் விட்டுக் கலக்கவும். விரும்பினால் தண்ணியின் அளவைக் குறைத்து நொருக்கிய ஐஸ் கட்டியைப் போடலாம். பின்பு கசகசாவையும் சேர்க்கலாம்.
விரும்பியவர்கள் பலூடாவும் சேர்க்கலாம். இங்க வாற அண்ணாக்களுக்கு பலூடா வீட்டில செய்யிறது கஸ்டம் எனவே இதையும் தமிழ் கடையில் அல்லது பாகிஸ்தான் கடைகளில் வாங்கலாம் பலூடா மிக்ஸ் எண்டு இருக்கும்.
இதை விட ஈஸியான மெதேட்
பால் 1 கிளாஸ்
வனிலா ஐஸ் கிறீம் தேவையான அளவு
மில்க் ஷேக் மிக்ஸ் அல்லது ஸர்பத் மிக்ஸ் தேவையான அளவு
(விரும்பினால் )கசகசா 1 தேக்கரண்டி (இரண்டு மணி நேரம் சிறிது தண்ணி விட்டு ஊறவிடவும்)
சீனி டேஸ்டுக்கு ஏற்ப
பாலை நல்லா கொதிக்க காய்ச்சி ஆறவிடவும் ஆறியபின் மில்க் ஷேக் மிக்ஸ் ஐஸ் கிறீம் சீனி என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
விரும்பினவை கசகசா சேர்க்கலாம்.
செய்து பாத்திட்டு சொல்லுங்கோ. :wink:
|
|
|
|