Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 308 online users.
» 0 Member(s) | 306 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,516
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  இந்தியாவில் கெலிகொப்டர் மீது தாக்குதல்
Posted by: Thaya Jibbrahn - 01-31-2005, 02:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://www.worldtamilarweb.com/headnews.ph...ad&item_id=1403

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது - மோகன் (இந்தியாவில் என்பது சேர்க்கப்பட்டுள்ளது)

Print this item

  கணனி தொடர்பான அவசர உதவிகள்
Posted by: tamilini - 01-31-2005, 02:01 PM - Forum: கணினி - Replies (353)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.</span>


<span style='font-size:25pt;line-height:100%'>************************************************
கவிதன்</span>




எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். Cry Cry Cry Cry :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

Print this item

  Àýʨ ¸ñÎ ¦ÅÇ¢§ÂȢ ÒÄ¢..
Posted by: selvanNL - 01-31-2005, 02:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

<b>புனரமைப்பு கூட்டத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்: எதிர்ப்பு தெரிவித்து புலிகள் வெளிநடப்பு</b>
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் குழுக் கூட்டத்தில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ச அழையா விருந்தாளியாக கலந்து கொண்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து அக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியேறினர்.
சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய மேற்படி குழுவில் பிரதேச செயலாளர் வி.கே.தவராஜா தலைமையில் பொலிஸ்ää இராணுவம்ää விசேட அதிரடிப்படைää விடுதலைப்புலிகள் மற்றும் மதப் பிரமுகர் என 6 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
நாளை நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று முற்பகல் இக் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராத வகையில் திடீரென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ச அங்கு நுழைந்தார்.
விடுதலைப்புலிகள் தரப்பில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.
அப்போது ஜே.வி.பி. உறுப்பினரை நோக்கி அழைப்பின்றி எவ்வாறு கூட்டத்திற்கு வருகை தந்தீர்கள் என்று அவரை நோக்கி கௌசல்யன் கேள்வி எழுப்பினார்.
தான் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதனையடுத்து விடுதலைப்புலிகள் இந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன்ää
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே ஒரு தடவை நிவாரண உதவி என்ற போர்வையில் இப் பகுதிக்கு வந்து இனவாத அடிப்படையில் பேசியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளார். எமது தேசியத் தலைவரின் படங்களை அகற்ற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி குறிப்பிட்ட குழுவில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அங்கத்துவம் வழங்கப்படவில்லை. அதனை மீறி அவர் நடந்து கொண்டதால் நாம் வெளியேறினோம் என்றார்.
இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் வி.கே.தவராஜாவிடம் கேட்ட போதுää
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அழைப்பு விடுக்கவில்லை என்பதைää குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் தான் வலியுறுத்திக் கூறிய போதிலும் அதனை மீறும் வகையில் அவர் நடந்து கொண்டதாகக் கூறினார்.
விடுதலைப்புலிகள் வெளியேறினாலும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அதில் கலந்து கொண்டுள்ளார்.
பிரதேச செயலகத்திலுள்ள தÁ¢ழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அகற்றப்பட வேண்டும். இல்லையேல் ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றம் வழங்கப்படும் என அவர் பிரதேச செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
---------------------------------------------------------------------

þôÀÊ ¸¢Ç¢¦¿îº¢ìÌõ §À¡¸Ä¡§Á

Print this item

  Enter the dragon! - 3 (31.01.0
Posted by: விது - 01-31-2005, 01:59 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

கனடா வன்கூவரிலிருந்து ரிஷி வழங்கும் - 'ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியலில்
http://www.tamilnatham.com/Rishie.htm
நன்றி:தமிழ்நாதம்

Print this item

  பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டக் கதை
Posted by: Mathuran - 01-31-2005, 01:00 PM - Forum: சினிமா - Replies (5)

புரட்சிகரமான வரலாற்றுப் படம். அடைகாக்கப்படுகிறது. தமிழன் என்ற இன,மொழி பற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் உரிமைக்காக அவர்கள் வதைபட்டார்கள். தாயை இழந்தார்கள். தாரம் தொலைத்தார்கள் தலைமுறை சொல்லும் வேர்களுமிழந்தார்கள்.

இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என எல்லாம் இழந்தார்கள்.

துவேஷ வெறியர்களின் ஆதிக்க பசிக்கு இரையாகிறது தமிழினம். கற்பழிக்கப்பட்ட தாய், தங்கை, அக்கா, அண்ணி என உறவுமுறைப்பட்டியல் நீண்டது தமிழீழத்தில்.

உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீர தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இந்தப் படத்தில் வீரத் தளபதியாக யாரை நடிக்க வைக்கலாம். எந்தெந்த கேரக்டர்கள் இடம் பெற வேண்டும். எங்கே படிப்பிடிப்பு. இயக்கத் தளபதி பிரபாகரனுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அண்மையில் இலங்கைக்கு வந்த இவர் அப்படியே தமிழீழத்துக்கும் ஒரு நடை நடந்திருக்கிறார். அப்போது தான் பிரபாகரனை சந்திந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை படமாக்குவது பற்றி பாரதிராஜாவிடம் விவாதித்திருக்கிறார். நல்ல முயற்சி!

நன்றி வீரகேசரி

நன்றி சூரியன் இணயத்தளம்

அன்புடன்
மதுரன்

Print this item

  ஏழு மாதக் குழந்தைவலையில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்
Posted by: Vaanampaadi - 01-31-2005, 12:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

அலையில் அள்ளுண்ட ஏழு மாதக் குழந்தைவலையில் சிக்குண்டு உயிர் தப்பிய அதிசயம்!
முல்லைத்தீவில் சுனாமி தாக்கியவேளை!

சுனாமி பேரலை ஏற்பட்டவேளை அதில் சிக்குண்டு தெய்வாதீனமாக - அபூர்வமாகப் பலரும் உயிர்தப்பிய சம்பவங்கள் தொடர் பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறானதோர் அதிசய சம்பவம்தான் இதுவும். முல்லைத்தீவில் கடற்கரையோரம் வாழ்ந்து வந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். கணவன் மனைவிக்கு 3 பிள்ளைகள். இளைய மகன் டிலான். வயது 7 மாதங்கள் தான்
அன்று காலை...
பேரிரைச்சலுடன் வந்த சுனாமி பேரலை கள் அந்தப் பகுதியையே துவம்சம் செய்து கொண்டிருந்தன.
தலைக்கு மேல் எழுந்துவந்த கடல் நீர் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதிய வர்கள் என்று வயது பேதம் பாராது அனைவ ரையுமே தனக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது.
இந்த அலையில் 7 மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகனான டிலானும் அடித்துச் செல் லப்பட்டான்.
அலைகளுடன் அள்ளுண்ட பலர் கடலுக் குள் அமிழ்ந்துபோயினர். வேறு பலர் நீண்ட தூரத்துக்கு அப்பால் வாரிச் சுருட்டிப் போடப் பட்டனர்; பிணங்களாக!
இவர்களைப் போலவே டிலானையும் பேரலை கடலுக்குள் உருட்டிச் சென்றது. அவ் வாறு உருட்டிச் செல்லப்பட்டவேளையில் தென்னைமரம் ஒன்றில் சிக்குண்டு போய்க் கிடந்த மீன் பிடி வலைகளுக் குள் டிலானும் ஒரு சிறு மீன்குஞ்சைப் போல சிக்குண்டு போனான். இதனால் கடல்நீரால் தொடர்ந்து டிலானைத் தன்னு டன் கொண்டுசெல்ல முடியாமல் போய் விட்டது.
அனர்த்தம் இடம்பெற்றதைக் கேள்வியுற்ற தும் கடற்புலிகளும் பொதுமக்களும் அவ்விடத் துக்கு ஓடிவந்து இடிபாடுகளுக்கு மத்தியில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்த பலரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிக்கொண்டி ருந்தனர்.
அப்போதுதான், வலையில் சிக்குண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த டிலானை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒரு வன் கண்டான்.
உடனடியாக வலையின் சிக்கிலிருந்து டிலானை மீட்ட அந்த இளைஞன், டிலானுக்கு உயிர் இருப்பதை உணர்ந்துகொண்டு விரைந்து செயற்பட்டான்.
அங்கிருந்து அவசர அவசரமாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட டிலான் வைத்தியர்களின் தீவிர முயற்சியின் பலனாக உயிர்பிழைத்தான். இப்போது டிலான் தனது உறவினர்களுடன் முல்லைத்தீவிலுள்ள நலன் புரி நிலையம் ஒன்றில் ஆரோக்கியமாக இருக் கிறான்.
மெய்சிலிர்க்க வைத்த இந்தப் பச்சிளம் பால கனின் கதையைக் கூறியவர், டிலானைத் தற் போது பராமரித்து வரும் அவனது பெரியம்மா.
புருவங்களை மேலுயர்த்தி ஆச்சரியத்து டன் அந்தச் சம்பவத்தைக் கேட்டுக்கொண்டி ருந்தேன். அவரது கதையின் இறுதியில் கண் கள் கலங்கிய நிலையில் கூறிய வார்த்ததை என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது; எனது நெஞ்சைக் கனக்கவைத்தது.
டிலான்ர தாய், தகப்பன் இரண்டு அக்கா மார் எல்லோரும் போய்ச்சேர்ந்திடினம்... இவனை மட்டும் தப்ப வைச்ச கடவுள் இவன்ரை உறவுகள் ஒன்றையுமே விட்டுவைக்கவே யில்லை...
அப்போது டிலானைத் திரும்பிப் பார்த் தேன். அழுதுகொண்டிருந்தான். பெற்றோரை யும் சகோதரிகளையும் பறிகொடுத்த சோகத் தில் அல்ல; பசியில்...!


Source : Uthayan

Print this item

  கத்திக்குத்திற்கு இலக்கான குருக்கள் உயிரிழந்தார்
Posted by: Vaanampaadi - 01-31-2005, 12:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கத்திக்குத்திற்கிலக்கான மதகுரு உயிரிழந்தார்.
திங்கட்கிழமை31 சனவரி 2005 மூதூர்
கத்திக்குத்திற்கிலக்காகி படுகாயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கதிரேசன் வீதி கதிரேசனாலய பிரதம குரு சபாரட்ண குருக்கள் சடானந்த குருக்கள் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலையைச் சேர்ந்த இவர் கதிரேசன் ஆலயகுருமார் இளைப்பாறும் அறையில் கடந்த திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இருவர் "அப்பு சாமியை தெரியுமா?" என வினவியுள்ளனர். அதற்கு அவர் அவ்வாறு ஒருவரைத் தெரியாது என தெரிவிக்கவே அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அபகரித்துக் கொண்டு ஓட முற்பட்டனர் இச் சமயம் குருக்கள்ää ஓட முற்பட்டவர்களில் ஒருவரை எட்டிப் பிடித்து விடவே திடீரென மற்றவர் தான் வைத்திருந்த கத்தியால் குருக்களின் வயிற்றில் குத்திவிட்டு சங்கிலியுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

வயிற்றில் ஏற்பட்ட படுகாயத்திற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருக்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றுக்காலை மரணமடைந்துள்ளார். இறக்கும் போது குருக்களுக்கு வயது 55.

Source : http://www.nitharsanam.com/?art=8432

Print this item

  இளம்பெண் கற்பழிப்பு சாமியாருக்கு இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை
Posted by: Vaanampaadi - 01-31-2005, 11:53 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

"கடந்த பிறவியில் நீதான் என் மனைவி'' என்று கூறி இளம்பெண் கற்பழிப்பு
இந்திய சாமியாருக்கு இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை


லண்டன், ஜன.31-

``கடந்த பிறவியில் நீதான் என் மனைவி'' என்று ஆசை வார்த்தை கூறி, இந்திய சாமியார் ஒருவர் இளம் பெண்ணை கற்பழித்தார். அவருக்கு இங்கிலாந்து கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட் டது.

கற்பழிப்பு வழக்கில் சாமியார்

அந்த சாமியாரின் பெயர் ஆர்.சோமநாதன் (வயது 41). தெற்கு லண்டனில் உள்ள இந்துக் கோவிலில் குருக்களாக இருந்து வந்தார். திருமணம் ஆன அவருக்கு, பெண்களிடம் சற்று சபலம் அதிகம்.

இங்கிலாந்தில் வசித்துவந்த 29 வயது தமிழ்ப் பெண்ணை அவர் இரண்டு முறை கற்பழித்து விட் டார். இதனால் கர்ப்பம் தரித்த அந்த பெண் பின்னர் கருக் கலைப்பு செய்து கொண்டார். இதுபற்றி அந்தபெண்ணின் புகாரின் பேரில் போலீசார் சாமியார் சோமநாதனை கைது செய்து லண்டன் குரோய்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தனர். கற்பழிக்கப்பட்ட பெண், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

ஜாதகம் பார்க்க சென்றபோது

இந்த கற்பழிப்பு சம்பவம் பற்றி அரசு வக்கீல் கிலியன் ஈத்தர்டன் கூறியதாவது:-

புதிய வீடு வாங்க முடிவு செய்த அந்தப் பெண் ஜாதகம் பார்ப்ப தற்காக முதலில் அந்த சாமி யாரை நாடி இருக்கிறார். அவரு டைய அழகில் மயங்கிய சோம நாதன் எப்படியும் அவரை அடைந்தே தீருவது என்ற முடிவில் ஆசை வார்த்தைகளை தனக்கே உரிய பாணியில் அள்ளி வீசினார்.

முற்பிறவியில் என் மனைவி

முதலில் ``உனது கண்கள் மிக அழகானவை'' என்ற அவர் ``நீ கணவரை பிரிந்து வந்தது நன்மைக்கே'' என்றார். ``கடந்த பிறவியில் நீதான் எனது மனைவி. அந்தபிறவியில் நீ தற்கொலை செய்து கொண் டாய். ஆனால், கடவுள் மீண்டும் என்னிடம் உன்னை அனுப்பி வைத்துவிட்டார்'' என்று கூறி முற்றும் உணர்ந்த முனிவர்போல் அந்த பெண்ணை `வசியம்' செய் தார்.

கடந்த 2002-ம் ஆண்டு ஜுலை 11-ந்தேதி அன்று தனது புதிய வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துக்கு சாமியார் சோமநாதனுக்கு அந்தப் பெண் அழைப்பு விடுத்து இருந்தார்.

இருமுறை கற்பழிப்பு

அந்த நிகழ்ச்சியில், இளம் பெண்ணின் அருகே அமர்ந்தபடி கட்டி அணைத்து முத்தமிட முயன்றார். ஆனால் சாமியாரின் இச்சைக்கு அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆனால் சோம நாதன் மனம் தளர வில்லை. அந்த பெண்ணின் தோள் மீது கைபோட்டபடி ``உன் மீது எனக்கு உரிமை உள் ளது. நீ இன்னும் என் மனைவி தான். உன்னை மிகவும் நேசிக்கி றேன்'' என்றார்.

பின்னர் அதற்கு ஒருபடி மேலே சென்று என் ஆசைக்கு இணங்காவிட்டால் கடவு ளுக்கே அது பொறுக்காது'' என்று எச்சரிக்கும் விதத்திலும் மிரட்டல் விடுத்து அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்து விட்டார். பின்னர் ``உன் வாழ்க்கை இனி ஒளி மய மாக இருக்கும்'' என்று ஆசீர் வதித்து இருக்கிறார். இதேபோல் 2003-ம் ஆண்டி லும் ஒருமுறை அந்தப் பெண்ணை கற்பழித்து இருக்கிறார்.

ஜெயில்

கைது செய்யப்பட்டு கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்ட சாமி யார் சோமநாதனுக்கு நீதிபதி ஜெயில் தண்டனை விதித்தார். தண்டனை விவரம் பற்றி பிப்ரவரி 18-ந்தேதி முடிவு செய் யப்படும் என்று நீதிபதி அறிவித் தார். அதைத் தொடர்ந்து சோம நாதன் சிறையில் அடைக்கப் பட்டார்.

சாமியாருக்கு எதிராக நீதி கேட்டு போராட முன்வந்த பெண்ணின் தைரியத்தை இங்கி லாந்து போலீஸ் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

Source: Dailythanthi

Print this item

  இப்படியும் ஒரு தபால்காரர்
Posted by: Vaanampaadi - 01-31-2005, 11:35 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

இப்படியும் ஒரு தபால்காரர்

மலேஷியாவில் தபால்காரர் ஒருவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி இருக்கிறது. முகமது பக்ருதீன் என்ற அந்த தபால்காரர் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் அந்த தபால்காரர் தனது 2 மாத சம்பளத்தை அபராதமாக கட்டவேண்டும். அப்படி அவர் என்ன தவறு செய்தார். கடந்த 4 வருடங்களாக அவர் தபால்களை உரியவர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அவரது வீட்டில் 21 ஆயிரத்து 650 தபால்கள் மற்றும் விரைவு அஞ்சல் உறைகளும் பட்டுவாடா செய்யப்படாமல் குவிந்து கிடந்தன. மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாரால் வீடு வீடாக சென்று தபால் கொடுக்க முடியும். டீ, சிகரெட் குடிக்கக்கூட போதாது என் கிறார் அந்த தபால்காரர்.

Print this item

  மீண்டும் தலைவரானார் விஜயகாந்த்!
Posted by: Vaanampaadi - 01-31-2005, 11:31 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.thatstamil.com/images26/cinema/vijaykanth12-400.jpg' border='0' alt='user posted image'>


சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் வெற்றி பெற்று தலைவரானார். அவரது அணியினரும் இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

நேற்று நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஜயகாந்த்தும், பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சரத்குமாரும், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், பொருளாளர் பதவிக்கு காளை ஆகியோர் போட்டியிட்டனர்.

தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்து நடிகை தேவி போட்டியிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 749 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட தேவிக்கு 122 வாக்குகள் கிடைத்தன.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமார் 790 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ராஜாவுக்கு 71 வாக்குகளே கிடைத்தன. இதேபோல நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு மீண்டும் காளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது அணியின் வெற்றி குறித்து விஜயகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், நடிகர்கள் எங்கள் அணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.

இதற்காக அனைத்து நடிகர், நடிகையருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Discuss on this topic : http://messages.indiainfo.com/tamil/viewto...pic.php?p=12#12

Print this item